Page 1 of 40 12311 ... LastLast
Results 1 to 10 of 396

Thread: 'Makkal Kalaignar' JAISHANKAR

  1. #1
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    2,197
    Post Thanks / Like
    "ஹாய்"
    Last edited by saradhaa_sn; 14th April 2015 at 01:34 PM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    சகோதரி சாரதா அவர்களின் இந்தத் திரி இனிய மற்றும் இன்ப அதிர்ச்சி, தீபாவளி பரிசு. மக்கள் கலைஞர், வெள்ளிக்கிழமை ஹீரோ என்று விநியோகஸ்தர்கள் மத்தியில் அன்புடன் அழைக்கப்பட்ட ஜெய் சங்கர் அவர்களைப் பற்றி மேலும் மேலும் தெரிந்து கொள்ள ஆர்வத்தைத் தூண்டுகிறது. மனிதாபிமானம் என்றால் ஜெய்சங்கர் என்று அகராதியில் பொருள் எழுதி விடலாம். நடிகர் திலகத்திற்கு பி.ஏ. பெருமாள் போல் ஜெய்சங்கருக்கு ஜோசப் தளியத் எனலாம். அவருடைய இன்னொரு அறிமுகம் வாணிஸ்ரீ, படம் காதல் படுத்தும் பாடு. மலரும் நினைவுகளில் நம்மை மூழ்கழடிக்க இந்தத்திரி மலர்ந்திருக்கிறது.
    மீண்டும் சாரதா அவர்களுக்குப் பாராட்டுக்கள்
    ராகவேந்திரன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #3
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    சாரதா,

    மக்கள் கலைஞர் ஜெய் அவர்களைப் பற்றிய திரிக்கும் செய்திகளுக்கும் நன்றி. பள்ளிப் பருவத்தில் நான் பார்த்த ஏராளமான ஜெய் படங்கள் நினைவிற்கு வருகின்றன.

    சினிமாவில் எல்லோரையும் எல்லோரும் அண்ணே என்று அழைப்பதையே வழக்கமாக கொண்டிருந்ததை மாற்றி ஹாய் என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தியது ஜெய்தான் என்று சொல்லுவார்கள். மாடர்ன் தியேட்டர்ஸ் + ஜெய்சங்கர் என்ற காம்பினேஷன் படங்கள் ரசிகர்களுக்கு ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தன என்றால் மிகையில்லை. அது போல் நகைச்சுவை படங்கள், action படங்கள், துப்பறியும் படங்கள் என்று தனக்கென ஒரு பாணி வைத்திருந்தார்.

    டி.எம்.எஸ்.குரல் நிச்சயமாக இவருக்கும் பொருந்தியது. நீங்கள் சொன்னது போல் முதல் படத்திலேயே அது செட் ஆகி விட்டது. நலம் நலம்தானா முல்லை மலரே ஆகட்டும், காட்டு புறாக்கள் கூட்டுக்குள் பாடும் பாட்டுக்கு யார் துணை வேண்டும் ஆகட்டும், உன் கருங்கூந்தல் அலை பாய அவர் என்ன சொன்னார் ஆகட்டும், தொட்டு தொட்டு பாடவா ஆகட்டும், பார்த்து கொஞ்சம் பேச வந்தாள் எத்தனை கோபம், எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தார் போன்று மன்னிப்பு படத்தில் இடம் பெற்ற நீ எங்கே என் நினைவுகள் அங்கே பாடல் 1970 -ம் வருடம் வானொலியில் அதிக நேயர்களால் விரும்பி கேட்ட பாடலாக அமைந்தது. நீங்கள் குறிப்பிட்ட அத்தையா மாமியா படத்தில் கூட விலைவாசி மாறி போச்சு விஷம் போல ஏறிப் போச்சு வரிகளில் ஜெய் தான் தெரிவார், டி.எம்.எஸ். தெரிய மாட்டார்.

    நமது நடிகர் திலகத்துடன் கூட முதலில் அவர் நடித்த இரண்டு படங்களான அன்பளிப்பு மற்றும் குலமா குணமா இரண்டும் குறிப்பிட தக்கவை.

    தொடருங்கள்

    அன்புடன்

  5. #4
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் அவர்களின் பங்களிப்பு தமிழ்த்திரையுலகத்திற்கு ஒரு புத்துயிர் ஊட்டியது என்றால் அது மிகையல்ல. நுழைந்த வேகத்திலேயே கல்லூரி மாணவிகளிடம் தனி யிடம் பிடித்த கதாநாயகர் ஜெய்சங்கர். அவருடைய திருமணத்தின் போது நான் பள்ளி மாணவன். அப்போதைய சுவையான தகவல் நான் கேள்விப்பட்டது. தமிழ்த்திரையுலகில் முதன் முதலாக ஒரு கதாநாயகனின் திருமணம் செய்து கொண்டதற்கு பல மாணவிகள் மற்றும் இளம்பெண்கள் வருந்தி ஏக்கம் கொண்டது ஜெய்சங்கரின் திருமணத்தின்போது தான் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் அமர்ந்தவர் ஜெய்சங்கர். அது மட்டுமல்ல அது வரை பல நாயகர்களை வைத்து படம் எடுத்து வந்த மாடர்ன் தியேட்டர்ஸ் குறிப்பிட்ட ஒரு நடிகரை வைத்தே தொடர்ச்சியாக படம் எடுத்த பெருமையும் ஜெய்சங்கரையே சேரும். அதே போல காமிரா மேதை கர்ணன் பெரும்பாலும் ஜெய்சங்கருக்காகவே கதை உருவாக்கி அருமையான படங்களைக் கொடுத்துள்ளார், சில பல வேறுமாதிரியான காட்சிகளைத் தவிர்த்து. அதில் குறிப்பாக கங்கா தமிழ்த்திரையுலகில் தனி முத்திரை பதித்தது. கறுப்பு வெள்ளை படங்களிலேயே ஒளிப்பதிவில் அசுர சாதனை படைத்த கர்ணனின் இப்படத்தில் ஒரு காட்சியில் சாரட் வண்டியும் குதிரையும் ஒரே சமயத்தில் வேகமாக அதே சமயம் இணையாக பயணிக்கும் காட்சி இடம் பெறும். அக் காட்சியில் சாரட் வண்டியின் இரு சக்கரங்களுக்கு இடையில் தொலைவில் பயணிக்கும் குதிரை ஓடுவதைக் காண்பித்திருப்பார். இன்று வரை இக்காட்சியினைப் போல் இன்னொரு படத்தில் இடம் பெறவில்லை. இக்காட்சியில் ஜெய்சங்கர் முழுதும் டூப் இன்றி நடித்துள்ளார் என்றால் அவரின் தொழில் பக்தியை அறிந்து கொள்ளலாம்.
    இது ஒரு உதாரணம் மட்டுமே.

    ராகவேந்திரன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #5
    Moderator Platinum Hubber P_R's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    10,036
    Post Thanks / Like
    நான் பார்த்த கொஞ்சூண்டில் ரசித்தது அவர் நகைச்சுவைத் திறனை.

    வீட்டுக்குவீடு

    பலர் ஒரே சமயத்தில் பேசிக்குழப்பும் காட்சியில் மனைவி லக்ஷ்மிமைப் பார்த்து:

    ஜெய்: (உரத்த குரலில்) என்ன நீ
    ல: இப்பொ நீங்க "என்ன டீ" னு சொன்னீங்களா..."என்ன நீ"ன்னு சொன்னீங்களா 'ன்னு எனக்கு இப்பொவே தெரிஞ்சாகணும்
    ஜெய்: (கனிவான குரலில்) மாலதி நான் உன்னை எப்போ கூப்பிட்டாலும் அது "என்ன நீ" தான்.."என்ன டீ" கிடையாது
    ல்: ம்ம்
    ஜெய்; (விட்ட இடத்திலிருந்து..உரத்த குரலில்): என்ன நீ



    கணவன் மனைவி நெருங்கும்போது மனைவியில் தோழிவந்துவிட
    ல: என்ன கலா ? (காட்சியை விட்டு வெளியேறுகிறாள்)
    ஜெய்: (கோபம் + இயலாமை கேலிக்குரலில்) கலா கலா கலா (தோளை ஒரு வெட்டு)


    கலாவின் (வெ.ஆ. நிர்மலா) ஆணாதிக்கக் கணவன் (முத்துராமன்) பார்த்துக்கொண்டிருக்க நடக்கும் காட்சி. லக்ஷ்மி அலுவலகத்திலிருந்து களைப்போடு திரும்ப, வேலை கிடைக்காமல் வீட்டில் இரூக்கும் ஜெய் காஃபி குடுத்து உபசரிப்ப்பார். காலடியில் அமர்ந்து அன்று லக்ஷ்மியின் பிரதாபங்களை ரசித்துக் கேட்பார். அந்தக் காட்சியில் அவரது பாவனைகள் நடை எல்லாவற்றிலும் ஒரு பெண்மை

    லக்ஷ்மி: அந்த மேனேஜருக்கும் apropos னா என்னன்னு தெரியல (சிரிப்பு)
    ஜெய்: apropos தெரியலையா (உடன் சிரிப்பு...பின்பு நிறுத்தி)...ஆமாம் மாலதி apropos னா என்ன ?
    லக்ஷ்மி: apropos னா with reference to னு மேனேஜர் கிட்ட தெளிவா சொல்லிட்டேன்
    ஜெய்: (கையை தட்டி, வலக்கையை தாடையில் வைத்து) அசந்தி போயிருப்பாரே

    முத்துராமன்
    மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே

  7. #6
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் அவர்களின் பெரும்புகழைப் போற்றும் வகையில், நடிகர் திலகத்தின் பக்தையான சகோதரி சாரதா அவர்கள் தொடங்கியுள்ள இத்திரி மாபெரும் வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துக்கள் !!!

    அவரது இந்த பெருமுயற்சிக்கு எமது நன்றி கலந்த பாராட்டுக்கள் !!!

    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  8. #7
    Senior Member Seasoned Hubber sivank's Avatar
    Join Date
    Mar 2007
    Location
    In the heart of my dearest
    Posts
    1,777
    Post Thanks / Like
    Superb writing for a good deserving actor. Thanks saradha. I really eager to read more about this good hearted samaritan.
    niraive kaanum manam vendum
    iraivaa nee adhai thara vendum

  9. #8
    Regular Hubber Irene Hastings's Avatar
    Join Date
    Oct 2007
    Posts
    158
    Post Thanks / Like
    மேடம். நிச்சயம் 100/100 பற்றி எழுதுங்கள். ஜெய்சங்கரின் மிகச்சிறந்த படம்.

  10. #9
    Senior Member Diamond Hubber groucho070's Avatar
    Join Date
    Jun 2006
    Location
    Malaysia
    Posts
    5,390
    Post Thanks / Like
    Saradha madam. Excellent!!!!

    My parents don't have internet access in the plantation they are living in. If not, my mom will be your favourite reader, as Jai is her fav actor...and was once her dream dude!! How she end up marrying a hardcore MGR fan and giving birth to hardcore NT fan is beyond me
    " நல்ல படம் , சுமாரான படம் என்பதையெல்லாம் தாண்டியவர் நடிகர் திலகம் . சிவாஜி படம் தோற்கலாம் ..சிவாஜி தோற்பதில்லை." - Joe Milton.

  11. #10
    Senior Member Seasoned Hubber sivank's Avatar
    Join Date
    Mar 2007
    Location
    In the heart of my dearest
    Posts
    1,777
    Post Thanks / Like
    Quote Originally Posted by saradhaa_sn
    Quote Originally Posted by sivank
    Superb writing for a good deserving actor. Thanks saradha. I really eager to read more about this good hearted samaritan.
    Thanks Sivan.K
    You also post your valuable reviews about Jaishankar movies, you have watched.

    btw, why you often disappear from Hub...?.
    kandippa seyyaren saradha. aana enakku avlo va vishayam theriyaadhu. therinja varaikkum ezhudharen

    ippo ellaam munna maadhiri vara mudiyala. vandhaalum stories section la oru kadhai ezhudhittu poiduven. NT sectionla varathukku gnanam kidaiyaadhu. naan karai orama ninnu kaathu vaangittu pora gumbal la oruthan. neenga ellaam kadal la moozhghi muthu edukkuravanga

Page 1 of 40 12311 ... LastLast

Similar Threads

  1. Kalaignar TV?
    By R.Latha in forum TV,TV Serials and Radio
    Replies: 184
    Last Post: 3rd October 2011, 12:16 AM
  2. MAKKAL TV
    By subanrao in forum TV,TV Serials and Radio
    Replies: 124
    Last Post: 1st August 2009, 09:33 PM
  3. Makkal Aatchi
    By svbp007 in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 2
    Last Post: 2nd November 2008, 03:37 PM
  4. Contact details for Kalaignar TV
    By MEDIA ASIA in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 23rd October 2007, 10:26 PM
  5. Kalaignar TV is coming on the way
    By Sanjeevi in forum Miscellaneous Topics
    Replies: 21
    Last Post: 6th August 2007, 07:17 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •