Results 1 to 7 of 7

Thread: madhavanin kaadhal

Threaded View

  1. #1
    Senior Member Seasoned Hubber MumbaiRamki's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    Chennai
    Posts
    884
    Post Thanks / Like

    madhavanin kaadhal

    ஒரு 25 வயது மென்பொருள் பொறியாலருக்கான எந்த அறிகுறியும் இல்லை - ஒரு ரூபாய் வழுக்கை , வீட்டில் முதலில் நுழையும் தொந்தி , அதை விட பெரிதான பொறுப்புகள் - எதுவும் இல்லை. எல்லாம் இரண்டு மாதமாக மாறி போனது மாதவனுக்கு. காலை ஐந்து மணிக்கு எழுந்து ஐந்து கிலோமீடர் ஓடி gymல் தன் உடலை செதுக்கி சிற்பம் போல வைத்து இருந்தான். கிரிஜா அவன் biceps தடவி - ஐயோ ! வேண்டாம். இப்படி சொன்னாலே ஒரு அடர்ந்த காட்டில் பனிகட்டிகள் சுழபட்ட ஒரு நெருப்பின் வெதுவெதுப்பு நியாபகம் வரும். அவளின் மெல்லிய வரைந்து வைத்த உதடுகளிலிருந்து இரண்டு வார்த்தை பாராட்டு போதும்- இவன் திருக்குறள் எழுத ! காதலியாச்சே! கடந்த இரண்டு மாதங்களில் , தன்னிடம் உடலாலும் மனதாலும் இவ்வளவு நெருங்கி வந்தவள் இவள் ஒருத்தி தான்.

    ஆனால் இரண்டு மாதம் முன்பு இப்படி இல்லை . நாலாப்புரமும் சுவர்கள். நாறும்சுவர்கள். மெல்ல மெல்ல சுவர்கள் இவனை நெருக்க வந்தன. வாழ்க்கையில் மனதை கீரலை உண்டாகி, பூக்களை மொட்டுகளாக மாற்றின .தன் உயர் அதிகாரியிடம் கோபத்தை காட்டினால் , தன் இளைய சகோதரன் தனக்கு மேனஜராக ஆகி விடும் நிலைமை வரும். சகாகளிடம் காட்டினால் ஒரு "வேளையும்" கடக்காது. தன் கோபத்தை ,அடக்கி வைத்த கெட்ட வார்த்தைகளை ,குழப்பத்துடான் கலந்து ரோட்டில் ஒல்லியான அப்பாவிகளிடம் தேல்லிபான். தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் ,ஹிந்தி, - எல்லா மொழிகளிலும் அவர்களின் அம்மாவை அவமானபடுத்துவான்.

    இரவு பத்து மணிக்கி வீட்டுக்குள் வருவான். உப்புமாவும் தயிர் சோறும் சாப்பிட்டு விட்டு TV ரூமுக்கு போவான். யாருக்கும் கேட்காதவாறு காதில் headset போட்டு கொண்டு பார்ப்பான். காமெடி, புது பட trailer ,புது பாடல்கள் ,மிட் நைட் மசாலா - எல்லாவற்றையும் ஒரு emotions ஆக பார்ப்பான்.

    அப்பாவின் தோள் மேல் வளர்ந்தும், அப்பாவின் தோல் தளர்ந்து போனாலும் அவர் தான் வீட்டிம் அதிபதி. வீட்ட்டின் ஒவ்வொரு செங்கலும் அவர் plan படி தான் வைக்க பட்டது. வேளச்சேரி மெய்ன் ரோடில் ஒரு தனி வீடு, தன் பேரப்பிள்ளைகள் வசதியாக தங்குவதற்கு கூட வீட்டை பிளான் பண்ணியிருந்தார். அப்பாவிற்கு பயந்து கத்திரிக்காய் கூட சாப்பிடுவது கிடையாது. காதலெலாம் கல்யாணத்திற்கு பிறகு , அப்பா பார்க்கதவாறு தான் !

    இப்படியாக இவன் வாழ்க்கை கலவை இருக்க ,ஒரு sleevless ல் எதேச்சியாக உறசியபடி அறிமுகமானாள் கிரிஜா. அதிகம் பேசா உதடுகளும் , தன்னை அழுத்தமாக கட்டி அணைக்கும் விழிகளும் ஏனோ இவனை கவர்ந்தன. அவளின் கழுத்து, நெற்றி , கைவிரல்களை பார்த்தான் . மறு மறு படி பார்த்தான். எந்த சிற்பியும் தொடாத சிற்பம இவள். அவள் தன் இயல்புக்கு மாறாக இருந்தாலும் தன் DNA க்களை மாற்றி அமைத்தான். முதலில் காலை வணக்கங்குளுடன் ஆரம்பித்த பொறி , நள்ளிரவில், செல்போன் பில் எகிறும் வரை காதலாக மலர்ந்தது.
    ஒரு முறை அவனுக்கு ஒரு விபத்து நடந்தது . நேரில் வர வேண்டாம், அப்பா பார்த்தால் நிலைமை மோசமாகி விடுமென்று சொன்னான். அவள் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை கால் செய்தால். வேறு யாரும் பார்க்கும் முன்பு ,செல்போனிலிருந்து அதன் பதிவுகளை நீக்கினான். திரும்ப ஆபிஸ் சேர்ந்தாலும், அவன் வேலையில் பாதி அவள் பார்த்து கொண்டாள். அவனுடைய பாதியாக ஆக ஆசை பட்டாள். ஆனால் சமுதாயத்திற்கு பயந்து சொல்லாமல் விட்டாள்.

    இப்படியாக எந்த காதல் ஆறு மாசமாக மன பூமியின் இறுதி வரை வேர் விட்டிருந்தது . மாதவன் சுதந்திரத்தை விரும்பினான். வீட்டு பொறுப்பினை ஏற்க விரும்பினான். கிரிஜாவுடன் வெளி தேசத்தில் அருமையான இல்லத்தில் குடியேற வேண்டும். ஒரு நாளில் எட்டு மணி நேரம் மட்டும் வேலை பார்த்து ,ஐந்து மணி நேரம் உல்லாசமாக காற்றில் காதலை பறக்க விட்டு , அது பறப்பதை ரசிக்க வேண்டும். இப்படியாக எண்ணி கொண்டு இடது புறம் உறங்க ஆரம்பித்தான். அப்பொழுது அந்த அறையில் இன்னும் இரண்டு மனிதர்கள் சுவாசித்து கொண்டு இருந்தனர். அவன் கண் இமைகள் உறகத்தின் வாயிலை அடையும் முன்பு , அவனை ஒரு சிறய கை தட்டியது .
    "நாளைக்கு தினேஷ் அப்பா ஸ்கூல் வராங்க .நீங்களும் அம்மாவோட வருவீங்களா?"
    இந்த கதையின் முதல் பத்தியின் கிடைசி வரியை திரும்ப படிக்கவும்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Similar Threads

  1. Kaadhal Neethana!!!
    By rsubras in forum Stories / kathaigaL
    Replies: 11
    Last Post: 1st April 2008, 10:58 PM
  2. kaadhal
    By neruppu roja in forum Poems / kavidhaigaL
    Replies: 3
    Last Post: 26th July 2005, 06:54 PM
  3. kaadhal.........
    By srijk in forum Poems / kavidhaigaL
    Replies: 18
    Last Post: 24th July 2005, 07:05 AM
  4. kaadhal
    By phinex2005 in forum Poems / kavidhaigaL
    Replies: 2
    Last Post: 8th March 2005, 06:10 AM
  5. Kaadhal
    By TAMIZHTHAMBI in forum Poems / kavidhaigaL
    Replies: 0
    Last Post: 5th March 2005, 07:04 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •