Page 21 of 46 FirstFirst ... 11192021222331 ... LastLast
Results 201 to 210 of 453

Thread: INTERVIEWS With TV Artists

  1. #201
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    ஞாயிறு கொண்டாட்டம்
    ஓவர்- ஆக்டிங் வாழ்க்கைக்கு ஒத்து வராது!

    என் நிஜப்பெயர் ராஜேஸ்வரி. "சின்னக்காளை' என்ற படத்தின் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானேன். அந்தப் படத்தை இயக்கிய பாரதிமோகன் தான் என் பெயரை பூரணி என மாற்றினார். நேற்றுதான் நடிக்க வந்ததுபோல் இருக்கிறது. ஆனால் இருபத்தி ஐந்து வருடங்கள் ஓடிவிட்டன. "தங்கராசு', "தாமரை', "டேக் இட் ஈஸி', "சத்தியம் அது நிச்சயம்' போன்ற பத்துக்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறேன். திருமணத்துக்குப் பிறகு சின்னதிரையில் மட்டுமே நடித்து வருகிறேன். தற்போது "உறவுக்கு கைகொடுப்போம்' என்ற தொடரில் நடித்து வருகிறேன். என் கணவர் ரமேஷ் பாபு. குழந்தை சாய் ரக்சிதா யு.கே.ஜி படித்து வருகிறாள்.'' மேலும் தொடருகிறார் பூரணி



    தமிழில் நடிக்க வந்து இவ்வளவு நாள் ஆகிறது இன்னும் தெலுங்கு கலந்து பேசுகிறீர்களே, தொடரில் நீங்கள் பேசுகிறீர்களா?

    சாதாரணமாகப் பேசும்பொழுதுதான் சில நேரங்களில் தெலுங்கு கலந்து பேசிவிடுகிறேன். மற்றபடி தமிழ் நன்றாகவே பேசுவேன். அதுமட்டுமில்லாமல் தொடரில் பேசும்பொழுது ரொம்ப கவனமாக, சரியாகப் பேசிவிடுவேன். "சக்தி' தொடரில் நடிக்கும் பொழுது எல்லாம் தமிழ் அவ்வளவாக பேசமாட்டேன். பேப்பரில் என்ன எழுதி கொடுக்கிறாங்களோ அதை அப்படியே மனப்பாடம் செய்து ஒப்பித்துவிடுவேன். ஏதாவது தப்பாகப் பேசிவிட்டாலும் அதற்கு மாற்றாக என்ன பேச வேண்டும் என்று அப்பொழுது தெரியாது. ஆனால் இப்பொழுது கொஞ்சம் முன்னேறி நன்றாகவே தமிழ் பேசுகிறேன்.

    இப்பொழுது பெரிய திரையில் படங்களின் வாய்ப்புகள் வருகிறதா?

    நிறைய படங்களின் வாய்ப்புகள் வருகின்றன. படங்கள் ஒத்துக் கொண்டால் அவுட்டோர் போக வேண்டியது இருக்கும். என் குழந்தையை விட்டுவிட்டுப் போக முடியாது என்பதால் படங்களில் நடிக்க முடியவில்லை.

    நந்தி விருது வாங்கியிருக்கிறீர்களாமே?

    ஆமாம். தெலுங்கில் மௌலி சார் டைரக்ட் செய்து சின்னா ஹீரோவாக நடித்த "கின்னஸ் ரெக்கார்ட்' என்ற தொடரில் நடித்ததற்காக எனக்கு நந்தி விருது கிடைத்தது. பொதுவாக நான் நடித்த தொடர்களில் எல்லாம் அழுது கொண்டே இருப்பது போலத்தான் நடித்திருக்கிறேன். அந்தத் தொடரில்தான் முதன் முதலில் காமெடி கலந்த வேடத்தில் நடித்தேன். அந்தத் தொடருக்கு எனக்கு விருது கிடைத்தது ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

    தொடர்ந்து ஒவ்வொரு தொடரிலும் அழுவது போலவே நடிக்கும் பொழுது உங்களுக்கு சலிப்பு ஏற்படவில்லையா?

    எந்த நடிகையாக இருந்தாலும் அடுத்தடுத்து நடிக்கும் தொடரில் வேறு வேறு வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள். நானும் அப்படித்தான். ஆனால் என்ன செய்வது அழுவது போன்ற கேரக்டர்களே அமைகின்றன. சலிப்பு ஏற்படுவது என்பதைவிட ஒரு விஷயம் சொல்ல வேண்டும் என்றால் தினமும் தொடர்களில் அழுது அழுது இப்பொழுதெல்லாம் கிளிசீரின் போட்டால் கூட அழுவதற்குக் கண்ணில் நீர் வருவதில்லை. அந்த அளவுக்குக் கண்கள் வற்றிவிட்டன. இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் அப்படி அழுது நடிக்கும் பொழுது அந்த கேரக்டருக்கு ஆதரவு நிறைய இருக்கும். அதனால் அழுவதனால் சலிப்பு ஏற்படுவதில்லை சந்தோஷமே கிடைக்கிறது.

    கிட்டதட்ட இருபத்தி ஐந்து வருடங்களாக இந்தத் துறையில் இருக்கிறீர்கள். ஆனால் தற்பொழுது ஒரு சில நடிகைகள் வரும் பொழுதே ரொம்ப ஆர்பாட்டமாக வருகிறார்களே, அவர்களுக்கு என்ன சொல்ல நினைக்கிறீர்கள்?

    சினிமா, சீரியல் எதுவாக இருந்தாலும் சரி பந்தா இல்லாமல் இருந்தால்தான் நிலைத்து நிற்க முடியும். நாம யாருக்கும் தொந்தரவாக இல்லாமல் இருந்தாலே போதும். நம்மை தேடி நன்மைகள் பல வரும். இது சினிமாத்துறைக்கு மட்டும் என்பதில்லை வாழ்க்கைக்கும் பொருந்தும். சினிமாவில் ஓவர் ஆக்டிங் செய்தால் கட்பண்ணி தூக்கிவிடலாம். ஆனால் வாழ்க்கையில் ஓவர் ஆக்டிங் செய்தால் வாழ்க்கையே காணாமல் போய்விடும்.

    Nandri. dinamani

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #202
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    ஞாயிறு கொண்டாட்டம்
    சீரியல் தங்கை!

    ""என் அப்பா சினிமாத்துறையில் எலக்ட்ரிஷியனாக வேலை பார்க்கிறார். "ஜெயம்' ரவி நடித்த "தாஸ்' படத்தில் வேலை பார்க்கும் பொழுது அங்கே நிறைய குழந்தை நட்சத்திரங்கள் நடிக்க வந்திருப்பதைப் பார்த்துவிட்டு அப்பா டைரக்டரிடம் கேட்டிருக்கிறார். "என் பொண்ணு நல்லா நடிப்பா. அவளைப் பயன்படுத்திக் கொள்ள முடியுமா' என்று. அவரும், "அழைத்து வாங்க பார்க்கலாம்' என்று சொன்னார். சரின்னு போய் பார்த்தோம். அவர் என்னைப் பார்த்ததும் செலக்ட் பண்ணிட்டாரு. இப்படித்தான் சினிமாவில் நடிக்க வந்தேன். இப்போ சின்னதிரை, பெரியதிரை இரண்டிலும் நடித்துவருகிறேன்'' என்கிறார் "திருமதி செல்வம்' தொடரில் செர்ரியின் தங்கை மோனிகாவாக நடித்து வரும் பந்தனா.



    முதல் முறையா கேமிராவைப் பார்க்கும் பொழுது எப்படி உணர்ந்தீர்கள்?

    இப்பவும் ஒவ்வொரு முறை கேமிரா முன்னாடி நிற்கும் பொழுதும் சரியா நடிச்சிடணும்னு லேசான பயம் இருந்துகிட்டேதான் இருக்கு. முதல் முறையா கேமிராவைப் பார்க்கும் பொழுது எனக்கு எட்டு வயதிருக்கும்.

    சினிமான்னா என்ன என்பதே தெரியாது. நிறைய பேர் இருந்தாங்க. என்னைச் சுற்றி பெரிய பெரிய லைட்ஸ், கேமிரா என்று எல்லாம் பார்க்கும்போது ரொம்ப பயமா இருந்தது.

    ஆனா என்னை போலவே நிறைய சின்ன பசங்க இருந்தாங்க. அதனால கொஞ்சம் தைரியம் வந்துடுச்சு. குழந்தைங்க எல்லாம் ஒருத்தர் பின்னாடி ஒருத்தர் ரயில் மாதிரி பிடிச்சுக்கிட்டு ஓடணும். அதுதான் சீன். ஒரு பையன் கையில் ஆரஞ்சு பழத்துடன் தட்டு வைத்திருந்தான். நாங்க ஓடும்போது அந்தப் பையன் கையில் இருந்து ஆரஞ்சு பழம் ஒண்ணு ஒண்ணா கீழே விழுந்துடுச்சு. அதை பார்த்ததும் நான் "ஆரஞ்சு கீழே விழுந்துடுச்சுப்பா'ன்னு கத்திட்டேன். உடனே கட் சொல்லிட்டு எல்லாத்தையும் நிறுத்திட்டாங்க. எனக்கு ஒண்ணும் புரியல. என்னாச்சுன்னு அதன் பிறகுதான் சொன்னாங்க. அப்படி எல்லாம் கத்தக் கூடாது. பழம் விழுந்தா பரவாயில்லைன்னு சொன்னாங்க.

    தற்பொழுது எந்தந்தத் தொடரில் நடிக்குறீங்க?

    சன் டிவியில் "தென்றல்', "திருமதி செல்வம்', ஏஞ்சல் டிவியில் "உடைந்த சிறகுகள்' ஆகிய தொடர்களில் நடிக்கிறேன். முன்பு ராஜ் டிவியில் இரண்டு தொடர்களில் நடித்துக் கொண்டிருந்தேன். அதில் என்னுடைய போர்ஷன்ஸ் முடிஞ்சிடுச்சு. "தென்றல்' தொடரில் தீபாவாக வரும் ஹேமலதாவின் தங்கை பானுவாக நடிக்கிறேன். "தென்றல்' செட்டுக்கு போய்ட்டா ரொம்ப ஜாலியா இருக்கும். எல்லாரும் ரொம்ப அன்பாப் பழகுவாங்க. நம்ம வீட்ல இருப்பது போல இருக்கும். "திருமதி செல்வம்' தொடரில் செர்ரியின் தங்கை மோனிகாவாக நடிக்கிறேன். "உடைந்த சிறகுகள்' தொடர் ஐந்து பேரை மையமாகக் கொண்ட கதை. அதிலும் தங்கை வேடத்தில் நடிக்கிறேன். சொல்லப்போனால் சீரியல்களின் அன்பான தங்கச்சி நான்.

    பெரியதிரையில் படங்கள் எதுவும் நடிக்கிறீங்களா?

    "வாக்கப்பட்ட சீமை' என்கிற படத்தில் நடித்திருக்கிறேன். அதில் என் கேரக்டர் பேரு ராசாத்தி. ரொம்ப துறு துறுன்னு இருக்கிற பெண்ணா நடிச்சிருக்கேன். அதையடுத்து ஆனந்த வாசன் இயக்கும் "இதயம் முதல் குமரி வரை' என்கிற படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறேன். இதை தவிர பாலு மலர்வண்ணன் இயக்கும் "ஒத்தவீடு' என்கிற படத்தில் ஹீரோ திலீப்பின் தங்கையாக நடிக்கிறேன். ரொம்ப அழுத்தமான கதாபாத்திரம். படம் திரைக்கு வந்ததும் கண்டிப்பா பந்தனா யாரு என்று எல்லாரும் தெரிகிற அளவுக்கு ரொம்ப சவாலான கேரக்டர் எனக்குக் கிடைத்திருக்கு. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.

    குழந்தை நட்சத்திரமா நடித்ததற்கும், இப்போது நடிப்பதற்கும் என்ன வித்தியாசம் உணர்ந்தீங்க?

    வித்தியாசம் என்று எதுவும் தெரியல. குழந்தை நட்சத்திரமா நடிக்கும் பொழுது நான் நடித்திருப்பதே அவ்வளவா யாருக்கும் தெரியாது. முக்கிய கதாபாத்திரங்களின் பின்னணியில் ஓடிக் கொண்டிருப்பதாகவே எனக்குக் காட்சிகள் அமைந்தன. இப்போது ஒரு வருஷமா கேரக்டர் ரோல்ஸ் எல்லாம் நடிக்கிறேன். சினிமான்னா என்ன, அதன் அருமை என்னங்கிறது இப்போதான் புரிஞ்சிருக்கு. பொதுவா எல்லாரும் படத்தைப் பார்த்துவிட்டு இது நல்லா இருக்கு, இது நல்லா இல்லன்னு சொல்லிட்டு போய்டுவாங்க. ஆனா ஒரு படத்துக்குப் பின்னாடி எத்தனை பேர் உழைக்கிறாங்க. எவ்வளவு கஷ்டப்பட்டு ஒவ்வொன்றையும் செய்றாங்க என்று யாருக்கும் தெரியாது. அதை எல்லாம் ஒரு நடிகையா இப்போ தான் உணர்ந்திருக்கிறேன்.

    உங்களுக்குப் பிடித்த நடிகர், நடிகை யார்?

    ரஜினி சார் எனக்கு ரொம்பப் பிடிக்கும். நடிகைகளில் அனுஷ்கா ரொம்பப் பிடிக்கும்.

    குடும்பம்?

    அப்பா கண்ணன், அம்மா லஷ்மி, நான் வீட்டுக்கு ஒரே பெண். எங்க மாமா ஸ்ரீனுவும் எங்களோடுதான் இருக்கிறார். அவர் சினிமாவில் லைட் மேனாக இருக்கிறார்.

    Nandri.Dinamani

  4. #203
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    காமெடி கேரக்டரே ஹீரோயினுக்கு இணையானதுதான் : கோவை சரளா!






    ‘முந்தானை முடிச்சு’ படத்தில் அறிமுகமானவர் கோவை சரளா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என, 500 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். உறவுக்காரர்களின் வாரிசுகளை படிக்க வைத்து ஆளாக்கும் அவர், இதுவரை திருமணமே செய்துகொள்ளவில்லை.

    ஏன் இந்த வெறுப்பு?

    திருமண பந்தத்தில் வெறுப்பு இல்லை. யாரோ ஒருவன், என்னிடம் இருந்து தப்பித்து, பிழைத்துப் போகட்டும் என்ற நல்ல எண்ணம்தான் காரணம். உறவினர்களின் வாரிசுகள் எனக்கும் வாரிசுகள்தான். அவர்களுக்காக என்னை நான் அர்ப்பணித்து வாழ்வதில் தனி சுகம் காண்கிறேன்.

    தமிழில் ஏன் இடைவெளி?

    அதற்கான காரணம் தெரியவில்லை. தமிழில் ‘மகாராஜா’, ‘காஞ்சனா’, தெலுங்கில் ‘புலி’, ‘கோத்தி மூக்கா’ படங்களில் நடிக்கிறேன். தமிழகத்தைப் போல் ஆந்திராவிலும் எனக்கு ரசிகர்கள் அதிகம். குறிப்பாக, பெண்கள். நான் எந்தப் படத்தில் என்ன கேரக்டரில் நடிக்கிறேனோ, அந்தப் பெயரில் செல்லமாக அழைக்கிறார்கள். தெலுங்குப் படங்களில் எனக்கான முக்கியத்துவமும், மரியாதையும் கிடைக்கிறது.

    மனோரமாவை தொடர்ந்து நீங்கள். உங்களுக்குப் பிறகு?

    நிறைய பேர் காமெடி செய்கிறார்கள். எங்கள் இருவருக்குப் பிறகு யார் என்று இன்னும் தெரியவில்லை. தமிழில் புதுப்புது காமெடி நடிகைகள் வர வேண்டும். அப்போதுதான் நடிப்பில் போட்டி இருக்கும். ரசிகர்களுக்கும் வித்தியாசமான காமெடி கிடைக்கும்.

    ஏன் ஹீரோயினாக நடிக்கவில்லை?

    இருபது வருடங்களுக்கு முன், கன்னடத்தில் ‘பிரேமானு ராகா’ படத்தில் அக்கா, தங்கை என இரு வேடங்களில் ஹீரோயினாக நடித்தேன். படம் இதுவரை ரிலீஸாகவில்லை. பாவம், ரசிகர்கள் பிழைத்துவிட்டுப் போகட்டுமே என்றுதான் பிறகு ஹீரோயினாகவே நடிக்கவில்லை. என்னைப் பொறுத்தவரை, காமெடி செய்வதே ஹீரோயினுக்கு நிகரானதுதான். ஒவ்வொரு படத்திலும் காமெடிக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. அப்படி என்றால், நானும் ஹீரோயின்தானே?

    சாமியாராகப் போவதாக சொன்னீர்களே?

    நான் எப்போது சொன்னேன்? அப்படி எழுதிவிட்டார்கள். சாமியாராகித்தான் நல்லது செய்ய வேண்டும் என்பதில்லை. யார் வாழ்க்கையையும் கெடுக்காமல், என்னால் முடிந்தவரை உதவுகிறேன். யாரைப்பற்றியும் அவதூறு பேசுவதில்லை, ஏமாற்றுவதில்லை. என் மனசாட்சிக்குப் பயந்து நடக்கிறேன். பிறகு ஏன் சாமியாராக வேண்டும்?
    "அன்பே சிவம்.

  5. #204
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    அத்தி எப்போது பழுக்கும்?
    மதியம் 2 மணியை "அத்திப்பூக்கள்' நேரம் என்றே அடையாளப்படுத்தி வைத்திருக்கிறார்கள் பெண்கள். கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக குடும்பப் பெண்களைக் டிவியின் முன் கட்டிபோட்டு வைத்திருக்கும் அந்த ரகசியத்தைச் சொல்லுங்கள் என்று தொடரின் இயக்குனரான மருதுவிடம் கேட்டோம்..

    வருடக்கணக்கில் "அத்திப்பூக்கள்' வெற்றிகரமாக செல்வதன் ரகசியம் என்ன?

    பொதுவாக டிவியை ஓடவிட்டுவிட்டு ஏதாவது வேலை செய்து கொண்டே வசனத்தைக் கேட்பார்கள். ஆனால், எங்கள் தொடரைப் பொருத்தவரை ஆடியன்ஸ் விஷூவலாகக் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும் என்பதற்காக கேமிரா, டெக்னிக்கல், நடிப்பு என ஒவ்வொரு விஷயத்திலும் கவனம் செலுத்தி வருகிறோம். இந்த மெனக்கெடல் எங்கள் மொத்த டீமிடமும் இருக்கிறது. இதுதான் காரணம். மற்றபடி ரகசியம் ஒன்றும் இல்லை.

    தொடரை முடித்துவிடுவதுபோல் கொண்டு வந்து மீண்டும் தொடர்வதற்கு என்ன காரணம்?

    வழக்கமான குடும்பப் பிரச்னையாக இல்லாமல், ஒரு கன்னிப்பெண் வாடகைத் தாயாக மாறுகிறாள் என்பதைக் கருவாகக் கொண்டு ஆரம்பித்தோம். நாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிக வரவேற்பு கிடைத்ததால்தான் கிட்டத்தட்ட மூன்று முறை க்ளைமாக்ஸ் வரை சென்றுவிட்டு தொடரை முடிக்காமல் தொடர்ந்தோம். ஆடியன்ஸ் விரும்பும் வரை இந்தத் தொடரைக் கொண்டு போகலாம் என்று நினைத்திருக்கிறோம்.

    அந்தக் குழந்தை பற்றிச் சொல்லவில்லையே?

    அவன் "அத்திப்பூக்கள்' தொடரில் நடிக்க வரும்பொழுது நான்கு மாதக் குழந்தை. இப்போது அவனுக்கு நான்கு வயதாகிறது. உண்மையில் அவனை வைத்துத்தான் எங்கள் சீரியல் எத்தனை வருடம் ஆகியிருக்கிறது என்பதையே தெரிந்து கொள்வோம்.

    ஆரம்பத்தில் குழந்தையாக இருந்ததால் அவனுக்கு எதுவுமே தெரியவில்லை. கொஞ்சம் வளர்ந்து விவரம் தெரிந்ததும், இது தன்னுடைய அம்மா இல்லை என்று தெரிந்து அழுது அடம்பிடித்தான். ஆனாலும், தேவதர்ஷினிதான் அவனை தன்னுடைய குழந்தையைப் போலவே எந்நேரமும் மடியிலேயே வைத்திருப்பார். அவன் அழக் கூடாது என்பதற்காக ரொம்பவே கஷ்டப்பட்டார்.

    இப்போது முழு நடிகனாகவே மாறிவிட்டான். ஷுட்டிங் முடிந்து பேக்கப் சொன்ன பிறகுதான் கையில் பணமே வாங்குகிறான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

    பொதுவாக பெண்கள் அழுது புலம்புவது போலவே எல்லா சீரியல்களும் இருப்பது ஏன்?

    பிரச்னை இல்லாத மனிதர்களே இல்லை என்றுதான் சொல்வார்கள். அப்படி தான் நேரில் சந்தித்த ஒரு பிரச்னையைத் சீரியலில் பார்க்கும்போது அவர்கள் வாழ்க்கையையே அதில் உணர்கிறார்கள்.

    இன்னொரு விஷயம், சீரியல்களைப் பெண்கள்தான் அதிகம் பார்க்கிறார்கள். இன்று பெண்கள் உயர வேண்டுமென்றால் பலவிதக் கஷ்டங்களை அவர்கள் சந்திக்க வேண்டியிருக்கிறது. அதுபோன்ற கஷ்டங்களில் அழுவது இயல்பானதுதான். அதைத்தான் சீரியலில் சொல்கிறோம்.
    "அன்பே சிவம்.

  6. #205
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    நடிகை சி்த்தாராவின் ஆசை
    தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்கள் அனைத்திலும் நடித்தவர் நடிகை சி்த்தாரா.
    தமிழில் புது புது ராகங்கள், புது வசந்தம், உன்னை சொல்லி குற்றமில்லை, புதுப்புது அர்த்தங்கள் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

    இவர் படையப்பா படத்தில் நட்புக்காக குணச்சித்திர நடிகையாக நடித்துள்ளார், இவர் சினிமாவுக்கு வந்து 25 வருடங்கள் ஆகியும் இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கிறார்.

    இதற்கான காரணம் குறித்து அவர் கூறியிருப்பதாவது, நிறைய வரன்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன ஆனால் வரும் வரன்கள் எல்லாம், திருமணத்திற்கு பின்பு சினிமாவில் நடிக்க கூடாது என்று நிபந்தனை விதிக்கிறார்கள்.

    திருமணத்திற்கு பின்ன நல்ல வாழ்க்கை அமைந்தால் நடிக்காமல் இருக்கலாம், ஆனால் அப்படி ஒரு வாழ்க்கை அமையவில்லை என்றால் என்ன செய்வது என்று எண்னினார்.

    ஆனால் என்னை பெண் பார்க்க வருபவர்களிடம் பரந்த மனப்பான்மை இல்லை. அப்படி இல்லாதவர்களிடம் நான் எப்படி குடும்பம் நடத்த முடியும் என்று கூறினார்.

    சினிமாவிற்கு முன்பு வரை சினிமாவை பற்றி நிறைய பயம் இருந்தது, ஆனால் சினிமாவிற்கு வந்தபின்னர், அதில் ஒரு நம்பிக்கையும், ஒரு பக்தியும் ஏற்பட்டது.

    சினிமாவை தேடி நான் வரவில்லை, சினிமா தான் என்னை தேடி வந்தது, சினிமாவை ரொம்பவே மதிக்கிறேன் அதனால், திருமணத்துக்குப்பின் நடிக்க மாட்டேன் என்று ஒருபோதும் சொல்ல மாட்டேன் என்று நடிகை சித்தாரா கூறியுள்ளார்.

    25 வருடங்களாக நான் சினிமாவில் இருக்க வேண்டும் என்று எழுதப்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளார்.

    நான் யாரையும் காதலிக்கவில்லை என்று பொய் சொல்ல மாட்டேன், காதலித்து இருக்கிறேன் அது, கல்யாணம் வரை போகவில்லை காதலித்துதான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

    இவர் என்னை புரிந்துகொண்டு, நீ எப்பவும் போல நடிக்கலாம் என்று சொல்கிற கணவர் தான் வரவேண்டும், அப்படி ஒருவருக்காக காத்திருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
    "அன்பே சிவம்.

  7. #206
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like


    ஒவ்வொரு சீரியலுமே சினிமாதான்!



    உடல் மெலிந்து, இளமை கூடி, இன்னும் அழகாகி இருக்கிறார் தேவயானி. ‘கோலங்கள்’ அபி விட்டுச் சென்ற இடத்துக்கு இப்போது ‘முத்தாரம்’ ரஞ்சனி! அபி கேரக்டர் பொறுமையின் அடையாளம் என்றால், ரஞ்சனி பொறுமையின் உச்சம்!

    பொறுமைசாலியாவே நடிச்சு போரடிக்கலையா மேடம்?

    ‘‘பெண்கள் பொறுமையோட பிம்பங்கள்தானே? ‘கோலங்கள்’ முடிஞ்சதும் ஒரு வருஷத்துக்கு எந்த சீரியலையும் கமிட் பண்ணலை. அபி கேரக்டர்லேருந்து வெளில வர முடியலை. நிறைய கதைகள் கேட்டதுல, ‘முத்தாரம்’ ரொம்பப் பிடிச்சுப் போச்சு. குழந்தையில்லாத பெண்ணோட வாழ்க்கைப் போராட்டத்தைப் பத்தின கதை. குழந்தையின்மைங்கிறது இன்னிக்கு சமுதாயத்துல பெரிய பிரச்னையா இருக்கு. பர்சனலா பாதிக்கப்படற பெண்ணுக்கு மட்டும்தான் அந்த வலியும் வேதனையும் தெரியும். அவ சந்திக்கிற மனிதர்கள், எதிர்கொள்ற கேள்விகள், போராட்டங்கள்னு யதார்த்தமான கேரக்டர். முதல்முறையா டீச்சரா நடிக்கிறேன். என் பாட்டி & அதாவது அம்மாவோட அம்மா & தான் இந்தக் கேரக்டருக்கான இன்ஸ்பிரேஷன். பெரிய பணக்காரக் குடும்பத்துலேருந்து வந்தாலும், அந்த எண்ணமே இல்லாத பொறுமைசாலி. அவங்களை மாதிரிப் பெண்கள் இந்தக் காலத்துலயும் இருக்காங்க...’’ & நீண்ட விளக்கத்துடன் ஆரம்பிக்கிறார் தேவயானி.

    சினிமாவில் பிசியாக இருக்கும்போதே திருமணம் செய்து கொண்டு செட்டிலான தேவயானி, யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் சின்னத்திரைக்கு வந்தவர். ‘‘கல்யாணத்துக்குப் பிறகும் படங்கள் பண்ணி ட்டிருந்தேன். அப்பவே சீரியல் வாய்ப்பு வந்தது. ஆரம்பத்துல தயங்கினேன். என் முதல் சீரியல் ‘கோலங்கள்’ அந்த எண்ணத்தையே மாத்திடுச்சு. கிட்டத்தட்ட 7 வருஷம் அபியாவே மக்கள் மனசுல வாழ்ந்திருக்கேன். உண்மையைச் சொல்லணும்னா சினிமால எனக்கேத்த கேரக்டர் அமையலை. சீரியல்ல என்னை மையப்படுத்திதான் கதையே நகருது. இதைவிட வேற என்ன வேணும்?’’ என்கிறவரை இப்போதும் சினிமா வாய்ப்புகள் விரட்டாமல் இல்லையாம்.

    ‘‘நியூ படத்துல சின்ன வயசு எஸ்.ஜே. சூர்யாவுக்கு அம்மாவா நடிச்சேன். படத்துல எஸ்.ஜே.சூர்யா ராத்திரில பெரியவரா மாறிடற மாதிரி கதை. பலரும் என்னை 10 வயசுப் பையனுக்கு அம்மாவா பார்க்கலை. ஹீரோவோட அம்மாங்கிற மாதிரியே நினைச்சிட்டாங்க. அந்தப் படத்துக்குப் பிறகு ‘அம்மாவா நடிக்கிறீங்களா’னு கேட்டு ஏகப்பட்ட வாய்ப்புகள். எனக்கோ, என் ஹஸ்பெண்டுக்கோ அதுல விருப்பமில்லை.

    இந்தி சினிமால கல்யாணமாகி, குழந்தை பெத்த பிறகு கூட கஜோல் மாதிரி நடிகைகள் ஹீரோயினா நடிக்கிறாங்க. நம்ம இண்டஸ்ட்ரியோட தலையெழுத்து வேற. அதுக்காக நான் கவலைப்படலை. என் ஹஸ்பெண்ட் ராஜகுமாரன் டைரக்ஷன்ல, எங்க புரடக்ஷன்ல ‘திருமதி தமிழ்’ படத்துல முக்கியமான கேரக்டர் பண்றேன். என் எதிர்பார்ப்புக்கேத்த கேரக்டர் அமைஞ்சா படம் பண்ணுவேன். இல்லைன்னாலும் நோ பிராப்ளம். ஏன்னா ஒவ்வொரு சீரியலும் எனக்கு சினிமா மாதிரிதான்!’’ & உதடு பிரியாமல் சிரித்துச் சொல்கிறார் தேவயானி.


    நன்றி: தினகரன்
    Last edited by aanaa; 7th January 2012 at 08:27 PM.
    "அன்பே சிவம்.

  8. #207
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like

    சன் டி.வி ‘அனுபல்லவி’ தொடரில் நடிக்கிற கிரீஷுக்கு சின்னத்திரை தொடர் களில் நடிப்பது அல்வா சாப்பிடுகிற மாதிரியாம்! தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் பல வருட மேடை நாடக அனுபவத்துடன் சீரியலுக்கு வந்தவர் கிரீஷ்.

    ‘‘மலையாள நாடகங்கள்லதான் அறிமுகமானேன். பத்து வருஷங்களுக்கும் மேலா ஒய்.ஜி.மகேந்திரன் சார் ட்ரூப்ல இருக்கேன். நாடகங்கள்ல நடிக்கிறது ரொம்பவே சிரமம். டயலாக்கை மிஸ் பண்ணக்கூடாது. தப்பு பண்ணக் கூடாது. பண்ணினாலும், சமாளிக்கிற டைமிங் சென்ஸ் வேணும். இதையெல்லாம் பழகினவங்களுக்கு சீரியல் ஒரு விஷயமே இல்லை’’ என்பவர், அடுத்து சன் டி.வியில் வரவிருக்கும் ‘வெள்ளைத் தாமரை’ தொடரிலும் முக்கிய வேடம் ஏற்கிறார். சென்னையின் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் மேனேஜராக இருக்கும் கிரீஷின் அடுத்த இலக்கு சினிமா! .

    நன்றி:தினகரன்
    Last edited by aanaa; 7th January 2012 at 08:29 PM.
    "அன்பே சிவம்.

  9. #208
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    சினிமாவில் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் மீண்டும் சின்னத்திரைக்கே செல்ல முடிவு செய்திருக்கிறாராம் நடிகை லேகா வாஷிங்டன். எஸ்.எஸ். மீயூசிக் சேனல் காம்பியராக இருந்த லேகா வாஷிங்டன் தமிழில் சிம்பு நடிக்கும் கெட்டவன் படத்தில் ஒப்பந்தமானார். அந்த படத்தில் ஒப்பந்தமானதோடு சரி... எப்போது படப்பிடிப்பு தொடங்கும் என்றே தெரியாத நிலையில், இந்தியில் ராஜ்குமார் சந்தோஷி இயக்கும் படத்தில் நடிக்க அம்மணிக்கு வாய்ப்பு வந்தது. அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை தரும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறாராம் லேகா.

    இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியொன்றில், கெட்டவன் எப்போது தொடங்கும் என தெரியவில்லை. சினிமாவில் எதிர்பார்த்த அளவுக்கு வாய்ப்புகள் அமையவில்லை. இதனால் மீண்டும் நல்ல வாய்ப்பு வந்தால் டி.வி.க்கே போய்விடலாம் என்ற எண்ணம் இருப்பது உண்மைதான் என்று கூறியுள்ளார்.

    நன்றி:தினமலர்
    Last edited by aanaa; 7th January 2012 at 08:32 PM.
    "அன்பே சிவம்.

  10. #209
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like

    `வாழ்க பாரதம்!'

    சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் `தென்றல்' சீரியலில் தர்மன் என்ற தாதா கேரக்டரில் வில்லத்தனத்தில் கலக்கிக் கொண்டிருப்பவர் நடிகர் ராஜேந்திரநாத். யுவராணியை தனது அடியாட்கள் சகிதம் அவர் சந்திக்கும்போது சிரித்த முகத்தில் மறைந்திருக்கும் அடியாழ வில்லத்தனம் அழகு. அவ்வப்போது `வாழ்க பாரதம்' என்று சொல்லிக் கொள்வது இன்னொருவித அழகு.

    1987-ல் விஜயகாந்த் நடித்த `ரமணா' படத்தில் தான் இவரது நடிப்பு பயணம் தொடங்கியது. இந்த 25 ஆண்டுகளில் நூறு படங்களை எட்டி விட்டார். இத்தனை படங்களில் நடித்தும் கிடைக்காத புகழ், ஒரேயொரு சீரியலில் கிடைத்திருப்பது இவரை ஆனந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. சீரியல் நடிப்புக்கு வரும்வரை இவருக்கும் சின்னத்திரை சாதாரணமாகவே தெரிந்திருக்கிறது. `இந்த மாதிரியான புத்திசாலித்தனம், ரவுடியிசம் இரண்டும் மிக்சான ஒரு கேரக்டர் இருக்கிறது. நடிக்கிறீர்களா?' என்று `தென்றல்' சீரியலின் இயக்குனர் குமரன் கேட்டபோது, முதலில் தயங்கவே செய்திருக்கிறார். இருந்தாலும் இயக்குனர்மீது நம்பிக்கை வைத்து ஒப்புக்கொண்டிருக்கிறார். இன்று தென்றலின் முக்கிய கேரக்டர்களில் ஒருவராகி விட்டார்.

    "எப்படியிருக்கிறது , சின்னத்திரை அனுபவம்?'' ராஜேந்திரநாத்தைக் கேட்டால்...

    "நான் எதிர்பார்க்கவே இல்லை. இதுவரை 95 படங்கள் நடித்து முடித்து விட்டேன். வெளியில் பார்த்தால் யாராவது ஒன்றிரெண்டு பேர் என்னை உற்றுப்பார்ப்பார்கள். தயங்கித்தயங்கி நீங்கள் இந்தப்படத்தில் நடித்தீர்கள் தானே என்று கேட்பார்கள். அத்தோடு சரி. ஆனால் `தென்றல்' தொடரில் எப்போது என்டர் ஆனேனோ அப்போது முதலே எந்த ஊரில் எந்த இடத்தில் பார்த்தாலும் `வாழ்க பாரதம்' என்ற குரல் கொடுக்கிறார்கள். பெண்கள், சிறுவர்கள் கூட உற்சாகமாய் என் கேரக்டர் பற்றியும், கதை பற்றியும் பேச ஆரம்பித்து விடுகிறார்கள்.

    பொதுவாக சினிமாவில் வசனங்கள் அதிகம் இராது. அப்படி இருந்தாலும் பிரித்துப் பிரித்து பேசவைத்து படம் பிடித்து விடுவார்கள். சீரியலில் அது நடக்காது. வசனம் பக்கம் பக்கமாக கொடுத்து நடிக்கச் சொல்வார்கள். ஆரம்பத்தில் சற்றே சிரமமாகத் தெரிந்தது. போகப்போக பழகி விட்டது. இதன் விளைவு, இப்போது சினிமாவில் பெரிய வசனம் என்றாலும் ஒரே டேக்கில் சுலபமாக பேசி விடுகிறேன். சீரியல் நடிப்பில் இது எனக்கு கிடைத்த பரிசாகவே இதை உணருகிறேன். தொடர்ந்து பெரியதிரை, சின்னத்திரை இரண்டிலும் நடிப்பை தொடர்வேன்''

    குரலில் உற்சாகம் பொங்க சொல்லி முடிக்கிறார், ராஜேந்திரநாத்.


    நன்றி: தினதந்தி
    Last edited by aanaa; 14th January 2012 at 08:16 AM.
    "அன்பே சிவம்.

  11. #210
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    "கரு த் த ம்ம ô' ர ôஜ ஸ்ரீ யி ன்
    த ங் கை எ ன்ற அறி மு
    க த் தே ôடு சினி ம ô வு க்கு வ ந்த
    மி துன ô,.

    சினி ம ô வி ல் நடி க்க ஆர ம் பி ச்ச உட னே இ வ் வ ளவு
    சீ க் கி ர ம் சீரி ய லு க்கு வ ந் து ட் டீ ங் க ளே..?
    "ம ôம து ரை', "தீய வ ன்', "ச ôபூ த் திரி' பட ங் க ளி ல் கத ô
    ந ô ய கி ய ôக நடி ச் சி ரு க் கே ன். இ ப் ப வு ம் " சை தை செ ல்ல ô',
    "எதி ர் ப ô ர ô த து', "லூசு ப் பெ ண் ணே..' பே ô ன்ற தமி ழ் ப்
    பட ங் க ளி லு ம் நடி ச் சு ட் டு த ô னி ரு க் கே ன். வ ô ய் ப் பி ல் ல ôம
    சீரி ய லு க்கு வரல.


    "க ôத ம் பரி' க தை யு ம், அ ந் த க் க தை க்கு நீ ங் க த ô ன்
    சரிய ô இரு ப் பீ ங் க ன்னு இய க் கு ந ர் பிரபு ச ங் க ர் செ ô ன் ன
    வி த மு ம் என க் கு ப் பிடி ச் சி ரு ந் த து. மு க் கி யம ô எ ன் கத ô
    ப ô த் தி ர த் து க்கு இ ணைய ô அதி ல் சுத ô ச ந் தி ர ன் மேட
    மே ôட அ ந்த வி ல்லி கெ ட் ட ப் ரெ ô ம் ப ப் பிடி ச் சி ரு ந் த து.
    அவ ங் க ளை ப் பே ôல இ ன் னெ ô ரு த் த ர ôல இ தை ச் செ ய்ய
    முடி யு ம ô ன்னு நி னை க் கற அள வு க்கு ஆ க் ரே ô ஷம ô
    இரு ந் த து. அ தை ப் ப ô ர் த் த து மே நம க்கு இ து சேல ஞ் சி ங்
    க ôன ரே ôல ô இரு க் கு ம், வழ க் க ம ôன க தை ய ôக இரு க் க ô
    து ன்னு உட னே ஒ த் து க் கி ட் டே ன்.


    உ ங்க ச கே ô தரி ர ôஜஸ்ரீ உ ங் க ளு க்கு ஆ லே ô ச னை
    க ள் செ ô ல் வ ô ங் கள ô?
    "க ôத ம் பரி' சீரி ய லு க் கு க் கே ட் ட பே ô து, பெரி ய தி ரை
    யி ல் இ ன் னு ம் செ ô ல் லி க் கிற ம ôதிரி ச ôதி க் க லை. அ து க்
    கு ள்ள சி ன் ன த் தி ரை க்குப் பே ôக ணு ம ô ன்னு குழ ப் பம ô
    இரு ந் த து. அத ன ôல எ ன் னே ôட அ க்க ô ர ôஜ ஸ்ரீ கி ட்ட
    இ து ப ற்றிக் கே ட் டே ன்.


    "சி ன் ன த் தி ரை, பெரி ய தி ரை ன்னு எ ந்த வி த் தி ய ô ச
    மு ம் இ ல்ல. சி ன் ன த் தி ரை க்கு இ ப் பே ô ந ல்ல வர வே ற்பு
    இரு க்கு. வீ ட் டி ல் உ ள்ள பெ ண் க ள் எ ல் ல ô ரு ம் சீரி ய லை
    விரு ம் பி ப் ப ô ர் க் கி ற ô ங்க. பெரி ய
    திரை யி ல் நடி ச்ச ô சி ன் ன த் தி ரை யி ல்
    நடி க் க க் கூட ô து ன்னு சில நடி கை க ள்
    நி னை க் கி ற ô ங்க. அ து த ப்பு. எ ந்த
    தி ரை ய ôக இரு ந் த ô லு ம் நடி ப்பு எ ன்
    ப து ஒ ண் ணு த ô ன்'னு செ ô ன் ன ô ங்க.
    அவ ங்க செ ô ன் ன து சரி த ô னே ன்னு
    தே ôணு ச்சு. இ ந்த சீரி ய ல்ல ந ô ன் கமி ட்
    ஆன து க்கு அவ ங்க மு க் கி ய ம ôன க ôர
    ண ம்.


    "க ôத ம் பரி' அ ப்ப ரெகு ல ர ôன சீரி
    ய ல் இ ல் லைய ô?
    ஆம ô ம்! இ து 200 வரு ட ங் க ளு க்கு
    மு ன் ன ôடி வ ô ழ் ந்த ஒரு பெ ண் ணே ôட
    க தை. என க் கு த் தெரி ந் து டி.வி தெ ôட
    ரி ல் இ ந் த ள வு க்கு மு க் கி ய த் து வ ம்
    உ ள்ள சரி த் தி ர க் க தை இ து வே முத ல்
    மு றை ன்னு நி னை க் கி றே ன். 18-ஆ ம்
    நூ ற் ற ô ண் டுல இரு ந்த டிர ஸ், ஹே ர் ஸ் டை ல், வ ளை
    ய ல், பெ ô ட்டு என எ ல் ல ô மே தேடி ப் பிடி ச்சு நி றைய
    உ ழை ச் சி ரு க் கே ô ம். ஒரு சினி ம ô வு க் கு க் கூட இ ந் த ள
    வு க்கு செலவு ப ண்ண ம ô ட் ட ô ங்க. அ ந் த ள வு க்கு மிக ப்
    பிர ம ô ண் டம ô இ ந்த தெ ôட ரை எடு க் கி ற ô ங்க. 500 எபி
    சே ô ட் முடி ச் சு ட் டே ô ம், ஜெய ô டிவி யி ல் வி ரை வி ல் ஒளி
    ப ர ப் ப ô க ப் பே ôகு து.


    ப ôர தி ர ôஜ ô ஹீ ரே ô யி ன் ம ôதிரி ஜ ô க் கெ ட் இ ல் ல ôம
    நடி க் கி றீ ங் க ள ô மே.. பர ப ர ப் பு க் க ô கவ ô?
    அ து பர ப ர ப் பு க் க ôக இ ல்ல, அ ந்த க ôல த் து ப் பெ ண்
    க ள் எ ப் படி இரு ப் ப ô ங் க ன்னு ஆய்வு செய்து இ ந்த
    க ô ஸ் ட் யூ ம் வெ ச் சி ரு க் க ô ங்க. அ ந்த க ôல த் து ப் பெ ண்
    க ளே இ ப் படி இரு ந் தி ரு க் க ô ங்க. பட த் துல கம ர் μ ய
    லு க் க ôக கிள ô ம ர் ச ô ங் ஸ் தே வை யி ல் ல ô ம ப் ப ண் ணு ம்
    பே ô து, க தை க்கு அவ சி ய ம ôன இ ந்த கெ ட் ட ப் என க் கு ப்
    பெரிய விஷ யம ô தெரி யல. எ ந் த த் தி ரை ய ôக இரு ந் த ô
    லு ம் க தை க்கு ஏ ற்ற க ô ஸ் ட் யூ ம் இரு ந் த ô ல் த ô னே ப ô ர் க்க
    ந ல் ல ô ரு க் கு ம்?


    நடி ப்பு தவிர வேறு எ ந் த த் து றை யி ல ô வ து ஆ ர் வ ம்
    இரு க் கி றத ô?
    டைர க் ஷ ன் செ ய் ய ணு ம்னு ஆ ர் வ ம் இரு க்கு. ஷ þ ட்
    டி ங் ஸ்ப ô ட்ல எ ன் னே ôட ஷ ô ட் முடி ஞ் ச து ம் எ ன்ன ப ண்
    ற ô ங் க ன்னு கவ னி ச் சு ட் டே இரு ப் பே ன். எ ல் ல ô த் தி லு ம்
    இ ப் பே ô கெ ô ஞ் ச ம் கெ ô ஞ் ச ம் க த் து வ ச் சி ரு க் கே ன். முழு
    மை ய ô க் க த் து க் கி ட் டே ன்னு ந ம் பி க் கை வரு ம் பே ô து
    க ண் டி ப்ப ô டைர க் ட ர் ஆ வே ன். அ து சினிம ô, சீரி ய ல்
    எ துவ ô வேண ô லு ம் இரு க் கு ம். ஏ ன்ன ô, இர ண் டு ம் எ ன்
    னை ப் பெ ôரு த்த அளவு ஒ ண் ணு த ô ன்.
    Last edited by aanaa; 6th February 2012 at 04:13 AM.
    "அன்பே சிவம்.

Page 21 of 46 FirstFirst ... 11192021222331 ... LastLast

Similar Threads

  1. IR concerts, TV shows and Interviews ...
    By Sanjeevi in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 355
    Last Post: 2nd June 2018, 06:26 AM
  2. Sharing-IR's music-interviews-BgmClips- in web
    By rajasaranam in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 860
    Last Post: 2nd October 2012, 12:43 AM
  3. Talented TV artists
    By swathy in forum TV,TV Serials and Radio
    Replies: 20
    Last Post: 21st March 2010, 10:13 PM
  4. Artists and their best emotions
    By Shakthiprabha. in forum Tamil Films
    Replies: 167
    Last Post: 22nd May 2007, 08:41 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •