-
30th June 2009, 11:40 AM
#31
Moderator
Platinum Hubber
பின் நவீனத்துவம், அது தொடர்பான சிலம்பாட்டங்களைப் பார்த்து மிரள்பவர்களுக்கென்று எம்.ஜி.சுரேஷ் சில புத்தகங்களை வெளியிட்டிருக்கிறார்.
மிஷெல் ஃபூக்கோ
ழாக் தெரிதா
ரோலண் பார்த்
ஆகிய பின்நவீனத்துவப் 'பெரியவர்'களைப் பற்றி தலா 64-ஏ பக்கங்களில் சிறு புத்தகங்கள். இயன்றவரை தெளிவாக எழுதப்பட்டதாகப் படுகிறது.
சிறந்த அறிமுகமா இல்லையா என்பதை இவற்றைத் தாண்டி ஆழ்ந்து படித்தால்தான் தெரியும். நிச்சயமாக ஆர்வமூட்டும் அறிமுகம் என்பதில் சந்தேகமில்லை.
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
-
30th June 2009 11:40 AM
# ADS
Circuit advertisement
-
3rd July 2009, 04:45 PM
#32
Moderator
Platinum Hubber
திலீப் குமார் - குஜராத்தியை தாய்மொழியாகக் கொண்ட தமிழ் எழுத்தாளர்.
அவருடைய அக்ரகாரத்தில் பூனை சிறுகதை
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
-
30th July 2009, 02:28 AM
#33
Senior Member
Veteran Hubber
thanks for the link PR
Amazing story indeed !!
Apparently, a democracy is a place where numerous elections are held at great cost without issues and with interchangeable candidates.
- Gore Vidal
-
23rd February 2010, 04:18 PM
#34
Moderator
Platinum Hubber
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
-
26th March 2010, 10:01 PM
#35
Senior Member
Platinum Hubber
இவரு அவ்வளவு பெரிய ஆளா?
http://www.jeyamohan.in/?p=6938
Originally Posted by
JeMo
என்னுடைய கதைகள் எனக்கு இணையானவர்களுக்காக அல்லது என்னைவிட மேலானவர்களுக்காக எழுதப்படுபவை. மிகப்பெரும்பாலும் அவர்களே வாசிக்கிறார்கள். மற்றவர்கள் அதிகபட்சம் ஒரு அத்தியாயத்தில் குழப்பமும் எரிச்சலும் அடைந்து விலகி எதையாவது சொல்ல ஆரம்பிக்கிறார்கள்.
...
...
தமிழில் மிக அதிகமான தீவிர வாசகர்களால் ஒரு எழுத்துகூட தவறவிடப்படாமல் வாசிக்கப்படும் எழுத்தாளன் இன்று நானே. இதை எவரும் தங்கள் சுற்றத்தை கவனித்தாலே அறியலாம்.
...
...
பாரதியின் அளவு விகிதத்தை எந்த தமிழ் எழுத்தாளனும் இன்னமும் தொடவில்லை. அந்த தீவிரமில்லாவிட்டால் நம் காலகட்டத்தின் ஆகச்சிறந்த மனங்களுடன் உரையாட முடியாது.
அத்தகைய வாசகர்களுக்காகவே இவை எழுதப்படுகின்றன. சாதாரண அறிவுத்திறனும் சாதாரண கற்பனைத்திறனும் கொண்டவர்களுக்காக அல்ல.
-
29th March 2010, 09:40 PM
#36
Senior Member
Diamond Hubber
Originally Posted by
P_R
ஒரு ஊரின் கதை - வலம்புரி ஜான்ங்கள் தான்
PR,
இந்த புத்தகத்தை எங்கே வாங்குவது? இது மட்டுமல்ல ,வலம்புரிஜான் எழுதிய புதினமல்லாத எந்த புத்தகமும் வாங்குவதற்கு ஆசை ..ஆனால் நான் தேடிப்பார்த்தவரை எங்கும் கண்ணில் படவில்லை[/img]
-
30th March 2010, 01:37 PM
#37
Moderator
Platinum Hubber
Originally Posted by
joe
Originally Posted by
P_R
ஒரு ஊரின் கதை - வலம்புரி ஜான்
PR,
இந்த புத்தகத்தை எங்கே வாங்குவது? இது மட்டுமல்ல ,வலம்புரிஜான் எழுதிய புதினமல்லாத எந்த புத்தகமும் வாங்குவதற்கு ஆசை ..ஆனால் நான் தேடிப்பார்த்தவரை எங்கும் கண்ணில் படவில்லை[/img]
அடுத்த முறை New Book Lands போகும்போது கேட்டுப்பார்க்கிறேன்.
நான் படித்தது (படிப்பது பெரும்பாலும்) முன்னெப்போதோ என் அப்பா வாங்கியது.
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
-
21st April 2010, 04:28 PM
#38
Moderator
Platinum Hubber
திலீப்குமாரைப் பற்றி ஜெயமோகன்
அப்புன்னகை எதைப்பற்றி?....... தன் சின்னஞ்சிறு உலகுக்குள்ளேயே தன் பிரபஞ்சத்தை சிருஷ்டிசெய்துகொள்ளும் எளிய மானுடனின் சித்திரம் அது. நாமும் அத்தகையவர்கள் தாம். ஆனால் கதையின் அந்த இடம், கலையின் அந்தத்தருணம், நம்மை மேலே தூக்கி அவர்களைக் குனிந்து பார்க்கச்செய்கிறது. அவர்களைப்பார்த்து நாம் புன்னகைசெய்கிறோம். நாமே நம்மைநோக்கிச்செய்யும் புன்னகை அது.
.........
ஒரு படைப்பாளியாக திலீப்குமார் அந்த அங்கதத்தையே தன் பங்களிப்பு என தமிழுக்கு அளித்திருக்கிறார். குஜராத்திகளின் காலனியில் பூனை கிணற்றில் விழுந்துவிடுகிறது. நீர் அசுத்தமாகிவிட்டிருக்கிறது. என்ன செய்யலாம்? காலனியே கொந்தளிக்கிறது. பாட்டி மெல்ல வருகிறாள். நிதானமாக வந்து கிணற்றில் ஒரு செம்பு கங்கை நீரை கொட்டுகிறாள். ‘இனிமேல் பிரச்சினை இல்லை தாராளமாகக் குடிக்கலாம்’ என்கிறாள். தீர்வு என்ற சிறுகதை இது.
இதைப்பற்றி பேசும்போது இளம் நண்பர் சொன்னார்– ”மூடநம்பிக்கைக்குச் சரியான சவுக்கடி இந்தக்கதை”. நான் கேட்டேன், அந்தப்பாட்டி வந்து ஒரு பாக்கெட் பிலீச்சிங் பௌடரை கிணற்றில் கொட்டிவிட்டு அப்படிச் சொல்லியிருந்தால் கதை அறிவியல் பூர்வமான கதையாக ஆகியிருக்குமா? அப்பொதுகூட அந்தக்கதையின் அங்கதம் பெரிதும் குறைவுபடாமல்தான் இருக்கும் என்றே நான் நினைக்கிறேன். மனிதர்கள் பலவகையான நம்பிக்கைகளைப் பற்றிக்கொன்டு வாழ்க்கையை வாழ்ந்து தீர்க்கும் பரிதாபத்தின் மீதான சிரிப்புதானே அந்தக்கதை? அது பிளீச்சிங் பௌடராக இருந்தால் என்ன கங்கா ஜலமாக இருந்தால் என்ன? நம் வீட்டைச்சுற்றி முனிசிப்பல் சிப்பந்தி கொசுமருந்து அடிக்கிறார். வருடம்தோறும். கொசுவுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. நாம் என்ன விழுந்து விழுந்து சிரிக்கிறோமா அதைக்கண்டு? அந்த நம்பிக்கையில் ஒரு இரண்டுநாளை நீட்ட முடியுமா என்றுமட்டும்தானே பார்க்கிறோம்?
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
-
4th November 2010, 07:52 PM
#39
Senior Member
Seasoned Hubber
இமையத்தின் ‘வீடியோ மாரியம்மன்’ (க்ரியா, 227 பக்கங்கள், ரூ. 150)
போன வருடம் வாங்கியது. எதனால் இந்த புத்தகத்தை தேர்ந்தெடுத்தேன் என்பதை மறந்தாயிற்று. மொத்தம் பதினோரு கதைகள். காலச்சுவடு, தீராநதி இத்யாதிகளில் வந்த சிலவும் அடங்கும். பெரிய அதிர்வுகள் இல்லையென்றாலும் முதலுக்கு மோசமில்லை. வாத்தியாரின் கள்ளத் தொடர்பு அம்பலமாகி நிற்பதை பார்க்க நேருடுகிற மாணவர்கள் வரும் ‘நல்ல சாவு’ம், ‘நாளை’யில் வருகிற செல்லாமாள் - உடையார் உறவும், சண்டைப் போட்டுக்கொண்டு மண்டை உருளும் ‘குடும்ப’மும் கவனத்தை ஈர்க்கின்றன. தலைப்பைத் தூக்கி புத்தக தலைப்பெனும் சிம்மாசனத்தில் அமர்த்தி வைத்திருந்தாலும், ‘வீடியோ மாரியம்மன்’ பெரிதாக ஈர்க்கவில்லை. கிராமத்து ‘அம்மா’, ‘எழுத்துக்காரன்’ ஆகியோரப்பற்றிய கதைகளும் உண்டு. ‘ஊர்வம்பு’ எழுதி முடிக்கும் முன்னரே பிடுங்கி பிரசுரித்து விட்டார்களா என்பதைப் பற்றி தகவலில்லை. திங்கட்கிழமை இன்னும் பத்து மணி நேரத்தில் வந்துவிடும் என்ற பயத்தால் ’சத்தியக்கட்டு’ என்கிற கதையை மட்டும் படிக்கவில்லை.
எளிய மாந்தர்கள், அடிப்படை பிரச்சனைகள் என்பதால் அலுங்காமல் படித்து முடிக்க முடிந்தது. வட்டார வழக்கில் இயல்பான உரையாடல்கள். உணர்ச்சிவசப்பட்டு பேசத் தெரியாத கிழவர் - ‘இப்ப வூட்டுக்கு வூடு டிவி பொட்டிய கொண்டாந்து கொடுத்துட்டான். சனங்க அந்த பொட்டில பேசுற மாதிரி தான் பேசுறாங்க. என்னால அப்பிடிப் பேச முடியாது’ என்று அங்கலாய்க்கிறார். அரளியைத் தின்ன முற்பட்டு மகனை பார்த்து மனம் மாறுகிற அம்மா ‘ அதெது புள்ள, அதெது தாயி. ஊருல ஆயிரம் பேர் இருந்து என்னாத்துக்கு ஆவும்’ என்கிறாள்
ரசித்த ஒரு கதை - கொஞ்சம் நீளம் -நிஜமும் பொய்யும்
வீடியோ மாரியம்மன்
எழுத்துக்காரன் - நேரமில்லைனா இத தவிர்க்கலாம்.
நெலயா நில்லாது நினைவில் வரும் நெறங்களே
-
20th December 2010, 05:43 PM
#40
Senior Member
Veteran Hubber
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=149691
எழுத்தாளர் நாஞ்சில்நாடனுக்கு சாகித்ய அகாடமி விருது
புதுடில்லி : இந்தியாவில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் மிக உயரிய விருதான சாகித்ய அகாடமி விருது, சிறந்த இலக்கிய படைப்பாளர்களை தேர்வு செய்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்காக சாகித்ய அகாடமி விருதுக்காக தமிழ் எழுத்தாளர் நாஞ்சில்நாடன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Damager - 30 roovaa da, 30 roovaa kuduththa 3 naaL kaNNu muzhichchu vElai senju 30 pakkam OttuvaNdaa!
Bookmarks