Page 4 of 46 FirstFirst ... 2345614 ... LastLast
Results 31 to 40 of 453

Thread: INTERVIEWS With TV Artists

  1. #31
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    thanks for the info LATHA
    "அன்பே சிவம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #32
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like

    "காதலிக்க நேரமில்லை' சுகாசினிராஜு

    "எது சரின்னு படுதோ அதை அழுத்தமா சொல்லிட்டா தொந்தரவு நெருங்காது!'' "சுளீர்' என்று சொல்கிறார் சுகாசினிராஜு

    விஜய் "டிவி'யில் "காதலிக்க நேரமில்லை' சீரியலிலும், "ஜோடி நெ.1'லும் திறமை காட்டி வருகிறார் ராஜஸ்தான் இறக்குமதியான சுகாசினிராஜு. ஏ.வி.எம்., ஸ்டூடியோவில் "ஜோடி நெ.1' ல் போட்டி ஆட்டத்திற்கு தயாராகிக் கொண்டிருந்த சுகாசினியை"பேட்டி'க்காக சந்தித்த போது, அவர் இருந்த அவசரத்திலும் நேரம் ஒதுக்கி "பேட்டி' கொடுத்து அதில் "அட்வைஸ்'களையும் அள்ளிவிட்டார்.


    அவரது பேட்டி:

    * நடனத்தின் மீது ஆசை ஏற்பட்டதால் ராஜஸ்தானிலிருந்து சென்னைக்கு வந்துவிட்டதாக பேசப்பட்டதே?

    சினிமாவில், "டிவி'யில் வதந்திக்கு பஞ்சம் ஏது?. என்னை பற்றியும் பேச்சு வந்திருச்சா. சொந்த மாநிலம் ராஜஸ்தான். பரதநாட்டியம் எனக்கு பிடிக்கும். கற்றுக்கொள்ள நினைச்சப்ப சென்னையில கலார்க்ஷத்திராவில் சேர்ந்து கத்துக்கிடலாம்ன்னு தெரிஞ்சவங்க யோசனை சொன்னாங்க. சென்னைக்கு வந்தேன். நினைச்சபடி பரதநாட்டியம் கத்துக்கிட்டு டான்ஸ் மாஸ்டர் ராம்ஜியின் குழுவில் நிறைய மேடைகளில் ஆடியிருக்கிறேன். சிங்கப்பூர், மலேசியாவெல்லாம் நிகழ்ச்சிக்காக போய் வந்தி ருக்கேன்.

    * நீங்கள் நினைத்தபடி வாய்ப்பு கிடைத்திருக்கிறதா?

    விஜய் "டிவி'யில் "காதலிக்க நேரமில்லை' சீரியலில் வாய்ப்பு கிடைச்சது. ஸ்டோரி வித்தியாசமா இருக்கு. எனக்கு பிடிச்சிருக்கு.மோதலில் ஆரம் பித்து காதலில் முடிவது போல எனது கேரக்டர். டைரக்டர் நல்ல எதார்த்தமா ஸ்டோரியில விஷயங்களை சொல்லியிருக்கார். சீரியலில் நடிச்சதால "ஜோடி நெ.1' போட்டியிலும் விஜய் "டிவி' மூலம் வாய்ப்பு கிடைச்சது. போட்டியில "மதுரை ஜில்லா' பாடலுக்கு "போக் டான்ஸ்' நல்லா ஆடியதால இந்த வாரம் பரிசும் கிடைச்சிருப்பது சந்தோஷமாயிருக்கு. இது என் முயற்சிக்கு "பூஸ்ட்' மாதிரி இருக்கு.

    * "ஜோடி நெ1' போட்டியில் ஜெயித்துவிடுவீர்களா?

    நம்பிக்கையோடு களமிறங்கியாச்சு. "கனா காணும் காலங்கள்' வின்னி எனக்கு ஜோடி. ஜெயித்துகாட்டணும்ன்னு நம்பிக்கை இல்லாமலா போட்டி'யில களமிறங்குவோம்.வித்தியாசமா டான்ஸ் செய்து அசத்தணும்ன்னு ஆசையிருக்கு. நினைச்சது நடந்து ஜெயிச்சுட்டா சந்தோஷம் தான்.

    * சென்னையில் தங்கியிருப்பது வசதியாக இருக்கிறதா?

    அப்பா ஆர்மியில இருந்ததால எதையும் எதிர்கொள்ளும் தைரியத்தை எனக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார். நான் சென்னைக்கு படிக்க வந்தப்ப, புது ஏரியான்னு பயப்படாதே. நீ செய்றது சரிதான்னு நினைச்சா செஞ்சிடு. எதுவந்தாலும் பாத்துக்கிடலாம்ன்னு சொன்னாங்க. நீ துணிச்சலான ஆளு. எந்தப் பிரச்னையும் உனக்கு வராது. இருந்தாலும் ஆண்களை விட பெண்களுக்கு பிரச்னை எளிதா வந்துடும். அதனால உஷாரா நடந்துக்கணும்ன்னு அம்மா சொல்லி அனுப்பினாங்க. வேகமான உலகத்தில் சூழ்நிலைக்கு தக்கபடி மக்களின் செயல்பாடு எப்படியெல்லாம் மாறும், தேவையில்லாத விஷயங்களை எப்படி தவிர்க்கலாம்ன்னும் நிறைய எனக்கு அம்மா சொல்லியிருக்காங்க. அவுங்களுடைய வழிகாட்டுதல் ரொம்ப உதவியா பாதுகாப்பாயிருக்கு.

    * மற்றவங்களோடு பழகுவதற்கு கட்டுப்பாடு எதும்?

    மனுஷங்கள்ல கெட்டவங்க இல்லாமலில்லை. எல்லாரும் கெட்டவங்கன்னு சொல்ல முடியாது. நாம சரியா இருந்தா யாரும் நம்மை நெருங்க முடியாது. ஆண்களுடன் பேசக் கூடாது, பழகக் கூடாதுன்னு கட்டுப்பாடு தேவையில்லை. நாம எப்படி பேசணும், எப்படி பழகணும்ன்னு தெரிஞ்சுக்கிட்டு நடந்துக்கிடணும். அவுங்க எப்படி பேசறாங்க, எந்த நோக்கத்தில் பேசறாங்க. ஏன் அப்படி பேசறாங் கன்னு கவனமாயிருக்கணும். தேவையில்லாத பேச்சு வந்தா சும்மா இருந்திடக் கூடாது. ஏன் இப்படி'ன்னு கேட்டுடணும். நம்மலோட பதில் பேச்சிலிருந்தே அவுங்க நம்மை பற்றி தெரிஞ்சுக்கிட்டு, நாம எப்படிப்பட்ட ஆளுன்னு புரிஞ்சுக்கிட்டு ஒதுங்கிடுவாங்க. எது சரின்னு படுதோ அதை அழுத்தமா சொல்லிட்டா தொந்தரவு நெருங்காது.

    * பிடிக்காத விஷயம்?

    முகத்திற்கு நேராக "ஆகா ஓகோ'ன்னு பேசிட்டு, இதையே மற்றவங்களிடம் வேறு மாதிரியாக மாற்றி பேசறவங்களை பிடிக்காது. "பொய்'யை சொல்லி தப்பிக்க நினைப்பதைவிட உண்மையை சொல்லி தண்டனையை ஏற்றுக்கொள்வதே மேல்'ன்னு நினைக்கணும். "பொய்' பேசறவங்களை எனக்கு பிடிக்காது. இந்த மாதிரி மனுஷங்களை சந்திக்கிற சூழ்நிலை எனக்கு வரக்கூடாதுன்னு நினைச்சிட்டிருக்கேன் என்று சொல்லிய சுகாசினி ராஜு "ஜோடி நெ.1"ல் ஆட்டம் போட ஏ.வி.எம்., ஸ்டூடியோவிற்குள் பறந்தார்.

  4. #33
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    Lollu Saba Rajini

    "தவம்' சீரியலில் நடித்து கொண்டிருந்த ரஜினிநிவேதாவை "பேட்டி'க்கு சந்தித்த போது, ""சினிமா, "டிவி'யை மட்டுமே நம்பியிருக்கும் தொழில் முறை கலைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்க புதியவர்கள் உதவ வேண்டும்,'' என்றார் உருக்கமாக... ரஜினிநிவேதாவின் பேட்டி:

    * சினிமா, டிவியில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்த நீங்கள் திடீரென்று விலகி, மீண்டும் வந்திருப்பது பற்றி?

    இந்த பீல்டுல நுழைஞ்சப்ப நிறைய பட வாய்ப்புகள் கிடைச்சது. "பயணங்கள் முடிவதில்லை, சிகப்பு ரோஜாக்கள், தங்கமகன், போக்கிரிராஜா'ன்னு நிறைய படங்கள்ல நடிச்சிருக்கேன். படங்கள்ல பாட்டுக்கு டான்ஸ் கம்போசிங்கும் செஞ்சிட்டிருந்தேன். மேரேஜுக்கு பிறகு எல்லாத்தையும் விட்டாச்சு. குடும்பம் குழந்தைகள்ன்னு சில வருடங்கள் ஓடிப்போச்சு. நடிக்க வேணாம்ன்னு நினைச்சாலும் மனசில இந்த பீல்டு மேல ஆர்வம் இருந்திட்டுதானிருந்தது. முன்னணி நட்சத்திரங்களோடு நடிச்சிட்டு, பரதநாட்டியத்தையும் முறையாக கத்துக்கிட்டு "சகுந்தலை பிறந்தாள்'ங்கிற பெயர்ல நாட்டிய நாடகத்தை ஆர்வமா அரங்கேற்றினேன். இவைகளையெல்லாம் குடும்பத்திற்காக மறக்க வேண்டிய நிலை வந்தது. பரவாயில்லைன்னு நினைச்சேன். அமிர்தானந்தமயி ஸ்கூல்ல டான்ஸ் டீச்சரா சேர்ந்தேன். பரபரப்பு இல்லாத அமைதியான வேலை. பிள்ளைங்களுக்கு டான்ஸ் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தேன். ஸ்கூலுக்கு குழந்தைகளை அழைச்சிட்டு போக வரும் பெற்றோர்கள் அருமையா டான்ஸ் பண்றீங்க. நிறைய நடிச்சிருக்கீங்க. திறமை இருந்தும் ஏன் நடிப்பதை விட்டுடீங்க... நீங்க திரும்ப செய்யலாமேன்னு சொன்னாங்க. மீண்டும் நடிக்க வந்துட்டேன்.

    * நடிக்க வருவதற்கு முன், மாதா அமிர்தானந்த மயியிடம் ஆசியை பெற்றது பற்றி?

    அவுங்க ஸ்கூல்ல ஒர்க் பண்ணினதால அம்மா சென்னை வந்தபோது சந்தித்து, என்னோட முடிவை சொன்னேன். "ஆர்வமிருந்தா செய்' என என்னை ஆசீர்வதிச்சாங்க. "டிவி'க்கு வந்துவிட்டேன். படம் ஒன்றிலும் முக்கியமான கேரக்டரில் நடிக்க இருக்கிறேன்.

    * டிவி'யில் புதியவர்களுக்கு அதிகம் முக்கியத்துவம் கிடைத்து வருகிறதே?

    சினிமா, "டிவி' யில நிறைய வாய்ப்பு இருக்கு. புதிய வர்கள் நிறைய வந்துக்கிட்டிருக்காங்க. சினிமா "டிவி'யை மட்டுமே நம்பி, நிறைய பேர் தொழில் தெரிஞ்சவங்க இருக்காங்க. இவுங்களுக்கு போதிய வாய்ப்பு கிடைக்கலை. இந்த தொழிலையே நம்பியிருப் பவர்களுக்கு இந்த பீல்டில் முக்கியத்துவம் கொடுத்து வாய்ப்பு அளிக்கணும். திறமையுள்ள பலர் நல்ல வாய்ப்பு கிடைக்கலையே, நம்மை யாரும் தேடாம விட்டுட்டாங்களேங்கிற ஏக்கம் இருக்கு. அவுங்க வெளிப்படையா காட்டிக்கொள்ளவில்லை. தொழில் மீது பக்தி வைத்து, நேசிப்பவர்களுக்கு சினிமா, "டிவி' டைரக்டர்கள் வாய்ப்பு கொடுத்து உதவ வேண்டும்.

    * முன்னணி நடிகர், நடிகைகளுக்கு நடனம் அமைத்த நீங்கள் நடன இயக்குனராக வந்திருக்கலாமே?

    பசுமர்த்திகிருஷ்ணமூர்த்தி மாஸ்டரிடம் அசிஸ்டெண்டாக நான் ஒர்க் பண்ணிட்டிருந்தப்ப அவர் பல படங்களுக்கு டான்ஸ் மாஸ்டரா ஒர்க் பண்ணிட்டிருந்தார். "மன்மத லீலை' படத்தில் கமலஹாசன், ஜெயப்ரதா பாடி ஆடும் பாட்டுக்கு நான் டான்ஸ் கம்போஸ் பண்ணினேன். ஸ்ரீவித்யா, வாணிஸ்ரீ, சச்சுக்கெல் லாம் நான் டான்ஸ் கம்போஸ் செஞ்சிருக்கேன். நடிப்பு மீதிருந்த ஆர்வத்தால தனியா டான்ஸ் மாஸ்டரா ஒர்க் பண்ணனும்ன்னு ஆசை அப்போது இல்லை.

    * சினிமா ஷூட்டிங்கில் மறக்க முடியாத சம்பவம் ஏதும்?

    ""குலபுத்ரா'ங்கிற கன்னடப் படத்தில் நான் மரத்தில் மறைந்திருந்து இலைகளை ஒடிச்சு கீழே இருக்கும் ஹீரோ மீது வீச வேண்டிய சீன். நடிப்பு எதார்த்தமாயிருக்கணும்ன்னு நினைச்ச நான் வேக வேகமா இலைகளை ஒடிச்சு கீழே வீசிக்கொண்டிருந்தேன். நான் மரத்தை ஆட்டியதால் கிளை ஒன்றில் துõங்கிக் கொண்டிருந்த பாம்பு சர்ரென இறங்கி என்னை நோக்கி வேகமாக வர, அதை பார்த்த உதவி இயக்குனர் அலற, நான் அப்போது தான் பாம்பை பார்த்து பயந்து போய் கீழே குதித்தேன். நல்ல வேலை உதவியாளர்கள் என்னை கீழே விழாமல் தாங்கிப் பிடித்ததால் அடிபடாமல் தப்பினேன். "குடி குடியை கெடுக்கும்' ங்கிற "டிவி' நிகழ்ச்சிக்காக சிதம்பரத்தில் திடீரென்று சாலையில் ஷூட்டிங் நடத்தப்பட்டது. குடிகார கணவர் சாலையில் ஓட ஓட என்னை அடித்து இம்சிப்பது போல சீன். அங்கு திடீரென்று ஷூட்டிங் நடத்தியதால் சாலையில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள், உண்மையிலேயே குடிகாரன் என்னை அடிக்கிறான்னு ஓடி வந்து தடுத்தனர். "டிவி' ஷூட்டிங்'கென தெரிந்ததும் அவரை அடிக்காமல் விட்டு விட்டதை மறக்க முடியாது,'' என்று மலரும் நினைவுகளை சொன்னார் ஆர்வமாக ரஜினிநிவேதா.

    [/tscii][tscii]

  5. #34
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    Arinthadhum Ariyathadhum SHILPA

    ‘ஸாவரியா...ஸாவரியா' என்ற ஹிந்தி பாடலை யாராவது பாடுகிற சத்தம் கேட்டால் சுற்றும் முற்றும் தேடிப் பாருங்கள். பாடுவது -விஜய் டிவியில் ‘அறிந்ததும் அறியாததும்' நிகழ்ச்சி மூலம் பலரைப் பேட்டி காணும் ஷில்பாவாக இருக்கலாம். அடிக்கடி அவர் முணுமுணுக்கும் பாடலாம் இது. ஹிந்துஸ்தானி இசையில் பாடுவதற்குப் பயிற்சி பெற்று வரும் கேரளப் பெண்ணான அவரை ஓர் இசைவேளையில் சந்தித்தோம்.

    பேட்டி எடுப்பது சிரமமா? பேட்டிக் கொடுப்பது சிரமமா?

    கொடுப்பதுதான். எடுக்கிறபோது கேள்விதான் கேட்கப்போகிறோம். நம் இஷ்டம்போல் கேட்கலாம். ஆனால், பேட்டி கொடுக்கிறபோது அப்படியில்லை. யோசித்துப் பேசவேண்டும். சொல்கிற தகவல் தவறாகிவிடக் கூடாது. அதேசமயம் சுவாரஸ்யமாகவும் பேச வேண்டும். என்னைப் பொறுத்தவரையில் பேட்டிக் கொடுப்பதுதான் சிரமம்.

    கல்லூரியில் படித்த காலத்திலிருந்த இயல்பிற்கும் இப்போது தொகுப்பாளினியாக இருப்பதற்கும்

    ஏதாவது மாற்றத்தை உணர்கிறீர்களா?

    இல்லை. ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் பி.ஏ. ஆங்கில இலக்கியம் படித்தேன். கலகலப்பான காரெக்டர் என்னுடையது. என் முகத்தில் எப்போதும் புன்னகை இருந்துகொண்டே இருக்கும். அந்தக் கலகலப்பும் புன்னகையும்தான் ‘ரேடியோ ஒன்'னில் பணியாற்றவும், ஜெயா டிவியில் ‘உங்க ஏரியா உள்ளே வாங்க' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவும் உதவியது என்று நினைக்கிறேன். இப்போது விஜய் டிவியில் ‘அறிந்ததும் அறியாததும்' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதற்கும் இதுதான் உதவுகிறது. இதனால் என்னளவில் எவ்வித இயல்பு மாற்றமும் ஏற்பட்டதாய்த் தெரியவில்லை.

    ‘அறிந்ததும் அறியாததும்' நிகழ்ச்சியில் பலரைப் பேட்டி எடுத்திருக்கிறீர்கள். அதில் உங்களுக்குப் பிடித்த பிரபலத்தின் பேட்டி?

    பிரபலங்களிடம் எடுத்த அனைத்துப் பேட்டிகளுமே சுவாரஸ்யமான அனுபவமாகவே இருந்தன. இதில் நான் மிகவும் விரும்பி எடுத்தது நடிகர் மாதவனுடைய பேட்டி. பிரமிப்புடனே அவருடன் பேட்டி எடுத்தேன். கொஞ்சம் பயமாகவும் இருந்தது. ஆனால் அவருடன் பேசத் தொடங்கிய பிறகு அந்தப் பயம் போய்விட்டது. பெரிய பிரபலம்போல் பேசாமல் வெகு இயல்பாகப் பேசினார். ‘ஸ்கூல் போகிற பெண்போல இருக்கிறாய்' என்று என்னைக் கேலியும் செய்தார். மாதவனுடன் நான் எடுத்த பேட்டிக்குத் தோழிகள் மத்தியில் அதிகப் பாராட்டு கிடைத்தது. அதுவே என்னைக் கவர்ந்த பேட்டியும்.

    ஹிந்துஸ்தானி இசை கற்றுவருகிறீர்கள்... திரைப்பாடல் பாட விருப்பமிருக்கிறதா?

    ஹிந்துஸ்தானி இசை எனக்கு உயிர். சௌம்யா மதன்கோபாலிடம் நாலைந்து வருடங்களாகக் கற்று வந்தேன். இப்போது ராமமூர்த்தியிடம் கற்றுவருகிறேன். இருப்பினும் முழுதாய் கற்றோம் என்கிற எண்ணம் எனக்கு வரவே இல்லை. இசை என்பது கடல். கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். திரைப்படப் பாடல்கள் பாட விருப்பம் உள்ளது. யாரிடமும் இதுவரை வாய்ப்பு கேட்கவில்லை. நிச்சயம் பாடுவேன்.

    நடிப்பதற்கு வாய்ப்பு வந்ததா?

    சீரியலில் நடிப்பதற்கு இரண்டு பேர் அழைத்தார்கள். எனக்குத்தான் விருப்பமில்லை. எதையும் முழு ஆர்வத்துடன் செய்ய வேண்டும் என்பது என் எண்ணம். நடிப்பதற்கு எனக்கு ஆர்வமே இருந்ததில்லை. தொகுத்து வழங்குவது என்பது நடிப்பதில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்று. நன்றாகப் பேசுகிறோம் என்பதற்காக நடிக்கமுடியும் என்று என்னால் நம்பமுடியவில்லை. திரைத்துறையிலிருந்து அழைப்பு வந்தாலும் நிச்சயம் நடிக்கப் போகமாட்டேன்.

    வேறெதில் ஆர்வம்?

    இசை...இசை..இசைதான். வேறெதிலும் ஆர்வமில்லை. ஹிந்துஸ்தானி இசையில் ஏதாவது சாதிக்க வேண்டும். திட்டமிட்டு பயிற்சி பெற்று வருகிறேன். சாதிப்பேன்.

    பிடித்தது கேரள வாசமா? சென்னையா?

    கேரளாவை எல்லோருக்கும் பிடித்திருப்பதற்கு முக்கிய காரணம் ‘கடவுளின் சொந்த நாடு' என்று அழைக்கிறளவுக்குப் பார்க்கிற இடமெங்கும் பசுமையைப் போர்த்திக்கொண்டிருப்பதுதான். எனக்குப் பிடிக்காததற்கு முக்கியக் காரணமும் அதுதான். அழகழகான கட்டடங்கள் இருக்கிற இடம்தான் எனக்கு அதிகம் பிடிக்கும். அதன்படி எனக்கு சென்னைதான் மிகவும் பிடிக்கும். நான் எல்லாவற்றிலும் தலைகீழ்![/tscii][tscii]

  6. #35
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    Interview with Gautham

    Qid your interest and inclination to dance lead you to become an artiste or was it vice-versa?
    Gautham: My interest towards dancing was totally different; it was a passion I discovered, something I wanted to do all along my life. Acting happened along the way. I did not plan for it to happen, it was something I eventually took up as it came along. And dancing helped me in my acting career. As I was a dancer it was easy for me to emote, because basically dance is also a form of expression like acting.

    Q: Do you have any dance school where you train and inspire people who want to become dancers?
    Gautham: Yes, I do run a dance school where we teach proper and authentic Western dancing. It serves as an opening for those who want to learn more about different forms of dances around the world. The dance school we conduct is affiliated to a foreign board that is in Australia.

    Q: Are you trained in Indian and Western classical dance?
    Gautham: Yes, I am trained in Western and classical dance. I am still under training; I am doing my grade five in 'jazz'.

    Q: Being an artiste, a TV anchor, a performer of dance, and a choreographer? Which do you enjoy doing the most? Or what is the order if you like doing everything?
    Gautham: Ok I can be an artiste, a TV anchor, a dancer or a choreographer I enjoy doing everything as it is related to the media. I enjoy doing anything and everything as long as it is a part of the media. So there is no choice of preference or order when it comes to doing what I am doing now. As long as it is concerned with media I am happy.

    Q: Who is your favorite choreographer(s)? What do you like about him/her/them the most?
    Gautham: Favorite choreographer - right now there are many of them. But if there is one person who has always been on my mind it is Gene Kelly.

    Q: How do you feel when people say actor 'Major' Sunderrajan is Gautham's Dad instead of the other way around?
    Gautham: It doesn't matter if I am recognized as the son of 'Major' Sunderrajan or if he is recognized as Gautham's Dad. The way I am recognized or acknowledged does not bother me, as it is the fact, the basic fact. So there is nothing to feel about it.

    Q: Are you doing any movies/TV serials as of now?
    Gautham: Yes, I am doing a movie with Director Agathiyan called 'Kadhal Samrajjiyam' and I am doing four or five serials along with my 'Thillana Thillana' dance show on Sun TV.

    Q: In one of your interviews we heard a pretty interesting narration from you about you meeting your wife? Is it true?
    Gautham: Yes meeting my wife, it is quite a long love story. We met in 1990 and we got married in 1996, six years of love and then finally marriage. It is too long to write it down here. It is a long story but an interesting story. May be some other time. Thank you.

  7. #36
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    குழந்தை நட்சத்திரமாக சினிமாவுக்கு வந்தார் சுஜிதா; சினிமாவை விட, "டிவி'யே எனக்கு சரின்னு பட்டது, இந்த பீல்ட்டு பற்றி நானெடுத்த முடிவு சரியா இருந்ததால வாழ்க்கையும் நல்லபடியா அமைஞ்சு சந்தோஷமாயிருக்கிறேன்'' என்கிறார். அவரின் பேட்டி:


    * சென்னையில் உங்களை பார்க்க முடியவில்லை என்று சினேகிதிகள் சொல்கின்றனரே எங்கு இருக்குறீர்கள்?

    கலைஞர் "டிவி'க்காக "அக்கா தங்கை' சீரியலில் நடிச்சிட்டிருக்கேன். தெலுங்கில் "ஏதடுக்குலு' (ஏழாவது படி) மலையாளத்தில் "பூ காலம்' சீரியல்களில் நடிச்சிட்டிருக்கேன். மூன்றுக்கும் 25 நாட்கள் ஒதுக்கியிருக்கிறேன். அதனால சென்னையில தொட ர்ந்தார் போல தங்க முடியலை. கேரளா, ஆந்திரான்னு பறக்க வேண்டியதா போச்சு. சென்னையிலதான் வீடு இருக்கு.

    * இப்படி நீங்கள் பறக்க கணவர் சரி சொல்லிட்டாரா?

    சென்னையில விளம்பர படக் கம்பெனி வச்சிருக்கார். சீரியல்கள்ல நல்ல வாய்ப்பு கிடைச்சதால ஒர்க் பண்ண அனுமதிச்சிருக்கார். நான் இங்கும் அங்குமா பறப்பதை பார்த்துட்டு உனக்கு சிரமாயிருந்ததுன்னா விட்டுடு. டெக்கனிக்கல் அயிட்டங்களை கத்துக்க கம்பெனிக்கும் உதவியா இருக்கும், உனக்கு கிடைக்கும் அனுபவம் பயனுள்ளதா இருக்கும்ன்னு சொன்னார். நடிப்பை தவிர வேறு எதிலும் எனக்கு இன்ட்ரஸ்ட் இல்லாததால சீரியல்களுக்காக ஊர், ஊரா பறந்திட்டிருக்கேன்.

    * நடிப்பு மீது ஆர்வம் உள்ள உங்களுக்கு சினிமாவில் ஹீரோயின் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று வருத்தம் ஏதும்?

    சினிமாவில் ஹீரோயினியாக நடிக்கணும்ங்கிற ஆசையில சினிமாவுக்கு நான் வரலை. குழந்தையாக இருக் கும் போதே அம்மா என்னை சினிமாவில விட்டுட்டாங்க. நிறைய படங்கள்ல நடிச்சிருக்கேன். என்னோட என் அண்ணன் சுரேஷும் குழந்தையாக இருக்கும் போதே நடிக்க வந்துட்டான். கூட நடிப்பவங்க நீ எதிர்காலத்தில் ஹீரோயினாக வருவாய்ன்னு சொல்லும்போதுகூட எனக்கு இன்ட்ரஸ்ட் இருந்ததில்லை. ஹீரோயினியாக நடிக்கணும்ங்கிற ஆசை அப்போதே இல்லை. இருந்தாலும் எனக்கு 14 வயதிருக்கும் போது சினிமாவில் நடிக்க சில வாய்ப்புகள் வந்தது. கிளாமரா நடிக்கணும்ன்னு சொன் னாங்க. முடியாதுன்னு சொல்லிட்டேன். படத்தில கூட கிளாமரா நடிக்க வேண் டாம். பப்ளிசிட்டிக்காக கிளாமரா போஸ் மட்டும் கொடுங்கன்னாங்க. உறுதியா மறுத்திட்டேன். சினிமா வாழ்க்கையை விட நிஜ வாழ்க்கை முக்கியமானது. ஹீரோயினாக நடிக்கணும்ன்னு நான் ஆசை படலை. பிறகு எப்படி சினிமாவில் ஹீரோயினா நடிக்கலையேன்னு வருத்தப்படுவேன் சொல்லுங்க.

    * சினிமாவில் ஹீரோயினா நடிக்க மாட்டேன் என்று மறுத்த நீங்கள், சீரியலில் மட் டும் நடிக்க ஒப்புக்கொண்டது ஏதும் நிர்பந்தமா?

    நிர்பந்தமெல்லாம் ஏதுமில்லை. ஏ.வி.எம்.., நிறுவனத்தின் ஐம்பதாம் ஆண்டுவிழாவுல சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருது எனக்கும், எனது அண்ணன் சுரேஷிற்கும் கிடைச்சது. அப்போது அவுங்க தயாரிச்ச "ஒரு பெண்ணின் கதை' சீரியலுக்கு 14 வயசுள்ள பெண் தேடிட்டிருந்தாங்க. என்னை பார்த்ததும் நடிக்க அழைச்சாங்க. கதையும் பிடிச்சிருந்தது. சரின்னு சொல்லிட்டு செஞ்சேன். தமிழ், மலையாளம், தெலுங்கு என சீரியல்களில் நான் நினைச்ச மாதிரி நிறைய வாய்ப்புகள் வந்தன. என்னோட கேரக்டர் நல்லபடியா எனக்கு பிடிச்ச மாதிரி அமைஞ்சதால நடிச்சேன். என்னை பார்ப்பவர்கள் மரியாதையாக பழகுறாங்க. அவுங்க குடும்பத்தில ஒருத்தங்க மாதிரி சினேகம் பாராட்டுறாங்க. சமீபத்தில ஒரு பாட்டி என்னை சந்திச்சப்ப கன்னத்தில முத்தமிட்டு வாழ்த்தினாங்க. சந்தோஷமாயிருந்தது.

    * வாழ்க்கை நன்றாக அமைய வழி கேட்டால், <உங்கள் பதில் என்னவாக இருக்கும்?

    நம்ம லைப் நம்ம கை யில இருக்கு. நாம எப்படி செயல்படுறோமோ அப்படித்தான் லைப் இருக்கும். தேவையில்லாத விஷயங்களை செஞ்சிட்டு, கோவிலுக்கு விடாம போறேன்; எனக்கு இப்படியெல்லாம் பிரச்னை வருதேன்னு சொன்னா எப்படி? நாம நினைச்சது நடக்கணும்ங்கிறதுக்காக எதை வேண்டுமானாலும் செய்துடலாம்ன்னு நினைச்சிடக் கூடாது. எதைச் செய்தாலும் யோசித்து செய்யணும். இருக்கும் "பாசிட்'டிவான சூழ் நிலைகளை பயன் படுத்திக்கிட ஆசைப்பட்டு "நெகட்டி'வான வேலைகள்ல இறங்கிடக் கூடாது. நமக்கு என்ன லிமிட்டோ அத்தோடு நின்னுக்கணும். இந்த நினைப்போடு எந்த வேலைக்கு போனாலும் பிரச்னை ஏதும் வராது. வந்தாலும் தைரியமா நின்னு ஜெயிக்கலாம்ன்னு தைரியம் தன்னால வரும்,'' என்று பொறுப்பாக சொன்ன சுஜிதா தெலுங்கு சீரியலில் நடிப்பதற்காக ஐதராபாத் செல்ல விமானம் பிடிக்க மீனம்பாக்கத்திற்கு காரில் பறந்தார்.
    "அன்பே சிவம்.

  8. #37
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    MANORAMA TO RECEIVE A DOCTORATE FROM CALIFORNIA UNIVERSITY.

    at hxxp://films-channels.blogspot.com/2007/11/manorama-to-receive-doctorate-from.html

    replace xx=tt

  9. #38
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    சொர்ணாவின் பதில்கள்..

    எதிலும் எச்சரிக்கையா இறங்கினா நம்மோட முயற்சிக்கு நல்ல முடிவு கிடைக்காமல் போகாது! : சொர்ணா


    ""தாய்மனசு துவங்கி சந்திரமுகி வரை நுõற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சொர்ணா சீரியல் பக்கம் வந்திருக்கிறார். பாலசந்தரின் தேன்மொழியாள் சீரியலில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கிறார். திருமணம் செய்து கொண்டு கணவருடன் அமெரிக்காவில் குடியேற நினைத்த சொர்ணாவுக்கு விசா கிடைக்க தாமதம் ஆனதால் மீண்டும் நடிக்க வந்ததாக கூறினார். சொர்ணாவின் பேட்டி:

    * திருமணம் செய்து கொண்டு அமெரிக்கா சென்றுவிட்டீர்கள் என்றார்கள். திரும்ப நடிக்க வந்திருக்கீங்களே?

    அமெரிக்காவுல பிலடெல்பியாவுல என்னோட கணவர் சாப்ட்வேர் பிசினஸ் பண்ணிட்டிருக்கார். திருமணம் முடிஞ்சதும் விசா கிடைக்க கொஞ்சம் தாமதமாச்சு. இந்தியாவிலேயே இரு. எல்லாம் சரி பண்ணிட்டு வந்து அழைச்சிட்டு போறேன்னார். இங்கே இருக்கும்போது நடிக்க உனக்கு விருப்பம் இருந்தால் படமோ, சீரியலோ எதிலும் நடிக்கலாம்ன்னும் சம்மதம் சொன்னார். அப்பத்தான் பாலசந்தரின் தயாரிப்பில் தேன்மொழியாள் சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்தது. நடிச்சிட்டிருக்கேன். மே மாதம் அமெரிக்கா போயிடுவேன்.

    * சந்திரமுகியில் நடிக்க மறுத்ததாக பேசப் பட்டதே?

    சந்திரமுகி படத்தின் டைரக்டர் வாசு என்னை நடிக்க அழைச்சப்ப அந்தப் படத்தில ரஜினிகூட பிரபலமானவங்க நிறைய பேர் நடிக்கிறதா கேள்விப்பட்டிருந்தேன். நமக்கு என்ன கேரக்டர் கிடைக்கப்போகுது. ஏதும் துக்கடா கேரக்டராக அமைந்துவிட்டால் திருப்தியா ஒர்க் பண்ண முடியாதுன்னு நினைச்சுதான் தவிர்த்தேன். நல்ல கேரக்டர். ரஜினியோட நடிக்கிறே. ரஜினி உன்னோட அழகை வர்ணிக்கிற மாதிரியெல்லாம் சீன். கலகலப்பா, காமெடியா வச்சுருக்கேன்னார். சரின்னு சொல்லிட்டு நடிச்சேன். வடிவேல் எனக்காக அடிக்கிற லூட்டி, ரஜினி பேசற கலகலப்பான வசனங்கள்ன்னு நாங்கள் சம்பந்தப்பட்ட சீன்கள் ரொம்ப நல்லா வந்திருந்தது. சந்திரமுகியில நடிக்காம விட்டிருந்தால் இப்படி ஒரு நல்ல வாய்ப்பை நழுவ விட்டுட்டோமேன்னு மனசுல வருத்தம் இருந்திட்டிருக்கும். ரஜினியுடனும், வடிவேலுவுடனும் நடிச்சது சந்தோஷமாயிருக்கு.

    * சீனில் ரஜினி நடிப்பு ஏதும் சொல்லிக் கொடுத்தாரா?

    முதல் நாள் ஷூட்டிங்ல இருந்தப்ப ரஜினி பேசுவாரோ, மாட்டாரோன்னு நினைச்சிட்டிருந்தேன். நான் இருந்த பக்கமா போனவர் என்னை பார்த்ததும் அவராகவே என்னோடு பேசினார். அவர் பேசியதும் அவரோடு நானும் பேசினேன். அவரோட எளிமை, தொழில் பக்திதான் அவரை இந்தளவிற்கு உயர்த்தியிருக்கும்ன்னு நினைச்சுக்கிட்டேன். ரஜினி, வடிவேல், நான் சம்பந்தப்பட்ட காபினேஷன் சீன்களில் ரஜினியின் காமெடி நடிப்பு ஷூட்டிங் ஸ்பாட்ல இருந்தவங்களை எல்லாம் கலகலன்னு சிரிக்க வச்சது.

    * பெண்கள் துணிச்சலா செயல் பட?

    அவுங்கமேல அவுங்களுக்கு முதலில் நம்பிக்கை இருக்கணும். நம்ம வாழ்க்கையை நாமதான் நிர்ணயிக்கணும். எதை செய்தாலும் யோசித்து செய்யணும். நம்மோட முயற்சிக்கு பலன் கிடைக் குமா, அது சரியான முயற்சிதானான்னு முடிவு செஞ்சிடணும். விருப்பமில்லாம எதையாவது செய்து பாதிக் கிணறு தாண்டிவிட்டு மீதி கிணறு தாண்ட முடியாம போனா ஆபத்து தானுங்கிறதை முன்கூட்டியே முடிவு செஞ்சிட்டு, எதிலும் எச்சரிக்கையா இறங்கினா நம்மோட முயற்சிக்கு நல்ல முடிவு கிடைக்காமல் போகாது.

    * ஓட்டல்களில் தங்கினால் பிரச்னை வந்துவிடும் என்று நடிகைகள் பயப்படறாங்களே?

    மனுஷங்க வாழ்க்கையில எதில்தான் பிரச்னையில்லை. எல்லாம் நாம நடந்துக்கிற விதத்திலிருக்கு. கவனமாயிருந்தா சிக்கல் எப்படி வரும். ஏதோ ஒரு ஓட்டலில் பிரச்னை என்றால் எல்லா ஓட்டலும் அப்படித்தான்னு சொல்ல முடியுமா? மனுஷங்களை பார்க்கும் போதே அவுங்க எப்படிப்பட்டவங்க, நாம எப்படி நடந்துக்கிட்டா பாதிப்பு வராதுன்னு நாம முடிவு பண்ணி எச்சரிக்கையா நடந்துக் கிட்டா மீறி எதுவும் நடக்காது. என்று சொன்ன சொர்ணாவை, உதவி இயக்குனர் "நீங்க நடிக்க வேண்டிய சீன் ஸ்டார்ட் பண்ணிட்டோம்' என்று அழைக்க ஷூட்டிங்' புளோருக்கு பறந்தார்.


  10. #39
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    Quote Originally Posted by aanaa
    [tscii][size=18]சொர்ணாவின் பதில்கள்.. திருமணம் செய்து கொண்டு கணவருடன் அமெரிக்காவில் குடியேற நினைத்த சொர்ணாவுக்கு விசா கிடைக்க தாமதம் ஆனதால்


    Quote Originally Posted by aanaa
    [tscii][size=18] அமெரிக்காவுல பிலடெல்பியாவுல என்னோட கணவர் சாப்ட்வேர் பிசினஸ் பண்ணிட்டிருக்கார். திருமணம் முடிஞ்சதும் விசா கிடைக்க கொஞ்சம் தாமதமாச்சு. இந்தியாவிலேயே இரு. எல்லாம் சரி பண்ணிட்டு வந்து அழைச்சிட்டு போறேன்னார். இங்கே இருக்கும்போது நடிக்க உனக்கு விருப்பம் இருந்தால் படமோ, சீரியலோ எதிலும் நடிக்கலாம்ன்னும் சம்மதம் சொன்னார்.
    Whatever may be...
    but aangalai thittuvatharku mattum marandhudaatheenga madam

    Quote Originally Posted by aanaa
    [tscii][size=18] மே மாதம் அமெரிக்கா போயிடுவேன்.


    Quote Originally Posted by aanaa
    * பெண்கள் துணிச்சலா செயல் பட?

    அவுங்கமேல அவுங்களுக்கு முதலில் நம்பிக்கை இருக்கணும். நம்ம வாழ்க்கையை நாமதான் நிர்ணயிக்கணும். எதை செய்தாலும் யோசித்து செய்யணும். நம்மோட முயற்சிக்கு பலன் கிடைக் குமா, அது சரியான முயற்சிதானான்னு முடிவு செஞ்சிடணும். விருப்பமில்லாம எதையாவது செய்து பாதிக் கிணறு தாண்டிவிட்டு மீதி கிணறு தாண்ட முடியாம போனா ஆபத்து தானுங்கிறதை முன்கூட்டியே முடிவு செஞ்சிட்டு, எதிலும் எச்சரிக்கையா இறங்கினா
    advice........

  11. #40
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    PREETHA (RAGAV)

    பிரீத்தாவின் கருத்துக்கள் அதிரடியாய் சிந்திக்க வைக்கின்றன. அவருடைய செயல்கள் இளம் பெண்களை சிலிர்க்க வைக்கின்றன.

    "கணவர் எவ்வளவு பிரபலமானவராக இருந்தாலும், அவர் எவ்வளவு சம்பாதிக்கிறவராக இருந் தாலும் அவரால்தான் நாம் வாழ்கிறோம் என்ற நிலை ஏற்பட்டுவிடக்கூடாது. நாம் யார் என்று தெரியவேண்டும். நமது நிழலில் அவர் இருக்க விரும்புவதில்லை. அதுபோல் அவருடைய நிழ லிலும் நாம் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.


    பிரபலமான இரண்டு பேர் வாழ்க்கையில் இணையும்போது ஒருவரிடம் இருக்கும் குறை, இன் னொருவரால் களையப்பட வேண்டும். அன்பால் ஒருவரை ஒருவர் மெருகேற்றிக்கொண்டே இருக்க வேண்டும். நான் திருமணத்திற்கு பிறகு ஒன்றரை வருடங்கள் அமெரிக்காவில் தங்கி யிருந்து படித்தேன். இங்கு என் கணவர் தனியாக இருந்தார். அங்கு நான் தனியாக இருந்தேன். ஒருவரை ஒருவர் நம்பினோம். அந்த நம்பிக்கை எல்லா நேரமும், எல்லா கணவன்- மனை விக்குள்ளும் இருக்கவேண்டும். அந்த நம்பிக்கையே கல்யாணத்திற்கு பிறகும் காதலை வளர்க் கும்...''-என்பது பிரித்தாவின் அழுத்தமான கருத்து.

    28 வயதான இவருடைய செயல்வேகம் பிரமிக்க வைக்கிறது. பிரபல தகவல் தொழில் நுட்ப நிறுவனம் ஒன்றில் புரோகிராம் மேனேஜர் வேலை. வருடத்திற்கு பல லட்சங்கள் சம்பளம். கூடவே மனித வள மேம்பாடு தொடர்புடைய துறைகளின் பயிற்சியாளர். நடிகை, பாடகி, நடன கலைஞர், உள்அறை அலங்கார நிபுணர்... இப்படி பல முகங்கள். அதிகாலை முதல் இரவு வரை பரபரப்பாக இயங்கும் இவருடைய வேகத்தைப் பார்த்தால், `எப்போதான் ரெஸ்ட் எடுப்பீங்க?' என்று கேட்கத் தோன்றுகிறது.

    இவர் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவதற்கு என்ன காரணம்!

    "நான் பிறந்த மூன்றாவது மாதத்திலே பெற்றோருடன் மஸ்கட் நாட்டிற்கு சென்றுவிட்டேன். பன்னிரெண்டாம் வகுப்புவரை அங்கு தான் படித்தேன். அங்கு எல்லோரும் வசதியானவர்கள். எல்லா வீடு களிலும் எல்லாமும் இருக்கும். அதனால் அங்கு வாழ்க்கையோடு போட்டிபோடும் நிலை இருந்ததில்லை. அங்கு உலகில் உள்ள பல்வேறு நாட்டு மக்களை சந்திக்க முடிந்தது. அவர்களது கலாசாரம், வாழ்க்கைமுறை எல்லாவற்றையும் உணர்ந்து, என்னை நானே மேம் படுதிக்கொண்டேன்''

    கல்லூரி படிப்பிற்காக சென்னைக்கு வந்த பின்பு இங்கு கிடைத்த அனுபவம் எப்படி இருந்தது?

    "நான் மஸ்கட்டில் ஆண்களோடு சேர்ந்துதான் படித்தேன். இங்கு எத்திராஜ் பெண்கள் கல் லூரியில் டிராவல் மேனேஜ்மென்ட்டில் சேர்ந்தேன். இந்த கல்வி எனக்கு நன்றாகப் பிடித்திருந்தது. ஏனென்றால் பள்ளிக்காலத்திலே நான் 20 நாடுகளுக்கு சென்றிருந்தேன். ஒவ்வொரு நாட்டு மக்களுக்கும் எது பிடிக்கும் என்பதைவிட, எது பிடிக்காது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டியது மிக அவசியம். அரபு நாடுகளில் மற்றவர்கள் முன்னால் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது அவர்கள் முகத்திற்கு நேராக நம் பாதங்கள் இருக்கும்படி காலுக்கு மேல் கால் போட்டுக் கொள்ளக்கூடாது. அமெரிக்காவில் உள்ளவர்களிடம் பேசிக்கொண்டிருக்கும் போது, கண்ணோடு கண் பார்த்து பேசவேண்டும். பிரான்சில் உள்ளவர்களை சந்திக்க சென்றால் உடை மிக நேர்த்தியாக இருக்க வேண்டும். கசங்கிப்போன சட்டையைப் போட்டுக்கொண்டு சென்றால் அவர்கள் மரியாதையே தரமாட்டார்கள். ஜெர்மனி மக்களிடம் நேரந்தவறாமையை கடைபிடிக்க வேண்டும். இப்படி பல விஷயங்கள் இருக்கின்றன. டிராவல் மேனேஜ்மென்ட் படிப்பு என்னை மேலும் மெருகேற்றிக்கொள்ள உதவியது.

    அதன் பின்பு அரும்பாக்கம் வைஷ்ணவா கல்லூரியில் `மாஸ்டர் இன் சோஷியல் ஒர்க்' படித்தேன். அது எம்.பி.ஏ. படிப்பை போன்றது. அங்கு படிக்கும் போதே எனக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்தது. படிப்பிலும் தங்கபதக்கம் பெற்றேன். அப்போதே நான் டி.வி. நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டதால் நானும், ராகவ்வும் சந்தித்தோம். காலப் போக்கில் காதலிக்கவும் தொடங்கினோம்''

    ஒருவரை இன்னொருவர் ஈர்க்க என்ன காரணம்?

    "நாங்க இரண்டு பேருமே தமிழ். அவர் `பிளஸ்-டூ'வில் மாநில சாதனை படைத்தவர். அண்ணா பல்கலைக்கழகத்தில் கம்ப்ïட்டர் சயின்ஸ் பாடத்தில் தங்கப் பதக்கம் பெற்ற வர். அவரும் வெளிநாட்டில் படித்தவர். எங்கள் குடும்பமும் படிப்பில் சிறந்தது. எங்கள் இருவருக்குமே இசை பிடிக்கும். ஆனாலும் எங்களில் யாருக்கு என்ன சுதந்திரம் தேவை என்பதைப் பற்றி நாங்கள் நிறையப் பேசி முடிவுசெய்தோம். எங்கள் காதல் இரு வீட்டாருக்கும் தெரிந்ததும் நிச்சயதார்த்தம் செய்தார்கள். ஒரு வருடம் கழித்து தான் திருமணம் செய்து கொண்டோம்''

    நிச்சயதார்த்தத்திற்கும்- திருமணத்திற்கும் ஒரு வருட இடைவெளியா? அந்த நாட்கள் ரொம்ப சுவாரஸ்யமாக இருந்திருக்குமே?

    "அது ரொம்ப ஜாலியான வாழ்க்கை. அவருடைய குடும்பத்தினர் மேற்கிந்தியதீவுகளில் வசிக்கிறார்கள். என் பெற்றோரும் நிச்சயதார்த்தம் முடிந்ததும் சுதந்திரமாக விட்டு விட்டார்கள். அதனால் அவருடைய நண்பர்கள் இருபது பேரோடு மூணாறு சுற்றுலா சென்றோம். எதிர்ப்பும், அதிக கட்டுப்பாடும் இருந்தால்தான் நமக்கும் வம்பு பண்ணத்தோன்றும். எங்களுக்கு கிடைத்த சுதந்திரத்தை எல்லைமீறாமல் அனுபவித்தோம்''

    திருமணத்திற்குப் பிறகு அமெரிக்காவிற்கு படிக்கச் சென்ற அனுபவம் எப்படி இருந்தது?

    "ஒன்றரை வருடம் அமெரிக்காவில் தங்கியிருந்து `கம்ïனிகேஷன் ஸ்டடீஸ்' பயின்றேன். இன்று நான் பல்வேறு துறைகளில் பயிற்சியளிப்பதற்கு அமெரிக்காவில் கிடைத்த கல்வி உறுதுணையாக இருந்தது''

    சர்வதேச அளவில் பெரும்பாலான நிறுவனங்களில் அழகாக இருக்கும் பெண்களுக்கு அதிக சம்பளம் கொடுக்கிறார்களாமே?

    "மார்க்கெட்டிங் மற்றும் மக்கள் தொடர்பு துறையில் அழகான பெண்களுக்கு அந்த மாதிரியான வாய்ப்புகள் கிடைக்கலாம். ஆனால் அழகோடு சேர்த்து அறிவையும் பெற்ற பெண்களால் மட்டுமே வாழ்க்கையில் நிறைய சாதிக்க முடியும். நான் அப்படித்தான்''

    நீங்கள் தகவல் தொழில் நுட்பத்துறையில் நிறைய சம்பாதிக்கிறீர்கள். ஆனால், அந்த துறையில் இருக்கும் பெண்கள் உடல்- மன பிரச்சினைகளால் பெருமளவு பாதிக்கப்படுகிறார்களே?

    "உண்மைதான். மற்ற துறைகளில் நாற்பது வருடங்கள் உழைக்க முடிந்தால் இந்த துறையில் 20 வருடங்கள்தான் உழைக்க முடியும். ஆனால் நான் உடற்பயிற்சி, மனப் பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு போன்றவைகளை கடைபிடிக்கிறேன். அதனால் நான் உற்சாகமாக இருக்கிறேன். நானும், என் கணவரும் தினமும் ஜிம்முக்கு போய்விடுகிறோம். சேர்ந்து நடனமும் ஆடுகிறோம்.''

    நீங்கள் என்ன மாதிரியான பயிற்சிகளை வழங்குகிறீர்கள்?

    "இன்று தனி மனித மேம்பாட்டிற்காகவும், உழைக்கும் ஆற்றலை அதிகரிப்பதற்காகவும் `டீம் ஸ்பிரிட்' எனப்படும் குழுவாக இணைந்து செயல்படும் தன்மை மிக முக்கியம். அந்த இயல்பை உருவாக்குவதற்கான பயிற்சியை நான் வழங்குகிறேன். இதனால் நிறுவனங்களில் உள்ள பணி யாளர்களிடையே இடைவெளியும், போட்டி மனப்பான்மையும் குறைந்து நெருக்கம் ஏற்படும். `மோட்டிவேஷன்' `கிராஸ் கல்ச்சர்' `கம்ïனிகேஷன்' போன்ற பலவிதமான மனிதவள மேம்பாட்டு பயிற்சிகளை கொடுக்கிறேன்''

    இப்போது பல்வேறு துறைகளில் கவனம் செலுத்தும் நீங் கள் எதிர்காலத்தில் எந்த துறையில் நிலைக்க விரும்பு கிறீர்கள்?

    "எனக்கு ரொம்ப பிடித்தது நடனம், நடிப்பு, சமையல். எதிர்காலத்தில் உள்ளறை அலங்கார கலையிலும் ஈடுபடு வேன். என் வீட்டைப் பாருங்கள். இங்கிருக்கும் ஒவ்வொரு அலங்காரமும் என் கைவண்ணம்தான். வாழ்க்கை ரொம்ப அழகானது. நாம் வீட்டை அலங்காரம் செய்து ரசிப்பது போல், வாழ்க்கையையும் நன்றாக ரசித்து அனுபவிக்க வேண்டும். பலரும் தங்கள் வீடுகளில் குறிப்பிட்ட அறை களைத்தான் ரசனையாக அலங்காரம் செய்கிறார்கள். டாய் லெட், பாத்ரூம், சமையல்அறை போன்றவைகளை கண்டு கொள்ளாமலே விட்டுவிடுகிறார்கள். நமது உடலில் எல்லா உறுப்புகளையும் சுத்தமாகவும், அழகாகவும் வைத்திருப்பது போல் வீட்டிலும் எல்லா இடங்களையும் சுத்தமாகவும், உள் ளறை அலங்காரத்துடனும் வைத்திருக்க வேண்டும்.''

    ராகவ் சினிமாக்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு இளம் ரசிகைகள் இருப்பார்கள். அதனால் உங்களுக்கு ஏதாவது நெருக்கடிகள்?

    "ஒரு நடிகர் பிரபலமாக வேண்டும் என்றால் இளம் பெண்களின் ஆதரவு தேவை. நடிப்பை ரசிப்பதோடு அவர்கள் நிறுத்திக்கொண்டால் மகிழ்ச்சி. நேரடியாக தேவையில்லாமல் `வழிந்தால்', `ஏம்மா அவருக்கு கல்யாணம் ஆயிடுச்சு. நான்தான் மனைவி. எங்களுக்கு குழந்தைகூட இருக் குது' என்று நேரடியாகவே நறுக்கென சொல்லிவிடுவேன். இந்த மாதிரி பேசும்போது மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்றெல்லாம் நான் சிந்திப்பதில்லை''

    நீங்களும் நடிக்கிறீர்கள். நடனமாடுகிறீர்கள். அழகாகவும் இருக்கிறீர்கள். உங்களிடம் யாராவது வழிந்தால் ராகவ் என்ன செய்வார்?

    "நம்ம ஊரு பெண்களுக்கு பொது இடங்களில் என்ன மாதிரி பிரச்சினைகள் வரும் என்பது எனக்குத்தெரியும். அதனால் நான் எந்த ஆணும் நெருங்கும் அளவிற்கு விடமாட்டேன். இங்குள்ள ஆண்களும், பெண்களுக்கு மரியாதை தருவதில் குறைந்தவர்கள் இல்லையே..!''

    பிரீத்தாவின் பெற்றோர்: சுப்பிரமணியம்- உஷா. இவருடைய சகோதரர் கணேஷ் அமெரிக்காவில் வேலை பார்க்கிறார். பிரீத்தாவும், கணேசும் இரட்டையர்கள். பிரீத்தா- ராகவ் தம்பதிகளுக்கு தனிஷா என்ற குழந்தை உள்ளது.


Page 4 of 46 FirstFirst ... 2345614 ... LastLast

Similar Threads

  1. IR concerts, TV shows and Interviews ...
    By Sanjeevi in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 355
    Last Post: 2nd June 2018, 06:26 AM
  2. Sharing-IR's music-interviews-BgmClips- in web
    By rajasaranam in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 860
    Last Post: 2nd October 2012, 12:43 AM
  3. Talented TV artists
    By swathy in forum TV,TV Serials and Radio
    Replies: 20
    Last Post: 21st March 2010, 10:13 PM
  4. Artists and their best emotions
    By Shakthiprabha. in forum Tamil Films
    Replies: 167
    Last Post: 22nd May 2007, 08:41 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •