-
5th July 2009, 06:21 PM
#151
Moderator
Diamond Hubber
Thaen Kinnam Special
(Jaya TV, Monday, 9.30 a.m.)
The special edition of ‘Thaen Kinnam’ to be telecast on July 6 will be hosted by the popular yesteryear playback singer, P. Suseela. This time, the weekly show that includes rare, lilting movie music of the past, will have Suseela presenting her choice numbers, singing them for listeners and explaining the reasons for choosing them.
-
5th July 2009 06:21 PM
# ADS
Circuit advertisement
-
5th July 2009, 06:21 PM
#152
Moderator
Diamond Hubber
Padi Maathi Padi
(Jaya Plus, Saturdays, 12 Noon)
Prospects of courses taken up after Plus Two, higher level qualifications and job opportunities will be detailed in a new show on Jaya Plus every Saturday, beginning July 4. The one-hour programme will highlight the courses that have been introduced this academic year.
Heads of colleges will participate and offer useful information to viewers, besides clarifying doubts of callers.
-
12th July 2009, 05:21 PM
#153
Moderator
Diamond Hubber
இதயம் தொட்ட கதைகள்
திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 8 மணிக்கு ஜெயா டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி, `இதயம் தொட்ட கதைகள்'.
இதில் பிரபல எழுத்தாளர்களின் சிறுகதைகள், வாரம் ஒரு கதையாக வெளிவருகிறது. சின்னத்திரை முன்னணி நடிகர்- நடிகைகள் ரசிகர்களின் இதயத்தை வசப்படுத்த வருகிறார்கள்.
பிரபல எழுத்தாளர் தமிழ்ச்செல்வனின் `ஒரு பிரம்பு ஒரு மீசை' எனும் தொடர்முதலில் வெளிவருகிறது. தொடர்ந்து சுவாரஸ்யமான கதையம்சங்களுடன் கூடிய பல வித்தியாசமான படைப்புகள் வெளிவரவுள்ளன. முக்கிய கதாபாத்திரங்களாக வேலு பிரபாகரன், சாந்தி ஜீவா யுவராஜ், பிரியன் நடிக்கிறார்கள்.
செந்தில் குமார் இயக்குகிறார்.
நன்றி: தினதந்தி
-
12th July 2009, 05:26 PM
#154
Moderator
Diamond Hubber
`ஹாசினி பேசும் படம்'
ஜெயா டி.வி.யில் நடிகை `சுஹாசினி' தொகுத்து வழங்கும் `ஹாசினி பேசும் படம்' நிகழ்ச்சியில் தற்போது வெளிவந்துள்ள `நாடோடிகள்' திரைப்படத்தை விமர்சனம் செய்கிறார்கள். படத்தின் இயக்குநர் சமுத்திரக்கனி, கதாநாயகன் சசிகுமார் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
நாளை மதியம் 1.30 மணிக்கு இந்த
நன்றி: தினதந்தி
-
18th July 2009, 07:12 AM
#155
Moderator
Diamond Hubber
திரும்பிப் பார்க்கிறேன்
ஜெயா டிவியில் அன்றைய திரைக்கலைஞர்கள் பங்கேற்று வரும் `திரும்பிப்பார்க்கிறேன்' நிகழ்ச்சியில் இந்த வாரம் பிரபல திரைப்பட நடிகை ஜெயந்தி பங்கேற்கிறார்.
கன்னட மாநிலத்தில் பிறந்த ஜெயந்தியின் இயற்பெயர் கமலா குமாரி, நடன கலைஞராக ஆகவேண்டும் என்று தாயாரின் விருப்பத்திற்கிணங்க நடனப்பள்ளியில் பயின்றார்.
இளம் வயதில் சில தமிழ், தெலுங்குப்படங்களில் துணை நடிகை வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவர் அறிமுகமான முதல் படம் மங்கையர் உள்ளம் மங்காத செல்வம். பிரபல நடிகை அஞ்சலிதேவியால் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.
தமிழ் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், மராத்தி ஆகிய மொழிகளில் 500 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில் அவர் வாழ்க்கையில் நடைபெற்ற, இதுவரை வெளிவராத, மறக்க முடியாத பசுமையான நினைவுகளையும், சக நடிகர்கள் - நடிகைகளுடனான அனுபவத்தையும் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். அவர் நடித்த படங்களிலிருந்து பாடல்களும், காட்சிகளும் இடையிடையே இடம்பெறும்.
திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது இந்த நிகழ்ச்சி.
-
19th July 2009, 01:13 AM
#156
Moderator
Diamond Hubber
அரையிறுதிப் போட்டியில் `என்னோடு பாட்டுப்பாடுங்கள்'
ஜெயா டிவியில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வழங்கும் `என்னோடு பாட்டுப்பாடுங்கள்' நிகழ்ச்சியில் இளம்பாடகர், பாடகிகள் திருமணமான இல்லத்தரசிகள், டூயட் சீரிஸ் எனப் பலரும் கலந்துகொண்ட நிகழ்ச்சிகள் 4 பகுதிகளாக அரங்கேறியது.
அதனை தொடர்ந்து 30 வயதிலிருந்து 45 வயதுக்குட்பட்டவர்கள் பங்கேற்கும் வகையில் `சீனியர் சீரிஸ்' எனும் பகுதி ஒளிபரப்பாகிறது. இந்த வாரம் முதல் `அரை இறுதி' போட்டி தொடங்கவுள்ளது. பின்னணி பாடகர் மனோ பங்கேற்கிறார். இந்த அரை இறுதி சுற்று தொடர்ந்து 2 வாரங்கள் ஒளிபரப்பாகவுள்ளது.
இன்று இரவு 8 மணிக்கு இந்த நிகழ்ச்சியை ஜெயா டிவியில் காணலாம்.
நன்றி: தினதந்தி
-
9th March 2010, 07:59 PM
#157
Senior Member
Veteran Hubber
Originally Posted by
R.Latha
திரும்பிப் பார்க்கிறேன்
ஜெயா டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது. `திரும்பிப்பார்க்கிறேன்' நிகழ்ச்சி வெள்ளித்திரையில் அன்றைய நாளில் ரசிகர்களை கவர்ந்த திரையுலக பிரபலங்களின் சுயசரிதம் தான் `திரும்பிப்பார்க்கிறேன்'.
சரோஜாதேவி, சோ, காஞ்சனா, பாலாஜி, சச்சு இவர்களைத் தொடர்ந்து, இந்த வாரம் பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் பங்கேற்கிறார்.
Originally Posted by
saradhaa_sn
எங்களுடைய இன்னொரு ஆதர்ஷ நாயகன் 'வெண்ணிற ஆடை' ஸ்ரீகாந்த்தை கொண்டுவாங்கம்மா.
ஜெயா டி.வி.யின் 'திரும்பிப் பார்க்கிறேன்' நிகழ்ச்சியில் ஸ்ரீகாந்த்.
திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் 'திரும்பிப் பார்க்கிறேன்' நிகழ்ச்சியில் ஒவ்வொரு திங்களன்றும் நமக்கு ஒரு எதிர்பார்ப்பு. இந்த வாரம் யார் வந்து தன் திரையுலக அனுபவங்களைத் திரும்பிப்பார்த்து நம்மோடு பகிர்ந்துகொள்ளப் போகிறார்கள் என்று அறிந்துகொள்ள ஆர்வம். (இந்த வாரம் வரப்போவது யார் என்று முதல் வாரமே அறிவிக்க மாட்டார்கள்).
அந்த வகையில் நேற்று (08.03.2010) யார் வரப்போகிறார்கள் என்று ஆவலோடு காத்திருந்தபோது, இன்ப அதிர்ச்சியாக நிகழ்ச்சியை அறிமுகம் செய்யும் அந்தப்பெண் காம்பியர் இப்படி அறிவித்தார்.. "அதிர்ஷ்டம்னா இவர் மாதிரிதாங்க இருக்கனும். பெரிய இயக்குனரான கே.பாலச்சந்தர் அவர்களால் நாடக மேடைகளில் செதுக்கப்பட்டு, இன்னொரு பெரிய இயக்குனரான ஸ்ரீதர் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட இவரோடு முதல் படத்தில் நடிச்சது யார் தெரியுமா? நம்ம் புரட்சித் தலைவி அம்மாதான். தெரியலீங்களா?. என்னங்க அடுத்தாத்து அம்புஜத்துக்குக் கூட இவரைத் தெரிஞ்சிருக்கும்போது உங்களுக்குத் தெரியாமல் இருக்குமா?" என்று அந்தப்பெண் அறிவித்ததுமே புரிஞ்சு போச்சு. ஆகா.... "நம்ம" ஸ்ரீகாந்த் அல்லவா வரப்போகிறார் என்று மனம் முழுக்க மகிழ்ச்சி.
அவரேதான்....
-
22nd March 2010, 12:10 PM
#158
Senior Member
Seasoned Hubber
ராகமாலிகா'வில் பி.சுசீலா
ஜெயா டிவியில் ஞாயிறு தோறும் காலை 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இசை நிகழ்ச்சி, `ராகமாலிகா.' இப்போது இந்த நிகழ்ச்சி 8 முதல் 13 வயதுள்ள மாணவ, மாணவியர்களுக்கானஸ்கூல் சாம்பியன்சிப் நிகழ்ச்சியாக நடந்து வருகிறது. ஏற்கனவே கல்லூரி மாணவர்களுக்கான போட்டியை ராகமாலிகா நடத்தி முடித்ததை தொடர்ந்து இப்போது பள்ளி மாணவர்கள் பக்கம் இந்த நிகழ்ச்சி வந்திருக்கிறது.
தொடர் முழுவதும் பிரபல பின்னணி பாடகி பி.சுசீலா தலைமையேற்கிறார். பழைய பாடல்களின் பெருமையையும் இனிமையையும் எப்போதும் மக்களுக்கு உணர்த்தி வரும் `ராகமாலிகா'வில் பிஞ்சுக் குரல்கள் அந்தக் கால நினைவுகளை அசை போடுகிறார்கள்.
-
29th March 2010, 12:09 PM
#159
Senior Member
Seasoned Hubber
அருக்கானி டூ அழகுராணி
பெண்களுக்காகப் பல சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளை வழங்கி வரும் ஜெயா டி.வி. 'அருக்கானி டூ அழகுராணி' என்ற புதிய நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறது.
கல்லூரி மாணவிகள், பல்வேறு துறைகளில் பணியாற்றும் பெண்கள் ஆகியோருக்கு முறையான பயிற்சிகள் அளித்து, தன்னம்பிக்கையூட்டி அவர்களைப் புதிய வாழ்க்கைக்குப் பயணிக்க வைப்பதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம். இதில், தாம் அழகாக இல்லையே என்ற தாழ்வு மனப்பான்மையில் இருக்கும் பெண்களைத் தேர்வு செய்து அவர்களுக்குள் பொதிந்திருக்கும் திறமையை வெளிக்கொணர்ந்து அவர்களை உண்மையான அழகுராணிகளாக மாற்றுகிறார்கள்.
தங்களிடம் உள்ள திறமையை அறியாத பெண்களை வித்தியாசமான அணுகுறை மூலம் அவர்களுடைய திறமையை அறியச் செய்யும் இந்த நிகழ்ச்சியை குட்டிபத்மினியின் மகள் கீர்த்தனா தயாரிக்கிறார். அகிலா பிரகாஷ் இயக்குகிறார்.
பிரபல சிகை அலங்கார நிபுணர்கள், ஆடை வடிவமைப்பாளர்கள், கல்வியாளர்கள், மனோதத்துவ நிபுணர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சி வரும் மார்ச் 28}ம் தேதி முதல் ஞாயிறுதோறும் மதியம் 12 மணிக்கு ஜெயா டி.வி.யில் ஒளிபரப்பாகிறது.
http://dinamani.com/edition/story.as...41&SEO=&Title=
-
17th April 2010, 07:23 PM
#160
Moderator
Diamond Hubber
எம்.ஜி.ஆர் -சிவாஜியின் நண்பர்
திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 10 மணிக்கு ஜெயா டிவியில் ஒளிபரப்பாகி வரும் `திரும்பிப் பார்க்கிறேன்' நிகழ்ச்சியில் இந்த வாரமும் தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணனின் கலை உலக அனுபவங்கள் தொடர்கிறது. ஒரு நட்சத்திர நடிகராக அவர் நேசித்த எம்.ஜி.ஆர், பின்னாளில் அவரது நெருங்கிய நண்பராகவே ஆகிப்போனார்.
அந்த நட்பின் வலிமை தான் பின்னாளில் எம்.ஜி.ஆர். தமிழக முதல்வரானபோது சரவணனுக்கு சென்னை நகர ஷெரீப் அந்தஸ்தையும் தேடிக் கொண்டு வந்து சேர்த்தது.
எம்.ஜி.ஆர். மீதான இவரது அன்பின் அடுத்த கட்ட வெளிப்பாடே, அமெரிக்காவில் எம்.ஜி.ஆருக்கு சிகிச்சையளித்து அவர் உயிரைக் காப்பாற்றிய டாக்டர் பிரீட்மேனுக்கு சென்னையில் பெரும்விழா எடுத்து கவுரவிக்கும் அளவுக்கு போனது.
உத்தர்புருஷ் என்ற வங்காளப் படத்தின் கதையில் சின்னச்சின்ன மாற்றம் செய்து அதை தமிழுக்கு ஏற்றவிதத்தில் உருவாக்கிய படமே உயர்ந்தமனிதன். ஏவி.எம். நிறுவனம் தயாரித்த இந்தப்படத்தில் சிவாஜி நடிக்க முக்கிய காரணமாக இருந்தவர் சரவணன்.
படத்தில் அசோகன் நடித்த டாக்டர் கேரக்டரில் நடிக்கவே முதலில் சிவாஜி விரும்பியிருக்கிறார். ஆனால் கதாநாயகனாக நடித்தேயாக வேண்டும் என்று சரவணன் வற்புறுத்தியதன் பேரில் நடித்திருக்கிறார். படம் வெளியாகி தமிழக அரசின் அந்த ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருதை பெற்றார் சிவாஜி. அதோடு `சிவாஜியின் 125-வது படம்...ஏவி.எம்.மின் வெற்றிப்படம்' என்ற பெயரையும் நிலைநிறுத்தியது.
இந்தப்படம் தயாரான கால கட்டத்தில் அதுவரை சிறுமனஸ்தாபம் காரணமாக நட்பு பாராட்டாமல் இருந்த சிவாஜியையும் அசோகனையும் மீண்டும் நண்பர்களாக்கிய பெருமையும் சரவணனுக்கு உண்டு.
இதுபற்றியெல்லாம் சுவாரசியமாக விவரித்திருக்கும் சரவணன், அடுத்து ரஜினி, கமல் படங்களை தயாரித்த அனுபவம், விசு எழுதி இயக்கிய சம்சாரம் அது மின்சாரம் தயாரித்த பின்னணி பற்றியும் சுவை பட விவரிக்கிறார். முத்தாய்ப்பாக ரஜினி-ஷங்கர் கூட்டணியைக் கொண்டு வெற்றிப்படமான `சிவாஜி' தந்த அனுபவமும் இடம் பிடிக்கிறது. இயக்கம்: கா.பரத்.
நன்றி: தினதந்தி
Bookmarks