கோலங்கள் அகிலாவின் அனுபவ பேட்டி
சிவசக்தி, கோலங்கள்' சீரியலில் நடித்து வரும் அகிலா விஜய் "டிவி'க்காக "ரோஜாக்கூட்டம்' சீரியலிலும் நடித்து வருகிறார். படுஅழுத்தமான அவரின் அனுபவ பேட்டி:
சொந்தமாக கம்பெனி வைத்திருப்பதாக சொன்னார்களே?
சீசன்ஸ் ஈவன்ட்ஸ்'ங்கிற பேர்ல நானும் நண்பர் பிரதாப்பும் சேர்ந்து சென்னை தி.நகரில் நிறுவனம் ஒன்று வச்சிருக் கோம். ஸ்டார் நைட், ஸ்போர்ட்ஸ் ஸ்டார் புரோக்கிராம்ன்னு பல புரோக்கிராம்கள் நடத்திக் கொடுத்திருக்கோம். சமீபத்தில் "பிளாக் அண்ட் ஒயிட்' என்ற டைட்டிலில் பழம்பெரும் நடிகர், நடிகைகள் கலந்து கொண்ட "ஸ்டார் நைட்' புரோக்கிராமும் நடத்திக் கொடுத் தோம்.
நிகழ்ச்சிகளை நடத்தும் போது பிரச்னைகளை சந்தித்த சம்பவம் ஏதும்?
சின்ன நிகழ்ச்சிகளைவிட பெரிய நிகழ்ச்சிகள்ல நிறைய பிரச்னையை சந்திக்க வேண்டியிருக்கும். பிரச் னை வருதேன்னு நினைச்சு செய்த வேலையை பாதியில் விட்டுவிட்டு வந்துடமுடியாது. இட்லி வேணும்ன்னு நினைச்சா, அது சட்டியில் வெந்தால் என்ன, குக்கரில் வெந்தால் என்ன, நமக்கு தேவை இட்லி. நான் செய்ய வந்ததை நல்லபடியாக செய்து முடிக்கணும்ங்கிற ஆர்வம் இருந்ததால தான் தனியா நிறுவனம் வச்சு நடத்துகிற அளவுக்கு தைரியமாக முயற்சிக்க முடிகிறது.
சாதாரண வேலை யை செய்துவிட்டு சாதித்து விட்டோம் என்று பெருமை பேசிக்கொள்பவர்கள் பற்றி ...?
யாரோ எவரோ எது வேண்டும்னாலும் பேசிக்கலாம். அது அவுங்க அவுங்க இஷ்டம். அவுங்க நேச்சர்'ன்னு நினைச்சு நாம கண்டுக் காம விட்டுடணும். அவுங்க நமக்கு வேண்டப்பட்டவங்களாக இருந்தா நாம திருத்த முயற்சி பண்ணலாம். எந்த சூழ்நிலைகளில் எப்படி நடந் துக்கணும்ன்னு எடுத்து சொல்லலாம். அவுங்க இதிலும் சரிப்பட்டு வரலைன்னா நாம ஒதுங்கிட வேண்டியது தான்.
அருகில் இருந்து துதி பாடுபவர்கள் பற்றி?
ஜால்ரா போடுறவங்களை பக்கத்தில் வைத்துக் கொள்வது ஆபத்தானது. இந்த மாதிரி மனிதர்களை பக்கத்தில் வைத்துக் கொள்வதைவிட ஒதுக்கி விடுவதே மேல்.
வேலைக்கு போகிற பெண்களுக்கு வீட்டாரின் கட்டுப்பாடு பற்றி?
பெண்களை எப்படி நடத்தினா அவுங்க சுதந்திரமாக நினைச்ச இலக்கை எட்ட முடியும்ன்னு பெற்றோர்களுக்கு தெரிகிறது. அதனால் பெண்பிள்ளைகளுக்கு கட்டுப்பாட்டினால் தடைகள் அவ்வளவாக இப்போது இல்லை என்று சொல்வேன்,'' என்று அகிலா அழுத்தமாக சொன்னார்.
Bookmarks