Page 2 of 18 FirstFirst 123412 ... LastLast
Results 11 to 20 of 174

Thread: SUN TV yin - ThiruviLaiyaadaL

  1. #11
    Senior Member Platinum Hubber Shakthiprabha.'s Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Vagabond
    Posts
    17,596
    Post Thanks / Like
    ஒப்பனையாளரின் பங்கு பாராட்டத்தக்கதாய் உள்ளது.

    சிவன், பார்வதி என்ற தெய்வக் கதாபாத்திரங்கள் நாம் பார்த்துப் பழகியவை(அவர்கள் க்ரீடங்கள், குறிப்பாக பார்வதியின் க்ரீடம், சிவனின் பாம்பு, முதலியவை ரொம்பவே ஜொலிக்கிறது! இதைக் கொஞ்சம் கவனம் கொண்டு சற்றே நம் கண்கள் மேல் கருணை காட்டலாம்!) . இவற்றை விட, குறிப்பிட்டுச் சொல்லும்படியாய் அக்காலத்து கதா பாத்திரங்களாய் வளைய வரும் சாமான்யர்கள் புலவர், அவர் மனைவி, வீரர், இவர்கள் ஒப்பனை மிக அழகாய், இயல்பாய், யதார்த்தமாய் இருந்தது !

    பாராட்டுக்கள்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #12
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    ஸ்ரீதர் - சிவன்
    யமுனா - பார்வதி

    ராதாரவி - நாரதர்
    மனோரமா - ஒளவையார்

    பூவிலங்கு மோகன் - பிரம்மா
    பாவனா - லட்சுமி
    ப்ரவல்லிகா -
    மாஸ்டர் மோகன்ராஜ் - பிள்ளையார்
    பேபி பூஜா - முருகன்

    பீலிசிவம் - வியாழபகவான்
    பிருதிவிராஜ் - இந்திரன்
    யுவராணி - இந்திராணி


    சுதர்சன் - துவஸ்டர்
    ஐசக் - விஸ்வரூபன்

    ராம்கி - வித்யாதரன்
    கிருத்திகா - கலையரசி
    கனிகா - அம்பிகை (அரசி)
    பிர்லாபோஸ் - மாமல்லன்
    நளினிகாந்த் - வசந்தபுர அமைச்சர்
    செளமியன் - பார்த்திபன்
    பால்குணசேகரன் -
    சுப்பையா -

    சுந்தர் OAK - தட்சன்
    சுமங்கலி - வேதவல்லி
    சுஜிதா ஸ்ரீ - தாட்சாயினி
    பிரியங்கா - ரேவதி
    வாசுவி - அஸ்வினி
    கோல்டன் சுரேஷ் - சந்திரன்
    பாபூஸ் - வீரபத்திரன்

    மனோகர் - தனபதி
    மல்லிகா - குணவதி
    யோகினி - சுசீலை
    விக்கி - பூபதி
    சாந்தி வில்லியம்ஸ் - பொன்னம்மா
    அமலா - அன்னம்
    சாட்சி சிவா - மனோகர்
    சாந்தி ஆனந்த்ராஜ் - மரகதம்


    ரமணி
    ஸ்ருதி

    ===========
    அனுமான் வால்போல் ......

  4. #13
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    2,197
    Post Thanks / Like
    சக்திப்ரபா...

    'திருவிளையாடல்' தொடர் பற்றிய உங்களின் தொடர் பதிவு மிக அருமையாக உள்ளது. வர்ணனைகள் மிக இயல்பாக உள்ளன. குறைகளையும் தவறாமல் சுட்டிக்காட்டுகிறீர்கள்.

    தொடருங்கள். படிக்கக் காத்திருக்கிறோம்.

  5. #14
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    Quote Originally Posted by Shakthiprabha
    ஒப்பனையாளரின் பங்கு பாராட்டத்தக்கதாய் உள்ளது.
    பாராட்டுக்கள்
    பாராட்டுக்கள்


  6. #15
    Senior Member Platinum Hubber Shakthiprabha.'s Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Vagabond
    Posts
    17,596
    Post Thanks / Like
    பெயர்களை நினைவுகூர்ந்ததற்கு நன்றி 'ஆனா'.

    'பேபி பூஜா' என்பவர் தான் முருகனாக நடிக்கிறார் என்று நினைக்கிறேன்.

    சாரதா,


  7. #16
    Senior Member Platinum Hubber Shakthiprabha.'s Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Vagabond
    Posts
    17,596
    Post Thanks / Like
    22.5.08
    ______

    கைலாயத்தில் கலகலப்பாக கலகம் துவங்குகிறது. உமாமஹேஸ்வரியாக
    யமுனாவின் கோபம், அலட்சியப் பார்வை, சிரிப்பு எல்லாமே நன்றாக
    அமைந்திருந்தது. தன் பங்குக்கு தானும் கோழை ஒருவனை வீரனாக்கி
    செல்வம் படைத்த அரசியையும், நாவன்மை படைத்த கலைமகள் அருள்
    பெற்றவனையும், வீரனின் அடிமை ஆக்குகிறேன் என்று சபதமிட்டுச்
    செல்கிறார்.

    நாரதர் "ஆம் தேவி" என்று இழுத்து, 'சரஸ்வதி சபத' சிவாஜியை
    நினைவூட்டுகிறார். சிவாஜியை நினைவூட்டாமல் நடிப்பது கடினம் என்றாலும்,
    இம்மி பிசகாமல் அதே வசனத்தை இயக்காமல் இருந்திருக்கலாம். (நடித்த
    திரு.ராதாரவி அவர்களும் நடிகர் திலகத்தை போல் செய்யாமல்
    இருந்திருக்கலாம்) . எல்லோருக்கும் நடிகர் திலகம் படம்
    நெஞ்சத்தில் நிறைந்து இருக்கிறது என்பதால் நம்மை மகிழ வைக்க இப்படி
    செய்கிறார்கள் போலும்!

    அடுத்து நமக்குத் தெரிந்த சரஸ்வதி சபதக் கதையில் வித்யாபதி என்றவன்
    ஊமை, அவனை பேசவைத்து கலைமகளின் ஆசிப் பெறச் செய்கிறார்
    சரஸ்வதி. இங்கே கதைப் படி, வித்யாதரன் என்ற இளைஞன் ஊமை அல்ல.
    மூடன். அதாவது பகுத்தறிவு குறைவாக (மிகக் குறைவாக) பெற்றவன்.
    (வித்யதாராக நடனக் கலைஞரும் நடிகருமான ராம்ஜி நடிக்கிறார். )

    'சரஸ்வதி சபத'க் கதையும், 'மஹா கவி-காளிதாசர்' கதையும் ஒன்றாய்
    அமைந்தது போல் இருந்தது.

    வித்யாதரன், மூடனாய் வளர்கிறான். உலையில் அரிசிபோட்டு சோறு வடித்து வை என்று அவன் தாய் கட்டளை இட, இவனோ, உலையில் அரிசி பொங்குவதற்குள் இன்னும் நேரம் ஆகிவிடும், என்று அரிசியை நேராக அடுப்பில் போட்டுவிடுகிறான். தணல் எரியாத குறைக்கு அவன் தந்தை எழுதிய ஓலைச் சுவடியையும்
    அடிப்பில் போட்டு எரியவிடுகிறான். அவன் தாய் மூடனைப் பெற்றதற்கு கண்ணீர் வடிக்கிறாள்.

