-
23rd November 2009, 08:20 PM
#31
Senior Member
Veteran Hubber
சகோதரி சாரதா அவர்களின் மூன்றெழுத்து திரைப்படப் பார்வை குறித்து மூன்று வாக்கியங்கள் :
1. தங்களின் திறனாய்வு மிக மிக அருமை !
2. இதன் மூலம் ரவிக்கு தாங்கள் சேர்ப்பது பெருமை !!
3. யாம் கூறுவது வெறும் புகழ்ச்சி மட்டுமல்ல, உண்மை !!!
அன்புடன்,
பம்மலார்.
-
23rd November 2009 08:20 PM
# ADS
Circuit advertisement
-
25th November 2009, 07:15 PM
#32
Senior Member
Veteran Hubber
டியர் பம்மலார்...
மூன்றெழுத்தைப்பற்றி மூன்றெழுத்துக்களால் பாராட்டிய உங்களுக்கு நான் வேறென்ன சொல்லப்போகிறேன்...?. 'நன்றி' என்ற மூன்றெழுத்துதான்.
-
25th November 2009, 07:25 PM
#33
Senior Member
Veteran Hubber
"பாக்தாத் பேரழகி"
அதென்னமோ தெரியலை. ரவிச்சந்திரன் படத்தைப்பற்றி எழுதணும்னு நினைச்சாலே, கூடவே அது ராமண்ணா படமாகவும் இருக்கிறது. அப்படி சட்டென்று நினைவில் வந்தது அற்புதமான வண்ணப்படமான 'பாக்தாத் பேரழகி'
நாட்டின் சக்கரவர்த்தியையும் (மேஜர் சுந்தர்ராஜன்), ராணி ஆயிஷாவையும் (சாவித்திரி) சிறையில் தள்ளிவிட்டு, பேருக்கு ஒரு பொம்மை ராணியை நியமித்து பின்னணியில் நாட்டின் முழு அதிகாரங்களையும் கைப்பற்றி ஆண்டுகொண்டிருப்பவர் சர்வாதிகாரியான சர்தார் யாகூப் (அசோகன்). சக்கரவர்த்தியின் மகன் அப்துல்லாவோ (ரவிச்சந்திரன்) எங்கோ அனாதையாக வளர்கிறான். தான் ஒரு மன்னனின் மகன் என்றே தெரியாமல் வளர்ந்தவன், ஒருமுறை சிறைப்பட்டிருக்கும்போது, ஏற்கெனவே அங்கு நெடுங்காலமாக, சர்தாரால் சிறையிலடைக்கப்பட்டிருக்கும் சக்ரவர்த்தியின் விசுவாசமான அமைச்சரால், தானொரு இளவரசன் என்று அடையாளம் காணப்பட்டு, அவர் மூலமாகவே அங்கிருந்து தப்பிக்க வைக்கப்படுகிறான். இதனிடையே ஒரு போட்டியின்போது பாக்தாத்தின் பேரழகியை வென்று, அவளது அன்புக்கு உரியவனாகிறான். பின்னர் நண்பர்களுடன் சேர்ந்து தன் பக்கத்தை பலப்படுத்தி பின்னர் எப்படி சர்வாதிகாரி சர்தாரை வென்று தனக்கு உரிமையான நாட்டை திரும்பப்பெற்று முடிசூடுகிறான் என்பதுதான் கதை.
மூன்று மணிநேரம் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த வண்ணப்படமாக உருவாக்கியிருந்தார் இயக்குனர். இருந்தபோதிலும் இம்மாதிரியான கதைகளைக் கொண்ட படங்கள் வழக்கொழிந்துபோயிருந்த காலத்தில் வெளியானது. அதற்காக எந்த அமசத்திலும் குறை வைக்கவில்லை. கண்ணைக்கவரும் பிரமாண்டமான அரண்மனை செட்டுக்கள், எல்லோருக்கும் அலங்காரமான உடைகள் என்று அமர்க்களப் படுத்தியிருந்தனர்.
கதாநாயகன் இளவரசன் அப்துல்லாவாக ரவிச்சந்திரன் நடித்திருக்க அவரது ஜோடியாக 'கலைச்செல்வி' ஜெயலலிதா நடித்திருந்தார். இவர்தான் பாக்தாத் பேரழகி. (உண்மையில் படத்துக்கு பாக்தாத் பேரழகன் என்றுதான் பெயரிட்டிருக்க வேண்டும். அந்த அளவுக்கு படம் முழுக்க கதாநாயகன்தான் கொடிகட்டிப்பறந்தார்). ஜெயலலிதாவும் ஒன்றும் சோடை போகவில்லை. சிறப்பாகச்செய்திருந்தார். குறிப்பாக சர்தாரின் அரண்மனை ரகசியங்களை அறிவதற்காக அங்கு ஊமைப்பெண்ணாகப் பணியாற்றும் காட்சிகளிலும், ரவிச்சந்திரனுடனான சவால் பாடல் காட்சியிலும் நன்றாகவே பரிணமித்திருந்தார். எல்லாவற்றையும் தூக்கி சாப்பிடும் வண்ணம், கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் அசோகனுடன் வாள் சண்டை போடுமிடத்தில் அதிசயிக்க வைத்தார். குறிப்பாக மாடிப்படியில் தாவித்தாவி ஸ்டெப் போட்டுக்கொண்டே, மின்னல் வேகத்தில் வாள் வீசும்போது, தியேட்டரே கைதட்டலால் அதிரும். ஜெயலலிதாவா இப்படி?. எங்கிருந்து கற்றார் இதையெல்லாம்?.
நாகேஷ், சச்சு, வி.கே.ராமசாமி ஆகியாரின் நகைச்சுவைக் காட்சிகள் நன்றாக சிரிக்க வைத்தன. கிளைமாக்ஸில் அகழிப்பள்ளத்துக்குள் சிங்கத்துடனான சண்டை இன்னொரு படத்தை நினைவு படுத்தியதுபோலவே, அதைத்தொடர்ந்து வில்லன் அசோகன், உடமபை நெருக்கும் இயந்திரத்தில் மாட்டிக்கொள்வது ராமண்ணாவின் வேறொரு படத்தை நினைவூட்டியது. ரவிச்சந்திரன் வழக்கம்போல சண்டைக்காட்சிகளில் பிரமாதப்படுத்தியிருந்தார்.
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். பாடல்கள் படத்தில் கேட்கும்போது நன்றாக இருந்தபோதிலும் ஏனோ பெரிய அளவில் பாப்புலராகவில்லை. ரவிச்சந்திரன் - ஜெயலலிதா போட்டி போட்டுப்பாடும் (கவாலி ஸ்டைலில் அமைக்கப்பட்ட) "நவாப்புக்கொரு கேள்வி நல்ல ஜவாப் சொல்லையா" பாடல் மட்டும் ஓரளவு வெளியில் பிரபலம் ஆனது. எஸ்.பி.பாலசுப்ரமணியமும் எஸ்.ஜானகியும் பாடியிருந்தனர். பின்னணி இசையைப்பொறுத்தவரை மெல்லிசை மன்னர் பிரமாதப் படுத்தியிருந்தார். படத்துக்கு ஏற்றவாறு எகிப்திய மற்றும் அரேபிய இசையை கலந்து வழங்கியிருந்தது, படத்துடன் ஒன்ற வைத்தது.
1973 தீபாவளியன்று 'பாக்தாத் பேரழகி' வெளியானது. கூடவே நடிகர்திலகத்தின் 'கௌரவம்', மு.க.முத்துவின் 'பூக்காரி', ஸ்ரீதரின் 'அலைகள்' படங்களும் அன்றைய தினம் திரைக்கு வந்தன. மாபெரும் வெற்றிப்படமாக அமைந்திருக்க வேண்டிய இப்படம், தமிழகம் முழுவதும் சுமாரான அளவிலேயே ஓடியது..
-
26th November 2009, 06:35 AM
#34
Senior Member
Seasoned Hubber
சகோதரி சாரதா அவர்களின் பாக்தாத் பேரழகி அறிமுகம் சுவையாகவும் பல தகவல்களை தந்தது. அவர்கள் சொன்னது போல் இப் படம் நன்றாக ஓடியிருக்க வேண்டியது. ரவி்ச்சந்திரன் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பார்ப்பினை இப்படம் உண்டாக்கியிருந்தது. ஆனால் படத்திற்கான விளம்பரம் வேறு வகையில் கிடைத்தது. ஜெயலலிதா அவர்கள் நடித்து வந்த திருமாங்கல்யம் பாக்தாத் பேரழகி இரு படங்களுக்கும் இடையே ஒரு பனிப்போர் நடைபெற்றதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த இரு படங்களில் எது 100வது படம் என்று தீர்மானிக்கும் போது சில நெருடல்கள் ஏற்பட்டிருந்தன. ஜெயலலிதா அவர்கள் திருமாங்கல்யம் படத்தை 100வது படமாகத் தீர்மானித்தார். காரணம், அப்படத்தில் அவருடைய கதாபாத்திரம் மிகவும் அழுத்தமாக அமைந்திருந்தது. அதன் காரணமாகவும் இப்படம் சீக்கிரம் முடித்து வெளியிடப்பட்டு திருமாங்கல்யம் படத்துக்கு வழிவிட வேண்டி வந்தது. அதனால் பாக்தாத் பேரழகி ஜெயலலிதா அவர்களின் 99வது படமாக அமைந்தது.
மெல்லிசை மன்னர் இசையில் பின்னணி இசை அமைந்த அளவிற்கு பாடல்கள் அமையவில்லை. மேலும் இச்சமயத்தில் தமிழ்நாட்டில் இந்திப் பாடல்களின் ஆதிக்கம் கொடி கட்டிப் பறந்த நேரம். ஆராதனா, பாபி, யாதோன் கி பாராத் போன்று தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் கூட இந்திப் பாடல்கள் பரவத் தொடங்கின. எம்.ஜி.ஆர். சிவாஜி படங்களைத் தவிர மற்ற படங்களின் பாடல்கள் பின்னுக்குத் தள்ளப்படும் நிலைக்கு ஆளாகின, அது மெல்லிசை மன்னரே இசையமைத்த படங்களுக்கும் இதே கதி. இதில் தப்பியது பூக்காரி போன்ற சில படங்கள். ஆனால் இன்றைக்கு அவருடைய அத்தனை பாடல்களும் சிரஞ்ஜீவியாய் அமைந்து விட்டன.
பாக்தாத் பேரழகி படத்தைப் பொறுத்த வரையில் முழு அளவில் அப்படம் அமையவில்லை. சிறிதும் போரடிக்காமல் நன்கு விறுவிறுப்பாக அமைக்கப் பட்டிருந்த போதிலும், குலேபகாவலி ஸ்டைலிலேயே படத்தை எடுத்தது ஒரு பலவீனம். இன்னும் கொஞ்சம் பிரம்மாண்டம் தேவைப்பட்டது. குலேபகாவலி படத்தில் காணப்பட்ட அளவு பிரம்மாண்டம் கூட இப்படத்தில் இல்லை. அதுவும் குலேபகாவலி எடுக்கப்பட்ட காலகட்டம் 50களின் தொடக்கம். அந்தக் காலத்திலேயே ராமண்ணா அவர்கள் அருமையாக எடுத்திருந்தார். குறிப்பாக சமூகப் படமான உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் காணப்பட்ட பிரம்மாண்டத்தில் 10 சதவீதம் கூட ராஜா ராணி படமான பாக்தாத் பேரழகியில் காணப்படவில்லை. இவையெல்லாம் அப்படத்தின் தோல்விக்கு ஒரு சில காரணங்கள். ரவிச்சந்திரனின் அழகான தோற்றம் இருந்தும் அவருடைய ரசிகர்களே அப்படத்தை மீண்டும் மீண்டுப் பார்க்க வில்லை.
இவையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டுப் பார்த்தால், பாக்தாத் பேரழகி நிச்சயம் விறுவிறுப்பான படம் என்பதை சொல்லலாம். சென்னையில் வெலிங்டன் தியேட்டரில் பார்த்தேன் - இதுவும் நடிகர் திலகத்தின் கைங்கர்யம் தான் - சாந்தியில் கௌரவம் டிக்கெட் கிடைக்காமல் இங்கு வந்தது காரணம்.
ராகவேந்திரன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
26th November 2009, 01:00 PM
#35
Senior Member
Platinum Hubber
ஒரு முக்கியமான கொசுறு தகவல்: 1970-ல் தயாரிக்கத்துவங்கி 1973-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த, எம்ஜியார் பிக்சர்ஸ் தயாரிப்பான "உலகம் சுற்றும் வாலிபன்" படத்தின் கதை 'மூன்றெழுத்து' படத்தின் கதையைத் தழுவி எடுக்கப்பட்டதுதான்.
USV-la kadhai irundhudhA?
-
26th November 2009, 02:01 PM
#36
Senior Member
Veteran Hubber
சகோதரர் ராகவேந்தர் அவர்களுக்கு....
பாக்தாத் பேரழகி பற்றி நான் எழுதிய அறிமுகம் உங்களுக்கு பல நினைவுகளைத்தோற்றுவித்தது போலவே, உங்கள் பதிலில் குறிப்பிட்டிருக்கும் விஷயங்கள், குறிப்பாக ஜெயலலிதாவின் 100-வது படம் பற்றிய அறிவிப்பு' அன்றைய பல விஷயங்களை கிளறுவதாக அமைந்துள்ளது. 1970-ல் தயாரிக்க ஆரம்பித்த 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்தில் தனக்கும் ஒரு கதாநாயகி ரோல் வேண்டுமென்று ஜெயலலிதா, எம்.ஜி.ஆரை நச்சரித்து வந்தார். வெளிநாட்டில் படப்பிடிப்பு முடிந்து வந்த பின்பும் இதை விடவில்லை. ஜெ.வொடு நடித்து வந்த மற்ற படங்கள் முடிய வேண்டுமே என்ற எண்ணத்தில் 'அந்தப்படத்தில் உனக்கும் ஒரு ரோல் கண்டிப்பாக உண்டு' என்று ஜெ.விடம் நம்ப வைத்து, மற்ற படங்களை MGR முடித்து வந்தார். இதனிடையே 71 ஜனவரியில் வெளியான 'குமரிக்கோட்டம்' 100 நாட்களைக்கடந்து விட்டது. (எம்.ஜி.ஆரும் ஜெ.வும் சேர்ந்து நடித்த கடைசி 100 நாள் படம் இதுதான்). தேரதலும் முடிந்து எம்.ஜி.ஆர். இரண்டாம் முறையாக எம்.எல்.ஏ. ஆகி விட்டார்.
இதனிடையே, 'ரிக்ஷாக்கரன்' படத்துக்கு கிடைத்த பிரம்மாண்ட ஓப்பனிங் ஜெயலலிதாவுக்கு அதிர்ச்சியைத்தந்தது என்றால், அப்படம் 140 நாட்களைக்கடந்தது இன்னொரு அதிர்ச்சியாக இருந்தது. பானுமதிக்கொரு 'நாடோடி மன்னன்', சரோஜாதேவிக்கொரு 'ஆயிரத்தில் ஒருவன்' ஆப்பு வைத்தது போல தனக்கொரு 'ரிக்ஷாக்காரனா' என்று எம்.ஜி.ஆருடன் சண்டையிட்டார். இந்நிலையில் உலகம் சுற்றும் வாலிபன் படப்பிடிப்பு தொடராமல் கிணற்றில் போட்ட கல்லாக கிடந்தது. ஏற்கெனவே புக் ஆன படங்கள் தவிர புதிய MGR படங்களான இதய வீணை, நேற்று இன்று நாளை, நினைத்ததை முடிப்பவன் போன்ற படங்களிலும் தான் இல்லையென்பதையறிந்த ஜெயலலிதா எம்.ஜி.ஆருடன் தான் நடித்து வந்த படங்களை முடித்துக்கொடுக்காமல் முரண்டு பிடித்தார். தேவி பாரடைஸ் தியேட்டரில் நடந்த 'நீரும் நெருப்பும்' பட வெளியீட்டு விழாவில் (ஜெ.வும் மேடையில் இருக்க) பேசிய எம்.ஜி.ஆர். தானும் ஜெயயலிதாவும் அடுத்து (என் அண்ணன் படம் தயாரித்த) வீனஸ் பிக்சர்ஸ் படமொன்றில் புதிதாக நடிக்க ஒப்பந்தம் ஆகவிருப்பதாக (ஜெயாவை சமாதானப்படுத்த) ஒரு பொய்யை அவிழ்த்து விட்டார். (MGR வேறு எந்த Heroine இடமும் இவ்வளவு பணிந்து போனதில்லை). அதை நம்பிய ஜெ.வும் மீண்டும் பாதியில் நின்ற படங்களுக்கு தேதிகள் கொடுத்து முடித்துத் தர துவங்கினார். 'ஒருதாய் மக்கள்' வெளியானது சரியாகப்போகவில்லை. அடுத்து வந்த படங்கள் ஜெ. அல்லாத (மஞ்சுளாவும் அல்லாத) படங்களக இருந்ததால் மக்கள் திலகத்துக்குப் பிரச்சினயில்லை.
'சங்கே முழங்கு' (லட்சுமி), தேவரின் 'நல்ல நேரம்' (கே.ஆர்.விஜயா) ஆகிய படங்களுக்குப்பின்னர் வெளியான ஜெயந்தி பிலிம்ஸ் கனக சபையின் 'ராமன் தேடிய சீதை' படம் தனக்கு இன்னொரு மாட்டுக்கார வேலனாக மாறி ‘எம்.ஜி.ஆரின் சிறந்த் ஜோடி ஜெயலலிதாதான்’ என்று உறுதிப்படுத்தும் என்று ஜெ. நம்பினார். ஆனால் காலை வாரிவிட்டது. அதன் பின்னாலேயே வெளியான 'நான் ஏன் பிறந்தேன்' (கே.ஆர்.விஜயா), அந்த ஆண்டுக்கு எம்.ஜி.ஆரின் மிகச்சிறந்த படம் என்று பெயரைப் பெற்று ஜெ.வின் ஆசையில் மண்ணைப்போட்டது. எம்.ஜி.ஆர், தன்னைவிட்டு வெகு வேகமாக விலகிப்போவதை ஜெ. உணர்ந்தார். மிச்சமிருந்த இரண்டே படங்கள். ஒன்று நான்காண்டுகளுக்கு மேல் தயாரிப்பில் இருந்து வந்த 'அன்னமிட்ட கை'., இன்னொன்று எம்.ஜி.ஆர். இரட்டை வேடங்களில் நடித்த 'பட்டிக்காட்டு பொன்னையா'. இவற்றில் அன்னமிட்ட கையில் ஜெயலலிதா சம்மந்தப்பட்ட காட்சிகள் ஏற்கெனவே முடிந்து விட்டதால் அதற்கு டப்பிங் மட்டும் முடித்துக் கொடுப்பதைத்தவிர ஜெ.வால் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை. எதிர்பார்த்தபடியே அன்னமிட்ட கை சரியாகப்போகவில்லை.
எம்.ஜி.ஆர். மஞ்சுளா ஜோடியாக நடித்து இரண்டாவதாக வெளியான 'இதய வீணை', ஓப்பனிங்கில் இன்னொரு ரிக்ஷாக்காரனாக அமைய, ஜெயலலிதா இடிந்து போனார். இதனிடையே எம்.ஜி.ஆர். தனிக்கட்சி துவங்கி அரசியலில் பயங்கர பிஸியானதால், ஜெ.வால் அவரிடம் திரைப்படங்கள் குறித்துப் பேச முடியவில்லை. (அ.தி.மு.க. துவங்கப்பட்டு பத்தாண்டுகள் கழித்து 1982-ல்தான் ஜெ. அக்கட்சியிலேயே சேர்ந்தார். இது அ.தி.மு.க. தலைமைக்கழகத்திலேயே உள்ள குறிப்பு. ஜெயா டி.வி.யிலேயே பலமுறை சொல்லப்பட்ட தகவலும் கூட. ஆக ஜெயலலிதா கட்சியில் சேரும் முன்னரே எம்.ஜி.ஆர். இரண்டு முறை முதலமைச்சர் ஆகி விட்டார்).
இதற்கிடையே இன்னொரு சோதனையாக, 1972 டிசம்பரில் 'நீதி' வெளியான பின்னர் 1973-ல் நடிகர்திலகத்தோடு ஜெயலலிதா நடித்த ஒரு படம்கூட வரவில்லை. 1973 மே 11-ல் வெளியான 'உலகம் சுற்றும் வாலிபன்' வெளிநாட்டுக்காட்சிகள், அருமையான பாடல்கள், எம்.ஜி.ஆர் இரட்டை வேடம், நான்கு கதாநாயகிகள் என்ற பல அம்சங்களோடு ஒரு மெகா வெற்றியைப்பெற, 73-ம் ஆண்டு ஜெ.வுக்கு சோதனை ஆண்டாக அமைந்தது என்றபோதிலும் அவர் முத்துராமனுடன் சேர்ந்து நடித்த முக்தாவின் 'சூரியகாந்தி' 100 நாட்களைக்கடந்து பெரிய வெற்றியடைய, அவரது சூன்ய நிலை கொஞ்சம் தெளிந்தது போலிருந்தது. இந்நிலையில் அவரது 100-வது படம் நெருங்கியது.
நீங்கள் சொன்னது போல, ஜெயலலிதா ரொம்ப நம்பியிருந்தது 'திருமாங்கல்யம்' படத்தைத்தான். காரணம் அந்தப்படத்தில் பேருக்கு கதாநாயகியாக வராமல் அவரது முக்கியத்துவம் நிறைந்த கனமான ரோல், இன்னொரு காரணம், அதற்கு முன் மெகா வெற்றிப்படமான 'வசந்தமாளிகை'யைத் தந்த தயாரிப்பாளர் ராமாநாயுடுவின் படம், மெல்லிசை மன்னரின் இசை, வின்சென்ட்டின் இயக்கம் என எல்லாவற்றையும் கணக்குப்போட்டு, 'திருமாங்கல்யம்'தான் தனது 100வது படம் என அறிவித்தார். ஆனால் பரிதாபம், அதுவும் தப்புக்கணக்காகப்போனது. அதே சமயம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 99-வது படம் 'பாக்தாத் பேரழகி'யும் காலை வாரியது.
சென்னை ஆனந்த் திரையரங்கில் 'திருமாங்கல்யம்' வெளியானதையொட்டி, தன் சொந்த செலவில் 100-வது படவிழா கண்காட்சியை, பிலிம் நியூஸ் ஆனந்தன் பொறுப்பில் ஜெயலலிதா நடத்தினார். தான் நடித்த 100 படங்களின் புகைப்படத்தொகுப்புகள், அவற்றுக்காக தனக்குக்கிடைத்த விருதுகள், ஷீல்டுகள் என அனைத்தையும் பார்வைக்கு வைத்தார். இந்த விழாவில் இரண்டு திலகங்களையும் புறக்கணிக்கத்தீர்மானித்து, அப்போது பல படங்களில் தனது வெற்றி நாயகனாக வலம் வந்த முத்துராமனை விழாவில் முன்னிலைப்படுத்த் தீர்மானித்தார். ஆனால் திலகங்களைப் பகைத்துக்கொள்ள விரும்பாத முத்துராமன், சரியான நேரம் பார்த்து சிங்கப்பூர் சென்று விட்டார்.
பெரிதும் எதிர்பார்த்த தனது 100-வது படமும் வெற்றிபெறாமல் போக, ஜெயலலிதாவின் திரைப்பட வாழ்க்கை சரிவை நோக்கிப் பயணிக்கத்துவங்கியது.
-
27th November 2009, 09:06 PM
#37
Senior Member
Devoted Hubber
Originally Posted by
saradhaa_sn
நன்றி கார்த்திக்,
ரவிச்சந்திரன் படங்களைப்பற்றியும், மற்றும் அவரைப்பற்றிய குறிப்புக்களையும் நீங்கள் அறிந்தவற்றை இங்கே பதியுங்கள்.
Another movie with high expectations that failed at the box office was 'Naangu Suvargal'. The movie directed by veteran KB was a mega production considering KB's other, generally, low budget movies. Jaishankar and Ravichandran acted together in this movie. Both acted as prisoners in this movie. The scene where petrol oozes out from ground is still fresh in memory.
-
1st December 2009, 07:27 PM
#38
Senior Member
Veteran Hubber
சித்ராலயாவின்
'உத்தரவின்றி உள்ளே வா"
ஸ்ரீதரின் சித்ராலயா தயாரிப்பிலிருந்து வெளியான இன்னொரு நகைச்சுவை திரை விருந்து. .
ஒரே இடத்தில் தங்கியிருக்கும் நான்கு நண்பர்கள் ரவிச்சந்திரன், வெண்ணிற ஆடை மூர்த்தி, நாகேஷ், மாலி ஆகியோர். இவர்களில் ரவி கொஞ்சம் பணக்காரர். மற்றவர்கள் மாதச்சம்பளக்காரர்கள். இவர்களிடம் அடைக்கலமாக ஒரு அழகான இளம்பெண் ஜானகி (காஞ்சனா)வந்து சேர்கிறார். தங்கள் வீட்டில் அடைக்கலம் கொடுத்திருக்கும் அந்தப்பெண்ணை நால்வருமே விரும்புகின்றனர். நால்வருமே கனவில் டூயட்டும் பாடுகின்றனர், இல்லை மூவர் மட்டுமே பாடுகின்றனர். மாலி டூயட் பாடினால் என்னாவது என்ற அச்சம் இயக்குனருக்கு வந்திருப்பது நியாயமானதே. ஆனால் அவள் யாரை விரும்புவாள்?. கதாநாயகனைத்தானே. அதுதான் நடக்கிறது. இவர்கள் காதலைப்பார்த்து மற்றவர்கள் பொறாமைப்படுகின்றனர். அதைத்தாண்டி என்ன செய்யமுடியும்?. அதிலும் நாயகன் பசையுள்ள பார்ட்டி. மற்றவர்களுக்கு அவனைக்கொண்டு காலம் ஓட வேண்டும்.
இந்நிலையில் நாகேஷின் பூர்வ ஜென்ம ஜோடி என்று சொல்லிக்கொண்டு ஒரு பெண் (ரமாபிரபா), தன் கடந்த காலத்தை மறந்த நிலையில் வந்து சேர்கிறாள். அவள் நாகேஷை 'நாதா... நாதா...' என்று அழைத்துக்கொண்டு, படாதபாடு படுத்துகிறாள். இது போதாதென்று, மாலியின் குழந்தை என்ற பெயரில் ஒரு அனாதைக்குழந்தை வீட்டு வாசலில் வந்து கிடத்தப்பட்டுள்ளது. அதோடு இணைக்கப்பட்டிருக்கும் கடிதத்தைப் படித்த நண்பர்கள் அது மாலியின் குழந்தைதான் என்று சாதிக்க, மாலி மறுக்கிறார். போலீஸில் புகார் செய்தால், அக்குழந்தையின் உண்மையான பெற்றோர் கிடைக்கும் வரை மாலிதான் அதனை வளர்க்க வேண்டும் என்று சொல்லிவிடுகின்றனர். சில பல சுவையான சிக்கல்களுக்குப்பிறகு, ரமாப்ரபாவின் பைத்தியம் தெளிந்து இந்த ஜென்மத்து நினைவுகளுக்குத் திரும்ப, குழந்தையின் பெற்றோர் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களிடம் குழந்தை ஒப்படைக்கப்பட, மாலி மட்டும் அம்போவென விடப்பட்டு மற்ற மூன்று ஜோடிகளுக்கும் திருமணம் நடக்க சுபம்.
நாயகிகளில் ரவிச்சந்திரன் ஜோடியாக வரும் காஞ்சனா அழகாக வந்து ரவியுடன் டூயட் பாடுவதுடன் நிறுத்தப்பட்டு, சுய நினைவை இழந்து பூர்வ ஜென்ம சிந்தனையுடன் வலம் வரும் ரமாபிரபாவுக்கு அதிக வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அவரும் கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொண்டு பெயரைத் தட்டிச்செல்கிறார். நகைச்சுவையை அள்ளித்தெளித்து கோபுவின் வசனங்கள். ரமபிரபாவின் பேச்சு முழுக்க பூர்வ ஜென்ம சிந்தனைதான். சாப்பிட அவரை நாகேஷ் ஓட்டலுக்கு அழைத்துச்செல்ல, 'என்ன வேண்டும்?' என்று கேட்கும் சர்வரிடம், 'ஒருதட்டில் அதிரசம்.. இன்னொரு தட்டில் தேனும் தினைமாவும் கொண்டு வாருங்கள்' என்று சொல்வது, ஆடியன்ஸ் மத்தியில் சிரிப்பை வரவழைக்கும் இடங்களில் ஒன்று.
தான் வளர்க்கும் குழந்தை செய்யும் சேட்டைகளால் எரிச்சல் அடைந்தாலும் நாளடைவில் அவற்றுடன் பழகிப்போகும் மாலி, குழந்தையின் பெற்றோர் கிடைத்ததும் அவர்களிடம் ஒப்படைக்க போலீஸ் ஸ்டேஷன் சென்று, திரும்பும்போது குழந்தையையும் தூக்கிக்கொண்டு கிளம்ப, 'யோவ் அவங்க குழந்தையை ஏன்யா கொண்டுபோறே?' என்று கேட்கும் இன்ஸ்பெக்டரிடம், 'ஓ... ஆமா சார் இது அவங்க குழந்தையில்லே' என்று திரும்ப ஒப்படைத்து விட்டு, இத்தனை நாள் தன் தோளில் கிடந்த குழந்தையை கண்களில் நீர் மல்க திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே செல்லுமிடம் நம் மனதைப் பிசையும்.
வண்ணப்பட நாயகனான ரவிச்சந்திரனுக்கு வரிசை கட்டி வந்த வண்ணப்படங்களில் 'உத்தரவின்றி உள்ளே வா' படமும் ஒன்று. வழக்கம்போல அழகான இளமையான தோற்றத்துடன் வரும் அவருக்கு பொருத்தமான ஜோடியாக காஞ்சனா நடித்திருந்தார். ரவிக்கு கிளைமாக்ஸில் ஒரு சண்டைக்காட்சியும் உண்டு.
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையில் பாடல்கள் அத்தனையும் SUPER DUPER HIT....
காஞ்சனாவை மனதில் நினைத்து ரவி, மூர்த்தி, நாகேஷ் மூவரின் கற்பனையில் உருவாகும் அற்புதப்பாடல் "உத்தரவின்றி உள்ளே வா" பாடலை டி.எம்.சௌந்தர்ராஜன்., எஸ்.பி.பாலசுப்ரமணியம், எல்.ஆர்.ஈஸ்வரி மூவரும் பாடியிருந்தனர். அதிலும் நாகேஷுக்காக டி.எம்.எஸ். ஆலாபனையெடுத்துப் பாடும் "பூமியில் மானிட ஜென்மம் எடுத்தது காதலி உனைக்காண" என்ற பகுதி மிக மிக அருமை.
"உன்னைத்தொடுவது இனியது" என்ற டூயட் ரவி காஞ்சனா, நாகேஷ் ரமாபிரபா ஜோடிக்காக எஸ்.பி.பி., சுசீலா, ஈஸ்வரி, சாய்பாபா பாடியிருந்தனர். ஒரு கட்டத்தில் காஞ்சனாவை ரவி தூக்குவதைக்காட்டி, சட்டென காட்சியை மாற்றி நாகேஷ ரமாபிரபா தூக்குவதாக காண்பித்து அரங்கில் சிரிப்பலையை உண்டாக்கினார் இயக்குனர்.
நள்ளிரவு பணிரெண்டு மணிக்கு ரமாபிரபா ஆவி உருக்கொண்டு பாடும் "தேனாற்றங்கரையினிலே" பாடல் ஈஸ்வரியின் மாஸ்டர் பீஸ்களில் ஒன்று. அதுபோல எஸ்.பி.பி.யின் இளைய குரலில் சுசீலாவுடன் இணைந்து பாடும் "மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி" டூயட் பாடல் என்றென்றும் பாப்புலர் பாடல்களில் ஒன்று. ரவியும் காஞ்சனாவும் பாடும் இப்பாடலின்போது மற்ற நண்பர்கள் ஜன்னல் வழியே பார்த்துப்பொறாமைப்படுவது ஜோர்.
‘காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ
காலம் பார்த்து ஜாலம் செய்ய மன்னன் வந்தானோ
மன்னன் வந்தானோ...’
இந்த அற்புதமான, அமைதியான பாடல். லேசான இந்துஸ்தானி சாயலைத் தழுவிய இப்பாடல், தர்மாவதி ராகத்தில் அமைக்கப்பட்டது. 'நைட் எஃபெக்டில்' படமாக்கப்பட்ட பாடல் இது. ரவிச்சந்திரனும் காஞ்சனாவும் நடித்திருப்பார்கள். ரவிக்கு வெறும் HUMMING மட்டுமே. காஞ்சனாவுக்குத்தான் முழுப்பாடலும். ஆகவே சந்தேகமின்றி சுசீலாவின் முழு ஆதிக்கம்தான்.
தாளத்துக்கு தபேலா, பாங்கோஸ், மிருதங்கம் என்று எதுவும் இல்லாமல், வெறுமனே டிரம்மில் பிரஷ் கொண்டு ஸ்மூத் டச்...
‘கண்ணா நீ கொண்டாடும் பிருந்தாவனம்
கல்யாணப் பூப்பந்தல் எந்தன் மனம்
நீராட நீ செல்லும் யமுனா நதி
மங்கல மங்கையர் மேனியில் தங்கிடும்
மஞ்சள் நதியோ குங்கும நதியோ’
(M.L.ஸ்ரீகாந்த் HUMMING)
இரவில் தனியாக படுத்திருக்கும்போது, ‘நைட்லாம்ப்’ வெளிச்சத்தில் தலைமாட்டில் இந்தப்பாடலை ஸ்டீரியோவில் சன்னமாக ஒலிக்க விட்டு, அரைக்க்ண்ணை மூடிக்கொண்டே இப்பாடலைக் கேட்டுப்பாருங்கள். வேறு உலகத்தில் இருப்பீர்கள். மெல்லிசை மன்னரின் மாயாஜாலம் உங்களை அப்படி ஆக்கி விடும்..
ஸ்ரீதரின் சித்ராலயா தயாரிப்பில் வெளியான இப்படதை ஸ்ரீதர் இயக்கவில்லை. அவரது உதவியாளரான என்.ஸி.சக்ரவர்த்தி இயக்கியிருந்தார். இதன்பின்னர் முத்துராமன் ஜெயலலிதா ஜோடியாக நடித்த ராம்குமார் பிலிம்ஸ் 'திக்குத்தெரியாத காட்டில்' என்ற படத்தை இயக்கினார். அப்புறம் என்ன ஆனார் என்று தெரியவில்லை
1971-ஜனவரி 14 (பொங்கல்) அன்று வெளியான 'உத்தரவின்றி உள்ளே வா' தமிழகம் முழுதும் வெற்றிகரமாக ஓடிய மாபெரும் வெற்றிப்படமாகும்.
-
4th December 2009, 06:52 PM
#39
Senior Member
Devoted Hubber
Originally Posted by
saradhaa_sn
ராமண்ணா - ரவிச்சந்திரன் இணையில்
மாபெரும் வெற்றிப்படம்
"நான்"
வெள்ளிவிழா நாயகன் என்ற முத்திரையுடன் திரையுலகில் நுழைந்த ரவிச்சந்திரனின் இரண்டாவது வெள்ளிவிழாப் படம் நான். ஏற்கெனவே குமரிப்பெண் தந்த மாபெரும் வெற்றியில் உற்சாகமடைந்த இயக்குனர் ராமண்ணா, மீண்டும் ரவிச்சந்திரன் - ஜெயலலிதா ஜோடியை வைத்து வண்ணத்தில் தயாரித்து இயக்கிய படம் இது.
ரவிச்சந்திரன், ஜெயலலிதா ஜோடியுடன் முத்துராமன், அசோகன், மனோகர், நாகேஷ் (அம்மாவும் (?) மகனுமாக), மனோரமா, குட்டி பத்மினி, சுருளிராஜன், முத்துலட்சுமி, 'என்னத்தே' கன்னையா என ஏராளமான நட்சத்திரங்களை உள்ளடக்கிய படம். இறந்துபோன ஜமீன்தாரின், காணாமல் போன வாரிசைக் கண்டுபிடித்து அவரிடம் ஜமீனை ஒப்படைக்க, அதற்காக நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்களின் முன், மூன்று பேர் 'நான்'தான் வாரிசு, 'நான்'தான் வாரிசு என்று வந்து நிற்க, அவர்களில் உண்மையான வாரிசை அடையாளம் கண்டு அவரை ஜமீனாக்குவதுதான் கதை. கதை சிறியதாக இருந்தாலும், அது எடுக்கப்பட்ட விதத்தில் படு சூப்பராக அமைந்து போனது.
வழக்கமாக இம்மாதிரிக் கதைகளில் கதாநாயன்தான் வாரிசாக இருப்பார். ஆனால் இதில் அப்படியில்லை என்பது மட்டுமல்ல, அந்த மூவரில் யாருமே உண்மையான வாரிசில்லை. வில்லனால் ஒளித்துவைக்கப்பட்டிருக்கும் நான்காவது நபர்தான் அவர் என்று தெரிய வரும்போது இன்னும் சுவாரஸ்யம் கூடுகிறது. அப்படியானால் வந்த மூவர்?. ஒருவர் வில்லனால் வாரிசு என்று அனுப்பப்பட்டவர், இன்னொருவர் அரசாங்கத்தால் அனுப்பப்பட்ட துப்பறியும் அதிகாரி.
அப்படீன்னா கதாநாயனாக வந்திருப்பவர் யார்?. அதுவும் ஒரு சஸ்பென்ஸ். உண்மையான வாரிசு, வில்லன் அசோகனால் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் முத்துராமன் என்பதும், மனோகர், அசோகனால் ஜமீன் சொத்தை அபகரிக்க அனுப்பப்பட்ட போலி வாரிசு என்பதும், நாகேஷ், அர்சாங்கத்தால் அனுப்பப்பட்ட அதிகாரி என்பதும் கிளைமாக்ஸுக்கு சற்று முன்னரே தெரிய வருகிறது.
மொட்டைத்தலை வில்லனாக வரும் அசோகன் இப்படத்தில் ஒரு புதிய பரிமாணம் எடுத்திருந்தார். அது மக்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது. வசனத்தை இழுத்து இழுத்துப் பேசும் பாணியை இப்படம் முதற்கொண்டுதான் அவர் கையாளத்தொடங்கினார். ஆனால் அதுவே பிற்காலத்தில் ஓவர்டோஸாகிப்போனபோது திகட்டியது. இப்படத்தில் அவர் பேசும் "சிங்...கா...ர...ம், ஆறு மாசமா ஆளையும் காணோம், ஆறு லட்சத்துக்கு கணக்கையும் காணோம்" என்ற வசனம் அப்போ ரொம்ப ஃபேமஸ்.
அதுமட்டுமா?. அதுவரை யாருக்குமே தெரியாமல் இருந்த கன்னையா, இப்படத்தில் 'என்னத்தே பார்த்து, என்னத்தே தெரிஞ்சு' என்று பேசி ஓவர்நைட்டில் 'என்னத்தே' கன்னையாவாக ஆனார். (இப்போதும் கூட தன் பாணியில் "வரூ....ம், ஆனா வரா....து" என்று கலக்கிக்கொண்டுதான் இருக்கிறார்).
இவர்கள் இப்படியென்றால், இன்னொரு பக்கம் நாகேஷ் இரட்டை வேடத்தில் கலக்கினார். அதுவும் ஒன்று பெண்வேடம். ஒரு நாகேஷுக்கு அம்மாவாக இன்னொரு நாகேஷ். இவருக்கு சொல்லணுமா?. சும்மா ஊதித்தள்ளினார். இவரது அட்டகாசத்துக்கு முன் மனோரமா காணாமல் போனார் என்பதே உண்மை.
One small observation.
TRR had a penchant for naming the villain characters in his films with North Indian surnames.
Example:
Naan - Asokan - Lal
Moonrezuthu - Kannaiah - Sukhadiya
Thangasurangam - OAK Devar - Pai
-
6th December 2009, 01:43 PM
#40
Senior Member
Veteran Hubber
Originally Posted by
DHANUSU
One small observation.
TRR had a penchant for naming the villain characters in his films with North Indian surnames.
Example:
Naan - Asokan - Lal
Moonrezuthu - Kannaiah - Sukhadiya
Thangasurangam - OAK Devar - Pai
Dhanusu...
It is not small observation, but a Keen Observation. Good.
Actually OAK Thevar's name in Thanga Surangam is Kanagasabai. (It will be spelled one or two times by Jawert Seetharaman.).
But after he bacame an International smuggler, he will change (short?) his name as (kanagasa)PAI.
Bookmarks