-
24th January 2008, 06:05 PM
#1
Senior Member
Veteran Hubber
thaRkkaala thamizh ilakkiyam
ஏண் இங்கு தற்க்கால தமிழ் இலக்கியம் குறித்து யாரும் விவாதிப்பதில்லை? எல்லாம் பழந்தமிழ் இலக்கியம் பற்றிய திரிகளாகவே உள்ளது.
-
24th January 2008 06:05 PM
# ADS
Circuit advertisement
-
24th January 2008, 06:10 PM
#2
Senior Member
Veteran Hubber
-
25th January 2008, 07:54 AM
#3
Administrator
Diamond Hubber
Originally Posted by
RS
தமிழில் தலைப்பு மற்றும் கேள்விகள் கூட நம்மால் இனையத்தில் புகுத்த முடியவில்லை என்றால், தமிழின் நிலை குறித்து நாம் கவலைபட்டே ஆக வேண்டும் போல் உள்ளது.
Interesting logic there. I wish you took into account people's current-day tamil spellings and missing otru's, also as factors for state of tamil today.
To answer you question, unicode is not supported in titles not because of it cant be done, but rather to allow wide readability of topic list on all browsers by everyone. I've edited your poll. Pm me for any questions on such technical support.
-
25th January 2008, 08:32 AM
#4
Senior Member
Platinum Hubber
தரமான தனி நாவல்கள், கதைகள், கட்டுரைகள்,காரசாரமான விவாதங்கள், சுவையான அலசல்கள், பட்டிமன்றங்கள் இவையெல்லாம் எல்லா ஊடகங்களிலும் இணையதளங்களும் அருமையாக, ஆரோக்கியமாக பெருகியுள்ளன. மொழியின் புது பரிமானங்கள் அரங்கேறுகின்றன. ஆனால் வெகுஜன சஞ்சிகைகளின் சில கவர்ச்சியான வார்த்தை பிரயோகங்கள் அழகாயில்லை- என் கருத்தில், நாகரிகத்தின் எல்லைகள் மீறப்படுவதால். திரைப்பட பாடல்கள் இலக்கியமா என்று சந்தெகம் இன்றைய காலகட்டத்தில் எழும்புகிறது-வியக்கத்தக்க கற்பனைகளும், அருவருப்பான,அபத்தமான குப்பைகளும் கலந்து கிடக்கின்றன அவற்றிலே-இவ்வளவு ஆங்கில கலப்பும் அவசியமா என்றும் தோன்றுகிறது.சிறுபிள்ளைதனமாக, கோணங்கிதனமாக எழுத்தப்படுவதெல்லாம், மேடையில் முழங்கப்படுவதெல்லாம் கூட இலக்கியமாக சித்தரிக்கப்படும் அவலமும் காணப்படுகிறது. உமியை பிரித்து ஊதிவிட்டு அவலை மெல்ல வேண்டியுள்ளது.
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
25th January 2008, 12:08 PM
#5
Senior Member
Veteran Hubber
Originally Posted by
RR
Originally Posted by
RS
தமிழில் தலைப்பு மற்றும் கேள்விகள் கூட நம்மால் இனையத்தில் புகுத்த முடியவில்லை என்றால், தமிழின் நிலை குறித்து நாம் கவலைபட்டே ஆக வேண்டும் போல் உள்ளது.
Interesting logic there. I wish you took into account people's current-day tamil spellings and missing otru's, also as factors for state of tamil today.
To answer you question, unicode is not supported in titles not because of it cant be done, but rather to allow wide readability of topic list on all browsers by everyone. I've edited your poll. Pm me for any questions on such technical support.
Thanks for the support Ok Agreed about readability part but this being a Tamil Literary section, I hope People having a comprehensive knowledge about Tamil writint/reading will only frequent here. So what will be the problem if topics here are in Tamil Fonts ???
Otru pizhai and spelling are truly a matter of concern.
But people like me who didnt have formal Schooling In Tamil (Studied Hindi & English in KV) should be excused, if any mistakes are found
-
26th January 2008, 07:09 PM
#6
Senior Member
Platinum Hubber
ஆங்கிலக்கலப்புக்கு இவ்வளவு கவலைப்படுகிறீர்களே, அதற்கும் வடமொழிக்கலப்புக்கும் அப்படியென்ன வேற்றுமை?
