Page 30 of 63 FirstFirst ... 20282930313240 ... LastLast
Results 291 to 300 of 626

Thread: TV tid bits

  1. #291
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள்

    வரும் வியாழன் டிசம்பர் 31 முதலே பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை நேயர்களுக்காக ஒளிபரப்புகிறது விஜய் டிவி.

    31-ந் தேதி இரவு 10 மணிக்கு `நடந்தது என்ன' ஸ்பெஷல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

    இந்த சிறப்பு நிகழ்ச்சியில் சிறந்த பத்து பிரபலமானவர்களை வெவ்வேறு துறைகளிலிருந்து அழைத்து வந்து 2009-ம் ஆண்டில் நடைபெற்ற சிறந்த பத்து நிகழ்வுகளை பற்றி நினைவு கூர்ந்து வழங்கவுள்ளனர். சினிமா, அரசியல், சமுதாய வாழ்க்கை முறை, கல்வி, சீர்திருத்தம் என எல்லா வகையிலும் இந்த நினைவு கூறல் இருக்கும்.

    2010-ம் ஆண்டின் முதல் நாளான ஜனவரி-1 அன்று காலை முதல் வித்தியாசமான பல சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்கவுள்ளது விஜய் டிவி.

    காலை 9 மணிக்கு `காபி வித் அனு சீசன்-3' நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக `ஆயிரத்தில் ஒருவன்' ஜோடி கார்த்தி- ரீமாசென், படத்தின் இயக்குனர் செல்வராகவன் ஆகியோர் பங்குபெறுகிறார்கள்.

    காலை 10 மணிக்கு `புத்தாண்டு சிறப்பு `நீயா? நானா?' நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். இதில் புத்தாண்டு பலன்கள், அவரவர் ராசிகளுக்கு ஏற்ற நன்மைகளையும் எடுத்துக்கூற ஜோதிட நிபுணர்கள் வருகின்றனர்.

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #292
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    ஆரிக் மீடியா சார்பில் நடிகரும் எம்,பியுமான ஜே.கே.ரித்தீஸ் கலைஞர் டிவியில் விரைவில் சுகன்யா நடிப்பில் வெளிவர இருக்கும் ஆண்டாள் சீரியலை வெகு விமரிசையாக எடுத்து முடித்திருக்கிறார். ஜனவரி 2ம் வாரத்தில் இருந்து ஒளிபரப்பாக விருக்கிறது.இதையடுத்து தனது பலவருட நண்பர் ஆதம் பாவா இயக்கத்தில் வேட்டைப் புலி திரைப்படத்தில் நடிக்க விருக்கிறார்.இந்தி மற்றும் தமிழில் மிகப்பெரிய பட்ஜெட்டில் தாயாராக உள்ளது. பூஜையை மிகப் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர். தமிழ், இந்தியில் தயாராவதால் - இரு மொழிகளிலும் உள்ள முக்கிய நடிகைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும்.


    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  4. #293
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like

    சின்னத்திரை சீரியல்களில் பிஸியாக இருந்து வந்த நடிகை தேவயானி, இப்போது எல்லா சீரியல்களையும் முடித்து கொடுத்து விட்டு அடுத்த களத்திற்கு செல்ல தயாராகி விட்டார். சின்னத்திரையில் இருந்து *மீண்டும் வெள்ளித்திரைக்கு வாருங்கள் என்று பலரும் தேவயானிக்கு அழைப்பு விடுக்கிறார்களாம். நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு வருவதால் தற்போது அம்மணி தினமும் 5 கதைகளை கேட்டு வருகிறாராம். கதையோடு, தனது கதாபாத்திரம் பிடித்திருந்தால் மட்டுமே ஒத்துக் கொள்வாராம். விரைவில் தேவயானியை பெரிய திரையில் பார்க்கலாம்!


    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  5. #294
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    பிரபுதேவா நடனப்புயலாக சுழன்று கொண்டிருந்த வேளையில் சோனி டி.வி.,யின் நடன நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக இருந்தார். அதன் பின்னர் நடிப்பு - இயக்கம் என பிஸியாகி விட்டதால் சின்னத்திரைக்கு முழுக்கு போட்டு விட்டார். இந்நிடலயில் சோனி டி.வி., மீண்டும் நடன நிகழ்ச்சி ஒன்றுக்கு நடுவராக்க முயற்சி *மேற்கொண்டு வருகிறதாம். பாலிவுட்டில் பிஸியாக இருக்கும் பிரபு*தேவாவும் இந்நிகழ்ச்சியை புதுப்பொலிவுடன் தொகுத்து வழங்க ஓ.கே. சொல்லி விட்டாராம்.


    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  6. #295
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    திக்... திக்... ஷூட்டிங்

    First Published : 27 Dec 2009 02:38:00 PM IST

    Last Updated :

    சின்னத்திரையில் வரும் "செல்லமே',​ "இதயம்',​ "பவானி',​ "தென்றல்'தொடர்களையும்,​ பெரியதிரையில் "ஜக்குபாய்',​ "புகைப்படம்',​ "நான் மகான் அல்ல' போன்ற படங்களையும் கைவசம் வைத்துக் கொண்டு மிகவும்,​​ சுறுசுறுப்பாகவும்,​​ பரபரப்பாகவும் இருக்கும் நீலிமாராணியை படப்பிடிப்பு இடைவேளையில் பிடித்தோம்.

    உங்கள் ​ நிஜப்பெயரே நீலிமாராணி தானா?​​

    அப்பா அம்மா வைத்த நிஜப்பெயர் ​ நீலிமா.​ இடையில் அப்பாதான் ராணியைச் சேர்த்தார்.​ இப்போ மறுபடியும் ​ நீலிமா மட்டும்தான்.​ ​ ​

    செல்லமே தொடரில் நடிக்கும் அனுபவம் எப்படி?​​

    ரொம்ப ரொம்ப திருப்தியா இருக்கு.​ எல்லாருமே பெரிய ​ ஆர்ட்டிஸ்ட்.​ ஒவ்வொரு ​ பிரேமிலும் அவங்ககூட நிற்கும்போது ​ நல்லா நடிக்கணுங்கிற பயம் இருந்துகிட்டே இருக்கும்.​ ராதிகா மேடமுக்குதான் ரொம்ப நன்றி சொல்லணும்.​ அவங்கதான் என்னை அந்தக் கதாபாத்திரத்துக்கு ரெக்கமண்ட் பண்ணினாங்க.​ நான் இதுவரை இந்த டைரக்டரோட ஒர்க் பண்ணினது கிடையாது.​ அவரைப் போய் பார்க்கும்போது சொன்னார்.​ ராதிகா மேடம் உங்களுக்கு அண்ணியா வருவாங்கன்னு.​ உடனே ஒத்துக்கிட்டேன்.​ அவுங்ககூட நடிப்பதோடு,​​ அமுதா மாதிரி ஒரு கேரக்டர் கிடைக்கும் போது அதை மிஸ் பண்ண எனக்கு மனசில்லை.​ ​ ​

    வருடக்கணக்கில் கோலங்கள் தொடரில் நடிக்கும் போது போர் அடிக்கவில்லையா எப்படி பீல் பண்ணிங்க?​​

    "கோலங்கள்' தொடர் ஆறு வருடங்கள் ஓடியது.​ அதில் நான் நாலு வருடங்கள் ஒர்க் பண்ணினேன்.​ ஆதி பின்னாடியே போகும் போதும்.​ கணவனை ஒதுக்குறமாதிரி வரும் போதும் சில சமயம் அப்படி தோணும்.​ ஆனா அந்த கேரக்டருக்கு எனக்கு நல்ல ரீச் இருந்தது.​ ரேகா என்றதும் உடனே அடையாளம் கண்டு கொள்ளும் அளவுக்கு ரீச் கிடைச்சது.​ இனிமே ரேகா மாதிரி ஒரு கேரக்டர் பண்ண முடியுமான்னு தெரியாது.​ "மெட்டி ஒலி'யில் சக்தின்னு ஒரு பாஸிடிவ்வான கேரக்டர் பண்ணிட்டு,​ அடுத்து உடனே ஒரு மாதம்கூட இடைவெளி இல்லாம நெகடிவ்வான கேரக்டர் செய்ததும் அதை பார்ப்பவர்களால உடனே ஏத்துக்க முடியல.​ எங்க போனாலும் திட்ட ​ ஆரம்பித்துவிட்டார்கள்.​ என்ன இப்படி பண்றீங்கன்னு கேட்க ஆரம்பித்தார்கள்.​ போகப் போக பார்த்துவிட்டு எல்லாரும் பாராட்டினாங்க.​ ​ ​

    அணுவளவும் பயமில்லை நிகழ்ச்சியில் கலந்து கொண்டது எப்படி இருந்தது?​​

    முதல்ல தைரியமா போயிட்டேன்.​ அங்கு போன பிறகுதான் ஒவ்வொரு டாஸ்க் பற்றி சொல்லும் போதும்.​ மனசு திக்திக்ன்னு அடித்துக் கொள்ளும்.​ செய்ய முடியுமா இல்ல போயிடுவமான்னு தோணும்.இருந்தாலும் மத்தவுங்க எல்லாம் செய்யும்போது என்னால ஏன் முடியாது செய்து தான் பார்ப்போமேன்னு தைரியத்தை வரவழைத்துக் கொள்வேன்.​ இன்னும் அணுஅளவு ஷூட்டிங் முடியல.​ ஒவ்வொரு முறை ஷூட்டிங் இருக்குன்னு சொல்லும்போது மூன்று நாட்களுக்கு முன்பே வயிற்றில் பட்டாம் பூச்சி பறக்க ஆரம்பித்து விடும்.​ அடுத்து என்ன கொடுக்க போறாங்களோன்னு பயமா இருக்கும்.​ ​

    பாத் ரூம்ல ஒரு கரப்பான்பூச்சியைப் பார்த்தாக்கூட உள்ளவே போகமாட்டேன் அப்படி இருக்கும் போது ஷூட்டிங்கில் கிட்டத் தட்ட ஐம்பது கரப்பான் பூச்சிகள் என் மேலே இருந்ததுனா அது கடவுள் துணைதான்.​ ​ ​

    சின்னத்திரை,பெரியதிரை இரண்டிலும் நடிக்கிறீங்க.​

    பெரியதிரையில் நடிக்கும் அனுபவம் எப்படியிருக்கு?​​

    சின்னத்திரை, ​​ பெரியதிரை ரெண்டுமே ​ நல்லா இருக்கு.​ அப்படி ஒண்ணும் பெரிய வித்தியாசம் தெரியல.​ சம்பளம்,​​ ஒர்க் பண்ற டைம்ல வித்தியாசம் இருக்கலாமே தவிர ஆர்ட்டிஸ்ட்டா ​ எந்த வித்தியாசமும் இல்ல.​ அது மட்டுமில்லாம நான் "தேவர்மகன்' படத்தின் மூலம் பெரியதிரையில்தான் முதன் முதலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானேன்.​ பெரியதிரையில் ​ நல்ல கேரக்டர்ஸ் கிடைப்பது கொஞ்சம் கஷ்டம்.​ சின்னத்திரையில் அந்தப் பிரச்சனை இருக்காது.​ பெரியதிரையில் பெரிய பெரிய ஆர்டிஸ்ட்ங்களோட ​ நாமளும் நிற்பது கொஞ்சம் கஷ்டம்.​ ​

    பெரியதிரையில் ​ இந்த மாதிரி ​ கேரக்டர் ​ வந்தால் நல்லா ​ இருக்கும்னு ​ ​ எதிர்பார்த்ததுண்டா?​​

    கண்டிப்பா அந்த எதிர்பார்ப்பு எல்லாருக்குமே இருக்கும்.​ இப்போ​ "நான் மகான் அல்ல' படத்தில் ஒரு கேரக்டர் நடிச்சுக்கிட்டு இருக்கேன்.​ ரொம்ப நல்ல கேரக்டர்.​ "மொழி' படத்தில் எனக்கு அமைந்த கேரக்டருக்கு பிறகு எனக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும் படமா கண்டிப்பா அமையும்ன்னு எதிர்பார்க்கிறேன்.​ ​

    வேறு என்ன தொடர்கள்,​​ படங்கள் நடித்துக்கொண்டிருக்கிறீர்கள்?​​

    சன்டிவியில் இரவு 7.00 மணிக்கு ஒளிபரப்பாகும் "இதயம்',​ ஒன்பது மணிக்கு வரும் "தென்றல்'.​ "செல்லமே' தொடரில் வரும் அமுதாவுக்கும்,​​ "தென்றல்' லாவண்யாவுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கும்.​ அடுத்து கலைஞர் டிவியில் வரும் "பவானி' தொடர்.​ அதில் ஒரு ஏழை பொண்ணா பண்ணியிருக்கேன்.​ இந்த மாதிரி நாலு தொடர்ல நாலு வித்தியாசமான கேரக்டர்ஸ் அமைவது ரொம்ப கஷ்டம்.​ எனக்கு அந்த வாய்ப்பு கிடைச்சிருக்கு.​ அதை நல்லா யூஸ் பண்ணனும்னு பயமும் இருக்கு.​ ​

    பெரிய திரையைப் பொறுத்தவரை "ஜக்குபாய்' செய்றேன்.​ அதில் ஒரு சின்ன கேரக்டர் தான் ஆனா ரொம்ப லவ்லியா இருக்கும்.​ அடுத்து "புகைப்படம்' அதில் ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ கல்லூரியில் ஒர்க் பண்ற டெக்னீஷியனா நடித்திருக்கேன்.​ டைரக்டர்,​​ நடிகர்ன்னு எல்லாமே புது டீம் புதுசு என்பதால அந்த எனர்ஜிய ரொம்ப நல்லா இருக்கு.​ அதை அடுத்து "ரசிக்கும் சீமானே'.​ அதில் காதல் தண்டபாணி சாரோட பொண்ணா ​ நடிச்சிருக்கேன்.​ வில்லனுக்கு பொண்ணா,​​ ஹீரோயினுக்கு ஃப்ரண்டா வருவேன்.​ க்ளைமாக்ஸ் சீன்ஸ் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கும்.​ ​ ​

    பாஸிடிவ்,​​ நெகடிவ் கேரக்டர் இந்த ரெண்டில் எது நல்ல ரீச் ஆகும்னு ​ ​ நினைக்கிறீங்க?​​

    நெகட்டிவ் கேரக்டர்தான் சீக்கிரமா ஒருத்தர் மனசுல போய் சேரும்.​ பாஸிடிவ் கேரக்டர்ன்னா அடுத்து இதுதான் பண்ணுவாங்க,இப்படி தான் வருவாங்கன்னு மக்கள் நினைப்பாங்க.​ ஆனா நெகட்டிவ் கேரக்டர் அப்படியில்லை.​ அடுத்து என்ன பண்ணப்போறங்கன்னு தெரியலையேன்னு ஒரு டென்ஷன் இருக்கும்.​ பேர் கிடைக்கறது ​ நெகடிவ்க்கு தான்.​ ​

    என்ன படிச்சிருக்கீங்க உங்கள் ஃபேமலிப் பற்றி சொல்லுங்க?​​

    பி.சி.ஏ ​ முடிச்சிருக்கேன்.​ ப்ளஸ்டு வரைக்கும் ரெகுலர்,​​ அதுக்கு பிறகு மெட்ராஸ்ல ​ யூனிவர்சிட்டியில் ​ கரஸ்ல பண்ணினேன்.​ அப்பா எட்டு மாதத்திற்கு முன்பு தவறிட்டார்.​ அம்மா அவுஸ் ஒய்ப்.​ தம்பி ப்ளஸ் ஒன் படிக்கிறான்.​ என் கணவர் பேரு இசை.​ அவரும் மீடியாவில்தான் இருக்கிறாரு.​ ​ ​

  7. #296
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    ஜீ டி.வி.யின் தமிழ் ஒளிபரப்பு விரைவில் 24 மணி நேர நியூஸ் சேனல் ஆகிறது. வழக்கமான நியூஸ் சேனல் பாணியில் இல்லாமல் சினிமா மற்றும் சீரியல் சம்மந்தமான பொழுதுபோக்கு செய்திகளுக்கு முக்கியத்துவம் இருக்குமாம். வெளிநாட்டு செய்திகளும் வந்து போகுமாம். மியூசிக் சேனல் ஒன்றும் துவக்கம் பெறுகிறதாம்.
    "அன்பே சிவம்.

  8. #297
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    நடிகர் விஜய்யின் சித்தி ஷீலாவின் மகன் நடிகர் விக்ராந்துக்கும், ஒளிப்பதிவாளர் ஹேமசந்தரின் மகள் மானஸாவிற்கும் கடந்த அக்டோபர் மாதம் நடந்தது. திருமணத்திற்கு முன்பு மலையாளத்தில் டி.வி., சீரியல்களில் நடித்து புகழ்பெற்ற மானஸா, இப்போது தமிழிலும் சின்னத்திரை தொடர்களில் நடிக்க முடிவு செய்திருக்கிறாராம். மலையாள சின்னத்திரையை கலக்கி, மலையாள ரசிகர்களின் பாராட்டை பெற்ற நான், விரைவில் தமிழ் ரசிகர்களையும் கவருவேன், என்கிறார் மானஸா.
    "அன்பே சிவம்.

  9. #298
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    சாமி​கிட்ட கேட்​டுட்​டுத்​தான் நடிக்க வந்​தேன்!

    ஜெயா டிவி​யில் சிவ​பக்​தை​யா​க​வும்,​​ சன்​டி​வி​யில் குழந்​தை​யைத் தொலைத்​து​விட்டு தேடும் தாயா​க​வும் அந்​தந்த கதா​பாத்​தி​ரத்​துக்கு ஏற்​றாற் போல் தன்னை மாற்​றிக்​கொண்டு மெகா சீரி​யல் இள​வ​ர​சி​யாக வலம் வந்து கொண்​டி​ருக்​கும் சந்​திரா லஷ்​மனை மலை​யாள மணம் கம​ழும் அவ​ரது இல்​லத்​தில் சந்​தித்​தோம்.​ ஷூட்​டிங் இல்​லையா என்​ற​தும் பள்​ளிக் குழந்​தை​யைப் போல் ரெண்டு நாள் லீவு என்று உற்​சா​கத்​தோடு சொல்​லி​விட்டு ஜாலி​யா​கப் பேசி​னார்.​



    * முதல்ல உங்​க​ளைப் பற்றி சொல்​லுங்க எப்​படி இந்த

    ஃபீல்​டுக்கு வந்​தீங்க?​



    நான் கேர​ளத்​துத் தமிழ்ப் பெண்.​ ​ ஓட்​டல் மேனேஜ்​மண்ட் படிச்​சி​ருக்​கேன்.​ திரைத்​து​றைக்கு வந்து பத்து வரு​டங்​கள் ஆகி​றது.​ ஆரம்​பத்​தில் மலை​யாள படங்​கள்,​​ தொடர்​கள் நடித்​துக் கொண்​டி​ருந்​தேன்.​ மூன்று வரு​டங்​க​ளாக தமிழ் இன்​டஸ்ட்​ரி​யில் நடித்​துக் கொண்​டி​ருக்​கி​றேன்.​ எங்க அப்பா இந்​துஸ்​தான் லீவ​ரில் ஒர்க் பண்​ணி​னார்,​அம்மா பேங்க்ல ஒர்க் பண்​றாங்க.​ கூட பிறந்​த​வங்க யாரும் இல்லை.​ பர​த​நாட்​டி​யம் இரண்​டரை வய​தில் இருந்து கற்​றுக்​கொண்​டேன்.​

    எல்​லா​ரும் சொல்​லு​வது மாதி​ரி​தான் ஆக்​ஸி​டன்ட்டா நடிக்க வந்​தேன்.​ ஒரு​முறை நண்​பர்​க​ளோட ஒய்.எம்.சி.ஏ.​ போய் இருந்​தோம்.​ அங்கே "ஏப்​ரல் மாதத்​தில்' படத்​தின் ஷூட்​டிங் நடந்​தது.​ அப்போ அந்த இடத்​தில் என்னை பார்த்​து​விட்டு நடிக்க கேட்​டாங்க.​

    ரொம்ப கம்​பல் பண்​ண​தால ரெண்டு ஷாட் ஸ்ரீகாந்த் காம்​பி​னே​ஷன்ல நடித்​தேன்.​ அதுக்​கு​பி​றகு நடிக்​கல.​ டைரக்​டர் ஸ்டேன்லி சார் இப்போ பார்த்​தப்​போ​கூட "சினி​மா​வுக்கு வர​மாட்​டேன்னு சொல்​லிட்டு இப்போ பாருங்க அதே பீல்​டுக்​கு​தான் வந்​தி​ருக்கே' என்​றார்.​ எனக்கு ஃபி​லிம் பேக்​ர​வுண்ட் கிடை​யாது.​ யார்​கிட்ட கேட்​ப​ன்னு தெரி​யல.​ சாமி முன்​னாடி சீட்டு குலுக்​கிப் போட்டு பார்த்​தோம்.​ அதில் முன்று முறை​யும் நடி​கைன்​னு​தான் வந்​தது.​ பிற​கு​தான் நடிக்க வந்​தேன்.​ ​



    * "காத​லிக்க நேர​மில்லை' தொடர் ஏன் பாதி​யில் நின்​று​விட்​டது?​ அதில் ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ உங்​கள் நடிப்பு பிர​மா​த​மாக இருந்தே சிங்​கப்​பூ​ரில் நடந்த மறக்க முடி​யாத அனு​ப​வம் என்ன?​



    பாதி ​யில் ​ நிற்​க​வில்லை.​ பிர​ஜ​னோட என்​னோட டிராக் மட்​டும் ​ நின்​று​விட்​டது.​ கதை மாறி​போ​ன​து​னால விரை​வாக முடித்​து​விட்​டார்​கள்.​ இப்​போ​கூட நிறைய பேர் என்​னி​டம் ​ "காத​லிக்க நேர​மில்லை' தொடர் பற்​றி​தான் ரொம்ப விசா​ரிப்​பார்​கள்.​ அந்​தத் தொட​ரின் டைட்​டில் சாங் பற்றி நிறைய சொல்​வார்​கள்.​

    அது ஒரு படத்​தின் பாட​லுக்கு இணை​யாக இருந்​தது.​ இன்​ன​மும் நிறைய பேர் அந்த டைட்​டில் சாங்கை தான் செல்​போ​னில் காலர் ட்யூ​னாக வைத்​துக்​கொண்டு இருக்​கி​றார்​கள்.​ ஒரு தொட​ருக்​காக சிங்​கப்​பூர் வரை போனதே மறக்க முடி​யாத அனு​ப​வம்​தான்.​ அந்​தத் ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ தொட​ருக்​காக என் சொந்​தக் குர​லில் டப் செய்​த​தும்,​​ முதன் முறையா என் குரலை ஸ்கீ​ரின்ல கேட்​ட​தை​யும் மறக்​கவே முடி​யாது.​

    ​நாங்​கள் ​ கேர​ளா​வில் இருந்த தமிழ் பெண் என்​ப​தால மைக்​கேல் மதன காம​ரா​ஜன் படத்​தில் வரு​கிற கமல் போல​தான் வீட்​டில் தமி​ழில் பேசிக்​கொள்​வோம்.​ எப்​ப​வுமே ஆத்​துக்கு போறேன்,​​ போய்ன்​றி​ருக்​கேன்.​ இப்​படி தான் வரும். ஆனால் அந்​தத் தொட​ரில் மதுரை பொண்ணு கேரக்​டர்.​ அந்த பேச்சே வேற மாதிரி இருக்​க​ணும்.​ பேசும் போது என் தமிழ் வந்​தி​டும்.​ பிர​ஜன் மலை​யாளி.​ ஆனா அவர் மலை​யா​ளத்தை விட தமிழ்​தான் நல்லா பேசு​வார்.​ அதே மாதிரி அந்​தத் தொட​ரின் டைரக்​ட​ரும் ஒரு ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ மலை​யாளி.​ நான் பேசும் போது தப்பு வந்தா கரெக்ட்டா கண்டு பிடிச்​சி​டு​வார்.​ இப்போ இந்​த​ள​வுக்​குத் தமிழ் பேசு​றேன்னா அது அந்​தத் தொடர் மூல​மா​தான்.​ ​

    ​​

    * மலை​யா​ள சினி​மா​வில் ​ நடித்​து​விட்டு,​​ இங்கே சீரிய​லில் நடிக்க வந்த போது எப்​படி பீல் பண்​ணிங்க என்ன வித்​தி​யா​சம் உணர்ந்​தீங்க?​



    மலை​யா​ ளத்​தி​லும் சீரி​யல் நிறைய நடித்​தி​ருக்​கி​றேன்.​ அங்கே ஒரு படத்​தோட செட்​டப் எப்​ப​டி​யி​ருக்​குமோ அந்த செட்​டப் இங்கே சீரி​ய​லுக்கே இருக்​கும்.​ அங்கே படத்​திற்கு ​ இருக்​கும் பிர​மாண்​டம் இங்கே சீரி​யல்ல இருக்​கும்.​ ​

    நிறைய வித்​தி​யா​சம் இருக்கு.​ ஒர்க்​கிங் ஸ்டைல்,​​ பட்​ஜட்,​​ ஒர்க்​கிங் டைம் என எல்​லாத்​து​லை​யும் வித்​தி​யா​சம் இருக்​கும்.​ மலை​யாள,​​ கன்​னட ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ இண்​டஸ்ட்ரி ​ கொஞ்​சம் சிறி​யது.​ காம்​பெக்ட்டா இருக்​கும்.​ தமிழ் இண்​டஸ்ட்ரி பெரிய இன்​டஸ்ட்ரி .​ இங்கே டெக்​னீக்​கல இருந்து எல்​லா​வற்​றி​லும் ரொம்ப அட்​வான்ஸô இருக்​கும்.​ இங்கே நிறைய டைம் கிடைக்​கும்.​ அங்கே கால்​ஷீட் எல்​லாம் கிடை​யாது.​ இரவு ஒன்​ப​தரை,​பத்​து​வ​ரைக்​கும் ஒர்க் பண்ண வேண்​டி​யி​ருக்​கும்.​ இங்கே கால்​ஷீட் வைத்து ஒர்க் பண்​றது ரொம்ப வச​தியா இருக்கு.​ ​



    * ஜோடி நம்​பர் ஒன் நிகழ்ச்​சி​யில் கலந்து கொண்டு பாதி​யில் வெளி​யேறி விட்​டீர்​களே அப்போ என்ன நினைத்​தீர்​கள்?​



    பாதி ​யில் வெளி​யே​ற​வில்லை.​ அந்த நேரத்​தில் எங்​க​ளுக்கு டைட் ஷெட்​யூல் போய்​கிட்டு இருந்​த​தால அதில் கலந்து கொள்​ளவே ரொம்ப யோசித்​தோம்.​ இருந்​தா​லும் எல்​லா​ரும் நிறைய நம்​பிக்கை கொடுத்​தார்​கள்.​ அப்போ நாங்​கள் தான் ஹிட்​ஜோ​டி​யாக இருந்​த​தால கட்​டா​ய​மாக கலந்து கொள்ள வேண்​டி​ருந்​தது.​ டான்ஸ்​ பி​ராக்​டிஸ் பண்ண எங்​க​ளுக்கு நேரமே கிடை​யாது.​

    முதல் ரவுண்​டி​லேயே எளி​மி​னேட் ஆகி​வி​டு​வோம் என்று நினைத்​தோம்.​ இருந்​தா​லும் டிரைப் பண்​ணிப் பார்க்​க​லாம் என்​று​தான் கலந்து கொண்​டோம்.​ அந்த சம​யத்​தில் நான் கேர​ளா​வில்​தான் தங்​கி​யி​ருந்​தேன்.​ கேர​ளா​வுக்​கும் சென்​னைக்​கும் போய்ட்டு போய்ட்டு வரு​வது ரொம்ப கஷ்​ட​மாக இருந்​தது.​ நாங்​கள் எதிர்​பார்த்த மாதிரி வெளி​யே​றி​விட்​டோம்.​ ​ ​

    ​ ​

    * பெரி​ய ​தி​ரை​யில் ​ வாய்ப்​பு​கள் வரு​கி​றதா?​



    இப்போ நிறையப் படத்​துக்​கா​கக் கூப்​பிட்​டார்​கள்.​ படங்​கள் நிறைய நடிப்​ப​தற்கு ஆசை​யி​ருக்​கி​றது.​ ஆனால் லீட் ரோல்​தான் பண்​ணு​வேன்னு கிடை​யாது.​ ஒரு படத்​தில் நடித்​தால் அதில் என்னை ஆடி​யன்ஸ் ஞாப​கம் வைத்​துக் கொள்ள வேண்​டும்.​ அந்த மாதிரி ரோல்ஸ் பண்​ண​னும்.​ இப்போ மூன்று படங்​கள் ​ நடித்​துக் கொண்​டி​ருக்​கி​றேன்.​

    ஒண்ணு தில்​லா​லங்​கடி அதில் மூவி ஓப்​ப​னிங்கே நானும்,​​ சத்​தி​யன் சார்,​​ தமன்னா தான் வரு​வோம்.​ "கிக்'ங்​கிற தெலுங்கு படத்​தோட ரீமேக் இது.​ ரொம்ப காம​டியா மிக்ஸ்​டா​இ​ருக்​கும்.​ நாலைந்து நாள் சூட்​டிங் மகாப​லி​பு​ரத்​தில் இருந்​தது.​ மகாப​லி​பு​ரமே களைக்​கட்டி விட்​டது.​ ​

    அடுத் ​தது சத்​ய​ஜோதி பிலிம்​úஸôட டூவன்ட்டி டூவன்ட்டி நடிக்​கி​றேன்.​ ஹீரோ​வோட அக்​காவா பண்​றேன்.​ ​ அதற்கு அடுத்து பி.வாசு சாரோட படம் அது பிப்​ர​வ​ரி​தான் ஸ்டார்ட் பண்​றாங்க.​ ​ ​



    * என்ன மாதிரி கேரக்​டர்ஸ் பிடிக்​கும். நடிக்க

    விரும்​பு​கி​றீர்​கள்?​

    ​ ஆரம்​பத்​தில் இருந்தே ரொம்ப செலக்​டீவ்​வான கேரக்​டர்ஸ்​தான் நான் பண்​றேன்.​ ஒரு எக்ஸ்​பி​ரி​மண்ட்​டான கேரக்​டரா இருக்​க​னும்.​ அதே மாதிரி எல்​லா​வி​த​மான கேரக்​ட​ரும் பண்​ண​னும்.​ ​ அப்​போ​தான் ஒரு ஆர்​டிஸ்ட்டா கம்ப்​ளிட் ஆவ​தாக அர்த்​தம்.​ மலை​யா​ளத்​தில் என் முதல் படம் பிர்த்​வி​ராஜ் கூட பண்​ணி​னேன்,​​ அதில் ரொம்ப மென்​மை​யான ரோல் பண்​ணி​னேன்.​ அதை தொடர்ந்து உடனே ஒரு சீரி​யல்ல பக்கா நெக​டீவ் ரோல் வந்​தது.​ மென்​மை​யான ரோல்ல பார்த்​த​வங்​க​ளுக்கு சர்​பி​ரை​ஸôக இருந்​தது.​ அதை ​ தொடர்ந்து சைக்​கோவா பண்​ணி​னேன்.​ சினிமா,​​ சீரி​யல்ன்னு வித்​தி​யா​சம் எது​வும் பார்க்​க​வில்லை.​ என்ன கேரக்​டர் பண்​றேன் என்​பது தான் முக்​கி​யம்.​ ​



    நட​னப் பயிற்​சிக்கு நேரம் ​ கிடைக்​கி​றதா?​

    நாட் ​டி​யம் எல்​லாம் பத்​தா​வது படிக்​கும் போதே நிறுத்​தி​விட்​டேன்.​ அரங்​கேற்​றம் பண்​ண​வில்​லை​யென்​றா​லும் நிறைய கற்​றுக் கொண்​டேன்.​ என்​னோட முதல் டான்ஸ் குரு சாந்தி கிருஷ்ணா.​ "மணல் கயிறு' படத்​தில் எஸ்.வி.சேக​ருக்கு ஜோடியா நடித்​தாரே அவர்​தான்.​ ​ ​

    http://dinamani.com/edition/story.as...44&SEO=&Title=



  10. #299
    Senior Member Diamond Hubber HonestRaj's Avatar
    Join Date
    Aug 2008
    Posts
    7,900
    Post Thanks / Like
    Anybody watching "JAI SRIKRISHNA" in RAJ TV..

    The child acting as KRISHNA is soooooooooo cute both in expressions & look


  11. #300
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like

    துளிகள்

    * குடும்பப்பாங்கான படங்களை நகைச்சுவை கலந்து தந்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் டைரக்டர் வி.சேகர். பெரியதிரையைத் தொடர்ந்து சின்னத்திரையிலும் தொடர்களை இயக்கிவரும் வி.சேகர் இப்போது ராஜ் டிவிக்காக ஒரு தொடரை இயக்குகிறார். இந்த தொடருக்கு `வீட்டுக்கு வீடு' என்று பெயர் வைத்திருக்கிறார்.

    * டைரக்டர் திருமுருகன் தனது மெட்டி ஒலி தொடருக்குப் பின் இயக்கவிருக்கும் புதிய தொடர் நாதஸ்வரம். தஞ்சை மாவட்டப் பின்னணியில் உருவாகவிருக்கும் இந்தக் குடும்பக்கதையை முதல் கட்டமாக காரைக்குடியில் படமாக்க விருக்கிறார். தொடரில் பெருமளவில் புதுமுகங்கள் நடிக்கவிருப்பதால் இந்த தொடர்மூலம் பல நட்சத்திரங்கள் திரைக்கு கிடைப்பார்கள்.

    * நடிகை லட்சுமியும் சின்னத்திரை தொடருக்கு வந்து விட்டார். கணவர் சிவச்சந்திரனுடன் இணைந்து இவர் தயாரிக்கும் மகாலட்சுமி தொடரில் இந்த தம்பதிகள் தான் நாயக-நாயகி. காரணம் இவர்களைச் சுற்றியே கதை பின்னப்பட்டிருக்கிறது.

    * பிரபல கர்நாடக இசைப்பாடகி அனுராதா கிருஷ்ணமூர்த்தி, இசைக்கச்சேரியுடன் சின்னத்திரை நடிப்பையும் தொடர்கிறார். நடிப்பு விஷயத்தில் நல்ல கதையம்சம் கொண்ட சீரியல்களே இவர் சாய்ஸ் என்பதால், திருப்பாவை மாதிரியான தொடர்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடிக்கிறார்.

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

Page 30 of 63 FirstFirst ... 20282930313240 ... LastLast

Similar Threads

  1. Musicians,events,anecdotes and tid-bits
    By rajraj in forum Indian Classical Music
    Replies: 223
    Last Post: 16th November 2020, 09:33 AM
  2. IR music bits as ringtone (mp3)
    By dochu in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 8
    Last Post: 17th June 2009, 03:05 PM
  3. Tid Bits Memories of Yesteryears
    By R.Latha in forum Memories of Yesteryears
    Replies: 0
    Last Post: 24th April 2009, 01:18 PM
  4. Tit Bits
    By R.Latha in forum TV,TV Serials and Radio
    Replies: 5
    Last Post: 1st March 2009, 12:13 AM
  5. THAMIZH - THULHIHALH (Tamil Tit-Bits & Episodes)
    By Oldposts in forum Tamil Literature
    Replies: 62
    Last Post: 29th January 2009, 10:02 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •