-
27th January 2008, 11:31 PM
#11
Moderator
Platinum Hubber
Re: thaRkkaala thamizh ilakkiyam
Originally Posted by
rajasaranam
ஏண் இங்கு தற்க்கால தமிழ் இலக்கியம் குறித்து யாரும் விவாதிப்பதில்லை? எல்லாம் பழந்தமிழ் இலக்கியம் பற்றிய திரிகளாகவே உள்ளது.
பல காரணங்கள். காலத்தின் முத்திரை ஒரு வித தர முத்திரையாக ஏற்பதால் படிக்கும் சொற்பத்தை பழந்தமிழ் இலக்கியத்தோடு நிறுத்தியிருக்கலாம்.
இன்னோரு காரணம் ஒரு வித அபாயச்சுழல்: பரிச்சயமின்மை. அநேகம் பேருக்கு - என்னையும் சேர்த்தே சொல்கிறேன் - பாரதியோடு வாசிப்பு நின்றிருக்கலாம். அதையும் தாண்டி ஒன்றிரண்டு வாசித்திருந்தாலும் விவாதிக்கும் அளவுக்கு பரிச்சயம் இல்லாமல் இருக்கலாம். அதனாலேயே இது அதிகம் பேசப்பட, விவாதிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம்.
நீங்களே துவங்குங்களேன். சமீபத்தில் வெளிவந்ததில், நீங்கள் விரும்பிப் படித்த நாவல் பற்றி எழுதுங்களேன்.
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
-
27th January 2008 11:31 PM
# ADS
Circuit advertisement
Bookmarks