எடுத்துக்காட்டாக, இலக்கியம் என்பதே வடமொழிச்சொல் தான் என்பதாக ரா.பி.சேதுப்பிள்ளை எழுதி இருக்கிறார் (லக்ஷ்மி = இலக்குமி, லக்ஷ்யம் = இலக்கியம், லக்ஷணம் = இலக்கணம். குறிக்கோள் / நோக்கம் என்பதே இலக்கியத்தின் தமிழ்ச்சொல்; எத்தனை நூல்கள் இன்று உயர்ந்த குறிக்கோளுடன் உள்ளன?)
-
26th January 2008, 07:59 PM
#7
Senior Member
Platinum Hubber
வடமொழி கலப்பு சதவீதத்தைவிட ஆங்கில கலப்பு அதிக சதவீதம் ஆவது போல் தோன்றுவதே கவலைக்கான காரணம்! தமிழ் எழுத படிக்க தெரியாதோர் தொகை அதிகரித்துக்கொண்டே போகும் நிலையில் தமிழ் என்று அறியப்படும் மொழியில் பாதி அளவாவது தமிழாய் இருக்க வேண்டுமே என்பது என் ஆதங்கம். போலி நாகரிக உணர்வால் ஆங்கில கலப்படம் செய்வதை கண்டிக்காமல் இருக்கமுடியவில்லை!
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
-
27th January 2008, 05:25 AM
#8
Senior Member
Veteran Hubber
Re: thaRkkaala thamizh ilakkiyam
Originally Posted by
rajasaranam
ஏண் இங்கு தற்க்கால தமிழ் இலக்கியம் குறித்து யாரும் விவாதிப்பதில்லை? எல்லாம் பழந்தமிழ் இலக்கியம் பற்றிய திரிகளாகவே உள்ளது.
.
தமிழ் இலக்கியம்.. என்பது என்றைக்கும் இலக்கியம் தான். இதில் பழையது என்ன?... புதியது என்ன.?
சந்திரனில் பழைய சந்திரன், புதிய சந்திரன்.. என்று ஏதாவது சிந்தனை உள்ளதா.? என்றைக்கும் புதுமை தானே.?
முருகன் என்றும் புதியவன் என்று ஔவை கூறினாளே... அது போல.
அதே போல... ஐம்பெரும் காப்பியங்கள், கம்ப-ராமாயணம், வில்லி பாரதம், நள-வெண்பா போன்ற தரமான உயர் தமிழ் இலக்கியங்கள் யாவுமே...
...என்றைக்கும் அன்றலர்ந்த தாமரை போன்றவையே
இவ்வாறு நான் சொல்வதால்... தற்கால இலக்கியத்தை பழிப்பதாக பொருள் செய்யலாகாது.
தற்கால இலக்கியம் பற்றி சொல்ல வேண்டியவை ஏதேனும் இருந்தால்... தாராளமாக கூறலாமே.
அதை விடுத்து... பழையது புதியது என்று பாகம் பிரித்து எல்லைக்கோடு போடுவது ஏனோ.?
.
-
27th January 2008, 07:33 PM
#9
Senior Member
Platinum Hubber
என் கருத்து அதற்கு மாறானது. மாற்று மொழிகள் கலக்க அனுமதிக்கும்போது தான் ஒரு மொழி உயிர் வாழும் (ஆங்கிலம் போல், தமிழ் போல்)...காலத்துக்கேற்ப உரு மாறாவிட்டால் தான் மொழி சாகும் மொழி மக்களுக்காகத்தான் - மொழிக்காக மக்கள் இல்லை! மக்களுக்கு அன்றாடம் பயனில்லா மொழி எளிதில் இறந்து போகும்!
-
27th January 2008, 08:10 PM
#10
Senior Member
Platinum Hubber
மாற்றம், உருமாற்றம் அவசியமானதே! தேவையில்லாமல் கனியிருப்ப காய் கவர்தலும் தமிழ் கொலையும் கணிடிக்கதக்கது! மாற்றுச்சொல் இல்லாத போது எளிமையான புரிதலுக்காக என்கிற சந்தர்ப்பங்களை தாண்டி கலப்படம் போலி நாகரிக மோகத்தால் நடப்பதை மறுக்க முடியுமா?
Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.
Bookmarks