-
8th May 2011, 05:50 AM
#11
Moderator
Diamond Hubber
"திருடா திருடி" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாயா சிங். அந்தபடத்தில் தனுஷூடன் இவர் ஆடிய "மன்மத ராசா..." பாடல் பட்டிதொட்டியெல்லாம் பரவியது. இந்தபடத்திற்கு பின்னர் நடிக்க வாய்ப்பு வரும் என்று காத்திருந்தார். ஆனால் மன்மத ராசா பாடல் மாதிரி ஒத்த பாட்டுக்கு ஆடத்தான் நிறைய வாய்ப்புகள் வந்தன. இருந்தாலும் அம்மணி அதனை மறுக்கவில்லை. வந்தவரைக்கும் லாபம் என்பது போல ஒத்தபாட்டுக்கு ஆடத் தொடங்கினார்.
மன்மத ராசாவை தொடர்ந்து, விக்ரமுடன் "அருள்" படத்தில் ஒரு பாடல், விஜய்யுடன் "திருப்பாச்சி" படத்தில் "கும்பிடபோன தெய்வம்..." என்று நடிக்க ஆரம்பித்தார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடிகர் பார்த்திபனுடன் "வல்லமை தாராயோ" படத்தில் நடித்தார். அதன்பின்னர் சிறிது இடைவெளிக்கு பின்னர் ஷங்கரின் "அனந்தபுரத்து வீடு" படத்தில் நடித்தார். தொடர்ந்து படவாய்ப்புகள் ஏதும் வராததால் சின்னத்திரையில் களம் இறங்கிவிட்டார். தமிழில் முன்னணி டி.வி., சானல் ஒன்றில் சஸ்பென்ஸ் மற்றும் திரில்லர் நிறைந்த தொடர் ஒன்றில் நடித்து வருகிறார்.
இதுகுறித்து சாயா சிங் கூறுகையில், சின்னத்திரையில் நடிக்க இருந்தது உண்மை தான். ஆனால் அது இவ்வளவு சீக்கிரமாக நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. இந்ததொடரின் கதை மிகவும் பிடித்து இருந்ததால் நடிக்க ஒப்புக்கொண்டேன் என்று கூறியுள்ளார்
நன்றி: தினமலர்
-
8th May 2011 05:50 AM
# ADS
Circuit advertisement
Bookmarks