Page 2 of 9 FirstFirst 1234 ... LastLast
Results 11 to 20 of 88

Thread: Pallavan Magal

  1. #11
    Senior Member Devoted Hubber
    Join Date
    Jan 2008
    Posts
    291
    Post Thanks / Like
    இந்த ரமேஷ்தான் மகியோட அகால மரணத்துக்குக் காரணம் என கிளைக்கதை எதுவும் இருக்கிறதா?
    பார்வையின் ஜாடையில் தோன்றிடும் ஆசையில் பாடிடும் எண்ணங்களே

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #12
    Senior Member Seasoned Hubber sivank's Avatar
    Join Date
    Mar 2007
    Location
    In the heart of my dearest
    Posts
    1,777
    Post Thanks / Like
    Quote Originally Posted by disk.box
    இந்த ரமேஷ்தான் மகியோட அகால மரணத்துக்குக் காரணம் என கிளைக்கதை எதுவும் இருக்கிறதா?
    DB

  4. #13
    Moderator Platinum Hubber P_R's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    10,036
    Post Thanks / Like
    சிவன் நல்ல தொடக்கம்.

    எனக்கு சரித்திர கதைகளில் பொதுவாக நாட்டம் இருந்ததில்லை. கீழே வைக்கமுடியாததாக அறியப்படும் பல சரித்திர நாவல்களை சிலப்ல முறை படிக்க முயன்று தோற்றிருக்கிறேன்.

    ஆனால் இம்முறை தொடக்கமே சுவாரஸ்யமாக இருக்கிறது.
    வளவளக்காமல் கச்சிதமான வருணணைகள், அதிகம் தகவல்களை வெளியிட்டுவிடாத கவனமான உரையாடல்கள் இரண்டும் ரசிக்கும்படி உள்ளன. குறிப்பாக தேவசேனன்-விக்கிரமன் உரையாடல். வாசகர்களுக்கு தகவல் தர வேண்டும் என்பதற்காக அவர்கள் அ-னா ஆ-வன்னா விலிருந்து பேசத் தொடங்கவில்லை.மிக இயல்பாக வந்திருந்தது. இதனால் மேலே அறிந்துகொள்ளும் ஆவல்.

    கதைசொல்லி உடன் உரையாடிக்கொண்டே வருவது அழகாக இருக்கிறது. தமிழில் ஒரு சில சுஜாதா கதைகளில் மட்டுமே பார்த்திருக்கிறேன்.

    அதிவராகர் குகை = திருவிடெந்தை ? எனக்குத் தெரிந்து இன்று மாமல்லை அருகில் இருக்கும் கோவில் அதுவே. ஆனால் அது குகை போல இல்லை. மேலும் அது 6ம் நூற்றாண்டிற்குப் பிறகு கட்டப்பட்டதாக படித்த நினைவு. குகைக்கோவில் உங்கள் புனைவாகக் கூட இருக்கலாம். சமீபத்தில் இங்கு சென்றிருந்ததால் இந்த ஆர்வக்கேள்வி

    இனி வாளாவிருந்தால் நல்லதல்ல
    மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே

  5. #14
    Senior Member Devoted Hubber
    Join Date
    Jan 2008
    Posts
    291
    Post Thanks / Like
    //இந்த பரமேஸ்வர பல்லவர்தான் மகேந்திரவர்மரின் அகால மரணத்துக்குக் காரணம் என கிளைக்கதை எதுவும் உள்ளதா? //
    பார்வையின் ஜாடையில் தோன்றிடும் ஆசையில் பாடிடும் எண்ணங்களே

  6. #15
    Senior Member Seasoned Hubber sivank's Avatar
    Join Date
    Mar 2007
    Location
    In the heart of my dearest
    Posts
    1,777
    Post Thanks / Like
    Quote Originally Posted by Prabhu Ram
    சிவன் நல்ல தொடக்கம்.

    எனக்கு சரித்திர கதைகளில் பொதுவாக நாட்டம் இருந்ததில்லை. கீழே வைக்கமுடியாததாக அறியப்படும் பல சரித்திர நாவல்களை சிலப்ல முறை படிக்க முயன்று தோற்றிருக்கிறேன்.

    ஆனால் இம்முறை தொடக்கமே சுவாரஸ்யமாக இருக்கிறது.
    வளவளக்காமல் கச்சிதமான வருணணைகள், அதிகம் தகவல்களை வெளியிட்டுவிடாத கவனமான உரையாடல்கள் இரண்டும் ரசிக்கும்படி உள்ளன. குறிப்பாக தேவசேனன்-விக்கிரமன் உரையாடல். வாசகர்களுக்கு தகவல் தர வேண்டும் என்பதற்காக அவர்கள் அ-னா ஆ-வன்னா விலிருந்து பேசத் தொடங்கவில்லை.மிக இயல்பாக வந்திருந்தது. இதனால் மேலே அறிந்துகொள்ளும் ஆவல்.


    Thanks for your comment Prabu. I will try my best to make it more interesting.


    கதைசொல்லி உடன் உரையாடிக்கொண்டே வருவது அழகாக இருக்கிறது. தமிழில் ஒரு சில சுஜாதா கதைகளில் மட்டுமே பார்த்திருக்கிறேன்.


    Upto my humble knowledge Kalki was very famous for this sort of writing. I must admit that I am very much influenced by his writing.



    அதிவராகர் குகை = திருவிடெந்தை ? எனக்குத் தெரிந்து இன்று மாமல்லை அருகில் இருக்கும் கோவில் அதுவே. ஆனால் அது குகை போல இல்லை. மேலும் அது 6ம் நூற்றாண்டிற்குப் பிறகு கட்டப்பட்டதாக படித்த நினைவு. குகைக்கோவில் உங்கள் புனைவாகக் கூட இருக்கலாம். சமீபத்தில் இங்கு சென்றிருந்ததால் இந்த ஆர்வக்கேள்வி

    இனி வாளாவிருந்தால் நல்லதல்ல
    Since all thiose temples were carved out of solid stone and I have read in books that this temple being mentioned as a cave I made it so. I havenīt visited Mallai for the past 28 years

  7. #16
    Senior Member Seasoned Hubber sivank's Avatar
    Join Date
    Mar 2007
    Location
    In the heart of my dearest
    Posts
    1,777
    Post Thanks / Like
    Quote Originally Posted by disk.box
    //இந்த பரமேஸ்வர பல்லவர்தான் மகேந்திரவர்மரின் அகால மரணத்துக்குக் காரணம் என கிளைக்கதை எதுவும் உள்ளதா? //
    அப்படி இருப்பதாக நான் படித்ததில்லை டி.பி. ஆனால் அன்று இவ்வாறு நடத்தல் வெகு சாதாரணம்

  8. #17
    Senior Member Seasoned Hubber sivank's Avatar
    Join Date
    Mar 2007
    Location
    In the heart of my dearest
    Posts
    1,777
    Post Thanks / Like
    மந்திராலோச்சனை

    பல்லவ மன்னன் பரமேஸ்வர வர்மனின் ஆணைப்படி அரசவை வந்த முதல் மந்திரி குலசேகர பட்டர் மந்திரி மண்டலத்தை கூட்டி மன்னனின் வருகைக்காக காத்திருந்தார்

    "குலசேகரரே, மன்னன் முடிவு எப்படி இருக்கும் என நீர் எண்ணுகிறீர்.." என கேட்ட ஒரு மந்திரி பிரதானியை முறைத்த குலசேகர பட்டர், " ஆமாம், மன்னர் எலலாவற்றையும் என்னிடம் சொல்லி விட்டு தான் செய்கிறார் போல் கேட்கிறீரே, ஆனால் எனக்கு ஒன்று நிச்சயம் தெரிந்துவிட்டது. போர் முரசு கொட்டும் நாள் அதிக தூரத்தில் இல்லை."

    "போர் என்றால் யாருடன் போர் பட்டரே.."?

    " மேலை சாளுக்கியம் கூட வலுவிழந்து இருக்கிறதே, பாண்டியனோ பெண் கொடுத்தவன், சோழனோ பெண் எடுத்தவன், சேர குல விழுது தான் இன்று நாட்டை ஆளுகிறது, பின் யாருடன் தான் போர்...?"

    குலசேகர பட்டர் வாய் திறந்து பதில் சொல்லுமுன் மன்னரும், மன்னருடன் இளவரசர் ராஜசிம்மனும், குந்தவி தேவியும் வருவதை கண்டு தலை குனிந்து எழுந்து வரவேற்றனர் மந்திரி மண்டலதார்.

    மிக சஞ்சலத்துடன் காணப்பட்ட மன்னன் சபையோரை அமற சொல்லி தானும் அரியணையில் அமர்ந்தான்.

    "மந்திரி மண்டலத்தாரை நான் இங்கு அவசரமாக அழைத்த காரணத்தை நான் சொல்லு முன் மூன்று நாட்களுக்கு முன் எனக்கு வந்த முக்கிய செய்தி, உத்திர பாரத சக்ரவர்த்தி ஹர்ஷவர்தனர் பரமனடி எய்தினார் என்பதே..."

    சபையில் ஆ........ என்ற குரல்கள் ஓங்கி பரவலாக ஒலித்தது.

    "ஆம், இது நமக்கு பெருத்த சோதனைக்காலம். வாதாபி போர் முடிந்த 15 வருடத்தில் 2 முறை பெருத்த பஞ்சம் எற்பட்டு விட்டது. இவ்வருடமும் மழை பொய்த்து விட்டதால் தானிய விளைச்சலும் அமோகமாக இல்லை. இந்நிலையில் விக்ரமாதித்யன் படை பலம் பெறுக்குவான். வடக்கிலுருந்து ஆபத்து இல்லாததால் தஷிண திசை நோக்கி படை எடுப்பான். இந்நேரத்தில் அருகில் இருந்து ஆலோசனை கூற என் தந்தையும் இல்லை. என் முடிசூட்டு விழாவிற்க்கு பிறகு தேசாந்திரம் சென்ற பல்லவ நரசிம்மர் இன்று எங்கிருக்கிறார் என்று கூட தெரியவில்லை, இந்நிலையில் நாம் செய்யகூடியதை பற்றி பேசவே நான் உங்களை அழைதேன். பழம் நழுவி பாலில் விழுந்ததை போல் சோழ ராணியும் என் தமக்கையுமான குந்தவி தேவியாரும் இங்கே உள்ளதால் என் எண்ணம் எளிதே நிறைவேறும் என எண்ணுகிறேன்..."

    மிகுந்த அழகானவளும், அழகை விட மதியூகியுமான குந்தவி தேவி புருவத்தை நெரித்து, " சோழர்களிடம் என எதிர்பார்க்கிறாய், பரமேஸ்வரா..?" என்றாள்

    குந்தவியின் நேரடி கேள்வியை எதிர்பாராத பல்லவ மன்னன் ஒரு கனம் தடுமாறி," சாம்ராஜியதிற்க்கு சோதனை வந்தால் அந்நேரம் கை கொடுப்பது குறுநிலங்களின் கடமை...."

    "சோழ தேசம் பல்லவ தேசத்தின் குறுநிலம் அல்ல, பரமேஸ்வரா.. சோழ நாடு சுதந்திர பூமி. அதன் மேல் பாத்தியதை கொள்ள உனக்கு எவ்வித உரிமையும் கிடையாது."

    "தேவி, மன்னர் சொல்லுவது என்னவென்றால்..." என குறுக்கிட்ட குலசேகர பட்டரை எரித்து விடுவது போல் பார்த்த குந்தவி

    "என் சகோதரனை நன்கு அறிவேன் குலசேகர பட்டரே. பரமேஸ்வரா, ஒன்று தெரிந்து கொள், தாயாதி சண்டையால் சிதறுண்டு இருக்கும் சோழ நாடு ஒரு போதும் மீண்டும் பல்லவ நாட்டிற்க்கு அடமை ஆகாது..." என கூறி சபையை விட்டு வெளியேறினாள் நரசிம்மபல்லவரின் மகளும் விக்ரம சோழனின் பட்டத்து ராணியுமான குந்தவி தேவி.

  9. #18
    Senior Member Seasoned Hubber sivank's Avatar
    Join Date
    Mar 2007
    Location
    In the heart of my dearest
    Posts
    1,777
    Post Thanks / Like
    உறையூரில் கலக்கம்

    அதோ தூரத்தில் தெரியும் குந்தவிதேவியாரின் பரிவாரங்கள் நகரை அடையுமுன் நாம் சற்று விரைவாக உறையூரில் நுழைந்து நகர்வலம் வருவோம்.

    கடந்த 300 வருடங்களில் உறையூர் நன்கு வளர்ந்து விட்டது. புகார் நகரம் கடலுக்கு இரையான பின் சோழர்களால் தலைநகரமாகப்பட்ட நகரத்தில் அனேக மாற்றத்தை காண்கிறோம். அந்நாளில் கட்டப்பட்ட பழைய அரண்மனைகளும், பின்னால் கட்டப்பட்ட புது மாளிகைகளும் நிறைந்து காணப்பட்டது. எங்கு நோக்கினும் பச்சை பசேல் என காட்சி அளித்த இயற்கை அன்னை சோலைகளையும், வயற்காடுகளையும் செழுமையாக காட்சி அளிக்க வைத்தாள். காலம் காலமாக காவிரியால் அடித்து உருட்டி கொண்டு வரப்பட்ட வண்டல் மண் மூன்று போக விளைச்சலை தந்தது. ஊருக்கு வெளியே உள்ள கருமார் குடியிருப்பில் இருந்து அடுப்பு புகையும், இரும்பு இரும்பால் அடிபடும் ஓசையும் கேட்டது. தூரத்தில் எங்கோ கோவிலில் காண்டாமணியின் ஓசை உச்சி கால பூஜையை நமக்கு தெரிவித்தது. சிறுவர்கள் கோழிகளை துரத்தி களைத்து, ஆநிரைகளை குளிப்பாட்ட ஆற்றினில் இறங்கினர். இறைச்சி வதக்கும் மணம் காற்றில் கலந்து நமது நாசிகளை அடைந்தது.

    நகரத்தின் மத்தியில் சுண்ணம் அடித்து புது மெருகுடன் பொலியும் பெருமாளிகையின் உச்சியில் புலிக்கொடி கம்பீரமாக பறந்து கொண்டு இருந்தது. இதோ நாம் நகர்வலம் வருமுன் குந்தவிதேவியாரின் பரிவாரங்களும் மாளிகையை அடைந்துவிட்டது. பரிவாரங்களோடு நாமும் கலந்து உள்ளே நுழைவோம்.

    மந்திரி பிரதானிகளும், சேவகர்களும் ஒருவித பதட்டத்துடன் உலா வருவதை கண்டால் ராணி வருமுன் காஞ்சி சபையில் நடந்தது ஒற்றர் மூலம் வெளியே கசிந்து விட்டது எனத்தெரிகிறது.

    மன்னனை காணாது சிறிது சஞ்சலப்பட்ட குந்தவி சேனாதிபதி கண்டன் மறவனாரை அழைத்தாள்.

    "மன்னரிடமிருந்து தகவல் வந்ததா, சேனாபதி?.."

    "5 நாட்களுக்கு முன் வீர்சேனரை சந்திக்க சென்ற மன்னரிடமிருந்து இது வரை தகவல் ஏதும் இல்லை தாயே, ஆனால் வீரசேனர் மன்னரை மல்லையில் சந்தித்த பிறகு திருவொற்றியூர் சென்றுள்ளார் என செய்தி கிடைத்துள்ளது., காஞ்சியில்...."என ஆரம்பித்தவரை பார்வையால் தடுத்த குந்தவி," சோழ நாட்டிற்க்கு நேரம் சரியில்லை, கண்டனாரே, பல்லவ மன்னன் சோழ நாட்டை மீண்டும் திறை செலுத்தும் அடிமை நாடாக மாற்ற ஆசைப்படுகிறான். பஞ்சத்தில் வாடும் தொண்டை மண்டலத்திற்க்கு சோழ நாட்டின் வளத்தை அளிக்க முயற்ச்சிக்கிறான் பரமேஸ்வரன். விலை கொடுத்து வாணிபம் செய்ய தயாரில்லை அவன், அடிமையாக்குவதன் மூலம் திறையாக எடுக்க முயல்கிறான். நாடெங்கும் கோவில் கட்டி பொக்கிஷத்தை செலவழித்த பல்லவன் போர் துவங்கும் வேளையில் நமது மடியில் கை வைக்கிறான்.."

    "தாயே, இப்படியே போனால் ...?" என கலக்கத்துடன் சொன்ன கண்டன் மறவனாரை வருத்தத்துடன் பார்த்த பல்லவன் மகளும், சோழகுல விளக்குமான் குந்தவி பிராட்டி," புரட்டாசி பௌர்னமி வெண்ணாறங்கரை மறந்து விட்டதா மறவனாரே...?" என்றாள்

  10. #19
    Senior Member Diamond Hubber
    Join Date
    Jan 2006
    Posts
    6,074
    Post Thanks / Like
    sivan anna
    Anbe Sivam

  11. #20
    Senior Member Seasoned Hubber sivank's Avatar
    Join Date
    Mar 2007
    Location
    In the heart of my dearest
    Posts
    1,777
    Post Thanks / Like
    thanks vaasi
    niraive kaanum manam vendum
    iraivaa nee adhai thara vendum

Page 2 of 9 FirstFirst 1234 ... LastLast

Similar Threads

  1. MAGAL SUN TV Serial
    By aanaa in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 12th November 2007, 11:50 AM
  2. Kai vittup pona magaL
    By Oldposts in forum Poems / kavidhaigaL
    Replies: 10
    Last Post: 7th November 2004, 09:35 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •