-
30th September 2008, 10:51 PM
#81
Moderator
Diamond Hubber
"சூப்பர் சுந்தரி''
கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 5.30 மணிக்கு சிறுவர் சிறுமிகளை மகிழ்விக்க வருகிறாள் "சூப்பர் சுந்தரி.''
பேட்மேன், சூப்பர்மேன் வரிசையில் "சூப்பர் சுந்தரி'' குழந்தைகளை மகிழ்விக்கும் இந்த தொடரில், நடிகை உமா ரியாஸ்கான் வெவ்வேறு உருவெடுத்து, பிரச்சினைகளில் சிக்கித் தவிப்பவர்களுக்கு உதவுவதாக கதை சித்தரிக்கப்பட்டுள்ளது.
-
30th September 2008 10:51 PM
# ADS
Circuit advertisement
-
5th October 2008, 02:18 AM
#82
Moderator
Diamond Hubber
தீபங்கள்
கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகும் `தீபங்கள்' தொடரை, திரைப்பட இயக்குநர் தளபதி இயக்குகிறார்.
ஏற்கனவே மணமுடித்து மகிழ்ச்சியுடன் வாழும் தன் மகனை, தனது அந்தஸ்து கூடிய காரணத்தால் மீண்டும் மணமுடிக்க வைக்கிறார் தந்தை. அழகான முதல் மனைவி கிராமத்தில் இருக்க, தாயின் சொல்லில் மயங்கி, மிகப்பெரிய செல்வந்தனாகும் ஆசையில், நகரத்தில் உள்ள பணக்கார குடும்ப பெண்ணை மணக்கிறார் மகன்.
இருவருக்கும் தெரியாமல் குடும்பம் நடத்திய மகனின் நாடகம் வெளிச்சத்திற்கு வந்ததா? அல்லது வெளிச்சத்திற்கு வராமல் இருப்பதற்காக தந்தையும் மகனும் நடத்திய நாடகம் வெற்றி அடைந்ததா என்பதே கதையின் கரு.
நட்சத்திரங்கள் ஸ்ரீகாந்த், ராஜ்காந்த், பாவனா, வனஜா, நளினி, காயத்ரி, அருணாதேவி பிரவினா.
-
5th October 2008, 02:25 AM
#83
Moderator
Diamond Hubber
அழகிய தமிழ்மகள்
கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் காலை 8 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ``அழகிய தமிழ் மகள்'' நடிகை ரோகிணி தொகுத்து வழங்கும் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மகளிர் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகள், எதிர்பார்ப்புகள் என்று மகளிர் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களும் அலசி ஆராயப்படுகிறது.
-
19th October 2008, 04:40 AM
#84
Moderator
Diamond Hubber
ஆசை நிலவு
கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகிறது ``ஆசை நிலவு'' தொடர். விஸ்வநாதன்-சரஸ்வதி தம்பதிக்கு ஆசைக்கு ஒரு பெண்ணும் ஆஸ்திக்கு ஒரு ஆணுமாக பாலாவும் ராதாவும் விளங்குகிறார்கள். தன்னுடைய மகள் ராதா காதலிக்கும் சூரியாவிற்கே மணமுடிக்க விசுவநாதன் முடிவு செய்கிறார். தன் ஆஸ்தான ஜோசியர் தேவநாராயணனிடம் இதைப்பற்றி கூறிய போது அவர் தடுத்து விடுகிறார்.
ஜோசியர் கூறியது போலவே விசுவநாதனின் மனைவி நோய்வாய்ப்படுகிறார். பயந்து போன விசுவநாதன், திருமணத்தை தள்ளிப் போடுகிறார். நோய்வாய்ப்பட்ட மனைவிக்கு துணைவியாக ஒரு பெண்ணை தயார் செய்யுமாறு தனது நெருங்கிய நண்பர் ரவியிடம் கூறுகிறார். உடனே அஞ்சலி என்ற பெண்ணை, வேலைக்கு அமர்த்துகிறார், ரவி.
அஞ்சலி வேறு யாருமல்ல. ரவியின் சகோதரி சித்ராவிற்கு, விசுவநாதன் மூலம் திருமணமாகாமல் பிறந்த பெண்தான் அஞ்சலி. எப்படியாவது, விசுவநாதன் வீட்டில், அஞ்சலியை சேர்க்க வேண்டும் என்று எண்ணி இருந்த ரவி சரியான வாய்ப்பு வந்ததும், அஞ்சலியை விசுவநாதன் வீட்டில் வேலைக்கார பெண்ணாக சேர்த்து விடுகிறார்.
மீண்டும், தன் மகள் ராதா-சூரியா திருமணத்தை நடத்த முடிவு எடுக்கிறார் விசுவநாதன். இப்போதும் ஜோசியர் தடுக்கிறார். சூரியாவின் முதல் திருமணம் நிற்காது. முதல் மனைவி இறந்து விட அவன் இரண்டாவது திருமணம் செய்ய வேண்டி வரும் என்கிறார் ஜோசியர். முதல் மனைவியாக வேலைக் காரப் பெண் அஞ்சலியை மணமுடித்து, அஞ்சலி இறந்து விட்டால் இரண்டாவதாக சூர்யாவை திருமணம் செய்து கொள்ளத் தயார் என்று மகள் ராதா அறிவிக்க, அதிர்ந்து போகிறார், ரவி. அஞ்சலி பற்றிய உண்மையை இப்போதாவது விஸ்வநாதனிடம் ரவி சொன்னாரா? திருமணம் நடந்ததா என்பதே கதையின் உச்சக்கட்டம்.
திலக்ஜி, கே.எஸ். ஜெயலட்சுமி, பரத் கல்யாண், சுவப்னா நடிக்க, தொடரை இயக்குகிறார், உன்னி.
-
22nd October 2008, 02:13 PM
#85
Senior Member
Seasoned Hubber
கானா குயில் பாட்டு
கலைஞர் தொலைக்காட்சியில் சனிக்கிழமை தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த "கானா குயில் பாட்டு'' 26 எபிசோடுகளுடன் தனது இசைப் பயணத்தை முடித்துக் கொண்டது. இன்று இரவு 9 மணி நிகழ்ச்சியில், வெற்றி பெற்ற பாடகர்களுக்கு பரிசு வழங்கி விடை பெறுகிறது.
டான்ஸ் மாஸ்டர் கலா இயக்கத்தில், இசை அமைப்பாளர் சபேஷ் மற்றும் கானா உலகநாதனை நடுவர்களாக கொண்ட இந்நிகழ்ச்சியில் முதல் பரிசான ரூ. 21/2 லட்சத்தை சரவணனும், இரண்டாவது பரிசான ரூ. 11/2 லட்சத்தை சுரேஷ் குமாரும் வென்றார்கள். மூன்றாவது பரிசான ரூ. 1 லட்சம் இரு நேயர்களுக்கு பிரித்து வழங்கப்பட்டது.
இறுதி போட்டியையும், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சியையும் இன்று இரவு 9 மணிக்கு காணலாம்.
-
25th October 2008, 08:35 AM
#86
Moderator
Diamond Hubber
மறக்க முடியுமா?
கலைஞர் தொலைக்காட்சியில் சனிக்கிழமைகளில் ஒளிபரப்பான `மறக்கமுடியுமா?' நிகழ்ச்சி இப்போது ஞாயிறுதோறும் காலை 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
எம்.ஜி.ஆர், சிவாஜியைத் தொடர்ந்து சாதனை படைத்த வெள்ளித்திரை கலைஞர்கள் வரிசையில் நடிகர் ஜெமினிகணேசனின் வாழ்க்கை வரலாறு ஒளிபரப்பாகிறது. இதில் நடிகர் ஜெமினிகணேசன் நடித்த திரைப்படங்களில் இருந்து பாடல்களும், அவரது உறவினர்களின் பேட்டியும் இடம் பெறுகிறது.
-
25th October 2008, 08:36 AM
#87
Moderator
Diamond Hubber
ஓடி விளையாடு பாப்பா
கலைஞர் தொலைக்காட்சியில் சனிக்கிழமை தோறும் இரவு 9 மணிக்கு `ஓடி விளையாடு பாப்பா' என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
சின்னத்திரை நட்சத்திரங்களுக்காக உருவான `மானாட மயிலாட' நிகழ்ச்சியும் நேயர்களுக்காக வழங்கப்பட்ட `ஆட்டம் பாட்டம்' நிகழ்ச்சியும் வரவேற்பு பெற்றதை தொடர்ந்து குழந்தைகளுக்கான நடனப் போட்டி நிகழ்ச்சியை நடத்த கலைஞர் தொலைக்காட்சி முன் வந்து இருக்கிறது. நிகழ்ச்சியை இயக்குபவர் டான்ஸ் மாஸ்டர் கலா.
-
25th October 2008, 08:37 AM
#88
Moderator
Diamond Hubber
தில்தில் மனதில்
கலைஞர் தொலைக்காட்சியில் சனிக்கிழமை தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. `தில்தில் மனதில்' என்ற நிகழ்ச்சி.
வீர விளையாட்டுகளில் முன்னணியில் இருக்கும் தமிழக இளைஞர்களின் சாகச நிகழ்ச்சிகளை உலகுக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியாக இது உருவாகி இருக்கிறது.
-
25th October 2008, 08:37 AM
#89
Senior Member
Regular Hubber
orE tholaikatchila 10 vithama nadana nigazhchi vazhangina, pulichu poirum.
-
25th October 2008, 08:37 AM
#90
Moderator
Diamond Hubber
தங்கமான புருஷன்
கலைஞர் டிவியில் திங்கள் முதல் வெள்ளிவரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் தொடர் `தங்கமான புருஷன்'.
கண்ணியமான ஒரு இளைஞன் வாழ்வில் 3 பெண்கள் குறுக்கிடுகிறார்கள். அந்த 3 பெண்களில் யார் அவன் இதயம் ஊடுருவிச் செல்கிறார்கள் என்பது காட்சிகளாக்கப் பட்டிருக்கிறது. சின்னத்திரை தொடர்களில் பெண்கள் மட்டுமே உயர்வாக சித்திரிக்கப்பட்ட சூழ்நிலை இருந்து வந்தது. இப்போது முதன்முதலாக இந்த தொடர் மூலம் நல்ல குணம் கொண்ட ஆண்களின் சிறப்பு அம்சங்கள் திரைப்படுத்தப் பட்டிருக்கின்றன. தொடரில் தேவா இசையில் சித்ரா பாடிய டைட்டில் பாடல் அதை உறுதி செய்கிறது. இதற்கென வாலி எழுதிய பாடலில் `தங்கம் போல மனமிருந்தால் தாயைப்போல குணமிருந்தால் தங்கமான புருஷன் அவனே' என்பதாக வார்த்தை மாலைகள் ஆண்களுக்காக கோர்க்கப் பட்டிருக்கின்றன.நட்சத்திரங்கள்: பிரேம்சாய், `சேது'அபிதா, டெல்லி குமார், சந்திரபோஸ், பாத்திமா பாபு, நீபா, ஷ்ரவனி, சுரேஷ் கிருஷ்ணமூர்த்தி.
தொடருக்கு கதை இந்திரா சவுந்தர்ராஜன். வசனம்: தங்கவேலு. கேமரா: பொன்ஸ். இயக்கம்: சுந்தர்கே.விஜயன்.
தயாரிப்பு: எவர்ஸ்மைல். தயாரிப்பு ஒருங்கிணைப்பு: ஈ.ராமதாஸ்.
Bookmarks