-
8th May 2011, 05:50 AM
#351
Moderator
Diamond Hubber
"திருடா திருடி" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாயா சிங். அந்தபடத்தில் தனுஷூடன் இவர் ஆடிய "மன்மத ராசா..." பாடல் பட்டிதொட்டியெல்லாம் பரவியது. இந்தபடத்திற்கு பின்னர் நடிக்க வாய்ப்பு வரும் என்று காத்திருந்தார். ஆனால் மன்மத ராசா பாடல் மாதிரி ஒத்த பாட்டுக்கு ஆடத்தான் நிறைய வாய்ப்புகள் வந்தன. இருந்தாலும் அம்மணி அதனை மறுக்கவில்லை. வந்தவரைக்கும் லாபம் என்பது போல ஒத்தபாட்டுக்கு ஆடத் தொடங்கினார்.
மன்மத ராசாவை தொடர்ந்து, விக்ரமுடன் "அருள்" படத்தில் ஒரு பாடல், விஜய்யுடன் "திருப்பாச்சி" படத்தில் "கும்பிடபோன தெய்வம்..." என்று நடிக்க ஆரம்பித்தார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடிகர் பார்த்திபனுடன் "வல்லமை தாராயோ" படத்தில் நடித்தார். அதன்பின்னர் சிறிது இடைவெளிக்கு பின்னர் ஷங்கரின் "அனந்தபுரத்து வீடு" படத்தில் நடித்தார். தொடர்ந்து படவாய்ப்புகள் ஏதும் வராததால் சின்னத்திரையில் களம் இறங்கிவிட்டார். தமிழில் முன்னணி டி.வி., சானல் ஒன்றில் சஸ்பென்ஸ் மற்றும் திரில்லர் நிறைந்த தொடர் ஒன்றில் நடித்து வருகிறார்.
இதுகுறித்து சாயா சிங் கூறுகையில், சின்னத்திரையில் நடிக்க இருந்தது உண்மை தான். ஆனால் அது இவ்வளவு சீக்கிரமாக நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. இந்ததொடரின் கதை மிகவும் பிடித்து இருந்ததால் நடிக்க ஒப்புக்கொண்டேன் என்று கூறியுள்ளார்
நன்றி: தினமலர்
-
8th May 2011 05:50 AM
# ADS
Circuit advertisement
-
4th June 2011, 06:13 PM
#352
Moderator
Diamond Hubber
கலைஞர் முரசு
கலைஞர் தொலைக்காட்சி குழுமத்திலிருந்து மற்றுமொரு தொலைக்காட்சியாக வரவிருக்கிறது `கலைஞர் முரசு'
2007 செப்டம்பர் 15-ம்தேதி ஒளிபரப்பை துவங்கிய கலைஞர் தொலைக்காட்சி, இன்று 5 சாட்டிலைட் சானல்களாக வளர்ச்சியடைந்துள்ளது. இந்த நான்கு வருடத்தில் இசையருவி, செய்திகள், சிரிப்பொலி, சித்திரம் என்று பல கிளைகளை பரப்பி நிற்கிறது.
விரைவில் ``கலைஞர் முரசு'' என்ற புதிய சாட்டிலைட் தொலைக்காட்சி ஒளிபரப்பையும் துவங்க உள்ளது. இதில் திரைப்படங்களுக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கப்பட உள்ளது.
-
4th June 2011, 06:26 PM
#353
Moderator
Diamond Hubber
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு விஜய் டி.வி., மியூசிக் அவார்ட்!
விஜய் டி.வி. சார்பில் ஆண்டுதோறும் பிரமாண்டமான முறையில், கலை நிகழ்ச்சிகளுடன் இசை விருதுகள் வழங்கப்படுகிறது. அதேபோல் இந்தாண்டும் 2010ம் ஆண்டுக்கான இசை விருதுகள் வழங்கப்பட்டன. அதில் சிறந்த இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் தேர்வு செய்யப்பட்டார்.
சிறந்த பாடகருக்கான விருது, "விண்ணைத்தாண்டி வருவாயா" படத்தில் "ஹோசானா..." பாடலுக்காக, விஜய் பிரகாஷ்க்கு வழங்கப்பட்டது.
சிறந்த பாடகிக்கான விருது, "விண்ணைத்தாண்டி வருவாயா" படத்தில் "மன்னிப்பாயா..." பாடலுக்காக, ஸ்ரேயா ஹோசலுக்கும், "ஆயிரத்தில் ஒருவன்" படத்தில் "மாலை நேரம்..." பாடலுக்காக, ஆண்ட்ரியாவுக்கும் வழங்கப்பட்டது.
சிறந்த பாடலாசிரியருக்கான விருது, நா.முத்துக்குமாருக்கு வழங்கப்பட்டது.
நடிகர் பாடிய பாடலுக்கான விருது, "மன்மதன் அம்பு" படத்தில், "நீல வானம்..." பாடலுக்காக கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டது.
சிறந்த பாடல் கம்போசிங்கான விருது, "பையா" படத்தில் "என் காதல் சொல்ல நேரமில்லை..." பாடலுக்காக, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு வழங்கப்பட்டது.
புதுமுக இசையமைப்பாளர் விருது, "தமிழ்படம்" படத்திற்காக கண்ணனுக்கு வழங்கப்பட்டது.
சிறந்த சவுண்ட் மிக்சிங்கான விருது, கே.ஜெ.சிங், தீபக், ரசூல் பூக்குட்டி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
வாழ்நாள் சாதனையாளர் விருது, பிரபல பின்னணி பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ்க்கு வழங்கப்பட்டது.
இசை சக்கரவர்த்தி விருது, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு வழங்கப்பட்டது.
இந்திய அளவில் இசையமைப்பில் சாதனை புரிந்ததற்காக, ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது.
2010ம் ஆண்டின் சிறந்த ஆல்பம் விருது, "விண்ணைத்தாண்டி வருவாயா" படத்திற்கு வழங்கப்பட்டது.
பிரபல பின்னணி பாடகருக்கான விருது "ராவணன்" படத்தில் "உசுறே போகுது..." பாடலுக்காக, கார்த்திக்கு வழங்கப்பட்டது.
சிறந்த டூயட் பாடலுக்கான விருது, "பையா" படத்தில் "அடடா மழை..." பாடலுக்கு கிடைத்தது.
சிறந்த மெலோடிஸ் பாடலுக்கான விருது, "பையா" படத்தில் "துளி.. துளி..." பாடலுக்கு கிடைத்தது.
நன்றி: தினமலர்
Last edited by aanaa; 4th June 2011 at 06:31 PM.
"அன்பே சிவம்.”
-
4th June 2011, 06:31 PM
#354
Moderator
Diamond Hubber
சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆனார் பிரகாஷ்ராஜ்
சினிமாவில் வாய்ப்பில்லாமல் இருக்கும் நட்சத்திரங்கள் சின்னத்திரைக்குள் நுழைந்த காலம் மாறி, பிரபலமாக இருக்கும் நட்சத்திரங்கள் கூட சின்னத்திரையில் அடியெடுத்து வைத்தது பற்றி முன்பொருமுறை கருத்து தெரிவித்த நடிகர் பிரகாஷ் ராஜ், சினிமாவில் பிரபலமாக இருந்தாலும் தொலைக்காட்சி தொட*ரில் நடிப்பதில் எந்த மனத்தடையும் இல்லை என்று கூறினார். காலம் அவரையும் சின்னத்திரைசிக்கு அழைத்து வந்துள்ளது.
மா தொலைக்காட்சியில் கேம் ஷோ ஒன்றை தொகுத்து வழங்குகிறார் பிரகாஷ்ரா*ஜ். 3 கோடி ரூபாய் மதிப்புள்ள ப*ரிசு கொண்டதாம் இந்த கேம் ஷோ. தெலுங்கின் முன்னணி நட்சத்திரங்களுடன் பிரகாஷ்ரா*ஜின் மனைவி போனி வர்மாவும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷோவின் பெயர் இட்ஸ் மை ஷோ!
நன்றி: தினமலர்
-
13th July 2011, 05:32 PM
#355
Moderator
Diamond Hubber
...........
சோனாவுக்கு இரண்டு சினிமா கனவுகள் உண்டு. ஒன்று விஜய் நடிக்கும் படத்தை பிரமாண்டமாகத் தயாரிப்பது. இன்னொன்று தன் சொந்த வாழ்க்கையை படமாக்குவது. படத்தில் வாழ்க்கையில் தனக்கு நடந்த கசப்பான அனுபவங்களையும், துரோகம் செய்தவர்களைப் பற்றியும் சொல்லுவேன் என்கிறார் நடிகை சோனா.
ஜெயா டி.வி.யில் "திரும்பி பார்க்கிறேன்' நிகழ்ச்சியில் தன் இசை உலக அனுபவங்களைத் திரும்பிப் பார்க்கிறார் பாடகர் தீபன் சக்ரவர்த்தி. ""பூங்கதவே தாழ் திறவாய்....'',
""அரும்பாகி மொட்டாகி...'' உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பாடல்களுக்கு கனிந்து, கர்ஜித்து குரல் கொடுத்த தீபன், தன் தந்தையும், பின்னணிப் பாடகருமான திருச்சி லோகநாதனை பற்றிய நினைவுகளையும் இதில் பகிர்ந்து கொள்கிறார். தினமும் இரவு 10 மணிக்கு இந்த நிகழ்ச்சியை காணலாம்.
வாழ்க்கை வரலாற்று படங்களில் இடம் பிடிக்கப் போகிறார் பாபா. கோடி ராமகிருஷ்ணா இயக்கத்தில் புட்டபர்த்தி சாய்பாபாவின் வாழ்க்கை சினிமாவாகிறது. பாபாவாக நடிக்க பிரகாஷ்ராஜிடம் பேசப்பட்டுள்ளது.
பிரகாஷ்ராஜ் தரப்பில் இருந்து இன்னும் ஓ.கே. சொல்லப்படவில்லை. சின்ன வயது பாபாவாக நடிக்க இந்தியாவின் பிரபல குழந்தை நட்சத்திரங்களின் பட்டியலை வாங்கியிருக்கிறார் கோடி.
-
6th August 2011, 02:51 AM
#356
Moderator
Diamond Hubber
இந்த ஆண்டுக்கான மிஸ் சின்னத்திரை அழகியாக டி.வி., நடிகை லீலாவதி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மிஸ் சின்னத்திரை என்ற பெயரில் ஆண்டுதோறும் டிவி நடிகைகளுக்கான அழகிப் போட்டி நடக்கிறது. விஷன் ப்ரோ ஈவன்ட் மேனேஜ்மெண்டும், காஸ்மிக் டவுனும் இணைந்து இந்தப் போட்டியை நடத்துகின்றன. விவெல் ஆக்டிவ் பேர் சின்னத்திரை விருது 2011 என்ற தலைப்பில் இந்த ஆண்டுக்கான போட்டி சென்னையில் நடந்தது. இதில் சின்னத்திரை நடிகைகள் சபர்ணா, ஸ்ரீதுர்கா, சபானா, ஜூலி, ஸ்ரவாணி, தரிஷினி, ஸ்ரீலட்சுமி, சக்தி, கவிபிரசாந்தினி, லீலாவதி என 10 சின்னத்திரை நடிகைகள், தொகுப்பாளினிகள் பங்கேற்றனர்.
ஆடல், பாடல், கேட் வாக்கிங், அறிவுத்திறன் போட்டி என பல சுற்றுகளாக நடந்த இந்த போட்டியில் முதலிடம் பிடித்து மிஸ் சின்னத்திரை 2011 ஆக லீலாவதி தேர்வு பெற்றுள்ளார். அவருக்கு சென்ற ஆண்டின் சின்னத்திரை அழகி ஸ்வேதா கிரீடம் சூட்டினார். இரண்டாம் இடத்தை ஸ்ரவாணியும் மூன்றாம் இடத்தை சபர்ணாவும் பெற்றனர். விஜய் ஆனந்த் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்
நன்றி: தினமலர்
சின்னத்திரை அழகிகள்!
சென்னை சாந்தோம் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மிஸ் சின்னத்திரை-2011 அழகிப் போட்டி நடந்தது.
சின்னத்திரை நடிகைகள் சபர்ணா, ஸ்ரீதுர்கா, சபானா, ஜ×லி, ஸ்ரவாணி, தர்ஷினி, ஸ்ரீலட்சுமி, சக்தி, கவிபிரசாந்தி, லீலாவதி என மொத்தம் 10 பேர் போட்டியில் கலந்துகொண்டு பாட்டு, நடனம், நடிப்பு, பேச்சாற்றல், அறிவுத்திறன் ஆகியவற்றை வெளிப்படுத்தினார்கள். அழகுக்கலை நிபுணர்கள், முன்னணி மாடல்கள், தொலைக்காட்சி இயக்குனர்கள் நடுவர்களாக இருந்து சிறந்த அழகிகளைத் தேர்ந்தெடுத்தனர்.
`மிஸ் சின்னத்திரை-2011' அழகிப் பட்டத்தை லீலாவதி வென்றார். அவருக்கு கடந்த ஆண்டின் மிஸ் சின்னத்திரை அழகி ஸ்வேதா கிரீடம் சூட்டினார். இரண்டாவது இடத்தை ஸ்ரவாணி பெற்றார். மூன்றாவது இடம் சபர்ணாவுக்கு.
பிரீத்தா, ஸ்ரீ, நேத்ரன், ஐஸ்வர்யா, பிரியா, சத்யன் ஆகியோர் விழாவில் கலைநிகழ்ச்சிகளை இடையிடையே நடத்தினார்கள். விஜய் ஆனந்த் தொகுத்து வழங்கினார்.
விஷன் ப்ரோ ஈவெண்ட் மேனேஜ்மெண்ட்டும், காஸ்மிக் டவுனும் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சியின் தொகுப்பை `கே' டிவியில் நாளை காலை 10.30 மணிக்கு காணலாம்.
நன்றி: தினதந்தி
Last edited by aanaa; 13th August 2011 at 06:35 AM.
"அன்பே சிவம்.”
-
7th August 2011, 08:09 AM
#357
Moderator
Diamond Hubber
`மானாட... மயிலாட...' போட்டியில் `வீடு' வென்ற ஜோடி
கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் ஒளி பரப்பாகி வந்த``மானாட... மயிலாட... 6-ம் பகுதி'' நிறைவுக்கு வந்தது.
இறுதிப்போட்டி, ஆயிரக்கணக்கான பார்வையாளர் முன் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்றது.
இறுதிப்போட்டியில் சிறந்த ஜோடியை தேர்வு செய்யும் பொறுப்பு பார்வையாளர்களுக்கே வழங்கப்பட்டிருந்தது. அவர்கள், எஸ்.எம்.எஸ் மூலமாக தங்கள் ஓட்டுக்களைப் பதிவு செய்தனர். அவர்கள் தேர்வு செய்த சத்யா - மோனிகா ஜோடி, அதிக வாக்குகளைப் பெற்று முதல் பரிசு ரூ.20 லட்சம் மதிப்புள்ள இரண்டு வீடுகளை ஆளுக்கொன்றாகத் தட்டிச் சென்றார்கள்.
இரண்டாவது பரிசு ரூ.5 லட்சம் ஆசிப்-பாவனா ஜோடிக்கும், மூன்றாம் பரிசான ரூ.3 லட்சம் கார்த்திக்-சவுந்தர்யா ஜோடிக்கும் கிடைத்தது. ஆறுதல் பரிசாக, தேர்வு பெற்ற கிரிஷ்-சுனிதா ஆளுக்கொரு எல்.சி.டி, மற்றும் டி.வி.டி பெற்றுக்கொண்டார்கள்.
பரிசுகளை நடிகர் தனுஷ் வழங்க, கலைஞர் தொலைக்காட்சியின் மூத்த அதிகாரிகள் இயக்குநர் அமிர்தம் மற்றும் இயக்குநர் இராம.நாராயணன் உடனிருந்தனர். கலைஞர் தொலைக்காட்சியின் பொதுமேலாளர் ப்ளாரன்ட் சி. பெரைரா வரவேற்று பேசினார்.
-
13th August 2011, 06:42 AM
#358
Moderator
Diamond Hubber
சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு..!
சின்னத்திரை இயக்குனர்கள் திருமுருகன், திருச்செல்வம் பிலிம் இன்ஸ்டிடிïட்டில் இயக்குனருக்குப் படித்த நேரத்தில் நடிப்புக்காக சேர்ந்தவர் ரவிவர்மா. ஆனாலும் சின்னத்திரை நடிப்பு வாய்ப்பு கொஞ்சம் தாமதமாகத்தான் வரத் தொடங்கியது. லட்சுமி சீரியலில் மீனாவின் அண்ணன் கேரக்டரில் இவர் நடிப்பை பார்த்தபிறகே சின்னத்திரை சீரியல்கள் இவரது நடிப்புக்கான கேரக்டர்களை இடஒதுக்கீடு செய்யத்தொடங்கின. செல்வி, அஞ்சலி, முகூர்த்தம், அரசி, செல்லமே என நடிக்கும் சீரியல்கள் அதிகரிக்கத் தொடங்கின. தங்கம் சீரியலில் இவர் ஏற்ற `பஞ்சாயத்து பழனிமாணிக்கம்' கேரக்டர் ரொம்பவே பேசப்பட்டது.
இவரது சீரியல் நடிப்புக்கு கிடைத்த அங்கீகாரம், பெரியதிரைக்கு நகர்த்தியது. தனது `தேனீர் விடுதி' படத்தில் நகைச்சுவை கலந்த வில்லன் வேடம் கொடுத்தார், டைரக்டர் எஸ்.எஸ்.குமரன். டைரக்டர் பி.வாசு இயக்கும் புலிவேஷம் படத்தில் இவரை டாக்டர் ரவிவர்மா என்ற சொந்தப்பெயரிலேயே நடிக்க வைத்திருக்கிறார்.
"இனி பெரியதிரை தானா?'' ரவிவர்மாவைக் கேட்டால்... "நான் அண்ணன் எம்.ஜி.ஆரின் நடிப்பில் ஈர்க்கப்பட்டு திரைக்கு வந்தவன். நடிப்பில் என்னை வெளிப்படுத்துகிற எந்த திரையானாலும் ஓ.கே'' என்கிறார்.
நன்றி: தினதந்தி
-
23rd September 2011, 04:23 AM
#359
Moderator
Diamond Hubber
Last edited by aanaa; 23rd September 2011 at 04:27 AM.
"அன்பே சிவம்.”
-
28th September 2011, 04:22 AM
#360
Moderator
Diamond Hubber
பதிமூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் ஜெயா டி.வி., புதுமையான நிகழ்ச்சிகள் பலவற்றையும், பழைய நிகழ்ச்சிகள் சிலவற்றில் புதிய மெருகேற்றியும் வழங்க இருக்கிறது.
அதன் முதற்கட்டமாக நதியா நடத்தி வந்த "ஜாக்பாட்' நிகழ்ச்சியை நடிகை சிம்ரன் நடத்த இருக்கிறார். அதுபோன்றே திங்கட்கிழமை பத்திரிகையாளர் மதன் திரைவிமர்சனம், வியாழக்கிழமை நடிகர் சுரேஷ் நடத்தும் ஜெயிக்கப்போவது யாரு, வெள்ளிக்கிழமை தமிழகத்தின் சமையல் சாம்பியன் யாரு.. எனும் சமையல் நிகழ்ச்சி, வெள்ளி மற்றும் சனிக்கிழமை யூகியுடன் யூகியுங்கள் எனும் வித்தியாசமான வினாடி-வினா போட்டி நிகழ்ச்சி மற்றும் சனிக்கிழமைகளில் அனுஹாசன் நடத்தும் சூப்பர் கிட் எனும் பள்ளி மாணவர்களுக்கான பரிசு போட்டி என களைகட்ட இருக்கிறது ஜெயா டி.வி.
Bookmarks