Page 2 of 73 FirstFirst 12341252 ... LastLast
Results 11 to 20 of 722

Thread: 'Kalai Nilavu' RAVICHANDRAN

  1. #11
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    சகோதரி சாரதா அவர்களின் ரவி்ச்சந்திரனைப் பற்றிய பதிவுகள் தொடக்கமே களைகட்டி விட்டன. அருமையான படங்களைப் பற்றி எழுதி வருகிறீர்கள். பாராட்டுக்கள்.
    சில பல தனிப்பட்ட காரணங்களால் ரவிச்சந்திரனால் தமிழ்த்திரையுலகில் நீண்ட காலம் ஒரே இடத்தில் நீடிக்க முடியவில்லை. ஆனால் அவர் படங்கள் நிச்சயம் நீடிக்கின்றன. அவருடைய இயற்பெயர் ராமன். ப்ளம் கேட்டது போல் ஜெய்சங்கர் ரவிச்சந்திரன் ரசிகர்கள் தனி டிராக்கில் எதிரெதிர் முகாமை வளர்த்துக் கொண்டிருந்தனர். அக்கரைப் பச்சை பட வெளியீட்டின் போது கூட இந்த வேகம் இருந்தது. அந்த அளவிற்கு அவர்களின் ரசிகர்களும் கணிசமான அளவில் இருந்தார்கள். ஆனால் ரவிச்சந்திரன் படம் ஓப்பனிங் அதிக அளவில் இருக்கும்.
    அவரை நான் நேரில் சந்தித்திருக்கிறேன். பம்பாய் மெயில் 109 பட பிரிவியூ காட்சியில் நேரில் சந்தித்து உரையாடியிருக்கிறேன்.
    ரவிச்சந்திரன் நடித்த சில படங்களில் சிலவற்றை மீண்டும் பார்க்கும் வாய்ப்பு கிடைப்பது கடினம். அப்படிப்பட்ட படங்களில் துள்ளி ஓடும் புள்ளிமான், மயிலாடும் பாறை மர்மம், சத்தியம் தவறாதே போன்றவை அடங்கும். சத்தியம் தவறாதே படமாவது தொலைக்காட்சியில் பார்க்க முடிகிறது. மற்ற இருபடங்கள் ... தெரியவில்லை.
    நடிகைகளின் கடந்த காலம் பற்றி நீங்கள் கூறியது சரிதான். என்றாலும் அவர்களால் அந்த அளவிற்கு கடந்த காலத்தைப் பற்றிப் பேச முடியாது. காரணம் உங்களுக்கும் தெரியலாம். எனக்குத் தெரிந்து ஒரு மிகப் பிரபலமான நடிகை, சிவாஜி ரசிகர்களின் அபிமான ஜோடியாக திகழ்ந்தவர், அவரது தாயார் சென்னையின் ஒரு பகுதியில் வீடுகளில் பத்துப் பாத்திரம் தேய்த்துத் தான் தம் குடும்பத்தை நடத்தினார். எங்கள் பெற்றோர் குடியிருந்த பகுதியில் தான் அவரும் அவருடைய பிழைப்பை நடத்தி வந்தார். காலத்தின் பரிணாமத்தில் அவர் மகள் மிகப் பிரபலமான நடிகையாகி சிறந்த நடிகையாகவும் திகழ்ந்தார். அந்த நடிகை இப்போது இல்லை. இருந்தாலும் அவரால் அதையெல்லாம் கூற முடியாது.

    ராகவேந்திரன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #12
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    2,197
    Post Thanks / Like
    Quote Originally Posted by Plum
    ரவிச்சந்திரன் சண்டையிட்டுக்கொண்டே பாடுவதாக வாலி அமைத்திருந்த
    'நான் போட்டால் தெரியும் போடு
    தமிழ்ப்பாட்டால் அடிப்பேன் ஓடு'
    என்ற பாடல் யாரையோ குறித்து எழுதியதாக ரசிகர்கள் எண்ணினர்.
    yaarai kurithu?
    I mean Rajni-Kamalngara major leageukku parallel-A ippO, Ajith-Vijay, Surya-Madhavan-nu ippO minor leagues nadakkara maadhiri appO Sivaji-MGR major leagueku parallelA Ravichandran-X irundhudhA? Who was X? PM aavadhu paNnunga
    தவறாக புரிந்துகொண்டீர்கள் என்று நினைக்கிறேன். (விவரமாகச் சொல்லாதது என் தவறுதான்).

