Page 39 of 46 FirstFirst ... 293738394041 ... LastLast
Results 381 to 390 of 453

Thread: INTERVIEWS With TV Artists

  1. #381
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    மணிமேகலைக்கு சிறந்த தொகுப்பாளினி விருது


    மியூசிக் சேனலின் நட்சத்திர தொகுப்பாளினி மணிமேகலை. பாட்டு கேட்பதற்காக போன் பண்ணுகிறார்களோ இல்லையோ இவருடன் பேசுவதற்காக போன் பண்ணி பாட்டு கேட்கிற இளவட்டங்கள் அதிகம். இவர் பெயரில் பேன் கிளப்பே இருக்கிறது. தற்போது மணிமேகலைக்கு வேர்ல்ட் இண்டக்ரேஷன் கவுன்சில் என்ற அமைப்பு சிறந்த தொகுப்பாளினி விருதை வழங்கி இருக்கிறது. இந்த அமைப்பு நடத்திய விழாவில் கவர்னர் ரோசய்யா இந்த விருதை மணிமேகலைக்கு வழங்கினார்.


    இதுகுறித்து மணிமேகலை கூறியிருப்பதாவது:
    பள்ளிப் படிப்பை முடித்து விட்டு கல்லூரிக்குள் நுழையும்போதே மீடியாவிற்குள்ளும் வந்து விட்டேன். முதல் பணியே தொகுப்பாளினி தான். இந்த வேலை எனக்கு பிடித்து விட்டதால் வேறு பணி பற்றி யோசிக்காமல் இதில் தொடர்கிறேன். படித்துக் கொண்டே தொகுப்பாளியாக இருக்க வீட்டிலும் சுதந்திரம் அளித்திருக்கிறார்கள். அந்த சுதந்திரம்தான் என்னை சிறந்த தொகுப்பாளினி விருது வரைக்கும் கொண்டு வந்திருக்கிறது. தொடர்ந்து மகிழ்ச்சியோடு எனது பணியை தொடர்கிறேன் என்கிறார் மணிமேகலை.


    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #382
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    சீரியல் இயக்குனராகிறார் சுபத்ரா


    தேவதை, கைராசி குடும்பம் தொடர்களில் நடித்து புகழ் பெற்றவர் சுபத்ரா. கைராசி குடும்பத்தில் அண்ணி கேரக்டரில் அசத்திக் கொண்டிருக்கிறார். விரைவில் தனது அடுத்த அவதாரத்தை எடுக்க இருக்கிறார். அது எழுத்தாளர் அவதாரம் மற்றும் இயக்குனர் அவதாரம்


    "எனக்கு விருப்பமானது நடிப்பா, எழுத்தா என்ற கேட்டால் எழுத்து என்று தான் சொல்வேன். பெரிய எழுத்தாளராக வேண்டும் என்பது தான் என் ஆசையாக இருந்தது. நிறைய கதை, கவிதைகள் எழுதியிருக்கிறேன். ஆனால் எதிர்பாராதவிதமாக நடிகையாகிவிட்டேன். கடைசிவரை நடிகையாகவே இருக்க விருப்பம் இல்லை. இதனால் விரைவில் அடுத்த துறைக்கு செல்ல இருக்கிறேன். சீரியலுக்கென்று சில கதைகள் எழுதி வைத்திருக்கிறேன். அவற்றை முழுமைப்படுத்தும் பணியில் தீவிரமாக இருக்கிறேன். என் கதையை நானே இயக்குவேன். எந்த சேனல், என்ன கதை என்பதை விரைவில் அறிவிக்கிறேன் என்கிறார் சுபத்ரா. அழகான பொண்ணு சீரியல் இயக்கினா சீரியலும் அழகாத்தான் இருக்கும்.

    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  4. #383
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like



    தல கூட நடிக்க ஆசை - மனம் திறக்கிறார் நடிகை ரக்ஷிதா


    சின்னத்திரையில் வர்ண ஜாலம் காட்டி ரசிகர்களை தன் வசமாக்கியவர். சரவணன் மீனாட்சி தொடர் மூலம் உலகம் முழுவதும் தமிழ் ரசிகர்களை தனது காந்தக் கண்களால் கட்டிப்போட்டவர் நடிகை ரக் ஷிதா. கள்ளம் இல்லா வெள்ளை மனம் கொண்ட கலகலப்பான பேச்சால் அனைவரையும் கவர்ந்தவர். வானத்து மின்னலாய் வர்ண ஜாலம் காட்டிய ரக் ஷிதாவின் மனம் திறந்த வார்த்தைகள்.


    * பிறந்தது..வளர்ந்தது..படித்தது..
    பெங்களூருவில் பிறந்தேன். வீட்டிற்கு ஒரே பெண். பள்ளி படிப்பு, கல்லுாரி படிப்பு எல்லாம் சொந்த ஊரில் தான். மாஸ் கம்யூனிகேசன் படித்துள்ளேன்.


    * நடிப்பதற்கு வந்தது எப்படி?
    படித்து முடித்தபின் பெங்களூருவில் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றினேன். எனது நிகழ்ச்சிகளை பார்த்து தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம் என பத்து தொடர்களில் நடித்துள்ளேன். தமிழில் உப்பு கருவாடு என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளேன்.


    * தமிழ் சரளமாக பேசுவதன் ரகசியம்?
    அடிப்படையில் எனக்கு தமிழ் மொழி ரொம்ப பிடிக்கும். சென்னையில் வந்த பின், பிரிவோம் சந்திப்போம் தொடரில் நடித்த பின் தமிழ் மீது அதிக காதல் ஏற்பட்டது. அதனால், முறையாக எழுதப் படிக்க கற்றுக்கொண்டேன். தொலைக்காட்சி தொடர்களில் நடித்த அனுபவம் பிரிவோம் சந்திப்போம், இளவரசி, மசாலா குடும்பம், தற்போது மிகப்பெரிய வெற்றி தந்த சரவணன் மீனாட்சி தொடர் எல்லா மக்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


    * எந்த நடிகருடன் நடிக்க ஆசை?
    தல(அஜித்) கூட நடிக்க ஆசை. இந்த நீண்ட நாள் கனவு நிறைவேற வேண்டும். கமல் சார் நடிப்பு ரொம்ப பிடிக்கும்.


    * பிடித்த நடிகை
    நயன்தாராவை ரொம்ப பிடிக்கும். எந்த விஷயத்திலும் அவர் தைரியமாக செயல்படுவார். அடுத்து நடிகை அனுஷ்காவை பிடிக்கும்.


    * காதல் பற்றிய கருத்து...
    பிரிவோம் சந்திப்போம் தொடரில் நடித்த போது, தினேஷ் உடன் காதல் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொண்டோம். காதலுக்கு நம்பிக்கை அவசியம். அது இருந்தால் அந்தகாதல் நிச்சயம் வெற்றி பெறும்.


    * நடிகைகள் கவர்ச்சியாக நடிப்பது அவசியமா?
    நிச்சயமாக கவர்ச்சி தேவையில்லை. அந்த காலத்து திரைப்படங்களில் கவர்ச்சி இல்லையே. அந்த படங்கள் வெற்றி பெறவில்லையா. 20 ஆண்டுகளுக்கு முன் நான் பிறந்திருந்தால் சரோஜாதேவி இடத்தை பிடித்திருப்பேன்.


    * எதிர்கால திட்டம்? பிடித்த நாடு
    பொதுவாக ஊர் சுற்ற பிடிக்கும். மொரிஷியஸ் ரொம்ப பிடிக்கும். ஆட்கள் நடமாட்டம் இல்லாத காட்டில் ஒரு குளிர்ச்சியான கிராமத்தில் மரங்கள் அடர்ந்த காட்டின் நடுவே தனியாக ஒரு பெரிய வீட்டை கட்டி, சுற்றிலும் இயற்கை விவசாய தோட்டம் அமைத்து வாழ ஆசை.


    * தமிழ் ரசிகர்கள் எப்படி
    என்னவென்று சொல்வேன். எனக்கு தமிழ்நாட்டு மருமகள் என்று பட்டம் கொடுத்தவர்கள். தமிழ் ரசிகர்களைப் போல வேறு யாரும் இருக்க முடியாது.


    * ரோல் மாடல்
    ரம்யா கிருஷ்ணன் தான் எனது ரோல் மாடல். அவரைப்போல அம்மன் வேடத்தில் யாரும் நடிக்க முடியாது. அவரைப் போல் அம்மன் வேடத்தில் நடிக்க வேண்டும், என்பது நீண்ட நாள் ஆசை.


    * அடுத்த சினிமா பிரவேசம் எப்போது
    இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் உப்புக்கருவாடு என்ற படத்தில் முதல் வாய்ப்பு கிடைத்தது. அவரது படத்தில் நடிக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். சரவணன் மீனாட்சி தொடரை பார்த்து விட்டு இந்த கேரக்டரில் நீ தான் நடிக்க வேண்டும், என்றார். அவரே என்னிடம்கதையை சொன்னார். அவரது படத்தில் நடிக்க ஆசை. சினிமா வாய்ப்புகள் வருகிறது. தொடரில் பிசியாக இருப்பதால் முடியவில்லை. திறமையான, நடிப்பிற்கு சவாலான ஒரு கதை உள்ள படத்தில் நடிக்க விரும்புகிறேன்.

    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  5. #384
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    மீண்டும் வருகிறார் காயத்ரி பிரியா


    காயத்ரி பிரியாவை நினைவிருக்கிறதா? ஆடுகிறான் கண்ணன், தீர்க்க சுமங்கலி என தமிழ் தொடர்களில் கலக்கியவர். புகழின் உச்சியில் இருந்தபோதே திருமணம் செய்து கொண்டு மலேசியாவில் செட்டிலாகிவிட்டார். கணவர் தனியார் வங்கி ஒன்றின் மலேசிய கிளையில் அதிகாரியாக பணியாற்றி வந்தார்.


    தற்போது காயத்ரி பிரியாவின் கணவருக்கு சென்னை மாறுதல் கிடைத்து சென்னைக்கு வந்து விட்டது குடும்பம். இதனால் மீண்டும் சின்னத்திரையில் நடிக்கும் முடிவுக்கு வந்திருக்கிறார். விரைவில் மலையாள தொடர் ஒன்றிலும், தமிழ் தொடர் ஒன்றிலும் நடிக்க இருக்கிறார்.


    "எல்லா பெண்களுக்கும் குடும்ப வாழ்க்கை மிகவும் முக்கியம். அதனால் கடந்த 4 ஆண்டுகள் குடும்பத்துக்காக ஒதுக்கி விட்டேன். பரபரவென நடித்து விட்டு மலேசியாவில் வீட்டுக்குள்ளேயே இருந்தது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. பின்னர் குழந்தைகள் வந்த பிறகு அது மறைந்து விட்டது. தற்போது சென்னைக்கு வந்து விட்டோம். மீண்டும் நடிக்க கணவரும் அனுமதி தந்து விட்டார். கதை கேட்டுக் கொண்டிருக்கிறேன். விரைவில் சின்னத்திரைக்கு வந்து விடுவேன்" என்கிறார் காயத்ரி பிரியா.

    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  6. #385
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    டூப் ஜோதிகா வேடம் பெரிய ரீச் கொடுத்து விட்டது! -வம்சம் பிரியங்கா பேட்டி


    பல தொடர்களில் பாசிட்டிவான வேடங்களில் நடித்தவர் பிரியங்கா. இவர் தற்போது ரம்யாகிருஷ்ணனின் வம்சம் தொடரில் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். அவர் நடிக்கும் ஜோதிகா என்ற வேடம் பாசிட்டீவ், நெகடீவ் என இரண்டு கோணங்களில் இடம்பெற்றுள்ளது. இதையடுத்து தற்போது சின்னத்திரையின் பரபரப்பு நடிகைகளில் பிரியங்காவும் ஒருவராகியிருக்கிறார்.


    இதுபற்றி பிரியங்கா அளித்த பேட்டியில், வம்சம் தொடர் எனது சின்னத்திரை கேரியரில் மிக முக்கியமானதாகியிருக்கிறது. முதலில் ஜோதிகா என்ற கேரக்டரில் அழுதுகொண்டேயிருந்த நான், இப்போது நெகடீவ் ஜோதிகாவாகவும் உருவெடுத்துள்ளேன். இந்த பழிவாங்கும் கேரக்டர் ரொம்ப திரில்லிங்காக போய்க்கொண்டிருக்கிறது. அதனால் சின்னத்திரையில் எனக்கு நிறைய நேயர்கள் கிடைத்து விட்டனர்.


    மேலும், சிலர் பாசிட்டீவ் வேடத்தை பெருமையாக சொல்ல, சிலர் நெகடீவ் வேடத்தைப்பற்றி குறிப்பிட்டு எப்படி இந்த அளவுக்கு மாறி நடிக்கிறீர்கள்? என்று கேட்கிறார்கள். ஆக என்னையும், எனது நடிப்பையும் கவனிக்கத் தொடங்கி விட்டார்கள். அதனால் இப்போது நானும் சீன் பை சீன் சிறப்பான நடிப்பை கொடுக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன். இப்போது வம்சம் தொடரில் ஆயிரமாவது எபிசோட் ஒளிபரப்பாகி வரும் நிலையில், எனது கேரக்டர் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக, டூப் ஜோதிகா வேடம் எனக்கு பெரிய ரீச் கொடுத்துள்ளது.


    >இந்த தொடரில் முதலில் என்னை இரட்டை வேடத்துக்கு கமிட் செய்தபோது இவரால் இந்த வேடத்தில் நடிக்க முடியுமா? என்று தயங்கினார்களாம். ஆனால் இப்போது எனது நடிப்பைப்பார்த்து விட்டு ரம்யாகிருஷ்ணன் மேடம் உள்பட அனைவருமே திருப்தியாக உள்ளனர். அதனால் அவர்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் இன்னும் நல்ல நடிப்பை வெளிப்படுத்த தயாராகிக்கொண்டிருக்கிறேன். இந்த நேரத்தில் எனக்கு மேலும் சில சீரியல்களில் முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு வருகிறது. ஆனால், வம்சம் சீரியலேயே மாதம் 20 நாட்களில் போய் விடுவதால் வேறு சீரியல்களில் கமிட்டாக முடியவில்லை என்கிறார் பிரியங்கா.

    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  7. #386
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like



    நான் எப்போதும் ஜாலி கேரக்டர் : சின்னத்திரை ஸ்ரித்திகா கலகல...


    சின்னத்திரையில் உயிரோட்டமான நடிப்பால் பெண்களின் மனதை கவர்ந்தவர் ஸ்ரித்திகா. மலேசிய தமிழ் பெண்ணான இவர் ஹோம்லி கேரக்டர்களில் அசத்தும் அழகு பதுமை. தொலைக்காட்சியில் குல தெய்வம் சீரியலில் அலமுவாக நடிக்கிறார்
    அவர் நம்மிடம்...


    பிறந்து, வளர்ந்ததெல்லாம் மலேசியாவில். சினிமாவில் நடிக்க சென்னை வந்தேன். முதலில் நான் தொகுப்பாளினியாக இருந்தேன். மதுரை டூ தேனி படத்தில் நாயகியாகவும், வேங்கை, வெண்ணிலா கபடிக்குழு போன்ற படங்களில் அழுத்தமான கதாபாத்திரங்களிலும் நடித்தேன்.


    அதே சமயத்தில் சின்னத்திரையிலும் வாய்ப்பு கிடைத்தது. நாதஸ்வரம் சீரியலில் மலர் கேரக்டர் தான் என்னை உயர்ந்த இடத்திற்கு கொண்டு சென்றது. இதற்கு இயக்குனர் திருமுருகனை தான் பாராட்ட வேண்டும்


    சின்னத்திரையில் நடிப்போரிடம் குடும்ப உறுப்பினர் போல் பழகுகிறேன். இதனால் தானோ என்னமோ எனது நடிப்பு இயல்பாக உள்ளது. சினிமாவிற்கும், சின்னத்திரைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. சினிமாவை பொறுமையாக எடுப்பர். சீரியல் அந்த மாதிரி எடுக்க முடியாது; எப்போதும் தயாராகவே இருக்க வேண்டும்.


    மொழி பெயர்ப்பு சீரியல் வந்தால் சின்னத்திரை ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். அவற்றிற்கு தடை விதிக்க வேண்டும். எனக்கு சாப்ட் கேரக்டர் தான் பொருத்தம் என, எல்லோரும் கூறுகின்றனர். நான் அனைத்து கதாபாத்திரங்களிலும் நடிக்க ஆசைப்படுகிறேன். இதற்கு எனது முகபாவம் சரியாக வருமா என்று தெரியவில்லை.


    நான் எப்போதும் ஜாலி கேரக்டர். சினிமா, சின்னத்திரை மட்டுமின்றி எந்த துறையாக இருந்தாலும் பெண்களுக்கு தொந்தரவு இருக்கும். நாம் எப்படி நடந்து கொள்கிறோமோ; அப்படியே ஆண்களும் பழகுவர். அனைத்து துறையிலும் பெண்கள் சாதிக்க வேண்டும் என்பது ஆசை. எங்களை போன்றோர் வெளியே செல்லும் போது முக்கியத்துவம் கிடைக்கிறது.


    சில நேரங்களில் தனித்துவம் பாதிக்கிறது. எனக்கு தகுந்த கேரக்டர் கிடைத்தால் சினிமாவிலும் நடிப்பேன். கவர்ச்சியாக நடிக்க மாட்டேன், என்றார்.

    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  8. #387
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    விஜய் டிவியில் வைசாலி!


    ஜெயா டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்தவர் வைசாலி. அதையடுத்து புதுயுகம் சேனலில் தொகுப்பாளராக இருந்தவர், கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடிகையானார். பின்னர், கலையரசன் நாயகனாக நடித்து வெளியான ராஜா மந்திரி படத்தில் காளி வெங்கட்டுக்கு ஜோடியாக நடித்தார். தொடர்ந்து சினிமாவில் நடிப்பதற்கு வைசாலி தயாராக இருந்தபோதும் அவர் எதிர்பார்த்தது மாதிரியான வேடங்கள் கிடைக்கவில்லை. அதனால் தற்போது மீண்டும் சின்னத்திரைக்கு வந்திருக்கிறார்.


    விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சினிமா சினிமா நிகழ்ச்சியில் தொகுப்பாளராகியிருக்கிறார். இந்த நிகழ்ச்சியை முதலில் காயத்ரி தொகுத்தளித்து வந்த நிலையில், தற்போது வைசாலி இடம்பெற்று வருகிறார். அடுத்தபடியாக சின்னத்திரையில் தொகுப்பாளினி, சீரியல் நடிகை என்று தொடர்ந்து பங்களிக்கப்போவதாக சொல்கிறார் வைசாலி.

    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  9. #388
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    பொறுப்பை உணர்ந்து நடிக்கிறேன்! -சீரியல் நாயகி அகிலா


    பொன்னூஞ்சல், சந்திரலேகா, தாமரை, என் இனிய தோழியே, தேவதை, ராமானுஜம் என பல மெகா சீரியல்களில் நடித்தவர் அகிலா. இதுவரை வித்தியாசமான பாசிட்டீவ், நெகடீவ் கலந்த வேடங்களில் நடித்து வந்தவர் பெரும்பாலும் செகண்ட் லீடாகவே நடித்து வந்தார். முதன்முறையாக ஷ்யாமளா என்ற தொடரில் டைட்டீல் வேடத்தில் நடிக்கிறார் அகிலா.


    இதுபற்றி தினமலர் இணையதளத்திற்கு அவர் அளித்த பேட்டியில், நான் நடிக்கும் சீரியல்களில் எனது கதாபாத்திரம் அந்த கதைக்கு முக்கியத்தும் வாய்ந் ததாக இருக்க வேண்டும் என்பதுதான் எனது எண்ணமாக இருக்கும். அப்படித் தான் இதுவரை நடித்து வந்துள்ளேன். ஆனால் எனக்கு செகண்ட் லீடு வேடங்க ளாகவே கிடைத்து வந்தன. அந்த வேடங்களில் நூறு சதவிகிதம் சிறப்பாக நடித்து வந்தேன். அப்படி எனது நடிப்பைப்பார்த்து விட்டுத்தான் இப்போது டிசம் பர் மாதம் முதல் ராஜ் டிவியில் ஒளிபரப்பாகும் ஷ்யாமளா தொடரில் எனக்கு டைட்டீல் வேடம் கிடைத்துள்ளது.


    இதனால் அந்த சீரியலில் அதிக உற்சாகத்துடன் நடித்து வருகிறேன். மேலும், மலேசிய லோக்கல் சேனலில் ஒளிபரப்பாகி வரும் பைரவபுரம் என்ற தொடரிலும் நடித்து வருகிறேன். திரில்லர் கதையில் அந்த தொடர் வெளியாகி வருகிறது என்று சொல்லும் அகிலா, இப்போது லீடு ரோலில் நடிக்கும் அளவுக்கு வளர்ந்திருப்பது சந்தோசமாக உள்ளது. அதேசமயம், அதிக பொறுப்பும் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. அதனால் அதை உணர்ந்து நடித்து வருகிறேன். இந்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக்கொண்டு நேயர்களின் மனதில் அழுத்தமாக பதிந்து விட வேண்டும் என்று இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறேன் என்கிறார்.

    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  10. #389
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    சீரியலுக்கு டைட்டில் சாங் பாடினார் கானா பாலா


    ஜீ தமிழ் சேனலில் விரைவில் டார்லிங் டார்லிங் என்ற தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது. இதற்கான டைட்டில் பாடலை கானா பாலா பாடியுள்ளார். ஜில் ஜங் ஜக் உள்பட பல படங்களுக்கு இசை அமைத்துள்ள விஷால் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார். "இக்கரைக்கு அக்கரை பச்சை... டார்லிங்... மைடியர் டார்லிங்..". என்ற டைட்டில் பாடலை பாடியுள்ளார் கானா பாலா.


    அட்டக்கத்தி படத்தின் மூலம் அறிமுகமான கானா பாலா. இதுவரை 100க்கும் மேற்பட்ட கானா பாடல்களை சினிமாவில் பாடியுள்ளார். எழுதியும் உள்ளார். சில பாடல் காட்சிகளில் நடித்தும் உள்ளார். தற்போது அவர் மார்க்கெட் கொஞ்சம் இறங்கு முகத்தில் உள்ளது. அதனால் கிடைக்கிற வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கிறார்.


    "சினிமாவில் என்னோட இடம் எப்போதும் இருக்கு. சென்னையில நான் மட்டும் கானா பாடகன் இல்லை. என்னை மாதிரி பலர் இருக்காங்க அவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கட்டுமே... நானே பலபேருக்கு சிபாரிசு பண்ணியிருக்கேன். டி.வியில பாடுனது வித்தியாசமான அனுபவமா இருக்கு. தினமும் என்னோட பாட்டு எல்லோர் வீட்டிலேயும் கேட்குமே அதை நினைத்து சந்தோஷப்படுகிறேன்" என்கிறார் கானா பாலா.

    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  11. #390
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    மீண்டும் நேயர்கள் வரவேற்பு கொடுப்பார்கள்!- மிர்ச்சி செந்தில்


    விஜய் டிவியில் வெளியான சரவணன் மீனாட்சி தொடரில் நடித்தவர் மிர்ச்சி செந்தில். அந்த தொடரில் மீனாட்சியாக நடித்தவர் ஸ்ரீஜா. விஜய் டிவியில் ஒளிபரப்பான தொடர்களில் பெரிய அளவில் பேசப்பட்ட அந்த தொடரில் நடித்து வந்தபோது காதலில் விழுந்த செந்தில்-ஸ்ரீஜா இருவரும் பின்னர் திருமணம் செய்து கொண்டு தம்பதிகளாகி விட்டனர். அதன்பிறகும் சரவணன் மீனாட்சி 3வது சீசன் தொடர்ந்து கொண்டிருக்கிறது. என்றாலும், மிர்ச்சி செந்தில்-ஸ்ரீஜா நடித்தபோது இருந்த பரபரப்பு இப்போதைய சீசன்களில் இல்லை


    இந்நிலையில், மீண்டும் சரவணன் மீனாட்சி முதல் சீசனில் நடித்த மிர்ச்சி செந்தில்-ஸ்ரீஜாவை ஜோடி சேர்த்து மாப்பிள்ளை என்ற தொடர் தற்போது தயாராகி வருகிறது. நாளை முதல் அந்த தொடர் ஒளிபரப்பாக உள்ளது. மேலும், இந்த மாப்பிள்ளை தொடர், சமீபகாலமாக கணவன்-மனைவிகளுக்கிடையே ஏற்படும் ஈகோ பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு கதையில் உருவாகிறது.


    இதுபற்றி மிர்ச்சி செந்தில் கூறுகையில், மீண்டும் என் மனைவி ஸ்ரீஜாவுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. சரவணன் மீனாட்சியில் நடித்தபோது எங்களுக்கிடையே காதல் மலர்ந்தது. அந்த ரொம்ப இனிமையான அனுபவ மாக இருந்தது. இப்போது அவர் எனது மனைவியாகிவிட்டார். நாங்கள் கணவன் மனைவியாகவே நடிக்கிறோம். அது மகிழ்ச்சியாக உள்ளது


    ஆனால் நிஜவாழ்க்கையில் ஈகோ என்பது துளியும் இல்லாமல் விட்டக்கொடுத்து வாழ்ந்து வருகிறோம். இருப்பினும் இந்த தொடரில் நாங்கள் ஈகோ உடைய வர்களாக நடிக்கிறார்களாம். அந்த வகையில், இந்த தொடர் எங்களுக்கு இன்னொரு புதுமையான அனுபவத்தை கொடுக்கும். அதோடு, சரவணன் மீனாட்சி மூலம் எங்களுக்கு பெரிய வரவேற்பு கொடுத்த டிவி நேயர்கள் இந்த மாப்பிள்ளை தொடருக்கும் கொடுப்பார்கள் என்று நம்புகிறேன் என்கிறார்.


    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

Page 39 of 46 FirstFirst ... 293738394041 ... LastLast

Similar Threads

  1. IR concerts, TV shows and Interviews ...
    By Sanjeevi in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 355
    Last Post: 2nd June 2018, 06:26 AM
  2. Sharing-IR's music-interviews-BgmClips- in web
    By rajasaranam in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 860
    Last Post: 2nd October 2012, 12:43 AM
  3. Talented TV artists
    By swathy in forum TV,TV Serials and Radio
    Replies: 20
    Last Post: 21st March 2010, 10:13 PM
  4. Artists and their best emotions
    By Shakthiprabha. in forum Tamil Films
    Replies: 167
    Last Post: 22nd May 2007, 08:41 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •