-
26th December 2009, 08:13 PM
#291
Moderator
Diamond Hubber
புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள்
வரும் வியாழன் டிசம்பர் 31 முதலே பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை நேயர்களுக்காக ஒளிபரப்புகிறது விஜய் டிவி.
31-ந் தேதி இரவு 10 மணிக்கு `நடந்தது என்ன' ஸ்பெஷல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
இந்த சிறப்பு நிகழ்ச்சியில் சிறந்த பத்து பிரபலமானவர்களை வெவ்வேறு துறைகளிலிருந்து அழைத்து வந்து 2009-ம் ஆண்டில் நடைபெற்ற சிறந்த பத்து நிகழ்வுகளை பற்றி நினைவு கூர்ந்து வழங்கவுள்ளனர். சினிமா, அரசியல், சமுதாய வாழ்க்கை முறை, கல்வி, சீர்திருத்தம் என எல்லா வகையிலும் இந்த நினைவு கூறல் இருக்கும்.
2010-ம் ஆண்டின் முதல் நாளான ஜனவரி-1 அன்று காலை முதல் வித்தியாசமான பல சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்கவுள்ளது விஜய் டிவி.
காலை 9 மணிக்கு `காபி வித் அனு சீசன்-3' நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக `ஆயிரத்தில் ஒருவன்' ஜோடி கார்த்தி- ரீமாசென், படத்தின் இயக்குனர் செல்வராகவன் ஆகியோர் பங்குபெறுகிறார்கள்.
காலை 10 மணிக்கு `புத்தாண்டு சிறப்பு `நீயா? நானா?' நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். இதில் புத்தாண்டு பலன்கள், அவரவர் ராசிகளுக்கு ஏற்ற நன்மைகளையும் எடுத்துக்கூற ஜோதிட நிபுணர்கள் வருகின்றனர்.
நன்றி: தினதந்தி
-
26th December 2009 08:13 PM
# ADS
Circuit advertisement
-
26th December 2009, 08:20 PM
#292
Moderator
Diamond Hubber
ஆரிக் மீடியா சார்பில் நடிகரும் எம்,பியுமான ஜே.கே.ரித்தீஸ் கலைஞர் டிவியில் விரைவில் சுகன்யா நடிப்பில் வெளிவர இருக்கும் ஆண்டாள் சீரியலை வெகு விமரிசையாக எடுத்து முடித்திருக்கிறார். ஜனவரி 2ம் வாரத்தில் இருந்து ஒளிபரப்பாக விருக்கிறது.இதையடுத்து தனது பலவருட நண்பர் ஆதம் பாவா இயக்கத்தில் வேட்டைப் புலி திரைப்படத்தில் நடிக்க விருக்கிறார்.இந்தி மற்றும் தமிழில் மிகப்பெரிய பட்ஜெட்டில் தாயாராக உள்ளது. பூஜையை மிகப் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர். தமிழ், இந்தியில் தயாராவதால் - இரு மொழிகளிலும் உள்ள முக்கிய நடிகைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும்.
நன்றி: தினமலர்
-
26th December 2009, 08:21 PM
#293
Moderator
Diamond Hubber
சின்னத்திரை சீரியல்களில் பிஸியாக இருந்து வந்த நடிகை தேவயானி, இப்போது எல்லா சீரியல்களையும் முடித்து கொடுத்து விட்டு அடுத்த களத்திற்கு செல்ல தயாராகி விட்டார். சின்னத்திரையில் இருந்து *மீண்டும் வெள்ளித்திரைக்கு வாருங்கள் என்று பலரும் தேவயானிக்கு அழைப்பு விடுக்கிறார்களாம். நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு வருவதால் தற்போது அம்மணி தினமும் 5 கதைகளை கேட்டு வருகிறாராம். கதையோடு, தனது கதாபாத்திரம் பிடித்திருந்தால் மட்டுமே ஒத்துக் கொள்வாராம். விரைவில் தேவயானியை பெரிய திரையில் பார்க்கலாம்!
நன்றி: தினமலர்
-
26th December 2009, 08:21 PM
#294
Moderator
Diamond Hubber
பிரபுதேவா நடனப்புயலாக சுழன்று கொண்டிருந்த வேளையில் சோனி டி.வி.,யின் நடன நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக இருந்தார். அதன் பின்னர் நடிப்பு - இயக்கம் என பிஸியாகி விட்டதால் சின்னத்திரைக்கு முழுக்கு போட்டு விட்டார். இந்நிடலயில் சோனி டி.வி., மீண்டும் நடன நிகழ்ச்சி ஒன்றுக்கு நடுவராக்க முயற்சி *மேற்கொண்டு வருகிறதாம். பாலிவுட்டில் பிஸியாக இருக்கும் பிரபு*தேவாவும் இந்நிகழ்ச்சியை புதுப்பொலிவுடன் தொகுத்து வழங்க ஓ.கே. சொல்லி விட்டாராம்.
நன்றி: தினமலர்
-
30th December 2009, 02:37 PM
#295
Senior Member
Seasoned Hubber
திக்... திக்... ஷூட்டிங்
First Published : 27 Dec 2009 02:38:00 PM IST
Last Updated :
சின்னத்திரையில் வரும் "செல்லமே', "இதயம்', "பவானி', "தென்றல்'தொடர்களையும், பெரியதிரையில் "ஜக்குபாய்', "புகைப்படம்', "நான் மகான் அல்ல' போன்ற படங்களையும் கைவசம் வைத்துக் கொண்டு மிகவும், சுறுசுறுப்பாகவும், பரபரப்பாகவும் இருக்கும் நீலிமாராணியை படப்பிடிப்பு இடைவேளையில் பிடித்தோம்.
உங்கள் நிஜப்பெயரே நீலிமாராணி தானா?
அப்பா அம்மா வைத்த நிஜப்பெயர் நீலிமா. இடையில் அப்பாதான் ராணியைச் சேர்த்தார். இப்போ மறுபடியும் நீலிமா மட்டும்தான்.
செல்லமே தொடரில் நடிக்கும் அனுபவம் எப்படி?
ரொம்ப ரொம்ப திருப்தியா இருக்கு. எல்லாருமே பெரிய ஆர்ட்டிஸ்ட். ஒவ்வொரு பிரேமிலும் அவங்ககூட நிற்கும்போது நல்லா நடிக்கணுங்கிற பயம் இருந்துகிட்டே இருக்கும். ராதிகா மேடமுக்குதான் ரொம்ப நன்றி சொல்லணும். அவங்கதான் என்னை அந்தக் கதாபாத்திரத்துக்கு ரெக்கமண்ட் பண்ணினாங்க. நான் இதுவரை இந்த டைரக்டரோட ஒர்க் பண்ணினது கிடையாது. அவரைப் போய் பார்க்கும்போது சொன்னார். ராதிகா மேடம் உங்களுக்கு அண்ணியா வருவாங்கன்னு. உடனே ஒத்துக்கிட்டேன். அவுங்ககூட நடிப்பதோடு, அமுதா மாதிரி ஒரு கேரக்டர் கிடைக்கும் போது அதை மிஸ் பண்ண எனக்கு மனசில்லை.
வருடக்கணக்கில் கோலங்கள் தொடரில் நடிக்கும் போது போர் அடிக்கவில்லையா எப்படி பீல் பண்ணிங்க?
"கோலங்கள்' தொடர் ஆறு வருடங்கள் ஓடியது. அதில் நான் நாலு வருடங்கள் ஒர்க் பண்ணினேன். ஆதி பின்னாடியே போகும் போதும். கணவனை ஒதுக்குறமாதிரி வரும் போதும் சில சமயம் அப்படி தோணும். ஆனா அந்த கேரக்டருக்கு எனக்கு நல்ல ரீச் இருந்தது. ரேகா என்றதும் உடனே அடையாளம் கண்டு கொள்ளும் அளவுக்கு ரீச் கிடைச்சது. இனிமே ரேகா மாதிரி ஒரு கேரக்டர் பண்ண முடியுமான்னு தெரியாது. "மெட்டி ஒலி'யில் சக்தின்னு ஒரு பாஸிடிவ்வான கேரக்டர் பண்ணிட்டு, அடுத்து உடனே ஒரு மாதம்கூட இடைவெளி இல்லாம நெகடிவ்வான கேரக்டர் செய்ததும் அதை பார்ப்பவர்களால உடனே ஏத்துக்க முடியல. எங்க போனாலும் திட்ட ஆரம்பித்துவிட்டார்கள். என்ன இப்படி பண்றீங்கன்னு கேட்க ஆரம்பித்தார்கள். போகப் போக பார்த்துவிட்டு எல்லாரும் பாராட்டினாங்க.
அணுவளவும் பயமில்லை நிகழ்ச்சியில் கலந்து கொண்டது எப்படி இருந்தது?
முதல்ல தைரியமா போயிட்டேன். அங்கு போன பிறகுதான் ஒவ்வொரு டாஸ்க் பற்றி சொல்லும் போதும். மனசு திக்திக்ன்னு அடித்துக் கொள்ளும். செய்ய முடியுமா இல்ல போயிடுவமான்னு தோணும்.இருந்தாலும் மத்தவுங்க எல்லாம் செய்யும்போது என்னால ஏன் முடியாது செய்து தான் பார்ப்போமேன்னு தைரியத்தை வரவழைத்துக் கொள்வேன். இன்னும் அணுஅளவு ஷூட்டிங் முடியல. ஒவ்வொரு முறை ஷூட்டிங் இருக்குன்னு சொல்லும்போது மூன்று நாட்களுக்கு முன்பே வயிற்றில் பட்டாம் பூச்சி பறக்க ஆரம்பித்து விடும். அடுத்து என்ன கொடுக்க போறாங்களோன்னு பயமா இருக்கும்.
பாத் ரூம்ல ஒரு கரப்பான்பூச்சியைப் பார்த்தாக்கூட உள்ளவே போகமாட்டேன் அப்படி இருக்கும் போது ஷூட்டிங்கில் கிட்டத் தட்ட ஐம்பது கரப்பான் பூச்சிகள் என் மேலே இருந்ததுனா அது கடவுள் துணைதான்.
சின்னத்திரை,பெரியதிரை இரண்டிலும் நடிக்கிறீங்க.
பெரியதிரையில் நடிக்கும் அனுபவம் எப்படியிருக்கு?
சின்னத்திரை, பெரியதிரை ரெண்டுமே நல்லா இருக்கு. அப்படி ஒண்ணும் பெரிய வித்தியாசம் தெரியல. சம்பளம், ஒர்க் பண்ற டைம்ல வித்தியாசம் இருக்கலாமே தவிர ஆர்ட்டிஸ்ட்டா எந்த வித்தியாசமும் இல்ல. அது மட்டுமில்லாம நான் "தேவர்மகன்' படத்தின் மூலம் பெரியதிரையில்தான் முதன் முதலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானேன். பெரியதிரையில் நல்ல கேரக்டர்ஸ் கிடைப்பது கொஞ்சம் கஷ்டம். சின்னத்திரையில் அந்தப் பிரச்சனை இருக்காது. பெரியதிரையில் பெரிய பெரிய ஆர்டிஸ்ட்ங்களோட நாமளும் நிற்பது கொஞ்சம் கஷ்டம்.
பெரியதிரையில் இந்த மாதிரி கேரக்டர் வந்தால் நல்லா இருக்கும்னு எதிர்பார்த்ததுண்டா?
கண்டிப்பா அந்த எதிர்பார்ப்பு எல்லாருக்குமே இருக்கும். இப்போ "நான் மகான் அல்ல' படத்தில் ஒரு கேரக்டர் நடிச்சுக்கிட்டு இருக்கேன். ரொம்ப நல்ல கேரக்டர். "மொழி' படத்தில் எனக்கு அமைந்த கேரக்டருக்கு பிறகு எனக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும் படமா கண்டிப்பா அமையும்ன்னு எதிர்பார்க்கிறேன்.
வேறு என்ன தொடர்கள், படங்கள் நடித்துக்கொண்டிருக்கிறீர்கள்?
சன்டிவியில் இரவு 7.00 மணிக்கு ஒளிபரப்பாகும் "இதயம்', ஒன்பது மணிக்கு வரும் "தென்றல்'. "செல்லமே' தொடரில் வரும் அமுதாவுக்கும், "தென்றல்' லாவண்யாவுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கும். அடுத்து கலைஞர் டிவியில் வரும் "பவானி' தொடர். அதில் ஒரு ஏழை பொண்ணா பண்ணியிருக்கேன். இந்த மாதிரி நாலு தொடர்ல நாலு வித்தியாசமான கேரக்டர்ஸ் அமைவது ரொம்ப கஷ்டம். எனக்கு அந்த வாய்ப்பு கிடைச்சிருக்கு. அதை நல்லா யூஸ் பண்ணனும்னு பயமும் இருக்கு.
பெரிய திரையைப் பொறுத்தவரை "ஜக்குபாய்' செய்றேன். அதில் ஒரு சின்ன கேரக்டர் தான் ஆனா ரொம்ப லவ்லியா இருக்கும். அடுத்து "புகைப்படம்' அதில் கல்லூரியில் ஒர்க் பண்ற டெக்னீஷியனா நடித்திருக்கேன். டைரக்டர், நடிகர்ன்னு எல்லாமே புது டீம் புதுசு என்பதால அந்த எனர்ஜிய ரொம்ப நல்லா இருக்கு. அதை அடுத்து "ரசிக்கும் சீமானே'. அதில் காதல் தண்டபாணி சாரோட பொண்ணா நடிச்சிருக்கேன். வில்லனுக்கு பொண்ணா, ஹீரோயினுக்கு ஃப்ரண்டா வருவேன். க்ளைமாக்ஸ் சீன்ஸ் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கும்.
பாஸிடிவ், நெகடிவ் கேரக்டர் இந்த ரெண்டில் எது நல்ல ரீச் ஆகும்னு நினைக்கிறீங்க?
நெகட்டிவ் கேரக்டர்தான் சீக்கிரமா ஒருத்தர் மனசுல போய் சேரும். பாஸிடிவ் கேரக்டர்ன்னா அடுத்து இதுதான் பண்ணுவாங்க,இப்படி தான் வருவாங்கன்னு மக்கள் நினைப்பாங்க. ஆனா நெகட்டிவ் கேரக்டர் அப்படியில்லை. அடுத்து என்ன பண்ணப்போறங்கன்னு தெரியலையேன்னு ஒரு டென்ஷன் இருக்கும். பேர் கிடைக்கறது நெகடிவ்க்கு தான்.
என்ன படிச்சிருக்கீங்க உங்கள் ஃபேமலிப் பற்றி சொல்லுங்க?
பி.சி.ஏ முடிச்சிருக்கேன். ப்ளஸ்டு வரைக்கும் ரெகுலர், அதுக்கு பிறகு மெட்ராஸ்ல யூனிவர்சிட்டியில் கரஸ்ல பண்ணினேன். அப்பா எட்டு மாதத்திற்கு முன்பு தவறிட்டார். அம்மா அவுஸ் ஒய்ப். தம்பி ப்ளஸ் ஒன் படிக்கிறான். என் கணவர் பேரு இசை. அவரும் மீடியாவில்தான் இருக்கிறாரு.
-
9th January 2010, 10:48 PM
#296
Moderator
Diamond Hubber
ஜீ டி.வி.யின் தமிழ் ஒளிபரப்பு விரைவில் 24 மணி நேர நியூஸ் சேனல் ஆகிறது. வழக்கமான நியூஸ் சேனல் பாணியில் இல்லாமல் சினிமா மற்றும் சீரியல் சம்மந்தமான பொழுதுபோக்கு செய்திகளுக்கு முக்கியத்துவம் இருக்குமாம். வெளிநாட்டு செய்திகளும் வந்து போகுமாம். மியூசிக் சேனல் ஒன்றும் துவக்கம் பெறுகிறதாம்.
-
9th January 2010, 10:49 PM
#297
Moderator
Diamond Hubber
நடிகர் விஜய்யின் சித்தி ஷீலாவின் மகன் நடிகர் விக்ராந்துக்கும், ஒளிப்பதிவாளர் ஹேமசந்தரின் மகள் மானஸாவிற்கும் கடந்த அக்டோபர் மாதம் நடந்தது. திருமணத்திற்கு முன்பு மலையாளத்தில் டி.வி., சீரியல்களில் நடித்து புகழ்பெற்ற மானஸா, இப்போது தமிழிலும் சின்னத்திரை தொடர்களில் நடிக்க முடிவு செய்திருக்கிறாராம். மலையாள சின்னத்திரையை கலக்கி, மலையாள ரசிகர்களின் பாராட்டை பெற்ற நான், விரைவில் தமிழ் ரசிகர்களையும் கவருவேன், என்கிறார் மானஸா.
-
11th January 2010, 01:50 PM
#298
Senior Member
Seasoned Hubber
சாமிகிட்ட கேட்டுட்டுத்தான் நடிக்க வந்தேன்!
ஜெயா டிவியில் சிவபக்தையாகவும், சன்டிவியில் குழந்தையைத் தொலைத்துவிட்டு தேடும் தாயாகவும் அந்தந்த கதாபாத்திரத்துக்கு ஏற்றாற் போல் தன்னை மாற்றிக்கொண்டு மெகா சீரியல் இளவரசியாக வலம் வந்து கொண்டிருக்கும் சந்திரா லஷ்மனை மலையாள மணம் கமழும் அவரது இல்லத்தில் சந்தித்தோம். ஷூட்டிங் இல்லையா என்றதும் பள்ளிக் குழந்தையைப் போல் ரெண்டு நாள் லீவு என்று உற்சாகத்தோடு சொல்லிவிட்டு ஜாலியாகப் பேசினார்.
* முதல்ல உங்களைப் பற்றி சொல்லுங்க எப்படி இந்த
ஃபீல்டுக்கு வந்தீங்க?
நான் கேரளத்துத் தமிழ்ப் பெண். ஓட்டல் மேனேஜ்மண்ட் படிச்சிருக்கேன். திரைத்துறைக்கு வந்து பத்து வருடங்கள் ஆகிறது. ஆரம்பத்தில் மலையாள படங்கள், தொடர்கள் நடித்துக் கொண்டிருந்தேன். மூன்று வருடங்களாக தமிழ் இன்டஸ்ட்ரியில் நடித்துக் கொண்டிருக்கிறேன். எங்க அப்பா இந்துஸ்தான் லீவரில் ஒர்க் பண்ணினார்,அம்மா பேங்க்ல ஒர்க் பண்றாங்க. கூட பிறந்தவங்க யாரும் இல்லை. பரதநாட்டியம் இரண்டரை வயதில் இருந்து கற்றுக்கொண்டேன்.
எல்லாரும் சொல்லுவது மாதிரிதான் ஆக்ஸிடன்ட்டா நடிக்க வந்தேன். ஒருமுறை நண்பர்களோட ஒய்.எம்.சி.ஏ. போய் இருந்தோம். அங்கே "ஏப்ரல் மாதத்தில்' படத்தின் ஷூட்டிங் நடந்தது. அப்போ அந்த இடத்தில் என்னை பார்த்துவிட்டு நடிக்க கேட்டாங்க.
ரொம்ப கம்பல் பண்ணதால ரெண்டு ஷாட் ஸ்ரீகாந்த் காம்பினேஷன்ல நடித்தேன். அதுக்குபிறகு நடிக்கல. டைரக்டர் ஸ்டேன்லி சார் இப்போ பார்த்தப்போகூட "சினிமாவுக்கு வரமாட்டேன்னு சொல்லிட்டு இப்போ பாருங்க அதே பீல்டுக்குதான் வந்திருக்கே' என்றார். எனக்கு ஃபிலிம் பேக்ரவுண்ட் கிடையாது. யார்கிட்ட கேட்பன்னு தெரியல. சாமி முன்னாடி சீட்டு குலுக்கிப் போட்டு பார்த்தோம். அதில் முன்று முறையும் நடிகைன்னுதான் வந்தது. பிறகுதான் நடிக்க வந்தேன்.
* "காதலிக்க நேரமில்லை' தொடர் ஏன் பாதியில் நின்றுவிட்டது? அதில் உங்கள் நடிப்பு பிரமாதமாக இருந்தே சிங்கப்பூரில் நடந்த மறக்க முடியாத அனுபவம் என்ன?
பாதி யில் நிற்கவில்லை. பிரஜனோட என்னோட டிராக் மட்டும் நின்றுவிட்டது. கதை மாறிபோனதுனால விரைவாக முடித்துவிட்டார்கள். இப்போகூட நிறைய பேர் என்னிடம் "காதலிக்க நேரமில்லை' தொடர் பற்றிதான் ரொம்ப விசாரிப்பார்கள். அந்தத் தொடரின் டைட்டில் சாங் பற்றி நிறைய சொல்வார்கள்.
அது ஒரு படத்தின் பாடலுக்கு இணையாக இருந்தது. இன்னமும் நிறைய பேர் அந்த டைட்டில் சாங்கை தான் செல்போனில் காலர் ட்யூனாக வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஒரு தொடருக்காக சிங்கப்பூர் வரை போனதே மறக்க முடியாத அனுபவம்தான். அந்தத் தொடருக்காக என் சொந்தக் குரலில் டப் செய்ததும், முதன் முறையா என் குரலை ஸ்கீரின்ல கேட்டதையும் மறக்கவே முடியாது.
நாங்கள் கேரளாவில் இருந்த தமிழ் பெண் என்பதால மைக்கேல் மதன காமராஜன் படத்தில் வருகிற கமல் போலதான் வீட்டில் தமிழில் பேசிக்கொள்வோம். எப்பவுமே ஆத்துக்கு போறேன், போய்ன்றிருக்கேன். இப்படி தான் வரும். ஆனால் அந்தத் தொடரில் மதுரை பொண்ணு கேரக்டர். அந்த பேச்சே வேற மாதிரி இருக்கணும். பேசும் போது என் தமிழ் வந்திடும். பிரஜன் மலையாளி. ஆனா அவர் மலையாளத்தை விட தமிழ்தான் நல்லா பேசுவார். அதே மாதிரி அந்தத் தொடரின் டைரக்டரும் ஒரு மலையாளி. நான் பேசும் போது தப்பு வந்தா கரெக்ட்டா கண்டு பிடிச்சிடுவார். இப்போ இந்தளவுக்குத் தமிழ் பேசுறேன்னா அது அந்தத் தொடர் மூலமாதான்.
* மலையாள சினிமாவில் நடித்துவிட்டு, இங்கே சீரியலில் நடிக்க வந்த போது எப்படி பீல் பண்ணிங்க என்ன வித்தியாசம் உணர்ந்தீங்க?
மலையா ளத்திலும் சீரியல் நிறைய நடித்திருக்கிறேன். அங்கே ஒரு படத்தோட செட்டப் எப்படியிருக்குமோ அந்த செட்டப் இங்கே சீரியலுக்கே இருக்கும். அங்கே படத்திற்கு இருக்கும் பிரமாண்டம் இங்கே சீரியல்ல இருக்கும்.
நிறைய வித்தியாசம் இருக்கு. ஒர்க்கிங் ஸ்டைல், பட்ஜட், ஒர்க்கிங் டைம் என எல்லாத்துலையும் வித்தியாசம் இருக்கும். மலையாள, கன்னட இண்டஸ்ட்ரி கொஞ்சம் சிறியது. காம்பெக்ட்டா இருக்கும். தமிழ் இண்டஸ்ட்ரி பெரிய இன்டஸ்ட்ரி . இங்கே டெக்னீக்கல இருந்து எல்லாவற்றிலும் ரொம்ப அட்வான்ஸô இருக்கும். இங்கே நிறைய டைம் கிடைக்கும். அங்கே கால்ஷீட் எல்லாம் கிடையாது. இரவு ஒன்பதரை,பத்துவரைக்கும் ஒர்க் பண்ண வேண்டியிருக்கும். இங்கே கால்ஷீட் வைத்து ஒர்க் பண்றது ரொம்ப வசதியா இருக்கு.
* ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாதியில் வெளியேறி விட்டீர்களே அப்போ என்ன நினைத்தீர்கள்?
பாதி யில் வெளியேறவில்லை. அந்த நேரத்தில் எங்களுக்கு டைட் ஷெட்யூல் போய்கிட்டு இருந்ததால அதில் கலந்து கொள்ளவே ரொம்ப யோசித்தோம். இருந்தாலும் எல்லாரும் நிறைய நம்பிக்கை கொடுத்தார்கள். அப்போ நாங்கள் தான் ஹிட்ஜோடியாக இருந்ததால கட்டாயமாக கலந்து கொள்ள வேண்டிருந்தது. டான்ஸ் பிராக்டிஸ் பண்ண எங்களுக்கு நேரமே கிடையாது.
முதல் ரவுண்டிலேயே எளிமினேட் ஆகிவிடுவோம் என்று நினைத்தோம். இருந்தாலும் டிரைப் பண்ணிப் பார்க்கலாம் என்றுதான் கலந்து கொண்டோம். அந்த சமயத்தில் நான் கேரளாவில்தான் தங்கியிருந்தேன். கேரளாவுக்கும் சென்னைக்கும் போய்ட்டு போய்ட்டு வருவது ரொம்ப கஷ்டமாக இருந்தது. நாங்கள் எதிர்பார்த்த மாதிரி வெளியேறிவிட்டோம்.
* பெரிய திரையில் வாய்ப்புகள் வருகிறதா?
இப்போ நிறையப் படத்துக்காகக் கூப்பிட்டார்கள். படங்கள் நிறைய நடிப்பதற்கு ஆசையிருக்கிறது. ஆனால் லீட் ரோல்தான் பண்ணுவேன்னு கிடையாது. ஒரு படத்தில் நடித்தால் அதில் என்னை ஆடியன்ஸ் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும். அந்த மாதிரி ரோல்ஸ் பண்ணனும். இப்போ மூன்று படங்கள் நடித்துக் கொண்டிருக்கிறேன்.
ஒண்ணு தில்லாலங்கடி அதில் மூவி ஓப்பனிங்கே நானும், சத்தியன் சார், தமன்னா தான் வருவோம். "கிக்'ங்கிற தெலுங்கு படத்தோட ரீமேக் இது. ரொம்ப காமடியா மிக்ஸ்டாஇருக்கும். நாலைந்து நாள் சூட்டிங் மகாபலிபுரத்தில் இருந்தது. மகாபலிபுரமே களைக்கட்டி விட்டது.
அடுத் தது சத்யஜோதி பிலிம்úஸôட டூவன்ட்டி டூவன்ட்டி நடிக்கிறேன். ஹீரோவோட அக்காவா பண்றேன். அதற்கு அடுத்து பி.வாசு சாரோட படம் அது பிப்ரவரிதான் ஸ்டார்ட் பண்றாங்க.
* என்ன மாதிரி கேரக்டர்ஸ் பிடிக்கும். நடிக்க
விரும்புகிறீர்கள்?
ஆரம்பத்தில் இருந்தே ரொம்ப செலக்டீவ்வான கேரக்டர்ஸ்தான் நான் பண்றேன். ஒரு எக்ஸ்பிரிமண்ட்டான கேரக்டரா இருக்கனும். அதே மாதிரி எல்லாவிதமான கேரக்டரும் பண்ணனும். அப்போதான் ஒரு ஆர்டிஸ்ட்டா கம்ப்ளிட் ஆவதாக அர்த்தம். மலையாளத்தில் என் முதல் படம் பிர்த்விராஜ் கூட பண்ணினேன், அதில் ரொம்ப மென்மையான ரோல் பண்ணினேன். அதை தொடர்ந்து உடனே ஒரு சீரியல்ல பக்கா நெகடீவ் ரோல் வந்தது. மென்மையான ரோல்ல பார்த்தவங்களுக்கு சர்பிரைஸôக இருந்தது. அதை தொடர்ந்து சைக்கோவா பண்ணினேன். சினிமா, சீரியல்ன்னு வித்தியாசம் எதுவும் பார்க்கவில்லை. என்ன கேரக்டர் பண்றேன் என்பது தான் முக்கியம்.
நடனப் பயிற்சிக்கு நேரம் கிடைக்கிறதா?
நாட் டியம் எல்லாம் பத்தாவது படிக்கும் போதே நிறுத்திவிட்டேன். அரங்கேற்றம் பண்ணவில்லையென்றாலும் நிறைய கற்றுக் கொண்டேன். என்னோட முதல் டான்ஸ் குரு சாந்தி கிருஷ்ணா. "மணல் கயிறு' படத்தில் எஸ்.வி.சேகருக்கு ஜோடியா நடித்தாரே அவர்தான்.
http://dinamani.com/edition/story.as...44&SEO=&Title=
-
28th January 2010, 09:19 PM
#299
Senior Member
Diamond Hubber
Anybody watching "JAI SRIKRISHNA" in RAJ TV..
The child acting as KRISHNA is soooooooooo cute both in expressions & look
-
31st January 2010, 12:41 AM
#300
Moderator
Diamond Hubber
துளிகள்
* குடும்பப்பாங்கான படங்களை நகைச்சுவை கலந்து தந்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் டைரக்டர் வி.சேகர். பெரியதிரையைத் தொடர்ந்து சின்னத்திரையிலும் தொடர்களை இயக்கிவரும் வி.சேகர் இப்போது ராஜ் டிவிக்காக ஒரு தொடரை இயக்குகிறார். இந்த தொடருக்கு `வீட்டுக்கு வீடு' என்று பெயர் வைத்திருக்கிறார்.
* டைரக்டர் திருமுருகன் தனது மெட்டி ஒலி தொடருக்குப் பின் இயக்கவிருக்கும் புதிய தொடர் நாதஸ்வரம். தஞ்சை மாவட்டப் பின்னணியில் உருவாகவிருக்கும் இந்தக் குடும்பக்கதையை முதல் கட்டமாக காரைக்குடியில் படமாக்க விருக்கிறார். தொடரில் பெருமளவில் புதுமுகங்கள் நடிக்கவிருப்பதால் இந்த தொடர்மூலம் பல நட்சத்திரங்கள் திரைக்கு கிடைப்பார்கள்.
* நடிகை லட்சுமியும் சின்னத்திரை தொடருக்கு வந்து விட்டார். கணவர் சிவச்சந்திரனுடன் இணைந்து இவர் தயாரிக்கும் மகாலட்சுமி தொடரில் இந்த தம்பதிகள் தான் நாயக-நாயகி. காரணம் இவர்களைச் சுற்றியே கதை பின்னப்பட்டிருக்கிறது.
* பிரபல கர்நாடக இசைப்பாடகி அனுராதா கிருஷ்ணமூர்த்தி, இசைக்கச்சேரியுடன் சின்னத்திரை நடிப்பையும் தொடர்கிறார். நடிப்பு விஷயத்தில் நல்ல கதையம்சம் கொண்ட சீரியல்களே இவர் சாய்ஸ் என்பதால், திருப்பாவை மாதிரியான தொடர்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடிக்கிறார்.
நன்றி: தினதந்தி
Bookmarks