-
6th June 2014, 05:52 AM
#451
Moderator
Diamond Hubber
மீண்டும் டி.வி., சீரியலில் நடிக்கிறார் எஸ்.பி.பி.சரண்!1
பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்.பி.பி சரண். இவரும் பாடகர்தான். சில படங்களிலும் நடித்துள்ளார். சென்னை 28, குங்குமபூவும் கொஞ்சும் புறாவும், ஆரண்ய காண்டம் உள்பட சில படங்களை தயாரித்தார். சினிமா வாய்ப்பில்லாத காலகட்டத்தில் சரண் ஊஞ்சல், அண்ணாமலை தொடர்களில் நடித்தார். அதன்பிறகு டி.வியில் நடிப்பதை நிறுத்திவிட்டு, தீவிர படத் தயாரிப்பில் இறங்கினார். இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
வருகிற 23ந் தேதி முதல் சீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாக இருக்கும் நெஞ்சத்தை கிள்ளாதே சிரீயலில் ஹீரோவாக நடிக்கிறார். அவருடன் ரேணுகா, காயத்திரி நடிக்கிறார்கள். நிறைய புதுமுகங்களும் அறிமுகமாகிறார்கள். 300 எபிசோட்களை கொண்ட இந்த தொடரை பிரபு இயக்குகிறார். தற்போது படப்பிடிப்புகள் வேகமாக நடந்து வருகிறது.
"இந்த தொடருக்கு 33 வயது நடுத்தர வயது இளைஞர் தேவைப்பட்டார். சரணை கேட்டபோது தயங்காமல் ஒத்துக் கொண்டார். இரண்டு படங்களை தயாரித்து வரும் அவர், அதற்கிடையில் இந்த தொடரில் நடிக்க ஒப்புக் கொண்டது அவரது பெருந்தன்மையை காட்டுகிறது. இந்த தொடர் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தரும்" என்கிறார் இயக்குனர் பிரபு.
நன்றி: தினமலர்
Last edited by aanaa; 19th June 2014 at 08:24 PM.
"அன்பே சிவம்.”
-
6th June 2014 05:52 AM
# ADS
Circuit advertisement
-
7th June 2014, 07:38 PM
#452
Moderator
Diamond Hubber
இதுவரை சீரியல்களிலும், நடன நிகழ்ச்சிகளிலும் தனது திறமையைக் காட்டி வந்த ஆனந்தி, தற்போது வெள்ளித்திரைக்கு ஷிப்ட் ஆகியுள்ளார். எப்போதும் சீரியல்களில் நடித்து வந்த ஆனந்தி, விஜய் டி.வியில் ஒளிபரப்பாகும் சீசன் 7 நடன நிகழ்ச்சியில் தனது சூப்பரான ஆட்டத்தால் அனைவரையும் கவர்ந்தார். அதுவும் சோலோ ரவுண்டில் அவர் ஆடிய பெல்லி டான்ஸ் யூடியூப்பில் லைக்குகளை அள்ளுகிறது. ஆட்டம் தந்த புகழால் இப்போது சினிமா நடிகையாகிவிட்டார். மகிழ்திருமேனி இயக்கத்தில் ஆர்யா, ஹன்சிகா நடிக்கும் மீகாமன் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் இன்னும் பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதுபற்றி ஆனந்தியிடம் கேட்டபோது, " சின்ன வயசிலிருந்தே நடனம்தான் எனக்கு உயிர். ஆனாலும் முதலில் சின்னத்திரையில் நடிக்கத்தான் வாய்ப்பு கிடைத்தது. சீசன் 7 இல் ஆட ஆரம்பித்தபிறகு என் வாழ்க்கையே திசை மாறிவிட்டது. எனது ஆட்டத்தை பார்த்துவிட்டு வெளிநாடுகளில் இருந்தெல்லாம் எப்படியோ என் போன்நம்பரை பிடித்து பாராட்டி பேசினார்கள். இயக்குனர் மகிழ்திருமேனியும் எனது நிகழ்ச்சியை பார்த்துவிட்டு நடிக்க அழைத்தார். மீகாமன் படத்தில் ஹன்சிகாவுக்கு அடுத்து முக்கியமான கேரக்டர். இப்போது நிறைய வாய்ப்புகள் வருகிறது. அதனால் இனி சீரியல்களில் நடிக்க மாட்டேன். சீசன் 7ல் மட்டும் ஆடுவேன். மற்றபடி இனி சினிமாவுக்குத்தான் முக்கியத்துவம்" என்று கூறியுள்ளார் ஆனந்தி.
நன்றி: oneindia
-
7th June 2014, 07:42 PM
#453
Moderator
Diamond Hubber
வில்லியாக நடிப்பது ரொம்ப கஷ்டம்…
சீரியல் நடிகை தர்ஷினி சீரியல்களில் அமைதியான பெண்ணாக நடிப்பதை விட வில்லியாக நடிப்பதுதான் மிகவும் கஷ்டமானது என்று கூறி வருகிறார் லேட்டஸ்ட் வில்லி தர்ஷினி. சன் டிவியில் வெள்ளைத் தாமரையில் கல்லூரி பெண்ணாக அறிமுகமானவர் தர்ஷினி. நாதஸ்வரம் தொடரில் தங்கையாக நடிக்கிறார். ஜெயாடிவியில் காலபைரவன் தொடரில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். தற்போது தேவதை தொடரில் "வில்லியாக நடிக்கிறார். வில்லியாக நடிப்பது பற்றி எல்லோரும் விசாரிக்கிறார்கள். அதற்காக நான் வெட்டகப்படவில்லை" என்று கூறியுள்ளார். அழவைக்கும் நடிப்பு நாதஸ்வரம், காலபைரவன் தொடரில் நல்ல கேரக்டர்களில் நடிக்கிறேன். அமைதியான பெண்ணாகவும், பிறரை அழ வைக்கிற பெண்ணாகவும் நடிக்கிறேன். வில்லி கதாபாத்திரம் இதைப் பற்றி யாருமே கேட்கவில்லை. ஆனால் தேவதை தொடரில் வில்லியாக நடிப்பது பற்றி மட்டும் தவறாமல் கேட்கிறார்கள். எனக்கு சந்தோசம்தான் பார்க்கிறதுக்கு அமைதியான பொண்ணா, அழகான பொண்ணா இருக்கிறீங்க, நீங்க ஏன் வில்லியா நடிக்கிறீங்க என்கிறார்கள். நீயா அப்படி நடிக்கிறாய் என்று ஆச்சர்யத்தோடு கேட்கிறார்கள். இது, எனக்கு சந்தோசம்தான். ரொம்ப கஷ்டம் சீரியலில் வில்லியாக நடிப்பது எவ்ளோ கஷ்டம் என்பது பலருக்குத் தெரியாது. ஷாட் இல்லாத நேரத்துல அப்படி சிரிச்சு பேசிக்கிட்டிருப்போம் ஷாட்ல முறைக்கணும். இது அடுத்தடுத்த நிமிடத்துல நடக்கும். ரொம்ப பிடிச்சிருக்கு ஆனாலும் வில்லியாக நடிப்பது ரொம்ப பிடிச்சிருக்கு. தேவதையில் திட்டினாலும், நாதஸ்வரத்தில் பாராட்டுறாங்க. இரண்டுமே எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு என்று கூறுகிறார் தர்ஷினி.
நன்றி: oneindia
-
7th June 2014, 07:44 PM
#454
Moderator
Diamond Hubber
தங்கை நடிகை ஆனார் ஆபீஸ் மதுலிமா!3
ஆபீஸ் தொடர் மூலம் ரசிகர் பட்டாளத்தை உண்டாக்கி வைத்திருப்பவர் மதுலிமா. யாழ்ப்பாணத்து பொண்ணாக இருந்தாலும் பிறந்தது வளர்ந்தது எல்லாமே சென்னையில்தான். ஆரம்பத்தில் மக்கள் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமானவர் அந்த சேனலில் மார்டன் உடை அணிய தடை என்பதாலேயே அங்கிருந்து எஸ்கேப் ஆகி விஜய் டி.வியின் ஆபீஸ் தொடரில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.
