சில தினங்களுக்கு முன் கொஞ்சம் சோம்பலாய் இருந்த மாலை வேளையில்(இரவு ஒன்பது மணி!) ஆண்களின் விளையாட்டான டிவி சேனல் மாற்றுதலைச் செய்து கொண்டிருந்த போது டபக்கென்று காதிலும் கண்ணிலும் விழுந்து இழுத்தது இந்தப் பாட்டு... தம்பி வெட்டோத்தி(என்ன தி) சுந்தரமாம்..கொழுக் மொழுக் கரணும் கொஞ்சம் சோகையாய்க் கன்னம் உள்வாங்கிய அஞ்சலியும் பாடும் பாடல்...
கரணைப் பொறுத்தவரை நிலையான இடம் கிடைக்கப் போராடி வருகிறார்..ஆனால் அஞ்சலிப்பாப்பா..இன்னும் எங்கேயும் எப்போதும் இ ல் செய்த அழுகை காதில் ஒலிக்கிறது.....ஏகப் பட்ட முன்னேற்றம்..க்ண்ணில் மின்னலுடன் காதலையும் காட்டும் அழகு... கொலைகாரா என விளிக்கும் போதும். பளிச்..
சங்கு முத்து எல்லாமே தங்கக் கால வெல பேசும் ; பாதிக்கொலை செஞ்சுப்புட்டு தப்பிச்செல்லும் மூடா.. முத்தமிட்டு மொத்தத்தையும் கொன்னுப்புட்டு போடா... எனக்கவர்கிற வரிகளை வைத்து யார்ப்பா அது என நெற்றிச் சுருக்கிப்பார்த்தால் நம்ம மூ.உ.போ.. வைரமுத்து...அதான்..
இனி...பாட்டு வரிகள் பார்ப்போமா..
**
கொலைகாரா அனலாச்சு என் மூச்சு
புத்தி மாறி போயாச்சு அட கொலைகாரா.. ஆஹா..
கொலைகாரி உன்ன பாத்து உசுர் போச்சு
நின்னு போச்சு என் மூச்சு அடி கொலைகாரி..
உன் மடியில் சீராட்டு.. என் மனச தாலாட்டு..
அந்த அலைமேல் பாய் போட்டு.. அழகே நீராட்டு..
கொலைகாரா அனலாச்சு என் மூச்சு
புத்தி மாறி போயாச்சு அட கொலைகாரா.. ஆஹா..
பாலும் சோறும் உங்காம பச்சை தண்ணி செல்லாம
இத்து இத்து போனேனே..
எச்சி முத்தம் எல்லாம நெஞ்ஜாங்கனி தாங்காம
ரெண்டு கண்ணும் தூங்காம கட்டில் சுகம் காணாம
காமன் செய்யும் நாட்டாமை..
பஞ்சில்லாம தீயில்லாம பத்தவச்ச கள்ளி
புத்திக்குள்ள கத்திவீசி போவதென்ன தள்ளி
பச்ச வாழ தோப்புக்குள்ள பந்திவெக்க வாடிப்புள்ள
பால் பழங்கள் கூடைக்குள்ள பத்தியமும் தேவையில்ல..
கொலைகாரி..
நாஞ்சில் நாட்டுக் கடலெல்லாம் உன்ன கண்டு வலைவீசும்
சங்கு முத்து எல்லாமே தங்க கால விலைபேசும்
ஓர கர எல்லாமே ஒட்டிக்கொள்ளும் மீன்வாசம்
உன்ன மட்டும் தொட்டாலே மாசம் எல்லாம் பூவாசம்
பாதி கொலை செஞ்சுப்புட்டு தப்பி செல்லும் மூடா
முத்தம் இட்டு மொத்தத்தையும் கொன்னுப்புட்டு போடா
ஆசை வெச்சிப் பொம்பளைக்கு அஞ்சுநாலா தூக்கமில்லை
மீச வெச்ச ஆம்பளைக்கு மெத்த வாங்க நேரமில்லை..
கொலைகாரி உன்ன பாத்து உசுர் போச்சு
நின்னு போச்சு என் மூச்சு அடி கொலைகாரி..
கொலைகாரா அனலாச்சு என் மூச்சு
புத்தி மாறி போயாச்சு அட கொலைகாரா.. ஆஹா..
உன் மடியில் சீராட்டு.. என் மனச தாலாட்டு..
அந்த அலைமேல் பாய் போட்டு.. என் அழக நீராட்டு..
காதல்னா என்ன செய்ய்ம் நம நமங்குமா... சுஜாதாவின் க்தையில் வரும்..ஆயிரம் சொல்லுங்கள்..காதல் பாடல்களையெல்லாம் பத்துடன் ஒன்று என ஜஸ்ட்லைக்தட் விட்டு விட முடிவதில்லை..முழுதும் கேட்டுவிட்டு ஓகேயா இல்லையா என்று தான் முடிவெடுக்க முடியும்..
அதுவும் சில பாடல்கள் திரையில் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும்..கேட்டால் அவ்வளவு சுவாரஸ்யமாய் இருக்காது.. சில கேட்க மட்டுமே முடியும் பார்த்தால் பயம் வரும்
(உதாரணம் சின்ன்ப்புறாவொன்று எண்ணக் கனாவினில் வண்ணம் கெடாமல் வாழ்கின்றது..கேட்க ரொம்ப நன்னாயிட்டு இருக்கும் இந்தப் பாட்டை படத்தில் பாடியிருப்பவர் தேங்காய் சீனிவாசன் அண்ட் ராதிகா...நடு நடுவே வந்து பயமுறுத்துவார்)
சமீபத்தில் பார்த்த இந்தப் படத்தின் பாடலில் – இளமையான ஷ்ரீகாந்த் அப்புறம் கொஞ்சம் சோகமில்லாத சோனியா இயல்பாய் காதல் மனம் பற்றி பாடுவது..-முதன்முறை பார்த்துக் கேட்ட போதே பிடித்து விட்டது..
"நீ தூங்கிடும் நேரம் லேசாய் கேட்கும் பாடல் தந்திடுவேன் " இதெல்லாம் காதலியாய்
இருக்கும் வரை தான்.கல்யாணத்துக்கு அப்புறம் கண்டிப்பாய் மாறும்!
i
கவிதை வரிகளுக்குச் சொந்தக்காரர் தெரியவில்லை..
கேட்டுப் பாருங்களேன்..
**
சொல்ல வந்ததை சொல்ல வந்ததை சொல்லவில்லை
சொல்லும் வரை சொல்லும் வரை காதல் தொல்லை
என்ன தந்திடுவேன், நான் என்னை தந்திடுவேன்
உள்ளம் தந்திடுவேன், நான் உயிரை தந்திடுவேன்
நீ வானவில் தந்தால் நான் வானம் தந்திடுவேன்
நீ ஓரிடம் தந்தால் நான் உலகை தந்திடுவேன்
உன் ஆயுள் காலம் தீரும்பிோது என் ஆயுள் தந்திடுவேன்
என்ன தந்திடுவேன், நான் என்னை தந்திடுவேன்
உள்ளம் தந்திடுவேன், நான் உயிரை தந்திடுவேன்
விரல்கள் நீ தந்தால் நான் ஸ்பரிசம் தந்திடுவேன்
விழிகள் நீ தந்தால் நான் கனவு தந்திடுவேன்
நொடிகள் நீ தந்தால் நான் யுகங்கள் தந்திடுவேன்
விதைகள் நீ தந்தால் நான் விருட்சம் தந்திடுவேன்
நீ கோப பார்வை பார்க்கும் போது கொஞ்சல் தந்திடுவேன்
என் தோளில் நீயும் சாய தொட்டில் தந்திடுவேன்
நீ பார்த்திடும் போது பாராமல் நான் பார்வை தந்திடுவேன்
நீ பேசிடும் போது பேசாமல் நான் மௌனம் தந்திடுவேன்
என்ன தந்திடுவேன், நான் என்னை தந்திடுவேன்
உள்ளம் தந்திடுவேன், நான் உயிரை தந்திடுவேன்
இறகு நீ தந்தால் நான் தோகை தந்திடுவேன்
கைகள் நீ தந்தால் உயிர் ரேகை தந்திடுவேன்
பூமி நீ தந்தால் நான் பூக்கள் தந்திடுவேன்
கிளைகள் நீ தந்தால் நான் கிளிகள் தந்திடுவேன்
உன் நெற்றி வருட கேசம் ஒதுக்க காற்று தந்திடுவேன்
நீ இருட்டில் நடக்க எந்தன் விழியில் வெளிச்சம் தந்திடுவேன்
நீ ஜன்னலின் ஓரம் நின்றிடும் போது சாரல் தந்திடுவேன்
நீ தூங்கிடும் நேரம் லேசாய் கேட்கும் பாடல் தந்திடுவேன்
என்ன தந்திடுவேன், நான் என்னை தந்திடுவேன்
உள்ளம் தந்திடுவேன், நான் உயிரை தந்திடுவேன்
Last edited by chinnakkannan; 17th November 2011 at 12:59 PM.
I have become a HUGE fan of this song....including its lyrics. When someone is low, blue, sulking sure this song spreads a soothing balm, so much so that when the song ends, u actually start smiling! Great job iwth lyrics and the rhthm. My hus feels the rhythm reminds him of "kathalikkum peNNin kaigaL thottu neetinaal"...when music has just few notes and every song reminds u of another. Check out the lyrics online, its cute . Way to go dhanush, gvp. Love it!
Freeயா சுத்தும் போது Figure இல்லையே
பிடிச்ச Figure ம் இப்ப Freeயா இல்லையே
கையில Batஇருக்கு Ballஇல்லையே
Life பூரா இந்த தொல்லையே
உலகமே Speedஆ ஓடி போகுது
என் வண்டி பஞ்சர் ஆகி நிக்குது
மொக்க Piece கூட கிண்டல் பண்ணுது
குண்டு சட்டியில இரண்டு குதிரை வண்டி ஓட்டுறேன்
Fuse போன பின் பல்புக்கான Switchஅ தேடுறேன்…
நடு ராத்திரி என்ன படுத்தேன் எழுந்தேன்
ஒரு மாதிரி சிரிச்சேன் அழுதேன் சிரிச்சேன்
love these lines!!!
(the high light is kundu sattiyile "rendu kuthirai" lol)
Last edited by Shakthiprabha; 28th November 2011 at 01:43 PM.
I got the video of song which my SOUL cherishes. I am not gonna post-repeat the lyrics. Song is just to watch/listen.... and GET DROWNED in Ms.Shivaranjani(raag).
Ms. Shivaranjani(raag) knows I am her HOPELESSLY FANATIC devotee.
பாடல்: மாதவிப் பொன் மயிலாள்...
திரைப்படம்: இரு மலர்கள் (1967)
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள்
வண்ண மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள்
வண்ண மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
காதல் மழை பொழியும் கார்முகிலாய்
காதல் மழை பொழியும் கார்முகிலாய்
இவள் காதலன் நானிருக்கப் பேரெழிலாய்
காதல் மழை பொழியும் கார்முகிலாய்
இவள் காதலன் நானிருக்கப் பேரெழிலாய்
இங்கே மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள்
வண்ண மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
வானில் விழும் வில் போல் புருவம் கொண்டாள்
இளம் வயதுடையாள் இனிய பருவம் கண்டாள்
வானில் விழும் வில் போல் புருவம் கொண்டாள்
இளம் வயதுடையாள் இனிய பருவம் கண்டாள்
கூனல் பிறை நெற்றியில் குழலாட
கொஞ்சும் குளிர் முகத்தில் நிலவின் நிழலாட
கூனல் பிறை நெற்றியில் குழலாட
கொஞ்சும் குளிர் முகத்தில் நிலவின் நிழலாட
கலை மானின் இனம் கொடுத்த விழியாட
ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ
ஆஆஆஆ ஆஆஆஆஆ ஆஆஆஆஆ
மானின் இனம் கொடுத்த விழியாட
அந்த விழி வழி ஆசைகள் வழிந்தோட
நல்ல மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள்
வண்ண மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
காதல் மழை பொழியும் கார்முகிலாய்
இவள் காதலன் நானிருக்கப் பேரெழிலாய்
இங்கே மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள்
வண்ண மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
நல்ல மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள்
வண்ண மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
காதல் மழை பொழியும் கார்முகிலாய்
இவள் காதலன் நானிருக்கப் பேரெழிலாய்
இங்கே மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள்
வண்ண மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
கரிதநிதபமகரி ஸரிகாமபதநி மாதவிப் பொன் மயிலாள்
கரிதநிதநிபதநிஸ்ரிநீ தபதமபமகரி
ஸரிகாமபதநி மாதவிப் பொன் மயிலாள்
ஸ்ரிரிகமநீ நிஸ்ஸ்ரிகதா தநிநிஸ்ரி பாதமாபமகரிஸ
ரிகமநி ஸ்ரிக மபதமா பதநி ஸ்ரிக நிரிஸ்தநி நித
மாபதநிஸ்கரி மாதவிப் பொன் மயிலாள்
தகிட தகிட திமி தகிட தகிட திமி தகிட தகிட திமி தகிட தகிட திமி
தா ஜிம் கிடதகதரிகிடதோம் தா ஜிம் கிடதகதரிகிடதோம்
தா ஜிம் கிடதகதரிகிடதோம் தாததிம்த தத்திம் தத்திம்
நல்லபாட்டு ராக தேவன்..ரொம்ப நாள் முன் பார்த்தது.. கொஞ்சம் கொழுக் மொழுக்கென்றிருக்கும் பத்மினி முகபாவத்தை வைத்தே சமாளித்து விடுவார்..கிட்டத்தட்ட லெக்சரர் மாதிரி இருக்கும் சிவாஜியும் ஹெட் ஆஃப் த டிபார்ட்மெண்ட் மாதிரி இருக்கும் பத்மினியும் மாணவர்களாம்..ம்ம அப்புறம்கதை வேறு மாதிரி போய் கேஆர்வி வருவது புகை போல நினைவிருக்கிறது..
Bookmarks