பாலும்பழமும் அவருடைய மிகச்சிறந்த படம்
ஆலயமணியின் ஒசையைநான் கேட்டேன் கனிவு பசுமை பூரிப்பூ எல்லாம் ஒருங்கினைநத சிறப்பை யாரிடத்தில் காணலாம்
அவருக்கே அது சொந்தம்
1 - சகாப்தம் படைத்த சரோஜாதேவி: தமிழ் ரசிகர்களைக் கவர்ந்த கன்னடத்துக்கிளி
தமிழ் சினிமா உலகில் 25 வருடங்களாக முன்னணி நடிகையாக விளங்கியவர். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., நடிகர் திலகம் சிவாஜிகணேசன், காதல் மன்னன் ஜெமினிகணேசன் ஆகிய 3 பேருடனும் கதாநாயகியாக நடித்து புகழ் பெற்றவர். ஒரு காலத்தில் 'சூப்பர் ஸ்டார்'களை விட அதிகம் சம்பளம் வாங்கியவர் என்ற பெருமைகளை பெற்றவர் நடிகை சரோஜாதேவி.
பெங்களூரைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி பைரப்பா, ருத்ரம்மா ஆகியோரின் 4-வது மகளாகப் பிறந்த சரோஜா தேவி, சினிமா உலகில் நுழைந்தது சுவையான கதை. அவர் பெங்களூரில் உள்ள புனித தெரசா பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டு இருந்தார். அப்போது, மேயோஹாலில் ஒரு இசைப்போட்டி நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சியில், பள்ளிக்கூடத்தின் சார்பில் சரோஜா தேவியை கலந்து கொள்ளச் சொன்னார்கள். அவர் கலந்து கொண்டு 'ஏ ஜிந்தகி கே' என்ற இந்தி பாடலை பாடினார். அந்த பாடல் நிகழ்ச்சிக்கு கன்னட திரை உலகத்தின் பிரபல பட அதிபரும், நடிகருமான ஹொன்னப்ப பாகவதர் வந்து இருந்தார்.
(ஹொன்னப்ப பாகவதர், 'வால்மீகி', 'ஸ்ரீமுருகன்', 'பர்மா ராணி' முதலிய தமிழ்ப்படங்களில் கதாநாயகனாக நடித்தவர்.) சரோஜாதேவியின் பாடலைக்கேட்ட ஹொன்னப்ப பாகவதர், 'இந்த சிறுமி நன்றாக பாடுகிறாள்.
குரல் வளம் நன்றாக இருக்கிறது. இவளை சினிமா படத்தில் பின்னணி பாட வைத்தால் என்ன' என்ற எண்ணத்துடன் சரோஜாதேவியின் தாயாரை அணுகினார்.
அதன்படி, சினிமா ஸ்டூடியோவுக்கு அழைத்துச்சென்று, அவருக்கு குரல் வளத்துக்கான சோதனையை செய்ய உத்தரவிட்டார். சோதனையின்போது சரோஜாதேவியை பார்த்த ஹொன்னப்ப பாகவதருக்கு அவரை நடிகையாக்கினால் என்ன என்ற எண்ணம் தோன்றியது. உடனே அதற்கான ஒப்பனை செய்து பார்க்கும்படி சொன்னார். அந்த ஒப்பனையின்போது அவரின் தோற்றம் அங்கு இருந்தவர்களுக்கு பிடித்துவிடவே சரோஜாதேவியை சினிமாவில் நடிக்க ஹொன்னப்ப பாகவதர் ஒப்பந்தம் செய்தார்.
அதன்படி ஹொன்னப்ப பாகவதர் தயாரித்த 'மகாகவி காளிதாஸ்' என்ற கன்னடப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படமே அவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. அந்த படத்துக்கு தேசிய விருதும் கிடைத்தது. முதல் படமே வெற்றிப்படமாக அமைந்து ராசியான நடிகை என்று பெயர் பெற்ற அவரை, தனது அடுத்த படமான 'பஞ்ச ரத்தினம்' என்ற கன்னட படத்திலும் கதாநாயகியாக நடிக்க வைத்தார். ஒரு படத்துடன் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டுப் படிக்கப் போய்விடலாம் என்று நினைத்த சரோஜாதேவிக்கு, இது சற்று சங்கடத்தை தந்தாலும், தனது தாயாரின் விருப்பப்படி தொடர்ந்து நடித்தார்.
அந்தப் படத்துக்கு பிறகு, இயக்குனர் கே.சுப்பிரமணியம் தயாரித்த கச்ச தேவயானி என்ற கன்னட படத்தில் நடித்தார்
read more article
go to her home page goldentamilcinema.net/index.php/sarojadevi
Last edited by lovedeva_pj; 7th August 2012 at 05:38 AM.
Bookmarks