மதுலிமாவுக்கு சினிமா வாய்ப்புகளும் குவிந்து வருகிறது. ஜெயம்ரவி, ஹன்சிகா நடிக்கும் ரோமியோ ஜூலியட் படத்தில் ஹன்சிகாவின் தங்கையாக நடிக்கிறார். விஷால், ஸ்ருதிஹாசன் நடிக்கும் பூஜை படத்தில் விஷாலின் தங்கையாக நடிக்கிறார். "தற்போது தங்கை வேடங்களில் நடித்தாலும் என் லட்சியம் எல்லாம் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்பதுதான்.
சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்குச் செல்கிறவர்கள் ஆரம்பத்தில் சிறிய கேரக்டர்களில் நடித்துதானே பெரிய இடத்தை பிடிக்கிறார்கள். நானும் பிடிப்பேன்" என்கிறார் மதுலிமா.
நன்றி: தினமலர்
-
19th June 2014, 08:13 PM
#455
Moderator
Diamond Hubber
டெல்லி: சதாப்தி ரயிலில் பயணிப்போர் கிரிக்கெட் போட்டிகளையும், தங்களுக்கு பிடித்த டிவி நிகழ்ச்சிகளையும் இனிமேல் லைவ்-ஆக கண்டு ரசிக்க முடியும். ரயிலில் டிவி மாட்டியிருப்பது என்னவோ பழைய செய்திதான். ஆனால் ஒவ்வொரு பயணியின் இருக்கைக்கு முன்பும் தனித்தனியாக டிவி மாட்டப்பட உள்ளது புதுசு. ஆம்.. இந்திய ரயில்வே அமைச்சகம் அதுபோன்ற ஒரு வசதியை விரைவில் சதாப்தி ரயில்களில் அளிக்க உள்ளது. இதன்படி ஒவ்வொரு இருக்கையின் பின்புறத்திலும் ஒரு எல்சிடி டிவி பொருத்தப்படும். இதன் மூலம் கைக்கு எட்டிய தூரத்தில் தொலைக்காட்சியை பார்ப்பதுடன் பயணி தனக்கு தேவையான சேனல்களை மாற்றி வைத்து பார்த்துக்கொள்ள முடியும். முதல்கட்டமாக 80 டிவி சேனல்களை வழங்க உள்ளது ரயில்வே நிர்வாகம். டிவியிலிருந்து வெளியாகும் ஒலி பக்கத்து சீட்டில் இருப்பவருக்கு தொல்லை தராமல் இருக்க ஹைட்போன்களும் தொலைக்காட்சி பெட்டியுடன் இணைக்கப்பட்டிருக்குமாம். கல்கா, லக்னோ, அமிருதசரஸ், கான்பூர், அஜ்மீர், போபால் மற்றும் டேராடூன் சதாப்தி ரயில்களில் முதல்கட்டமாக இந்த வசதி வர உள்ளது. இம்மாதம் 29ம்தேதிக்குள் இத்திட்டம் இறுதிவடிவம் பெறும் என்று ரயில்வே வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. கர்நாடக அரசு போக்குவரத்துக் கழகத்தில் பெங்களூரில் இருந்து சென்னை மற்றும் ஹைதராபாத் நகரங்களுக்கு இயக்கப்படும் வோல்வோ பஸ்களில் இதுபோன்ற வசதி உள்ளது. ரயிலில் இதுதான் முதன்முறை என்று கூறப்படுகிறது.
.
நன்றி: Oneindia
Last edited by aanaa; 19th June 2014 at 08:23 PM.
"அன்பே சிவம்.”
-
19th June 2014, 08:26 PM
#456
Moderator
Diamond Hubber
சினிமாவை விட சின்னத்திரையில் சந்தோஷமாக இருக்கிறேன்: சங்கவி சொல்கிறார்
அமராவதி படத்தில் அஜீத்துடன் நடித்தவர் சங்கவி, அதன் பிறகு விஜய்யுடன் நான்கு படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்தார். இதுவரை 100 படங்களுக்கு மேல் நடித்து விட்ட சங்கவி, இப்போது ஆஹா என்ன பொருத்தம் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
தனது சின்னத்திரை அனுபவம் பற்றி இப்படி கூறுகிறார்: சினிமாவில் நிறைய சாதித்து விட்டேன். இத்தனை வருடத்துக்கு பிறகும் செலிபிரிட்டியாக இருக்கிறதே பெரிய விஷயம். பெரிய ஹீரோக்களுடன் நடித்து விட்டு சின்னத்திரைக்கு வந்தது பற்றி நான் கவலைப்படவே இல்லை. இன்னும் சொல்லப்போனால் சினிமாவை விட சின்னத்திரையில் சந்தோஷமாகவே இருக்கிறேன். எங்கே வாய்ப்பு கிடைக்கிறதோ அதை பயன்படுத்திக்கணுங்றது என்னோட பாலிசி. அதைத்தான் செய்கிறேன். சினிமாவில் நடிகையாகத்தான் இருந்தேன். சின்னத்திரையில் ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் சென்று அவுங்க வீட்டு பொண்ணாயிட்டேன். இந்த அனுபவம் புதுசா இருக்கு.
சினிமாவுல டைரக்டர் கொடுக்கிற வசனத்தை மனப்பாடம் பண்ணி பேசிடலாம் அது ரொம்ப எளிது. ஆனால் டி.வி ஷோல அப்படி பேச முடியாது. எதிர்ல இருக்கிறவர் என்ன பேசுவார்னு நமக்குத் தெரியாது. அவுங்க எது பேசினாலும் அதுக்கு பதில் பேசி நாம நிக்கணும். இது சவாலான விஷயம் டைமிங் சென்ஸ் இல்லேன்னா டி.வியில பேட்டிகூட கொடுக்க முடியாது.
சினிமால மீண்டும் நடிக்கிற ஐடியா எதுவும் இல்லை. நல்ல வாய்ப்பு கிடைத்தால் நடிக்கலாம்தான். ஆனால் இப்போ உள்ள டைரக்டர்கள் புதுப்புது ஹீரோயின்களைத்தானே தேடுறாங்க. என்கிறார் சங்கவி.
நன்றி: தினமலர்
-
15th July 2014, 11:19 PM
#457
Moderator
Diamond Hubber
34 வருடத்துக்கு பின் ஒரு தலை ராகம் படக்குழுவினர் உருக்கமான சந்திப்பு
டி.ராஜேந்தர் இயக்கத்தில் 1980-ல் வெளியான ‘ஒரு தலை ராகம்’ படக்குழுவினர் 34 வருடங்களுக்கு பிறகு சென்னையில் நேற்று சந்தித்தனர். இச்சந்திப்பு உருக்கமானதாக இருந்தது.
இந்த படம் அப்போதைய இளம் தலைமுறையினரை உலுக்கி எடுத்தது. இதில் இடம் பெற்ற ‘நான் ஒரு ராசி இல்லா ராஜா’, ‘வாசமில்லா மலர் இது’, ‘இது குழந்தைபாடும் தாலாட்டு’, ‘கடவுள் வாழும் கோவிலிலே’ உள்ளிட்ட பாடல்கள் பட்டி, தொட்டியெங்கும் கலக்கின. காதலர்களின் தேசிய கீதங்களாக இவை அமைந்தன.
இந்த படத்தில் கதாநாயகனாக நடித்த சங்கர் தற்போது ‘மணல் நகரம்’ என்ற படத்தை டைரக்டு செய்கிறார். இதன் இசை வெளியீட்டு விழா வடபழனி ஆர்.கே.வி.ஸ்டுடியோவில் நடந்தது. இதில் ‘ஒரு தலை ராகம்’ படக்குழுவினர் சந்திப்புக்கு அவர் ஏற்பாடு செய்து இருந்தார்.
‘ஒரு தலை ராக’த்தில் கதாநாயகியாக நடித்து இருந்த ரூபா ஐதராபாத்தில் இருந்து வந்து இருந்தார். தும்புவாக நடித்த கைலாஷ் கேரளாவில் இருந்து வந்து இருந்தார். ஒருவருக்கொருவர் கைகளை பிடித்தபடி கண்ணீர் மல்க நலம் விசாரித்தனர்.
விழாவில் டி.ராஜேந்தர் பேசியதாவது:– ‘ஒரு தலை ராகம்’ படக்குழுவினரை மீண்டும் சந்திப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் படித்த கல்லூரியிலேயே இந்த படத்தை எடுத்தோம். மேகத்தோடு மோதாத காற்று மாதிரி அப்போது காதல் இருந்தது. ஆனால் இப்போதைய காதல்கள் மேக்கப், பிக்கப், பேக்கப் என்பது போல் ஆகிவிட்டது. காலையில் ஒரு பெண்ணை பார்க்கிறான். அன்று மேட்னி ஷோவுக்கே பிக்கப் பண்ணுகிறான். இரவில் எல்லாம் முடித்து விட்டு பேக்கப் ஆகிவிடுகிறான்.
‘ஒருதலை ராகம்’ படத்தில் ரூபா நாயகனுடன் கிளைமாக்சில் தான் பேசுவார். அப்போது அவன் உயிருடன் இருக்க மாட்டான். காதலில் அப்போது ஜீவன் இருந்தது. அந்த படத்துக்கு முதலில் தடை போடும் மேகங்கள் என்று தான் தலைப்பு வைத்தேன். பிறகு அதை மாற்றினோம்.
சந்திரசேகர் நடித்த கேரக்டரில் என்னை நடிக்கும்படி இப்ராகிம் நிர்பந்தித்தார். ஆனால் அந்த கேரக்டரில் சிகரெட் பிடிக்க வேண்டி இருந்ததால் நான் நடிக்க மறுத்துவிட்டேன். இன்று வரை சிகரெட்டை தொட்டது இல்லை. 34 வருடம் கழித்து இந்த சந்திப்பு நிகழ்கிறது.
ஆனால் ‘ஒரு தலை ராகம்’ படத்தில் நடித்த உஷாவை திருமணம் செய்து கொண்டு அந்த படத்தோடு சேர்ந்து வாழ்வது போன்ற உணர்விலேயே எப்போதும் இருக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
ரூபா பேசும் போது, ‘ஒரு தலை ராகம்’ படத்தில் எனக்கு அதிகம் வசனமே இல்லை. அதில் நாயகனாக நடித்த சங்கர் படம் இயக்குவது மகிழ்ச்சியளிக்கிறது. அதில் பணியாற்றியவர்களை மீண்டும் சந்திப்பதில் சந்தோஷப்படுகிறேன் என்றார்.
பிறகு ‘மணல் நகரம்’ பாடல்கள் வெளியிடப்பட்டது. இதில் நாயகனாக நடித்த பிரஜன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நன்றி: மாலைமலர்
-
15th July 2014, 11:24 PM
#458
Moderator
Diamond Hubber
தமிழ் சீரியலில் நடிக்கிறார் அமலா!
1986ம் ஆண்டு மைதிலி என்னை காதலி படத்தில் டி.ராஜேந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டவர் அமலா. மெல்ல திறந்தது கதவு, பன்னீர் நதிகள், கண்ணே கனியமுதே, வேலைக்காரன், வேதம் புதிது, பேசும் படம், அக்னி நட்சத்திரம், கொடி பறக்குது, சத்யா, ஜீவா, மாப்பிள்ளை உள்பட பல வெற்றிப் படங்களில் நடித்தார். தெலுங்கு படங்களில் நடித்தபோது நடிகர் நாகர்ஜுனாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது அமலாவின் மகன் அகிலும் நடிக்க வந்து விட்டார்.
விலங்குளை பாதுகாக்கும் புளூகிராஸ் அமைப்பில் இணைந்து பணியாற்றி வரும் அமலா 23 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழில் நடிக்க வருகிறார். சினிமாவில் அல்ல சீரியலில். அவர் நடிக்கும் சீரியல் பற்றி இன்னும் முறைப்படி அறிவிக்கவில்லை என்றாலும். அதன் படிப்பிடிப்புகள் சென்னையில் மும்முரமாக நடந்து வருகிறது.
"கதை எனக்கு பிடித்திருந்ததால் நடிக்க ஒப்புக் கொண்டேன். சென்னை எனக்கு மிகவும்பிடித்த நகரம். நடிக்கும் சீரியல் பற்றி தயாரிப்பு நிறுவனம் முறையாக அறிவிக்கும். சினிமாவில் மீண்டும் நடிப்பது பற்றி இப்போது எந்த முடிவும் எடுக்கவில்லை" என்று அமலா தனது பேஸ்புக்கில் தெரிவித்திருக்கிறார்.
நன்றி: தினமலர்
-
15th July 2014, 11:25 PM
#459
Moderator
Diamond Hubber
விளம்பர படங்களில் ஆர்வம் காட்டும் வாணி போஜன்
தெய்வ மகள் தொடரின் நாயகி வாணி போஜன் ஒரு மூலிகை தயாரிப்பு நிறுவனத்தின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டிருக்கிறார். சீரியலில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம் விளம்பர படங்களிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.
இதுபற்றி அவர் கூறியதாவது: படிச்சு முடிச்சிட்டு ஏர்வேசில் வேலை பார்த்தபோது விளம்பர படங்களில் நடிக்க ஆசை இருந்தது. வாய்ப்புகளும் நிறைய வந்தது. சில நிமிடங்கள், விநாடிகள் உள்ள விளம்பர படமாக இருந்தாலும் அடிக்கடி ஒளிபரப்பாவதால் மக்கள் மனங்களில் எளிதாக இடம் பிடித்து விட முடியும். நான் நடித்த விளம்பர படங்கள் மூலம்தான் தெய்வ மகள் வாய்ப்பும் கிடைத்தது. சீரியலில் நடித்தாலும் விளம்பர படங்களை விடுவதாக இல்லை. அதுல நடிக்கிற சுகமே தனிதான். என்கிறார் வாணி போஜன்.
நன்றி: தினமலர்
-
15th July 2014, 11:26 PM
#460
Moderator
Diamond Hubber
செய்தி வாசிப்பாளரான நடிகை4
மெட்டிஒலி, கோலங்கள், மேகலா, உதிரிப்பூக்கள் போன்ற தொடர்களில் நடித்தவர் ரேவதி பிரியா. விதவிதமான கேரக்டர்களில் நடித்த ரேவதி பிரியாவை காணவில்லை என்று பலர் தேடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர் சின்னத்திரையை விட்டு விலகவே இல்லை. செய்தி சேனல் ஒன்றில் செய்தி வாசிப்பாளராக இருக்கிறார். உற்றுப் பார்த்தால்தான் அது ரேவதி பிரியா என்பதே தெரியவரும். அந்த அளவிற்கு அவரிடம் மாற்றங்கள்.
இதுபற்றி ரேவதி பிரியா கூறியதாவது: சீரியலின் மூலம் தமிழ் நாட்டில் உள்ள எல்லா குடும்பங்களிலும் ஒருத்தியாகிவிட்டேன். ஆனாலும் நான் சின்னத்திரைக்கு வர விரும்பியது ஒரு ஜர்னலிஸ்ட்டாகத்தான். சந்தர்ப்ப சூழ்நிலையால் நடிகையானேன். நான் விரும்பிய வாய்ப்பு அமைந்தபோது செய்தி வாசிப்பாளராக என்னை மாற்றிக் கொண்டேன். ஆனாலும் தொடர்ந்து நடிப்பு வாய்ப்புகள் வந்தது. இரண்டையும் ஒரே நேரத்தில் செய்ய வேண்டாமே என்ற முடிவு செய்துதான் முழுநேர செய்தி வாசிப்பாளராகிவிட்டேன்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக செய்தி வாசித்து வருகிறேன். அதனால் அன்றாட நிலவரம் எனக்கு அத்துப்படி, அரசியல் முதல் தங்கம் விலை விரை விரல் நுனியில் வைத்திருக்கிறேன். இந்த அனுபவம் புதிதாக இருக்கிறது. இதன் அடுத்த கட்டமாக செய்திகளின் பின்னணியில் உள்ள நிகழ்வுகளை தொகுத்து நிகழ்ச்சியாக வழங்கும் முயற்சியில் இறங்குகிறேன். சீரியல்களில் நடிக்கவே மாட்டேன் என்று சத்தியம் எதுவும் செய்யவில்லை. நல்ல வாய்ப்புகள் வந்தால் நிச்சயம் பரிசீலனை செய்வேன். என்கிறார் ரேவதி பிரியா.
நன்றி: தினமலர்
Bookmarks