-
14th March 2009, 07:28 PM
#81
Moderator
Diamond Hubber
நடன மாணவர்களுக்கான தேர்வு
கிரிக்கெட்டில் வீரர்களை உற்சாகப்படுத்த அழகிகள் ஆடுவதை டி.வி.யில் பார்த்திருப்போம். இதை மையப்படுத்தி `ச்சியர் லீடர்ஸ்' என்ற நிகழ்ச்சியை விஜய் டி.வி. நடத்துகிறது. இதற்கு தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்- இளைஞிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இப்படி தேர்வாகும் 5 `ச்சியர்லீடர்கள்' ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி விளையாடும் போட்டியில் பங்கு பெறுகிறார்கள்.
இதற்காக நடனம் தெரிந்த கல்லூரி மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ், நடிகை காயத்ரி ஜெயராம் ஆகியோர் இந்த தேர்வு நிகழ்ச்சிக்கு நடுவராகிறார்கள். ஆட்டத்தின் டென்ஷனான நேரத்தில் பார்வையாளர்களையும், போட்டியாளர்களையும் எப்படி ஈர்க்கிறார்கள்? என்பதை கருத்தில் கொண்டு நடன மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இந்த தேர்வு நிகழ்ச்சியின் தொகுப்பு வெள்ளிதோறும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும். இந்நிகழ்ச்சியில் சென்னை-28 திரைப்பட குழுவினர், மற்றும் திரைப்பட கலைஞர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கு பெறுகிறார்கள்.
நிகழ்ச்சியை அஜய் மற்றும் மாடல் அழகி சூர்யா தொகுத்து வழங்குகிறார்கள்.
நன்றி -- தினதந்தி
-
14th March 2009 07:28 PM
# ADS
Circuit advertisement
-
24th March 2009, 01:05 PM
#82
Senior Member
Seasoned Hubber
‘பெண்களின் நிலை இன்னும் மாறவில்லை': பூஜா
ஆரம்ப காலத்திருந்தே பெண்களின் பிரச்னைகள் பற்றித்தான் சீரியல்கள் பேசி வருகின்றன. அவ்வப்போது சில சீரியல்கள் இதற்கு எதிர்மறையாக வந்தாலும், பெண்களின் பிரச்னைகளை முழுமையாகக் கையில் எடுத்திருக்கிறது விஜய் டி.வி.யின் ‘ரோஜா கூட்டம்' என்கிறார் பூஜா.
காலத்திற்கு ஏற்றவாறு பெண்களின் வாழ்க்கை முறை மாறுபட்டுக்கொண்டே இருக்கிறது. என்னதான் பெண்கள் சுதந்திரமாகவும் தன்னிச்சையாகவும் செயல்பட ஆரம்பித்து விட்டார்கள் என சொல்லிக்கொண்டாலும் பெண்களுக்கு சமுதாயத்தில் இருக்கிற பிரச்னைகள், வெளியே சொல்ல முடியாத நிலையில்தான் இருக்கின்றன. அவர்களுடைய நிலை இன்னும் மாறவில்லை.
5 பெண்கள்; அவர்களுடைய வாழ்க்கையில் ஏற்படும் விதவிதமான பிரச்னைகள்; அதை அவர்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதுதான் ‘ரோஜா கூட்டம்' சீரியலின் முழுக் கதை.
இந்த சீரியலில் நான் மாடல் நடிகை மானஸா என்ற கேரக்டரில் நடிக்கிறேன். சில விஷயங்களில் விட்டுத் தர வேண்டும் என்ற நிலை வரும் போது மானஸா எப்படி அந்த நிலையைக் கையாளுகிறாள் என்பதுதான் என் கதை. ஒரு நடிகையின் பிரச்னைகளைப் பேசுகிற இந்த கேரக்டர், எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அதனால், இந்த கேரக்டரில் ரசித்து நடிக்கிறேன். ‘ரோஜா கூட்டம்' சராசரி தொடர்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. எந்த நேரமும் கண்களைக் கசக்கிக் கொண்டிருக்கும் பெண்கள் இதில் இல்லை.
இதைத் தவிர ‘அத்திப் பூக்கள்', ‘தங்கமான புருஷன்' ஆகிய சீரியல்களில் நடித்து வருகிறேன். ‘அத்திப் பூக்கள்' ஈஸ்வரி, ‘தங்கமான புருஷன்' தாரா ஆகிய இரண்டு கேரக்டர்களுமே எனக்கு நல்ல பெயரை வாங்கி தந்திருக்கிறது. ஒரே நேரத்தில் மக்கள் ரசிக்கக் கூடிய மூன்று சீரியல்களில் நடிப்பது சிரமமாக இருந்தாலும் அவற்றுக்கு பாராட்டு கிடைக்கும்போது அதிலும் ஒரு சுகம். ஒவ்வொன்றிலும் வித்தியாசம் காட்ட வேண்டும் என்பதுதான் என் நோக்கம்.
குஷ்புதான் என்னை முதல் முறையாக நடிக்க அழைத்தார். அவருடைய ‘குங்குமம்' சீரியல்தான் என்னுடைய முதல் சீரியல். அவர்தான் என் குரு. அதற்கு பிறகு நிறைய சீரியல்கள் செய்தாகிவிட்டது.
சினிமாவைப் பொருத்தவரை நிறைய வாய்ப்புகள் வந்தன. இப்போதும் வருகிறது. அவை எல்லாமே ஹீரோயினுடைய காதலுக்கு ஐடியா தந்துவிட்டுச் செல்வது போன்ற கேரக்டர்கள்தான். சினிமாவில் சும்மா போய் நிற்பதை நான் விரும்பவில்லை. நானும் சினிமாவில் நடித்தேன் என்ற பதிவு எனக்கு வேண்டாம். நல்ல கேரக்டர்கள் வந்தால் பார்க்கலாம் என்றார்.
http://www.dinamani.com/Cinema/CineI...n%A7Ls&Topic=0
-
25th March 2009, 03:21 PM
#83
Senior Member
Seasoned Hubber
where is kalakka povathu yaaru sethu.Nowadays
i never seen his progaram. but i see the girl yaar antha prabhu deva show.
-
28th March 2009, 08:33 PM
#84
Moderator
Diamond Hubber
உங்களில் யார் அடுத்த பிரபுதேவா'வில் நடன இயக்குனர்கள் சுற்று
விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் நடன நிகழ்ச்சி "உங்களில் யார் அடுத்த பிரபுதேவா'.
50 வாரங்களைத் கடந்து சென்று கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக சினிமா துறையைச் சேர்ந்த பலர் கலந்துகொண்டு வந்துள்ளனர்.
அவ்வரிசையில், இந்நிகழ்ச்சியில் பாலிவுட், கோலிவுட் நடன இயக்குனர்களான சுந்தரம், ரகுராம், "புலியூர்' சரோஜா பாலிவுட் நடன இயக்குனர் சரோஜ் கான் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்கிறார்கள்.
போட்டியில் இருக்கும் 8 போட்டியாளர்கள், நடுவர்கள் நடனம் அமைத்த பாடல்களுக்கு நடனமாடுகின்றனர்.
இந்நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (மார்ச் 27) இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
நன்றி: தினமணி
-
30th March 2009, 12:14 PM
#85
Senior Member
Seasoned Hubber
தமிழ் சுட்டிகள் தேடல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ஏகோபித்த வரவேற்பை பெற்ற `தமிழ் பேச்சு எங்கள் மூச்சு' வெற்றியை தொடர்ந்து, சிறுவர்களுக்கிடையே செந்தமிழ்ப் பேச்சை பிரபலமடையச் செய்யும் வகையில் இளம் பேச்சாளருக்கான தேடல் ஆரம்பமாகிறது.
முதல் சுற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சிறுவர்களின் தமிழ்த் திறனை சோதிக்க ஒவ்வொருவருக்கும் ஒரு தலைப்பு கொடுக்கப்படும். அத்தலைப்பிற்கு ஏற்றார்போல் கவிதையோ, குட்டிக் கதையோ தங்களின் கற்பனை வளத்திற்கு தகுந்தாற்போல் 3 நிமிடம் பேச வேண்டும். இதுவே
போட்டி.`பட்டாம்பூச்சி', `கடமை', `நம்பிக்கை', `இயற்கை', `தூய்மை', `நன்னெறி' இது போன்ற மிக எளிய தலைப்புகளின் கீழ் சிறுவர்கள் தங்களுக்கு பிடித்தமான கருத்துக்களை 3 நிமிடங்களுக்குள் கூற வேண்டும்.
சிறுவர்களின் தமிழ் ஆற்றலை மதிப்பிட சுபவீரபாண்டியன், பேராசிரியை பர்வீன் சுல்தானா, சல்மா ஆகியோர் நடுவர்களாக சிறப்பித்தனர்.
சிறுவர்களின் மேடை ஆளுமை, பேச்சுத்திறன், தமிழ் மொழி மீது கொண்டுள்ள பற்று, விவாத திறமை, பொது அறிவு ஆகியவற்றின் அடிப்படையில் நடுவர்கள் சிறுவர்களை தேர்ந்தெடுப்பர்.
ஞாயிறு தோறும் காலை 9 மணிக்கு இந்த நிகழ்ச்சியை காணலாம்.
-
30th March 2009, 12:51 PM
#86
Senior Member
Seasoned Hubber
உங்களில் யார் அடுத்த பிரபுதேவா'வில் நடன இயக்குனர்கள் சுற்று
விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் நடன நிகழ்ச்சி ‘உங்களில் யார் அடுத்த பிரபுதேவா'.
50 வாரங்களைத் கடந்து சென்று கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக சினிமா துறையைச் சேர்ந்த பலர் கலந்துகொண்டு வந்துள்ளனர்.
அவ்வரிசையில், இந்நிகழ்ச்சியில் பாலிவுட், கோலிவுட் நடன இயக்குனர்களான சுந்தரம், ரகுராம், ‘புலியூர்' சரோஜா பாலிவுட் நடன இயக்குனர் சரோஜ் கான் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்கிறார்கள்.
போட்டியில் இருக்கும் 8 போட்டியாளர்கள், நடுவர்கள் நடனம் அமைத்த பாடல்களுக்கு நடனமாடுகின்றனர்.
இந்நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (மார்ச் 27) இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
-
4th April 2009, 09:02 PM
#87
Moderator
Diamond Hubber
மாடல் அழகிக்கு வந்த சோதனை
விஜய் டிவியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர், ரோஜாக்கூட்டம்.
வித்தியாசமான ஐந்து பெண்கள். அவர்களுக்கென்று தனித்தனி வாழ்க்கை. ஒவ்வொரு பெண்ணின் வாழ்வுக்குள்ளும் ஏதேனுமொரு ரகசியம் இருட்டு மூலையொன்றில் ஒளிந்து கொண்டுதான் இருக்கிறது. ஒரேயடியாய் அதை கொன்றுவிட முடியாமலும், அதன் ஆதிக்கத்திலிருந்து விடுபட முடியாமலும் திணறும் இந்த பெண்களின் போராட்டத்தை சொல்லிச் செல்கிறது, ரோஜாக் கூட்டம்.
கூடவே தொடர்கிறது, சிறு முட்களின் கூட்டமும். திருமணமானவர்கள், குழந்தைகள், கணவன், மாமனார், மைத்துனர் என்று ஒவ்வொருவருக்கும் ஒரு வாழ்க்கை வட்டம் உள்ளதுபோல் இந்த ஐந்து பெண்களுக்கும் இருக்கிறது. திருமணம் ஆகிவிட்டதாலேயே அவர்களுக்கு பிரச்சினை இருக்கிறது என்றோ இல்லை என்றோ சொல்ல முடியாது. ஆனால் இந்த பெண்கள் தங்கள் வாழ்க்கையையும், பிரச்சினைகளையும் கையாளும்விதமே தொடரை சுவாரசியமாக்கிக் கொண்டிருக்கிறது.
தொடரில் மாடல் அழகியாக வரும் மானஸா எதற்கும் அஞ்சாத கேரக்டர். தமிழகத்தின் முன்னணி மாடல்களில் ஒருத்தி. அபார்ட்மெண்டில் தனியாக வசிப்பவள். எந்நிலையிலும் தனது சுதந்திரத்தையும், சுயமரியாதையையும் விட்டுத் தராதவள்! ஒற்றையாய் வாழும் பெண்கள் இச்சமூகத்தில் சந்திக்கும் பிரச்சினைகள் இவளுக்கும் உண்டு. அனைத்தையும் லாவகமாய் கடக்கும் திறமை இவளிடம் உண்டு.
அப்படியிருந்தும் மாடலிங் துறையில் மாடல் அழகிகளுக்கு எந்தவித பிரச்சினைகள் வருமோ அதேமாதிரியான பிரச்சினை மானஸாவுக்கும் வந்தது. ஆனால் மானஸா அதற்காக மூலையில் உட்கார்ந்தெல்லாம் அழுது கொண்டிராமல் தனது அபார்ட்மென்ட்டில் வசிக்கும் புகைப்பட நண்பருடன் சேர்ந்து சாதுர்யமாக இப்பிரச்சினையை முறியடிக்கிறாள்.
மாடல் அழகியாக நடிப்பவர் பூஜா. இந்த கேரக்டர் பற்றி பூஜா கூறும்போது, "எத்தனையோ கேரக்டர்களில் நடித்தாலும் சிலது மட்டும் வித்தியாசமாக நமக்கே தனித்து தெரியும். அப்படியொரு கேரக்டர் தான் இந்த மானஸா கேரக்டர். நான் ரொம்பவே இன்வால்வாக நடிக்கும் அளவுக்கு இந்த கேரக்டர் எனக்குள் உட்புகுந்து விட்டது'' என்கிறார்.
நன்றி: தினதந்தி
-
4th April 2009, 09:03 PM
#88
Moderator
Diamond Hubber
இனி ஒரு விதி செய்வோம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகவிருக்கும் புதிய நிகழ்ச்சி, `இனி ஒரு விதி செய்வோம்.'
பெண்கள் மட்டுமே பங்குபெறும் இந்நிகழ்ச்சியில் அவர்களின் சுகம், துக்கம் எல்லாவற்றையும் இம்மேடையில் வெளிப்படுத்தலாம். பெண்கள் தங்களின் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை பேசி ஆராய இந்நிகழ்ச்சி ஒரு பாலமாக இருக்கும்.
`கணவனை விட அதிகம் சம்பளம் வாங்கும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்', `விவாகரத்து செய்து கொண்ட பெண்கள் வாழ்க்கையை தொடர்வதில் ஏற்படும் பிரச்சினைகள்', `சாலையில் செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் சம்பவங்கள்', `வேலைக்கு போகும் பெண்கள் மற்றும் வீட்டில் இருக்கும் பெண்களின்அன்றாட அனுபவங்கள்', `திருமணத்திற்கு பிறகு ஒரு பெண் செய்யும் தியாகங்கள் என பெண்கள் வாழ்வில் ஏற்படும் பிரச்சினைகள் அத்தனையும் இந்த மேடையில் அரங்கேறும்.
பிரபல தொகுப்பாளரான ரேவதி சங்கரன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். தேவதர்ஷினியும் அவ்வப்போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வருவார்.
திங்கள் முதல் வியாழன் வரை தினமும் மதியம் 12 மணிக்கு விஜய் டிவியில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகவிருக்கிறது.
நன்றி: தினதந்தி
-
13th April 2009, 11:10 PM
#89
Moderator
Diamond Hubber
திருநாள் ஸ்பெஷல்
சித்திரை திருநாளன்று விஜய் டிவி பல சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறது.
காலை 8 மணிக்கு திண்டுக்கல் லியோனியின் தலைமையில் ``தேர்தலில் கதாநாயகர்கள் வேட்பாளர்களா? வாக்காளர்களா?'' எனும் தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் இடம்பெறும்.
முன்னாள் மத்திய அமைச்சரான தயாநிதி மாறன், கவிஞர் வைரமுத்து சிறப்பு விருந்தினராக பங்குபெறும் நிகழ்ச்சி காலை 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
காலை 10 மணிக்கு `சிறப்பு நீயா? நானா?' இடம் பெறும். இதனையடுத்து காலை 11 மணிக்கு வசந்த விழா நிகழ்ச்சி.
மதியம் 1 மணிக்கு யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியாக இருக்கும் `குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும்' திரைப்படத்தின் சிறப்பு பார்வை இடம்பெறும்.
நடிகர், ஓவியர், கவிஞர் என பல முகம் கொண்டிருக்கும் சிவகுமார் `கம்பன் என் காதலன்' நிகழ்ச்சியில் கம்பராமாயணத்தின் புகழை பள்ளி மாணவர்களுக்கு எடுத்துரைக்கிறார். இது மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகும்.
4.30 மணிக்கு சித்தார்த் மற்றும் தமனா நடிப்பில் வெளியாகவுள்ள `ஆனந்த தாண்டவம்' திரைப்படத்தின் சிறப்பு பார்வையும், 5 மணிக்கு விக்ரம்- ஸ்ரேயா நடிப்பில் வெளியாகவுள்ள `கந்தசாமி' திரைப்படத்தின் சிறப்பு பார்வையும் இடம் பிடிக்கிறது.. இரவு 7 மணிக்கு ஹாலிவுட் சூப்பர் ஹிட் திரைப்படமான `தி வார்' தமிழில் ஒளிபரப்பாகவுள்ளது'.
நன்றி: தினதந்தி
-
13th April 2009, 11:29 PM
#90
Moderator
Diamond Hubber
விஜய் டி.வி.யில் சித்திரை திருநாள் சிறப்பு "காஃபி வித் அனு' ஒளிபரப்பாகிறது.
இதில், சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மற்றும் கவிஞர் வைரமுத்து பங்கு பெறுகின்றனர். இருவருக்குமிடையே இருக்கும் நட்பு, தமிழ் ஆற்றல், அரசியல் என பலவற்றை பற்றி கலந்துரையாடுகின்றனர்.
நிகழ்ச்சியின் போது, முதல்வர் கருணாநிதி, நடிகர்கள் கமல், விவேக், பின்னணி பாடகர் எஸ்.பி.பி. ஆகியோர் டி.வி.யில் தோன்றி இருவரைப் பற்றியும் கூறுவர். அதை, இருவரும் கேட்பார்கள். இந்நிகழ்ச்சி (ஏப்ரல் 14) செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
Bookmarks