-
14th March 2010, 09:19 PM
#91
Senior Member
Seasoned Hubber
சகோதரி சாரதா அவர்களுக்கு,
முதலில் ஸ்ரீகாந்த் என்றதும் நம்முடைய ஹப்பில் அவரைப்பற்றியெல்லாம் யார் விவாதிக்கப் போகிறார்கள், இது தற்போதைய ஸ்ரீகாந்த்தாக இருக்கும் என்று நினைத்து திரியை ஆரம்பித்தவர் பெயர் பார்த்தேன். சாரதா என்று இருந்தது. உடனே ஆஹா இது நிச்சயம் நம்ம ஸ்ரீகாந்த் என்று ஆவலுடன் பக்கங்களைப் பார்த்தேன். என்னை 70களுக்கே அழைத்துச் சென்று விட்டீர்கள் சாரதா, நன்றி.
நடுவில் ஸ்ரீகாந்த் மீது எனக்கு கொஞ்சம் கோபம் இருந்தது உண்மை. அவருடைய அரசியல் நிலைப்பாட்டினால் அல்ல ஏனென்றால் கிட்டத்தட்ட அனைத்து ரசிகர்களின் மனநிலையைத் தான் அவரும் மேற்கொண்டிருந்தார். ஆனால் அவர் கூட்டங்களில் மேடைப் பேச்சில் நடிகர் திலகத்தைக் கடுமையாக விமர்சித்ததை என் மனம் ஏற்கவில்லை. தெருத்தெருவாக பிச்சை எடுத்தாலும் எடுப்பேனே தவிர ஒரு நாளும் போக்ரோட்டில் போய் நிற்க மாட்டேன் என்று பேசியது இன்னும் என் நினைவில் உள்ளது. ஆனால் அது சில காலம் மட்டுமே. நாளடைவில் அத்தனை தேசியவாதிகளும் தேசிய இயக்கங்களும் சிதறு தேங்காய் போல் ஆகி விட்டது பரிதாபத்திற்குரியது. இதைப் பற்றிய விவாதம் வேண்டாம். ஸ்ரீகாந்த் விஷயத்திற்கு வருவோம்.
தொலைக்காட்சியில் ஸ்ரீகாந்தைப் பார்த்த வுடனேயே நமது உடன் பிறவா சகோதரனைப் போன்று, நம்முடன் நெருங்கிப் பழகிய ரசிக நண்பர்களைப் போன்று அன்புணர்வு ஏற்பட்டது. அந்த அளவிற்கு அந்தக் கால சிவாஜி ரசிகர்களின் நெஞ்சில் இந்த மூவரும் குடி கொண்டு விட்டனர். குறிப்பாக சசிகுமார் மற்றும் ஸ்ரீகாந்த். இன்னும் சொல்லப் போனால் நாம் சசிகுமாரைப் பற்றி நிறைய விவாதிக்க வேண்டும். சமயம் வரும்போது என் எண்ணத்தைப் பகிர்ந்து கொள்கிறேன்.
தெய்வீக ராகங்கள் பகுதி பகுதியாக அருமையாக அமைந்த படம். மூன்று கதாநாயகிகளி் இன்னொருவர் உழைக்கும் கரங்களில் கந்தனுக்கு மாலையி்ட்டாள் பாடலில் நடித்த பவானி. மற்றொருவர் சரியாக நினைவில்லமை. பாவை நீ மல்லிகை பாடலை ஜெயச்சந்திரன் வாணி ஜெயராம், மற்றும் ஓடுவது அழகு ரதம் என்ற பாடலை ஜாலி ஆப்ரஹாம் எஸ்.ஜானகி, பாடியிருப்பா. வாணி ஜெயராம் கங்கா யமுனா சரஸ்வதி என்ற ஹாலோவின் பாடலையும் பச்சை மோகினி மகராஜா என்ற பாடலையும் பாடியிருப்பார். தயாரிப்பாளர் - ஆச்சி சினி ஆர்ட்ஸ்
வசனம் இயக்கம் - ஏ. வீரப்பன்
மற்றபடி தங்களுடைய அனைத்து விமரிசனங்களும் நேர்மையாக உள்ளன. பாராட்டுக்கள்.
ராகவேந்திரன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
14th March 2010 09:19 PM
# ADS
Circuit advertisement
-
15th March 2010, 06:51 PM
#92
Senior Member
Veteran Hubber
சகோதரர் ராகவேந்தர் அவர்களுக்கு....
ஸ்ரீகாந்தின் திரியைப் பார்வையிட்டு தங்கள் கருத்துக்களைப் பதிந்தமைக்கு மிக்க நன்றி. ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் ஆகியோரின் திரிகள் துவங்கப்பட்ட சில நாட்களிலேயே இதுவும் தொடங்கப்பட்டு 90 பதிவுகளுக்கு மேல் கொண்டு, ஏழாவது பக்கத்தை எட்டியுள்ளது. (இதுபோன்ற திரிகளுக்கு பார்வையாளர்கள் அதிகம் வந்தபோதும், பதிவாளர்கள் குறைவான எண்ணிக்கையானபடியால் மெல்லவே வளர்ந்து வருகிறது).
சட்டென பார்ப்பவர்களுக்கு, ஒருவேளை இது தற்போதைய (பார்த்திபன் கனவு) ஸ்ரீகாந்தின் திரியோ என்று தோன்றி விடக்கூடாது என்ற எண்ணத்திலேயே, பழைய ஸ்ரீகாந்தின் நினைவு வருவதற்காக 'வெண்ணிற ஆடை' ஸ்ரீகாந்த் என்று தலைப்பிட்டிருந்தேன். மற்ற இரு திரிகளின் பக்கத்திலேயே இதுவும் இடம் பெற்றிருந்ததால் இதுவரை பார்த்திருப்பீர்கள், எனினும் அவர்மீது நடிகர்திலகம் ரசிகர்களின் கோபம் காரணமாக (கோபத்தின் காரணம் உங்கள் பதிவிலேயே இருக்கிறது) இதுவரை நீங்கள் எந்த போஸ்டும் பண்ணவில்லை என்றே நினைத்திருந்தேன்.
இந்த திரியில் நான் பதிந்த 'காங்கிரஸ் பேரியக்கத்தில் ஸ்ரீகாந்த்' என்ற பதிவில் கூட, ஸ்தாபன காங்கிரஸிலிருந்து நடிகர்திலகமும் மற்றோரும் இந்திரா காங்கிரஸில் இணைய முடிவெடுத்தபோது, (நீங்கள் குறிப்பிட்ட அந்த வாக்கியங்கள் என் மனதில் இருந்தபோதும்) நடிகர் திலகத்தை ஸ்ரீகாந்த் கடுமையாக சாடினார் என்று மட்டும் குறிப்பிட்டிருந்தேன். அவர் சொன்ன வார்த்தைகளால் நடிகர்திலகத்தின் ரசிகப்பெருமக்கள் மனம் புண்பட்டது என்பதில் ஐயமில்லை. எனினும் நடிகர்திலகத்தின் அந்த முடிவு ரசிகர்கள் மத்தியிலும் ஏற்புடையதாக இல்லையென்பதும் உண்மை. அந்த முடிவு, அப்போது வெளியான பாட்டும் பரதமும், உனக்காக நான், கிரகப்பிரவேசம் படங்களின் வெற்றியைப் பாதித்தது என்று பலமுறை முரளியண்ணா கூட சொல்லியிருக்கிறார்.
இருப்பினும் இதையெல்லாம் மீறி ஸ்ரீகாந்தின் மீது நமக்கெல்லாம் தனிப்பாசம் உண்டு. அதனால்தான் தொலைக்காட்சியில் பார்த்ததும் 'அடடே "நம்ம" ஸ்ரீகாந்த்' என்று உங்களுக்கும் தோன்றியிருக்கிறது.
