-
26th September 2009, 09:21 PM
#251
Moderator
Diamond Hubber
சின்னத்திரை, பெரியத்திரை என்று இரு திரைகளிலும் கோலோச்சியுள்ள நடிகை ரம்யாகிருஷ்ணன் தனது பிறந்த நாளை சூட்டிங் ஸ்பாட்டிலேயே கேக் வெட்டி கொண்டாடினார். தங்கம் சீரியல் சூட்டிங் ஸ்பாட்டில் பிஸியாக இருந்த ரம்யா கிருஷ்ணன் நேற்று (15-09-09) தனது பிறந்த நாளை **உற்சாகத்துடன் கொண்டாடினார். கேக் வெட்டி மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்ட ரம்யா கிருஷ்ணனை நடிகர்கள் விஜயகுமார், ரவி வர்மா, ஜாய், நடிகைகம் சீமா, அனுராதா, மஞ்சு பார்கவி, காவேரி, ஜோதி மற்றும் கிரியேட்டிவ் டைரக்டர் நாச்சியார், தங்கம் தொடரின் இணை தயாரிப்பாளரும் ரம்யாவின் தங்கையுமான வினயா கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் மலர் கொத்து கொடுத்து வாழ்த்தினார்கள்.
[html:2fea258baa]<div align="center"> </div>[/html:2fea258baa]
நன்றி: தினதந்தி
-
26th September 2009 09:21 PM
# ADS
Circuit advertisement
-
4th October 2009, 12:15 AM
#252
Moderator
Diamond Hubber
கலைஞர் டி.வி.க்கு விருது
சென்னை மைலாப்பூர் அகாடமி, ஆண்டுதோறும் சிறந்த நாட்டியம், நாடகம், ஆடல், பாடல்களுக்கென விருதுகள் வழங்கிவருகிறது.
2008-ம் ஆண்டின் சிறந்த தொலைக்காட்சி தொடராக கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ``தெக்கத்தி பொண்ணு' தொடர் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. அதோடு சிறந்த சின்னத்திரை இயக்குனராக `தெக்கத்தி பொண்ணு' தொடரின் இயக்குநர் பாரதிராஜாவுக்கும் விருது வழங்கப்பட்டது.
சிறந்த ஆவணப்படமாக, கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ``மறக்க முடியுமா'' தேர்வு செய்யப்பட்டு, அதன் இயக்குநர் கவுரிசங்கர் விருது பெற்றார். சிறந்த நடிகராக `தங்கமான புருஷன்' நாயகன் சாய்பிரேம், மற்றும் சிறந்த ஒளிப்பதிவாளராக ``தெக்கத்திப் பொண்ணு' கேமிராமேன் தனபால் ஆகியோருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
நன்றி: தினதந்தி
-
4th October 2009, 12:18 AM
#253
Moderator
Diamond Hubber
இப்போது நடிகை
`மானாட மயிலாட'நடன நிகழ்ச்சி மூலம் பிரபலமான நயனாவுக்கு இப்போது சினிமா வாய்ப்புகள் வரத் தொடங்கியிருக்கின்றன.`ஷோக்காலி' என்ற படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகியிருக்கிறார். இன்னும் 2 படங்களுக்கு பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
நன்றி: தினதந்தி
-
4th October 2009, 12:21 AM
#254
Moderator
Diamond Hubber
நகைச்சுவை நடிகை ஆர்த்தியும் நடிகர் கணேசும் காதல் திருமணம் செய்து கொள்கிறார்கள். ஏராளமான தமிழ் படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது நகைச்சுவை வேடங்களிலும் நடித்து வருபவர் ஆர்த்தி. இவருக்கும் புதுப்புது அர்த்தங்கள், கரிமேடு கருவாயன் உள்ளிட்ட பல படங்களிலும், சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வரும் கணேசுக்கும் காதல் இருந்து வந்தது. கலைஞர் ஒளிப்பரப்பாகி வரும் "மானாட மயிலாட" நிகழ்ச்சியில் இருவரும் முதன் முதலாக ஜோடி சேர்ந்து ஆடினர். அதனைதொடர்ந்து இருவரும் இணைந்து பல காமெடி நிகழ்ச்சிகளில் கலக்கினர். இருவரும் நட்பாக பழகியது பின்னர் காதலாக மாறியது. இவர்கள் காதலுக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்ததையடுத்து இரு*வரும் திருமணம் செய்ய முடிவு எடுத்துள்ளனர். கணேஷ்-ஆர்த்தி திருமணம் வரும் அக்டோபர் 23ம் தேதி கேரள மாநிலத்தில் உள்ள குருவாயூர் கோவிலில் நடக்கிறது. மணமக்களுக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி சென்னை தியாகராய நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் 25ம் தேதி மாலை 6 மணிக்கு நடக்கிறது.
[html:a66e04f4f4]<div align="center"></div>[/html:a66e04f4f4]
நன்றி: தினமலர்
-
8th October 2009, 02:16 AM
#255
Moderator
Diamond Hubber
-
8th October 2009, 02:57 AM
#256
Senior Member
Diamond Hubber
Originally Posted by
aanaa
நகைச்சுவை நடிகை ஆர்த்தியும் நடிகர் கணேசும் காதல் திருமணம் செய்து கொள்கிறார்கள். ஏராளமான தமிழ் படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது நகைச்சுவை வேடங்களிலும் நடித்து வருபவர் ஆர்த்தி. இவருக்கும் புதுப்புது அர்த்தங்கள், கரிமேடு கருவாயன் உள்ளிட்ட பல படங்களிலும், சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வரும் கணேசுக்கும் காதல் இருந்து வந்தது. கலைஞர் ஒளிப்பரப்பாகி வரும் "மானாட மயிலாட" நிகழ்ச்சியில் இருவரும் முதன் முதலாக ஜோடி சேர்ந்து ஆடினர். அதனைதொடர்ந்து இருவரும் இணைந்து பல காமெடி நிகழ்ச்சிகளில் கலக்கினர். இருவரும் நட்பாக பழகியது பின்னர் காதலாக மாறியது. இவர்கள் காதலுக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்ததையடுத்து இரு*வரும் திருமணம் செய்ய முடிவு எடுத்துள்ளனர். கணேஷ்-ஆர்த்தி திருமணம் வரும் அக்டோபர் 23ம் தேதி கேரள மாநிலத்தில் உள்ள குருவாயூர் கோவிலில் நடக்கிறது. மணமக்களுக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி சென்னை தியாகராய நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் 25ம் தேதி மாலை 6 மணிக்கு நடக்கிறது.
நன்றி: தினமலர்
Congrats guys !!!
-
8th October 2009, 05:24 AM
#257
Moderator
Diamond Hubber
சின்னத்திரையில் எல்லா டி.வி.,க்களும் வணிகம் சம்பந்தமான செய்திகளை வழங்கி வரும் நிலையில், வசந்த் டி.வி. தினமும் வர்த்தக செய்திகளை வழங்கி வருகிறது. தினமும் நான்கு முறை ஒளிபரப்பாகி வரும் செய்திகள் முடியும்போது, வணிகச் செய்திகள் தொடர்கிறது. உலக பொருளாதாரத்திலிருந்து உள்ளூர் வர்த்தகங்கள் வரை அனைத்து வகை வணிக பரிமாற்றங்கள் குறித்த செய்திகளும், பங்குச்சந்தை நிலவரம் குறித்த செய்திகளும் முழுமையாக இடம் பெறுகின்றன. அதோடு சந்தைக்கு வரும் புதிய தயாரிப்பு பொருள் பற்றிய அறிமுகமும் இடம் பெறுகிறது.
நன்றி: தினமலர்
-
8th October 2009, 05:25 AM
#258
Moderator
Diamond Hubber
சினிமா போட்டி நிகழ்ச்சிகளில் இப்போது விஜய் "டிவி'க்கும், "ஜீ' சேனலுக்கும்தான் சூப்பர் போட்டி. இரண்டு சேனல்களுமே, இரவு 9 மணிக்கு ஆரம்பித்து ஒரு மணி நேரம் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. எந்த சேனலைப் பார்ப்பது என்று பலரும் குழம்புவது நிச்சயம். அந்த அளவுக்கு விஜய் "டிவி'யில், சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் வாண்டூஸ்கள் அட்டகாசமாக பாடுகின்றனர். எல்லா குழந்தைகளுமே கொஞ்சம் கூட அலட்டாமல், ஏதோ மேடைப்பாடகர்கள் போல பாடியது அருமை. நடுவர்களில் சித்ரா மிதமாக பேசினார் என்றால், மனோ "ஓவர்' உற்சாகம் காட்டியதும் சொல்லித்தான் ஆக வேண்டும்.
நன்றி: தினமலர்
-
8th October 2009, 05:25 AM
#259
Moderator
Diamond Hubber
டென் ஸ்போர்ட்ஸ் சேனல் கடந்த சில நாளாக திணறிப்போய் விட்டது என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு ஏகப்பட்ட சர்வதேச போட்டிகள்; எல்லாவற்றையும் காட்ட முயன்று படாதபாடு பட்டு விட்டது. அமெரிக்காவில் இருந்த யு.எஸ்., ஓபன், இலங்கையில் இருந்து இந்தியா இலங்கை நியூசிலாந்து கிரிக்கெட் போட்டி, ஜி.பி.,மோட்டார் ரேஸ், டபிள்யு. டபிள்யு., மல்யுத்தம் என்று ஒரே நேரத்தில் அவ்வளவு போட்டிகளையும் காட்ட மிகவும் தவித்து விட்டது சேனல். என்ன இருந்தாலும், ஒளிபரப்பிலும் கொடி நாட்டியது கிரிக்கெட்தான்.
நன்றி: தினமலர்
-
13th October 2009, 10:32 AM
#260
Senior Member
Seasoned Hubber
கஸ்தூரி தொடரில் மீண்டும் `ஈஸ்வரி ராவ்'
சன் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் கஸ்தூரி தொடர் 800-வது எபிசோடை எட்டிப் பிடித்திருக்கிறது. இதில் கஸ்தூரியாக நடித்த ஈஸ்வரிராவ், இடையில் சில காலம் நடிக்காமல் இருந்தார். இப்போது மீண்டும் கஸ்தூரியாக தன் நடிப்பைத் தொடர்கிறார்.
கதைப்படி கஸ்தூரியைக் கொல்ல திட்டமிடப்பட்ட சதியால் கஸ்தூரி தனது முகத்தை தொலைக்க நேர்ந்தது. முக மாற்றம் நேர்ந்த பிறகு கஸ்தூரி கேரக்டரில் ஈஸ்வரிராவுக்கு பதிலாக வேறொரு நடிகை நடிக்க வேண்டியதாயிற்று.. இப்போது விதி கஸ்தூரி வாழ்வில் மீண்டும் விளையாட, இந்த விளையாட்டின் ஒரு நன்மையாக மருத்துவ வல்லுனர்களால் கஸ்தூரிக்கு அவளது முகமே மீண்டும் கிடைக்கிறது.
`திரும்பக் கிடைத்த தனது முகத்தோடு பழைய பிரச்சினைகள் மீண்டும் துரத்த, கஸ்தூரியின் போராட்டம் தொடர்கிறது. ஒரு பக்கம் திரும்பக் கிடைத்த பழைய முகம், மறுபுறம் தன்னை மன்னித்து ஏற்கும்படி உருகி நிற்கும் முன்னாள் கணவன், இன்னொரு புறத்தில் தொலைந்துபோன இந்நாள் கணவன் என போராட்டங்கள் கஸ்தூரியின் வாழ்வில் தொடர்கிறது.
"மீண்டும் ஈஸ்வரிராவே கஸ்தூரியாக வருவதால், உணர்வு ரீதியாக கஸ்தூரியுடன் தொடர்ந்து பயணப்பட்டு வரும் ரசிகர்கள் அவரது உணர்ச்சி பூர்வமான நடிப்பில் உருகி நிற்கப்போவது உறுதி!'' என்கிறார், பாலாஜி டெலிபிலிம்ஸின் தென்னிந்திய கிரியேட்டிவ் ஹெட் சுபாவெங்கட்.
கதை: ஏக்தா கபூர், திரைக்கதை: குருசம்பத்,
வசனம்: தவமணி வசீகரன், இயக்கம்: கே. ஷிவா.
தயாரிப்பு: ஏக்தாகபூர், ஷோபாகபூர்.
Bookmarks