-
29th August 2014, 03:37 AM
#471
Moderator
Diamond Hubber
ஒரு நேரத்தில் ஒரு சீரியல்: சமீதாவின் பாலிசி
ஒரே நேரத்தில் இரண்டு மூன்று சீரியல்களில் நடிப்பது, தமிழ், மலையாளம், கன்னடம் என மாறி மாறி நடிப்பதுதான் இப்போது பேஷன். காரணம் கொட்டும் பணம். ஆனால் சமீதா ஒரு நேரத்தில் ஒரு சீரியல்தான் என்பதில் உறுதியாக இருக்கிறார். தற்போது பிள்ளைநிலா சீரியலில் நடிக்கும் அவர் வேறு சில சீரியல் வாய்ப்புகள் வந்தும் தவிர்த்து விட்டார். காரணத்தை அவரே சொல்கிறார்....
"ஒரு சீரியலில் சிறிய கேரக்டரில் நடிப்பவர்கள் வேறு சீரியலில் நடிக்கலாம். ஆனால் நாயகியாக நடிக்கும்போது ஒரு சீரியலில் நடித்தால்தான் அதில் கவனம் செலுத்த முடியும். இன்னொரு சீரியலில் நடிக்கும்போது காஸ்ட்யூமில் தொடங்கி மேனரிசம், வசன உச்சரிப்பு, அத்தனையிலும் வித்தியாசப்படுத்தி காட்டவேண்டும். ஒரு கேரக்டரில் இருந்து வெளியே வந்து அடுத்த கேரக்டருக்குள் நுழைய வேண்டும். இது சில நாள் சூட்டிங் நடக்கும் சினிமாவில் வேண்டுமானால் சாத்தியமாக இருக்கலாம். சின்னத்திரையில் முடியாது. எனவே தான் ஒரே நேரத்தில் ஒரு சீரியல் என்பதில் தெளிவாக இருக்கிறேன். பிள்ளைநிலா முடிந்த பிறகு அடுத்த சீரியலில் நடிப்பேன். அதுவரைக்கும் பிள்ளை நிலாவில்தான் கவனம் செலுத்துவேன்" என்கிறார் சமீதா.
நன்றி: தினமலர்
-
29th August 2014 03:37 AM
# ADS
Circuit advertisement
-
29th August 2014, 03:38 AM
#472
Moderator
Diamond Hubber
கேமராவுக்கு பின்னால் பணியாற்ற விரும்பும் ரம்யா1
இது ஒரு காதல் கதை, மதுரை, சரவணன் மீனாட்சி தொடர்களில் நடித்து புகழ் பெற்றவர் ரம்யா. பாலுமகேந்திரா கடைசியாக இயக்கிய தலைமுறைகள் படத்தில் நடித்தார். தற்போது சாட் வித் ரம்யா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அடுத்து ரம்யா நடித்துள்ள ஆண்டாள் அழகர் தொடர் அடுத்த மாதம் முதல் ஒளிபரப்பாக இருக்கிறது. ஆனால் ரம்யாவுக்கு நடிப்பதை விட போட்டோகிராபியில்தான் ஆர்வம் அதிகமாக இருக்கிறது.
இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: சாட் வித் ரம்யா நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. பலதரப்பட்ட மக்களின் பிரச்னைகளை புரிந்து கொண்டு, அவர்களுக்கு நல்ல வழிகாட்டும் வாய்ப்பை இந்த நிகழ்ச்சி தருகிறது. எனக்கு போரடித்தாலோ, அல்லது ஆடியன்சுக்கு போரடித்தாலோ நிகழ்ச்சியிலிருந்து விலகிவிடுவேன்.
என் கணவர் மாடலிங் போட்டோகிராபர். அவரைப்போலவே எனக்கும் போட்டோகிராபராக, கேமராஉமனாக ஆசை. இதற்காக நேரம் கிடைக்கும்போதெல்லாம் இந்த துறையில் அப்டேட் செய்து வருகிறேன். ஒரு நல்ல போட்டோகிராபராக சாதிக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. கேமராவுக்கு முன்னால் இருப்பதை விட பின்னால் இருந்து நிறைய சாதிக்க ஆசை இருக்கிறது. விரைவில் நடக்கும் என்கிறார் ரம்யா.
நன்றி: தினமலர்
-
29th August 2014, 03:39 AM
#473
Moderator
Diamond Hubber
மீண்டும் சின்னத்திரைக்கு திரும்பினார் நீலிமா ராணி!
தேவர் மகன், பாண்டவர் பூமி, விரும்புகிறேன் படங்களில் குழந்தை நட்சதிரமாக நடித்த நீலிமா ராணி. மெட்டி ஒலி மூலம் சின்னத்திரைக்கு வந்தார். கோலங்கள், தென்றல், செல்லமே ஆகிய தொடர்களில் நடித்தார். இடையில் இதய திருடன், மொழி, திமிரு, சந்தோஷ் சுப்பிரமணியம், நான் மகான் அல்ல படங்களில் ஹீரோயின்களின் தோழியாக நடித்தார். அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு சின்னத்திரை, பெரிய திரைக்கு குட்பை சொல்லிவிட்டு ஒதுங்கினார்.
பின்னர் திடீரென்னு உடம்மை ஸ்லிம்மாக்கி ஹீரோயினாக நடிக்கப்போகிறேன் என்று வந்தார். வந்தவருக்கு ஹீரோயின் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பண்ணையாரும் பத்மினியும் படங்களில் கேரக்டர் ரோல்கள்தான் கிடைத்தது. இப்போது அமளி துமளி, இருவர் உள்ளம், வாலிபராஜா படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் மீண்டும் சின்னத்திரைக்கு திரும்பி விட்டார் நீலிமா ராணி. இதுபற்றி நீலிமாராணி கூறியிருப்பதாவது: ராதிகா மேடம் அழைத்ததால் சின்னத்திரைக்கு மீண்டும் வந்திருக்கிறேன். காரணம் நான் சின்னத்திரையில் பெரிய இடத்தை பிடித்ததற்கு அவர் கொடுத்த வாய்ப்புகள்தான் காரணம். நான் இதுவரை சீரியல்களில் வில்லியாகத்தான் நடித்திருக்கிறேன். முதன் முறையாக பாசிட்டிவான கேரக்டரில் நடிக்கிறேன். ஒன்றை தொலைத்து விட்டு அதை தேடி அலையும் பெண் கேரக்டர். என்ன தொலைத்தேன். தொலைத்ததை கண்டுபிடித்தேனா என்பதை அடுத்து வரும் எபிசோட்களில் தெரிய வரும். சினிமாவிலும் தொடர்ந்து நடிப்பேன். என்கிறார் நீலிமா.
நன்றி: தினமலர்
-
8th September 2014, 05:34 AM
#474
Moderator
Diamond Hubber
மீண்டும் தொகுப்பாளி ஆனார் மோனிகா
அரை மணி நேர செய்தியில் ஒரு நமிட வானிலை அறிவிப்பாளராக அறிமுகமானவர் மோனிகா. அவரின் குழந்தை தனமான முகமும், மழலை உச்சரிப்பும் ஒரு காலத்தில் தனக்கும் இப்படி ஒரு குழந்தை இருக்ககூடாது என்று பெற்றோர்களை ஏங்க வைத்தது. அதன் பிறகு மற்ற நிகழ்ச்சிக்கும் தொகுப்பாளியான மோனிகா, திரைப்பட விழாக்களுக்கும் தொகுப்பாளினி ஆனார். குடும்ப பாங்கான தோற்றத்தால் தொகுப்பாளினி வாய்ப்புகள் குறைந்து சீரியலில் நடிக்கும் வாய்ப்புகள் வந்தது.
நடிப்பதில்லை என்ற பாலிசி வைத்திருந்த மோனிகா வேறு வழியில்லாமல் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். காமெடி காலனி, செந்தூரபூவே தொடர்களில் நடித்தார். அதன் பிறகு உதவி இயக்குனர் ஹரிராவை திருணம் செய்து கொண்டு செட்டிலானர். சில வருடங்கள் சின்னத்திரைக்கு இடைவெளி விட்டவர். சமீப காலமாக சினிமா விழாக்களை தொகுத்து வழங்கி வந்தார். இப்போது தெய்வம் தந்த வீடு தொடர் மூலம் தனது நடிப்பு பயணத்தையும் தொடங்கி விட்டார்.
புதிதாக தொடங்கப்பட்ட சேனலில் சா பூ த்ரீ என்ற குழந்தைகள் நிகழ்ச்சியின் தொகுப்பாளினியாக மீண்டும் ஆகியிருக்கிறார். "நான் சீரியலில் நடித்தாலும் என்னை எல்லோரும் தொகுப்பாளியாகத்தான் பார்க்கிறார்கள். அதில் எனக்கு சந்தோஷம். தொகுப்பாளினியாக இருப்பது அந்த நிகழ்ச்சியின் ராணியாக இருப்பது போன்ற சுகத்தை தரும். நானும் ஒரு தாயாகிவிட்ட சூழ்நிலையில் குழந்தைகள் நிகழ்ச்சி நடத்த கிடைத்த வாய்ப்பு இறைவன் கொடுத்தது. பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் தொகுப்பாளினி ஆகியிருப்பது இழந்தை மீண்டும் பெற்றது மாதிரி இருக்கிறது" என்கிறார் மோனிகா
நன்றி: தினமலர்
-
8th September 2014, 05:36 AM
#475
Moderator
Diamond Hubber
கல்யாணி ரிட்டர்ன்
அள்ளித்தந்த வானம், ஜெயம், ரமணா உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் ப்ரணிதா. மறந்தேன் மெய்மறந்தேன் படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார். கத்திகப்பல், பிரதி ஞாயிறு 9.30 டூ 10.00, இளம்புயல் படங்களில் நடித்தார். சினிமா அவருக்கு சரிப்பட்டு வரவில்லை டி.வி பக்கம் வந்துவிட்டார். கல்யாணி என்ற பெயரில் பீச் கேர்ள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். சில சீரியல்களிலும் நடித்தார்.
அதன் பின்னர் ரோஹித் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சில காலம் சின்னத்திரையை விட்டு விலகி இருந்த கல்யாணி இப்போது மீண்டும் புதுப்பொலிவுடன் பீச் கேர்ள் நிகழ்ச்சிக்கு வந்துவிட்டார்.
"பீச் கேர்ள் என் வாழ்வின் ஒரு அங்கம். புதிய நிகழ்ச்சிக்கான 20 எபிசோட்கள் படமாக்கப்பட்டு விட்டது. முதல் சீசனுக்கு நல்ல வரவேற்பு இருந்ததால் மீண்டும் தொடங்குமாறு ரசிகர்களும், விளம்பரதாரர்களும் வற்புறுத்த இப்போது மீண்டும் தொடங்கி விட்டோம். இந்த முறை என்னுடன் ரெபேக்காவும் இணைந்து தொகுத்து வழங்குகிறார். திருமண வாழ்க்கையும் சந்தோஷமாக செல்கிறது" என்கிறார் கல்யாணி..
நன்றி: தினமலர்
-
13th September 2014, 10:49 PM
#476
Moderator
Diamond Hubber
சரவணன் மீனாட்சியிலிருந்து விலகியது ஏன்? இர்பான் விளக்கம்
கனா காணும் காலங்கள் சீரியலில் பள்ளி மாணவராக அறிமுகமானவர் இர்பான். பட்டாளம் படத்திலும் பள்ளி மாணவராக நடித்தார். அதன் பிறகு எப்படி மனசுக்குள் வந்தாய், சுண்டாட்டம், எதிர்வீச்சு படங்களில் நடித்தார். இதில் சுண்டாட்டம் மட்டும் சுமாராக ஓடிய படம். மீண்டும் பட வாய்ப்புகள் கிடைக்காததால் சின்னத்திரைக்கு மீண்டும் வந்தார். சரவணன் மீனாட்சி தொடரின் இரண்டாம் பகுதியில் சரவணனாக நடித்தார். 200 எபிசோட்கள் கடந்த நிலையில் அதிலிருந்து விலகி விட்டார்.
இதுகுறித்து இர்பான் கூறியிருப்பதாவது: சரவணன் மீனாட்சி தொடர் எனக்கு நல்ல பாப்புலாரிட்டியை கொடுத்தது உண்மைதான். இப்போதும் நான் வெளியில் சென்றால் என்னை சரவணனாகத்தான் பார்க்கிறார்கள். ஆனால் எனது லட்சியம் சினிமாவில் ஜெயிப்பதுதான். பொங்கி எழு மனோகரா, ரூ என்ற இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆனேன். ஒன்றை இழந்தால்தான் ஒன்றை பெற முடியும் என்கிற சூழ்நிலை. அதனால் மனதை தைரியப்படுத்திக் கொண்டு சினிமாவுக்காக சின்னத்திரையை விட்டுவிட்டேன்.
பொங்கி எழு மனோகரா முழுநீள காமெடி படம் இந்தப் படம் எனக்கு சினிமாவில் நல்ல எண்ட்ரியை கொடுக்கும் என்று நம்புகிறேன். சின்னத்திரை ரசிகர்கள் என்னை புரிந்து கொண்டிருப்பார்கள் என்ற நம்புகிறேன். என்கிறார் இர்பான்.
நன்றி: தினமலர்
-
13th September 2014, 10:53 PM
#477
Moderator
Diamond Hubber
அதிகரிக்கும் "அவருக்கு பதில் இவர்"
சினிமா இரண்டரை மணி நேரம் ஓடும். ஆனால் சின்னத்திரை சீரியல் ஆயிரம் எபிசோட்களை தாண்டும். அதாவது ஆயிரம் மணிநேரத்தையும் தாண்டி ஓடும். சீரியலில் சிறிய கேரக்டர்களில் நடிப்பவர்கள், அதிலிருந்து விலகி விட்டாலோ, அல்லது மரணம் அடைந்து விட்டாலோ கதையிலும் அவர் இறந்துவிட்டதாக காட்டி விடுவார்கள். அல்லது கண்டுகொள்ளாமல் விட்டு விடுவார்கள். ஆனால் முக்கிய கேரக்டர்களில் நடிப்பவர்கள் விலகிக் கொண்டால் அவருக்கு பதிலாக இன்னொருவரை நடிக்க வைப்பார்கள். "அவருக்கு பதில் இவர்" என்று டைட்டில் கார்டு போடுவார்கள். இது எப்போதாவது நடக்கிற ஒன்று. ஆனால் சமீபகாலமாக இது அதிகரித்துள்ளது.
புகழ்பெற்ற சரவணன் மீனாட்சி தொடரில் சரவணனாக நடித்துக் கொண்டிருந்த இர்பான், சினிமாவில் நடிக்க போய்விட்டதால் தற்போது சரவணனாக வெற்றி நடிக்கிறார். இரண்டாவது பகுதியின் 200 வது எபிசோடில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.
உறவுகள் சங்கமம் தொடரில் 25 எபிசோட்கள் முடிந்துவிட்ட நிலையில் இப்போது பாரதிக்கு பதில் ஸ்ரீதுர்கா நடிக்கிறார். அழகி தொடரில் சாலு குரியன் நடித்த கேரக்டரில் இப்போது குட்டி பூஜா நடிக்கிறார். வாணி ராணி தொடரில் ராதிகாவின் மகனாக 400 எபிசோட்கள் வரை நடித்த அஜீத்துக்கு பதிலாக மானஸ் நடிக்கிறார்.
தெய்வம் தந்த வீடு தொடரில் நடித்துக் கொண்டிருந்த சரண்யாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு விட்டதால் அவருக்கு பதிலாக மோனிகா நடிக்கிறார். மல்லி தொடரில் நடித்த சோனியா அகர்வால் அதிலிருந்து விலகிக் கொள்ள, இப்போது சாண்ட்ரியா நடிக்கிறார்.
"இந்த மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை. முதலில் ரசிகர்கள் கொஞ்சம் குழம்புவார்கள். பின்னர் மாற்றத்தை ஏற்றுக் கொள்வார்கள். அவர்கள் கவனம் கதையில் ஆழ்ந்து இருப்பதால்தான் இந்த மாற்றங்களை செய்ய முடிகிறது" என்கிறார்கள் சின்னத்திரை இயக்குனர்கள்.
நன்றி: தினமலர்
-
13th September 2014, 10:54 PM
#478
Moderator
Diamond Hubber
மீண்டும் சீரியலுக்கு திரும்பினார் தேவிகிருபா
ஜோடி மாற்றம் நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் தேவிகிருபா. அதன் பிறகு சீரியலில் நடிக்கத் தொடங்கினார். இணை கோடுகள், ஆனந்தம், தீர்க்க சுமங்கலி, கஸ்தூரி சீரியல்களில் நடித்தார். அதன் பிறகு சினிமாவில் நடிக்க முடிவு செய்தார். அதற்காக சீரியலை விட்டு விலகினார். உடம்பை குறைத்தார். பயமறியான் படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்தார். தற்போது இலக்கணமில்லா காதல் படத்தில் ஜெய் ஆகாசுக்கு தங்கையாக ஒரு படத்திலும், ஜோடியாக ஒரு படத்திலும் நடித்து வருகிறார். என்றாலும் தேவிகிருபா நினைத்த மாதிரி சினிமா வாய்ப்புகள் வரவில்லை. இதனால் மீண்டும் சீரியலுக்கே திரும்பி விட்டார். புகுந்த வீடு, மை நேம் இஸ் மங்கம்மா, மாமா மாப்ளே, மாயா, பிள்ளைநிலா என மீண்டும் சீரியல்களில் பிசியாகிவிட்டார்.
"சின்னத்திரை நடிகைகளின் அடுத்தகட்டம் சினிமாதான். நானும் முயற்சித்தேன். சில படங்களில் நடித்தேன். நடித்துக் கொண்டும் இருக்கிறேன். நிச்சயம் ஒரு நாள் சினிமாவிலும் சாதிப்பேன்" என்கிறார் தேவிகிருபா.
நன்றி: தினமலர்
-
13th September 2014, 10:55 PM
#479
Moderator
Diamond Hubber
இனி வில்லியாக நடிக்க மாட்டேன்: தேவிப்ரியா சொல்கிறார்
சின்னத்திரையில் வில்லியாக நடித்து புகழ் பெற்றவர் தேவிப்ரியா. தற்போது நடித்து வரும் பாசமலர், ரோமாபுரி பாண்டியன் தொடர்களிலும் வில்லியாகத்தான் நடித்து வருகிறார். ஆனால் இனி வில்லியாக நடிக்கப்போவதில்லை என்று அறிவித்திருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறியதாவது: இதுவரை நிறைய சீரியல்களில் வில்லியாகவே நடித்து விட்டேன். என் நடிப்புக்காக பாராட்டுகள் கிடைத்தாலும் சீரியலை ரொம்ப சீரியசாக எடுத்துக் கொள்ளும் தாய்மார்களிடம் நான் திட்டு வாங்கிக் கொண்டுதான் இருக்கிறேன். நானும் எத்தனை ஆண்டுகள்தான் திட்டு வாங்கிக் கொண்டே இருப்பது அதனால்தான் இனி வில்லி வேடத்தில் நடிப்பதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன்.
ஆரம்ப காலங்களில் சினிமாவில் நடித்தேன். இடையில் நிறுத்திவிட்டேன். இப்போது மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறேன். கத்துக்குட்டி, விஞ்ஞானி படங்களில் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறேன். இந்த படங்களுக்கு பிறகு எனக்கு நிறைய வாய்ப்புகள் வரும் என்று நம்புகிறேன். என்கிறார் தேவிப்ரியா.
நன்றி: தினமலர்
-
20th September 2014, 01:22 AM
#480
Moderator
Diamond Hubber
கனா காணும் காலங்கள் தொடர் மூலம் அறிமுகமானவர் ப்ரியா. அதன் பிறகு பல சீரியல்களில் நடித்தார். சில திரைப்படங்களில் ஹீரோக்களின் தங்கையாக நடித்தார். ப்ரியாவுக்கும், ராஜா ராணி படத்தின் இயக்குனர் அட்லீக்கும் வருகிற நவம்பர் மாதம் திருமணம் நடக்க இருக்கிறது. நிச்சயதார்த்தம் முடிந்திருக்கிறது. திருமணத்துக்கு பிறகு நடிக்க மாட்டேன் என்று கூறுகிறார் ப்ரியா.
இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: "அட்லி குடும்பமும், எங்கள் குடும்பமும் பேமிலி பிரண்ட். அட்லியை எனக்கு பல வருடங்களாகத் தெரியும். நல்ல பிரண்டாத்தான் இருந்தார். எங்களுக்குள் லவ் எதுவும் இல்லை. ஒரு நாள் எனக்கு வீட்டுல மாப்பிள்ளை பார்க்குறாங்கன்னு சொன்னேன். என் ஜாதகத்தை தரட்டுமான்னு டக்குன்னு கேட்டுட்டார். அதுக்கு பிறகு இரண்டு குடும்பத்தாரும் பேசி கல்யாணத்தை முடிவு பண்ணினாங்க. இது அரேன்ஞ்சுடு மேரேஜ்தான். இப்பதான் லவ் பண்ண ஆரம்பிச்சிருக்கோம்.
நடிப்பு எனக்கு பேஷனோ, தொழிலோ இல்லை. வாய்ப்புகள் கிடைச்சுது சும்மா ஒரு ஹாபிக்காக நடித்தேன். நிச்சயமாக கல்யாணத்துக்கு பிறகு நடிக்க மாட்டேன். இது நானே எடுத்த முடிவு" என்கிறார் ப்ரியா.
நன்றி: தினமலர்
Bookmarks