-
15th March 2010, 07:05 PM
#93
Senior Member
Seasoned Hubber
சகோதரி சாரதா அவர்களுக்கு,
தங்களுடைய பதிவு என் எண்ணங்களை அப்படியே பிரதிபலித்தது. நன்றி.
வெண்ணிற ஆடை என்ற தலைப்பின் பகுதியை நான் பார்க்காமலில்லை. ஆனால் பழைய படங்களின் பெயரிலேயே இப்போது படமெடுக்கும் பாணி அதிகமாகிவிட்ட படியால் அப்படி ஒரு படம் தயாராகிறதோ என்கிற எண்ணம் தான் தோன்றியது. தங்களுடைய முன் எச்சரிக்கையான அறிவிப்பையும் மீறி இதை ஒரு புதுப் படத்தலைப்பு என்று நினைத்த என் எண்ணத்திற்கு நிச்சயம் நான் காரணமாயிருக்க மாட்டேன் என நினைக்கிறேன். தலைப்புக்கு பஞ்சம் வந்தது போல் பழைய பெயரிலேயே படமெடுக்கும் இப்போதைய திரை உலகம் தான் காரணமாயிருக்க முடியும். எப்படியோ உரிய நேரத்தில் கவனித்து பங்கெடுக்க முடிந்ததற்கு மகிழ்கிறேன்.
மேலும் வெண்ணிலா வெள்ளித்தட்டு பாடல் இடம் பெற்ற காளி கோயில் கபாலி, கங்கா யமுனா சரஸ்வதி (இதில் ஸ்ரீகாந்த் இருக்கிறார் என நினைக்கிறேன், இப்படத்தில் உமர்கயாம் எழுதி வைத்த கவிதை என்ற மிக அற்புதமான பாடல் எஸ்.பி.பாலாவும் இன்னொரு பாடகியும் பெயர் நினைவில்லை, பாட மெல்லிசை மன்னர் இசையமைத்திருந்தார்) படங்களைப் பற்றியும் தங்கள் பதிவினை எதிர்பார்க்கிறேன்.
அன்புடன்
ராகவேந்திரன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
16th March 2010, 12:16 AM
#94
பைரவி திரைப்படம் பற்றி பக்ஸ் எழுதி இருக்கும் பதிவு இங்கே - இதில் ஸ்ரீகான்த் வில்லன். http://awardakodukkaranga.wordpress....;ி-1978/
-
16th March 2010, 12:36 AM
#95
Senior Member
Platinum Hubber
Originally Posted by
Bhoori
ஸ்ரீகான்த்
அமீர் கான், ஷாருக்கான் மாதிரி ஸ்ரீகானா?
-
16th March 2010, 03:00 AM
#96
பைரவிக்கு பிறகுதான் நான் ரஜினி விசிறியாக மாறினேன். இந்த படத்தின் போஸ்டர்களில் ரஜினிக்கு கருப்பு பான்ட்; கருப்பு கோட், அதில் பட்டன் போட்டிருக்க மாட்டார், உள்ளேயும் சட்டை பனியன் எதுவும் கிடையாது. மேல் உடலில் நாடு பாகம் தெரியும். அவருக்கு எதிர்த்தாற்போல ஒரு பாம்பு படமெடுத்து நிற்கும். ஆஹா என்ன ஸ்டைல் என்ன ஸ்டைல்!
பைரவி வந்த ஓரிரு மாதங்களில் சதுரங்கம் என்று இன்னொரு படம் வந்தது. அதில் ரஜினிக்கு ஸ்ரீகாந்துக்கும் ரோல்கள் மாறி இருக்கும். ரஜினி அண்ணன், ஸ்ரீகாந்த் தம்பி. ரஜினிக்கு நெகடிவ் ரோல்; ஸ்ரீகாந்த்தான் ஹீரோ. ஒரு நல்ல பாட்டு உண்டு, நினைவு வரவில்லையே! ரோல் மாறி இருக்கிறதே என்று பேசிக் கொண்டிருப்போம்.
app_engine, ரொம்ப குறும்பு, அக்குறும்பு!
-
16th March 2010, 10:59 AM
#97
னெரடியான தொடர்பு இல்லாவிட்டாலும், சிலருக்கு இந்த பதிவுகள் பிடிக்கலாம். ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள், நடிகை நாடகம் பார்க்கிறாள் புததகஙளைப் பற்றிய பதிவுகள் இங்கே.
சில நேரங்களில் சில மனிதர்கள்
நடிகை நாடகம் பார்க்கிறாள்
-
16th March 2010, 11:07 AM
#98
//சதுரங்கம் படத்தின் ஒரு நல்ல பாட்டு உண்டு, நினைவு வரவில்லையே! //
மதனோத்சவம் என்ற பாடல்!
இங்கே கேளுங்கள்
http://98.130.188.109/movies/pages/i...angam%28old%29
(நல்லதந்திக்கு நன்றி!)
பைரவியில் ஒரு பாட்டு எங்கள் ஸ்கூல் தமிழ் வாத்தியார் சிதம்பரநாதன் எழுதியது. கட்ட புள்ளே குட்ட புள்ளே கருகமணி போட்ட புள்ளே என்ற பாட்டு. இந்த பாட்டில்தான் வாடிப்பட்டி சந்தையில வாங்கி வந்த ரவிக்கையை ரஜினி ஸ்ரீப்ரியாவுக்கு போட்டுவிடுவார். நாங்கள் யாரும் வெளியில் போய் எங்க வாத்தியார் பாட்டு எழுதி இருக்கிறார் என்று சொல்லவே மாட்டோம். என்ன பாட்டு என்று கேட்டுவிட்டால்? ஏரிக்கரை பூங்காத்தே நீ போற வழி தென்கிழக்கோ பாட்டு எழுதிய பிறகுதான் வெளியில் தைரியமாக சொல்ல ஆரம்பித்தோம். (St. Joseph's Hr. Sec. School, Chengalpattu)
-
16th March 2010, 01:55 PM
#99
Senior Member
Veteran Hubber
Originally Posted by
app_engine
Originally Posted by
Bhoori
ஸ்ரீகான்த்
அமீர் கான், ஷாருக்கான் மாதிரி ஸ்ரீகானா?
Dear app_engine
தொடர்ந்து நீங்கள் இந்த திரிகளை படிக்கிறீர்கள் என்று தெரிகிறது. நீங்களும் ஒரு 'பழைய பட விரும்பி'தானே. உங்கள் கருத்துக்களையும் விமர்சனங்களையும் இங்கு தொடர்ந்து பதியலாமே.
(ஒரு காலத்தில் நாமெல்லாம் கஷ்ட்டப்பட்டு உருவாக்கிய 'Good Picturisation of Great Songs' என்ற திரி காணாமலே போய்விட்டது. அதன் முக்கிய பங்கேற்பாளரான திரு. பாலாஜியையும் அதன்பின்னர் காணவில்லை)
-
16th March 2010, 06:03 PM
#100
Senior Member
Veteran Hubber
Originally Posted by
Bhoori
பைரவியில் ஒரு பாட்டு எங்கள் ஸ்கூல் தமிழ் வாத்தியார் சிதம்பரநாதன் எழுதியது. கட்ட புள்ளே குட்ட புள்ளே கருகமணி போட்ட புள்ளே என்ற பாட்டு. இந்த பாட்டில்தான் வாடிப்பட்டி சந்தையில வாங்கி வந்த ரவிக்கையை ரஜினி ஸ்ரீப்ரியாவுக்கு போட்டுவிடுவார். நாங்கள் யாரும் வெளியில் போய் எங்க வாத்தியார் பாட்டு எழுதி இருக்கிறார் என்று சொல்லவே மாட்டோம். என்ன பாட்டு என்று கேட்டுவிட்டால்?
'நண்டூருது நரியூருது' - இளையராஜா இசையில் அபூர்வமாகவே பாடக்கூடிய டி.எம்.எஸ் பாடிய இந்தப்பாடல் 'பைரவி' படத்தின் ப்ளஸ்களில் ஒன்று.
Bookmarks