-
10th May 2010, 09:34 PM
#121
Senior Member
Seasoned Hubber
அன்னப் பறவை இசையமைப்பாளர் ஆர். ராமானுஜம். இவர் எக்கோ ரிக்கார்டிங் கம்பெனி யைச் சேர்ந்தவரும் பிரபல இசையமைப்பாளருமான ஆர். பார்த்த சாரதி அவர்களின் சகோதரர் ஆவார். அன்னப் பறவையைத் தொடர்ந்து ராமானுஜம் இசையமைத்து வெளிவந்த மற்றொரு படம் ஆனந்த பைரவி. இதில் எஸ். வரலட்சுமி அவர்கள் பாடிய உமையவளே முத்து மாரியம்மா பாடல் மிகவும் உள்ளத்தை உருக்கக் கூடியதாகும்.
பணம், பெண், பாசம் படம் சென்னையில் அலங்கார் திரையரங்கில் முற்பகல் காட்சியாக வெளியானதாக நினைவு. அதில் இடம் பெற்ற பாடல் கலைமாமணியே, லட்சுமி வந்தாள், உள்ளிட்ட பாடல்கள் இடம் பெற்றதாக நினைவு. ஆனால் எனக்குப் பிடித்த ரோஜாப்பூவே பாடல் அதில் இடம் பெற்றதா என நினைவில்லை.
வாய்ப்புக்கு நன்றி.
ராகவேந்திரன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
10th May 2010 09:34 PM
# ADS
Circuit advertisement
-
11th May 2010, 10:25 AM
#122
நன்றி திரு ராகவேந்தர் அவர்களுக்கு
ஆனந்த பைரவி படம் ரவி சந்திரன் கே.ர.விஜயா மற்றும் ஜெயதேவி நடித்து வெளி வந்தது அதில் 2 நல்ல பாடல்கள் உள்ளன 1 கோடி கோடி இன்பம் அது தேடி வந்த சொந்தம் ஆடி மத வெள்ளம் நீ என் ஆனந்த பைரவி . 2 ஒரு நாளில் உருவானது இது ஒரு நாளில் முடிவானது . இந்த இரண்டு பாடல்களுமே T .M .S அவர்கள் பாடி இருப்பார்கள். நினைவுகளை மீட்டி விட்டதற்கு நன்றி. பணம் பெண் பாசம் முத்துராமன் சரிதா நடிதது வெளி வந்தது திரு ஜாவர் சீத ராமன் கதை . பணம் பகை பாசம் ஸ்ரீகாந்த் மற்றும் ஜெயப்ரபா நடிப்பில் வெளி வரபோவதாக டெய்லி தந்தி பேப்பர் இல் விளம்பரம் பார்த்த நினவு. அதில் எனக்கு பிடித்த ரோஜா பூவே பாடல் சிலோன் ரேடியோவில் 1980 கால கட்டங்களில் அடிகடி கேட்ட நினவு
நன்றி
-
11th May 2010, 10:41 AM
#123
ஸ்ப்ப்: எனக்கு பிடித்த ரோஜா பூவே
எடுத்து செல்லலாமா
ப்ஸ்: எதற்கு உனக்கு அஏக்கம் கண்ணா
இசையை கேட்கலாமா
ஸ்ப்ப்: எனக்கு பிடித்த ரோஜா பூவே
எடுத்து செல்லலாமா
ஸ்ப்ப்: நல்ல வெணு கானம் உந்தன் மொழியோ
இல்லை வீணை மீட்டுகின்ற இசையோ
ப்ஸ்: எந்தன் காதல் மன்னன் என்ன கவியோ
என்னை பார்த்தால் கவிதை வருமோ
ஸ்ப்ப்: நல்ல வெணு கானம் உந்தன் மொழியோ
இல்லை வீணை மீட்டுகின்ற இசையோ
ப்ஸ்: எந்தன் காதல் மன்னன் என்ன கவியோ
என்னை பார்த்தால் கவிதை வருமோ
ஸ்ப்ப்: இது தானா காதல் அமுதம்
ப்ஸ்: உந்தன் நெஞ்சில் மலரும் குமுதம்
ஸ்ப்ப்: இது தானா காதல் அமுதம்
ப்ஸ்: உந்தன் நெஞ்சில் மலரும் குமுதம்
ஸ்ப்ப்: எனக்கு பிடித்த ரோஜா பூவே
எடுத்து செல்லலாமா
ப்ஸ்:எதற்கு உனக்கு அஏக்கம் கண்ணா
இசையை கேட்கலாமா
ஸ்ப்ப்: எனக்கு பிடித்த ரோஜாப் பூவே
எடுத்து செல்லலாமா
ப்ஸ்: விரல் தீண்டும் போது ஒரு மயக்கம்
மனம் டேவ லோகத்தில் மிதக்கும்
ஸ்ப்ப்: இது போக போக இன்னும் இனிக்கும்
தெளியாத போதை இருக்கும்
ப்ஸ்: பூங்க்கோதை கண்ணன் மடியில்
ஸ்ப்ப்: அவன் மங்கை அன்பின் பிடியில்
ஸ்ப்ப்: எனக்கு பிடித்த ரோஜா பூவே
எடுத்து செல்லலாமா
ஸ்ப்ப்: ஒரு நூலில் ஆடுகின்ற இடையே
உன்னை வாங்க வெண்டும் என்ன விலையே
ப்ஸ்: கையில் கொடுக்க வெண்டும் நீ உன்னையே
உடல் யாவும் உனது வசமே
ஸ்ப்ப்: ஒரு நூலில் ஆடுகின்ற இடையே
உன்னை வாங்க வெண்டும் என்ன விலையே
ப்ஸ்: கையில் கொடுக்க வெண்டும் நீ உன்னையே
உடல் யாவும் உனது வசமே
ஸ்ப்ப்: நெடு நாளாய் உனது அடிமை
ப்ஸ்: உந்தன் சொந்தம் தங்க பதுமை
ஸ்ப்ப்: நெடு நாளாய் உனது அடிமை
ப்ஸ்: உந்தன் சொந்தம் தங்க பதுமை
ஸ்ப்ப்: எனக்கு பிடித்த ரோஜா பூவே
எடுத்து செல்லலாமா
ப்ஸ்:எதற்கு உனக்கு அஏக்கம் கண்ணா
இசையை கேட்கலாமா
ஸ்ப்ப்: எனக்கு பிடித்த ரோஜாப் பூவே
எடுத்து செல்லலாமா
-
11th May 2010, 07:34 PM
#124
Senior Member
Seasoned Hubber
டியர் கிருஷ்ணாஜி
பணம் பகை பாசம் விளம்பரத்தோடும் ஓரிரு ஷெட்யூலோடும் சரி. படம் வரவில்லை. ஆனால் இந்தப் பாடல் மிக மிக பிரபலமானது. இந்தப் பாடலுக்கான இணைப்பு
http://music.cooltoad.com/music/song.php?id=191012
ராகவேந்திரன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
12th May 2010, 03:26 PM
#125
மிக்க நன்றி திரு ராகவேந்தர் அவர்களுக்கு
இதே போல் ஸ்ரீகாந்த் நடித்த கீழ்க்கண்ட படங்கள் வெளியானதா என்று எனக்கு சிறு சந்தேகம்
தங்க பதக்கத்தை தொடர்ந்து "குட் bye mr சௌத்ரி" என்று ஒரு திரைப்படம் வரபோவதாக தினத்தந்தி இல் பார்த்த நினவு
மற்றும் அவர் நடித்த காமன் பண்டிகை சித்ரா செவ்வானம் போன்ற படங்கள் வெளியானதா
என் உடைய ஒரு தாழ்மையான கேள்வி ஏன் திரு ஸ்ரீகாந்த் 1980 பிறகு நிறைய படங்களில் நடிக்கவில்லை ரஜினி உடன் பைரவி,சதுரங்கம் மற்றும் இறைவன் கொடுத்த வரம் படங்களில் நடித்தார் பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு தம்பிக்கு எந்த ஊரு (மெயின் வில்லன்),ஸ்ரீ ராகவேந்தர் மற்றும் வேலைக்காரன் (ஒரு சீன் மாத்திரம்) படங்களில் நடித்தார். இடையில் திரு ராமநாராயணன் இன் சில படங்களில் நடித்தார் பிறகு காணாமலே போய் விட்டார் ஏன் இந்த மிகுந்த இடைவெளி ஜெயா டிவி திரும்பிபர்கிறேன் நிகழ்ச்சியில் அவர் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக தோன்றியது
-
12th May 2010, 03:43 PM
#126
Senior Member
Seasoned Hubber
சித்திரச் செவ்வானம் மற்றும் காமன் பண்டிகை படங்கள் வெளியாகின. சித்திரச் செவ்வானம் படம் சென்னை பிளாஸாவில் வெளியான ஞாபகம். முதன் முதலில் இந்தப் படத்தில் இடம் பெற்ற எங்கே உன்னைக் கண்டால் கூட என்ற பாடலில் தான் எஸ்.பி.பி.யின் குரலில் புதிய வகையில் ஹம்மிங், சிணுங்கல் போன்ற வித்தியாசமான பாணியைப் புகுத்தியதாக நினைவு. உடன் பாடிய ஜானகியும் தன் குரலில் புதுமையான பாணியைப் புகுத்திப் பாட ஆரம்பித்தார். மெல்லிசை மன்னரின் இசையில் இப்பாடல் என்றும் மாறா இளமை பொங்கும் பாடலாகும். காமன் பண்டிகை வந்த வேகத்திலேயே திரும்பி விட்டது. குட்பை மிஸ்டர் சௌத்ரியைப் பொறுத்த வரை சென்டிமென்ட் காரணத்தால் தொடரப் படவில்லை. அது தங்கப்பதக்கம் படத்தின் பாதிப்பில் உருவாக்கப் பட்ட டைட்டில் என்றாலும் சில விநியோகஸ்தர்கள் வற்புறுத்தலினால் வேறு டைட்டில் இடப் பட்டுத் தொடரப் பட்டதாகக் கேள்விப் பட்டிருக்கிறேன். முக்கால் வாசி படம் முடிவடைந்ததாகவும் செய்திகள் வெளியானதுண்டு.
1980க்குப் பிறகும் அவர் நடித்த படங்கள் நிறைய வந்தன. ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அவர் அதிகம் நடித்ததாகத் தெரியவில்லை.
ராகவேந்திரன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
12th May 2010, 08:23 PM
#127
Senior Member
Senior Hubber
the last film which had srikanth was Mounam Sammadham i guess.
-
13th May 2010, 01:26 PM
#128
Senior Member
Veteran Hubber
Originally Posted by
rajeshkrv
the last film which had srikanth was Mounam Sammadham i guess.
ராஜேஷ்...
சத்யராஜின் 'மகா நடிகன்' படம்தான் அவர் திரையில் தோன்றிய கடைசிப்படம் (இதுவரை) என்று நினைக்கிறேன். அதில் கிளைமாக்ஸ் காட்சியில் கவர்னராக வந்து, சத்யராஜினால் உருவாக்கப்பட்ட இளைஞர்களுக்கு அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.
-
13th May 2010, 01:46 PM
#129
Senior Member
Veteran Hubber
Originally Posted by
gkrishna
என் உடைய ஒரு தாழ்மையான கேள்வி ஏன் திரு ஸ்ரீகாந்த் 1980 பிறகு நிறைய படங்களில் நடிக்கவில்லை ரஜினி உடன் பைரவி,சதுரங்கம் மற்றும் இறைவன் கொடுத்த வரம் படங்களில் நடித்தார் பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு தம்பிக்கு எந்த ஊரு (மெயின் வில்லன்),ஸ்ரீ ராகவேந்தர் மற்றும் வேலைக்காரன் (ஒரு சீன் மாத்திரம்) படங்களில் நடித்தார். இடையில் திரு ராமநாராயணன் இன் சில படங்களில் நடித்தார் பிறகு காணாமலே போய் விட்டார் ஏன் இந்த மிகுந்த இடைவெளி ஜெயா டிவி திரும்பிபர்கிறேன் நிகழ்ச்சியில் அவர் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக தோன்றியது
G.கிருஷ்ணா..
திரையுலகில் எல்லோருக்கும் ஏற்படும் தேக்க நிலை இவருக்கும் ஏற்பட்டது. இவர் வில்லனாக நடித்தபோது கதாநாயகனாக நடித்தவர்கள் திரையிலிருந்து ஒதுக்கப்பட்டபோது இவரும் சேர்ந்து ஒதுக்கப்பட்டார். இவர் வகித்து வந்த இடத்தை பின்னர் ரகுவரன், நாஸர், பிரகாஷ்ராஜ் போன்றோர் பிடித்து கொடிநாட்டத் துவங்கினர்.
தற்போது அவர் நடப்பதற்கு சற்று சிரமப்படுவதாகக் கேள்வி. ஜெயா டிவி. நிகழ்ச்சியின்போது கூட ஒரு இடத்தில் உட்கார்ந்த நிலையில்தான் பேசினார். சில ஆண்டுகளுக்கு முன் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் தன் மனைவியுடன் ஷாப்பிங் செய்துகொண்டிருந்தபோது பார்த்தேன். அப்போது நல்ல உடல் நலத்துடன் இருந்தார். வெள்ளை பேண்ட், வெள்ளை அரைக்கை சட்டை அணிந்திருந்தார்.
-
17th May 2010, 03:21 PM
#130
மிக்க நன்றி சாரதா madem அவர்களுக்கு
நான் சிவாஜி ரசிகர் ஆக இருந்தாலும் ஏனோ தெரியவில்லை ஸ்ரீகாந்த் மீது ஒரு ஈடுபாடு மீண்டும் அவர் நடிக்க மாட்டாரா என்று ஒரு ஏக்கம் சமீபத்தில் இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் திரைபடத்தில் ஜெய்ஷங்கர் மற்றும் அசோகன் பெயரை உபயோகபடுத்தி இருப்பது மிகவும் மகிழ்ச்சி ஆக இருந்தது டைரக்டர் ஸ்ரீதர் ஒரு பேட்டியில் ஸ்ரீகாந்த் பற்றி சொல்லும் போது "ஸ்ரீகாந்த் ஒரு மிக சிறந்த நடிகர் சினிமா உலகை ஸ்ரீகாந்த் புரிந்து கொள்ளவில்லையா அல்லது ஸ்ரீகாந்த்ஐ திரை உலகம் புரிந்து கொள்ளவில்லையா என்று எனக்கு ஒரு கேள்வி எப்போதும் உண்டு " என்று கூறி இருந்தார் . கமல் கூட ஸ்ரீகாந்தை பயன்படுத்தி கொள்ளவில்லை அவர் முகவரி தெரிந்தால் யாராவது சொல்லவும் ஒரு முறை நேரில் சந்திக்க ஆசை படுகிறேன். இதே போல் பழைய திரை பட நடிகர்கள் / நடிகைகள் முகவரி தெரிந்தால் சொல்லவும் அவர்களையும் ஒரு முறை நேரில் சந்திது மரியாதை செய்ய ஆசை படுகிறேன் சமீபிதில் மனோரமாவின் கண்ணீர் கதை பற்றி குமுதம் magazine இல் படித்தேன் மிகவும் வருத்தப்பட்டேன்
அன்புடுன் க்க்ருஷ்ண
Bookmarks