-
20th October 2011, 10:33 AM
#1021
Senior Member
Senior Hubber
சமீபத்தில் பார்த்த படங்களில் கொஞ்சம் வித்யாசமாய் அழகியலுடன் இருந்த படம் வாகை சூடவா.. அதில் கதானாயகி எளிமையானவள்.. அவளைப் போலவே அவள் பாடும் பாடலும் எளிமையாய் மனதிலும் ஒட்டிக் கொள்கிறது.,. எழுதிய வைரமுத்துவும், நடித்த இனியாவும், படமாக்கிய ஒளிப்பதிவாளரும், இயக்குனரும் பாராட்டுக்குரியவர்கள்..வழக்கமான சின்மயி வாய்ஸ் தான்... இந்தப்பாட்டில் இன்னும் கொஞ்சம் உருக்கம்... சின்னவயதில் ஃப்ரிட்ஜிலிருந்து பனிக்கட்டியை எடுத்து அறியாத போதில் நண்பன் சட்டையின் பின்புறம் போட்டுவிடும் போது ச்சிலீர் என ஏற்படும் குளிர்ச்சி...இந்தப்பாடலில்..
சர சர சார காத்து வீசும் போது
சார பாத்து பேசும் போது
சார பாம்பு போல நெஞ்சம் சத்தம் போடுதே...
சர சர சார காத்து வீசும் போது
சார பாத்து பேசும் போது
சார பாம்பு போல நெஞ்சம் சத்தம் போடுதே...
இத்து இத்து இத்து போன நெஞ்சு தைக்க
ஒத்த பார்வை பாத்து செல்லு
மொத்த சொத்த எழுதி தாரேன் மூச்சு உட்பட...
இத்து இத்து இத்து போன நெஞ்சு தைக்க
ஒத்த பார்வை பாத்து செல்லு
மொத்த சொத்த எழுதி தாரேன் மூச்சு உட்பட...
டீ போல நீ... என்ன ஏன்... ஆத்துற
சர சர சார காத்து வீசும் போது
சார பாத்து பேசும் போது
சார பாம்பு போல நெஞ்சம் சத்தம் போடுதே
எங்க ஊரு பிடிக்குதா... எங்க தண்ணி இனிக்குதா
சுத்தி வரும் காத்துல... சுட்ட ஈரல் மணக்குதா
முட்டை கோழி பிடிக்கவா... முறை படி சமைக்கவா
எலும்புங்க கடிக்கயில்... என்ன கொஞ்ச நினைக்க வா
கம்மஞ்சோறு ருசிக்க வா... சமைச்ச கைய கொஞ்சம் ரசிக்க வா
மொடகத்தா ரசம் வச்சு மடக்க தான் பாக்குறேன்
ரெட்டை தோசை சுட்டு வச்சு காவ காக்குறேன்
முக்கண்ணு நொங்கு நான் விக்கிறேன்
மண்டு நீ கங்கைய கேக்குற
சர சர சார காத்து வீசும் போது
சார பாத்து பேசும் போது
சார பாம்பு போல நெஞ்சம் சத்தம் போடுதே
புல்லு கட்டு வாசமா... புத்திக்குள்ள வீசுற
மாட்டு மணி சத்தம்மா... மனசுக்குள் கேக்குற
கட்ட வண்டி ஓட்டுற... கையளவு மனசுல
கையெழுத்து போடுற... கன்னி பொண்ணு மார்புல
மூனு நாளா பாக்கல... ஊரில் எந்த பூவும் பூக்கல
ஆட்டு கல்லு குழியில ஒறங்கி போகும் பூனையா
உன்னை வந்து பாத்து தான் கிறங்கி போறேன்யா
மீனுக்கு ஏங்குற கொக்கு நீ
கொத்தவே தெரியல மக்கு நீ
சர சர சார காத்து வீசும் போது
சார பாத்து பேசும் போது
சார பாம்பு போல நெஞ்சம் சத்தம் போடுதே...
சர சர சார காத்து வீசும் போது
சார பாத்து பேசும் போது
சார பாம்பு போல நெஞ்சம் சத்தம் போடுதே...
இத்து இத்து இத்து போன நெஞ்சு தைக்க
ஒத்த பார்வை பாத்து செல்லு
மொத்த சொத்த எழுதி தாரேன் மூச்சு உட்பட...
இத்து இத்து இத்து போன நெஞ்சு தைக்க
ஒத்த பார்வை பாத்து செல்லு
மொத்த சொத்த எழுதி தாரேன் மூச்சு உட்பட...
டீ போல நீ... என்ன ஏன்... ஆத்துற
காட்டு மல்லிக பூத்திருக்கு காதலா காதலா
வந்து வந்து ஓடிபோகும் வண்டுக்கு என்ன காச்சலா
-
20th October 2011 10:33 AM
# ADS
Circuit advertisement
-
23rd October 2011, 08:27 AM
#1022
Senior Member
Seasoned Hubber
CK: Listened to "சர சர சார காத்து..." today, and liked it a lot! Here's the video:
-
25th October 2011, 01:04 AM
#1023
Senior Member
Senior Hubber
நன்றி ராகதேவன்.. மீண்டும் பார்த்து ரசித்தேன்..
**
பொறாமை- இந்த மூன்றெழுத்து உணர்வு இருக்கிறதே இது ஏற்பட்டு விட்டால் ஒரு மனிதன் எந்த அளவுக்கு இறங்குவான் என்பதைக் காட்டிய படம் ஆடுகளம். குரு நாதராக வரும் வ ஐ ச ஜெயபாலன் கண்களின் மூலமும் வசன உச்சரிப்பினாலும் நன்றாகச் செய்திருப்பார்..
தனுஷ்..முகமும் உடலும் டிபிகல் மதுரைக்காரப் பையன்...சில வருடங்களுக்கு முன்னால் இருந்த என்னைப் போல...!
அதுவும் டாப்ஸி -ஆங்கிலோ இந்தியப் பெண்ணாக (ரயில்வே காலனியில் வசிக்கும்) வந்து..ஏதோ பேசிவிட்டுச் செல்லவோ.. என்னவோ குதிகுதி எனக் குதித்து ஆடும் இந்தப்பாடல் எனக்குப் பிடிக்கும்.. யார் எழுதினார்கள் எனத் தெரியவில்லை..
*
ஹேய் ஒத்தச் சொல்லால என் உசுர எடுத்து வச்சிக்கிட்டா
ரெட்டைக் கண்ணால என்னத் தின்னாடா
பச்சத் தண்ணிப்போல் அட சொம்புக்குள்ள ஊத்திவச்சி
நித்தம் குடிச்சி என்னக் கொன்னாடா
ஏ பொட்டக்காட்டுல ஆலங்கட்டி மழை பேஞ்சி
ஆறொன்று ஓடுறதப் பாரு
அட பட்டாம்பூச்சிதான் என் சட்டையில ஒட்டிக்கிச்சி
பட்டாசுப் போல நான் வெடிச்சேன்
முட்டக்கண்ணால என் மூச்செடுத்துப் போனவதான்
தொட்டப்பின்னால ஏதோ ஆனேன்டா
ஏ என்னென்னமோ தீர்ந்து போனது
அந்த கண்ணாடியும் தடிப்பு ஆனது
நான் குப்புறத்தான் படுத்துக் கெடந்தேன்
என்ன குதிரமேல ஏத்திவிட்டாயே
ஒன்னும் சொல்லாம உசுரத் தொட்டாயே
உசுர தொட்டாயே மனச இனிக்க வச்ச சீனி மிட்டாயே
ஏ கட்டவண்டி கட்டி வந்துதான்
அவ கண்ணழகப் பார்த்துப் போங்கடா
அட கட்டுச்சோறு கட்டி வந்துதான்
அவ கழுத்தழகப் பார்த்துப் போங்கடா
கத்தாழப் பழச்செவப்பு முத்தாழ இளஞ்சிரிப்பு
வெத்தள அவ இடுப்பு
நான் திருகாத....
அட ரேஷன் கார்டில் பேர ஏத்துவேன்
ஒரு நாள் குறிச்சி தட்டு மாத்துவேன்
ஏ ஊருக்கெல்லாம் சேதி சொல்லுவேன்
அவ காதில் மட்டும் மீதி சொல்லுவேன்
பொண்ணு கருப்பட்டி கண்ணு தீப்பெட்டி
மென்னு தின்னாளே என்னை ஒருவாட்டி
*
பொட்டக்காட்டில் ஆலங்கட்டி மழை பெஞ்சு அது உருகி ஆறா ஓடுதாம்...பரவால்ல ஒக்காந்து யோசிக்கறதுங்கறது இதுதானா..
Last edited by chinnakkannan; 25th October 2011 at 01:06 AM.
-
1st November 2011, 12:21 AM
#1024
Senior Member
Senior Hubber
கல்லூரி மாணவியர் இருவர் தற்செயலாக்க் கிடைத்த உயிரற்ற உடல் ஒன்றினை பதற்றத்துடன் ஒளித்து வைக்கப் பார்க்கிறார்கள்....கல்லூரியிலோ கலை விழா. விழா மேடையின் மேற்பகுதியில் இவர்கள்.. உடலை ஒளித்து வைக்க வேண்டும்..என்ன செய்வது..இதோ...மேடையில் பாடலும் ஆரம்பமாகிவிட்ட்து....
*
ஜோதிகாவும் அந்த இன்னொரு பொண்ணும் நன்றாகத் துடித்து நடித்திருப்பார்கள்.. (படம் சினேகிதியே)நல்லவேளை அவர்களை ஆடவிடாமல் மேலும் சில அழகான பெண்கள் ஆடியிருப்பார்கள்..(இந்தப் படம் நிறைய சதவிகிதம் பெண்கள் நடித்திருந்த ஒன்று..இருந்தாலும் இந்தப் பாடலில் ஆடும் சில ஒல்லி ஒல்லி மங்கையர் புடலங்காயுடன் எலுமிச்சம்பழங்கள் வைத்தாற்போல் சுடிதாருடனும் ஜீன்ஸ் டிஷர்ட்டுடனும் பாப்தலையுடனும் க்ண்களில் பளிச் சிரிப்புடனும் நன்றாகவே ஆடியிருப்பர்..(ஏன் வேறு பட்த்தில் நடிக்கவில்லை..)
அதுவும் நடு நடுவில் ஜோ அண்ட் கோவின் பரபரப்பு இருந்தாலும் பாடல் சுவாரஸ்யமாக இருந்த்து..
சோதனைக்கென இதே பாடலை மலையாளத்திலும் ஹிந்தியில் முழுப்படமும் பார்த்தேன்.. மலையாளம் ஓக்கே.. ஹிந்தியில் பகட்டான செட்டில் பாடலின் ஆழமும் அழகும் காணாமல் போனதென்றே சொல்ல வேண்டும்...
இந்தப் பாட்டின் இறுதிக் காட்சி ஒன்றை வைத்து மூன்று மொழிகளிலும் படமெடுத்த ப்ரியதர்ஷனை என்னென்று சொல்ல..
இனி ஓவர் ட்டூ..பாட்டு வரிகள்..
**
ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ
கண் ரெண்டும் தந்தியடிக்க கண்ணா வா கண்டு ..பிடிக்க (2)
கொள்ளை நிலவடிக்கும் வெள்ளை ராத்திரியில் கோதை ராதை நடந்தாள்
மூங்கில் காட்டில் ஒரு கானம் கசிந்தவுடன் மூச்சு வாங்கி உறைந்தாள்
பாடல் வந்த வழி ஆடை பறந்ததையும் பாவை மறந்து தொலைந்தாள்
நெஞ்சை மூடிக் கொள்ள ஆடை தேவை என்று
நிலவின் ஒளியை எடுத்தாள்
நெஞ்சின் ஓசை ஒடுங்கிவிட்டாள்
நிழலை கண்டு நடுங்கிவிட்டாள்
கண்ணன் தேடி வந்த மகள்
தன்னை தொலைத்து மயங்கிவிட்டாள்
தான் இருக்கின்ற இடத்தினில் நிழலையும் தொடவில்லை
எங்கே எங்கே சொல் சொல்
கண் ரெண்டும் தந்தியடிக்க கண்ணா வா கண்டுபிடிக்க
கண்ணன் ஊதும் குழல் காற்றில் தூங்கி விட்டு காந்தம் போல இழுக்கும்
மங்கை வந்தவுடன் மறைந்து கொள்ளுவது மாய கண்ணன் வழக்கம்
காதை இழந்து விட கண்கள் சிவந்து விட காதல் ராதை அலைந்தாள்
அவனை தேடி அவள் கண்ணை தொலைத்து விட்டு ஆசை நோயில் விழுந்தாள்
உதடு துடிக்கும் பேச்சு இல்லை உயிரும் இருக்கும் மூச்சு இல்லை
வந்த பாதை நினைவு இல்லை போகும் பாதை புரியவில்லை
உன் புல்லாங்குழல் சத்தம் வந்தால் பேதை ராதை ஜீவன் கொள்வாள்
கண்ணா எங்கே சொல் சொல்
கண்ணீரில் உயிர் துடிக்க கண்ணா வா உயிர் கொடுக்க
கன்னம் தீண்டியதும் கண்ணன் என்று அந்த கன்னி கண்ணை விழித்தாள்
கன்னம் தீடியது கண்ணன் இல்லை வெறும் காற்று என்று திகைத்தாள்
கண்கள் மூடிக்கொண்டு கண்ணன் பேரை சொல்லி கைகள் நீட்டி அழைத்தாள்
காட்டில் தொலைத்துவிட்ட கண்ணின் நீர் துளியை எங்கு கண்டு பிடிப்பாள்
விழியின் சிறகை வாங்கிக்கொண்டு கிழக்கை நோக்கி சிறகடித்தாள்
குயிலின் குரலை வாங்கிக்கொண்டு கூவி கூவி அவள் அழைத்தாள்
அவள் குறை உயிர் கரையும்முன் உடல் மண்ணில் சரியும்முன்
கண்ணா கண்ணா நீ வா
கண்ணீரில் உயிர் துடிக்க கண்ணா வா உயிர் கொடுக்க
Last edited by chinnakkannan; 1st November 2011 at 12:24 AM.
-
1st November 2011, 06:43 PM
#1025
Senior Member
Diamond Hubber
சிநேகிதியே படத்தின் ஒரிஜினல் மராத்திப் படமான பின்தாஸில் இந்தப் பாடல் காட்சி இது போல இல்லை என்றாலும் அருமையாக விறுவிறுப்பு குறையாமல் படமாக்கி இருப்பார்கள்
-
1st November 2011, 09:38 PM
#1026
Senior Member
Senior Hubber
தாங்க்ஸ் ஃபர் த இன்ஃபோ மது..மராத்தில யாரு ஹீரோயின்..அதுவும்ப்ரியதர்ஷன் படமா..
-
2nd November 2011, 07:17 PM
#1027
Senior Member
Diamond Hubber
I dont remember the names of actors etc. But thats not a priyadarshan movie. ( I dont know marathi. But my friends insisted that I should see it)
-
12th November 2011, 11:41 PM
#1028
Senior Member
Veteran Hubber
Herez a feast in raag HINDOLAM...
film: raaga bandhangaL
MD: kunnakudi vaithyanathan.
Singer: jayachandran.
KV had reasonable hits as md, and some of his brilliance has sculptured indelible songs in the heart of tfm lovers. I am sure music leaders like kv have pulled the interest of normal layman towards carnatic raagas.
http://www.4shared.com/audio/9JzcIEr...laimagaLO.html
enjoy............... I really really wish I had the opporutnity, circumstance, feasibility and talent to learn DANCE...sigh. Does not matter I imagine a lovely dancer dancing for this song....andha karpanai pothum.... :wow:
மலரோ நிலவோ மலைமகளோ!
தேவி வடிவாக அமர்ந்தவள் யாரோ
மலரோ நிலவோ மலைமகளோ!
நீ தானா அழைத்ததும் நீதானா
நெடுநாளாய் நினைத்தும் இதைத் தானா
என் தேவி உனக்கிது சரிதானா
மின்னல் மின்னும் இருவிழியில்
அன்னை உன்னை
இதயமலர் அள்ளி அள்ளி
கவிதை தருவேன் தொழுது வருவேன் தொடர்ந்து வருவேன்
மலரோ...நிலவோ...மலைமகளோ...
நான் ஒரு பூசாரி
உனக்கிது தெரியாதோ
நடமாடும் திருக்கோவில் நீயல்லவோ
அடிமையை மறக்காதே அடுத்ததை நினைக்காதே
உன்னை எண்ணி உருகிவரும் என்னை என்றும்
அருள் சுரக்க கொஞ்சும் தெய்வம்
உனது திருநாள் விரைவில் வருமோ விடிவு தருமோ
மலரோ...நிலவோ...மலைமகளோ...
ஸ க ம த நி ஸ (மலரோ நிலவோ)
ஸக-ஸகஸநித நிஸ-நிஸநிதம தநி-தநிதமகஸ ஸகமதநிஸ (மலரோ நிலவோ)
ஸகமக-மகஸநி ஸகமா-கஸநி
நிஸகஸ-கஸநித நிஸகா-ஸநித
தநிஸநி-ஸநிதம தநிஸா-நிதம
ஸகமக ஸகமதநி ஸகமதநிஸ (மலரோ நிலவோ)
நிநிஸஸ ததஸஸஸஸ நிநிஸஸ ததஸஸஸஸ
மதா-மநீ-தஸநித மகஸா-மகஸா நிதாநிஸா
ஸஸககமமததநி மமததநிநிஸஸக
மமககஸஸநிநி ககநிநிஸ
மதநிஸ கஸநித நிஸகா
நிஸநிஸ
ஸகமஸ
ஸஸநிநிததமம நிநிததமமகக ததமமககஸஸ கமதநிஸ
நிஸகஸ நிஸகஸ நிநிஸஸககம தநிஸநி தநிஸநி ததநிநிஸஸக
ஸஸககமமதத ககமமததநிநி ஸஸநிதம நிநிததம ஸகமதநி (மலரோ...நிலவோ...மலைமகளோ)
மலரோ..நிலவோ...மலைமகளோ
தேவி வடிவாக அமர்ந்தவள் யாரோ
மலரோ நிலவோ மலைமகளோ!
-
12th November 2011, 11:52 PM
#1029
Senior Member
Seasoned Hubber
Great song, Shakthi Kunnakkudi has done a good job! I think he even won the national award for best music director in the not too distant past. Do not remember which movie it was for.
-
13th November 2011, 12:00 AM
#1030
Senior Member
Veteran Hubber
rd, check out
http://groups.yahoo.com/group/dhoolsotd/message/294
link says...
he bagged the TN State Government Award for the Best Music Director in 1970 for his score in thirumalai thenkumari. not sure about national award part. throw more light if u know
Bookmarks