    அது ரவி தன் எதிரிகள் யாரையோ குறித்து பாடுவதாக அமைந்தது அல்ல. அப்போது படு வேகமாக முன்னேறிக்கொண்டிருந்த கவிஞர் வாலி, தன் கவித்திறமையையும், தன்னுடைய பாடல்களையும் கிண்டல் செய்திருந்த மற்றொரு கவிஞரைக் குறித்து எழுதியது. அதில் கூட...
    'எதுகை, மோனை உன் இடத்திலும் வலத்திலும் கொடுக்கட்டுமா
    வல்லினம், மெல்லினம் என வரி வரியாக வரையட்டுமா'
    என்ற வரிகள் வரும். (பாடலின் இடையே 'டிஷ்யூம், டிஷ்யூம்' சத்தங்களைக் கொடுத்து, மெல்லிசை மன்னர் பாடலுக்கு அழகு சேர்த்திருப்பார்)

  4. #13
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    2,197
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA
    சகோதரி சாரதா அவர்களின் ரவி்ச்சந்திரனைப் பற்றிய பதிவுகள் தொடக்கமே களைகட்டி விட்டன. அருமையான படங்களைப் பற்றி எழுதி வருகிறீர்கள். பாராட்டுக்கள்.
    பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி ராகவேந்தர் சார். எனக்குத்தெரிந்தவற்றை இங்கே பகிர்ந்துகொள்வதில் சந்தோஷம். அவற்றுக்கு நீங்களெல்லாம் தரும் கூடுதல் தகவல்கள் அழகு சேர்க்கின்றன. எனக்கு எப்போதுமே மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் என்றால் ஒரு அபிமானம். அவருக்கு அடுத்து ரவிச்சந்திரன். அறுபதுகளின் மத்தியில் துவங்கி எண்பதுகள் வரை தமிழக திரைப்பட ரசிகர்களின் மாலைப்பொழுதுகளை சந்தோஷப்படுத்தியதில் இவர்களுக்கு தனியிடம் உண்டு. ரவி இன்னும் நடித்துக்கொண்டுதான் இருக்கிறார், சமீபத்தில் வெளியான 'கண்டேன் காதலை' உள்பட. (என் ஆதர்ஷ நாயகன் 'வெண்ணிற ஆடை' ஸ்ரீகாந்த் பற்றி ஒரு திரி துவங்கும் எண்ணமும் உள்ளது)

    Quote Originally Posted by RAGHAVENDRA
    அவரை நான் நேரில் சந்தித்திருக்கிறேன். பம்பாய் மெயில் 109 பட பிரிவியூ காட்சியில் நேரில் சந்தித்து உரையாடியிருக்கிறேன்.
    அந்த அபூர்வ சந்திப்பின்போது கிடைத்த சுவையான விவரங்களை (முடிந்தால்) எங்களோடும் பகிர்ந்துகொள்ளலாமே. ('பம்பாய் மெயில் 109' வி.கே.ராமசாமி அவர்களின் சொந்தப்படம். மெல்லிசை மன்னர் இசை. அப்படத்தை நினைத்ததுமே நினைவுக்கு வருவது, தேங்காய் சீனிவாசனின் 'All Constables follow me' வசனம்தான்)

    Quote Originally Posted by RAGHAVENDRA
    நடிகைகளின் கடந்த காலம் பற்றி நீங்கள் கூறியது சரிதான். என்றாலும் அவர்களால் அந்த அளவிற்கு கடந்த காலத்தைப் பற்றிப் பேச முடியாது. காரணம் உங்களுக்கும் தெரியலாம்.
    இருந்தாலும் பேட்டிகளின்போது நடிகைகள் பண்ணும் அழும்பும், அலட்டலும் சொல்லி மாளாது. அட்லீஸ்ட் சொல்ல முடிந்ததையாவது சொல்லலாமல்லவா?.

    சிறிது காலத்துக்கு முன் திரு.விசு அவர்கள் மனம் நொந்து சொன்ன ஒரு விஷயம், (ஒரு நடிகையைக் குறிப்பிட்டு) "அவளுடைய அண்ணன் அவளோட ஃபோட்டோ ஆல்பத்தோடு என்னிடம் அவளுக்கு சான்ஸ் கேட்டு அலைந்தான். நானும் சரின்னு என் படத்தில் அவளுக்கு நடிக்க சான்ஸ் கொடுத்தேன். சமீபத்தில் ஒரு பத்திரிகை பேட்டியில், என் படத்தில் அவளை நடிக்க வைக்க நான் அவள் வீட்டுக்கு அலைந்ததாக சொல்லியிருக்கிறாள்". (இது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் அல்ல. பானை சோறு முழுக்க இப்படித்தான்).

  5. #14
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    2,197
    Post Thanks / Like
    ராமண்ணா - ரவிச்சந்திரன் இணையில்
    மாபெரும் வெற்றிப்படம்

    "நான்"

    வெள்ளிவிழா நாயகன் என்ற முத்திரையுடன் திரையுலகில் நுழைந்த ரவிச்சந்திரனின் இரண்டாவது வெள்ளிவிழாப் படம் நான். ஏற்கெனவே குமரிப்பெண் தந்த மாபெரும் வெற்றியில் உற்சாகமடைந்த இயக்குனர் ராமண்ணா, மீண்டும் ரவிச்சந்திரன் - ஜெயலலிதா ஜோடியை வைத்து வண்ணத்தில் தயாரித்து இயக்கிய படம் இது.

    ரவிச்சந்திரன், ஜெயலலிதா ஜோடியுடன் முத்துராமன், அசோகன், மனோகர், நாகேஷ் (அம்மாவும் (?) மகனுமாக), மனோரமா, குட்டி பத்மினி, சுருளிராஜன், முத்துலட்சுமி, 'என்னத்தே' கன்னையா என ஏராளமான நட்சத்திரங்களை உள்ளடக்கிய படம். இறந்துபோன ஜமீன்தாரின், காணாமல் போன வாரிசைக் கண்டுபிடித்து அவரிடம் ஜமீனை ஒப்படைக்க, அதற்காக நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்களின் முன், மூன்று பேர் 'நான்'தான் வாரிசு, 'நான்'தான் வாரிசு என்று வந்து நிற்க, அவர்களில் உண்மையான வாரிசை அடையாளம் கண்டு அவரை ஜமீனாக்குவதுதான் கதை. கதை சிறியதாக இருந்தாலும், அது எடுக்கப்பட்ட விதத்தில் படு சூப்பராக அமைந்து போனது.

    வழக்கமாக இம்மாதிரிக் கதைகளில் கதாநாயன்தான் வாரிசாக இருப்பார். ஆனால் இதில் அப்படியில்லை என்பது மட்டுமல்ல, அந்த மூவரில் யாருமே உண்மையான வாரிசில்லை. வில்லனால் ஒளித்துவைக்கப்பட்டிருக்கும் நான்காவது நபர்தான் அவர் என்று தெரிய வரும்போது இன்னும் சுவாரஸ்யம் கூடுகிறது. அப்படியானால் வந்த மூவர்?. ஒருவர் வில்லனால் வாரிசு என்று அனுப்பப்பட்டவர், இன்னொருவர் அரசாங்கத்தால் அனுப்பப்பட்ட துப்பறியும் அதிகாரி.

    அப்படீன்னா கதாநாயனாக வந்திருப்பவர் யார்?. அதுவும் ஒரு சஸ்பென்ஸ். உண்மையான வாரிசு, வில்லன் அசோகனால் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் முத்துராமன் என்பதும், மனோகர், அசோகனால் ஜமீன் சொத்தை அபகரிக்க அனுப்பப்பட்ட போலி வாரிசு என்பதும், நாகேஷ், அர்சாங்கத்தால் அனுப்பப்பட்ட அதிகாரி என்பதும் கிளைமாக்ஸுக்கு சற்று முன்னரே தெரிய வருகிறது.

    மொட்டைத்தலை வில்லனாக வரும் அசோகன் இப்படத்தில் ஒரு புதிய பரிமாணம் எடுத்திருந்தார். அது மக்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது. வசனத்தை இழுத்து இழுத்துப் பேசும் பாணியை இப்படம் முதற்கொண்டுதான் அவர் கையாளத்தொடங்கினார். ஆனால் அதுவே பிற்காலத்தில் ஓவர்டோஸாகிப்போனபோது திகட்டியது. இப்படத்தில் அவர் பேசும் "சிங்...கா...ர...ம், ஆறு மாசமா ஆளையும் காணோம், ஆறு லட்சத்துக்கு கணக்கையும் காணோம்" என்ற வசனம் அப்போ ரொம்ப ஃபேமஸ்.

    அதுமட்டுமா?. அதுவரை யாருக்குமே தெரியாமல் இருந்த கன்னையா, இப்படத்தில் 'என்னத்தே பார்த்து, என்னத்தே தெரிஞ்சு' என்று பேசி ஓவர்நைட்டில் 'என்னத்தே' கன்னையாவாக ஆனார். (இப்போதும் கூட தன் பாணியில் "வரூ....ம், ஆனா வரா....து" என்று கலக்கிக்கொண்டுதான் இருக்கிறார்).

    இவர்கள் இப்படியென்றால், இன்னொரு பக்கம் நாகேஷ் இரட்டை வேடத்தில் கலக்கினார். அதுவும் ஒன்று பெண்வேடம். ஒரு நாகேஷுக்கு அம்மாவாக இன்னொரு நாகேஷ். இவருக்கு சொல்லணுமா?. சும்மா ஊதித்தள்ளினார். இவரது அட்டகாசத்துக்கு முன் மனோரமா காணாமல் போனார் என்பதே உண்மை.

  6. #15
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    2,197
    Post Thanks / Like
    'நான்' ( 2 )

    கதாநாயகன் ரவிச்சந்திரனைப் பொறுத்தவரை, ஒரு ஆக்ஷன் கதாநாயகனுக்கு திகட்ட திகட்ட தீனி போடுமளவுக்கு இவரது ரோல் அமைந்திருந்தது. இவரும் ஒரு சான்ஸைக்கூட தவறவிடாமல் பயன்படுத்திக்கொண்டார். சண்டைக்காட்சிகள் இவரது திறமைக்கு கட்டியம் கூறின.

    ஜெயலலிதாவுக்கு வேலையென்ன?. கதாநாயகனுக்கு சேர்ந்து டூயட் பாட ஒரு ஜோடி வேண்டும். மற்ற நேரங்களில் ஜமீனின் பெண்வாரிசான குட்டி பத்மினியைப் பார்த்துக்கொள்ள வேண்டும் அவ்வளவுதான். அதைக் கச்சிதமாகச் செய்திருக்கிறார். 'அதே முகம் அதே குணம்' பாடலின்போது நீச்சல் உடையில் வருகிறார். ஆனால் எல்லாவற்றுக்கும் சேர்த்துவைத்து "அம்மனோ சாமியோ" பாடலில் அருமையாக நடித்துத்தள்ளிவிட்டார். அந்த ரோலில் நிச்சயமாக ஜெயலலிதாவைத்தவிர யார் நடித்திருந்தாலும் அவ்வளவாக எடுபட்டிருக்காது என்பது உண்மை.

    இப்படத்தின் மூலம் புத்துயிர் பெற்ற இன்னொருவர் மெல்லிசை மன்னர் டி.கே.ராமமூர்த்தி. பாடல்கள் அத்தனையும் அந்த வருடத்தின் (1967) SUPER HIT SONGS.

    நான் ‘குமரிப்பெண்’ பதிவில் குறிப்பிட்டதுபோல, ரவிக்கு ஜெயலலிதாவை டீஸ் செய்ய கிடைத்த பாடல் "ராஜா கண்ணு போகாதடி, நீ போனா நெஞ்சுக்கு ஆகாதடி" பாடல், அந்தக்காலத்திய குத்துப்பாடல்.

    சொத்துப்பத்திரங்கள் அடங்கிய பெட்டியை ரவிச்சந்திரன் எடுக்க வரும்போது, மாளிகையில் இருப்போரின் கவனத்தை திசை திருப்பவும், தனக்கும் மனோகருக்கும் நடக்க இருக்கும் திருமணத்தை நிறுத்தவும், ஜெயலலிதா சாமி வந்து ஆடுவதுபோல நாடகமாடும் "அம்மனோ சாமியோ அத்தையோ மாமியோ" பாடல் ஈஸ்வரியும் சீர்காழியாரும் பாடியிருக்க, ஜெயலலிதாவும் நாகேஷும் நடித்திருப்பார்கள். நாகேஷிடம் அசல் பூசாரி கெட்டார் போங்க.

    ரவி - ஜெயா டூயட் பாடல். எங்கே?. சுவிட்சர்லாந்து?. நயாகரா?. சிங்கப்பூர்?. அட்லீஸ்ட் பிருந்தாவனம்?. ஊட்டி?. கொடைக்கானல்?. ஊகும்.... சின்னஞ்சிறிய ஃபியட் காருக்குள் "போதுமோ இந்த இடம் கூடுமோ அந்த சுகம்" பாடலை என்ன அழகாகப் படமாக்கியிருப்பார் ராமண்ணா. வல்லவனுக்கு காரும் லொக்கேஷன்.

    1967-ல் கல்லூரி மாணவர்களிடையே கலக்கியெடுத்துக் கொண்டிருந்தது ஒரு ஆங்கில இசை. பெயர் 'கம் செப்டம்பர்'. அப்போது டி.வி.சேனல்களோ, டேப் ரெக்கார்டர்களோ, செல்போன்களோ, வாக்மேன்களோ அறிமுகமில்லாத அந்த நாளில் இசைத்தட்டுக்கள் வாயிலாகவே அவை பாப்புலராகியிருந்தன. அந்த இசையில் கவரப்பட்ட ராமண்ணா, தன்னுடைய நான் படத்துக்கும் அந்த மெட்டில் ஒரு பாடல் வேண்டுமென்று கேட்க, டி.கே.ராமமூர்த்தியும் அசத்திவிட்டார்.
    'வந்தால் என்னோடு இங்கே வா தென்றலே'
    என்ற அந்தப்பாடல், ரெஹ்மானின் ஒளிப்பதிவுத்திறமைக்கு ஓர் எடுத்துக்காட்டு. என்ன ஒரு பளிச்சென்ற ஒளிப்பதிவு, என்ன அற்புதக்கோணங்கள். ஜெயலலிதாவின் படுவேகமான நடன அசைவுகள். ஈஸ்வரியின் கொஞ்சும் குரல். மொத்தத்தில் சூப்பர்.

    'நான்' திரைப்படம் நகரம் முதற்கொண்டு பட்டி தொட்டியெங்கும் ஓட்டத்தில் சாதனை புரிந்ததோடு அந்த ஆண்டின் ஒரே வெள்ளிவிழாப்படமாக அமைந்தது.

    அதுமட்டுமல்ல, ரவிச்சந்திரனின் படங்களில் மறு வெளியீடுகளில் அதிகம் சாதித்த படமும் 'நான்' திரைப்படம்தான்.

  7. #16
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    Good one mam,

    Ravichandran, whos is surviving in Tamil Film idustry for the 45 years as a successful hero, charector artist and a producer too, definitely deserves for a seperate thread, and you have done it.

    Short reviews on his movies are nice, especially 'Naan' review.

    His son Hamsavirudhan also an actor and have done five films including Mandhiran, Punnagai dhEsam etc.

    I hope you will cover most of the films of RC.

  8. #17
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    2,197
    Post Thanks / Like
    நன்றி கார்த்திக்,

    ரவிச்சந்திரன் படங்களைப்பற்றியும், மற்றும் அவரைப்பற்றிய குறிப்புக்களையும் நீங்கள் அறிந்தவற்றை இங்கே பதியுங்கள்.

  9. #18
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    2,197
    Post Thanks / Like
    நடிகர்திலகத்துடன் ரவிச்சந்திரன்.....

    மற்ற எல்லா கதாநாயகர்களுடனும் பல படங்களில் நடிக்கும் வாய்ப்புக்கிடைத்த ரவிச்சந்திரனுக்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் நடிக்கும் வாய்ப்பு கடைசி வரை அமையவேயில்லை. அதே ச்மயம், நடிக்க வந்த அடுத்த வருடமே நடிகர்திலகத்துடன் நடிக்கும் வாய்ப்புக்கிடைத்தது.

    மோட்டார் சுந்தரம் பிள்ளை : 1964-ல் முதல் படம் வெளியான ரவிக்கு 1965-லேயே நடிகர்திலகத்துடன் இப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு அமைந்தது. (படம் வெளியானது 1966 ஜனவரி 26. நடிகர்திலகத்துக்கு பத்மஷ்ரீ அறிவிக்கப்பட்ட அதே நாள்). ஜெமினி வாசன் தயாரித்து, அவரது மகன் பாலசுப்ரமணியம் இயக்கிய இப்ப்டத்தில் நடிகர்திலகத்தின் மாப்பிள்ளையாக (மூன்றாவது மகளான ஜெயலலிதாவின் ஜோடியாக) ரவிச்சந்திரன் நடித்தார். வாலி எழுதி, மெல்லிசை மன்னர் இசையமைத்த 'காத்திருந்த கண்களே கதையளந்த நெஞ்சமே' என்ற அருமையான டூயட் பாடல் இந்த ஜோடிக்கு. மைசூர் பிருந்தாவனம் கார்டனில் படமாக்கப்பட்டிருந்தது. ஒன்றாக படத்தில் நடித்திருந்தபோதிலும் சிவாஜி-ரவி இருவரும் சந்தித்துக்கொள்ளும் காட்சிகள் அபூர்வம். என் நினைவு சரியென்றால், ரவியை அவர் அப்பாவான கல்லூரி பிரின்ஸிபாலிடம் அழைத்துச்சென்று, அவர்களின் காதல் பற்றி புகார் செய்யும் இடம்தான் என்று நினைக்கிறேன். இதை விட்டால் கிளைமாக்ஸில்தான் சந்திப்பார்கள்.

    கவரிமான் : மோட்டார் சுந்தரம்பிள்ளை படம் வெளியாகி 16 ஆண்டுகள் கழித்து 1979-ல் கவரிமான் படத்தில் ரவி சிவாஜியுடன் நடித்தார். இதிலும் அப்படித்தான். இருவரும் சந்திக்கும் வாய்ப்பே கிடையாது. அப்போது வந்த படங்களில் நடிகர்திலகத்துடன் துணைப்பாத்திரங்களில் மேஜர், சிவகுமார், விஜயகுமார், ஜெய்கணேஷ் போன்றோர்தான் நடித்து வந்தனர், இப்படத்தில் ஏற்கெனவே மேஜர் அண்ணனாகவும், விஜயகுமார் தம்பியாகவும் வருகின்றனர். எனவே இந்த ரோலில் அநேகமாக ஜெய்கணேஷதான் நடிப்பார் என்பது பெரும்பாலோரின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் படத்தின் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் இந்த வேடத்தில் ரவிச்சந்திரன் நடிக்க இருப்பதாக அறிவித்தபோது எல்லோருக்கும் ஆச்சரியம். நடிகர்திலகத்தின் 106-வது படத்தில் நடித்தவர், அதன்பிறகு இருவரும் சேர்ந்து நடிக்காத வேளையில் மீண்டும் 201-வது படத்தில் சேர்ந்தது வியப்பாக இருந்தது. கூடவே இன்னொரு குண்டாக நடிகர்திலகத்தின் ஜோடி பிரமீளா என்றும் எஸ்.பி.எம். அறிவித்தார்.

    கவரிமான் படத்தில் ரவி ஏற்றிருந்தது கொஞ்சம் வில்லங்கமான பாத்திரம். நடிகர்திலகத்துக்கு வில்லனாக, ஆனால் நேரடி வில்லன் அல்ல. கர்நாடக முதலமைச்சரின் முதன்மை செக்ரட்டியாக பணிபுரியும் நடிகர்திலகத்துக்கு வாய்த்த மனைவி பிரமீளா நாகரீக மோகம் பிடித்து சதா, கிளப், பார்ட்டி என்று சுற்றிக்கொண்டிருப்பவர். அப்போது கிளப்பில் ரவிச்சந்திரனின் அறிமுகம் கிடைத்து, அவரால் குடிப்பழக்கத்துக்கும் ஆளாகிறார். இந்நிலையில் முதல்வருடன் வெளிநாடு செல்வதாக சிவாஜி கிளம்பிப்போன பின், பிரமீளா, ரவியை வீட்டுக்கு அழைத்து, மதுவின் போதையில் இருவரும் படுக்கையறையில் இருக்கும்போது, பயணம் ரத்தாகி வீடு திரும்பும் சிவாஜி இருவரையும் அலங்கோல நிலையில் பார்த்து விட்டுத் துடிக்க, சந்தடி சாக்கில் ரவி அங்கிருந்து நழுவி ஓடிவிட, கையில் கிடைத்த பாட்டிலால் மனைவி பிரமீளாவை சிவாஜி அடிக்க, பிரமீளா ரத்த வெள்ளத்தில் பிணமாக, அதை அவர்களின் நான்கு வயதுப் பெண்குழந்தை பார்த்துவிடுகிறது. படத்தில் சுமார் 20 நிமிடங்களே வரக்கூடிய ரோலாக இருந்தாலும் ரவிச்சந்திரன் அதை சிறப்பாக செய்திருந்தார்.

  10. #19
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    2,197
    Post Thanks / Like
    கொலை.... கொலை.... தினமொரு கொலை...

    "அதே கண்கள்"

    உங்களுக்குப்பிடித்த ரவிச்சந்திரனின் ஐந்து படங்களைச்சொல்லுங்கள் என்று யாரைக்கேட்டாலும் சரி. அவர்கள் சொல்லும் ஐந்து படங்களில் மற்ற படங்கள் இருக்கிறதோ இல்லையோ. கண்டிப்பாக ‘அதே கண்கள்’ படம் இருக்கும். திகில், மர்மம், பொழுதுபோக்கு, இனிய பாடல்கள், அற்புதமான வண்ண ஒளிப்பதிவு என அனைத்து அம்சங்களும் நிறைந்த படம். ஒரு பணக்காரரின் நான்கு வாரிசுகள். மூத்தவர் படம் துவங்கியதுமே கொல்லப்படுகிறார். கொன்றது யாராக இருக்கும் என்று துப்புத்துலங்கும்போதே அவரது மனைவியும் கொல்லப்படுகிறார். இறந்த மூத்தவருக்கு அடுத்தவர் அசோகன், அதற்கடுத்தவர் எஸ்.வி.ராமதாஸ். இவர்களோடு ஒட்டி உறவாடும் குடும்ப டாக்டர் பாலாஜி. இவர்களில் கொலையாளி யாராக இருக்கக்கூடும் என்று விசாரணை நடக்கிறது. வெள்ளை மஃப்ளரால் இறந்தவர்கள் கழுத்து நெறித்து கொல்லப்பட்டிருப்பதால், எப்போதும் வெள்ளை மஃப்ளர் அணிந்திருக்கும் பாலாஜியா?. இவர்களோடு வயதான துறவி போல தங்கியிருக்கும் கிழவனா?. மர்மம்... மர்மம்... போலீஸ் தலையைப் பிய்த்துக்கொள்கிறது.

    வெளியூரில் படித்துக்கொண்டிருக்கும் (இறந்துபோன மூத்தவரின் மகள்) காஞ்சனா ஊருக்குத் திரும்பி வருகிறாள். தன் குடும்ப பங்களாவில் அடிக்கடி நடக்கும் கொலை அவரை பயமுறுத்துகிறது. அவர்களின் துணைக்கு வந்து தங்கியிருப்பதோடு, கொலையின் மர்மத்தையும், கொலையாளி யார் எனவும் கையும் களவுமாகப்பிடிக்கத் துடிக்கும் அவரது காதலன் ரவிச்சந்திரன். மர்மத்தைக் கண்டுபிடிக்கும் முன்பு ராமதாஸும் கொல்லப்படுகிறார். இதற்குமேலும் தாமதித்தால் இருப்பவர்களையும் இழக்க நேரிடும் என்று கதாநாயகன் ரவி முழுமூச்சாக இரவு முழுதும் விழித்திருக்க, யாரோ வரும் அரவம் கேட்டு நிமிர்ந்து பார்க்க, மாளிகையின் மேலிருக்கும் வட்ட வடிவ கண்ணாடி கதவு மெல்ல மூடுகிறது. அதிர்ந்து போய் மெல்ல மெல்ல ஒவ்வொரு இடமாகப் பார்த்துக்கொண்டு வரும்போது, ஓ.... அதோ... ரவியை முன்னே போகவிட்டு, கதவோடு ஒட்டியிருந்தவன மெல்ல கையில் மஃப்ளரோடு பின் தொடர... நம் முதுகுத்தண்டு சிலிர்க்கிறது. (அந்தக்காலத்தில் எம்.ஜி.ஆர். படம் பார்க்கும்போது, எதாவது குகைக்குள் அவர் நுழையும் சமயம் "அண்ணே போகாதீங்க. அங்கே நம்பியார் ஒளிஞ்சிருக்கான்" என்று ஆடியன்ஸ் கத்துவார்களாம். அதுபோல நமக்கும் இந்தக் காட்சியில் "ரவி, கொலைகாரன் பின்னாடியே வரான் பாருங்க" என்று கத்ததோன்றும்).

    நாம் எதிர்பார்த்தபடியே இருவருக்கும் பயங்கர சண்டை. முகமூடியணிந்திருக்கும் கொலையாளியின் முகமூடியைக்கிழிக்க ரவி முயற்சிக்க, அவன் தப்பியோடி விடுவான். ஆனால் அவன் கண்கள் மட்டும் அவர் மனதில் அப்படியே பதிந்திருக்கும். விசாரணையின்போது அந்தக்கண்களை வைத்துக் கண்டுபிடிப்பதற்காக ஒவ்வொருவர் முகத்தையும் மறைத்து கண்களை மட்டும் பார்த்துக்கொண்டே வரும்போது, ஒருவன் கண்களில் மட்டும் கொலைவெறி. 'இதோ... அதே கண்கள்... அதே கண்கள்' என்று ரவி கத்த, கொலையாளி மாட்டிக்கொள்கிறான். அது யார் என்று தெரியும்போது நமக்கே அதிர்ச்சி. இத்தனை கொலைகளையும் செய்தவன் இவனா?. (எவன்?. படம் வந்து 42 வருடங்கள் ஆகியும் இன்னும் கூட பார்க்காதவர்கள் பலர் இருக்கக்கூடும். ஆகவே சஸ்பென்ஸ் அப்படியே இருக்கட்டும்).

    ரவிச்சந்திரன், காஞ்சனா, அசோகன், பாலாஜி, நாகேஷ், ராமதாஸ், ஏ.கருணாநிதி, மாதவி, ஜி.சகுந்தலா, கீதாஞ்சலி, டைப்பிஸ்ட் கோபு, பி.டி.சம்பந்தம் என நட்சத்திரக்கூட்டத்துக்கு குறைவில்லை. போதாக்குறைக்கு காஞ்சனாவின் தோழிகள் பட்டாளம் வேறு. சஸ்பென்ஸைக்கூட்டுவதாக நினைத்துக்கொண்டு நடுராத்திரியில் கருணாநிதி, கையில் கத்தியோடு குரல் எழுப்புவதையெல்லாம் காட்டி குழப்ப வேண்டுமா?. அதுபோலவே நடுராத்திரியில் கீதாஞ்சலி பாடும் "வா அருகில் வா" பாட்டும் அதற்கான காட்சியும்.

    படத்துக்கு திருஷ்டிப்பொட்டு எதுவும் கிடையாதா? இதோ இருக்கிறதே. நாகேஷின் மகாமட்டமான காமெடி. பெண்வேடம் போட்டுவரும் அவர் பின்னால் பி.டி.சம்பந்தம் அலைவதெல்லாம் ஒரு காமெடியா?. அருவருப்பு.

    'அதே கண்கள்' என்ற படத்துக்கு ஏ.வி.எம்.செட்டியார், வேதாவை இசையமைப்பாளராக போட்டார். அந்தப்படம் ஒரு திகில் படமென்பதால் வேதாவைப்போட்டால் நன்றாக இருக்கும் என்று அவரது மகன்கள் விரும்பினர்.

    அப்போது வேதாவை அழைத்து செட்டியார் சொன்னார்: "இங்க பாருப்பா, நீ மற்ற சில கம்பெனி படங்களுக்கு (மாடர்ன் தியேட்டர்ஸ் என்று சொல்லவில்லை) இந்திப்பட மெட்டுக்களை காப்பியடித்து பாட்டுப்போடுறேன்னு எனக்கு தெரியும். நானும் கேட்டிருக்கேன். ஆனால் என் படத்துக்கு அத்தனை பாடல்களுக்கும் நீ சொந்தமாகத்தான் மெட்டுப்போடனும். என் நிறுவனத்துக்கென்று ஒரு பேர் இருக்கு. நாளைக்கு ' என்ன செட்டியாருமா இப்படீ?'ன்னு யாரும் பேசிடக்கூடாது. என் பையன் களோட விருப்பத்தால்தான் உன்னைப்போட்டேன். சொந்தமாக மெட்டுப்போட முடியலைன்னா சொல்லிடு. நான் வேறு இசையமைப்பாளரை வச்சிக்கிறேன்" என்று கறாராக பேசி விட்டார்.

    விளைவு..?. 'அதே கண்கள்' படத்துக்கு அத்தனை மெட்டுக்களும் சொந்தமாகவே போட்டார் வேதா. அத்தனையும் SUPER HIT ஆயின. (இந்த விவரம் ஏ.வி.எம்.குமரன் ஒரு TV பேட்டியின்போது சொன்னது).

    முதல் பாடல், காஞ்சனாவும் தோழிகளும் குடிசைப்பகுதியை சீரமைக்கும்போது பாடும் "பூம் பூம்பூம் மாட்டுக்காரன் தெருவில் வந்தான்டி" பாடலில் காஞ்சனா குழுவினர் கஷ்டப்பட்டு ஆடும் ஆட்டத்தை விட நம்மைக்கவர்வது, மாட்டுக்காரன் சின்னச்சின்ன அசைவுகளுடன் அசால்டாக ஆடும் ஆட்டம்தான். இப்பாடலை P.சுசீலா பாடியிருப்பார்.

    கிளப்'பில் காஞ்சனா கோஷ்டியை டீஸ் செய்து ரவி (TMS) பாடும் "கண்ணுக்குத் தெரியாதா" பாடல், வேகமான அசைவுகளுடன் கூடிய ரவிச்சந்திரன் பிராண்ட்.

    ரவி & நாகேஷ் பாடும் "பொம்பளை ஒருத்தி இருந்தாளாம்" பாடலில், நாகேஷ் மாடிப்படிகளில் படுவேகமாக, அதே சமயம் ரிதம் தவறாமல் இறங்கி வரும் காட்சி பிரபுதேவா, விஜய், சிம்பு காலத்திலும் கூட நமக்கு ஆச்சரியமூட்டுகிறது.

    பிருந்தாவனம் கார்டனில் படமாக்கப்பட்ட "ஓ...ஓ... எத்தனை அழகு இருபது வயதினிலே" பாடல் வேதாவின் திறமைக்கு ஒரு எடுத்துக்காட்டு. அதிலும் குறிப்பாக துவக்கத்தில் வரும் அந்த ட்ரம்பெட் இசை அட்டகாசமான துவக்கம்.

    "வா அருகில் வா" பாடல் யார் நீ படத்தில் வரும் 'நானே வருவேன்' பாடலை நினைவுபடுத்தும். கடற்கரையில் கீதாஞ்சலி நீச்சல் உடையில் பாடியாட அசோகன் ரசித்துக்கொண்டிருக்கும் "என்னென்னவோ நான் நினைத்தேன் நினைத்தேன் சொல்ல வார்த்தையில்லையே" பாடல், அதிகம் பாப்புலராகாத, அதே சமயம் அழகான பாடல். ஒளிப்பதிவாளருக்கு ஸ்பெஷல் அப்ளாஸ்.

    திகில் படத்துக்கேற்ற திகில் செட். இந்திப்படத்துக்காகப் போடப்பட்ட இந்த செட்டைப் பயன்படுத்தி ஒரு தமிழ்ப்படமும் எடுக்க வேண்டும் என ஏ.வி.எம். செட்டியார் சொன்னபோது, இந்த செட்டுக்கு வேறெந்த கதையையும் விட திகில், மர்மம் நிறைந்த கதைதான் ‘ஸுட்’ ஆகுமென் எல்லோரும் அபிப்ராயம் சொல்ல அதன்பின்னரே இந்தக்கதையை செட்டியார் படமாக்கத்துணிந்தாராம்.

    A.C..திருலோக்சந்தர் இயக்கிய 'அதே கண்கள்' படம் (உதவி இயக்குனர் SP.முத்துராமன்) பட்டிதொட்டியெங்கும் பட்டையைக்கிளப்பி, 1967-ம் ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்றாக அமைந்தது.

  11. #20
    Senior Member Platinum Hubber
    Join Date
    Oct 2004
    Posts
    10,586
    Post Thanks / Like
    Excellent posts, Saradha madam.

    One small clarification though

    Quote Originally Posted by saradhaa_sn
    'அதே கண்கள்' படத்துக்கு அத்தனை மெட்டுக்களும் சொந்தமாகவே போட்டார் வேதா.
    'boom boom mAttukkAran' is inspired from the disney classic 'chim chimney, chim chimney' (Mary Poppins), IMO

Page 2 of 73 FirstFirst 12341252 ... LastLast

Similar Threads

  1. Was Kalai Arasi the first Indian film to feature aliens?
    By inetk in forum Tamil Films - Classics
    Replies: 3
    Last Post: 18th November 2010, 03:19 AM
  2. Hariharan gets `kalai mAmaNi'
    By app_engine in forum Current Topics
    Replies: 1
    Last Post: 15th February 2006, 10:12 PM
  3. Songs from "Pagalil oru nilavu"
    By S.Balaji in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 17
    Last Post: 19th October 2005, 09:37 PM
  4. NILAVU SONGS
    By Justice in forum Current Topics
    Replies: 72
    Last Post: 1st October 2005, 10:52 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •