-
28th September 2011, 04:23 AM
#361
Moderator
Diamond Hubber
"ஒரு சிலர் கொஞ்சி கொஞ்சிப் பேசுவாங்க, சிலர் மென்மையாப் பேசுவாங்க, சிலர் கணீர் குரலில் பேசுவாங்க. முதல்ல அவங்க எப்படி பேசுவாங்கங்கறதை கவனிப்பேன். இவங்களுக்கு இப்படிப் பேசினால் நல்லாருக்கும்னு அனலைஸ் பண்ணி அதற்குத் தகுந்த மாதிரி பேசுவேன்' என்கிறார் சின்னத்திரை நடிகைகளுக்கு டப்பிங் கொடுக்கும் ஸ்ரீஜா. தற்பொழுது இவர் சின்னத்திரையில் "அத்திப்பூக்கள்' தொடரில் வரும் கற்பகத்துக்குக் குரல் கொடுத்து வருகிறார்.
-
28th September 2011 04:23 AM
# ADS
Circuit advertisement
-
1st October 2011, 07:23 PM
#362
Moderator
Diamond Hubber
சுன்சுன் தாத்தா
வீட்டில் தனிமைப்படுத்தப்படும் பிள்ளைகள் எந்த மாதிரி வளர்கிறார்கள் என்பதை விவரிக்கும் குறும் படம் `சுன் சுன் தாத்தா'.
நடிப்பிலும் இயக்கத்திலும் தனக்கென்று தனிமுத்திரை பதித்திருக்கும் நாசர் இயக்கும் இந்தக் குறும் படத்தில், தனிமைப் படுத்தப்படும் சிறுவனாக நடிப்பவர் அவர் மகன் அபி மெஹதி ஹசன். நாசரின் மூன்று வாரிசுகளில் இவர் இளையவர். எட்டாம் வகுப்பில் படிப்பை தொடர்கிறார்.
மலேசியாவில் நிகழ்வது போல் திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பதால் முழு படப்பிடிப்பும் மலேசியாவிலேயே நடந்தது. அங்கே கணவன்-மனைவி இருவரும் வேலைக்குப் போகிற குடும்பத்தில் தனிமையில் தவிக்கும் அவர்கள் வாரிசு அனுபவிக்கும் நெருக்கடி தான் கதைப்பின்னணி. ஆரம்பத்தில் அந்த சிறுவனுக்கு சுன்சுன் தாத்தா துணையிருக்கிறார். அவன் தனிமையை உணராதவண்ணம் தாத்தா அவனில் கலகலப்பு பக்கமாக இருக்கிறார்.
ஆனால் கொஞ்ச நாளில் தாத்தா இறந்து விட, சிறுவனை தனிமை சூழ்ந்து கொள்கிறது. ஒருநாள் மதியவேளையில் அம்மா தன் அலுவலகத்தில் இருந்து போனில் மகனை தொடர்புகொள்ள, மகனோ உற்சாகமாக பேசுகிறான். பேச்சினூடே `சும்மாயிரு சுன்சுன்' என்கிறான்.
இப்போது அம்மாவுக்கு பயம். சுன்சுன் தாத்தா தான் இறந்து விட்டாரே, பிறகு மகன் சுன்சுன் என்று சொல்வது யாரை? அதேபயத்தில் வீடு வரும் அம்மாவுக்கு மகன் ஒரு வண்ணத்துப் பூச்சியை பிடித்து அதற்கு சுன்சுன் என்று பெயர்வைத்து பொழுதுபோக்கியது தெரிய வருகிறது. இதற்குப் பிறகு அந்த சிறுவனின் பெற்றோர் நிலையில் மாற்றம் ஏற்பட்டதா? சிறுவனுக்கு பெற்றோரின் அரவணைப்பு முழுமையாக கிட்டியதா என்பது கதையின் உச்சக்கட்டம்.
மலேசிய பிரபல நடிகர் ஜமாலிசாதத் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இசை: பிரபாகரன். ஒளிப்பதிவு: வி.சேகர். எழுத்தும் இயக்கமும்: நாசர்.
இந்த குறும்படம் மலேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பாவதை தொடர்ந்து, இங்குள்ள பிரபல சேனலிலும் ஒளிபரப்ப பேச்சுவார்த்தை நடக்கிறது.
நன்றி: தினதந்தி
-
15th October 2011, 07:44 PM
#363
Moderator
Diamond Hubber
சின்னத்திரையில் இருந்து...
சென்னை தொலைக்காட்சியில் `மனைமாட்சி', `சமையல் கலை' நிகழ்ச்சிகளை தயாரித்து புகழ் பெற்றவர் சியாமளா. தொடர்ந்து தனியார் தொலைக்காட்சியில் `நலம்தானா,' `வாரம் ஒரு ஜோதிடர்' நிகழ்ச்சிகளை வழங்கினார். அதோடு "ஜோடிப்பொருத்தம்'', "மலரும் மொட்டும்'' போன்ற நிகழ்ச்சிகள் தயாரிப்பிலும் பங்காற்றினார்,
அதன்பிறகு இவர் மேற்கொண்டதே தொலைக்காட்சி தொடர்கள் தயாரிப்பு. சின்னச்சின்னஆசை, துளசி, சிரிப்போ சிரிப்பு, துளசி ஆகிய தொடர்களை தயாரித்ததோடு, இயக்கவும் செய்தார். இந்த தொடர்கள் அனைத்தும் விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாயின.
சின்னத்திரை தொடர்களை இயக்கிய அனுபவம் இவரை பெரியதிரை பக்கமும் நகர்த்தியிருக்கிறது. இப்போது `கலியுக காதல்' என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.
"இயக்கும் ஆர்வம் எப்படி வந்தது?''
சியாமளாவைக் கேட்டால்...
"படிப்படியாக என் இயக்கும் திறனை வளர்த்துக் கொண்டேன் என்று தான் சொல்லவேண்டும். சில ஆண்டுகளுக்கு முன்பு என் இயக்கத்தில் "சபாஷ் ராஜா'', "தாய் மாமன்'' போன்ற தொடர்கள் சென்னை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பெரிய வரவேற்பைப் பெற்றது. அப்போதே என் நட்பு வட்டத்தில் உள்ளவர்கள் `உங்கள் படைப்பில் சினிமாவுக்கான பார்வை இருக்கிறது. பெரிய திரையிலும் இயக்கலாமே' என்றார்கள். அதற்கான நேரம் இப்போது அமைய, காதலை புதிய கோணத்தில் அலசும் `கலியுகக்காதல்' படத்தின் இயக்குனராகி விட்டேன். இந்தப்படத்தில் என்னுடன் பணிபுரியும் தொழில் நுட்பக்கலைஞர்கள் அத்தனைபேரும் பெண்கள் என்பது இன்னொரு சிறப்பு.''
நன்றி: தினதந்தி
-
22nd October 2011, 09:00 PM
#364
Moderator
Diamond Hubber
டைரக்டராகும் டெல்லி கணேஷ்
குணசித்ர நடிப்பில் கொடிகட்டிப் பறந்தவர் நடிகர் டெல்லிகணேஷ். இப்போதும் படங்களில் பிசியாக இருப்பதோடு, `செல்லமே' உள்ளிட்ட சில தொடர்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். மேடை நாடகங்களிலும் இவரது அனுபவம் மகத்தானது.
டெல்லிகணேஷ் இப்போது சின்னத்திரையில் ஒரு தொடரை எழுதி இயக்குகிறார். வசந்த் டிவியில் இந்த தொடர் விரைவில் ஒளிபரப்பாகிறது.
நன்றி: தினதந்தி
-
22nd October 2011, 09:01 PM
#365
Moderator
Diamond Hubber
புதிய தலைவர்
சின்னத்திரை நடிகர் சங்கத்துக்கு முதன் முதலாக தேர்தல் நடத்தி நிர்வாகிகளை தேர்ந்தெடுத்தனர்.
2011-2013-ம் ஆண்டுக்கான தலைவராக எம்.ராஜேந்திரன், செயலாளராக ராஜ்காந்த், பொருளாளராக வி.டி. தினகரன், துணைத் தலைவர்களாக மனோபாலா, அபிஷேக், இணைச் செயலாளர்களாக சத்யப்ரியா, சதீஷ், ஆர்த்தி, கன்யாபாரதி தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதோடு உயர்குழு உறுப்பினர்களும் தேர்வானார்கள். தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் அனைவரும் சங்க அலுவலகத்தில் பதவி ஏற்றுக் கொண்டனர்.
நன்றி: தினதந்தி
-
5th November 2011, 08:05 PM
#366
Moderator
Diamond Hubber
டிவி நடிகை தற்கொலை வழக்கு : டிவி நடிகர் தேவ் ஆனந்துக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை!
டிவி நடிகை தற்கொலை வழக்கில் நடிகருக்கு சிறப்பு நீதிமன்றம் 5 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்துள்ளது. Ôசெல்லமேÕ ÔமனைவிÕ உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்தவர் தேவ் ஆனந்த் (34). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி இருக்கிறார். இவருடன் சில டிவி தொடர்களில் நடித்தவர் வைஷ்ணவி. இருவரும் நண்பர்களாய் பழகினர். இந்நிலையில் கடந்த 2006 ஏப்ரல் மாதம் வைஷ்ணவி தனது தாயுடன் மலேசியாவில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்காக சென்றார். அப்போது, தேவ் ஆனந்த் மற்றும் சக நடிகைகளும் சென்றிருந்தனர்.
அங்கிருந்து திரும்பியதும் ஏப்ரல் 15ம் தேதி வைஷ்ணவியை கிழக்கு கடற்கரை சாலைக்கு தேவ் ஆனந்த் கூட்டிச் சென்றுள்ளார். அங்கிருந்து இரவு 8.30 மணிக்கு வைஷ்ணவி வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, அவரது கண், முகம், மூக்கு ஆகியவற்றில் காயம் இருந்துள்ளது. இதுகுறித்து அவரின் பெற்றோர் கேட்டதற்கு தேவ் ஆனந்த், தன்னை 2ம் தாரமாக திருமணம் செய்ய வேண்டும் என்று மிரட்டினார்.
தன்னை திருமணம் செய்யவில்லை என்றால் வேறு யாருடனும் வாழ முடியாது என்று மிரட்டி தாக்கினார் என்று கூறியுள்ளார். இதையடுத்து, அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்நிலையில் 2 நாட்கள் கழித்து வீட்டில் தனியாக இருந்த வைஷ்ணவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார்.
புகாரின் அடிப்படையில் தேவ் ஆனந்த் மீது காயம் விளைவித்தல், தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி சேதுமாதவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. சிறப்பு அரசு வக்கீல் கவுரி அசோகன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் தேவ் ஆனந்துக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும் ரூ.10,500 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
நன்றி:தினகரன்
-
5th November 2011, 08:06 PM
#367
Moderator
Diamond Hubber
அமிதாப் பாணியில் சின்னத்திரைக்கு வருகிறார் விஜய்?
நடிகர் விஜய் சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாகக் தகவல் கூறுகிறது. பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நடத்தும் கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. இந்நிலையில் பிரபல சேனல் ஒன்று கோடீஸ்வரன் போன்று ஒரு நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்த முடிவு செய்துள்ளது. அதை பிரபலமான ஒருவர் தான் நடத்த வேண்டும் என்று நிகழ்ச்சியாளர் நினைத்தார்.
அதன்படி பிரபலங்களின் பட்டியல் தயார் செய்து பரிசீலித்தார்கள். இறுதியில் விஜய்யை தேர்வு செய்து அவரை அணுகியுள்ளனர். ஆனால் கோடி கொடுத்தாலும் வேண்டாம் என்று கூறி விட்டாராம். இருப்பினும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதில் தற்போது விஜய் தலையை ஆட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இது எந்த ரூபத்திலும் உறுதிப்படுத்தப்படவில்லை.
விரைவில் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. பார்க்கலாம், விஜய் டிவிக்கு வருகிறாரா, இல்லையா என்று.
நன்றி: தினகரன்
-
5th November 2011, 08:08 PM
#368
Moderator
Diamond Hubber
டிங்குடன் 2வது திருமணம் : நடிகை கவிதா தலைமறைவு!
டி.வி., நடிகர் டிங்குவை சட்டவிரோதமாக 2வது திருமணம் செய்த நடிகை கவிதாவை போலீசார் தேடி வருகின்றனர். ஆனால் அவர் தலைமறைவாகிவிட்டார். அன்புள்ள ரஜினிகாந்த், ஜப்பானில் கல்யாணராமன் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, தற்போது சின்னத்திரையில் கலக்கி வருபவர் நடிகர் டிங்கு. இவர் சுப்ரியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆரம்பத்தில் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர், பின்னர் இவர்களது திருமணத்தை ஆடம்பரமாக நடத்தி வைத்தனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் டிங்குவின் மனைவி சுப்ரியா, தனது கணவர் தனக்கு தெரியாமல் 2வது திருமணம் செய்ததாகவும், வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும் *போலீசில் புகார் கொடுத்தார். சுப்ரியாவின் புகாரையடுத்து நடிகர் டிங்கு, கோர்ட்டில் முன்ஜாமின் கோரி மனுதாக்கல் செய்தார்.* அதுமட்டுமின்றி தனது மனைவி சுப்ரியா கூறுவதில் உண்மையில்லை என்றும் தமது மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இதுதொடர்பாகன வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில் சுப்ரியாவின் புகாரின்பேரில், டிங்குவை சட்டவிரோதமாக 2வது திருமணம் செய்த நடிகை கவிதாவை பிடித்து, விசாரிக்க போலீசார் முயற்சித்தனர். ஆனால் கவிதாவோ தலைமறைவாகிவிட்டார். இதனையடுத்து கவிதாவைக் கைது செய்து விசாரணை நடத்த போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
நன்றி: தினகரன்
-
11th December 2011, 01:32 AM
#369
Moderator
Diamond Hubber
இதுவும் ஆச்சரியம்
டி.வி. நிகழ்ச்சித் தொகுப்பாளர் சிவகார்த்திகேயன் இப்போது மெரினா படத்தின் நாயகன். இவர் நடிகர் சிம்பு, தனுஷ் இருவருக்கும் நண்பன் என்பது இன்னொரு ஆச்சரியம். சிம்புவின் வேட்டைமனிதன் படத்தில் கதை இலாகாவில் முக்கிய பங்கு வகிக்கும் இவர், தனுஷின் `3' படத்தில் அவர் நண்பராக நடிக்கிறார். ஒரே சமயத்தில் இருவருடனும் நட்பு பாராட்டும் இவரை கோலிவுட்டில் ஆச்சரியமாக பர்க்கிறார்கள்.
நன்றி: தினதந்தி
-
1st January 2012, 04:21 AM
#370
Moderator
Diamond Hubber
இளையராஜாவின் இன்னிசையில் நனைந்த சென்னை நேரு ஸ்டேடியம்!
ஜெயா டி.வி., சார்பில் 6 வருடங்களுக்கு பிறகு என்றென்றும் ராஜா என்ற தலைப்பில் இளையராஜாவின் இன்னிசை கச்சேரி நடந்தது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த இந்த இசைக்கச்சேரியில் பிரபல பின்னணி பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம், கே.ஜே.*யேசுதாஸ், பால முரளிகிருஷ்ணா, சித்ரா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பிரகாஷ் ராஜ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சரியாக 6மணிக்கு வெளிநாட்டு இசை கலைஞர்களின் இசையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. பிறகு இளையராஜா மேடையில் தோன்றிய போது ரசிகர்களின் கரகோஷம் ஸ்டேடியத்தை அதிர செய்தது.
முதல் பாடலாக ஜனனி ஜனனி.. பாடலை பாடினார் இளையராஜா. அதனைத்தொடர்ந்து யேசுதாஸ் பேசும்போது, நாங்கள் எல்லாரும் சின்ன வயசில் சாப்பாட்டுக்கே ரொம்ப கஷ்டப்பட்டோம். அப்போது இந்த *இசை தான் எங்களை காப்பாற்றியது என்று உருக்கமாக கூறினார். பின்னர் தன்னுடைய இனிமையான குரலில் பூவே செம்பூவே பாடலை பாடியதோடு, இந்த பாடல் தனக்கு ரொம்ப பிடித்த பாடல் என்று கூறினார். அதனைத்தொடர்ந்து எஸ்.பி.பி., மறைந்த இளையராஜாவின் மனைவி ஜீவாவுக்கு சமர்ப்பணமாக நானாக நானில்லை பாடலை பாடி அசத்தினார். அவர் பேசுகையில் நானும், ராஜாவும் வேறு வேறு இல்லை. இருவருமே ஒன்று தான் என்றார்.
தொடர்ந்து டைரக்டர் மகேந்திரன் படத்தில் இடம்பெற்ற பாடலை, பாலு பாடி அந்த பாடல் எப்படி உருவானது என்பதையும் மேடையில் விளக்கி அசத்தினார். நிகழ்ச்சியின் இடையே நடிகர் கமல்ஹாசன், இளையராஜாவை வாழ்த்து பேசிய வீடியோ காட்சி ஒளிப்பரப்பட்டது. நிகழ்ச்சியின் ஹைலைட்டாக பிரபல பின்னணி பாடகர் பால முரளி கிருஷ்ணா மேடையில் *தோன்றி, பாலுவுடன் சேர்ந்து சின்ன கண்ணன் அழைக்கிறான் என்ற பாடலை பாடினார். அவரைத்தொடர்ந்து இளையராஜாவின் வாரிசுகள் யுவன், பவதாரணி ஆகியோரும், பிரபல பின்னணி பாடகர்கள் சித்ரா, ஹரிஹரன் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்களும் பாடி அசத்தினர்.
இசை நிகழ்ச்சிகளுடன் அவ்வப்போது பல சுவாரஸ்யமான தகவல்களையும் இளையராஜா பகிர்ந்து கொண்டார். கவிஞர் கண்ணாதசன் அவர்களுடன் பணியாற்றிய அனுபவத்தை கூறிய ராஜா, இந்த உலகத்திலேயே கவிஞர் கண்ணதாசன் போல இன்ஸ்டன்ட் கவிஞர் யாரும் இல்லை. நான் நிறைய பேர் கூட வேலை பார்த்து இருக்கேன். ஆனால் கண்ணாதாசன் அவர்கள் கூட வேலை பார்த்தது சுவாரசியமான அனுபவம். ஒருமுறை ஸ்டுடியோவில் பாட்டு எழுத வந்தார் கண்ணதாசன். நான் டியூன் போட்டு காட்டினேன். தூ என துப்பினார். ஐயோ இவர் இசையை கேட்டு துப்பினாரா அல்லது கதையை கேட்டு துப்பினாரா என்று புரியல. பிறகு இசையை கேட்டு அப்படியே வரிகளை சொல்ல ஆரம்பிச்சார், அந்த பாட்டு தான் ஆயிரம் மலர்களே மலருங்கள் அமுத கீதம் பாடுங்கள்... என்ற பாட்டு. அதில் தான் மலேசியா வாசுதேவன் அறிமுகமானார் என்றார்.
இந்த இசை நிகழ்ச்சியில் ஏராளமான ரசிகர்களுடன் ஷோபா, விஜய் அண்டனி, ஜேம்ஸ் வசந்தன், தரன், தேவிஸ்ரீ பிரசாத், சரண்யா, ஜெய சித்ரா, பாலு மகேந்திர போன்ற பிரபலங்களும் கலந்து கொண்டனர். கொலவெறிக்கு இசை அமைத்த அனிருத் இடம் கிடைக்காமல் நின்றபடியே இசை நிகழ்ச்சியை ரசித்து பார்த்தார். இரவு 12 மணி வரை நீடித்த இளையராஜாவின் என்றென்றும் ராஜா நிகழ்ச்சி, ரசிகர்களுக்கு இசை விருந்தாக அமைந்தது.
நன்றி: தினமலர்
Bookmarks