-
27th January 2008, 11:31 PM
#11
Moderator
Platinum Hubber
Re: thaRkkaala thamizh ilakkiyam
Originally Posted by
rajasaranam
ஏண் இங்கு தற்க்கால தமிழ் இலக்கியம் குறித்து யாரும் விவாதிப்பதில்லை? எல்லாம் பழந்தமிழ் இலக்கியம் பற்றிய திரிகளாகவே உள்ளது.
பல காரணங்கள். காலத்தின் முத்திரை ஒரு வித தர முத்திரையாக ஏற்பதால் படிக்கும் சொற்பத்தை பழந்தமிழ் இலக்கியத்தோடு நிறுத்தியிருக்கலாம்.
இன்னோரு காரணம் ஒரு வித அபாயச்சுழல்: பரிச்சயமின்மை. அநேகம் பேருக்கு - என்னையும் சேர்த்தே சொல்கிறேன் - பாரதியோடு வாசிப்பு நின்றிருக்கலாம். அதையும் தாண்டி ஒன்றிரண்டு வாசித்திருந்தாலும் விவாதிக்கும் அளவுக்கு பரிச்சயம் இல்லாமல் இருக்கலாம். அதனாலேயே இது அதிகம் பேசப்பட, விவாதிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம்.
நீங்களே துவங்குங்களேன். சமீபத்தில் வெளிவந்ததில், நீங்கள் விரும்பிப் படித்த நாவல் பற்றி எழுதுங்களேன்.
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
-
27th January 2008 11:31 PM
# ADS
Circuit advertisement
-
28th January 2008, 09:27 PM
#12
Senior Member
Platinum Hubber
>>கலப்படம் போலி நாகரிக மோகத்தால் நடப்பதை மறுக்க முடியுமா?<<
மறுக்க முடியாது அது கண்டிக்கப்படத்தக்கது தான். என்ற போதிலும் அது நிலைக்காது என்பது என் கருத்து.
சில வரலாற்று உண்மைகள்:
-முற்காலங்களில் மணிப்பிரவாளம் தான் "பெருங்குடிகள்" என அடையாளங்காட்டியது, இப்போது இல்லை. மறைமலையடிகள், திரு வி க போல் பலர் இதற்குக்காரணர்.
-ஹிந்திப்பாட்டுக்கேட்பது தான் நவீன அடையாளம், அதாவது 70களில். ராசா வந்து அதை ஓட ஓட விரட்டினார்
அது போல் காலந்தோறும் தமிழ் காக்க ஆட்கள் வருவர்
-
28th January 2008, 10:49 PM
#13
Senior Member
Platinum Hubber
தங்கள் நல்வாக்கு பலிக்கக் கடவ!
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
28th January 2008, 11:52 PM
#14
Senior Member
Veteran Hubber
..Thisai maarhum Parhavaiyaa.?
Originally Posted by
app_engine
>>கலப்படம் போலி நாகரிக மோகத்தால் நடப்பதை மறுக்க முடியுமா?<<
மறுக்க முடியாது
அது கண்டிக்கப்படத்தக்கது தான். என்ற போதிலும் அது நிலைக்காது என்பது என் கருத்து.
சில வரலாற்று உண்மைகள்:
-முற்காலங்களில் மணிப்பிரவாளம் தான் "பெருங்குடிகள்" என அடையாளங்காட்டியது, இப்போது இல்லை. மறைமலையடிகள், திரு வி க போல் பலர் இதற்குக்காரணர்.
-ஹிந்திப்பாட்டுக்கேட்பது தான் நவீன அடையாளம், அதாவது 70களில். ராசா வந்து அதை ஓட ஓட விரட்டினார்
அது போல் காலந்தோறும் தமிழ் காக்க ஆட்கள் வருவர்
என் இனிய அன்பர்களே.!
இந்த இழையில்.. தற்கால இலக்கியம் பற்றி மட்டுமே உரையாடாலாமே.
எடுத்துக்கொண்ட தலப்புக்கு சிறிதும் தொடர்பு இல்லாது... உரையாடல் வேறெங்கோ திசை மாறிப்போய்க்கொண்டிருக்கிறதே.!
எனினும் உரிய இழையில்... Surivival & Advancement of Tamil Language.
இதோ விடை அளித்திருக்கிறேன்...
- MANHI PRAVAALHAM Tamil.. Background
http://forumhub.mayyam.com/hub/viewt...266325#1266325.
மேலும் இது குறிந்து அங்கே உரையாட அழைக்கிறேன்.
.
-
29th January 2008, 12:24 AM
#15
Senior Member
Platinum Hubber
தட மாற்றத்துக்கு மன்னிக்கவும்
தற்கால நூல்கள் பற்றி அவற்றை வாசிப்பவர்கள் எழுதினால் நல்லது. அவற்றிலிருந்து இணைப்பு விட்டுப்போயிருக்கும் "புலம் பெயர்ந்த தமிழருக்கு" மீண்டும் ஆவல் உண்டாகலாம். வாசிப்போர் யார் இங்கு உள்ளனர்?
-
29th January 2008, 01:15 AM
#16
Senior Member
Veteran Hubber
.
Originally Posted by
app_engine
தட மாற்றத்துக்கு மன்னிக்கவும்
தற்கால நூல்கள் பற்றி அவற்றை வாசிப்பவர்கள் எழுதினால் நல்லது. அவற்றிலிருந்து இணைப்பு விட்டுப்போயிருக்கும் "புலம் பெயர்ந்த தமிழருக்கு" மீண்டும் ஆவல் உண்டாகலாம். வாசிப்போர் யார் இங்கு உள்ளனர்?
.
என் கேள்வி ஒன்றே ஒன்று தான்.
இந்த இழையின் தலைப்பு என்ன? நீங்கள் விவாதிப்பது என்ன.? ஏதாவது தொடர்பு உள்ளதா.?
துவக்க தேர்தல்- பட்டியும் தமிழின் தற்கால இலக்கிய- தரம் பற்றியே கேள்வி கேட்கிறது.!
இது நமக்கு தேவையற்ற குழப்பம் அல்லவோ.?
நீங்கள் எல்லோரும் எதை பற்றி வேண்டுமானாலும் உரையாடுங்கள். உங்கள் விருப்பம் போல... வரவேற்கிறேன்.
அதாவது... தலைப்பிற்கு ஏற்றபடி... தற்கால தமிழ் இலக்கியம் பற்றி...
..நீங்கள் எவருமோ அல்லது மற்றவர்களோ ஏதாவது கூற வேண்டியிருந்தால் கூறுங்கள்... இங்கே.
மாறாக தற்போது மாறியுள்ள திசையானால்...
...இதோ ஏற்கனவே அந்த இழை இருக்கிறது...
அங்கே உங்கள் கருத்துக்களை அந்த இழை சம்பந்தப்பட்ட வகையிலே... கூறுங்கள்.
ஆனால் "கிளி" என்று தலைப்பிட்டு "மயிலை" காட்டாதீர்.
. கிளியா.? மயிலா.?
.
-
27th February 2008, 12:42 PM
#17
Moderator
Platinum Hubber
இத்திரியில் நாம் சமீபத்தில் சாசித்த நூல்களைப் பற்றி உரையாடலாம். (Like the "What's your latest read" thread in the English Lit. forum)
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
-
27th February 2008, 01:15 PM
#18
Moderator
Platinum Hubber
சுஜாதாவில் 'கடவுள்' கட்டுரைத் தொகுப்பு.
'கடவுள்' என்ற கான்செப்டை (இதற்கு தமிழ்சொல் என்ன ?) வரலாறு,மதம், இலக்கியம், இயற்பியல் என்ற பல கோணங்களில் இருந்து அலசி எழுதப்பட்ட கட்டுரைகள்.
80-90 களில் (சுஜாதாவின் பொற்காலம் ?) பல பத்திரிக்கைகளில் எழுதியவற்றின் தொகுப்பு. புரிவதற்கு கடினமானவற்றைக் கூட அணுகமுடியுமாறு எழுதப்பட்ட கட்டுர்ரைகள். வெவ்வேறு தொடர்களின் தொகுப்பு என்பது நன்றாகத் தெரிவது ஒரு குறை (திரும்பத் திரும்ப சொல்லப்பட்ட தகவல்கள், பாசுரங்கள்).
அப்பித்திரிக்கையின் சராசரி வாசகன் யார் என்பதை வைத்துக்கொண்டு எழுதுப்பட்டிருக்கிறது. சிலவற்றில் வெறும் தகவற்குவியல், சிலவற்றில் வியப்பான கேள்விகள், சற்று ஆழமான ஆராய்ச்சி, வாசகன் மீது எப்போதும் ஒரு கண்:
இதற்கு மேல் எழுதினால் மூடிவைத்துவிட்டு பெப்ஸி உங்கள் சாய்ஸ் பார்க்க சென்றுவிடுவீர்கள்
அதிகம் தலைமுடி உள்ளவர்கள் இக்கேள்வி பற்றி மேலும் யோசிக்கலாம்
கடினமானவற்றை விளக்கும்போதுகூட குன்றாத மொழிச்சரளத்துக்காகவே இதைப் படிக்கலாம்.
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
-
27th February 2008, 02:39 PM
#19
Senior Member
Diamond Hubber
தமிழில் வாசிக்கும் பழக்கம் அதிகமாக இருப்பினும் நான் வாசிப்பது பெரும் பாலும் வரலாறு ,அரசியல் ,சமூகம் சார்ந்த கட்டுரைகள் தான் . நாவல்கள் வாசிக்கும் பழக்கம் அதிகம் இல்லை ..அதையும் மீறி சில நாவல்கள் என்னைக் கவர்ந்திருக்கின்றன.
கடைசியாக என்னை கவர்ந்த நாவல் சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்து பரவலான வரவேற்பை பெற்று தமிழக அரசின் பரிசைப் பெற்ற திரு .ஜோ டி குரூஸ் எழுதிய 'ஆழி சூழ் உலகு' என்ற நாவல்.
தென் தமிழகத்தின் பரதவ (மீனவ) இன மக்களின் வாழ்க்கை பின்புலத்தை வைத்து அந்த இனத்திலேயே பிறந்த ஒருவரால் எழுதப்பட்ட நாவல்.
அதைப்பற்றிய என் நூல் அறிமுகத்தை இங்கு காணலாம்.
http://cdjm.blogspot.com/2006/02/blog-post_22.html
குறிப்பு : சிங்கையில் இருப்பவர்களுக்கு ,இந்த நூல் மத்திய நூலகத்தில் கடனுக்கு கிடைக்கும்
பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்
-
29th February 2008, 10:08 PM
#20
Moderator
Platinum Hubber
அறிமுகத்துக்கு நன்றி ஜோ.
உங்கள் ப்ளாகில் பலர் சொன்னது போல, இந்த உலகத்தைப் பற்றிய வண்ணநிலவனின் "கடல்புரத்தில்" முக்கியமான நாவலாகக் கருதப்படும் ஒன்று. அந்த வண்ணநிலவன் தான் துக்ளக்'கில் துர்வாசர் என்ற பெயரில் எழுதுபவர் என்று நம்புவது மிக மிக கஷ்டம் ! அந்நாவலில் உங்கள் வட்டார வழக்கு அதிகம் இருந்ததாக ஞாபகம் இல்லை. சிரமப்படாமல் வாசித்ததாக ஞாபகம் :P
புத்தம் வீடு என்றொரு நாவல் - எழுத்தாளர்: ஹெப்சிபா ஜேசுதாசன். அதில் (கிட்டத்தட்ட) இந்த பேச்சுவழக்கு வரும். இதுவரை அதைப் படித்ததில்லையென்றால், நிச்சயம் அதை பரிந்துரைப்பேன்.
(ஜெயமோகனின்) ஓரிறு சிறுகதைகள் தவிற அந்தத் தமிழை படித்து - ஏன் கேட்டுக் கூட- பழக்கமில்லை. படிக்க கொஞ்சம் திணரியிருக்கிறேன்.
திரைப்படங்களில் கூட இது அதிகமாகப் பதிவாகவில்லை என்று நினைக்கிறேன் (சரியா?). சொல்லப்ப் மதுரைக்குத் தெற்கே யாரும் வந்ததில்லை - டும் டும் டும் அழகம்பெருமாள் தவிற ?
Originally Posted by
ஜோ
இந்த நாவலில் இம்மக்களில் கூட்டு வாழ்க்கையின் எழுதப்படாத சட்டங்கள் ,மதம் சார்ந்த மதிப்பீடுகள் ,வீரமும் வீம்பும் நிறைந்த செயல்பாடுகள்,திட்டமிடப்படாத எகத்தாளமான பொருளாதார வாழ்க்கை,அலைகளோடு அன்றாடம் அவர்கள் நடத்தும் போராட்டம் ,மதத்தோடு பின்னிப்பிணைந்த வாழ்க்கை,கத்தோலிக்க குருமார்களின் சமுதாயப் பங்கு ,பிரத்தியேகமான மொழிக்கூறுகள் ,தனிமனித உறவுகள்,இலங்கையோடு அவர்கள் கொண்டிருந்த தொடர்பு,அண்டைய நாடார் சமூகத்தோடு உள்ள உறவு இப்படி பல கோணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இம்மாதிரி நாவல்கள் தான் 'நாவல்' என்ற வடிவத்தின் சிறப்பை உணர்த்துவதுவதாகப் படுகிறது. கதையை விட ஒரு உலகத்தையே படைத்து அதை நம்மை உணர வைக்கும் இவ்வகை நாவல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.
அறிமுகத்துக்கு நன்றி.
உங்கள் நாவல் படிக்கும் உந்துதல் இன்னும் பெருகுமாக !
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
Bookmarks