-
25th March 2008, 12:03 PM
#231
Senior Member
Veteran Hubber
டியர் பிரபுராம்,
அற்புதம், அருமை என்பதெல்லாம் உங்களின் ஆய்வுக்கு சாதாரண வார்த்தைகள். பெரிய தேவர் பற்றிய கருத்தாய்வு, களத்துக்கு புதிய பொலிவைத் தந்திருக்கிறது என்பது முற்றிலும் சரியான ஒன்று. பார்க்கும்போது தெரியாத பல்வேறு பரிமாணங்கள், உங்கள் ஆய்வைப்படிக்கும்போது தெளிவாகின்றன.
படத்தில் ஒவ்வொரு சின்ன அசைவுகளும் எவ்வளவு கவனமாகவும், பாத்திரப் படைப்புக்கு குந்தகம் வராமலும் கையாளப்பட்டுள்ளன என்பதற்கு பல்வேறு எடுத்துக்காட்டுக்களைச்சொல்லலாம்.
"நீங்க ஊரெல்லாம் சுத்திட்டு திரும்பி வரும்போது உங்க ஐயா இல்லேன்னா என்ன பண்ணுவீக?" எனும் இடத்தில் குரல் கம்முவதும், தன்னிடம் பேசிவிட்டுப்போகும் சக்தி, போகும்போது எதிலோ இடித்துக்கொள்ள, துடித்துப்போய் "பாத்து..!" என்று பதறுமிடத்திலும் ஒரு பாசமான தந்தைக்கே உரிய துடிப்பு. இப்படி ஒவ்வொரு அங்குலத்திலும் தன் கொடியை உயர பறக்க விட்டிருக்கும் பாங்கு... வேறென்ன சொல்ல...?.
நல்ல தீர்க்கமான ஆய்வு உங்களுடையது. அது இன்னும் பல்வேறு பாத்திரப்படைப்புகளையும் அலச வேண்டும் என்பது எங்களின் ஆவல் மற்றும் எதிர்பார்ப்பு.
-
25th March 2008 12:03 PM
# ADS
Circuit advertisement
-
25th March 2008, 12:14 PM
#232
Senior Member
Veteran Hubber
பிரபுராம்,
பெரிய தேவர், முதல் மரியாதை மலைச்சாமி இவர்களோடு, தாவணிக்கனவுகள் 'மிலிட்டரி'யையும் நீங்கள் அலச வேண்டும் என்பது என் ஆவல்.
ரொம்ப பேர் அந்த பாத்திரத்தைக் கண்டுகொள்வதில்லை என்பது ஒரு வருத்தம்.
-
25th March 2008, 01:14 PM
#233
Senior Member
Seasoned Hubber
Originally Posted by
Prabhu Ram
Originally Posted by
rangan_08
If only our NT has got a chance to play the desi version of Don Veto...Wow !! Just imagine our NT in a full suit, jelled hair, bulging jaws, low tone..etc.etc... cchha!!
...then you can rest assured that the producer would have been Balaji (as saradhaa_sn once mentioned, he was a producer with a penchant for exact replication). While it would have been interesting, it wouldn't have been an Indian version. Which is what, in my opinion , takes it to another level.
Then, we are fortunate in one way.. Who knows, people would have also gone to the extent of casting NT in both the Father & Son roles !!! , giving it a Masal-ic dimension...
Perhaps life is just that. A Dream and a Fear. -- Joseph Conrad
-
25th March 2008, 03:27 PM
#234
Moderator
Platinum Hubber
பெரிய தேவர் - 7
இசக்கிக்கு நடந்ததற்குப் பழி வாங்கும் விதமாக எதிரிகளின் குடிசைகளுக்கு தீ இடப்படுகிறது. தீயின் கனல் கதையில் தகித்துக்கொண்டிருக்கையில் மழை வருகிறது. மருத்துவமனையில் இசக்கியை காணப்போகும்போதே மழை தான். கண்மாய் வெடிவைத்துத் தகர்க்கப்படும் வரை மழை ஓயாமல் பெய்கிறது. மழையின் ஈரம் காயாத ஒரு இடத்தில் தான் கோவில் பிரச்சனையைத் தீர்த்து வைக்கும் அதிகாரி வரும் காட்சி.
ஊர் பிரச்சனைகளை பேச மகனை ஊக்குவிக்கிறார், அதிகாரிகளின் பொறுப்பின்மையை நகைச்சுவையுடன் சுட்டிக்காட்டுகிறார் (பஞ்சாயத்தில் மன்னிப்புக் கேட்கவேண்டிய நிலை வரவில்லை அல்லவா), வீட்டுக்கு வர அழைப்பு விடுக்கிறார் ("காப்பிகீப்பி "). நல்லது செய்து முடித்த தலைவன். அதற்கு அடுத்து அவர் தோன்றும் காட்சியிலும் ஒரு தலைவன். தன் மக்களுக்கு நடந்த கொடுமையைக் கண்டு அதிர்ச்சியும், சோகமும் கவிய பார்க்கிறார். சொற்கள் இல்லை.
கொடுஞ்செயல் செய்தவனைப் பிடித்துக் கொடுத்த மகன் தலையில் கைவைத்து உட்கார்ந்திருக்கினான். (அதற்குக் காரணம் பொறுப்பின் சுவடுகளே இல்லாத மூத்த மகன்). சுற்றி, அவதியிலிருந்து சற்று ஆசுவாசம் பெரும் ஊர்மக்கள். மகனருகே சென்று அவனை தொடும்போது முகத்தில் ஒரு பெருமிதம். இவ்வளவு மோசமான சம்பவம் நடந்த ஒரு நாளில், பெருமிதம் போன்ற நல்லுணர்ச்சிகளுக்கு இடம் உண்டா ? முரண் தான். ஆனால் அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ?
மகன் சாப்பிடவில்லை.
பசிக்கலையா ?
பிடிக்கலை
ஒரு கண நேரம் அந்த பெருமிதம் மறைந்து அவ்ர் முகத்தில் ஒரு தொய்வு ஏற்படும். 'அவசரப்பட்டு பெருமிதம் கொண்டுவிட்டோமா ? மகன் இந்தக் (காட்டுமிராண்டிப்பய) வாழ்க்கைச்சுழலை இன்னும் முழுவதுமாக ஏற்றுக்கொள்ளவில்லை போலிருக்கிற்றதே' என்று.
ஒரு தாய் சாப்பிட்டுக் கொண்டிருப்பதைக் காட்டி, ஒரு குழந்தையைப் பறிகொடுத்த அவள், தன் இரண்டாவது குழந்தைக்காக சாப்பிடுவதை சொல்வார். "மத்தவங்களுக்கு உதவி செய்யணும்னா முதல்ல நாம் திராணியோட இருக்கணும்" (திராணியோடு என்பதை சொல்லும் போது மீசை முறுக்கு சரி செய்து கொள்ளப்படும்!). அவர் சொல்வதுக்கும் மேலே புரிந்துகொண்டதுபோல சக்தி கணக்குப்பிள்ளையைக் கூப்பிடுவான்.
ஒரு குழந்தை இழந்துவிட்ட, இரண்டாம் குழந்தைக்கு வாழ்வையும் , எல்லாவற்றைய்யும் தருவதற்காகவே போராடும் அவளைக் கண்டதும், ஒருவேளை சக்திக்கு தன் தந்தையின் நிலையும் கிட்டத்தட்ட அப்படித்தானே என்று தோன்றியிருக்காலாம். இது தான் தோன்றியது என்றெல்லாம் சொல்ல முடியாது. நல்ல திரைக்கதைகளில் இந்த அனுமானங்களுக்கு இடம் உண்டு. தேவரின் பேச்சுக்குப் பதிலாக சக்தி உதிர்க்கும் அர்த்தம் பொதிந்த சிரிப்பைக் கண்டால் எனக்குத் தோன்றியது இதுதான்.
பயணச்சீட்டை தள்ளிப்போட வேண்டும் என்று சக்தி பூசினாற்போல சொல்ல, இப்போது விட்டுவிட்டால் கிடைப்பது கஷ்டம் என்று கணக்குப்பிள்ளை சொல்வார். "கூடி வரும் நேரத்தில் கெடுக்காதே" என்பது போல தேவர் சமிக்ஞை செய்வதில் ஒரு வித்தியாசமான முக்கோணம் முடிவடைக்கிறது. சக்தி-கணக்கு-பெரியவர் மூன்று பேருக்கும் உள்ள தனித்தனி நெருக்கங்களை காண்பிக்கப்படுகின்றன.
முதல் விசாரணையில் "எதற்கு அழைக்கப்பட்டோம்" என்று ஐயாவுக்குத் தெரியாமல் கணக்குப்பிள்ளையைக் கேட்பான். அடுத்து ஒரு காட்சியில், கணக்குப்பிள்ளையிடம் இருந்து தன் மென்மையான இயல்பை மறைப்பார் பெரியவர். இம்முறை தன் பாசத்தின் தீவிரத்தை கணக்குப்பிள்ளையிடம் மட்டும் காண்பிப்பார்.
இணைகோடாக: விடொ கொர்லியோனுக்கு வலது கையாக (consigliori) இருப்பது டாம் ஹேகன். அநேக சமயங்களில் தன் மகன்களைவிட இந்த வளர்ப்பு மகன் டாம்'ஐ டான் விடோ நம்புவார்.
சக்தி, தந்தையின் செய்கையைப் பார்த்துவிட்டு வெளிப்படையாக, அந்த பயணச்சீட்டை 'கேன்சல்' செய்யச் செல்வான். "சொல்றாஹள்ள...கேன்சல் கேன்சல்" என்று தாழ்திறந்து பாசம் வெடிட்த்தோடும். புல்லாங்குழல் கரு-இசையை அழகாக ஒலிக்க, சக்தியின் கையைப் பற்றி தன் நெஞ்சருகே வைத்துக் கொள்வார். பெருமிதம் மட்டுமே தெரிந்த முக்கத்தில் முத்ன்முதலாக ஒரு நிறைவு தெரியும். சாந்தமான பெருமூச்சே தேவையானவற்றைப் பேசிவிடும்.
(தொடரும்)
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
-
25th March 2008, 03:38 PM
#235
Moderator
Platinum Hubber
Thank You rajeshkrv and sarna_blr.
Thanks for the link Joe. As I posted earlier. It is far from possible to capture that performance in words. Unbelievable stuff. I am really curious to know whether the sound was live or dubbed. If it was indeed dubbed - I am just stumped.
நன்றி சாரதா அவர்களே.
நான் பெரிய தேவரை ரசித்த அளவுக்கு ஆழமாக வேறு எந்த நடிகரின் எந்த பாத்திரத்தையும் ரசித்ததில்லை. அதனால் இந்த ஆழமாக (நீளமாக் ) என்னால் எழுத முடியுமா என்பது சந்தேகம் தான். நிச்சயமாக நான் ரசித்த அளவு எழுத முயல்கிறேன்.
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
-
25th March 2008, 03:49 PM
#236
Senior Member
Seasoned Hubber
Dear PR,
Neenga ezhudhi ezhudhi tired aagitteengalo illayo, naan ungalai paaraattiye tired aagividuven polirukku..
At times you make me feel whether Kamal himself is writing this article in disguise !! It's so profound in context that, I'm afraid, even the writer or director themselves were not aware abt the hidden meanings of a particular scene which you describe in detail here. It's really worthy enough to be produced in printed form.
Request the mods to compile this write-up and put it under a single thread.
Perhaps life is just that. A Dream and a Fear. -- Joseph Conrad
-
25th March 2008, 04:10 PM
#237
Senior Member
Seasoned Hubber
Originally Posted by
rangan_08
I'm afraid, even the writer or director themselves were not aware abt the hidden meanings of a particular scene which you describe in detail here.
I too have thought the same while reading his write ups
-
25th March 2008, 04:12 PM
#238
Senior Member
Veteran Hubber
பிரபுராம் அண்ணா,
நடிகர்திலகம் செய்த சாதனைகள் பல....அவற்றில் இதுவும் ஒன்று....இறந்த பின்னும் வாழ்கிறார்...உங்கள் எழுத்துக்களில்...
இந்த கைத்தட்டல் தங்களது உரைநடைக்கு....
Seven social sins:
1.Politics without principles
2.Wealth without work
3.Pleasure without conscience
4.Knowledge without character
5.Commerce without morality
6.Science without humanity
7.Worship without sacrifice
-
25th March 2008, 06:06 PM
#239
Senior Member
Veteran Hubber
பஞ்சாயத்தில் தன் தம்பி மகனால் நடந்த அவமானத்தால், உள்ளம் கூனிக்குறுகிப் போய்விட்டபோதிலும் அதை வெளிக்காட்டாமலேயே பேத்திகளோடு சிரித்துப்பேசிக்கொண்டே, உள்ளுக்குள் குமைந்துகொண்டிருந்த அவமானம் தனக்குள்ளாக வெடித்துச்சிதற, நொடிப்பொழுதுக்குள் எல்லாம் முடிந்து விட்ட நிலை. என்னவாயிற்று நாம் சுதாரிப்பதற்குக் கூட அவகாசம் கொடுக்காமல், 'என்னாச்சு' என்று புத்தகத்தை எறிந்துவிட்டு ஓடும் சக்தியோடு, நம் மனமும் பின்னே ஓட, முறுக்கிய மீசையும் கம்பீரப்புன்னகையுமாக பெரியவரைப்பார்த்து, "ஐயோ, சிங்கம் நிரந்தரமாக தூங்கி விட்டதா?".....
இசைஞானியின் வயலினுடன் சேர்ந்த கோரஸைத்தொடர்ந்து, எஸ்.பி.பியின் குரல்...
"வானம் தொட்டு போன மானமுள்ள சாமி... ஓ..
தேம்புதய்யா இங்கே தேவர்களின் பூமி
பட்டத்துக்கு வேறு சிற்றரசன் யாரு
தங்கத்துக்கு வேறு மாற்று உண்டா கூறு
திருந்தாம போச்சே ஊரு சனந்தா...ன்
தத்தளித்து நிக்குதய்யா தேவர் இனந்தா..ன்
போற்றிப்பாடடி பொன்னே...."
அதுவரை நீர்த்திரையிட்டிருந்த நம் கண்களிலிருந்து, கண்ணீர் சட்டென்று கன்னங்களில் வழிய..... இந்த இடத்தில் கண்களைத்துடைத்துக்கொள்ளாமல் படம் பார்த்தவர்கள் மிக மிகக்குறைவு.
ஆம், இவரது அபார ஆற்றலைப்பார்த்து, அங்கு மரணமே நாணி நின்றது.
-
26th March 2008, 09:53 AM
#240
Senior Member
Seasoned Hubber
Dear PR,
As I said earlier, even the creators of Devar Magan, would be rather surprised or feel happy to read your interpretations. And that, I would say, is because it's every individual's prerogative to observe, analyse & derive their own notions. That is the achievement of any great form of art.
You have done that in the right sense and that's the point where an ordinary film goer gets lifted to the next level. Once this transformation happens, then it becomes a perpetual process. Thanks for giving us a chance to observe the fine qualities of the film in a different perspective.
Another request. Either after you complete this article, or in between, pls write something about 2 other important characters in the same film. While we discuss about the close & strong bond between PD & Shakthi, the other 2 is in total contrast. Yes. MAAYATHEVAN & his father played by Nasser & Kaaka Radhakrishnan respectively. Their performances are so strong and on par with that of NT's in its own respect. Nasser was great & needless to say abt. KRK who simply excelled (look at the way he breaks down at the end, when he sees his dead brother's portrait). Ofcourse, he was senior to our NT @ Edhartham Ponnuswamy Pillai drama co., - Bala Ghana Sabha, Madurai. (Enna Murali Sir, correct-a ??)
Pls continue PR.
Perhaps life is just that. A Dream and a Fear. -- Joseph Conrad
Bookmarks