-
7th March 2008, 08:11 PM
#1
Senior Member
Veteran Hubber
'MAANAADA MAYILAADA' (Kalaingar TV) PART - 2
'மானாட மயிலாட' பாகம் - 2
2008 மார்ச் 9 முதல்....
ஞாயிறு தோறும் இரவு 8 மணிக்கு.
மறு ஒளிபரப்பு, தொடர்ந்து வரும் சனிக்கிழமைகளில், இரவு 10 மணிக்கு.
-
7th March 2008 08:11 PM
# ADS
Circuit advertisement
-
8th March 2008, 10:23 AM
#2
Hi all,
Heard Sujibala is participating agian.........
-
8th March 2008, 11:15 AM
#3
Senior Member
Veteran Hubber
'மானாட மயிலாட' முதல் பாகம் சென்ற வாரம் முடிவுற்றதைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகம் புதிய போட்டியாளர்களுடன் நாளை முதல் துவங்கவுள்ளது. நேரு உள் விளையாட்டரங்கில் நடந்த முதற்பாகத்தின் நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு விழாவின்போது, அடுத்து துவங்கவிருக்கும் இரண்டாம் பாகத்தின் போட்டியாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டதாக, நேரில் விழாவைப்பார்த்த சிலர் தெரிவித்திருந்தனர்.
ஆனால் அந்த அறிமுக நிகழ்ச்சி, நிறைவு விழாவின் தொலைக்காடசி ஒளிபரப்பில் காண்பிக்கப்படவில்லை. எனவே நாளை அறிமுகச்சுற்று ஒளிபரப்பப்படக்கூடும்.
முதல் பாகத்தில் பங்கேற்றவர்களுக்கான பரிசளிப்பில் நேயர்கள் பலருக்கு கருத்து வேறுபாடுகள் காணப்பட்டன. குறிப்பாக முதல் பரிசுக்கு தகுதியானவர்கள் ராகவ் ப்ரீத்தா ஜோடிதான் என்பது பலரின் கருத்தாகவும் முடிவாகவும் இருந்தது. அதிலும் இறுதிப்போட்டியை மட்டும் வைத்துப்ப்பார்க்கும்போது அவர்களே முதற்பரிசு பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டு, அது வேறு விதமாக அமைந்ததால், நேயர்களின் ஆதங்கமும், கோபமும் இறுதிப்போட்டி முடிவு அறிவிப்பில் சிலரின் தலையீடுகள் இருந்திருக்குமோ என்ற ஐயத்தை ஏற்படுத்தியதுடன், பொதுஜன வாக்களிப்பு என்பது இதுபோன்ற போட்டிகளில் சரியான தீர்வைத்தராது என்கிற ரீதியில், முதல் பாகத்துக்கான த்ரெட்டின் இறுதிப்பகுதியில் விவாதிக்கப்பட்டன. அதே சமயம், வெற்றி பெற்ற சதீஷ் - ஜெயஷ்ரீ ஜோடிக்கு ஆதரவாகவும் சிலர் கருத்து தெரிவித்திருந்தனர். (அதோடு, முடிவு எப்படியிருந்தபோதிலும், போட்டியின் நிறைவு விழாவில் ராகவ் ப்ரீத்தா ஜோடியினர் சரியான முறையில் கௌரவிக்கப்படவில்லை என்பது உண்மை. அவர்களுக்கான பரிசளிப்பும் சரியாக காண்பிக்கப்படவில்லை).
எது எப்படியாயினும், முதல் பாகம் முடிந்துவிட்டது. இனி 'மானாட மயிலாட' இரண்டாம் பாகத்தைக் காண தயாராவோம். நடுவர்கள், போட்டியாளர்கள், தொகுப்பாளர்கள் யாவரும் யார் யார் என்பது நாளை தெரியும்.
பார்ப்போம்....
