Page 11 of 46 FirstFirst ... 91011121321 ... LastLast
Results 101 to 110 of 453

Thread: INTERVIEWS With TV Artists

  1. #101
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    சினிமாத்துறை எனக்கு பிடிக்காது: (நடிகைசந்த்ரா)

    திருமணத்திற்கு பிறகு பெண்களுக்கு சுதந்திரம் இருக்காது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. திருமணத்துக்கு பிறகுதான் நான் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன் என்கிறார் பிரஜீன் மனைவியும் நடிகையுமான சந்த்ரா.

    கிரண் டி.வி.யில் நான் காம்பியராக இருந்தபோது பிரஜீன் சன் மியூசிக்கில் இருந்தார். ஒரே துறையில் இருந்ததால் ஏற்பட்ட இனம் புரியாத உணர்வுதான் காதலாக மலர்ந்து விட்டது.

    என் நிகழ்ச்சியை மிஸ் செய்தாலும் உங்கள் நிகழ்ச்சியை நான் மிஸ் பண்ணுவதே இல்லை என போன் செய்து பிரஜீன் வழிந்த தருணங்கள் நிறைய உண்டு.

    எங்களின் திருமணத்துக்கு இரு வீட்டிலும் சம்மதம் இல்லாதபோது நாங்களே கோயிலுக்குச் சென்று திருமணம் செய்துகொண்டோம். திருமண வாழ்க்கை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. காதலித்தவரை திருமணம் செய்துகொண்டு வாழ்வதில் எவ்வளவு சந்தோஷம் இருக்கிறது. சந்தோஷமான வாழ்வைக் கொடுத்த காதலுக்கு நன்றி.

    ராஜ் டி.வி.யின் ‘நாகம்மா', விஜய் டி.வி.யின் ‘ரோஜாக்கூட்டம்' என இரு சீரியல்களிலும் நடித்து வருகிறேன். சீரியல் வாழ்க்கை நான் விரும்பி ஏற்றுக் கொண்டதுதான். என்னை பொருத்தவரைக்கும் சீரியலில் இருக்கும் சுதந்திரம் சினிமாவில் இல்லை என்றுதான் சொல்வேன்.

    மலையாளத்தில் 50-க்கும் மேற்பட்ட சினிமாக்களில் நடித்துவிட்டேன். குழந்தைப் பருவத்திலிருந்தே நடித்து வருகிறேன். நாயகியாக 10 படங்களில் நடித்திருக்கிறேன். ‘கஸ்தூரி மான்' நான் நடித்ததில் பிடித்த படம்.

    சினிமாவில் சாதிக்க வேண்டும் என்கிற ஆர்வம் இப்போது இல்லை. சினிமா எனக்கு பிடிக்காமல் போனதற்கு நிறைய காரணங்கள் உண்டு. சினிமாவுக்கும் எனக்கும் சரிப்பட்டு வராததால் அதிலிருந்து ஒதுங்கிவிட்டேன். சினிமாவில் தினந்தோறும் எதிரிகள் உருவாகக் கூடிய நிலை உண்டு. சீரியலில் அது இல்லை.

    என்னுடைய ஜனனி கேரக்டர் ரோஜாக் கூட்டத்தில் முக்கியமானது. நிறைய பேசிக்கொண்டும், சேட்டை செய்துகொண்டும் வாழும் பெண் திருமணத்துக்கு பின் எவ்வாறு மாறுகிறாள். அவளுடயை கனவுகளை சமுதாயம் ஏற்றுக் கொள்கிறதா? புத்தக இடுக்குகளில் வைக்கப்பட்ட ஆயிரம் மயிலிறகுகள் போல் மனதில் ஆயிரம் கனவுகளை வைத்திருக்கும் கேரக்டர்தான் ஜனனி. ரொம்ப ஆர்வமாக நடித்து வருகிறேன்.

    ‘ரோஜக் கூட்டம்' சீரியல் பார்த்துவிட்டு நிறைய பேர் சினிமாவில் நடிக்க அழைக்கிறார்கள். அவர்களிடம் நான் சொல்வதெல்லாம்... ‘சினிமாத்துறை எனக்கு பிடிக்காது; நடிக்க அழைக்காதீர்கள்' என்பதுதான் என்கிறார் சந்த்ரா.

    http://www.dinamani.com/Cinema/CineI...n%A7Ls&Topic=0

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #102
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    ‘சீரியல் - கனவுலகம் இல்லை': நடிகை ராகவி

    சீரியல் நடிகைகளிடையே இப்போது போட்டி ஏற்பட்டுள்ளது. இந்தப் போட்டி, தமிழ் சீரியல் உலகை வேறு ஒரு இடத்துக்கு எடுத்துச் செல்லும் என்கிறார் நடிகை ராகவி.

    ஏவி.எம். நிறுவனத்தின் ‘சொந்தம்' சீரியல்தான் என் முதல் சீரியல். சினிமாவில் பெரிய நடிகையாக வர வேண்டும் என்ற கனவோடுதான் நான் இந்த துறைக்கே வந்தேன். ‘ராஜா கைய வைச்சா', ‘மருதுபாண்டி', ‘நட்சத்திர நாயகன்' என சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்தேன். அதன் பிறகும் சில படங்கள் தொடர்ந்தன.

    பிறகு, சில சினிமா வாய்ப்புகள் வந்தன. ஆனால் அவை எதுவும் பிடிக்கவில்லை. பிறகுதான் என் கவனம் சீரியல் பக்கம் திரும்பியது. அதன் பிறகு சீரியல் நடிகையாகவே ஆகிவிட்டேன்.

    சீரியல் உலகம் என்றுமே பிஸியானது. சினிமா போல அது கனவுலகம் இல்லை. சினிமா பற்றிய கனவுகளுடன் வாழ்கிறவர்கள் சீரியலுக்கு வந்தால் சாதித்து விடலாம். சினிமாவை நம்பி வந்து சீரியலில் சாதித்தவர்கள்தான் இங்கு அதிகம். இன்னும் சொல்லப் போனால் பல சினிமா நடிகைகளுக்கே சீரியல்தான் இறுதி அடைக்கலமாக இருக்கிறது.

    சீரியல்கள் மட்டும் இல்லையென்றால் பல சினிமா நடிகைகளின் முகங்கள் பாதி பேருக்கு மறந்து போயிருக்கும். ‘ஜெயம்', ‘பிருந்தாவனம்', ‘பொறந்த வீடா புகுந்த வீடா' உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தாகிவிட்டது. தற்போது திருமதி செல்வத்தில் மட்டும் நடித்து வருகிறேன். நான் ஒரே நேரத்தில் நிறைய சீரியல்களில் நடிப்பதில்லை.

    திருமதி செல்வத்தில் ஜெயந்தி என்ற அருமையான கேரக்டர் கிடைத்திருக்கிறது. அதைச் சரியாக செய்தாலே போதும். ஒரே நேரத்தில் நிறைய சீரியல்களில் நடித்தால் வீட்டை கவனிக்க முடியாமல் போய்விடும். அதனால்தான் என் கேரியரில் நிறைய சீரியல்கள் இல்லை. இல்லையென்றால் நானும் இதுவரை 50-க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்து விட்டேன் என சொல்லி பெருமைப்பட்டுக்கொள்ள முடியும். சினிமாவைப் பொருத்தவரை நல்ல கேரக்டர்கள் வந்தால் பார்க்கலாம்.

    இப்போதைக்கு என் குழந்தை ஜித்திசாய்தான் என் உலகம். பிறந்து மூன்று மாதங்கள்தான் ஆகிறது. அவனுடைய ஒவ்வொரு அசைவையும் வீடே ரசித்துக் கொண்டாடுகிறது. அவன் என்னை பார்த்து சிரிக்கும் போதெல்லாம் மனம் சொக்கிப்போகிறேன் என்கிறார் ராகவி.

    http://www.dinamani.com/Cinema/CineI...n%A7Ls&Topic=0

  4. #103
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    Quote Originally Posted by R.Latha
    சீரியலுக்கு சென்சார் தேவை' (நடிகை தேவிப்ரியா)

    ட்ற்ற்ல்://ஜ்ஜ்ஜ்.க்ண்ய்ஹம்ஹய்ண்.ஸ்ரீர்ம்/இண்ய்ங்ம்ஹ/இண்ய்ங்ஐற்ங்ம்ள்.ஹள்ல்?ஐஈ=ஈசஇ20090329123629&பண்ற்ப ்ங்=இண்ய்ங்ம்ஹ+%2ஈ+சங்ஜ்ள்&ப்பண்ற்ப்ங்=%ஊ9சய்%அ7கள ்&பர்ல்ண்ஸ்ரீ=0
    ள/ற்ள்ஸ்ரீண்ண்ன
    "அன்பே சிவம்.”

  5. #104
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    குடும்பப் பாங்கான கேரக்டருக்கு வரவேற்பு : சித்தாரா

    சினிமாவிலிருந்து நடிகை சித்தாரா "டிவி' சீரியலுக்கு வந்திருக்கிறார். ஜெயா "டிவி'யில் "கவரிமான்', சீரியலிலும், வசந்த் "டிவி'யில் "பராசக்தி' சீரியலிலும் நடித்து வருகிறார். சித்தாரா பேட்டி:

    * சினிமாவிலிருந்து "டிவி' பக்கம் எப்படி?சினிமாவை முழுவதுமாக விட்டுட்டு "டிவி'க்கு வரலை. சினிமாவிலோ, "டிவி'யிலோ வரும் வாய்ப்பையெல்லாம் நான் ஏற்றுக் கொள்வதில்லை. செலக்ட் பண்ணி நடிச்சிட்டிருப்பதால நான் ஏற்கிற கேரக்டரில் யதார்த்தம் இருக்கும்.
    ஜெயா "டிவி'யில் "கவரிமான்' சீரியல் கதை பிடித்தது நடித்தேன். வசந்த் "டிவி'யில் "பராசக்தி' சீரியல் கதையை இயக்குனர் ராஜபாண்டி சொன்ன போது அதில் என் கேரக்டருக்கு உள்ள முக்கியத்துவமும், கதையின் போக்கும் ரொம்ப பிடிச்சிருந்தது. அதனால நடிச்சிட்டிருக்கேன்.

    * குடும்பப் பாங்கான வேடங்களில் நடிக்க முக்கியத்துவம் கொடுப்பது...?அமைதியான சூழ்நிலை எனக்கு ரொம்ப பிடிக்கும். இப்படித் தான் இருக்கணும்ன்னு எனக்கு நானே கட்டுப்பாடு வச்சிருக்கேன். அமைதியும், மரியாதையும் எனக்கு முக்கியம். இவைகள் இல்லாத இடங்களில் நான் இருக்க மாட்டேன். யதார்த்தமாக ஒரு பொண்ணுக்கு வாழ்க்கையில் என்னென்ன கிடைக்கணுமோ அது கிடைச்சால் போதும்ங்கிற நினைப்பு மட்டுமே இருக்கு. என்னை சுற்றியுள்ள சூழ்நிலைகளும் எனது முடிவுகளையொட்டியே இருப்பதால் என்னால் நினைச்சபடி அமைதியாக வாழ முடிகிறது. சீரியலோ, சினிமாவோ குடும்பப்பாங்கான கேரக்டருக்கு வரவேற்பு என்றென் றும் இருந்துக்கிட்டு தானிருக்கு. பெண்க ளின் அமைதியான செயல்பாடும், தியாகமும் வேறு யாருக்கும் இருக்காது.

    * பிடித்தவைகளில் மட்டுமே நடிப்பது பற்றி?வாழ்க்கைக்கு பணம் தேவைதான். அதற்காக பணம் சம்பாதிப்பது மட்டும் தான் வாழ்க்கை என்று சொல்லிவிட முடியாது. என் மனசுக்கு எது எப்படி நடக்கணும்ன்னு நினைக்கிறேனோ அதை நிறைவு செய்யத்தான் உழைக்கிறேன். அந்த உழைப்புக்கு என்ன கிடைக்கணும் என்று இருக்கிறதோ அது கிடைக்கும். இப்படித்தான் என்னோட நினைப்பும்,முடிவும் இருக்கு. மலையாளத்தில் ஐ.வி.சசி இயக்கும் "வெள்ளத் தூவல்', படம் முடிந்தது. ராஜசேனன் டைரக்ஷன்ல "சிறகுகள்' படத்தில் நடிக்கிறேன். தமிழில் ராஜ்கிரண் ஜோடியாக "சரித்திரம்' படத்திலும், தெலுங்கில் ஆனந்த் நடிக்கும் படத்திலும் நடிச்சிட்டிருக்கேன்.

    * நீங்கள் நடிக்க வரும் போது உள்ள சினிமா உலகம், இப்போது உள்ள சினிமா உலகம் பற்றி?எல்லாத்திலும் வேகம் இருக்கு. புதுமையை கொண்டு வருவதில் போட்டியிருக்கு. நிறைய படிச்சவங்க சினிமா, "டிவி' பீல்ட்டுக்கு வந்திட்டிருக்காங்க. யாரும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. யாரை யும் யாரும் மிரட்டி ஏதும் செய்துவிடவும் முடியாது. திறமையும் செய்கிற தொழிலில் ஈடுபாடும் உள்ளவங்க பீல்டில் நிலைச்சு நிற்கிறாங்க. உஷாராகவும் இருக்காங்க. நடிப்பில் ஆர்வம் இல்லாமல், ஏதோ ஆசையில பெயரளவுக்கு பீல்டுக்கு வர்றவங்க வந்த வேகத்தில திரும்ப போயிடறாங்க.

    இவ்வாறு சித்தாரா பொறுப்பாக சொல்லி பேட்டியை முடித்துக்கொண்டார்.
    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.”

  6. #105
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    சராசரி வாழ்க்கையின் பிரதிபலிப்புதான் சீரியல்'
    நடிகைகளைப் பொருத்தவரை சீரியலாக இருந்தாலும், சினிமாவாக இருந்தாலும் சரியாக நடித்தால் மக்கள் நிச்சயம் ஏற்றுக் கொள்வார்கள் என்கிறார் நடிகை நீபா.

    "நீலவானம்' என்ற சீரியல்தான் என்னுடைய முதல் சீரியல். அதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானேன். அந்த சீரியலில் எனது கேரக்டர் பெரிய அளவில் ரீச் ஆகி நிறைய பேர் பாராட்டினார்கள். அப்படியே நடிப்பில் ஆர்வமும் வந்து விட்டது.

    "பெருசு', "குடியரசு', "பள்ளிக்கூடம்', "அம்முவாகிய நான்' உள்ளிட்ட சில படங்களிலும் நடித்து விட்டேன். சீரியல், சினிமா என வாழ்க்கை பரபரப்பாக இருக்கிறது. சினிமாவைப் பொருத்தவரை நல்ல கேரக்டர்களை மட்டுமே விரும்புகிறேன். அந்த தருணங்கள் வருகிறபோது நிச்சயம் நான் சினிமாவில் சாதிப்பேன்.

    இப்போது "தங்கமான புருஷன்', "நாணல்', "ரோஜாக் கூட்டம்' ஆகிய சிரியல்களில் நடித்து வருகிறேன். மூன்று சீரியல்களுமே மக்களால் பெரிதும் விரும்பிப் பார்க்கப்படுகின்றன. சீரியல், சினிமா என இரண்டையும் காதலிப்பதால் நடிப்பில் சலிப்பு ஏற்பட்டதில்லை. காதலிக்க கூடிய விஷயத்தில் எப்படி சலிப்பு ஏற்படும்.

    "தங்கமான புருஷன்' ரமணி, "ரோஜாக் கூட்டம்' ராதிகா, "நாணல்' காதம்பரி ஆகிய கேரக்டர்கள் சீரியல் வட்டாரத்தில் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. ஒரு கேரக்டரின் சாயல் இன்னொரு கேரக்டரில் தெரியாமல் இருந்தாலே போதும் சீரியலில் பெயர் வாங்கி விடலாம். சீரியல் மட்டும் இல்லை சினிமாவுக்கும் இது பொருந்தும்.

    சீரியல்களில் பெண்களின் சராசரி வாழ்க்கை காட்டப்படுவதால் சில விஷயங்கள் சீரியலுக்கு சீரியல் மாறுபடாமல் இருக்கும் அவ்வளவுதான். சராசரி வாழ்க்கையின் பிரதிபலிப்புதான் சீரியல் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது.

    சினிமாவில் சராசரி வாழ்க்கை அந்த அளவிற்கு பதிவு செய்யப்படுவதில்லை. அதனால் சினிமாவில் நடிப்பது ஒரு விதத்தில் ஈஸிதான்.

    சினிமா நடிகைகளைப் போல் சீரியல் நடிகைகளும் மாடர்ன் ட்ரெஸ் அணிய ஆரம்பித்து விட்டார்கள் என்கிறார்கள். ஏன்... அணிய கூடாது? கதைக்கு மாடர்ன் ட்ரெஸ் தேவைப்படுகிறது. அதனால்தான் அப்படி. இன்றைய சூழ்நிலையில் ஒரு கல்லூரி மாணவியை தாவணி அணிந்த பெண்ணாகக் காட்டினால் எல்லோரும் சிரிப்பார்கள். ஏனென்றால் இங்கு எல்லாமே மாறிவிட்டது. மாற்றங்களுக்கு ஏற்ப சீரியல்களும் மாறுவதைத் தவிர்க்க முடியாது என்றார் நீபா.
    நன்றி: தினமணி
    "அன்பே சிவம்.”

  7. #106
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    "சீரியலுக்கு சென்சார் தேவை'
    சினிமாவை விட சீரியலுக்கான வரவேற்பு மக்களிடையே நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. அதற்குக் காரணம் சீரியல்களின் புதிய கதைக் களங்கள்தான் என்கிறார் நடிகை தேவிப்ரியா.

    சினிமா நடிகைகள் சீரியலுக்கு வந்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், எந்த நடிகையின் சினிமா சாதனை சீரியலில் தொடர்கிறது? சினிமாவை விட சீரியலில்தான் நடிகைகளின் கேரக்டர்கள் அதிகமாகப் பேசப்படுகிறது. சீரியல் பல கதைகளை வீட்டுக்குள்ளேயே கொண்டு செல்வதால் மக்களால் மிகவும் ரசிக்கப்படுகிறது. சினிமா போல் சீரியல் பொழுதுபோக்கிற்காகப் பார்க்கப்படுவதில்லை. சீரியலில் ஒவ்வொரு நாளும் என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பை உருவாக்குகிறோமே அதுவே பெரிய வெற்றிதான்.

    பழி வாங்கல், துரோகம், கணவன் மனைவி தொடர்புகளில் சிக்கல் இவைகள்தான் சீரியல்களில் ஆண்டாண்டு காலமாக சொல்லப்பட்டு வருகின்றன என்பது உண்மைதான். யாருடைய வாழ்க்கையில்தான் இந்த விஷயங்கள் இல்லை? மனிதர்களின் சராசரி வாழ்க்கைதான் இங்கு சீரியலாக்கப்படுகிறது.

    மாமியார்-மருமகள் பிரச்னையை பற்றி சொல்லும் போது பழி வாங்கல், துரோகம் போன்றவற்றை சொல்லித்தான் ஆக வேண்டும். இதில் மாற்றம் தேவை இல்லை.

    பாலியல் தொடர்பான விஷயங்கள் சினிமாவை விட சீரியலில் குறைவுதான். இருந்தாலும் ஒரு கதை சொல்லப்படும்போது அது தவிர்க்க முடியாத விஷயமாகி விடுகிறது. சீரியலை குடும்பமே உட்கார்ந்து பார்க்கக் கூடிய இன்றைய சூழலில் இந்த விஷயங்கள் குறைந்தால் கொஞ்சம் நன்றாக இருக்கும். அதைக் கட்டுப்படுத்தும் வகையில் சீரியலுக்கென தனி சென்சார் வந்தால் வரவேற்கலாம்.

    இப்போது "சதிலீலாவதி', "தெற்கத்தி பொண்ணு', "பந்தம்', "ஆனந்தம் விளையாடு வீடு' ஆகிய சீரியல்களில் நடித்து வருகிறேன். "சதிலீலாவதி' மாலதி, "தெற்கத்தி பொண்ணு' கீதா நாயுடு ஆகிய கேரக்டர்கள் தற்போது பேசப்பட்டு வருகின்றன.

    நடிகர் ஜே.கே.ரித்தீஷின் தயாரிப்பில் "ஆண்டாள்' என்ற புது சீரியலில் நடித்து வருகிறேன். அதில் இதுவரை பார்க்காத புதிய தேவிப் பிரியாவை பார்க்கலாம்.

    சினிமாவில் முக்கியத்துவமான கேரக்டரில் மட்டும் நடித்து வருகிறேன். சமீபத்தில் "வல்லமை தாராயோ', "நாயகன்' படங்களில் நல்ல கேரக்டர் கிடைத்தது. அது போல் கேரக்டர்கள் வந்தால் நடிப்பேன் என்றார் தேவிப்ரியா.
    நன்றி: தினமணி
    "அன்பே சிவம்.”

  8. #107
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    Wit is his forte



    Vijayasarathy

    For some people the advice, "Talk less - work more", makes no sense; for them talking is tantamount to working. Call them comperes or video/radio jockeys or just anchors, they fall in this category. And one among this genre from Chennai was in Visakhapatnam recently to do a shoot.

    Meet Vijayasarathy, the compere of one of the most popular info-tainment show on Sun TV, 'Neengal Ketta Paadal' (film song of your choice). He is also a regular face in television serials and films.

    During his 'Neengal Ketta Paadal' mission in Vizag, Vijay had taken some time off to meet this scribe and discuss his journey to stardom.

    Though he happens to be the son of the late Tamil actor Sasi Kumar, Vijay never dreamt of joining the entertainment industry until a couple of years ago.

    He narrates his sojourn into 'dream factory' thus: "My parents left this world when I was barely three years old. Since then I was brought up by my maternal grandmother, so the film industry was way beyond my reach. After completing my post-graduation in zoology, I started my career as a medical representative with Hindustan Ciba-Geigy selling tranquillisers. But today after spending a couple of years in the industry I realise that Ciba was the place where I unknowingly picked up and sharpened my inherent strength of communication skills. My job at Ciba impelled me to initiate dialogues with unkown persons and pose questions to them. Today that's what I am exactly doing but in a different format and platform."

    How did the transformation from medical rep to television anchor happen?

    "Ciba transferred me to Assam and that was the period when insurgency was at its peak. After having lost my parents in a tragic fire accident my old grandparents did not allow me to go to Assam, hence I resigned and joined Kirloskars for some time. After a brief stint over there, on an advice from a friend of mine I joined JJ TV (now Jaya TV) as producer and compere. Three months after I joined, JJ wound up. And that was the beginning of my struggling days.

    "I do not remember seeing my dad in person except in the recorded movies but it was during those days that his goodwill worked like miracle for me. I started introducing myself as son of Sasi Kumar and I was instantly accepted. I got my first major break as an actor in a serial called 'Marmadesam' directed by Naga and that was the turning point in my life. It was there that I picked up the nuances of acting. But the major break was when I clinched the role of Fraud Kannan in the soap opera, 'Chitthi' ('Pinni' in Telugu). I was instantly recognised as an actor and, thereafter, offers kept pouring."

    Today Vijay is instantly recognised in Tamil Nadu, Karnataka and parts of Andhra Pradesh. Apart from playing the lead roles in serials like 'Vikramaditya' and 'Chitthi' he has also acted in a couple of Tamil films as hero.

    On 'Neengal Keta Paadal', he says, "This is basically an info-tainment show where we visit different locations and give a brief report about the place right from its historic facts to economic developments, and in the end we focus on a tourist couple and play a song of their choice. This programme is extremely popular on Sun TV and its TRP rating is one among the top few.

    "As part of this programme I have toured almost entire India and a couple of foreign countries. I have even toured Errawadi and Velachery after the disasters and these episodes not only touched the people's heart but were also well appreciated for its contents."

    For a compere to succeed, is it essential that one should be blessed with good looks and a motor mouth?

    Vijaysarathy shakes his head. "Apart from the gift of the gab one should be well informed and witty. It is true that the vocal chords deliver the words but the word factory is in the brain. A compere who can inform and as well entertain will last longer. He or she should be constantly on the job to strengthen one's repertoire, as one should remember that presence of mind is a sine qua non for compering. And as far as good looks are concerned, it is not at all a criterion. My success is due to the 'boy next door' image, just simple average looking."

    Though Vijay likes to make it big in films, his first love is TV. "Today TV is a strong and effective medium and I like interactive shows. Right now Ihost a celebrity talk show in air for Sun TV and its popularity is already on the rise."
    thanks to Hindu
    "அன்பே சிவம்.”

  9. #108
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    மானாட மயிலாட நீபா


    ‘சராசரி வாழ்க்கையின் பிரதிபலிப்புதான் சீரியல்'

    நடிகைகளைப் பொருத்தவரை சீரியலாக இருந்தாலும், சினிமாவாக இருந்தாலும் சரியாக நடித்தால் மக்கள் நிச்சயம் ஏற்றுக் கொள்வார்கள் என்கிறார் நடிகை நீபா.

    ‘நீலவானம்' என்ற சீரியல்தான் என்னுடைய முதல் சீரியல். அதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானேன். அந்த சீரியலில் எனது கேரக்டர் பெரிய அளவில் ரீச் ஆகி நிறைய பேர் பாராட்டினார்கள். அப்படியே நடிப்பில் ஆர்வமும் வந்து விட்டது.

    ‘பெருசு', ‘குடியரசு', ‘பள்ளிக்கூடம்', ‘அம்முவாகிய நான்' உள்ளிட்ட சில படங்களிலும் நடித்து விட்டேன். சீரியல், சினிமா என வாழ்க்கை பரபரப்பாக இருக்கிறது. சினிமாவைப் பொருத்தவரை நல்ல கேரக்டர்களை மட்டுமே விரும்புகிறேன். அந்த தருணங்கள் வருகிறபோது நிச்சயம் நான் சினிமாவில் சாதிப்பேன்.

    இப்போது ‘தங்கமான புருஷன்', ‘நாணல்', ‘ரோஜாக் கூட்டம்' ஆகிய சிரியல்களில் நடித்து வருகிறேன். மூன்று சீரியல்களுமே மக்களால் பெரிதும் விரும்பிப் பார்க்கப்படுகின்றன. சீரியல், சினிமா என இரண்டையும் காதலிப்பதால் நடிப்பில் சலிப்பு ஏற்பட்டதில்லை. காதலிக்க கூடிய விஷயத்தில் எப்படி சலிப்பு ஏற்படும்.

    ‘தங்கமான புருஷன்' ரமணி, ‘ரோஜாக் கூட்டம்' ராதிகா, ‘நாணல்' காதம்பரி ஆகிய கேரக்டர்கள் சீரியல் வட்டாரத்தில் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. ஒரு கேரக்டரின் சாயல் இன்னொரு கேரக்டரில் தெரியாமல் இருந்தாலே போதும் சீரியலில் பெயர் வாங்கி விடலாம். சீரியல் மட்டும் இல்லை சினிமாவுக்கும் இது பொருந்தும்.

    சீரியல்களில் பெண்களின் சராசரி வாழ்க்கை காட்டப்படுவதால் சில விஷயங்கள் சீரியலுக்கு சீரியல் மாறுபடாமல் இருக்கும் அவ்வளவுதான். சராசரி வாழ்க்கையின் பிரதிபலிப்புதான் சீரியல் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது.

    சினிமாவில் சராசரி வாழ்க்கை அந்த அளவிற்கு பதிவு செய்யப்படுவதில்லை. அதனால் சினிமாவில் நடிப்பது ஒரு விதத்தில் ஈஸிதான்.

    சினிமா நடிகைகளைப் போல் சீரியல் நடிகைகளும் மாடர்ன் ட்ரெஸ் அணிய ஆரம்பித்து விட்டார்கள் என்கிறார்கள். ஏன்... அணிய கூடாது? கதைக்கு மாடர்ன் ட்ரெஸ் தேவைப்படுகிறது. அதனால்தான் அப்படி. இன்றைய சூழ்நிலையில் ஒரு கல்லூரி மாணவியை தாவணி அணிந்த பெண்ணாகக் காட்டினால் எல்லோரும் சிரிப்பார்கள். ஏனென்றால் இங்கு எல்லாமே மாறிவிட்டது. மாற்றங்களுக்கு ஏற்ப சீரியல்களும் மாறுவதைத் தவிர்க்க முடியாது என்றார் நீபா.


  10. #109
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    வாழ்க்கை கவிதைத்தனமானது': ஹேமமாலினி



    வாழ்க்கையில் எல்லோருக்கும் எப்போதாவது வரும் மாற்றங்கள்தான் அவரவர்களின் வாழ்க்கை சூழலை தீர்மானிக்கின்றன. அது போல்தான் என் ‘காம்பியரிங்' வாழ்க்கையும் என்கிறார் ஏர் டெல் சூப்பர் சிங்கர் தொகுப்பாளினி ஹேமமாலினி.

    இலங்கையில் ஒரு சேனலுக்காக நான் நடத்திய நிகழ்ச்சியில்தான் யூகியைப் பார்த்தேன். முதலில் நாங்கள் பேசிக் கொள்ளும் போதெல்லாம் காதல் இல்லை. பின்னர் எல்லோருக்கும் வருவதைப் போல் எங்களுக்குள்ளும் காதல் வந்து விட்டது.

    திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகி விட்டன. இப்போதும் யூகியுடன் அதே காதல். காதல் திருமண வாழ்க்கை கவிதைத் தனமானது. அதை வாழ்ந்து பார்த்தால்தான் தெரியும்.

    திருமணத்துக்கு பின் காம்பியரிங் செய்வதில் ஆர்வம் குறைந்து விட்டது. விஜய் டி.வி.யின் சூப்பர் சிங்கரில் யூகியும் இருப்பதால்தான் நானும் இருக்கிறேன்.

    சினிமா, சீரியல்களில் நடிப்பது என்றால் திருமணத்துக்கு முன்பே நடித்திருப்பேன். அதில் ஆர்வம் இல்லாததால் அங்கு போகவில்லை. இப்போதும் சில வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. சினிமா, சீரியலை பொறுத்தவரை அப்போது இருந்த நிலைதான்.

    இப்போது இயக்குனர் ரமணா நடித்து வரும் ‘குதிரை' படத்தில் காம்பியராக ஒரு காட்சியில் வருகிறேன். பிடித்திருந்ததால்தான் அதுவும்.

    சில நேரங்களில் யூகி, ஷூட்டிங் முடிந்து நள்ளிரவு வீடு திரும்புவார். அப்போதும் தூங்காமல் மறுநாள் ஷூட்டிங்குக்கு தேவையான காட்சிகளைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பார். எனக்கு அதைப் பற்றி எதுவும் தெரியாததால் தூங்கி தூங்கி வழிவேன்.

    சினிமா மற்றும் சீரியல்களுக்கு போனால் நிறைய விஷயங்களை இழக்க வேண்டும். அப்போதுதான் அதில் ஜெயிக்க முடியும். அது என்னால் முடியாது. விஜய் டி.வி.யின் ‘ஜோடி நம்பர் 1' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நானும் யூகியும் தோற்றுப் போனதால் இப்போது கிளாசிக்கல் டான்ஸ் வகுப்புக்கு போய்க் கொண்டு இருக்கிறேன். இதையடுத்து யோகா செய்வதில் எனக்கு ஈடுபாடு உண்டு.

    விஜய் டி.வி.யின் ஏர்டெல் சூப்பர் சிங்கர் வெகுவான ரசிகர்களை கவர்ந்து நன்றாக சென்று கொண்டிருக்கிறது. எனக்கும் மியூசிக்கில் கொஞ்சம் ஆர்வம் உண்டு என்பதால் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் ஈடுபாடு உண்டு என்றார்.

  11. #110
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    Meena


    You switched to TV because of fewer film commitments?

    Even when I was busy doing films a few years ago, I got many offers to do serials. But I kept postponing them. Finally, I agreed to do Lakshmi as the story was good. Now I am doing another serial. I am happy dividing my time between TV and films.
    What about marriage?

    Will let you know when it happens.
    After marriage will you continue to act?

    I don’t like to plan things. So I have not thought about it. If interesting roles come my way, I will do them. Anyway, why talk about it now? Let marriage happen first.
    Do you think you have achieved enough?

    I don’t know. Maybe if I sit and think about it, I could come up with an answer. Wherever I go people from different walks of life come to me and tell me many good things about my acting. This kind of encouragement keeps me going.
    How has your next film Mariyathai shaped up?

    One will see a different Meena in the film. I must thank director Vikraman for giving me the role. It is a family-oriented film like Vanathai Pole and I am happy to do it.
    You must have done more than 150 films. Don’t you ever get tired of facing the camera?

    Certainly not. I am doing some good roles now. I have worked in 200 films in the four South Indian languages and one Hindi film. Each day brings a new challenge.


    You switched to TV because of fewer film commitments?

    Even when I was busy doing films a few years ago, I got many offers to do serials. But I kept postponing them. Finally, I agreed to do Lakshmi as the story was good. Now I am doing another serial. I am happy dividing my time between TV and films.
    What about marriage?

    Will let you know when it happens.
    After marriage will you continue to act?

    I don’t like to plan things. So I have not thought about it. If interesting roles come my way, I will do them. Anyway, why talk about it now? Let marriage happen first.
    Do you think you have achieved enough?

    I don’t know. Maybe if I sit and think about it, I could come up with an answer. Wherever I go people from different walks of life come to me and tell me many good things about my acting. This kind of encouragement keeps me going.
    How has your next film Mariyathai shaped up?

    One will see a different Meena in the film. I must thank director Vikraman for giving me the role. It is a family-oriented film like Vanathai Pole and I am happy to do it.
    You must have done more than 150 films. Don’t you ever get tired of facing the camera?

    Certainly not. I am doing some good roles now. I have worked in 200 films in the four South Indian languages and one Hindi film. Each day brings a new challenge.

    http://www.hindu.com/cp/2009/04/03/s...0350401600.htm

Page 11 of 46 FirstFirst ... 91011121321 ... LastLast

Similar Threads

  1. IR concerts, TV shows and Interviews ...
    By Sanjeevi in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 355
    Last Post: 2nd June 2018, 06:26 AM
  2. Sharing-IR's music-interviews-BgmClips- in web
    By rajasaranam in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 860
    Last Post: 2nd October 2012, 12:43 AM
  3. Talented TV artists
    By swathy in forum TV,TV Serials and Radio
    Replies: 20
    Last Post: 21st March 2010, 10:13 PM
  4. Artists and their best emotions
    By Shakthiprabha. in forum Tamil Films
    Replies: 167
    Last Post: 22nd May 2007, 08:41 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •