-
11th February 2009, 12:32 PM
#11
Senior Member
Platinum Hubber
செவ்வாய் - Feb 10
________________
நம் மாங்காடு பாகவதரின் குடும்பச்சண்டைகள் நேற்றைய பாதி தொடரை ஆக்ரமித்தது. நமக்கேன் அவர்கள் வீட்டுக் கதையெல்லாம்!? பாகவதர் உணர்ச்சி வசப்பட்டு "நகரேஷு காஞ்சி" என்று காஞ்சி மாநகரின் பெருமையை சுட்டிக் காட்டினார்.
உடல் நலம் குன்றியும் ஜட்ஜ் வீட்டுத் தர்பணத்திற்கு செல்ல விழைந்த தன் தகப்பனை, மகன் தடுத்து தான் சென்று தர்பணம் நடத்திவிட்டு வருகிறான். வேதியல் படித்து வேலையில் அமர்ந்திருப்பவனுக்கு வேதமும் தெரியும் என அடக்கத்துடனும், மகிழ்ச்சியுடனும் தன்னை வெளிப்படுத்துகிறான்.
கலியுகத்தில் வேதம் தெரிந்தவர்கள் குறைந்து வருவது மலிந்து கிடக்க, இளம் வாலிபன் ஒருவனின் வேத அப்யாசம் கண்டு திருப்தியடைக்கிறார் நீதிபதி.
தர்பணம் பற்றிய பேச்சு அடிபடும் போது, முன்னோருக்கு மட்டுமின்றி அவர்கள் செய்யும் கார்யம், பாரபட்சமற்று ஜாதி மத வேறுபாடுகளற்று, தாய் தந்தை உறவினர் அற்ற மற்ற ஆன்மாக்களுக்கும் சென்று சேர்வதாய் ஒரு ஸ்லோகம் சொல்வதுண்டு.
யேஷம் ந மாதா ந பிதா ந ப்ராதா
ந பந்து ந அந்ய கொத்ரீந:
தே சர்வே த்ருப்திமயந்து
என்பது ச்லோகம்.
நம் கதாநாயகன் அஷோகை கிண்டல் செய்த ஆட்டோ ட்ரைவர் ஏதேச்சையாய் இறந்து விட, விட்டேத்தியாய் பேசிய அஷோக்கின் கரி-நாக்கும் இதற்கு காரணம் என்று பேசத் துவங்குகின்றனர் அக்கம் பக்கத்தவர்.
முறையே, இங்கு தொடரை நிறுத்தி சோவின் விளக்கம் தொடர்ந்தது. வாக்கு பலிதம் ஏதேச்சையாக நடந்தால் அது co-incidence ஆக இருக்க வாய்ப்புண்டு. வாக்குபலிதம் அடைந்துவிட்டவனெல்லாம் மஹான் அல்ல என்றார். பேசும் பத்து சொல்லில் ஒரு சொல் பலிக்கும் வாய்ப்பு என்றைக்குமே உண்டல்லவா?!
என் பாட்டியும் அம்மாவும் அப்பாவும் சொன்ன "இட்சிணி தேவதைகளை" பற்றித் தான் இவரும் சொன்னார். Thoughts gets powerful as it gets dense என்பது நம் எல்லோருக்கும் தெரியும். அதனாலேயே நல்லதை நினைக்க வேண்டும். பேச வேண்டும். நடத்த வேண்டும். இதைத் தவிர எங்கள் வீடுகளில் எங்கள் பாட்டிகள் "இட்சிணி தேவதைகள்" பற்றி சொல்வார்கள்.
இட்சிணி தேவதைகள் அரூபமாய் எங்கும் நிறைந்திருப்பார்களாம். நாம் ஏதேனும் சுபமாகவோ அசுபமாகவோ பேசினால், சமயத்தில் அவர்கள் "ததாஸ்து" (அப்படியே ஆகட்டும்) என்று கூறிவிடுவார்கள். அதனால் நல்லதே பேச வேண்டும். நம்மை சுற்றி கேட்கும் சப்தங்களும் நல்லனவாய் (ஒழிந்து போ, சனியனே போன்ற வார்த்தைகள் நம் வாழ்விலும், ஏன் தொலைக்காட்சி போன்ற நவீன வஸ்துக்கள் மூலமாக நம் செவிக்கு விழுந்தால் கூட தவிர்க்கபப்ட வேண்டியது) இருக்கவெண்டும் என்று வலியிறுத்துகிறார்கள்.
இதையே சோவும் கூறி தொடரை முடித்தார்.
-
11th February 2009 12:32 PM
# ADS
Circuit advertisement
-
11th February 2009, 12:38 PM
#12
Senior Member
Veteran Hubber
My mom has read this book once and she was enthralled. Just today I came to know that there is a serial on Jaya TV about this. I'm planning to watch it. I'll surely participate in the discussions.
I have the thirst to know more about "Self Realization", "God's existence", "Power of Vedhas/Mantras" etc.
Hope I'll be able to get it in this serial.
யுவன் இசை ராஜா...
-
11th February 2009, 12:40 PM
#13
Senior Member
Platinum Hubber
-
11th February 2009, 12:44 PM
#14
Senior Member
Veteran Hubber
-
11th February 2009, 01:30 PM
#15
Senior Member
Seasoned Hubber
seems like they have induced lot of new characters for the serial.
niraive kaanum manam vendum
iraivaa nee adhai thara vendum
-
11th February 2009, 08:45 PM
#16
Senior Member
Veteran Hubber
-
12th February 2009, 05:50 PM
#17
Senior Member
Platinum Hubber
நேற்றைய பகுதியில் சொல்லிக்கொள்கிறார் போல் ஒன்றும் இல்லை.
நாதன் அவர்களின் club தேர்தல் சார்ந்த அலட்டல்களும் பேச்சுக்களும் தொடர்ந்தன. நளினி தன் பகுதியை மிகச் சிறப்பாக செய்கிறார். தொலைக்காட்சி நாடகத்தில் மட்டுமே நடிப்பவர்களுக்கும், திரை நட்சத்திரங்கள் தொலைக்காட்சித் தொடரில் நடிப்பதற்கும் நிறைய வித்யாசங்கள் காண முடிகிறது. kudos to naLini
சோ சொன்னதைப் போல் இன்றைய காலகட்டத்தில், தெருக்கு தெரு, தொகுதிக்கு தொகுதி, அடுக்குமாடி குடியிருப்பு உட்பட மகளிர் அணி, நல்வாழ்வு அமைப்பு என்று பல பெயர்களுடன் associations அதைச் சார்ந்த, குழப்பங்கள், ego, பொறாமை போட்டி என சொல்லி மாளாது.
ஒன்றையணா பெறாத இந்த அமைப்புக்களில் யார் தேர்தலில் ஜெயித்தால் என்ன! யார் தோற்றால் என்ன! பெரும்பாலான இடங்களில், தனிப்பட்ட விரோதங்கள் நிரம்ப வளர்ந்து வருவது கண்கூடு.
அப்புறம், இன்னொன்று:
சாஸ்த்ரிகள் மகனுக்கும் ஜட்ஜ் பெண்ணுக்கும் இடையே அழகான நட்பு கலந்த காதல் மலர்வது போல் தெரிகிறது.
-
13th February 2009, 03:03 AM
#18
Moderator
Diamond Hubber
Originally Posted by
Shakthiprabha
திங்கள் பிப்ப்ரவரி 9
மைல்கல்
மயில்கல்
-
13th February 2009, 03:06 AM
#19
Moderator
Diamond Hubber
Originally Posted by
Shakthiprabha
இத்தொடரில் வரும் வைதீக / ஆன்மீக விஷயங்கள் சிலவற்றை மட்டுமே இங்கு எல்லோருடனும் பகிர நினைக்கிறேன். ்.
தொடருங்கள்
{jaya TV இல்லை }
-
13th February 2009, 03:11 AM
#20
Moderator
Diamond Hubber
Originally Posted by
Shakthiprabha
இத்தொடரில் வரும் வைதீக / ஆன்மீக விஷயங்கள் சிலவற்றை மட்டுமே இங்கு எல்லோருடனும் பகிர நினைக்கிறேன். ்.
100% உண்மை
கெட்ட சொற்களின் சக்தி
முதலில் சொன்னவர்களைத் தாக்கிய பின்தான்
மற்றவர்களிடம் செல்கின்றது.
ஆகவே பாதிக்கப்படுபவர்கள் முதலில் பேசியவர்கள்தான்.
Bookmarks