-
10th March 2008, 12:00 PM
#4
Senior Member
Veteran Hubber
அறிமுகச்சுற்று... (09.03.2008)
அறிமுகச்சுற்று என்றதும், ஏதோ புதிய போட்டியாளர்களை மேடையில் ஆடவைத்து அறிமுகம் செய்வார்களோ என்று எண்ணியிருந்தோம். அப்படியில்லை. ஒரு கலகலப்பான கலந்துரையாடல் போல அறிமுகம் செய்தனர். பழைய போட்டியாளர்களில் சத்தீஷ், ஜெயஷ்ரீ, ஜார்ஜ், ராஜ்காந்த் ஆகியோரும் வந்திருந்தனர். கூடவே காம்பியர் கீர்த்தி. (சஞ்சீவ் மிஸ்ஸிங். அடுத்த ரவுண்ட் வருவாரா அல்லது அவரையும் மாற்றி விட்டார்களா தெரியவில்லை). பழைய ஜோடிகளில் ஜோடியாக வந்திருந்தவர்கள் சதீஷ் ஜெயஷ்ரீ மட்டுமே. இறுதிப்போட்டி பங்கேற்பாளர்களில் ராஜ்காந்த், ஜார்ஜ் தனியாக வந்திருந்தனர். ராகவ் ப்ரீத்தா வரவில்லை. (காரணம்... உள்ளங்கை நெல்லிக்கனி).
'மானாட மயிலாட' நடன நிகழ்ச்சியின் இரண்டாம் பாகத்தில் பங்கேற்கும் போட்டியாளர்களில் நிறைய தெரிந்த முகங்கள். நாம் நிறைய சீரியல்களிலும், மற்றும் பல்வேறு நிகழ்ச்சியிலும் பார்த்து பழகிப்போன முகங்கள். அவர்கள் இப்போது ஆடப்போகிறார்கள் என்றதும் நம் மனதில் கூடுதல் எதிர்பார்ப்பு.
1) ஏற்கெனவே சன் டிவியின் 'சூப்பர் 10' நிகழ்ச்சியில் கலக்கோ கலக்கு என்று கலக்கிய கணேஷ் மற்றும் ஆர்த்தி. இவர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மட்டுமல்லாது திரைப்படங்களிலும் நடித்து வருபவர்கள். அதிலும் ஆர்த்தி நகைச்சுவை நடிகையா வேகமாக வளர்ந்து வருபவர். கணேஷ், உலகத்திலேயே அதிகப்படங்களில் நடித்த நடிகர் என்ற பெருமைபெற்ற மறைந்த வி.கே.ராமசாமியின் மகன்.
2) கோகுல்நாத் (இவர் ஜோடி யாருன்னு கவனிக்கலையே). இவர் விஜய் டிவியின் 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியின் எலெக்ட்ரானிக் ஸ்பெஷலிஸ்ட். ஆம் பல்வேறு வித்தியாசமான சவுண்ட்களோடு நிகழ்ச்சி வழங்குபவர்.
3) பாலாஜி மற்றும் பிரியதர்ஷினி. பிரியதர்ஷிணி பற்றி எல்லோருக்கும் தெரியும். சன் டிவியின் காம்பியராக பணியாற்றியவர். கோலங்கள் சீரியலில் நளினியின் மகளாக நடித்து வருபவர். இடையிடையே வானிலைச்செய்திகளில் தலைகாட்டுவார்.
4) சக்தி சரவணன் - யோகினி.
5) ஆகாஷ் - ஸ்ருதி
6) ரஞ்சித் - ஐஸ்வர்யா
7) கார்த்திக் - நீபா
8) சுரேஷ்வர் - மது. இவர்களில் சுரேஷ்வரை நிறைய சீரியலில் பார்த்திருக்கிறோம். அண்ணாமலையில் தீபாவெங்கட் ஜோடியாகவும், மலர்களில் சினேகா நம்பியார் ஜோடியாகவும் நடித்தவர்.
9) மதன் - பிரியங்கா. இருவரும் சீரியல்கள் மூலம் நன்கு அறிமுகமானவர்கள். கோலங்கள் சீரியலில் காதில் கடுக்கன் போட்டுகொண்டு, தீபாவெங்கட்டை மிரட்டி மலையில் இருந்து விழுந்து செத்துப்போகும் 'மேடி'யை மரந்திருக்க முடியாது. இவரது ஜோடியாய வரும் பிரியங்கா அண்ணாமலை, அரசி உள்பட ஏராளமான சீரியல்களிலும், சில திரைப்படங்களிலும் நடித்திருப்பவர். அரசியில் கங்காவின் மனைவியாக (?) வருபவர்.
10) சாய்பிரசாத் - ஸ்வேதா (ஆமாங்க, முதல் பாகத்தில் நிதிஷுடன் ஆடிய அதே ஸ்வேதாதான்). சாய்பிரசாத் என்றாலே அண்ணாமலை வில்லன்தான் நினைவுக்கு வரும். அதுக்கு நேர்மாறாக, செல்வியில் ஜி.ஜே.யின் தம்பியாக சாந்தசொரூபியாக வந்து பாதியிலேயே காணாமல் போனவர்.
11) லோகேஷ் - சுசிபாலா (பழைய சுசிபாலாதான்)
நிகழ்ச்சியின் கடைசியில் வந்த கலா மாஸ்டர், பழைய பெண் போட்டியாளர்களில் யாராவது இரண்டு பேருக்கு மீண்டும் வாய்ப்பளிப்ப்தாகவும், அதில் முதல் பரிசு பெற்றிருந்த ஜெயஷ்ரீ தவிர, மற்ற ஏழுபேரின் பெயர்களை சீட்டுகுலுக்கிப்போட்டு எடுப்பதாகவும் சொல்லி சீட்டு குலுக்கிப் போட்டதில் தேர்வானவர்கள்தான் ஸ்வேதாவும் சுசிபாலாவும். குலுக்கிப்போட்ட சீட்டுகளில் ப்ரீத்தாவின் பெயர் இருந்ததா..? தெரியாது. இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ஒருவேளை அவர் பெயர் வந்துவிட்டால், அவர் ராகவ் தவிர்த்து வேறு ஒருவருடன் ஆட மாட்டார் என்பது ஒரு காரணம். முந்தைய போட்டியின்போது ஏற்பட்ட மனக்காயம் அவ்வளவு சீக்கிரம் மறந்து விட வாய்ப்பில்லை என்பது மற்றொரு காரணம்.
(நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருந்த என் கணவர் அடித்த கமெண்ட்: "அது சரி சாரூ..., ஸ்வேதா, ஆர்த்தி ஆகியோர் ஆட இருப்பதால் நல்ல இரும்பு மேடையாக அல்லவா அமைக்க வேண்டும்").
பழைய போட்டியாளர்களான ஜார்ஜ், சதீஷ், ராஜ்காந்த ஆகியோர் ரொம்ப ரிலாக்ஸ்டாக, புதியவர்களைப் பார்த்து நிறைய ஜாலி கமெண்ட் அடித்துக் கொண்டிருந்தனர்.
'நாங்க நன்றாக ஆடி பேரைக்காப்பாத்துவோம்' என்று ஆர்த்தி சொல்ல, அதுக்கு சதீஷ், 'பேரை காப்பாத்துவது இருக்கட்டும். ஏ.வி.எம்.ஃப்ளோரைக் காப்பாத்துங்க'. (ஆர்த்தியின் உடல்வாகுதான் நமக்கு தெரியுமே).
அதுபோல இன்னொரு கட்டத்தில் ஜார்ஜ், 'இந்தமுறை ஸ்பெஷல் ஐட்டமாக மழை டான்ஸ் கிடையாதாம். அதுக்கு பதிலாக போட்டியாளர்கள் எல்லோரும் தீ மிதிக்க வேண்டுமாம்' என்று கமெண்ட் அடிக்க ஒரே கலாட்டா.
புதிய போட்டியாளர்கள், பழையவர்களின் நிகழ்ச்சிகளில் எந்தெந்த ஜோடிகளின் எந்தெந்த நிகழ்ச்சிகள் பிடித்தன என்று சொல்லப்போக அவை மீண்டும் மலரும் நினவுகளாக ஒளிபரப்பப் பட்டன. அருமையாக இருந்ததுடன், அடேயப்பா என்னென்ன மாதிரி சுற்றுக்களெல்லாம் நடந்துள்ளன என்று மலைக்க வைத்தன.
அடுத்த வாரம் பார்ப்போம்.....
-
10th March 2008, 04:01 PM
#5
I missed the show , but after reading Sarada mam's Post i have got 75% idea abt the show and participants....My frend told to me directly abt wht had hapnd streday in the show...But she missed many things..But Sarada mam didnt leave anything....I think only the ads she has left...Lolz..........
Thanks for ur update.................When wil it be retelecasted???
-
10th March 2008, 05:22 PM
#6
Senior Member
Veteran Hubber
Originally Posted by
priya_2008
When wil it be retelecasted???
manada mayilada will be retelecasted in saturdays at 9.30 Indian time, after Deva's "Gana kuyil paatu" programme.
-
10th March 2008, 06:04 PM
#7
Thanks a lot Mr.Karthik......
But iam sure iam gonna to miss Raaghav in this show...............
-
11th March 2008, 06:22 PM
#8
Moderator
Diamond Hubber
thank you Saradha
please keep post your comments
we like
-
17th March 2008, 08:48 AM
#9
Senior Member
Diamond Hubber
-
17th March 2008, 12:27 PM
#10
Senior Member
Veteran Hubber
'மானாட மயிலாட' பாகம் - 2
உண்மையான அறிமுகச்சுற்று (16.03.2008)
அதென்ன 'உண்மையான அறிமுகச்சுற்று?. ஆம், போன வாரம் ஜோடிகள் யாரும் நடனம் ஆடாமல் ஜஸ்ட் ஒரு அறிமுகத்தோடு முடித்து விட்டனர். இந்த வாரம்தான் அதற்கான புதிய மேடையில், நடுவர்கள் முன்னிலையில் ஒழுங்கான அறிமுக நடனம் நடந்தது. போன வாரம் காம்பியர் சஞ்சீவ் இல்லையே, கீர்த்தி மட்டும்தானே வந்தார், அப்படீன்னா சஞ்சீவையும் தூக்கிட்டாங்களோ என்று சின்ன வருத்தம் இருந்தது. இபோ அது போய் விட்டது. ஆம், வழக்கமான கலக்கல் கமெண்ட்ஸ்களோடு என் தம்பி சஞ்சீவ் வந்துட்டான். கூடவே கீர்த்தியும்.
நடுவர்களாக, (வழக்கம்போல) இயக்குனர் கலா மாஸ்டருடன் குஷ்பூ மற்றும் ரம்பா. (இனிமேல் மார்க்கெட் போன நடிகைகளை இதுபோன்ற ஷோக்களில் நடுவர்களாக பார்க்கலாம் போலும்). கலா, தன் அபிமானிகளான சதீஷ், ஜெயஷ்ரீ, ஜார்ஜ், ராஜ்காந்த், ராஜ்குமார் இவர்களோடு சேர்ந்து எண்ட்ரி கொடுத்தார். இறுதிப்போட்டி ஜோடிகளில் பாவனா மிஸ்ஸிங். (சுசிபாலா ஏற்கெனவே போட்டியில் இருக்கிறார்).
சென்ற முறை, எட்டு ஜோடிகள் களத்தில் இருந்தனர். இம்முறை பதினோரு ஜோடிகள். அறிமுகச்சுற்றே அமர்க்களமாக இருந்தது. ஒரு சில ஜோடிகள் தவிர, மற்றவர்கள் அனைவரும் ஏதோ இறுதிச்சுற்று போல, சிரத்தையாக ஆடினர். முதல் சுற்று என்பதால் 'நோ ஸ்கோர்', 'நோ எலிமினேஷன்'.
முதல் ஜோடியாக களமிறங்கியவர்கள் 'ரஞ்சித் - ஐஸ்வர்யா'. ரஞ்சித் மேலேயிருந்து கயிறு வழியாக இறங்கி எண்ட்ரி கொடுத்தார். 'முதல் கனவே முதல் கனவே மறுபடி ஏன் வந்தாய்' பாடலுக்கும், 'மாரோ மாரோ.. கோலி மாரோ' பாடலுக்கும் ஆடினர். நல்ல ஸ்டெமினா.
இரண்டாவது ஜோடியாக வந்தவர்கள் 'ஷக்தி - யோகினி'. ஏனோதானோ என்று ஆடினர். ஆட்டத்தில் சுறுசுறுப்பில்லை. அதிலும் யோகினி ஒரே இடத்தில் நின்று ஆடியதுடன், சின்ன சின்ன மூவ்மெண்ட்டுகள் மட்டுமே கொடுத்தார். 'முதல் முதல் எனை அழைத்ததேன்' பாடலுக்கும், அதையடுத்து பாடல் இல்லாமல் வெறும் மியூஸிக்குக்கும், இறுதியாக 'எங்கே என் புன்னகை' பாடலுக்கும் ஆடினர்.
மூன்றவதாக மேடையேறிய 'சுரேஷ்வர் - மது' ஜோடியினர் 'மொச்சைக்கொட்டை பல்லழகி' என்ற ஒரே ஒரு ஃபோக் ஸாங் எடுத்துக்கொண்டு ஆடினர். ஆடினர் என்பதை விட அசத்தினர் என்பது பொருத்தம். அடேயப்பா சுரேஷ்வரிடம் இவ்வளவு நடனத்திறமையா !!. ஆட்டமும் சூப்பர், அதற்கான முகபாவங்களும் அருமை. இவர்களின் ஆட்டத்தைப்பார்த்தபோது, இது அறிமுகச்சுற்று என்றே தோன்றவில்லை. இது நிச்சயம் மற்றவர்களுக்கு சவால் ஜோடிதான். மற்றவர்கள் போல இல்லாமல் 'சிங்கம் ஒரு பாடலோடுதான் வரும்' என்று நிரூபித்தனர்
நான்காவது ஜோடி 'கோகுல்நாத் - கவி'. கோகுல் வித்தியாசமாக, ஸ்டேஜிலேயே மோட்டார் சைக்கிளில் எண்ட்ரி கொடுத்தார். 'கால்கிலோ காதல் என்ன விலை' பாடலுக்கும், 'ஒரு தேவலோக ராணி' பாடலுக்கும் ஆடினர். கவியிடம் நல்ல எனர்ஜி.
ஐந்தாவ்து ஜோடி, 'ஆகாஷ் - ஸ்ருதி' (ஸ்ருதி நினைவிருக்கிறதா?. செல்வியில், இன்ஸ்பெக்டரின் ஊனமுற்ற மகளாக, சட்டென்று மின்னல் போல வந்து போனவர்). 'ஐயா பேரு ஆர்யா', 'ஆர் யூ ரெடி', 'சூடான தீயே' பாடல்களுக்கு ஆடினர். இருவரிடமும் நல்ல ஸ்டைலான மூவ்மெண்ட்டுகள்.
அடுத்து 'சாய்பிசாந்த் - ஸ்வேதா' ஜோடி. முதலில் வெறும் மியூசிக்குக்கு ஆடியவர்கள், அடுத்து 'கண்ணுக்குள் டிக்.. டிக்..' பாடலுக்கு ஆடினர். இருவருக்கும் இடையில்... அது என்ன பயாலஜியா, ஃபிஸிக்ஸா, எகனாமிக்ஸா... என்னவோ சொல்லுவாங்களே... ஆங், கெமிஸ்ட்ரி, அது நன்றாக இருந்தது. (அழகாக தமிழில் 'அன்னியோன்யம்' என்று சொல்லி விட்டுப்போகலாமே). ஸ்வேதா, எந்த ஜாடிக்கும் ஏற்ற மூடியாவார் போலும். இதிலும் அப்படித்தான். சாய் நல்ல எக்ஸ்பிரஷன்ஸ் கொடுத்தார்.
Bookmarks