-
31st October 2009, 04:53 AM
#151
Moderator
Diamond Hubber
பேசும் பைங்கிளி
பழம்பெரும் நடிகை சரோஜாதேவி, தன்னுடைய திரையுலக வாழ்க்கையை வசந்த் டிவி நேயர்களுடன், வாரந்தோறும் பகிர்ந்து கொள்கிறார். எம்.ஜி.ஆருடன் அறிமுகமான நாடோடி மன்னன் முதல், சமீபத்தில் வந்த ஆதவன் படத்தில் நடித்தது வரை தன்னுடைய திரையுலக அனுபவங்களை விவரிக்கிறார்.
சொந்த வாழ்க்கை, எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், தெலுங்கு நடிகர்கள் என்.டி.ராமராவ், நாகேஸ்வர ராவ், கன்னட நடிகர் ராஜ்குமார் உள்ளிட்ட பிரபல நாயகர்களுடனான தனது அனுபவங்களையும், மனம் திறந்து பேசுகிறார்.
நிகழ்ச்சி இயக்கம்: ஆர்.பாலாஜி.
தயாரிப்பு வசந்த் டிவி.
ஞாயிறு தோறும் காலை 9 மணிக்கு வசந்த் டிவியில் பேசும் பைங்கிளியை காணலாம்.
நன்றி: தினதந்தி
கோபால் ல் ல் ல்
-
31st October 2009 04:53 AM
# ADS
Circuit advertisement
-
12th November 2009, 05:51 AM
#152
Moderator
Diamond Hubber
சின்னத்திரை உலகின் பெண்கள்?
எல்லாத் துறைகளிலும் பெண்கள் இப்போது நுழைந்து வெற்றிக் கொடி நாட்டி, தங்களின் தனித் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அப்படி அவர்கள் முத்திரை பதித்திருக்கும் துறைகளில் சின்னத்திரையும் ஒன்று.
ஆனால் சின்னத்திரையில் நடிப்பு, தயாரிப்பு என்று தங்களின் முத்திரையை பதிக்கும் பெண்களால், அதன் இதர துறைகளான எழுத்து, இயக்கம், தொழில்நுட்பம் போன்றவற்றில் பேசப்படும் அளவுக்கு இன்னும் வளரவில்லை. இதுக் குறித்து "பாலாஜி டெலி ஃபிலிம்ஸ்' நிறுவன கிரியேட்டிவ் ஹெட் திருமதி. சுபா வெங்கட்டிடம் கேட்டபோது,
]
""சினிமா எப்படி ஆண்களுடைய துறையாக இருக்கிறதோ, அதுபோல பெண்களுடயை துறை சின்னத்திரை என்றாகிவிட்டது. டி.வி.யில் வரும் சீரியல்களை பொறுத்தவரையில் பெண்கள்தான் ஹீரோக்கள்! சீரியல்களில் பெண்களுக்குதான் பெரும்பாலும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
அதுபோல பொருளாதார ரீதியாக பார்த்தாலும், சினிமாவில் எப்படி ஹீரோவுக்கு நிறைய சம்பளம் தரப்படுகிறதோ, அதுபோல சின்னத்திரையில் நடிக்கும் ஹீரோயின்களுக்கு நிறைய சம்பளம் கிடைக்கிறது. ஏனென்றால் கதையில் முக்கிய பாத்திரங்களாக அமைவதும், அதை ஏற்று நடிப்பதும் பெண்கள்தான். பெண்களைச் சுற்றித்தான் கதை நகரும். சினிமாவில் வில்லன் என்றால், தொடர்களில் வில்லி பாத்திரங்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. இதுவும் பெண்களுக்கான ஒரு தனிச் சிறப்பு.
அதனால் சின்னத்திரையில் நடிக்கும் பெண்களுக்கு பொருளாதார ரீதியாக முன்னேறவும் நிறைய வாய்ப்புகள் உள்ளன.
ஆனால், சினிமாவில் மற்ற துறைகளில் பெண்கள் சாதிப்பதை பார்க்கும்போது சின்னத் திரையில் பெண்களின் பங்களிப்பு கம்மிதான். சினிமாவில் நிறைய பெண் இயக்குனர்களும், ஒளிப்பதிவாளர்களும் வந்து கொண்டிருக்கிறார்கள். நிறைய பெண் உதவி இயக்குனர்களும் இருக்கிறார்கள்.
ஆனால் டி.வி. மீடியாவை பொறுத்தவரையில் நிகழ்ச்சித் தயாரிப்பில் நிறைய பெண்கள் ஈடுபடுகிறார்களே தவிர கேமராவுக்குப் பின்னால், தொழில்நுட்ப வேலைகளில் அதிகம் பேர் ஈடுபடுவதில்லை. அது போன்று எழுத்துத் துறையிலும் அதிகம் பேர் ஈடுபடுவதில்லை. கடந்த பத்து ஆண்டுகளாக எழுதி வருகிற இரண்டு, மூன்று பெண்கள் மட்டும்தான் இருக்கிறார்கள்.
2000-ல் கே. பாலசந்தரின் "அண்ணி' தொடருக்கு நான்தான் வசனம் எழுதினேன். அது போன்று "வீட்டுக்கு வீடு லூட்டி' என்ற தொடருக்கு இன்னொரு பெண் எழுத்தாளர் எழுதினார். இப்படி விரல் விட்டு எண்ணக் கூடிய அளவிலேயே அன்றும் இன்றும் பெண் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். இது மாறவேண்டும்.
அதுபோல டெலி ஃபிலிம், ஒரு எபிசோடு நிகழ்ச்சி... இப்படி சின்னச் சின்ன படைப்புகளைதான் பெண்கள் இயக்கியிருக்கிறார்களேத் தவிர யாரும் மெகா தொடர்களை இயக்கியதில்லை. மெகா தொடர் என்பது ஒரு மெகா கூட்டணியின் உழைப்பு அடங்கியது. ஆனால் அந்த மாதிரியான மெகா தொடர்களின் "கிரியேட்டிவ் ஹெட்' ஆக பெண்கள் வொர்க் பண்ணியிருக்கிறார்கள். அவர்களில் நானும் ஒருவர்.
சின்னத்திரையில் நடிக்கும் நடிகைகளை எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. நடிக்க வரும் பெண்களில் நல்ல திறமை சாலிகள் இருக்கிறார்கள். ஆனால் என்ன? ஓரிரு தொடர்களில் நடித்ததும் கல்யாணம் செய்துகொண்டு செட்டில் ஆகி விடுகிறார்கள்.
அவர்களுக்கு தொடர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் அவர்களது குடும்ப சூழ்நிலைகளால் நடிப்பை தொடர முடியாமல் போய்விடுகிறது. பெரிய திரையில் இருந்த வந்த ராதிகா, குட்டி பத்மினி, குஷ்பு, ரம்யா கிருஷ்ணன், ஊர்வசி ஆகியோரெல்லாம் சின்னத்திரையிலும் சாதித்திருக்கிறார்கள், சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். இது வரவேற்க வேண்டிய, பாராட்ட வேண்டிய விஷயம். இது போன்று திறமையான பெண்கள் நிறைய பேர் வந்தால் சின்னத்திரை துறையிலும் பெண்களின் கை ஓங்கி நிற்கும். தமிழ்நாட்டில்தான் நிறைய பெண் தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள். இவர்களை பார்த்தும் நிறைய பெண்கள் சின்னத்திரைக்கு வருகிறார்கள். இதெல்லாம் வரவேற்கப்பட வேண்டிய விஷயம்தான்.
சாதிக்க நினைக்கிறவர்களுக்கு சின்னத்திரையில் நிறைய துறைகள் இருக்கிறது. புதியவர்கள் வரும்போதுதான் புதிய புதிய சிந்தனைகள் பிறக்கும். முயற்சி செய்தால்தான் தங்களோட கற்பனைகளையும், படைப்புகளையும் திரையில் கொண்டுவர முடியும்.
அதனால் புதிதாக வருபவர்களை வரவேற்போம். அவர்களின் திறமையை பாராட்டுவோம். இது என்னுடைய தீபாவளி செய்தியாக இருக்கட்டும்'' என்றார்.
நன்றி: cinema Express
-
25th November 2009, 12:56 PM
#153
Senior Member
Seasoned Hubber
ஞாயிறு கொண்டாட்டம்
சினிமாதான் என் உலகம்!
சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் "தங்கம்' தொடரின் படப்பிடிப்பு. கங்காவை (ரம்யா கிருஷ்ணன்) பழிவாங்க சதி செய்து கொண்டிருந்த இளவஞ்சி (காவேரி)யைச் சந்தித்தோம். அங்கு சுப்புலட்சமி, நாச்சியா, மங்கா அக்கா என அனைவரிடமும் சிரித்து விளையாடிக்கொண்டே பிஸியாக இருந்தார் நடிகை காவேரி. படப்பிடிப்பு இடைவேளையில் வந்து, நம்முடைய கேள்விகளுக்கு அவர் சொன்ன பதில்களிலிருந்து...
"தங்கம்' தொடரில் உங்கள் கேரக்டர் இந்தளவு பேசப்படும் என்று நினைத்தீர்களா?
கதையை முதன் முதலில் கேட்கும் பொழுது இந்தளவுக்கு ரீச் ஆகும்ன்னு எதிர்பார்க்கவில்லை. ஐயாவுக்கு மரு மகளாக வருகிற கேரக்டர் கொஞ்சம் பவர் ஃபுல்லான ரோல் என்று சொன்னார்கள். நான் இதுவரை நெகட்டீவ் ரோலில் நடித்தது கிடையாது. எனக்கே இது ஒரு புதுமையான அனுபவம் தான். ஐயாவின் சொத்து வேறு யாருக்கும் போகக் கூடாது என்பதற்குத்தான் அவ்வளவு வில்லத்தனம் செய்ய வேண்டி இருந்தது.
பார்ப் பதற்கு ரொம்ப வெகுளியா இருக்கீங்க. ஆனால் தொடரில் பயங்கர வில்லியாக கலக்குறீங்களே மக்கள்கிட்ட உங்கள் இமேஜ் பாதிக்காதா?
பொது வாக வில்லி கேரக்டரில் நடிப்பவர்கள் என்றால் பார்க்கும் பொழுதே பயமுறுத்தும்படி இருப்பார்கள். ஆனால் பார்வைக்கு மென்மையாக இருக்கிற ஒரு பெண் செய்கிற வேலையெல்லாம் பயங்கர வில்லத்தனமாக இருந்தால் பார்க்கிறவர்களுக்கு வித்தியாசமாக இருக்கும் என்று எதிர்பார்த்தேன். என்னுடைய இந்த நினைப்பு வீண் போகவில்லை. என்னுடைய நடிப்பிற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. இது இமேஜை பாதிக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை.
தொடரில் உங்களின் வில்லத்தனமான நடிப்பைப் பார்த்துவிட்டு உங்கள் வீட்டில் உள்ளவர்கள் என்ன சொன்னார்கள்?
நான் முதன் முறையாக நெகட்டீவ் ரோல் செய்வதால், "ஏன் இப்படி? இந்த மாதிரி நடித்தால் மக்கள் உன்னை உதைக்க மாட்டார்களா? இவ்வளவு அநியாயம் செய்வது போல் இருக்கிறதே...?' என்று சொல்லுவார்கள். அம்மாதான் தினமும் தவறாமல் டிவியில் தொடரை பார்ப்பார்கள். நான் ஏதாவது தப்பு செய்திருந்தால் கூட அதைச் சுட்டிக்காட்டித் திருத்துவார்கள்.
பெரும் பகுதி படப்பிடிப்பில்தான் இருக்கிறீர்கள். உங்கள் நண்பர்கள் பற்றி சொல்லுங்கள்?
என் னுடைய ஃபேமிலி என்று சொன்னால் அது இந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் உள்ளவர்கள்தான். நான் வீட்டில் இருக்கும் நேரத்தைவிட இங்கேதான் அதிக நேரம் செல விடுகிறேன். என்னுடைய சொந்தம், பந்தம் ,அத்தை, மாமா என்று எல்லாமே இங்கே உள்ளவர்கள் தான்.
எனக்கு வேற உலகமே இல்ல. வேற உலகத்தை பற்றி நான் நினைப்பது கூட இல்லை.
இந்த கேரக்டருக்காக உங்களை எப்படி தயார் செய்து கொள்கிறீர்கள்?
ஹோம் ஒர்க் செய்கிறேன். ஒவ்வொரு சீன் முடிஞ்சப் புறம் என்ன என்ன தவறு செய்திருக்கேன் என்று பார்ப்பேன். மறுபடியும் அதை செய்யக் கூடாதல்லவா?! வீட்டில் நடித்து பார்ப்பேன். மற்றபடி அடுத்து சீன் என்ன என்பதெல்லாம் எங்களுக்கு தெரியாது. முன்னாடியே சொல்லமாட்டாங்க. ஸ்பாட்டுக்கு வந்த பிறகுதான் சொல்வார்கள். வீட்டுக்கு வந்த பிறகு படப்பிடிப்பின் போது ஏதாவது தவறு செய்திருக்கேன் என்று தோன்றினால், எங்களின் கிரியேட்டீவ் ஹெட்கிட்ட போன் செய்து அவுங்களோட கருத்துக்களை கேட்போம் அவ்வளவு தான்.
வேறு என்ன தொடர் பண்றீங்க? சினிமாவில் நெகட்டீவ் ரோல் வாய்ப்பு வந்தால் நடிப்பீர்களா?
கலை ஞர் டிவியில் வருகிற "தாயம்' தொடரிலும் பண்ணிக்கிட்டு இருக்கேன். அடுத்தபடியா "சுழல்'ன்னு ஒரு தமிழ் படம் பண்றேன். அதில் ஹீரோ, ஹீரோயின்ஸ் எல்லாம் புதுசு. டைரக்டரும் மலையாள டைரக்டர். பிரதாப் போத்தனுக்கு ஜோடியாக நடிக்கிறேன். ஒரு சீனியருடன் நடிப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ரொம்பவும் நட்போடு நடிப்பைச் சொல்லித் தருவார். அவர் இருபது வருஷத்திற்குப் பிறகு சினிமாவில் மறுபடியும் ரீஎண்ட்ரி ஆவது மனதிற்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. சினிமாவில் நெகட்டீவ் ரோல் வந்தால் பண்ணித்தான் பார்ப்போமே!
வைகா சிபொறந்தாச்சு படத்தில் அறிமுகமான காவேரிக்கும். இப்போது இளவஞ்சியா நடிக்கும் காவேரிக்கும் வித்தியாசம் எப்படி இருக்கு?
சினிமா, சீரியல்ன்னு நான் பிரித்து பார்த்ததில்லை. என்னை பொருத்தவரை கேமிரா லைட்டிங் மட்டும் தான் வித்தியாசமாக இருக்குமே தவிர மற்ற எல்லாமே ஒரே மாதிரிதான் இருக்கும். எனக்கு எங்கு போனாலும் சந்தோஷமா இருக்கணும். எல்லோரையும் சிரிக்க வைக்கணும். "வைகாசி பொறந்தாச்சு' முதல் படம்ங்கிறதுனால அப்போ எதுவுமே தெரியாதில்லையா அதனால் பயம் இருந்தது. இப்பொழுது பழகிடுச்சு. இருபது வருடமா இது மட்டும் தான் தெரியும். சினிமாவை தவிர வேற உலகமே எனக்குத் தெரியாது.
ரம்யா கிருஷ்ணனோட நடிப்பது பற்றி சொல்லுங்கள்?
அவர் ஒரு ஜெம் ஆஃப் பெர்சன். ரொம்பவும் ஃபிரண்ட்லியா பழகுவாங்க. புரோடியூசர்ங்கிற மாதிரி நடந்துக்க மாட்டாங்க. ஒரு ஃபேமிலி மாதிரிதான் எல்லோரிடமும் பழகுவாங்க.
உங்கள் ஃபேமிலி பற்றி சொல்லுங்கள்?
எனக்கு நாலு அண்ணன்கள், நான் ஒரே பெண் தான், இப்பொழுது அம்மாவோட தான் இருக்கேன். என் கல்யாண வாழ்க்கையைப் பற்றி நான் எதையும் சொல்ல விரும்பவில்லை. ஒரு ஆர்ட்டிஸ்ட்டாக இல்லாமல் ஒரு பெண்ணாக இருந்து என் பிரச்சனைகளுடன் போராடிக்கிட்டு இருக்கேன்.
-
4th December 2009, 12:53 PM
#154
Senior Member
Seasoned Hubber
டாக்டர் ஆனதும்தான் டைரக்ஷன்!
"அலை பாயுதே', "மொழி' படங்களுக்குப் பிறகு கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் "தெக்கத்திப்பொண்ணு' தொடரிலும் கடந்த திங்கள்கிழமை முதல் புதியதாக துவங்கியிருக்கும் தொடர் "யாதுமாகி நின்றாய்' என்ற தொடரில் நடிக்கும் சொர்ணமால்யாவை அவரது இல்லத்தில் உள்ள நாட்டியக் கூடத்தில் சந்தித்தோம். நுழைவாயிலிலேயே ஒரு சின்ன அம்மன் சிலையைத் தரிசித்துவிட்டு உள்ளே சென்றோம். நடராஜர் சிலையின் முன் அமர்ந்து அங்கே அபிநயம் பிடிக்கும் பிள்ளைகளுக்கு ஜதி சொல்லிக்கொண்டே நமக்கு பதிலளித்தார்.
"யாதுமாகி நின்றாய்' தொடரில் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறீர்கள்? வேறு என்ன தொடர்களில் நடிக்கிறீர்கள்?
"யாதுமாகி நின்றாய்' மூன்று பெண்களை பற்றிய கதை. அதில் முக்கிய கதாபாத்திரம் சாரதா. அந்த கேரக்டர்தான் நான் பண்றேன். அது ஒரு தனித்துவம் வாய்ந்த, வாழ்க்கையில் நிறைய பிரச்னைகளை சந்திக்கும் அதே சமயத்தில் உடைந்து போகாமல் எதிர்கொள்ளும் அழுத்தமான ரோல். இந்த "யாதுமாகி நின்றாய்' தொடர் ஒரு நண்பர் கொடுத்த கருவை வைத்து ரேவதி மேடம், ரோகிணி மேடம் ரெண்டு பேரும் சேர்ந்து விரிவாக்கம் செய்து உருவாக்கியிருக்கிறார்கள். பெண்களுக்காக நிறைய விஷயங்களை யோசிக்க கூடிய சிறந்த நடிகைகளான அவர்களோடு சேர்ந்து பங்கு எடுத்துக் கொள்வது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. மற்றபடி "தெக்கத்திப் பொண்ணு' தொடரில் கிராமத்து பெண்ணாக நடித்துக் கொண்டிருக்கிறேன்.
"மொழி' படத்தில் சிறப்பாக நடித்து இருந்தீர்கள். அதன் பிறகு படங்களில் நடிக்கவில்லையே ஏன்?
"மொழி' படம் போல ஒரு நல்ல படத்தில் நடித்தால் பத்து சுமாரான படங்களில் நடிக்க வேண்டியிருக்கிறது. அது போல் வராத பட்சத்தில் பத்து சுமாரான படங்கள் நடிக்க எனக்கு நேரமோ, விருப்பமோ இல்லை.
சின்னத்திரை,பெரிய திரையில் நீங்கள் உணர்ந்தது?
சினி மாவுக்கும், சின்னத்திரைக்கும் இருந்த வித்தியாசங்கள் இப்போது போய்விட்டது. அதெல்லாம் ஒரு காலகட்டத்தில் தான் இருந்தது. இவர்கள் சினிமா ஆர்ட்டிஸ்ட், இவர்கள் சின்னத்திரை ஆர்ட்டிஸ்ட் என்பதெல்லாம் இப்போழுது கிடையாது. இன்ûறய சூழ்நிலையில் சினிமாவிற்கு பலமாக இருப்பது சின்னத்திரை தான். சினிமாவையே கூட டிவியில் அடிக்கடி டிரைய்லர் போட்டு காட்டும் போது தான் நிறையபேருக்கு இந்தப் படம் புதிதாக வருகிறது என்று தெரிகிறது. ஒரு மீடியாவுக்கும்,இன்னொரு மீடியாவுக்கும் நாம போட்டி வைக்க முடியாது. ஒரு நடிகை என்றால் அவுங்க நடிகை தான். நிஜவாழ்கையில் நடிக்காத வரை நாம நடிகர்கள் தான்.
நீங்கள் இருந்தவரை சன் டிவியில் தொகுத்து வழங்கிய "இளமை புதுமை' நிகழ்ச்சி அருமையாக இருந்தது. அதன் பிறகு காணாமல் போய்விட்டதே. அது உங்களுக்கு வெற்றியா?
கண்டிப்பாக. சொர்ணமால்யா என்றால் யார் என்று என்னை அறிமுகப்படுத்தியது இளமை புதுமை நிகழ்ச்சி தான் மிகப் பெரிய காரணம். நான் அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து ஏழு வருடங்கள் பண்ணினேன். என்னுடைய பதினாறு வயதில் தொடங்கினேன் என்னுடைய வளர்ச்சியோட சேர்ந்து அந்த நிகழ்ச்சியும் வளர்ந்தது. அந்நிகழ்ச்சி துவங்கும் போது தான் சன் டிவிக்கும் துவக்க காலம் எங்களது வளர்ச்சி போல் சன் டிவியும் சேர்ந்து வளர்ந்தது. நிறைய நல்ல நல்ல விஷயங்கள் எல்லாம் நடந்தது. ஒரு விஷயம் நன்றாக நடக்கும் பொழுது சில நேரங்களில் அதை விட்டு கொடுக்க வேண்டி வரும் அப்படி தான் அந்த நிகழ்ச்சியை ரொம்ப சந்தோஷமான சூழ்நிலையில் தான் முடித்தோம்.
தொடர்கள் இயக்கும் எண்ணம் உண்டா?
தொடர் இயக்குவதற்கு நிறைய நேரம் வேண்டும்.
ஆனால் சினிமா டைரக்ஷன் பண்ணவேண்டும் என்று ஆசையிருக்கிறது. ஆனால் இப்போது அந்த எண்ணம் இல்லை. பிஎச்.டி.முடித்துவிட்டுதான் பண்ணவேண்டும் என்று வைராக்கியத்தில் இருக்கிறேன். டாக்டர் சொர்ணமால்யா ஆகிவிட்டுத்தான் டைரக்டர் சொர்ணமால்யா ஆவேன்.
படிப்பு, நாட்டியம், சினிமா இப்படி வெவ்வேறு துறையில் இருக்கிறீர்கள். இதற்காக எப்படி நேரம் செலவிடுகிறீர்கள்?
ஒரு நாளில் இருபத்திநாலு மணி நேரம் இருக்கிறது. அதை வைத்துக் கொண்டு எத்தனையோ நிறைய நல்ல விஷயங்களைச் செய்யலாம். அப்படியில்லாமல் ஒரு நாள் முழுவதும் ஒரே ஒரு வேலை மட்டும் தான் செய்ய முடியும் என்றால் அது முயற்சியில்லா தன்மையைக் காட்டுகிறது என்று சொல்வார்கள். படிப்புக்காக டான்ûஸ விட்டதில்லை, டான்ஸ்காக நடிப்பை விட்டதில்லை, ஒவ்வொன்றுக்கும் என் நேரத்தைப் பிரித்து செயல்படுகிறேன்.
நாட்டியத் துறையில் உங்கள் பங்களிப்பு என்ன?
இதுதான் என் பங்களிப்புன்னு சொல்லி முற்றுப்புள்ளி வைக்க முடியாது. இப்போது தான் ஆரம்பித்திருக்கிறேன். நிறைய விஷயங்கள் செய்யணும்னு ஆர்வம் இருக்கு. அதற்கான முயற்சிகளில் ஒன்று தான் என் பிஎச்.டி. பட்டம் வாங்க வேண்டும் என்பது. என் மூலமாக சில விஷயங்களைக் கலை உலகத்துக்குக் கொடுக்க வேண்டும் என்பது என் ஆசை. இதை தவிர நாட்டிய பள்ளி வைத்து நடத்திக் கொண்டிருக்கிறேன். சென்னையிலும், காஞ்சிபுரத்திலும்.
உங்கள் திறமையை திரையுலகம் சரியாக பயன்படுத்தவில்லை என்ற குறை இருக்கிறதா?
அப்படிச் சொல்ல முடியாது. எந்த ஒரு சினிமாவும்
ஒரு வருடைய திறமையை வெளிப்படுவதற்காக எடுக்க கூடிய விஷயம் இல்லை. ஐநூறுபேர்,அறுநூறு பேர் சேர்ந்து உழைக்க கூடியது. ஒரு தனிபட்டவருடைய திறமையை வெளிப்படுத்துவதற்காக ஒரு சினிமா எடுப்பாங்கன்னா அது நடக்க முடியாத ஒரு விஷயம். அப்படி பார்த்தா நானே என்னை வைத்து ஒரு படம் எடுத்தாலும் அதில் என்னுடைய எல்லா பரிமாணங்களையும் ஒரு மூன்று மணி நேரத்தில் காண்பிக்க முடியாது. அதனால் அந்த மாதிரி எதிர்பார்ப்பதே என்னை பொருத்தவரை முட்டாள்தனம். அவர்கள் கொடுக்க கூடிய கதாபாத்
திரத்தில் என்னுடைய திறமையை வெளிப்படுத்த தெரிந்தால் நான் புத்திசாலி. அதை வாங்கிக் கொண்டால் அவர்கள் புத்திசாலி.
சினிமாவில் நெகட்டிவ் ரோல் வந்தால் நடிப்பீர்களா?
இயல்பான நெகட்டீவ் ரோலாக இருந்தால் பரவாயில்லை. நெகட்டீவா பண்ணினாலும் அதில் ஒரு அர்த்தம் இருக்க வேண்டும். கத்தி எடுத்து குத்துவது மாதிரி எல்லாம் நான் செய்ய முடியாது. ஏன் என்றால் என்னிடம் நாட்டியம் கற்றுக்கொள்ள நிறைய பிள்ளைகள் வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் நான் நிறைய சோஷியல் ஒர்க்கிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். அது நிஜவாழ்க்கையில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தக் கூடாது என்பதால் எனக்கு இஷ்டம் இல்லை. ரொம்ப பெரிய கம்பெனியில் இருந்து வில்லியாக நடிப்பதற்கு கேட்டார்கள். என்னை பார்த்தால் உங்களுக்கு எப்படி அந்த மாதிரி கேட்க தோன்றுகிறது என்று கேட்டேன். வேற யாருமே அந்த மாதிரி நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள்.வித்தியாசமாக இருக்கும் என்றார்கள். ஒரு மாதம் வரை காத்திருந்தார்கள் நான் வேண்டாமென்று சொல்லிவிட்டேன். நல்ல கம்பெனி, நல்ல டைரக்டர், ரொம்ப நல்ல கதை இருந்தாலும் அவர்களோடு ஒர்க் பண்ண முடியவில்லையே என்று வருத்தப்பட்டேன்.
http://dinamani.com/edition/story.as...44&SEO=&Title= டாக்டர் ஆனதும்தான் டைரக்ஷன்!
"அலை பாயுதே', "மொழி' படங்களுக்குப் பிறகு கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் "தெக்கத்திப்பொண்ணு' தொடரிலும் கடந்த திங்கள்கிழமை முதல் புதியதாக துவங்கியிருக்கும் தொடர் "யாதுமாகி நின்றாய்' என்ற தொடரில் நடிக்கும் சொர்ணமால்யாவை அவரது இல்லத்தில் உள்ள நாட்டியக் கூடத்தில் சந்தித்தோம். நுழைவாயிலிலேயே ஒரு சின்ன அம்மன் சிலையைத் தரிசித்துவிட்டு உள்ளே சென்றோம். நடராஜர் சிலையின் முன் அமர்ந்து அங்கே அபிநயம் பிடிக்கும் பிள்ளைகளுக்கு ஜதி சொல்லிக்கொண்டே நமக்கு பதிலளித்தார்.
"யாதுமாகி நின்றாய்' தொடரில் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறீர்கள்? வேறு என்ன தொடர்களில் நடிக்கிறீர்கள்?
"யாதுமாகி நின்றாய்' மூன்று பெண்களை பற்றிய கதை. அதில் முக்கிய கதாபாத்திரம் சாரதா. அந்த கேரக்டர்தான் நான் பண்றேன். அது ஒரு தனித்துவம் வாய்ந்த, வாழ்க்கையில் நிறைய பிரச்னைகளை சந்திக்கும் அதே சமயத்தில் உடைந்து போகாமல் எதிர்கொள்ளும் அழுத்தமான ரோல். இந்த "யாதுமாகி நின்றாய்' தொடர் ஒரு நண்பர் கொடுத்த கருவை வைத்து ரேவதி மேடம், ரோகிணி மேடம் ரெண்டு பேரும் சேர்ந்து விரிவாக்கம் செய்து உருவாக்கியிருக்கிறார்கள். பெண்களுக்காக நிறைய விஷயங்களை யோசிக்க கூடிய சிறந்த நடிகைகளான அவர்களோடு சேர்ந்து பங்கு எடுத்துக் கொள்வது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. மற்றபடி "தெக்கத்திப் பொண்ணு' தொடரில் கிராமத்து பெண்ணாக நடித்துக் கொண்டிருக்கிறேன்.
"மொழி' படத்தில் சிறப்பாக நடித்து இருந்தீர்கள். அதன் பிறகு படங்களில் நடிக்கவில்லையே ஏன்?
"மொழி' படம் போல ஒரு நல்ல படத்தில் நடித்தால் பத்து சுமாரான படங்களில் நடிக்க வேண்டியிருக்கிறது. அது போல் வராத பட்சத்தில் பத்து சுமாரான படங்கள் நடிக்க எனக்கு நேரமோ, விருப்பமோ இல்லை.
சின்னத்திரை,பெரிய திரையில் நீங்கள் உணர்ந்தது?
சினி மாவுக்கும், சின்னத்திரைக்கும் இருந்த வித்தியாசங்கள் இப்போது போய்விட்டது. அதெல்லாம் ஒரு காலகட்டத்தில் தான் இருந்தது. இவர்கள் சினிமா ஆர்ட்டிஸ்ட், இவர்கள் சின்னத்திரை ஆர்ட்டிஸ்ட் என்பதெல்லாம் இப்போழுது கிடையாது. இன்ûறய சூழ்நிலையில் சினிமாவிற்கு பலமாக இருப்பது சின்னத்திரை தான். சினிமாவையே கூட டிவியில் அடிக்கடி டிரைய்லர் போட்டு காட்டும் போது தான் நிறையபேருக்கு இந்தப் படம் புதிதாக வருகிறது என்று தெரிகிறது. ஒரு மீடியாவுக்கும்,இன்னொரு மீடியாவுக்கும் நாம போட்டி வைக்க முடியாது. ஒரு நடிகை என்றால் அவுங்க நடிகை தான். நிஜவாழ்கையில் நடிக்காத வரை நாம நடிகர்கள் தான்.
நீங்கள் இருந்தவரை சன் டிவியில் தொகுத்து வழங்கிய "இளமை புதுமை' நிகழ்ச்சி அருமையாக இருந்தது. அதன் பிறகு காணாமல் போய்விட்டதே. அது உங்களுக்கு வெற்றியா?
கண்டிப்பாக. சொர்ணமால்யா என்றால் யார் என்று என்னை அறிமுகப்படுத்தியது இளமை புதுமை நிகழ்ச்சி தான் மிகப் பெரிய காரணம். நான் அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து ஏழு வருடங்கள் பண்ணினேன். என்னுடைய பதினாறு வயதில் தொடங்கினேன் என்னுடைய வளர்ச்சியோட சேர்ந்து அந்த நிகழ்ச்சியும் வளர்ந்தது. அந்நிகழ்ச்சி துவங்கும் போது தான் சன் டிவிக்கும் துவக்க காலம் எங்களது வளர்ச்சி போல் சன் டிவியும் சேர்ந்து வளர்ந்தது. நிறைய நல்ல நல்ல விஷயங்கள் எல்லாம் நடந்தது. ஒரு விஷயம் நன்றாக நடக்கும் பொழுது சில நேரங்களில் அதை விட்டு கொடுக்க வேண்டி வரும் அப்படி தான் அந்த நிகழ்ச்சியை ரொம்ப சந்தோஷமான சூழ்நிலையில் தான் முடித்தோம்.
தொடர்கள் இயக்கும் எண்ணம் உண்டா?
தொடர் இயக்குவதற்கு நிறைய நேரம் வேண்டும்.
ஆனால் சினிமா டைரக்ஷன் பண்ணவேண்டும் என்று ஆசையிருக்கிறது. ஆனால் இப்போது அந்த எண்ணம் இல்லை. பிஎச்.டி.முடித்துவிட்டுதான் பண்ணவேண்டும் என்று வைராக்கியத்தில் இருக்கிறேன். டாக்டர் சொர்ணமால்யா ஆகிவிட்டுத்தான் டைரக்டர் சொர்ணமால்யா ஆவேன்.
படிப்பு, நாட்டியம், சினிமா இப்படி வெவ்வேறு துறையில் இருக்கிறீர்கள். இதற்காக எப்படி நேரம் செலவிடுகிறீர்கள்?
ஒரு நாளில் இருபத்திநாலு மணி நேரம் இருக்கிறது. அதை வைத்துக் கொண்டு எத்தனையோ நிறைய நல்ல விஷயங்களைச் செய்யலாம். அப்படியில்லாமல் ஒரு நாள் முழுவதும் ஒரே ஒரு வேலை மட்டும் தான் செய்ய முடியும் என்றால் அது முயற்சியில்லா தன்மையைக் காட்டுகிறது என்று சொல்வார்கள். படிப்புக்காக டான்ûஸ விட்டதில்லை, டான்ஸ்காக நடிப்பை விட்டதில்லை, ஒவ்வொன்றுக்கும் என் நேரத்தைப் பிரி
-
20th January 2010, 02:08 PM
#155
Senior Member
Seasoned Hubber
பிசினûஸ விட்டுவிட்டு நடிக்க வந்தேன்!
இண் டஸ்ட்ரிக்கு வந்த சிறிது காலத்திலேயே தனக்கென்று ஒரு இடத்தைத் தக்க வைத்துக் கொண்டவர், "அரசி' தொடரில் ராதிகாவின் மகளாக வந்து இப்போழுது "செல்லமே', "கண்மணி',"ஓவியா' என்று ஏகப்பட்ட தொடர்களை கைவசம் வைத்துக் கொண்டு, பெரிய திரையில் வரும் வாய்ப்புகள் கூட வேண்டாம் என்று படு பிஸியாக இருக்கும் சின்னதிரையின் கலக்கல் நாயகி மகாலஷ்மியை சந்தித்தோம். இதோ அவர் நமக்கு அளித்த பேட்டி.:
* சின்னத்திரைக்கு எப்படி நடிக்க வந்தீங்க?
தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியோ, சீரியலோ நடிப்பேன் என எனக்கு ஐடியாவே இல்லை. ரெண்டுமே தானாகவேதான் அமைந்தன. நடிக்கணும் என்ற எண்ணமே கிடையாது. அம்மா எக்ஸ்போர்ட் பிஸினஸ் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. அவுங்களுக்கு திடீர்ன்னு உடம்பு சரியில்லாம போனதால நான்தான் பிசினûஸப் பார்த்துக்கிட்டு இருந்தேன். அப்போ என் அக்கா (பெரியம்மா மகள் நீபா) மூலமாகத்தான் எனக்கு இந்த ஆஃபர் வந்தது. அவுங்க செல்போன்னில் இருந்த என்னுடைய போட்டோவை "அரசி' தொடர் டைரக்டர் சுந்தர்.கே.விஜயன் பார்த்துவிட்டு, விசாரித்திருக்கிறார். "ஒரு கதாபாத்திரம் இருக்கு. அதுக்காக நாங்க ஒரு பெண்ணைத் தேடிக்கிட்டு இருக்கோம். அந்த கேரக்டர் இவுங்க நடிச்சா நல்லா இருக்கும்' என்று சொல்லியிருக்கிறார். அப்படித்தான் "அரசி' வாய்ப்பு கிடைத்தது.
* முதல் தொடரே நெகட்டீவ்வா பண்ணினால் அதை தொடர்ந்து அதே மாதிரி கேரக்டர் வரும் என்று நீங்கள் நினைக்கவில்லையா?
அது உண்மைதான். இருந்தாலும் எனக்கு நெகட்டீவ் ரோல் ரொம்பப் பிடிக்கும். பாஸிட்டிவ் ரோல் பண்ணுவதற்கு நிறைய பேர் வருவாங்க. ஆனால் ஒரு சிலர்தான் நெகட்டீவ் ரோல் பண்ணுவார்கள். நெகட்டீவ் ரோல் ரொம்ப சேலஞ்சிங்கா இருக்கும். பாஸ்ட்டீவ் ரோலை விட நெகட்டீவ் ரோல் பண்ணும் போது மக்கள்கிட்ட நல்ல ரீச் கிடைக்கும். அதுவுமில்லா என்னோட முதல் தொடர் என்பதால எனக்கு எதுவும் தெரியாது இல்லையா? அதனால அவுங்க எப்படிச் சொன்னாங்களோ அதே மாதிரி பண்ணினேன்.
* "அரசி'.. அடுத்து "செல்லமே' என்று ராதிகாவுடன் நடிக்கின்ற அனுபவம் எப்படி இருக்கு?
என் னோட முதல் தொடரே ராதிகா மேடம்கூட பண்ணுகின்ற வாய்ப்பு கிடைச்சது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. ரொம்ப உறுதியான பெண் அவுங்க. அதே சமயத்தில் ரொம்ப இனிமையாகவும் அமைதியாகவும் பேசுவாங்க. நடிக்க வருவதற்கு முன்பே அவுங்களோட ரசிகை நான். எனக்கு அவுங்களை ரொம்ப பிடிக்கும். அவுங்களோட பழகும்போது அவுங்க கேரக்டர் ரொம்ப பிடிச்சது. அப்படி பிடித்தவர்களோட சேர்ந்து நடித்தது ரொம்ப சந்தோஷமா இருந்தது. நான் ஏதாவது தப்பு பண்ணினால் கூட உடனே திருத்தி சொல்லிக் கொடுப்பாங்க. அதில் அவுங்க சீனியாரிட்டியும் சின்ஸியாரிட்டியும் தெரிந்தது. நிறைய நல்ல நல்ல அட்வைஸ் எல்லாம் கொடுப்பார்கள்.
* மானாட மயிலாட நிகழ்ச்சியில் உங்கள் அக்கா டான்ஸ் ஆடி பயங்கரமா கலக்குறாங்க. நீங்கள் எப்படி?
நானும் பரதநாட்டியம் முறைப்படி கற்றுக்கொண்டேன். அரங்கேற்றம் வரும் சமயத்துல டென்த் எக்ஸôம் வந்திடுச்சு. அதனால அப்படியே நிறுத்திட்டேன். அதுக்கு பிறகு தொடருவதற்கு டயம் கிடைக்கல. ஆனா ஸ்கூல்ல, காலேஜ்ல படிக்கும்போது நிறைய டான்ஸ் பெர்பாமன்ஸ் பண்ணியிருக்கேன். ஆனா அக்கா அளவுக்கு எல்லாம் நான் டான்ஸர் கிடையாது. அவ சூப்பரா டான்ஸ்ல வெளுத்து வாங்குவா. நான் எப்படி சொல்லி கொடுக்கிறாங்களோ அப்படியே ஆடுவதோடு சரி.
"அணு வளவும் பயமில்லை' நிகழ்ச்சியில் ஐஸ்கட்டியின் மேல் உட்காரும் போதும், உயரமான இடத்தில் இருந்து குதிக்கும் போதும் உங்கள் மன நிலை எப்படி இருந்தது?
நான் முதன்முதலில் பண்ணின ரியாலிட்டி ஷோ அது. இதுவரைக்கும் இந்த மாதிரி எல்லாம் நான் டிரை பண்ணினதே கிடையாது. இதுதான் முதல் முறை. நாற்பது அடி உயரத்தில் இருந்து குதிக்க ரொம்ப ரொம்ப பயமாக இருந்தது. கொஞ்சமா கொஞ்சமா மேலே போக போக தலை எல்லாம் சுத்துவது போல ஆயிடுச்சு.
மேலே ஏறி நின்றதும் ரொம்ப பயமா இருந்துச்சு. அதனால மேலே போனவுடனே குதிச்சிட்டேன். ஐஸ்கட்டியின் மேல் உட்கார்ந்தாச்சு எப்படியும் வின் ஆயிட்டுதான் எந்திரிக்கனும்னு முடிவோட உட்கார்ந்திட்டேன். அது முடிஞ்சு எழுந்தபோது கையெல்லாம் ரத்தம் உறைஞ்ச மாதிரி ஆகி சிவந்து போச்சு. கால் எல்லாம் அப்படியே இழுத்துக் கொண்டது. இரவு முழுவதும் தூங்கமுடியாம வலியால அவதிப்பட்டேன்.
* உண்மையில் மகாலஷ்மி எப்படி? உறுதியான பெண்ணா, இல்லை பயந்த சுபாவமா?
உறு தியான பெண்தான். என்னை பொருத்தவரை எந்த ஒரு விஷயம் எடுத்துக்கிட்டாலும் அதில் உறுதியா இருக்கனும். அப்போதான் ஜெயிக்க முடியும். ஒரு விஷயம் பண்ண வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் அதில் எவ்வளவு தடைகள் வந்தாலும் சரி கண்டிப்பாக செஞ்சி முடிச்சுடுவேன்.
* உங்கள் குடும்பத்தைப் பற்றி சொல்லுங்கள் கிச்சன்பக்கம் எல்லாம் போனது உண்டா?
அம்மா சுபி. அப்பா சங்கர் அவர் சினிமாவில் கொரியோகிராபி பண்ணிக்கிட்டு இருக்கார். தம்பி பன்னிரெண்டாம் வகுப்பு படித்து கொண்டிருக்கிறான். அதற்குப் பிறகு ரெண்டு நாய்க்குட்டி இருக்கு. கிச்சன் பக்கம் எல்லாம் நான் போனதே கிடையாது. அம்மா சூப்பரா சமைப்பாங்க.
* வேறு என்ன என்ன தொடர் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள்?
சன் டிவியில் வருகிற "செல்லமே', "கண்மணி', ஸ்டார் விஜய்யில் "யாமிருக்க பயம் ஏன்?', ஜெயா டிவியில் "ஓவியா', பாலிமர் டிவியில் "மூன்று முகம்', அதற்கு பிறகு ரியாலிட்டி ஷோ ஒண்ணு பண்ணிக்கிட்டு இருக்கேன். அது இல்லாமல் தெலுங்கில் சுந்தர காண்டம் என்று தொடர் பண்ணிக்கிட்டு இருக்கேன்.
http://dinamani.com/edition/story.as...44&SEO=&Title=
-
20th January 2010, 02:34 PM
#156
Senior Member
Veteran Hubber
Originally Posted by
aanaa
கோபால் ல் ல் ல்
aanaaaa naan ippodhaan gavinikkaren
எந்தன் காதல் சொல்ல என் இதயம் கையில் வைத்தேன்...!!!
-
14th February 2010, 08:24 AM
#157
Moderator
Diamond Hubber
சினிமாவை விட சின்னத்திரை சீரியல்கள்தான் பெஸ்ட் என்று இரண்டு திரைகளிலும் மின்னிக் கொண்டிருக்கும் நட்சத்திரமான நடிகை தீபா வெங்கட் கூறியிருக்கிறார். கிட்டத்தட்ட 25 வருட சினிமா அனுபவம் பெற்றவர் தீபா வெங்கட். ஏகப்பட்ட சீரியல்களில் இவரது முகம் பளீச் அறிமுகம். சிலபல சினிமாக்களிலும் தலை காட்டியிருக்கிறார். சீரியலுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைப் போல சினிமாவிற்கு கொடுப்பதில்லையே என தீபாவிடம் *கேட்டால் படபடவென பட்டாசுபோல வெடித்து பேசுகிறார். அவரது பேட்டி:-
சினிமாவில் ஒரு படத்தில், ஒரு ரோலில் நடித்தால் அடுத்து வரும் 10 படங்களிலும் அதே ரோல்தான் கிடைக்கும். படங்களில் எனது கேரக்டருக்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே ஒத்துக் கொள்கிறேன். சமீபத்தில் வெளிவந்த கதை படத்தில் 2 சீனில்தான் நடித்தேன். ஆனால் எனக்கு அது மன நிறைவை தந்தது. அடுத்து வாடா படத்தில் சுந்தர் சி.யுடன் தங்கச்சி ரோல் பண்ணிருக்கேன். தில், உள்ளம் கொள்ளை போகுதே, ஜெயம் கொண்டான் போன்ற படங்கள் எனக்கு நல்ல பெயரை வாங்கித் தந்திருக்கிறது. சினிமாவை விட சீரியல்களில் நல்ல ரோல் கிடைக்கிறது. நிறைய கேரக்டர்கள் செய்ய வாய்ப்பு கிடைக்கிறது. அந்த வகையில் சீரியல்தான் பெஸ்ட் என சொல்வேன். எனது திருமணம் அநேகமாக இந்த வருடத்தில் இருக்கும். காதல் திருமணம் செய்தாலும் என் பெற்றோர் சம்மதத்துடன் நடக்கும், என்று சொல்லும் தீபா வெங்கட் சமீப காலமாக ஒரு புதிய அவதாரத்தை எடுத்திருக்கிறார். அது ரேடியோ தொகுப்பாளர் அவதாரம்தான்.
அதேபோல இவரைப் பற்றிய இன்னொரு சங்கதி நிறைய படங்களில் முன்னணி நாயகிகள் பலருக்கு டப்பிங் வாய்ஸ் கொடுத்திருப்பது. கண்ணத்தில் முத்தமிட்டால் படத்தில் சிம்ரனுக்கும், குரு படத்தில் வித்யாபாலனுக்கும் குரல் கொடுத்திருக்கும் தீபா, விரைவில் வெளிவரவுள்ள முறியடி, முரட்டுக்காளை, இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் உள்ளிட்ட படங்களின் நாயகிகளுக்கு டப்பிங் வாய்ஸ் கொடுத்து வருகிறாராம்.
-
16th February 2010, 12:13 PM
#158
Senior Member
Veteran Hubber
Originally Posted by
aanaa
கிட்டத்தட்ட 25 வருட சினிமா அனுபவம் பெற்றவர் தீபா வெங்கட்.
onnum printing mistake illaiyE...
Because if we calculate with this, her gae comes 40+ now.
But she she still looks like 20+ age.
-
19th February 2010, 12:37 PM
#159
Senior Member
Seasoned Hubber
Theepa Vengat
maraimuga thirumanam aagi vittathaaga kealvi. iam not sure.
-
19th February 2010, 12:39 PM
#160
Senior Member
Seasoned Hubber
ஞாயிறு கொண்டாட்டம்
பழிவாங்குவது பிடித்திருக்கிறது!
கலைஞர் டிவியின் "மானாட மயிலாட' நிகழ்ச்சியில் பரபரப்பான கட்டம். இறுதிப்போட்டிக்காக தன் உடலை ரப்பர் போல் வளைத்து ஆடிய ஆட்டத்தில் காய்ச்சல் வந்து படுத்துவிட்டார் நீபா. ஓய்வெடுத்துக் கொண்டிருந்த அவரை அவரது இல்லத்தில் சென்று சந்தித்தோம்.
என்ன, என்ன தொடர்கள் நடிச்சிகிட்டு இருக்கீங்க?
"அவர்கள்', "கிருஷ்ணா காட்டேஜ்', "தேவதை, பந்தம்', "நம்ம குடும்பம்' இந்த தொடர்களில் நடித்திருக்கிறேன். தற்போழுது நடித்துக் கொண்டிருக்கும் தொடர்கள் "கண்மணி', "தங்கமான புருஷன்', "மூன்று முகம்', விஜய் டிவியில் "ரோஜாக்கூட்டம்' ஆகிய நான்கு தொடர்களில் நடித்துக்கொண்டிருக்கிறேன். மானாட மயிலாட ரியாலிட்டி ஷோவில் கலந்துக் கொண்டு டான்ஸ் ஆடிக்கிட்டு இருக்கேன். மஸ்தானா மஸ்தானாவுல ஏற்கனவே கலந்துகிட்டு டைட்டில் ஜெயிச்சியிருக்கேன். மானாட மாயிலாட எம்.எம்.2 ல ஜெயிக்க முடியல. எம்.எம்.4 பைனல்ஸ் ஆடி முடிச்சிருக்கோம். அடுத்த வாரத்தில் தெரிந்துவிடும், யார் ஜெயிக்கப் பண்ணப் போறாங்கன்னு. ரொம்ப படப்படப்பா இருக்கு. இந்த முறை கண்டிப்பா ஜெயிப்போம்னு நிறைய நம்பிக்கை இருக்கு.
"கண்மணி' தொடரில் வெறிதனமா பழிவாங்க துடிக்கிறீங்களே? யாரும் திட்டலையா?
உண்மையில் எனக்கு அந்த ரோல் ரொம்ப பிடிச்சிருக்கு. நான் ரொம்ப ரசித்து, கஷ்டப்பட்டு செய்கிற ரோல் அந்த திலகா கேரக்டர். இதுப் போல வித்தியாசமான கேரக்டர் செய்யும் போதுதான் மக்கள்கிட்ட நல்ல ரீச் கிடைக்கும். அதனாலயே நெகட்டீவ் ரோல் செய்ய எனக்கு ரொம்ப இஷ்டம். தங்கை மீது அளவு கடந்த பாசம் வைத்திருக்கும் அக்காவா வருவேன். ஒரு பிரச்னையால் பாதிக்கப்படும் தங்கைக்காகப் பழிவாங்க துடிக்கும் அக்கா கேரக்டர் அது. இந்த மாதிரி பழிவாங்குவது ரொம்ப பிடிச்சிருக்கு.
டான்ஸ் புரொகிராம்மில் கலந்து கொண்ட சின்னத்திரை நடிகர்கள் நிறைய பேர் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டாதாக சொல்கிறார்களே உண்மையா?
நான் ஏற்கனவே இந்த மாதிரி டான்ஸ் ஷோஸ் எல்லாம் கலந்துகிட்டதுனால எனக்கு எந்த பிரச்னையும் தெரியவில்லை. நான் ஒவ்வொன்றையும் தனித்தனியா பிரிச்சு செய்வதுனால என் மீது எந்தக் குற்றச்சாட்டும் இதுவரைக்கும் வந்ததில்லை. ஸ்பாட்டுக்குப் போய்ட்டா என்ன காட்சியோ அதை சரியா முடிச்சு கொடுத்திட்டு வந்திடுவேன். அங்க போய்ட்டு தூக்கமின்மை, டான்ஸ் பிராக்டிஸ் பண்ணுவதனால் ஏற்படும் வலி அதையெல்லாம் கம்மிச்சுக்க மாட்டேன்.
அதுப்போல ஷோ இருக்கிற அன்று சீரியலுக்கு தேதி தரமாட்டேன். ஒரே நேரத்துல ரெண்டடையும் செய்ய முடியாது.
பெரியத்திரையில் படங்கள் நடிச்சுகிட்டு இருக்கீங்களா?
என்னோட முதல்படம் "பெருசு' அதில் ஹீரோயினா நடிச்சிருக்கேன். காமராஜ் சார் டைரக்ட் செய்திருந்தார். அவர்தான் அந்தப் படத்திற்கு புரொடியூசரும் கூட. அதன்பிறகு கதம் கதம்ன்னு ஒரு படம் பண்ணியிருந்தேன். பத்மா மதன் டைரக்ட் செய்த "அம்முவாகிய நான்' என்ற படத்திலும் நடிச்சிருக்கேன்.
அதன்பிறகு தங்கர்பச்சன் சார் டைரக்ஷன்ல "பள்ளிக்கூடம்' படத்தில் நடிச்சிருக்கேன். பி.ஆர்.ஓ பாலன் டைரக்ட் பண்ணின "ராசாத்தி'ன்னு ஒரு டெலி ஃபிலிம் பண்ணியிருக்கேன். இப்போ லேட்டஸ்ட்டா பாலா சார் அஸிடெண்ட் டைரக்ட் பண்ணும் "தேரோடும் வீதியிலே' நடிச்சுகிட்டு இருக்கேன். அதற்கடுத்து பாலசூரியா சார் டைரக்ஷன்ல ஒரு படம். அதில் ரெண்டாவது ஹீரோயினா நடித்துக்கொண்டிருக்கேன்.
மானாட மயிலாட, தொடர்கள், பெரியத்திரைன்னு பிஸியா இருக்கீங்க எப்படி நேரம் கிடைக்குது?
காலையில் 9-9 சூட்டிங் முடித்துவிட்டு அதன் பிறகு டான்ஸ் பிராக்டீஸ்க்கு போயிடுவேன். இப்படி ஒவ்வொன்றுக்கும் நேரத்தை பகிர்ந்து செய்வதால் எந்த பிரச்னையும் இதுவரை வந்ததில்லை. இப்படி டைட் ஷெடியூல்ல ஓர்க் பண்ணுவது எனக்கு பிடிச்சிருக்கு. சும்மா உட்கார்ந்தா சோம்பேறி ஆயிடுவோம்ல. அதனால எப்போழுதும் சுறுசுறுப்பா இருக்கனும் ஏதாவது வேலையை செய்துகிட்டே இருக்கணும்.
இந்த மாதிரி கேரக்டர் நடிக்கணும்னு நினைத்ததுண்டா?
ஓரளவுக்கு எல்லா மாதிரி கேரக்டரும் நடிச்சுட்டேன். நான் இதுவரை நடிக்காத கேரக்டர்ன்னா அது பைத்தியகாரி கேரக்டர், இன்ஸ்பக்டர் கேரக்டர், ஊனமுற்றவர்கள் கேரக்டர் பண்ணதில்லை. அந்த மாதிரி கேரக்டர் பண்ண வேண்டும் என்று ஆசை நிறைய இருக்கு.
நடிப்பு தவிர உங்கள் பொழுதுபோக்கு என்ன?
நாட்டியம்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் பேஸிக்கலாவே ஒரு கிளாசிக்கல் டான்ஸர். இப்பவும் பரதநாட்டியத்தில் சாதிக்கணும்ங்கிற வெறி, எண்ணம் நிறைய இருக்கு. டான்ஸ் ஸ்கூல் வைத்து பெரிய அளவில் வரணும்ங்கிற ஆசையும் இருக்கிறது.
உங்க குடும்பத்தைப் பற்றி சொல்லுங்க?
டான்ஸ் மாஸ்டர் ராமன் பழனிதான் என் அப்பா. அம்மா, நான் தம்பி என்ஜினியரிங் படித்துக் கொண்டிருக்கான்.
http://www.dinamani.com/edition/stor...44&SEO=&Title=
Bookmarks