-
11th February 2009, 12:32 PM
#11
Senior Member
Platinum Hubber
செவ்வாய் - Feb 10
________________
நம் மாங்காடு பாகவதரின் குடும்பச்சண்டைகள் நேற்றைய பாதி தொடரை ஆக்ரமித்தது. நமக்கேன் அவர்கள் வீட்டுக் கதையெல்லாம்!? பாகவதர் உணர்ச்சி வசப்பட்டு "நகரேஷு காஞ்சி" என்று காஞ்சி மாநகரின் பெருமையை சுட்டிக் காட்டினார்.
உடல் நலம் குன்றியும் ஜட்ஜ் வீட்டுத் தர்பணத்திற்கு செல்ல விழைந்த தன் தகப்பனை, மகன் தடுத்து தான் சென்று தர்பணம் நடத்திவிட்டு வருகிறான். வேதியல் படித்து வேலையில் அமர்ந்திருப்பவனுக்கு வேதமும் தெரியும் என அடக்கத்துடனும், மகிழ்ச்சியுடனும் தன்னை வெளிப்படுத்துகிறான்.
கலியுகத்தில் வேதம் தெரிந்தவர்கள் குறைந்து வருவது மலிந்து கிடக்க, இளம் வாலிபன் ஒருவனின் வேத அப்யாசம் கண்டு திருப்தியடைக்கிறார் நீதிபதி.
தர்பணம் பற்றிய பேச்சு அடிபடும் போது, முன்னோருக்கு மட்டுமின்றி அவர்கள் செய்யும் கார்யம், பாரபட்சமற்று ஜாதி மத வேறுபாடுகளற்று, தாய் தந்தை உறவினர் அற்ற மற்ற ஆன்மாக்களுக்கும் சென்று சேர்வதாய் ஒரு ஸ்லோகம் சொல்வதுண்டு.
யேஷம் ந மாதா ந பிதா ந ப்ராதா
ந பந்து ந அந்ய கொத்ரீந:
தே சர்வே த்ருப்திமயந்து
என்பது ச்லோகம்.
நம் கதாநாயகன் அஷோகை கிண்டல் செய்த ஆட்டோ ட்ரைவர் ஏதேச்சையாய் இறந்து விட, விட்டேத்தியாய் பேசிய அஷோக்கின் கரி-நாக்கும் இதற்கு காரணம் என்று பேசத் துவங்குகின்றனர் அக்கம் பக்கத்தவர்.
முறையே, இங்கு தொடரை நிறுத்தி சோவின் விளக்கம் தொடர்ந்தது. வாக்கு பலிதம் ஏதேச்சையாக நடந்தால் அது co-incidence ஆக இருக்க வாய்ப்புண்டு. வாக்குபலிதம் அடைந்துவிட்டவனெல்லாம் மஹான் அல்ல என்றார். பேசும் பத்து சொல்லில் ஒரு சொல் பலிக்கும் வாய்ப்பு என்றைக்குமே உண்டல்லவா?!
என் பாட்டியும் அம்மாவும் அப்பாவும் சொன்ன "இட்சிணி தேவதைகளை" பற்றித் தான் இவரும் சொன்னார். Thoughts gets powerful as it gets dense என்பது நம் எல்லோருக்கும் தெரியும். அதனாலேயே நல்லதை நினைக்க வேண்டும். பேச வேண்டும். நடத்த வேண்டும். இதைத் தவிர எங்கள் வீடுகளில் எங்கள் பாட்டிகள் "இட்சிணி தேவதைகள்" பற்றி சொல்வார்கள்.
இட்சிணி தேவதைகள் அரூபமாய் எங்கும் நிறைந்திருப்பார்களாம். நாம் ஏதேனும் சுபமாகவோ அசுபமாகவோ பேசினால், சமயத்தில் அவர்கள் "ததாஸ்து" (அப்படியே ஆகட்டும்) என்று கூறிவிடுவார்கள். அதனால் நல்லதே பேச வேண்டும். நம்மை சுற்றி கேட்கும் சப்தங்களும் நல்லனவாய் (ஒழிந்து போ, சனியனே போன்ற வார்த்தைகள் நம் வாழ்விலும், ஏன் தொலைக்காட்சி போன்ற நவீன வஸ்துக்கள் மூலமாக நம் செவிக்கு விழுந்தால் கூட தவிர்க்கபப்ட வேண்டியது) இருக்கவெண்டும் என்று வலியிறுத்துகிறார்கள்.
இதையே சோவும் கூறி தொடரை முடித்தார்.
-
11th February 2009 12:32 PM
# ADS
Circuit advertisement
Bookmarks