தமிழ் சீரியலுக்கு வருகிறார் ரஞ்சனி


முதல் மரியாதை படத்தின் மூலம் அறிமுகமான ரஞ்சனி தமிழ் மற்றும் மலையாளத்தில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ரஞ்சனி தமிழ் நாட்டை சேர்ந்தவர் என்றாலும் கேரள தொழில் அதிபர் பியரி கொமராவை திருமணம் செய்து கொண்டு கேரளாவில் செட்டிலாகிவிட்டார். பல வருட இடைவெளிக்கு பிறகு ரிங் மாஸ்டர் என்ற மலையாளப் படம் மூலம் ரீ-என்ட்ரி ஆனார்.


அதன் பிறகு சின்னத்திரைக்கு வந்தார். ஆசியாநெட், ஜெய்ஹிந்த், கைரளி, மழவில் மனோரமா டி.விக்களில் காமெடி மற்றும் நடன நிகழ்ச்சிகளுக்கு நடுவராக இருந்து தொகுத்து வழங்கினார். விரைவில் தமிழ் சேனலுக்கு வருகிறார். சின்னத்திரை தொடரில் நடிக்கவும் அவரை அணுகி உள்ளனர். நிகழ்ச்சி நடுவராகவோ சீரியல் நடிகையாகவோ விரையில் என்ட்ரி கொடுக்க இருக்கிறார் ரஞ்சனி. இது தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.



நன்றி: தினமலர்