Page 17 of 19 FirstFirst ... 71516171819 LastLast
Results 161 to 170 of 185

Thread: 'Vennira Aadai' SHREEKANTH

  1. #161
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    Recently I saw a program in a t.v. channel, where actress Sowcar Janaki was interviewed by the anchor of the show (Anu..?)

    When they are talking about Edhirneechal ‘pattu maami - kittu mama’ scenes, anchor told Sowcar “ ippo pattummamiyai meet panna kittu mama varapporaar”.

    Sowcar asked with surprise “Oh, avar vandhirukkaaraa?”.

    Then Shreekanth enetered to the set with a flower boque in his hand and give to Sowcar . He was with olive green color pant and white half slack tugged in. He was walking slowly because of his age, more hairs fallen down and having little balled head. But possessing same mannerism in talking.

    Both remembered about their golden period in cine field.

    Shreekanth: “appo romba ilamaiyaa irundheenga, ippo konjam vayasaayiduchu”

    Sowcar : “konjam illai, romba vayasaayiduchu”.

    Shreekanth: “konjamnu sonnaa neenga sandhoshap paduveengannudhan appadi sonnen”

    (same kurumbu from shreekanth)

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #162
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    ஜெய்சங்கர் - ரவிச்சந்திரன் காலத்தில் அவர்களோடு இணைந்து கலக்கிய இந்தப் புள்ளையாண்டானையும் கொஞ்சம் கண்டுக்குங்க. அந்த குரூப்பில் எஞ்சியுள்ள ஒருசிலரில் இவரும் ஒருவர்.

  4. #163
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    ஆதி சார்,

    ஸ்ரீகாந்த் - சௌகார் சந்திப்பு பற்றிய துணுக்கு சுவையாக உள்ளது. துரதிஷ்ட வசமாக அந்த நிகழ்ச்சி நான் பார்க்கவில்லை.

    ஸ்ரீகாந்த் சௌகாரின் மகன் மாதிரி இருந்திருப்பாரே.

  5. #164
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    கார்த்திக்
    சா ர்

    ஸ்ரீகாந்த் திரி கோபால் சார்/நீங்கள்/ரகு சார்/ராகவேந்திர சார்/முரளி சார்/vasu sir வந்தால் தான் களை கட்டும்
    gkrishna

  6. #165
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    1970-களின் மத்தியில் வெளியான "திக்கற்ற பார்வதி" படத்தை பார்த்தவர்கள் அதைப்பற்றி இங்கு எழுதலாமே.

    ஸ்ரீகாந்த் - லட்சுமி நடித்த இந்த இன்னொரு ஆர்ட்பிலிம், மூதறிஞர் ராஜாஜி எழுதிய கதையைத் தழுவியது. ராஜாஜி சேலம் கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றியபோது அவர் நடத்திய கேஸை அடிப்படையாக வைத்து எழுதிய கதைஎன்பதால், கேஸ் நடந்த அதே கோர்ட்டில் (உயர்நீதிமன்ற அனுமதி பெற்று) படமாக்கப் பட்டது.

    படம் இதுவரை பார்த்ததில்லை. பார்த்தவர்கள் எழுதலாம்....

  7. #166
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    திக்கற்ற பார்வதி பார்த்துள்ளேன்.இது கதையாக ராணிமுத்து வெளியீட்டில் வந்தது. சிங்கிதம் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில், அந்த கால ரியலிச படங்களின் formula கொண்டு வந்தது. நேரடி கதையானதால் ,மெதுவாக கதை சொல்லும் போக்குக்கு ஒத்து வரவில்லை.ஸ்ரீகாந்த் ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை.
    நடிக்கவே சரியாக கற்று கொள்ளாத இவர் நடிகர்திலகத்தை தாக்கி 1976,77 இல் கொடுத்த அறிக்கைகளால் இவர் மீது எனக்கு அருவருப்புணர்வே உண்டு. (கூடவே இருந்து பயன் பெற்றவர்)
    இவர் சிறிதாவது நடிகராக தன்னை வெளிபடுத்தி கொண்டது ராஜ நாகம், சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்.(ப்ரில்லியன்ட் )

  8. #167
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    just to respect karthik sir&G.K sir's invitation.

    1974 இல் வந்த திக்கற்ற பார்வதி, குடியின் கொடுமைகளை சொல்லும் படம். பார்வதியும்
    (லட்சுமி)கருப்பனும்(ஸ்ரீகாந்த்) ஏழை தம்பதிகள். ஒரு குழந்தை பிறந்த பிறகு ,வருமானத்தை பெருக்க கடன் வாங்கி ஒரு வண்டி வாங்குவார். பிறகு மெதுவாக குடி பழக்கத்துக்கு அடிமையாகி,குழந்தையை இழந்து, கடனை கட்ட முடியாமல், கடன் கொடுத்தவரின் பலாத்காரத்துக்கு ஆளாவாள் பார்வதி.அதனால் அவனை தாக்கி கருப்பன் சிறை செல்ல, அவனை விடுவிக்க பார்வதி தன தவறை ஒப்பு கொள்வாள். அதனால் கணவன் மற்றும் அவர் உறவினர்களின் உதாசீனத்தினால் வழியறியாது மலை முகட்டிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வாள்.
    ரொம்ப சாதாரணமாய் எடுக்க பட்ட படம். சிட்டிபாபு இசை சில இடங்களில் ஓகே. ஸ்ரீகாந்த் ,கருப்பன் ரோலுக்கு miscast ஆக தெரிவார். லட்சுமி கொஞ்சம் பரவாயில்லை ரகம். அப்போது நான் ஜோல்னா பை கோஷ்டியில் இருந்ததால் உன்னை போல் ஒருவன்,தாகம்,திக்கற்ற பார்வதி,தேநீர் ,அக்ரகாரத்தில் கழுதை போன்ற அரைகுறை artfilm கழுத்தருப்புக்களை பார்த்தே தீர வேண்டியிருந்தது.
    இது படு போர். ஆழமில்லாத,சுவையுமில்லாத பிரசார சனியன்.

  9. #168
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'வெண்ணிற ஆடை' ஸ்ரீகாந்த்

    கிருஷ்ணா சார், மற்றும் கார்த்திக் சார் தங்களுக்காக













    நடிகர் திலகமே தெய்வம்

  10. #169
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வாசு சார்
    தங்கள் வருகை மிகவும் மகிழ்ச்சியூட்டுகிறது. என் கிராமம் என் மண்... அட்டகாசமான துவக்கம்...
    அதே போல் இங்கு வெண்ணிற ஆடை அமர்க்களமான ஸ்டில்கள்....
    தொடருங்கள்...
    ஆவலோடு காத்திருக்கிறோம்... தங்கள் பதிவுகளுக்காக...
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. #170
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    திக்கற்ற பார்வதி - சில துணுக்குகள்







    1. NFDC என பின்னாளில் பெயர் மாற்றப் பட்ட Film Finance Corporation நிறுவனத்தின் உதவியால் தயாரிக்கப் பட்ட படம்.
    2. சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி அவர்களின் ஒரே திரைப்படம்
    3. திரைப்படம் வெளியிடப் பட்ட பிறகு அதனுடைய சிறப்பை அங்கீகரித்து ஒரு மாநில அரசே வாங்கிய படம். தமிழக அரசால் வாங்கப் பட்டது.
    4. முதன் முதலாக படப்பிடிப்பு நீதிமன்றத்திலேயே நடத்தப் பட்டது மட்டுமின்றி அந்நீதி மன்ற வழக்கறிஞர்களும் பங்கு கொண்ட படம்.
    5. ராஜாஜி பிறந்த தொரப்பள்ளியில் படமாக்கப் பட்டது.
    6. இப்படத்திற்கான அனுமதிக் கடிதத்தில் ராஜாஜி அவர்கள் இட்ட கையொப்பமே அவர் கடைசியாக இட்ட கையொப்பம்.
    7. இப்படத்திற்காக அவ்வாண்டின் சிறந்த நடிகைக்கான விருதிநை நூலிழையில் நந்தினி பக்தவத்சலா என்ற நடிகையிடம் பறி கொடுத்தார் நடிகை லக்ஷ்மி. என்றாலும் பிலிம்பேர் பத்திரிகையின் சிறந்த நடிகை விருதை அவருக்குப் பெற்றுத் தந்ததோடு சிறந்த மாநில படம் என்ற பிலிம்பேர் பத்திரிகையின் விருதையும் பெற்றது இப்படம்.



    8. இப்படத்திற்காக சிட்டிபாபு இசையமைத்த இரு பாடல்களில் ஒன்றை ராஜாஜி எழுத, மற்றொன்றை கவியரசர் கண்ணதாசன் எழுதினார்
    9. ராஜாஜியின் கதைக்கு திரைக்கதை வசனம் எழுதியவர் காரைக்குடி நாராயணன்.

    காடு படத்தின் மூலம் நூலிழையில் லக்ஷ்மியை வென்று சிறந்த நடிகை விருதை வென்ற நந்தினி பக்தவத்சலா

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Page 17 of 19 FirstFirst ... 71516171819 LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •