-
30th May 2009, 08:41 PM
#11
Moderator
Diamond Hubber
வில்லியாக நடிப்பதில்தான் திருப்தி' - நீலிமா ராணி.
"சீரியல்களில் என் சாய்ஸ் வில்லிதான்' என்கிறார் "கோலங்கள்' தொடரில் வில்லி ரேகாவாக மிரட்டிக்கொண்டிருக்கும் நடிகை நீலிமா ராணி.
""இப்போது நிறைய பேர் சீரியல்களை பார்க்க ஆரம்பித்து விட்டனர். காரணம், ஒவ்வொன்றுக்கும் ஒரு சேனல் ஆரம்பிக்கப்பட்டு எல்லா விஷயங்களிலும் சலிப்பு ஏற்பட்டு விட்டது. காமெடி சேனல் என்ற பெயரில் விவேக்கையும் வடிவேலையும் மாற்றி மாற்றி காட்டுகிறார்கள். அது பலருக்கு பிடிக்கவில்லை. அதிலிருந்து நேயர்களை விடுவித்து ரிலாக்ஸ் கொடுப்பது சீரியல்கள்தான்.
ஆண்டாண்டு காலமாக சொல்லப்பட்ட கதைகள்தான்; பார்த்த முகங்கள்தான் என்றாலும் சீரியல்களில் ஏதோ ஒரு விஷயம் நாளுக்கு நாள் புதுமையை ஏற்றிக் கொண்டிருக்கிறது. படித்தவர்களும் தொழில் நுட்பம் தெரிந்தவர்களும் சீரியலுக்கு வந்ததுதான் அதற்கு காரணம்.
இப்போது "கோலங்கள்', "பராசக்தி' ஆகிய தமிழ் சீரியல்களிலும் "மாயா' என்ற தெலுங்கு சீரியலிலும் நடித்து வருகிறேன். மூன்று சீரியல்களுமே எனக்கு திருப்தியாக இருக்கிறது. இதைத் தவிர தற்போது வெளியான "நியூட்டனின் 3-ம் விதி', "ராஜாதிராஜா' படங்களும் எனக்கு நல்ல பெயரை வாங்கி தந்திருக்கின்றன. மேலும் "ஜக்குபாய்', "புகைப்படம்', "ரசிக்கும் சீமானே' ஆகிய படங்களில் நடித்து வருகிறேன்.
சீரியல்களில் பெண்களையே முன்னிலைப்படுத்த காரணம் சீரியலுக்கு பெண்கள் ரசிகைகளாக இருப்பதுதான். பெண்களுக்கு பெண்கள்தான் வில்லியாக இருக்க முடியும். அதனால்தான் சீரியல்களில் வில்லி கேரக்டர்கள் பெண்களால் அலங்கரிக்கப்படுகின்றன.
கோலங்களில் என்னுடைய ரேகா கேரக்டர் வில்லி ரகத்தை சார்ந்துதான் அமைந்திருக்கிறது. பாசமுள்ள அம்மா, அன்பான மனைவி, அருமையான காதலி போன்ற கேரக்டர்கள் கொடுக்காத அதிர்வுகளை வில்லி கதாபாத்திரம் மட்டுமே கொடுக்கிறது. அதனால் சீரியல்களில் என் சாய்ஸ் வில்லிதான்'' என்றார் நீலிமா ராணி.
நன்றி: தினமணி
-
30th May 2009 08:41 PM
# ADS
Circuit advertisement
Bookmarks