    இது இப்படி இருக்க, இன்னொரு செல்வந்தன் வீட்டில் செல்லப் பெண்ணாய்
    அறிவிற் சிறந்த 'கலையரசி' என்று ஒரு பெண் வளர்ந்து வருகிறாள்.
    தனக்கு வரப் போகும் மணாளன் அறிவில் சிறந்த சான்றோனாக இருக்கவேண்டும்
    என்ற விருப்பத்தின் பேரில், தன்னை பார்க்க வரும் வரன்களை கேள்விக்
    கணைகள் கொண்டு எதிர்கொள்ள நினைக்கிறாள். இவளின் தைரியம் கண்டு,
    அக்காலப்(இக்காலமும் / எக்காலமும் ?!?!) பெண்ணுக்கே உரிய பணிவும்
    பண்பும் இல்லாதவளாக அவளை வளர்த்து வரும் சித்தியே
    குறைகூறி முத்திரைக் குத்திவிடுகிறாள்

    ( மேலும் என்ன நடைக்கிறது என்பது நாளை பார்ப்போம் )


    ஒரு சிறு வேண்டுகோள்: இயக்குனர் கவனிக்க வேண்டிய ஒன்று.
    இறைப் பாத்திரங்கள் தூயத்தமிழில் தான் பேசவேண்டும் என்பதால்,
    அவர்களின் தமிழ், நடைமுறைத் தமிழுக்கு வழுக்குவதில்லை. ஆனால்,
    சாதாரண மக்கள் கதாபாத்திரம் ஏற்போரும், புராணத் தொடர் என்பதால்
    தூயத் தமிழில் பேசுவதை வழக்காக்கி, தொடர் முழுதும் எல்லாப் பாத்திரங்களும்
    தூயத் தமிழ் பேசச் செய்திருக்கிறீர்கள். இதில் நடுநடுவே இப்படிப்பட்ட
    பொதுமக்கள் கதாபாத்திரங்கள் வழக்கு தமிழுக்கு சறுக்கிவிடுகின்றனர்.
    இதை கவனம் கொள்ளவேண்டியது அவசியம்.

    அஃதாவது, ஒன்று, நடைமுறைத் தமிழ் பேசவேண்டும். இல்லையென்றால்,
    புராணத் தொடர் என்பதால் எல்லோருமே தூயத்தமிழ் பேசவேண்டும்.
    இப்படியும் அப்படியுமாய் மாற்றி மாற்றி பேசுவது மனதில் பிசிறுதட்டுகிறது.
    இதை கவனம் கொள்வது நல்லது.

  8. #17
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    இன்னும் 7 மணியத்தாலங்கள் இருக்கின்றன எமக்கு.

    நன்றி
    "அன்பே சிவம்.

  9. #18
    Senior Member Platinum Hubber Shakthiprabha.'s Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Vagabond
    Posts
    17,596
    Post Thanks / Like
    ஆனா,

    இனி ஏதாவது எழுதுவதாய் இருந்தால், தொடர் ஒளிபரப்பிற்கு பிறகு, இந்திய நேரப்படி ஒரு நாள் கழித்து பதிவு செய்கிறேன்.

  10. #19
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    சக்தி பிரபா!!

    அப்படிக் கூறவரவில்லை.
    உங்களது விமர்சனங்களை உடனுக்குடன் தரவும்

    ஆறப் போட்டால் சுவையும் குன்றிவிடும்
    சிலவேளை சொல்ல வந்ததையும் மறந்துவிடுவோம்.

    உங்கள் விமர்சனம்தான்
    அதை இன்னும் உன்னிப்பாகக் கவனிக்கத் தூண்டுகின்றது.
    ஆகவே உடன் தொடருங்கள்.


    அதுவும் இன்று கட்டாயம் தேவை
    இன்று பார்க்கச் சந்தர்ப்பம் இல்லை

  11. #20
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    2,197
    Post Thanks / Like
    சக்திப்ரபா,

    ரொம்ப அருமையாக எழுதுகிறீர்கள். கதையை மட்டும் சொல்லாமல், கூடவே உங்க கமெண்ட்டுகளையும் இணைத்திருப்பது சுவையூட்டுகிறது. ராதரவியின் உச்சரிப்பு, நடிகர்திலகத்தின் பாதிப்பு, இயக்குனருக்கு வேண்டுகோள் என கலக்குகிறீர்கள்.

    'தொடர்' தொடரும்வரை உங்கள் எழுத்தும் தொடரட்டும்.

Page 2 of 18 FirstFirst 123412 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •