Page 12 of 46 FirstFirst ... 2101112131422 ... LastLast
Results 111 to 120 of 453

Thread: INTERVIEWS With TV Artists

  1. #111
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    கோலங்கள் அகிலாவின் அனுபவ பேட்டி

    சிவசக்தி, கோலங்கள்' சீரியலில் நடித்து வரும் அகிலா விஜய் "டிவி'க்காக "ரோஜாக்கூட்டம்' சீரியலிலும் நடித்து வருகிறார். படுஅழுத்தமான அவரின் அனுபவ பேட்டி:

    சொந்தமாக கம்பெனி வைத்திருப்பதாக சொன்னார்களே?

    சீசன்ஸ் ஈவன்ட்ஸ்'ங்கிற பேர்ல நானும் நண்பர் பிரதாப்பும் சேர்ந்து சென்னை தி.நகரில் நிறுவனம் ஒன்று வச்சிருக் கோம். ஸ்டார் நைட், ஸ்போர்ட்ஸ் ஸ்டார் புரோக்கிராம்ன்னு பல புரோக்கிராம்கள் நடத்திக் கொடுத்திருக்கோம். சமீபத்தில் "பிளாக் அண்ட் ஒயிட்' என்ற டைட்டிலில் பழம்பெரும் நடிகர், நடிகைகள் கலந்து கொண்ட "ஸ்டார் நைட்' புரோக்கிராமும் நடத்திக் கொடுத் தோம்.

    நிகழ்ச்சிகளை நடத்தும் போது பிரச்னைகளை சந்தித்த சம்பவம் ஏதும்?

    சின்ன நிகழ்ச்சிகளைவிட பெரிய நிகழ்ச்சிகள்ல நிறைய பிரச்னையை சந்திக்க வேண்டியிருக்கும். பிரச் னை வருதேன்னு நினைச்சு செய்த வேலையை பாதியில் விட்டுவிட்டு வந்துடமுடியாது. இட்லி வேணும்ன்னு நினைச்சா, அது சட்டியில் வெந்தால் என்ன, குக்கரில் வெந்தால் என்ன, நமக்கு தேவை இட்லி. நான் செய்ய வந்ததை நல்லபடியாக செய்து முடிக்கணும்ங்கிற ஆர்வம் இருந்ததால தான் தனியா நிறுவனம் வச்சு நடத்துகிற அளவுக்கு தைரியமாக முயற்சிக்க முடிகிறது.

    சாதாரண வேலை யை செய்துவிட்டு சாதித்து விட்டோம் என்று பெருமை பேசிக்கொள்பவர்கள் பற்றி ...?

    யாரோ எவரோ எது வேண்டும்னாலும் பேசிக்கலாம். அது அவுங்க அவுங்க இஷ்டம். அவுங்க நேச்சர்'ன்னு நினைச்சு நாம கண்டுக் காம விட்டுடணும். அவுங்க நமக்கு வேண்டப்பட்டவங்களாக இருந்தா நாம திருத்த முயற்சி பண்ணலாம். எந்த சூழ்நிலைகளில் எப்படி நடந் துக்கணும்ன்னு எடுத்து சொல்லலாம். அவுங்க இதிலும் சரிப்பட்டு வரலைன்னா நாம ஒதுங்கிட வேண்டியது தான்.

    அருகில் இருந்து துதி பாடுபவர்கள் பற்றி?

    ஜால்ரா போடுறவங்களை பக்கத்தில் வைத்துக் கொள்வது ஆபத்தானது. இந்த மாதிரி மனிதர்களை பக்கத்தில் வைத்துக் கொள்வதைவிட ஒதுக்கி விடுவதே மேல்.

    வேலைக்கு போகிற பெண்களுக்கு வீட்டாரின் கட்டுப்பாடு பற்றி?

    பெண்களை எப்படி நடத்தினா அவுங்க சுதந்திரமாக நினைச்ச இலக்கை எட்ட முடியும்ன்னு பெற்றோர்களுக்கு தெரிகிறது. அதனால் பெண்பிள்ளைகளுக்கு கட்டுப்பாட்டினால் தடைகள் அவ்வளவாக இப்போது இல்லை என்று சொல்வேன்,'' என்று அகிலா அழுத்தமாக சொன்னார்.
    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #112
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    thank you aana

  4. #113
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    டி.வி. நடிகை நீரஜா.

    செய்தித்தாள்களிலும், டி.வி.யிலும்
    மாமியார் பிரச்னை, வீட்டு பிரச்னை இவற்றையெல்லாம் தாண்டி, இப்போதைய பெண்களுக்கு சமுதாயத்தில் நிறைய பிரச்னைகள் உள்ளன. செய்கிற தொழிலில் எத்தனை பெண்களுக்கு இந்த சமுதாயம் சுதந்திரம் கொடுத்து விட்டது என்று கேட்கிறார் டி.வி. தொடர் நடிகை நீரஜா. செய்தித்தாள்களிலும், டி.வி.யிலும் பெண்களுக்கு எதிராக நடக்கும் சம்பவங்கள் குறித்து வந்து கொண்டுதான் இருக்கின்றன. கணவரின் கொடுமை, மாமியார் கொடுமை என பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் ஏராளம். பெண்களின் நிலை இன்னும் மாறாமல்தான் இருக்கிறது. கணவரை விவாகரத்து செய்து விட்டு குழந்தையுடன் வாழும் பெண்ணின் கேரக்டர்தான் விஜய் டி.வி.யின் ரோஜக் கூட்டத்தில் எனக்கு. கணவரை விவாகரத்து செய்து விட்டு தனியே நின்று வாழ்க்கையை எதிர் கொள்ளும் பெண்களின் நிலையை என் கேரக்டர் பிரதிபலிக்கிறது. என்னைப் போல் ஏதோ காரணங்களால் தனித்து வாழும் சில பெண்களின் கதையும் இந்த சீரியலில் உண்டு. தற்போது பெண்களின் பிரச்னையை கதையாகச் சொல்லும் ஒரே சீரியல் ரோஜக் கூட்டம்தான். விவகாரத்து செய்த பெண்களுக்கு ஆண்களை கண்டாலே வெறுப்பு, பயம் ஏற்படுவது உண்மைதான். அந்த விஷயங்களை காட்டி நடிப்பது சற்று கஷ்டமாகத்தான் உள்ளது. சீரியல்களில் நடிக்க எனக்கு ஆர்வம் இருந்ததில்லை. குறும்படங்கள் சிலவற்றில் நடித்திருக்கிறேன். அதை பார்த்தவர்கள் ‘ரோஜக் கூட்டம்' சீரியலில் நடிக்க அழைத்தார்கள். கதையும் நன்றாக இருந்ததால் ஓ.கே சொல்லி விட்டேன். மற்றபடி சீரியல் எனக்கு புதிய இடம். தற்போது ‘யாதுமாகி நின்றாய்' என்ற புதிய சீரியல் ஒன்றில் நடித்து வருகிறேன். அந்த சீரியல் ஜீ டி.வி.யில் விரைவில் வர இருக்கிறது. அந்த சீரியலும் எனக்கு நல்ல பெயரை வாங்கி தரும். சினிமாவில் நடிப்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. நல்ல கேரக்டர்கள் வந்தால் பார்க்கலாம். இப்போதைக்கு சீரியல்தான் என்றார் நீரஜா.


    http://www.dinamani.com/edition/stor...e=Np30OLxH4ag=
    [/tscii]

  5. #114
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    ‘சீரியல்களில் மட்டுமே திருப்தி' அகிலா.

    சினிமாக்களுக்கு இருக்கிற வரவேற்பைப் போல் சீரியல்களுக்கான வரவேற்பும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. ஆனாலும், சீரியல்களின் கதை களம் இன்னும் மாறவில்லை. அதை மாற்றினால் சீரியல்களுக்கான வரவேற்பு இன்னும் கூடும் என்கிறார் சீரியல் நடிகை அகிலா. சீரியல்களின் எல்லைகள் சினிமாவைப் போல் இப்போது விரிந்திருக்கிறது. சீரியல்களுக்காக பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் உள்பட அனைத்தும் மாறியிருக்கிறது. பல நாடுகளில் ஷூட்டிங் நடத்தி சினிமாவில் சொல்லுகிற மெசேஜை ஒரு வீட்டில் வைத்து சீரியல் சொல்லுகிறது. அவ்வளவுதான் சினிமாவுக்கும் சீரியலுக்கும் உள்ள வித்தியாசம். நாளுக்கு நாள் பெருகி வரும் டி.வி. சேனல்கள் போட்டி போட்டு சீரியல்களை வழங்கி வருகிறது. இந்த போட்டி ன்னை போன்ற நடிகைகளுக்கு நல்ல உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. போட்டியிடும் எந்த துறையும் வருங்காலத்தில் சிறந்து விளங்கும். தற்போது ‘சிவசக்தி' தொடரில் வீட்டில் இருந்து வெளியேறி தன்னம்பிக்கையுடன் வாழும் காஞ்சனா என்ற கேரக்டரிலும், ‘ரோஜாக் கூட்டத்தில்' திருமணமாகி குடும்பத்தை சிறப்பாக நடத்தும் லீனா என்ற கேரக்டரிலும் நடித்து வருகிறேன். இரண்டுமே சவால் நிறைந்த கேரக்டர்கள் ஆகும். வேறு எந்த சீரியல்களிலும் இப்போது நடிக்கவில்லை. இந்த கேரக்டர்களை சிறப்பாக செய்தாலே போதும். பொழுது போக்கு என்று எனக்கு தனியாக எதுவும் கிடையாது. நடிப்பதே பொழுதுபோக்காக இருப்பதால் எப்போதும் அதை பற்றிதான் சிந்தனைகள் இருக்கிறது. இந்த இரண்டு சீரியல்களை சரியாக செய்யவே நேரம் போதவில்லை. இந்த சினிமாவில் அந்த நடிகர் நடித்திருக்கிறார். அதனால், அதை பார்க்க வேண்டும் என்று சொல்லுவதை போல், சீரியல்களும் ஆகி விட்டன. இது சீரியல்களின் வெற்றி. சினிமாவில் நடிப்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. அதற்கான நேரமும் இப்போது இல்லை. சினிமாவில் நல்ல கேரக்டர்கள் கிடைக்க கொஞ்சம் காலம் ஆகும். அதுவரை காத்திருக்க முடியாது. இப்போதைக்கு சீரியல்களில் மட்டும்தான் திருப்தி என்றார் அகிலா.

    http://www.dinamani.com/edition/stor...e=Np30OLxH4ag=


  6. #115
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    'ஆண்களின் வீரம் பெண்களைக் கவரும்'

    சிநேகா


    ஒரு மாலை பொழுதில் சிநேகாவை, சென்னை ஆலப்பாக்கத்திலுள்ள அவரது வீட்டில் சந்தித்தோம். அந்த வீட்டில் தனக்காக தனி அலுவலகமே அமைத்திருக்கிறார் சிநேகா! அந்த அலுவலகத்தில் அவருடனான சந்திப்பில் படபடவென மனம் விட்டு யதார்த்தமாகப் பேசினார். அந்தப் பேச்சில் எந்தத் தடங்கலும், தடையும் ஏற்படவில்லை.

    நீங்க இப்போது நடித்துக் கொண்டிருக்கும் படங்கள் பற்றி சொல்லுங்க?

    ""பவானி', "முரட்டுக்காளை', "கோவா', "நூற்றுக்கு நூறு' எனப் பல படங்களில் நடித்து வர்றேன். இதில் "முரட்டுக்காளை'யின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. மே மாதத்திலிருந்து "கோவா' படத்தோட ஷூட்டிங் ஆரம்பமாகும். அதற்குப் பிறகு "நூற்றுக்கு நூறு', அதற்கடுத்து "ஆட்டோகிராஃப்-பாகம்-2' என வரிசையாக போகும்.

    "பவானி'யில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறேன். அந்த கேரக்டரில் நான் நடித்ததைப் பார்த்து நிறையப் பேர் "பில்டப்' பண்ணிப் பேசினாங்க. அதாவது, நான் ஹீரோக்களுக்கு சமமாக பறந்து பறந்து அடிக்கிறேன், அவங்களுக்கு இணையாக சண்டை போடறேன்னு!

    அதெல்லாம் பொய். ஹீரோக்கள் எல்லாம் எவ்வளவு உயரத்துல இருக்காங்க. சில ஹீரோக்கள் ஃபைட்டுக்காகவே பேசப்படுறாங்க. அப்படியிருக்கும்போது என்னைப் பற்றிய இந்த "பில்டப்' எல்லாம் சுத்த பொய். என்னோட முதல் ஆக்ஷன் படம் "பவானி'. இதில் ஒரு ஆக்ஷன் கேரக்டரில் நடிக்கிறேன், அவ்வளவுதான். மற்றபடி என்னை அவங்களுடன் கம்பேர் பண்ணவே கூடாது.

    சினிமாவில் ஆண்கள் என்றால் கம்பீரம், பெண்கள் என்றால் கவர்ச்சி என்றுதானே காட்டுகிறார்கள்?

    அப்படின்னு சொல்ல முடியாது. பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள சில படங்களும் வந்துகொண்டுதானே இருக்கு? ஆனா, ஆண்களின் வீரம் பெண்களைக் கவரும். அதுபோன்று, பெண்களின் அழகு ஆண்களைக் கவரும். இது அந்த காலத்திலிருந்தேப் பேசப்பட்டு வரும், பார்க்கப்பட்டு வரும் விஷயம்.

    அதை நான் எப்படி மாத்த முடியும். "பவானி' படத்தைப் பொறுத்தவரையில் அந்த கதாபாத்திரத்துக்கு என்னால் எவ்வளவு ஆக்ஷன் பண்ணமுடியுமோ அவ்வளவு பண்ணியிருக்கேன். இதில் மூணு ஃபைட் இருக்கு. அறிமுக காட்சியே புதுசா இருக்கும். வழக்கமாக முடியை தூக்கிப் போட்டுக்கிட்டு சிரிக்கிற சிநேகா இல்லாமல், புதுமையான சிநேகாவை இப்படத்தில் பார்க்கலாம்.

    விஜயசாந்திக்கு "வைஜெயந்தி ஐ.பி.எஸ்.' படம் ஆக்ஷன் நடிகை என்ற முத்திரையைத் தந்தது. அது மாதிரி ரசிகர்களைக் கவர வேண்டும் என்று இந்தப் படத்தில் நடிக்கிறீங்களா?

    அப்படியெல்லாம் நான் எதிர்பார்க்கல. இது அந்தப் படத்தோட ரீ-மேக். இந்தப் படத்தில் நான் விஜயசாந்தி அளவுக்கு பேர் வாங்குவேனான்னு எனக்குத் தெரியாது. ஒரு வித்தியாசமான படம் பண்ணனும்னு ஆசைப்பட்டு பண்றேன்.

    அதை ரசிகர்கள் எப்படி எடுத்துக்குவாங்கன்னு தெரியாது. என்னால எவ்வளவு சிறப்பாக கொடுக்க முடியுமோ அந்தளவுக்கு கொடுப்பதற்காக நிறைய சிரத்தை எடுத்து நடித்திருக்கேன். நான் விஜயசாந்திக்கு நிகராக பண்ணியிருக்கேனா? இல்லையா? என்பதை படம் பார்த்து ரசிகர்கள் முடிவு செய்வாங்க.

    சண்டைக் காட்சிகளில் எப்படி நடித்திருக்கிறீங்க?

    இந்தப் படத்துக்கு "தளபதி' தினேஷ்தான் ஸ்டண்ட் மாஸ்டர். அவர் என்னை நடிக்க வைக்க ரொம்பவும் கஷ்டப்பட்டார். அவருக்கு கண்டிப்பாக நன்றி சொல்லணும். ஒரு பெண்ணால் எவ்வளவு பண்ண முடியுமோ அவ்வளவு பண்ணியிருக்கேன். என்னைவிட பெரிய உருவத்துல இருக்கிற ஒருவரை அடிக்கும்போது எப்படிப்பட்ட எக்ஸ்பிரஷன்ûஸ வெளிப்படுத்தணுமோ அப்படி வெளிப்படுத்தி நடித்திருக்கேன்.

    ஓடும்போதுகூட இப்படி ஓடினா நல்லா இருக்கும், அப்படி ஓடினா நல்லா இருக்கும்னு சொல்லி நடிக்க வைத்திருக்காங்க. ஏன்னா, கத்துக்குட்டிதனமாக இருக்கக்கூடாது அல்லவா? நான் ஆக்ஷனில் நல்லா பண்ணியிருக்கேன்னு எல்லாரும் சொல்றாங்க. அது எப்படி வந்திருக்குன்னு படம் வரும்போதுதான் தெரியும். சில காட்சிகளில் ரோப் கட்டி எல்லாம் நடிச்சிருக்கேன். இதெல்லாம் வித்தியாசமான அனுபவமா இருந்தது.

    "பவானி' வேடத்துக்காக போலீஸ் டிரெஸ் போட்டதும் எனக்குள் ஒரு வீரம் வந்துடுச்சு. நடக்குற ஸ்டைலே மாறிப்போச்சு. ஒரு போலீஸ் அதிகாரிக்கான கம்பீரம், மிடுக்கு தானாகவே வந்துடுச்சுன்னு சொன்னாங்க. அது எப்படின்னு எனக்கே தெரியல.

    அது மாதிரி "பார்த்திபன் கனவு' படம் பண்ணும்போது டைரக்டர் கரு. பழனிப்பன் சார் கேட்டார், ""பேண்ட், சட்டை போட்டு ஜனனி கேரக்டராக வரும்போது படு ஜாலியாக வர்றீங்க, அப்புறம் சேலை கட்டி வரும்போது அடக்கமாக உங்க நடையும், ஸ்டைலும் வேறு மாதிரி இருக்கே, இது எப்படி?''ன்னு. இதுதான் என்னோட பிளஸ்ன்னு நினைக்கிறேன்.

    இனிமேல் ஆக்ஷன் படங்களில் மட்டும்தான் நடிப்பீங்களா?

    இல்லை... இல்லை...! நான் தனிப்பட்ட ஒரு இமேஜில் சிக்க விரும்பல. ஹோம்லியாவும் நடிப்பேன், நல்ல கதை, பாத்திரம் என்றால் ஆக்ஷனிலும் நடிப்பேன். இப்போது வருஷத்துக்கு ஆறு, ஏழு படங்கள் பண்றேன். எல்லாம் ஆக்ஷன் படங்களாக பண்ண முடியுமா என்ன? அப்படி பண்ணினால் அது போரடித்து விடும்.

    நீங்க முதலில் நடித்த "ஆனந்தம்', "என்னவளே' போனற படங்கள் குடும்பப் பாங்காக அமைந்ததால் உங்களை அதே மாதிரி கதாபாத்திரங்களில் நடிக்க வைத்து விட்டார்களா?

    ஆமாம். அது உண்மைதான். அதுல எனக்கு சந்தோஷமும்கூட! தமழ்நாட்டுக்கு எவ்வளவு கதாநாயகிகள் வந்தாலும் சினேகாவுக்குன்னு ஒரு இடம் எப்போதும் இருக்கும். அதை ரசிகர்கள் எனக்கு கொடுத்திருக்காங்க. இது சந்தோஷமான விஷயம்.

    ஹோம்லியான வேடங்கள் செய்து இப்போது ஆக்ஷன் வேடங்கள் பண்றதால இன்னும் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். என்னை ஹோம்லியா பார்க்கவும் ஒரு சாரர் இருக்காங்க, ஆக்ஷனில் பார்க்கவும் ஒரு கூட்டம் இருப்பாங்க. யாரை இழக்கவும் நான் விரும்பல. அதனால் நான் கண்டிப்பா ஹோம்லியாகவும், கிளாமராகவும், ஆக்ஷனும் பண்ணுவேன்.

    "பவானி' படத்துல விஜயசாந்தி மாதிரி ஆக்ஷன், "முரட்டுக்காளை'யில் ரதி மாதிரி கிளாமரா?

    சூப்பர் கிளாமர். பாவாடை, தாவணியில் சூப்பராக வருவேன். செல்வபாரதி இயக்கத்துல, சுந்தர்.சி.யுடன் நடிப்பது நல்லா இருந்தது. ஏற்கனவே செல்வபாரதி டைரக்ஷன்ல "வசீகரா' படத்துல நடித்திருக்கேன். "பவானி'க்கும், "முரட்டுக்காளை' கேரக்டருக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. மேக்-அப்ல இருந்து, டிரெஸ், ஹேர் ஸ்டைல், நடிப்புன்னு எல்லாம் வித்தியாசமாக இருக்கும்.

    பழைய "முரட்டுக்காளை' படத்துல ரதி நல்லா கிளாமர் பண்ணியிருப்பாங்க. நான் என்னால எவ்வளவு பண்ண முடியுமோ அவ்வளவு பண்ணியிருக்கேன். ஒவ்வொரு படத்திலும் எனக்கு வித்தியாசமான பாத்திரங்கள் அமையுது. "பள்ளிகூடம்' படத்தில் என்னை கோகிலாவாக பார்த்தாங்க. "பவானி'யில் பவானியாக பார்ப்பாங்க. எந்தப் பாத்திரம் என்றாலும் சிநேகா நல்லா நடிச்சிருக்காங்கன்னு எல்லோரும் சொல்லணும். அதுதான் எனக்குத் தேவை.

    "கோவா' படத்தில் "படையப்பா' ரம்யாகிருஷ்ணன் மாதிரி வில்லியாக நடிக்கிறீங்களாமே?

    அதை முழுக்க வில்லி பாத்திரம் என்று சொல்ல முடியாது. கொஞ்சம் நெகட்டீவான ரோல், அவ்வளவுதான். ஆனால் ரொம்பவும் நல்ல பாத்திரம். வெங்கட் பிரபு சார் கதை சொல்லும்போது என் கேரக்டரை குறிப்பிட்டு ""இதை நீங்க எப்படி எடுத்துக்குவீங்கன்னு எனக்குத் தெரியாது, கதையை கேளுங்க'' என்றார். அப்போது, எனக்கும் நெகட்டீவ் ரோல் பண்ணனும்னு ஆசை இருக்கு. நான் பண்றேன்னு சொல்லி உடனே ஒத்துக்கொண்டேன்.

    இப்போது தெலுங்குப் படங்களிலும் நடிக்கிறீங்க இல்லையா?

    "பவானி' படத்தை தெலுங்கிலும் எடுக்கிறாங்க. இது தவிர இப்போது வேறு எந்தத் தெலுங்கு படமும் பண்ணல. தமிழ் ரசிகர்கள்கிட்ட எனக்கு எப்படிப்பட்ட வரவேற்பு இருக்குதோ, அது மாதிரிதான் தெலுங்குலயும். தமிழ்ல பண்ற மாதிரிதான் அங்கேயும் படங்களை தேர்வு பண்றேன்.

    தெலுங்கில் அதிகமா கிளாமர் எதிர்பார்ப்பாங்களே?

    ஆமாம். அங்கே கொஞ்சம் அதிகமாக எதிர்பார்ப்பாங்க. அப்படி என்னால பண்ண முடியாது. எனக்கேற்ற வேடங்கள் என்றால் பண்ணிட்டு போவேன். மற்றபடி வல்கரா நடிக்க மாட்டேன்.

    இனிமேல் தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளிலும் எடுக்கப்படும் படங்களில்தான் நடிப்பீங்களா?

    அதை நான் முடிவு செய்ய முடியாது. ரெண்டு மொழியிலயும் ஒரே நேரத்துல எடுக்கும்போது, ரெண்டு மொழிக்கும் தகுந்த மாதிரி வியாபாரம் இருக்கும். அப்போது அதுக்கு தகுந்த மாதிரி, கதையைப் பண்ணனும். அப்படி அமையும்போது கண்டிப்பா நடிப்பேன.

    கல்யாணம் எப்போ?

    இன்னும் மூணு வருஷம் ஆகலாம். நான் சினிமா துறைக்கு வந்து எட்டு வருஷம் ஆயிடுச்சு. எங்க வீட்ல யாரும் இதுவரை என்னை திருமணம் செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தல. எது நடக்கணுமோ அது நடக்கும், எப்போ நடக்குமோ அப்போ கண்டிப்பா நடக்கும்.

    பெற்றோர்கள் பார்த்து வைக்கும் திருமணமா? அல்லது காதல் திருமணமா?

    தெரியல. ஆனா, எனக்கு நடக்கும் கல்யாணம் எல்லோருக்கும் தெரிந்துதான் நடக்கும். அதை மட்டும் இப்போதைக்கு உறுதியாகச் சொல்றேன்.

    திருமணத்துக்குப் பிறகு நடிப்பீங்களா?

    எல்லாத்தையும் காலம் தான் தீர்மானிக்கும். நாம் என்ன சொல்ல முடியும்? வாழ்க்கை போகிற வழியில் போக வேண்டியதுதான்'' என்றார்.

    சந்திப்பு : ஜி. பாலன்


    தினமணி் [/size]
    "அன்பே சிவம்.

  7. #116
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like

    ‘மெட்டி ஒலியை தாண்டும் வளையோசை'

    27 Monday

    சீரியல்களில் நடித்த அனுபவங்களில் சில வாழ்க்கைக்கு பயன்படுகிறது. வாழ்க்கையில் ஏற்படுகின்ற அனுபவங்கள் சில சீரியலுக்கு பயன்படுகிறது. எது எப்படியோ எனக்கு இரண்டுமே நன்றாக போய்க் கொண்டிருக்கிறது என்கிறார் ‘மெட்டி ஒலி' உமா மகேஷ்வரி.

    ‘மெட்டி ஒலி' என்கிற மெகா ஹிட், என் சீரியல் பயணத்தில் என்னை நானே வியந்து பார்க்கிற ஒரு விஷயம். சரியான கதை, கதைக்கு ஏற்ற நடிகர்கள் என எல்லாமே அமைந்து விட்டால் சீரியல்கள் ஜெயிக்கும் என்பதற்கு அந்த சீரியலே ஒரு உதாரணம்.

    மெட்டி ஒலிக்கு பிறகு ‘நம்ம குடும்பம்', ‘மஞ்சள் மகிமை', ‘சிவசக்தி' என பல தொடர்களில் நடித்து வரும் நிலையில் தற்போது ‘வளையோசை' என்ற சீரியலும் சேர்ந்திருக்கிறது.

    எனக்கு வருகின்ற கதைகள் எல்லாமே நன்றாக இருக்கிறது. அதில், என்னுடைய கேரக்டர்களும் அப்படிதான். வளையோசையில் சுசீலா எனும் கேரக்டரில் வருகிறேன். ஒரு பெண்ணுக்கு வளையல்கள் எவ்வளவு முக்கியமோ அது போல்தான் வளையோசைக்கு என் கேரக்டரும்.

    ‘மெட்டி ஒலி' என்ற பெரிய ஹிட்க்கு பிறகு என்னை எல்லோரும் ‘மெட்டி ஒலி' மகேஷ்வரி என்றுதான் அழைக்கிறார்கள். அது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. சீரியல்களுக்கு மக்கள் சரியான அங்கீகாரம் கொடுக்கிறார்கள் என்பதற்கு மெட்டி ஒலியே சாட்சி. அது என் வாழ்க்கையின் சாட்சி.

    மறுபடியும் சன் டி.வி.யில் ‘மெட்டி ஒலி' மறு ஒளிபரப்பு செய்யபடுகிறது. அதை மக்கள் மீண்டும் பார்க்கிறார்கள் என்கிற போது பெருமையாக இருக்கிறது. மெட்டி ஒலியின் வெற்றியை நான் கணக்கில் வைத்து கொள்ளவில்லை. அதை தாண்டிய வெற்றி தேவைப்படுகிறது. அதை ‘வளையோசை' கொடுக்கும் என நினைக்கிறேன்.

    வளையோசையும் மெட்டி ஒலி போன்ற குடும்ப கதை அம்ச உள்ள சீரியல் என்பதால் அதை என்னால் சொல்ல முடிகிறது. வீட்டில் இருப்பதற்கும் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருப்பதற்கும் ஒன்றும் வித்தியாசமில்லை. ஏனென்றால் இரண்டு இடத்திலும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறோம் என்றார் உமா மகேஷ்வரி.

    http://www.dinamani.com/edition/story.aspx?Title=%22%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0 %AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%92%E0%AE%B2%E0%AE% BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E 0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE %B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9A%E 0%AF%88&artid=wZmijy|dBzE=&SectionID=SO2rbXgWYYc=& MainSectionID=SO2rbXgWYYc=&SEO=&SectionName=Np30OL xH4ag=

  8. #117
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    என்னை வெச்சு காமெடி கீமெடி பண்ணாதீங்க!'

    First Published : 04 May 2009 11:06:00 AM IST

    Last Updated :

    ‘மாயி' படத்தில் ‘வாம்மா... மின்னல்' என்றதும் மின்னலாய் வந்து மாயமாய் மறைந்து போனவர் தீபா. அதன் பிறகு எங்கே போனார் எனத் தேடினால் ‘மின்னல்' தீபா என்ற அடைமொழியுடன் சீரியல்களில் வலம் வந்துகொண்டிருக்கிறார்.

    இனி அவரே....

    ‘மாயி' படத்தின் ‘வாம்மா... மின்னல்' காமெடி, பட்டி தொட்டியெங்கும் என்னைக் கொண்டு சேர்த்தது. அதன் பிறகு வந்த சினிமா வாய்ப்புகள் எல்லாம் என்னை முழுமையான காமெடி நடிகை ஆக்கிவிடும் போலிருந்தது.

    காமெடி என்ற வட்டத்துக்குள் இருக்க எனக்கு பிடிக்கவில்லை என்பதால்தான் என்னை நீங்கள் சினிமாவில் பார்க்க முடியவில்லை. இல்லையென்றால் சினிமாவில் நானும் ஒரு ரவுண்டு வந்திருப்பேன்.

    இப்போது சீரியல் உலகில் எனக்கென தனி இடம் இருக்கிறது. அதைக் காப்பற்றி கொள்ளவே பம்பரமாய் சுற்றி வருகிறேன். தமிழில் ‘வளையோசை', ‘பொய் சொல்ல போறோம்', தெலுங்கில் ‘சந்திரலேகா' என அருமையான கதைகளைக் கொண்ட தொடர்கள் கிடைத்திருக்கின்றன.

    ‘வளையோசை'யில் ஆர்த்தி என்ற கேரக்டரில் கதாநாயகனின் தங்கையாக நடிக்கிறேன். என்னுடைய கேரக்டர் கதையில் சில திருப்பு முனைகளை ஏற்படுத்தப் போகிறது. அதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    ‘வளையோசை'யில் இப்போதுதான் கதை வேகம் எடுக்க ஆரம்பித்திருக்கிறது. என் கேரியரில் இந்த தொடர் நல்ல பெயரை வாங்கித் தரும்.

    தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் வந்தாலும் அவற்றில் எனக்கு திருப்தியாக இருக்கும் கேரக்டரில் மட்டும் நடிப்பேன்.

    காதல், திருமணம் என எதற்குமே இப்போது அவசரமில்லை. அதற்கான காலம் வரும்போது அது நிச்சயம் நடக்கும். அதற்குள் சினிமாவில் சாதித்து விட்டு குடும்பத்தோடு அதைப் பார்க்க வேண்டும் என்றார் ‘மின்னல்' தீபா.
    http://www.dinamani.com/edition/story.aspx?Title=%22%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0 %AE%A9%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9A%E0%AF% 8D%E0%AE%9A%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E 0%AF%86%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%80%E0%AE %AE%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%A3% E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE %99%E0%AF%8D%E0%AE%95!&artid=ADqvhsUXWys=&SectionI D=SO2rbXgWYYc=&MainSectionID=SO2rbXgWYYc=&SEO=&Sec tionName=Np30OLxH4ag=

  9. #118
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    மாற்றங்களை ரசிக்கிறேன்'

    First Published : 09 May 2009 09:51:00 PM IST

    Last Updated :

    விரும்பிய நேரத்தில் விரும்பியது எல்லாம் கிடைக்க வேண்டும் என்றுதான் எல்லோரும் நினைக்கிறோம். கிடைக்காத நேரத்தில் மனம் சஞ்சலப்படுவதும், கிடைக்கும் போது துள்ளி குதிப்பதும் எல்லோர் வாழ்க்கையிலும் இருக்கிறது. அது போல்தான் என் வாழ்க்கையும் என்கிறார் நடிகை காயத்ரி ஜெயராம்.

    ""மனதை திருடி விட்டாய்' படம் மூலம் சினிமாவில் அறிமுகமான எனக்கு சினிமா உலகம் மிகவும் பிடித்திருந்தது. சினிமா நான் விரும்பி ஏற்றுக் கொண்ட ஒன்றுதான். இன்று வரைக்கும் எனக்கு சினிமா பிடிக்கும். அதில் தொடர்ந்து இருக்க முடியவில்லை என்பதில் எனக்கு கொஞ்சம் வருத்தம் இருந்தது. இப்போது இல்லை. காரணம் மாற்றங்கள்தான்.

    சின்ன வயதில் இருந்தே நீச்சல், டைவிங் இதுவெல்லாம் ரொம்ப பிடிக்கும். அதனால், சினிமாவை விட அதன் மீதுதான் எனக்கு காதல் இருந்தது. அதுதான் என்னை சினிமாவில் இருந்து சற்று தள்ளி வைத்து விட்டது.

    திருமணத்துக்குப் பிறகு சினிமாவுக்கு முழுமையாக முழுக்கு போட்ட என்னை நீச்சல், டைவிங் என வாழ்க்கை அடுத்த கட்டத்துக்கு இழுத்து போய் விட்டது. இப்போது மலேசியாவில் இயங்கி வரும் குழந்தைகளுக்கான நீச்சல் மற்றும் டைவிங் பள்ளியில் டீச்சராக இருக்கிறேன். அந்த ஆர்வம் என்னை சினிமாவில் இருந்து முழுமையாக நீக்கி விட்டது.

    வருடத்தில் ஆறு மாதம் சென்னைக்கு வந்து போவேன் அப்போதுதான் என்னை விஜய் டி.வி.யின் "ச்சீயர் லீடர்ஸ்' நடன நிகழ்ச்சிக்கு நடுவராக இருக்க சொன்னார்கள். நானும் ஒ.கே. சொல்லிவிட்டேன். இப்படி கிடைத்ததுதான் இந்த நடுவர் பதவி.

    இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் மறுபடியும் மலேசியாவிற்கு பறந்து விடுவேன். திரும்பி வரும்போது எது கிடைக்கிறதோ அதை செய்வேன். அதில் எனக்கு திருப்தி இருந்தால் மட்டும்.

    இனி சினிமா, சீரியல்களில் பார்ப்பது என்பது முடியாத விஷயம். அதற்காக நான் வருத்தப்படவில்லை. என் வாழ்க்கையில் சினிமா என்பதும் ஒரு இடம் அதில் நான் இருந்தேன் அவ்வளவுதான். இப்போது மாற்றங்களை ரசிக்க ஆரம்பித்து விட்டேன்'' என்றார்.
    நன்றி: தினமணி
    "அன்பே சிவம்.

  10. #119
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    குடும்ப கதையில் உள்ள சௌகரியம்': ஆனந்த கண்ணன

    First Published : 12 May 2009 11:36:46 PM IST

    Last Updated : 13 May 2009 02:04:51 AM IST

    சின்னத் திரை ஆனந்தகண்ணன் தற்போது "இத்தனை நாளாய் எங்கிருந்தாய்' படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

    ""சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த எனக்கு இயற்கையிலே நாட்டுப்புறவியலை பற்றி தெரிந்துக் கொள்ளும் ஆர்வம் இருந்தது. அதற்காக அப்பாவிடம் ஒரு குறிப்பிட்ட தொகையை வாங்கி கொண்டு சென்னை வந்து கூத்துப் பட்டறையில் சேர்ந்து, வந்த வேலையை பார்த்து கொண்டிருந்தேன். திடீரென்று ஒரு நாள் பாக்கெட் மணி தீர்ந்து விடவே வந்து சேர்ந்த இடம் தான் மீடியா.

    மீடியாவில் முன் அனுபவம் இல்லையென்றாலும் எனக்கு தெரிந்தவற்றை வைத்து சரியாக செய்தேன். அதற்கு மக்களும் சரியான அங்கீகாரம் கொடுத்தார்கள். அந்த விஷயத்தில் கொடுத்து வைத்தவன் நான்.

    அதன் பிறகு சீரியல், ரேடியோ என வாழ்க்கை ஏதோ ஒரு பாதையில் பயணமாகி கொண்டே இருந்தது. அப்போதெல்லாம் தினமும் அமெரிக்க மாப்பிள்ளை, அத்தை பையன், ஹீரோவின் நண்பன் என ஆயிரம் சினிமா கேரக்டர்கள் வந்து கொண்டே இருக்கும். அதில் எதிலும் மனசு ஒட்டவே இல்லை.

    திடீரென்று ஒரு நாள் இயக்குநர் பாலு என்னிடம் ஒரு கதை சொன்னார். பாலு "காலமெல்லாம் காதல் வாழ்க' என்ற ஹிட் அடித்தவர். அவர் கதையை சொல்லி முடித்து விட்டு கண்ணன் நீங்கதான் ஹீரோ என்றார். நானும் ஒ.கே. சொல்லிவிட்டேன்.

    "இத்தனை நாளாய் எங்கிருந்தாய்' என அந்தக் கதைக்கு பெயர் வைக்கப்பட்டு இப்போது படமாகி கொண்டிருக்கிறது. சும்மா சாதரணமாக வந்து விட்டு போகும் ஒரு குடும்ப படம். படத்திற்காக மற்ற ஹீரோக்கள் செய்வதை போல் பத்து கிலோ, இருபது கிலோ என உடல் எடையை குறைக்க வேண்டியதில்லை என்பது குடும்பக் கதைகளில் உள்ள சௌகரியம்.

    எப்போதாவது வருகின்ற ஒன்றிரண்டு குடும்பப் படங்கள் இங்கே அதிர்வுகளை எற்படுத்தி இருக்கிறது. அது போல், இந்தப் படமும் தமிழ் சினிமாவில் சில அதிர்வுகளை எற்படுத்தும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    சிங்கப்பூரிலிருந்து எதற்கோ வந்த என்னை காலம் எங்கோ இழுத்து விட்டிருக்கிறது. இன்னும் எங்கோ கொண்டு போகிறதோ அங்கே போய்தானே ஆக வேண்டும். பயணங்களின் தொகுப்புதானே வாழ்க்கை? நான் பயணிக்க ரெடி ஆகி விட்டேன்'' என்கிறார் ஆனந்த கண்ணன்.
    நன்றி: தினமணி
    "அன்பே சிவம்.

  11. #120
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    Shruthi daughter of Kamal Hassan who has been given a chance to music direct the film Unnaipol Oruvan, is always casual and has no tension at all. She has no fears over her entry in the music line for the film and she at any time never had the tension that one more responsibility of becoming an actress for the film Luck, being produced in the Bollywood.

    She says, “ I never had the fear for becoming a music director, it was my father Kamal Hassan who alone recommended me to music direct Unnaipol Oruvan. Of course, I am always careful to earn the name of a good music director. I also wanted to become good actress. I have self-confidence in me, that I could prove a good music director”.

    She adds: Because of my parents’ inducement, I have learnt Hindustani Music, and the music has become inseparable from me. I was about to act with Madhavan in a film, and for some reasons, I had to abandon the plan. The genes of my father, runs through the veins of myself. If my father is assigned any duty or job, he would take care of those things and would finish them in an appreciable way. This I have notice on several occasions, and I too want to follow his ideals.

    When asked about her the modern style with modern dresses, she said that she had been wearing it quite a long time and it was her usual custom to dress like that. “ I can’t change my style, since my childhood and it is like asking a person why he brushes his teeth every day in the morning.

    “ My father used to advise me always to work sincerely and also cautioned me not to become jealousy over one’s praise. These advises are like weapon saving me.

    When asked about her sister Akshara, Shruthi said she had been concentrating on her studies, besides she had been learning Kuchipudi dance. “After finishing her studies, it is she who has to decide and choose her career” says Shruthi.

    If there is any controversy will you support your father? Our reporter asks this question. Shruthi smilingly replies, “ I always used to give my moral support to my dad”.
    "அன்பே சிவம்.

Page 12 of 46 FirstFirst ... 2101112131422 ... LastLast

Similar Threads

  1. IR concerts, TV shows and Interviews ...
    By Sanjeevi in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 355
    Last Post: 2nd June 2018, 06:26 AM
  2. Sharing-IR's music-interviews-BgmClips- in web
    By rajasaranam in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 860
    Last Post: 2nd October 2012, 12:43 AM
  3. Talented TV artists
    By swathy in forum TV,TV Serials and Radio
    Replies: 20
    Last Post: 21st March 2010, 10:13 PM
  4. Artists and their best emotions
    By Shakthiprabha. in forum Tamil Films
    Replies: 167
    Last Post: 22nd May 2007, 08:41 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •