-
14th June 2016, 06:00 PM
#551
Moderator
Diamond Hubber
ஐதராபாத்தில் செட்டிலானர் நளினி.
திரைப்படங்களில் இருந்து ஒதுங்கி இருந்த நளினி. சின்னத்திரை சீரியல்கள் சீசன் தொடங்கியதும் அதற்கு தாவினார். வில்லியாக அறிமுகமான அவர் அதன் பிறகு தன்னை காமெடி நடிகையாக மாற்றிக் கொண்டார். அவர் நடித்த ஆல் இன் ஆல் அலமேலு, சின்ன பாப்பா பெரிய பாப்பா ,மடிப்பாக்கம் மாதவன் போன்ற சீரியல்கள் மிகவும் பிரபலம்.
நளினி தற்போது தெலுங்கு சீரியல்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இயற்கையாவே தெலுங்கு பெண்ணான நளினியின் தெலுங்கு முகத் தோற்றமும், அவரது உருட்டல் மிரட்டல் நடிப்பும் தெலுங்கு பெண்களை மிகவும் கவர்ந்துவிட்டது. அம்மன்னா கோடலா என்ற தொடரில் கஞ்சத்தனமான மாமியாராக கலக்கி வருகிறார். 450 எபிசோட்களை தாண்டி விட்டது இந்த சீரியல். சிறந்த சின்னத்திரை காமெடி நடிகைக்கான ஆந்திர அரசின் விருதையும் கடந்த ஆண்டு வாங்கிவிட்டார். இந்த சீரியலின் வெற்றியை தொடர்ந்து நளினிக்கு தெலுங்கில் அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
தனது மகள்களுக்கு திருமணம் செய்து கொடுத்து விட்ட நளினி. தற்போது தெலுங்கு சீரியல்களில் பிசியாகிவிட்டதால் ஐதராபாத்திலேயே செட்டிலாகிவிட்டார். மாத்திற்கு மூன்று அல்லது நான்கு நட்கள் மட்டுமே சென்னை வருகிறார். சின்னத்திரை நடிகர் சங்கதிலிலிருந்தும் ஒதுங்கி இருக்கிறார்.
நன்றி: தினமலர்
-
14th June 2016 06:00 PM
# ADS
Circuit advertisement
-
14th June 2016, 06:02 PM
#552
Moderator
Diamond Hubber
கணவருடன் இணைந்து சினிமாவில் நடிக்க நிஷா திட்டம்
சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமான நிஷா கிருஷ்ணன் அதன் பிறகு சீரியல் நடிகையானார். தற்போது ஆண்டள் அழகர் தொடரின் இரண்டாம் பாகமான பகல்நிலவு தொடரில் நடித்து வருகிறார். இதற் கிடையில் அவர் சினிமா நடிகர் கணேஷ் வெங்கட்ராமை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நிஷா சின்னத்திரை தொடரில் நடித்தாலும் அவ்வப்போது சினிமாவிலும் நடித்து வருகிறார். விக்ரம் பிரபு நடித்த அரிமா நம்பி படத்தில் நிஷாவும், கணேஷ் வெங்கட்ராமும் நடித்துள்ளனர். ஆனால் ஜோடியாக அல்ல வெவ்வேறு கேரக்டர்களில்.
திருமணத்திற்கு பிறகு இருவரும் ஜோடியாக சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்கள். நிஷாவும், கணேஷ் வெங்கட்ராமும் இணைந்து நடிக்கும் வகையில் சில சீரியல் வாய்ப்புகள் வந்தபோதும் தற்போது சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் கணேஷ் வெங்கட்ராம் இதற்கு சம்மதிக்கவில்லை. ஆனால் இருவரும் இணைந்து சினிமாவில் நடிக்க தயராக இருக்கிறார்கள். இதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. புதுமண தம்பதிகளுக்கு இடையேயான் ஊடலை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைக்கதையாம். இயக்குனரும், கதையும் தயாராக இருக்கிறாம். தயாரிப்பாளர் தேடிக் கொண்டிருக்கிறார்கள். விரைவில் முறையான அறிவிப்பு வரும் என்கிறார்கள்.
நன்றி: தினமலர்
-
14th June 2016, 06:04 PM
#553
Moderator
Diamond Hubber
அபூர்வ ராகங்கள் பிரியங்காவை கவர்ந்த டப்பிங் ஆர்ட்டிஸ்ட் பாத்திமா!
பைரவி, சபீதா என்கிற சபாபதி, என் இனிய தோழியே என பல தொடர்களில் நடித்தவர் பிரியங்கா. தற்போது அபூர்வ ராகங்கள், வம்சம் தொடர்களில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார். எனக்கு நானே டப்பிங் பேச வேண்டும் என்றுதான் முதலில் ஆசைப்பட்டேன். ஆனால் அபூர்வ ராகங்களில் எனக்கு டப்பிங் கொடுக்கும் பாத்திமாவின் குரலே நன்றாக இருப்பதால் இப்போது எனக்கு டப்பிங் பேச வேண்டும் என்ற ஆசையே இல்லை என்கிறார் பிரியங்கா.
இதுபற்றி அவர் கூறும்போது, அபூர்வ ராகங்கள் தொடரில் அனிதா என்ற பேய் கேரக்டரில் தற்போது நடித்து வருகிறேன். அதேபோல் வம்சம் தொடரில் ஜோதிகா என்ற ரோலில் நடிக்கிறேன். இந்த இரண்டு சீரியல்களிலும் தற்போது எனது ட்ரேக் தொடர்ந்து ஒளிபரப்பாகிக்கொண்டிருப்பதால் ரொம்ப பிசியாக இருக்கிறேன்.
மேலும், நான் நடிக்கும் வேடங்களில் எனக்கு நானே டப்பிங் பேச வேண்டும் என்கிற ஆசையும் எனக்கு உண்டு. ஆனால் சீரியல்களில் பிசியாக நடித்துக்கொண்டிருப்பதால் அது சாத்தியமில்லாமல் இருக்கிறது. என்றாலும், அபூர்வ ராகங் கள் தொடரில் எனக்கு டப்பிங் பேசும் பாத்திமாவின் குரல் ரொம்ப அருமையாக உள்ளது. எனக்கும் நன்றாக பொருந்தியிருக்கிறது. அவரது குரல் எனக்கு நன் றாக செட்டாகி விட்டதால், அடுத்தபடியான எனக்கு நானே டப்பிங் பேச வேண்டும் என்ற ஆசையே இல்லாமல் போய் விட்டது. தொடர்ந்து பாத்திமாவே பேச வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்கிறார் பிரியங்கா.
நன்றி: தினமலர்
-
28th June 2016, 08:50 PM
#554
Moderator
Diamond Hubber
சின்னத்திரையில் கலக்கும் சன்னி லியோன்
ஹாலிவுட் போர்னோகிராபிக் ஸ்டாரான சன்னி லியோன் எம்.டிவி நடத்திய ;ஸ்பிலிட்ஸ் வில்லா; நிகழ்ச்சியின் மூலமாக இந்தியா வந்தார். அதன் பிறகு பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். எந்த நிகழ்ச்சி மூலம் இந்தியாவுக்குள் வந்தாரோ, தற்போது அதே நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
ஸ்பிலிட்ஸ் வில்லா; நிகழ்ச்சியின் 9வது சீசன் இப்போது பரபரப்புடன் ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்தியாவில் இளைஞர்கள் அதிகம் பார்க்கும் நிகழ்ச்சியாக இது மாறியிருக்கிறது. அதற்கு சன்னி லியோனின் ஆடைகளும், கமெண்டுகளும் தான் என்கிறார்கள். அதோடு சக தொகுப்பாளரான ரான்விஜய் அழகை அவர் புகழ்வதும், அவரை கலாய்ப்பதும், நிகழ்ச்சியில் தவறு செய்கிறவர்களை கெட்ட வார்த்தை சொல்லி திட்டுவதுமாக நிகழ்ச்சியை கலகலப்பாக்கி விடுகிறார், நிகழ்சியில் ஏ ஜோக்குகளுக்கு பஞ்சம் இல்லை. தாராள கவர்ச்சி இருக்கு, கொஞ்சம் செண்டிமெண்டும் இருக்கு. இப்படி பலவித அம்சங்களோடு நிகழ்ச்சி களை கட்டி வருகிறது. இதனால் சன்னி லியோனின் சம்பளமும் எகிறி இருக்கிறது. 10 வது சீசனையும் சன்னியே தொகுத்து வழங்குவார் என்பது சேனல் வட்டாரத் தகவல்.
நன்றி: தினமலர்
-
10th July 2016, 04:55 AM
#555
Moderator
Diamond Hubber
டிவி ஷோக்களில் ஆர்வம் காட்டும் மதுமிலா!
விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ் சீரியலில் லட்சுமி என்ற கேரக்டரில் நடித்த வர் மதுமிலா. அதைத்தொடர்ந்து தாயுமானவன், அக்னிப்பார்வை போன்ற தொடர்களில் நடித்த அவர் தற்போது விஜய் டிவியின் அச்சம் தவிர் நிகழ்ச்சியிலும் பங்கேற்று வருகிறார். அதேபோல், பூஜை, ரோமியோ ஜூலியட் , மாப்ள சிங்கம் படங்களில் சிறிய வேடங்களில் நடித்தவர் தற்போது சுந்தர மோகனா என்றொரு புதிய படத்தில் கதாநாயகியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், தொடர்ந்து சினிமாவில் அதிகப்படியான படங்களில் நடிக்க ஆசைப்படும் மதுமிலா, அடுத்தடுத்து நல்ல கதைகளை எதிர்பார்க்கிறாராம். அதன்காரணமாக இந்த நேரத்தில் சீரியல்களில் கமிட்டானால் படங்களுக்கு கால்சீட்கொடுப்பதில் பிரச்சினை ஏற்படும் என்பதால், மெகா சீரியல்களை தவிர்த்து வரும் மதுமிலா, அச்சம் தவிர் மாதிரியான டிவி ஷோக்களில் பங்கேற்பதில் அதிக ஆர்வமாக இருக்கிறாராம்.
Last edited by aanaa; 10th July 2016 at 04:59 AM.
"அன்பே சிவம்.”
-
29th July 2016, 10:46 PM
#556
Moderator
Diamond Hubber
தெலுங்கு சேனலில் நிகழ்ச்சி நடத்தும் ரோஜா
நடிகை ரோஜா சினிமாவில் மார்க்கெட் குறைந்ததும், அப்படியே ஆந்திர அரசியலுக்குச் சென்று விட்டார். இப்போதும் ஆந்திராவில் பரபரப்பான அரசியல்வாதி. ஆனாலும் இடையிடையே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் நடத்துவார். தமிழில் ;லக்கா கிக்கா; என்ற கேம் ஷோ நிகழ்ச்சியை நடத்தினார். தற்போது ஜீன்ஸ் என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். தற்போது தெலுங்கில் ஒளிபரப்பாகும் ஜெமினி டி.வியில் ;ரக்சா பந்தா; என்ற நிகழ்ச்சியை நடத்துகிறார்.
இது லக்கா கிக்கா போன்ற கேம் ஷோ அல்ல. குடும்ப பிரச்னைகளில் எது தவறு எது சரி என்று ஆராயும் நிகழ்ச்சி. கிட்டத்தட்ட ;சொல்வதெல்லாம் உண்மை; நிகழ்ச்சி போன்றது. நாளை முதல் ஒளிபரப்பாகிறது. தெலுங்கை தாய்மொழியாக கொண்ட ரோஜாவின் சரளமான தெலுங்கு உச்சரிப்பு அங்கு பேமஸ் என்பதால் நிகழ்ச்சியும் களைகட்டத் தொடங்கியிருக்கிறது. ஒரு தமிழ் நிகழ்ச்சி நடத்தவும் பேச்சவார்த்தை நடந்து வருகிறது.
நன்றி: தினமலர்
-
29th July 2016, 10:53 PM
#557
Moderator
Diamond Hubber
நடன பள்ளியில் கவனம் செலுத்தும் சுதா சந்திரன்
விபத்தில் ஒரு காலை இழந்திருந்தாலும் தன்னம்பிக்கையோடும், தளராக உழைப்போடும் வாழ்க்கையில் வெற்றி பெற்றவர் சுதா சந்திரன். மயூரி என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்த அவர் அதில் தன் சொந்த வாழ்க்கை கதையிலேயே நடித்தார். பின்னர் இந்தி சீரியல்களில் பிசியான நடிகையானார். ;தெய்வம் தந்த வீடு; சீரியல் முலம் தமிழ் சீரியலுக்கும் வந்தார்.
லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தி வந்த ;சொல்வதெல்லாம் உண்மை; நிகழ்ச்சியை சில காலம் நடத்தி வந்தார். சேனல் நிர்வாகத்துக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படவே நிகழ்ச்சியிலிருந்து விலகினார். சுதா சந்திரன் கையில் இப்போது சீரியல்கள் எதுவும் இல்லை என்றாலும் அவர் இந்தியில் நடித்த பிரபலமான தொடரான ;நாகினி; தமிழில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த இடைவெளியில் தான் நடத்தி வரும் நடன பள்ளிகளில் கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறார். ;சுதாசந்திரன் டான்ஸ் அகாடமி; என்ற பெயரில் மும்பை அந்தேரி, நாக்பூர் மற்றும் சென்னை போரூரில் இந்த நடன பள்ளிகள் இயங்குகிறது. இங்கு பரதநாட்டியம் முதல் மேற்கத்திய நடனம் வரை கற்றுத் தரப்படுகிறது. 5வயது முதல் 50 வரையிலானவர்கள் நடனம் கற்று வருகிறார்கள். போரூர் தவிர்த்து சென்னையில் மற்றுமொரு இடத்தில் நடன பள்ளி துவங்கும் திட்டத்தில் இருக்கிறார். தற்போத நடன பள்ளிகளை மேம்படுத்த மும்பைக்கும், சென்னைக்கும் பறந்து கொண்டிருக்கிறார்.
நன்றி: தினமலர்
-
18th August 2016, 12:49 AM
#558
Moderator
Diamond Hubber
ஹீரோவாக நடிக்க பாடியை ஒர்க்அவுட் பண்ணும் தாடி பாலாஜி!
வடிவேலு, விவேக் போன்ற காமெடியன்களுடன் இணைந்து பல படங்களில் நடித்தவர் தாடி பாலாஜி. அதோடு சின்னத்திரையிலும் காமெடி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வரும் அவர், சில மாதங்களுக்கு முன்பு தற்கொலை வதந்தியிலும் சிக்கினார். பின்னர், வாயு தொல்லை காரணமாக மருத்துவமனைக்கு சென்ற என்னை தற்கொலை செய்ய முயற்சித்ததாக செய்தி பரப்பி விட்டார்களே என்று பீல் பண்ணி செய்தி வெளியிட்டார்.
தற்போது அவர் வடிவேலு நடித்து வரும் கத்திச்சண்டை படத்தில் அவருடன் இணைந்து நடித்துள்ளார். தன்னுடன் நீண்டகாலமாக நடித்த பல காமெடியன்கள் இருந்தும், தாடி பாலாஜிதான் இந்த படத்தில் தன்னுடன் நடிப்பதற்கு சரியான நடிகராக இருப்பார் என்று அவரை நடிக்க வைத்திருக்கிறார் வடிவேலு. கூடவே ஆர்த்தியும் இவர்களுடன் நடித்திருக்கிறார். இப்படி வடிவேலுவுடன் காமெடி கூட்டணி வைத்துள்ள தாடி பாலாஜி, தற்போது கோலிவுட்டில் பேசப்படும் காமெடியனாகியிருப்பதோடு, ஒரு படத்தில் ஹீரோவாகவும் நடிக்கப்போகிறாராம். அதனால் தினமும் காலை- மாலை வேளைகளில் ஜிம்முக்கு சென்று பாடியை ஒர்க்அவுட் பண்ணி வருகிறாராம் தாடி பாலாஜி.
நன்றி: தினமலர்
-
18th August 2016, 12:52 AM
#559
Moderator
Diamond Hubber
டப்பிங் சீரியலை எதிர்த்து தொடர்ந்து போராடணும்: ராதிகா பேச்சு
தமிழ் சேனல்களில் இந்தி டப்பிங் சீரியல்கள் அதிக அளவில் ஒளிபரப்பப்படுகிறது. இதனால் தமிழ் சீரியல்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. தொடர்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களின் வேலை வாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் தமிழ் சேனல்கள் டப்பிங் சீரியல்களை ஒளிபரப்புவதை நிறுத்தக்கோரி சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு சார்பில் நேற்று சென்னை வள்ளுவர்கோட்டம் அருகில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் போராட்டத்தை தொடங்கி வைத்தார். பெப்சி தலைவர் சிவா. சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் சுஜாதா விஜயகுமார், செயலாளர் குஷ்பு உள்ளபட பலர் கலந்து கொண்டனர். உண்ணாவிரதத்தில் நடிகை ராதிகா பேசியதாவது:
டப்பிங் சீரியல்களின் வளர்ச்சி ஒரு முக்கியமான விஷயமாகும்.. இதனை மேலும் வளரவிடக்கூடாது.இவ்வளவு பேர் உள்ளோம் நிச்சயம் இதை தடுக்க குரல் கொடுப்போம். நீங்கள் இதை இதோடு நிறுத்த வேண்டாம். மிகப்பெரிய அமைப்புகளான தென்னிந்திய நடிகர் சங்கம், பெப்சி போன்ற அமைப்புகள் உங்களோடு உள்ளது. நீங்கள் அனைவரும் இதை முதல் படியாக எடுத்துகொண்டு இன்னும் ஒவ்வொரு படியாக சென்று நீங்கள் போராட வேண்டும்.
கர்நாடகாவில் ஒரு டப்பிங் படமோ அல்லது தொலைக்காட்சி தொடரோ வெளியாவது கடினம். அந்த கட்டுப்பாடு நம்மிடம் இல்லை. வந்தாரை வாழவைக்கும் தமிழகம் தான், அதற்காக வீடு, சொத்து என எல்லாவற்றையும் எழுதி கொடுக்க சொன்னால் அது சரிபட்டு வராது. இது முதல் படி. முதலமைச்சர் கண்டிப்பாக இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு. உங்களின் சார்பாக இரண்டு முறை நான் அவரிடம் இதை பற்றி பேசியுள்ளேன். கண்டிப்பாக அவர் நடவடிக்கை எடுப்பார் என நம்புவோம். நாங்கள் இதை பற்றி பல முறை தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு கூறிவிட்டோம்.
மாற்று மொழி தொடர்களை எல்லா தொலைக்காட்சியிலும் ப்ரைம் டயமில் ஒளிபரப்புகிறார்கள். தொடரில் நடிக்கும் திறமை வாய்ந்த நடிகர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் தமிழில் உருவாகும் தொடர்களை ப்ரைம் டைமில்ஒளிபரப்ப வேண்டும் . இவ்வாறு ராதிகா பேசினார். மாலையில் உண்ணாவிரத்தை நடிகர் நட்ராஜ் முடித்து வைத்தார்.
நன்றி: தினமலர்
-
18th August 2016, 12:56 AM
#560
Moderator
Diamond Hubber
மலையாள சேனல்களில் கவனம் செலுத்தும் தேவயானி
காதலுக்கு கோட்டை கட்டிய தேவயானி சினிமா மார்க்கெட் குறைந்ததும் சின்னத்திரை பக்கம் தாவினார். அவர் நடித்த கோலங்கள் தொடர், சின்னத்திரை வரலாற்றில் பல சரித்திர சாதனைகளை படைத்தது. அதன் பிறகும் பல சீரியல்களில் நடித்தார். சீரியலில் நடிக்க ஒரு நாளைக்கு ஒரு லட்சம் சம்பளம் வாங்கிய முதல் நடிகை தேவயானி தான்.
சீரியலில் நடித்தால் டைட்டில் கேரக்டரில் தான் நடிப்பேன் என்பதில் பிடிவாதமாக இருந்ததாலும் சம்பள விஷயத்தில் இறங்கி வராததாலும் அவருக்கு சீரியல் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது. சினிமாவில் கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக மாறினார். அதிலும் பெரிய வரவேற்பு இல்லை. தற்போது மலையாள சேனல்கள் பக்கம் தாவி உள்ளார். ஏற்கெனவே பல மலையாளப் படங்களில் நடித்து புகழ்பெற்ற தேவயானி, தற்போது அங்குள்ள சேனல்களின் லைவ் ஷோக்களில் சிறப்பு அழைப்பாளராகவும், நடுவராகவும் கலந்து கொள்கிறார். இதற்காக அடிக்கடி கேரளா பறந்து செல்கிறார்.
சொந்த தயாரிப்பில் ஒரு மலையாள சீரியல் தயாரித்து அதில் நடிக்கும் முடிவில் இருக்கிறார். இதற்காக அவர் அங்குள்ள பிரபல சேனலுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. விரைவில் மலையாள தொடரை தயாரித்து நடிப்பது உறுதி என்று தெரிகிறது.
நன்றி: தினமலர்
Bookmarks