-
16th March 2010, 06:08 PM
#101
Senior Member
Veteran Hubber
Originally Posted by
RAGHAVENDRA
தெய்வீக ராகங்கள் பகுதி பகுதியாக அருமையாக அமைந்த படம். மூன்று கதாநாயகிகளி் இன்னொருவர் உழைக்கும் கரங்களில் கந்தனுக்கு மாலையி்ட்டாள் பாடலில் நடித்த பவானி. மற்றொருவர் சரியாக நினைவில்லமை. பாவை நீ மல்லிகை பாடலை ஜெயச்சந்திரன் வாணி ஜெயராம், மற்றும் ஓடுவது அழகு ரதம் என்ற பாடலை ஜாலி ஆப்ரஹாம் எஸ்.ஜானகி, பாடியிருப்பா. வாணி ஜெயராம் கங்கா யமுனா சரஸ்வதி என்ற ஹாலோவின் பாடலையும் பச்சை மோகினி மகராஜா என்ற பாடலையும் பாடியிருப்பார்.
டியர் ராகவேந்தர் சார்,
நீங்கள் சொன்னபிறகு அந்த பவானியின் முகம் நினைவுக்கு வந்துவிட்டது.
'பாவை நீ மல்லிகை... பால் நிலா புன்னகை' பாடல் ஜெயச்சந்திரனின் HIT பாடல்களில் ஒன்று.
அதுபோல வாணி ஜெயராமின்
'கங்கா யமுனா சரஸ்வதி... நீங்கள் குளித்த மூன்று நதி
தரையில் விழுந்ததும் புனிதத்தை இழந்தது
காரணம் உங்கள் தீய மதி' பாடலும் படம் ஓடிய காலத்தில் விரும்பிக் கேட்கப்பட்ட பாடல். அதுபோல 'பச்சை மோகினி மகராஜா' பாடலும் லேசாக நினைவிருக்கிறது. ஆனால் ஜாலியும் ஜானகியும் இணைந்து பாடியதாக நீங்கள் சொன்ன பாடல் நினைவில் இல்லை.
-
16th March 2010 06:08 PM
# ADS
Circuit advertisement
-
16th March 2010, 06:24 PM
#102
Senior Member
Veteran Hubber
Originally Posted by
RAGHAVENDRA
மேலும் வெண்ணிலா வெள்ளித்தட்டு பாடல் இடம் பெற்ற காளி கோயில் கபாலி, கங்கா யமுனா சரஸ்வதி (இதில் ஸ்ரீகாந்த் இருக்கிறார் என நினைக்கிறேன், இப்படத்தில் உமர்கயாம் எழுதி வைத்த கவிதை என்ற மிக அற்புதமான பாடல் எஸ்.பி.பாலாவும் இன்னொரு பாடகியும் பெயர் நினைவில்லை, பாட மெல்லிசை மன்னர் இசையமைத்திருந்தார்) படங்களைப் பற்றியும் தங்கள் பதிவினை எதிர்பார்க்கிறேன்.
டியர் ராகவேந்தர் சார்,
ஜெய்கணேஷ் கதாநாயகனாக நடித்த 'காளி கோயில் கபாலி' படத்தின் முழுக்கதையும் கோர்வையாக நினைவில் இல்லை. துண்டு துண்டாவே நினைவுக்கு வருகிறது. (சாந்தியில் 'விஸ்வரூபம்' ஓடிக்கொண்டிருந்தபோது பாரகனில் வெளியானதென்று நினைக்கிறேன்). அதே சமயம் ஜெய்சங்கர், ஷ்ரீதேவி நடித்த 'கங்கா யமுனா காவேரி'யும் 'ராஜாவுக்கேத்த ராணி'யும் நன்றாக நினைவில் உள்ளது. இரண்டுமே ஓடியனில் அடுத்தடுத்து வெளியானதாக ஞாபகம். 'நல்லதுக்கு காலமில்லை', 'குழந்தையைத் தேடி' படங்களும் அங்கேதான் வெளியானதாக நினைவு.
அதே நேரத்தில் பி.எஸ்.வீரப்பா தயாரித்து சரத்பாபு கதாநாயகனாக நடித்த 'மேகத்துக்கும் தாகமுண்டு' படத்தில் மெல்லிசை மன்னரின் அபார உழைப்பைச் சொல்லியே ஆக வேண்டும். கதை சரியில்லாத காரணத்தால் எம்.எஸ்.வி.யின் உழைப்பு அத்தனையும் விழலுக்கு இறைத்த நீரானது.
'மரகத மேகம் சிந்தும்
மழைவரும் நேரமிது' (வாணி ஜெயராம்) பாடலாகட்டும், அல்லது
'ஆடலாமா அன்ன நடை பின்னலிட' (வாணி-எஸ்.பி.பி) பாடலாகட்டும்.... ஒலித்தால் ஒரு கணம் நின்று கேட்டுவிட்டுப்போகத் தோன்றும். (ஆனால் அப்போது தமிழ்கூறும் நல்லுலகம் 'ஓரம் போ... ஓரம் போ' பின்னாலும், 'ஆகா வந்திருச்சு' பின்னாலும் ஓடிக்கொண்டிருந்த நேரம், நல்ல பாடல்கள் பல புறந்தள்ளப்பட்டன).
-
23rd March 2010, 12:33 AM
#103
Senior Member
Platinum Hubber
இன்று ஒரு ப்ளாகில் கண்டது :
http://2.bp.blogspot.com/_nSPvsgb1MP...h/vikatanj.jpg
Originally Posted by
vikatan
அன்னத்தின் மச்சானாக வரும் ஸ்ரீகாந்த் பஞ்சாயத்தில் வாதாடும் போதும், அன்னத்திடம் தன்னுடைய காதலை வெளிப்படுத்தும் உருக்கத்திலும்...அடேயப்பா! வழக்கமாகத் துகிலுரியும் ஸ்ரீகாந்தா இவர்?
-
26th March 2010, 11:03 PM
#104
ஸ்ரீகாந்த் நடிட்த யாருக்கு யார் காவல் திரைப்படம் சுஜாதாவின் ஜன்னல் மலர் நாவலை மூலக் கதையாகக் கொன்டது. சுஜாதா இங்கே அந்தப் படத்தைப் பற்றி நினைவு கூர்கிறார். (ஆனால் இந்தப் பதிவில் ஸ்ரீகாந்த் பற்றி அதிகம் இல்லை.)
http://awardakodukkaranga.wordpress....006;த-4/
-
29th March 2010, 01:17 PM
#105
Senior Member
Veteran Hubber
நேற்றிரவு யதார்த்தமாக 'கே - டிவி' சேனலைத்திருப்பியபோது, ஒரு திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது. கிட்டத்தட்ட முடிவை நெருங்கும் நேரம் என்று நினைக்கிறேன். படத்தில் ஸ்ரீகாந்த் இருப்பதைப்பார்த்ததும் என்ன படமாக இருக்கும் தொடர்ந்து பார்த்தேன். இடையில் விளம்பர இடைவேளைக்குப்பின் மீண்டும் துவங்கியபோது படத்தின் பெயர் 'வெற்றிக்கனி' என்று காட்டினர்.(இப்படியொரு படம் வந்ததா?)
பார்க்கத்துவங்கிய இடத்திலிருந்து தொடர்ந்த வரையில், ஆனந்தபாபு, ரவீந்தர் என இரண்டு கதாநாயகர்கள். ஒரு கதாநாயகி ஜீவிதா. ரவீந்தரின் அப்பா ஸ்ரீகாந்த், தன் மகனை பெரிய பணக்காரியான ஜீவிதாவுக்கு மணமுடித்து அவளது சொத்துக்களை அடைய நினைக்கிறார். ஆனால் ஜீவிதாவுக்கும் ஆனந்தபாபுவுக்கும் காதல். அதனால் ரவீந்தர் வில்லனாகிறார். இதனிடையே ரவீந்தரின் ஒரிஜினல் அப்பா வி.கோபாலகிருஷ்ணன் சிறியிலிருந்து விடுதலையாகி வந்து ஸ்ரீகாந்தை சந்தித்து, தன்னை சிறைக்கு அனுப்பிவைத்ததற்காக வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். அதை மறைந்திருந்து கேட்கும் ரவீந்தருக்கு வி.கோ.தான் தன் உண்மையான அப்பா, ஸ்ரீகாந்த் தன்னை வைத்து பணத்தைச்சுருட்ட நினைக்கும் ஒரு அயோக்கியன் என்று தெரியவருகிறது.
விஷயம் தெரிந்த அனைவருமே ஸ்ரீகாந்துக்கு எதிரியாகிறார்கள். பிறகென்ன கிளைமாக்ஸ்தான். வழக்கம்போல மலைப்பகுதி. வழக்கம்போல ரவீந்தரின் அப்பாவையும், ஆனந்தபாபுவின் அம்மாவையும் கடத்தி வந்து கையில் துப்பாக்கியுடன் ஸ்ரீகாந்த் மிரட்டுகிறார். கிளைமாக்ஸ் சண்டை. ஸ்ரீகாந்த் வி.கோபாலகிருஷ்ணனைச் சுட்டுத்தள்ள, பதிலுக்கு ரவீந்தர் ஸ்ரீகாந்தைச்சுட, சூடு வாங்கியபின்னரும் ஸ்ரீகாந்த ரவீந்தரைச்சுட, மீண்டும் ரவீந்தர் ஸ்ரீகாந்தை சுட்டுத்தள்ள, மிஞ்சியிருக்கும் ஆனந்தபாபுவும் ஜீவிதாவும் டூயட் பாட, படம் முடிந்தது. சரியான சொதப்பல் படம் என்று தெரிகிறது, காட்சியமைப்பு களையும், நடிகர்களையும் வைத்துப்பார்க்கும்போது யாருடைய இயக்கம் என்று ஊகிக்க முடிகிறது. அவரேதானா...?. நிச்சயமாகத் தெரியாததால் 'அட, ராமா.. நாராயணா...' என்று கூவ முடியவில்லை.
படத்தில் வனிதாவும் இருக்கிறார், ஆனந்தபாபுவின் தங்கையாக. ஒருகட்டத்தில் வில்லன் ஸ்ரீகாந்த் வனிதாவைத் தூக்கில் தொங்கவிட்டு அவர் காலில் டேப் ரிக்கார்டரைக்கட்டி விட்டிருக்கிறார். தங்கையின் பிணம் தூக்கில் தொங்குவதைப்பார்க்கும் ஆனந்தபாபு, முகத்தில் எந்த சலனமுமில்லாமல் டேப்ரெக்கார்டரை ஆன் பண்ணி ஸ்ரீகாந்த் என்ன பேசியிருக்கிறார் என்று கேட்டுவிட்டு, தூக்கில் தொங்கும் தங்கையின் பிணத்தைக்கூட இறக்காமல் அப்படியே தொங்கவிட்டுச்செல்கிறார். இதைவிட ஒரு மகாமட்டமான டைரக்ஷனைப்பார்த்திருக்க முடியுமா?.
கிளைமாக்ஸுக்கு சற்று முன்னர், கிளப்பில் ஜில்ஜில் ஜிகினா உடையுடன் ஆனந்தபாபு, ரவீந்தர், ஜீவிதா, டிஸ்கோ சாந்தி ஆடும் ஆட்டமும் பாட்டும் ஜோர். படுவேகம். இன்றைய ஆட்டங்களைவிட பலமடங்கு தேவலை. காமிராவை ஆட்டாத ஒளிப்பதிவும் (கேமராமேன் வாழ்க), கண் இமைப்பதற்குள் ஐம்பது காட்சிகளை மாற்றாததும் (எடிட்டர் வாழ்க) பாடலை களைகட்ட வைக்கிறது. அதைத்தொடர்ந்து ரவீந்தரும் ஆனந்தபாபுவும் போடும் சண்டைக்காட்சியும் வெகுஜோர். அதுபோல வில்லனின் ஆட்களிடம் சிக்கிய வி.கோ.வைக்காப்பாற்ற ரவீந்தர் போடும் சண்டையும், அவுட்டோரில் அழகாக இருந்தது. கதைதான் பலவீனமாகத் தெரிந்தது. ஸ்ரீகாந்தைப்பொறுத்தவரை இந்தப்படத்துக்கு அவரால் என்ன பண்ணமுடியுமோ அதைத் தந்திருந்தார்.
இருந்தாலும் 'வெற்றிக்கனி' இன்னொருமுறை முழுதாகப் பார்க்கும் வாய்ப்புக்கிடைத்தால் பார்க்கனும் என்று தோன்றியது. சீரியஸ் படத்தைப்பார்த்து சிரித்து மகிழலாமே.
-
13th April 2010, 11:00 AM
#106
some more movies of srikanth
1.Oru veedu iru ulagam with shoba
2.Vattardhikul saduram with ladha/sumithra
3.idahyatil oru idam with radhika
4.oru marathu paravaigal with sripriya
5.raja rajeswari with sujatha
6.jaya nee jayuchette
7.Ponnai solli kuttramillai with y.vijaya/sivakumar
8.yarukku mapillai yaroo with padapat
9.vazhvu enpakkam with muthuraman/lakshmi
10.annapoorani with k.r.vijaya
-
13th April 2010, 11:08 AM
#107
11. ezhaikkuam kalam varum with subha
அன்மையில் அவருடைய பேட்டி ஜயா TV ல் ஒலி பரப்பானது அதில் அவர் நாடகத்தை பட்ட்ர்ரி நீன்ட நேரம் பேசினார்
-
18th April 2010, 06:43 AM
#108
தங்கப&
தங்கப் பதக்கம் திரைப்படத்துக்கு விகடனில் வந்த விமர்சனம் இங்கே - http://awardakodukkaranga.wordpress....#2990;்/
// ஸ்ரீகாந்திடம் நல்ல முன்னேற்றம். அப்பாவின் கண்டிப்பைத் தவறாகப் புரிந்துகொண்டு அவரை அவமானப்படுத்தும் சந்தர்ப்பங்களைச் சாமர்த்தியமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். //
-
23rd April 2010, 12:43 AM
#109
தங்கப் பதக்கம் படத்துக்கு என் விமர்சனம் இங்கே - http://awardakodukkaranga.wordpress....#3007;ன/
// படத்தின் revelation ஸ்ரீகாந்த்தான். அவருடைய காரக்டரில் நம்பகத்தன்மை அதிகம். சின்ன வயதில் இருந்தே அப்பா மீது காண்டு, நடுவில் கொஞ்சம் சமாதானமாகப் போக முயற்சி செய்தாலும், மீண்டும் கடுப்பாகி அப்பாவை வீழ்த்த முயற்சி செய்யும் ரோல். அலட்டிக் கொள்ளாமல், பொங்கி எழாமல், அதே நேரத்தில் இறுகிப் போன மனது என்பதை நன்றாக காட்டுகிறார். நான் சிறுவனாக இருந்த காலத்தில் என் காலேஜ் படிக்கும் உறவினர்கள் சிவாஜி இதற்கப்புறம் ஸ்ரீகாந்திடம் கொஞ்சம் பயந்தார், அவருடன் சேர்ந்து நடிக்கும்போதெல்லாம் ஸ்ரீகாந்துக்கு ஸ்கோப் கம்மியாக இருக்கும்படி பார்த்துக் கொண்டார் என்று சொல்வார்கள். அவர்களுக்கெல்லாம் ஆதர்சம் ஸ்ரீகாந்த்தான். ஸ்ரீகாந்த் மாதிரியே முடி, மீசை என்று அலைந்தார்கள். அவர்கள் சொன்னதில் உண்மை இருக்கிறதா இல்லையா என்று சாரதா போன்றவர்கள்தான் சொல்லவேண்டும். //
-
23rd April 2010, 01:26 PM
#110
Senior Member
Veteran Hubber
டியர் ஆர்.வி.
உங்கள் நண்பர்கள்/உறவினர்கள் கூற்று முழுக்க முழுக்க கற்பனையே தவிர உண்மையில்லை. இதை ஸ்ரீகாந்தே ஒப்புக்கொள்ள மாட்டார். வியட்நாம் வீடு படத்திலேயே ஸ்ரீகாந்தின் நடிப்பைப் பார்த்த நடிகர்திலகம், 'இவனை நம்ம படத்துல தொடர்ந்து போடுங்கப்பா' என்று தன் இயக்குனர்களிடம் சொன்னார். அதிலும் தங்கப்பதகக்கத்துக்குப் பிறகுதான் அதிகமாக ஸ்ரீகாந்த், நடிகர்திலகத்தின் படங்களில் தொடர்ந்து இடம் பெற்றார்.
பீம்சிங் படங்களில், ஒரே படத்தில் ரங்காராவ், சுப்பையா, பாலையா, எம்.ஆர்.ராதா, ஜெமினி ஆகியோருடன் நடித்து கரை கண்டவரான நடிகர்திலகம், ஸ்ரீகாந்தைப்பார்த்து பயந்தார் என்று சொல்வது மிகப்பெரிய ஜோக். தன்னுடன் நடிப்பவர்கள், தனக்கு இணையாக சிறப்பாகச்செய்ய வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு நடிக்கச்சொல்லிக்கொடுப்பவர் நடிகர்திலகம். இதை திரைப்பிரபலங்கள் பலமுறை பல இடங்களில் சொல்லியிருக்கிறார்கள். 'உயர்ந்த மனிதன்' படத்தில், (தனக்கு அவ்வளாவாகப்பிடிக்காத) அசோகனுக்கு அவர் 'அட்டாக்' வந்து சாகும் தறுவாயில் எப்படி நடிக்க வேண்டும் என்று சொல்லிக்கொடுத்தாராம் நடிகர்திலகம். ஆனால் அதில் பத்தில் ஒரு பங்கு கூட அசோகன் நடிக்கவில்லையாம் (ஆதாரம்: நேற்று (22.04.2010) ஜெயா தொலைக்காட்சியின் 'திரும்பிப்பார்க்கிறேன்' நிகழ்ச்சியில் திரு ஏ.வி.எம்.சரவணன் சொன்ன தகவல்).
சிலருக்கு சிவாஜியைக் கிண்டல் செய்வது அல்வா சாப்பிடுவது போல. அவர்கள் எப்போதும் அதை விடப்போவதில்லை, (உங்கள் நண்பர்கள் உட்பட).
Bookmarks