Results 1 to 10 of 185

Thread: 'Vennira Aadai' SHREEKANTH

Threaded View

  1. #11
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    2,197
    Post Thanks / Like
    'ஞான ஒளி'யில் ஸ்ரீகாந்த்

    ஆண்ட்டனி, தன் வாழ்வில் மின்னல்போல வந்து மறைந்த தன் மனைவி ராணியால் தனக்குக்கிடைத்த அன்புப்பரிசான, தன் ஒரே மகள் மேரியை, கண்ணை இமை காப்பதுபோல வளர்த்து வர, கல்லூரிக்கு படிக்கச்சென்ற மகளுக்கு விதி காதலன் ரூபத்தில் வர, தந்தை இல்லாத சமயம் காதலனுடன் தன்னை மறந்திருக்கும் வேளையில், அதே நேரம் தன் மகளின் ஒளிமயமான எதிர்காலம் பற்றி தன் நண்பன் லாரன்ஸுடன் பேசிக்கொண்டு வீட்டுக்குள் நுழையும் ஆண்ட்டனிக்கு, தன் மகளை, காணக்கூடாத கோலத்தில் கண்டுவிட, அவன் மன நிலை எப்படியிருக்கும்?. தன் ஆத்திரம் முழுவதையும் திரட்டி, மகளின் காதலனைக் கொல்லப்போகும் நேரம், உடனிருக்கும் லாரன்ஸால் தடுக்கப்பட்டு, அவன் தப்புவிக்கப்படுகிறான். அதே சமயம் இன்னொரு உண்மையும் தெரிகிறது. அவன் பிறப்பால் கிருஸ்தவன் அல்ல. ஆயினும் தன் மகளை களங்கப்படுத்தியவனை வேறு வழியின்றி ஏற்றுக்கொள்ள சம்மதிக்கிறான் ஆண்ட்டனி.

    ஆனால் அவனோ, மேரியின் காதலன் அல்ல, அவளைப்போல் பலரை கசக்கி எறிந்த காமுகன். அந்த உண்மை தெரியாமல் மேரியும் பலியாகிவிட்டாள். மறுநாள் ஊரைவிட்டு ஓடப்போகும் அவனைச்சந்திக்கும் ஆண்ட்டனி, தன் மகளை ஏற்றுக்கொள்ளும்படி கேட்க அவனோ மறுப்பதுடன் மேரியைப்பற்றி தவறாகப்பேச, ஆத்திரமடையும் ஆண்ட்டனி, தன்னை மறந்து ஒரே ஒரு போடு போட, ஆள் அவுட். (இந்தக்கொலைதான் ஆண்ட்டனியை வாழ்நாள் முழுவதும் துரத்தி, கடைசியில் மகளின் திருமணத்துக்கு முன்னர் நடந்த கொலைக்கு பேத்தியின் திருமணத்துக்குப்பின் கைது செய்யப்படுகிறார்).

    இதில் மேரியின் காதலன் என்ற உருவில் வரும் காமுகனாக ஸ்ரீகாந்த் நடித்திருந்தார். சிறிது நேரமே வந்தாலும், கதையில் திருப்பத்தை ஏற்படுத்தும் பாத்திரம். நன்றாகச்செய்திருந்தார். 'பத்தோடு பதினொண்ணு' என்று மேரியின் போட்டோவைக்கிழித்துப்போடும் இடம் ஒன்று போதும், இவர் கேரக்டரைச்சொல்ல. மேரியாக சாரதா நடித்திருந்தார். "ஆண்ட்டனி ரோலில் யாருன்னு கேட்டால் சின்னக்குழந்தையும் சொல்லும்".

    ஸ்ரீகாந்த் - சாரதா ஜோடிக்கு ஒரு டூயட் பாடலும் உண்டு. ஆனால் சுசீலா மட்டுமே பாடியிருப்பார். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.யின் வித்தியாசமான மெட்டமைப்பில்....
    'மணமேடை.... மலர்களுடன் தீபம்....' என்ற தேன் சொட்டும் பாடல். கேட்கக் கேட்கத்திகட்டாத விருந்து. (இதே போல நடிகர்திலகத்துக்கும் விஜயநிர்மலாவுக்கும் 'அம்மா கண்ணு சும்மா சொல்லு ஆசையில்லையோ' என்ற அருமையான டூயட் பாடல் உண்டு. ஆனால் சிறப்பு தேன்கிண்ணம் வழங்க வரும் வி.ஐ.பி.க்கள் எல்லாம் சேர்ந்து, ஞான ஒளியில் 'தேவனே என்னைப்பாருங்கள்' என்ற ஒரு பாடல் மட்டும்தான் என்பது போன்ற மாயையைத் தோற்றுவித்து விட்டனர்).

    ஸ்ரீகாந்துக்கு நல்ல ரோல் அமைந்த படங்களில் 'ஞான ஒளி'யும் ஒன்று.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •