Page 11 of 19 FirstFirst ... 910111213 ... LastLast
Results 101 to 110 of 185

Thread: Kalaignar TV?

  1. #101
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    மறக்க முடியுமா?
    கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் காலை 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது ``மறக்க முடியுமா?'' நிகழ்ச்சி.

    மறைந்த திரை உலக மேதைகளைப் பற்றிய இந்த வாழ்க்கை திரை வரலாற்று நிகழ்ச்சியில் இதுவரை மறைந்த மாமேதைகள் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். காதல் மன்னன் ஜெமினி கணேசன் இடம் பெற்றனர். இனி அடுத்த நான்கு வாரங்களுக்கு நாட்டியப் பேரொளி பத்மினி பற்றிய வாழ்க்கைக் குறிப்பு ஒளிபரப்பாகும்.
    "அன்பே சிவம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #102
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    ரேகா ஐ.பி.எஸ்-300
    பிரமிட் சாய்மீராவின் முதல் தொடரான `ரேகா ஐ.பி.எஸ்.' கலைஞர் டிவியில் 300-வது எபிசோடை தாண்டியிருக்கிறது.

    நேர்மையான பெண் ஐ.பி.எஸ். அதிகாரியான ரேகாவை எதிரியாக நினைத்து அவளுக்கு பல்வேறு பிரச்சினைகளை உருவாக்கி வந்த மாசி, இப்போது மந்திரியாகவும் ஆகிவிடுகிறான். அவன் மூலம் தன்னுடைய பதவிக்கும், தன்னுடைய குடும்பத்திற்கும் வரும் சோதனைகளை தனது சாதுர்யத்தால் முறியடிக்கிறாள் ரேகா.

    அவளுடைய தங்கை வசந்தி, மாசியை கொலை செய்ய பல முறை முயற்சி செய்தும் முடியாமல் தோற்றுப் போய் நிற்கிறாள். மாசி தனக்கெதிராக செய்து வரும் இடைïறுகளை சமாளித்துக் கொண்டிருக்கும் ரேகா, மாசியை தனது தங்கையிடமிருந்தே காப்பாற்ற வேண்டிய கட்டாயத்திற்கும் உள்ளாகிறாள்.

    இதற்கிடையே மாசியின் மைத்துனி சந்தியாவையும் அவளது புகுந்த வீட்டாரிடமிருந்து காப்பாற்றுகிறாள் ரேகா.

    சந்தியா தனது கணவன் குடும்பத்தாரை பழி தீர்த்தாளா? ரேகாவின் உதவியால் புதிய வாழ்க்கையை அமைத்துக் கொண்டாளா? திடுக்கிடும் எதிர்பார்ப்புகளுடன் தொடர்கிறது, தொடர்.

    திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில், அனுஹாசன், விஜய் ஆதிராஜ், பொள்ளாச்சி பாபு, வி.எஸ்.ராகவன், அப்ஸர் பாபு, பிரியதர்ஷினி, கிருத்திகா, பாபூஸ், ஸ்ரீலேகா நடிக்கிறார்கள்.

    கதை: சித்ரா லட்சுமணன், திரைக்கதை: தவமணி வசீகரன், வசனம்: மனோகர், ஒளிப்பதிவு: தியாகராஜன், இயக்கம்: ரத்னம், கிரியேட்டிவ் ஹெட்: சுபா வெங்கட்.
    "அன்பே சிவம்.

  4. #103
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    குஷ்புவின் புதிய தொடர்
    சோனியா அகர்வால் நாயகி



    டைரக்டர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட சோனியா அகர்வால், அதற்குப் பிறகு புதிய படங்கள் எதிலும் நடிக்கவில்லை. நடிகை குஷ்பு சொன்ன கதையைக் கேட்டதும் சின்னத்திரையில் நடிக்க வந்து விட்டார். இந்தக் கதையே `நாணல்' என்ற பெயரில் கலைஞர் டிவியில் வரும் திங்கள் முதல் ஒளிபரப்பாகிறது.

    ``புயல் வீசும் போது வளர்ந்து நிற்கும் ஆலமரம் கூட வேரோடு சாய்ந்து விடும். ஆனால் அதே ஆலமரத்தின் அடியில் இருக்கும் நாணலோ புயலுக்கு எந்தவித பாதிப்பும் இன்றி நிமிர்ந்தபடி நின்று பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்தும்.

    பெண் என்பவள் வாழ்க்கையில் எந்த மாதிரியான புயலை சந்தித்தாலும் கலங்காமல் நாணல் போல நிமிர்ந்து நிற்க வேண்டும் என்பதே கதையின் மையக் கரு'' என்கிறார், தொடரின் தயாரிப்பாளரும் நடிகையுமான குஷ்பு.

    ``தேவைப்படும் நேரத்தில் வளையும் இந்த பெண், பிரச்சினை என்று வரும்போது நிமிர்ந்து நின்று பதிலடி கொடுப்பாள். தான் மட்டும் எந்நேரமும் உழைத்துக் கொண்டிருக்க, வீட்டில் உள்ள மற்றவர்கள் சும்மா இருந்தால் நம் நாயகிக்கு பிடிக்காது. இப்படித்தான் படிக்கிற தம்பி, தங்கைகளை கூட படிப்புச் செலவுக்கு உழைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிற யதார்த்தவாதியாகவும் இருக்கிறாள்.

    இந்தக் கதை முடிவானதும், இந்த கேரக்டருக்கு யாரைப் போடலாம் என்ற கேள்விக்கு இடமில்லாமல் மனக்கண்ணில் சட்டென வெளிப்பட்டவர். சோனியா அகர்வால்தான். சினிமாவில் கூட அவருக்கு இப்படியொரு வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்படியொரு அற்புதமான கேரக்டர். தொடர் வெளிவரத் தொடங்கியதுமே சோனியா பெண்கள் பிரதிநிதியாக கொண்டாடப்படுவார்.''

    உற்சாகமாகவே சொன்னார் குஷ்பு.

    தொடரின் மற்ற நடிகர்கள், ஸ்ரீ, ஏ.ஆர்.எஸ், ரேவதி சங்கரன், ஜோக்கர் துளசி, பானுமதி, விசு, கே.எஸ்.ஜி, வெங்கடேஷ்.

    ஒளிப்பதிவு: நாக கிருஷ்ணன். திரைக்கதை: சிவராமன், பாடல்: தபு சங்கர், இசை: ராம்கிரண் தினா, பின்னணி இசை: இளங்கோ, பாடியவர்கள்: எம்.எஸ்.விஸ்வநாதன், சித்ரா, இயக்கம்: ராபர்ட்-ராஜசேகர்.சினிமாவில் `சின்னப்பூவே மெல்லப்பேசு' படம் தொடங்கி பாலைவனச்சோலை, மனசுக்குள்மத்தாப்பூ வரை 3 படங்கள் இணைந்து இயக்கிய இந்த இயக்குன இரட்டையர்கள் முதன்முதலாக சின்னத்திரையிலும் இந்த தொடர் மூலம் கால் பதித்திருக்கிறார்கள்.

    கதை கிரியேட்டிங் ஹெட்: குஷ்பு சுந்தர்.

  5. #104
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    கலைஞர் தொலைக்காட்சியில் தினந்தோறும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. ``சதி லீலாவதி'' தொடர்.

    சூர்யாவிற்கும், லீலாவதிக்கும் நடைபெறும் மறைமுகமான மோதல், சூர்யாவிற்கும் பரத்திற்கும் இடையே ஏற்படும் நேரடியான மோதல், ரஞ்சித்திற்கும் ராமநாதனுக்கும் இடையே உருவான மர்மமான மோதல் என ஒவ்வொரு கதாபாத்திரத்தின் படைப்பும் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கதையின் போக்கில் அனுதினமும் அடுத்தது என்ன என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிடும் தொடராக இந்த தொடர் இருக்கும்'' என்கிறார், இயக்குனர் கே.வி.சக்தி.

    நடிகர்கள்: சாக்ஷி சிவா, யோகிணி, ஸ்ரீ, லட்சுமிராஜ், நேத்ரன், மோனிகா, சண்முகசுந்தரம்.
    "அன்பே சிவம்.

  6. #105
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    தில்... தில்... மனதில்...
    கலைஞர் தொலைக்காட்சியில் சனிக்கிழமை தோறும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது ``தில் தில் மனதில்'' இடது கால் ஒரு அம்பாசிடர் காரிலும் வலது கால் மற்றொரு அம்பாசிடர் காரிலும் கட்டப்பட்ட நிலையில் கார்கள் பின்னோக்கி இயங்கும் போது தன்னுடைய மன வலிமையாலும் உடல் உறுதியாலும் கார்களை ஓரளவிற்கு மேல் இயங்காமல் செய்வது வியக்கத்தக்க சாதனை என்றால், பாட்டில் ஒன்றின் மீது அமர்வது அடுத்தகட்ட சாதனை.

    மனதில் `தில்' ஏற்படுத்தும் நிகழ்ச்சியாக ரசிகர்களை கவர்கிறது `தில்தில் மனதில்'.
    "அன்பே சிவம்.

  7. #106
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    சந்தோஷம்



    கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடர் ``சந்தோஷம்''.

    வருமான வரித்துறை அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற ராமநாதன் மற்றும் அவருடைய மூன்று மகள்களை சுற்றி பின்னப்பட்டது இந்த

    தொடர்.வி.சரவணன் கதை வசனம் எழுதி இயக்கும் இத்தொடரில், ராஜ்மதன், மீனாகுமாரி, லதா, தேவிஸ்ரீ, விஜய் ஆனந்த், குயிலி, மானேஜர் சீனா மற்றும் திடீர் கன்னையா நடித்து இருக்கிறார்கள்.
    "அன்பே சிவம்.

  8. #107
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    பாரதிராஜாவின் தெக்கித்திப்பொண்ணு சீரியலில் நடிகர் நெப்போலியன் நடித்த கேரக்டரில் இப்போது டைரக்டர் ஷரவண சுப்பையா நடிக்கிறார். இவர் அஜித் நடித்த சிட்டிசன் வெற்றிப்படத்தை இயக்கியவர்.

    * சோனியா அகர்வால் சீரியலில் நடிக்கவந்த பிறகு ஜோதிமயமான அந்த முன்னாள் முன்னணி நடிகையையும் ஒரு நிறுவனத்தில் நடிக்கக் கேட்டு அணுகியிருக்கிறார்கள். நடிகை தனது மார்க்கண்டேய மாமா சம்மதம் தந்தாலொழிய நடிப்பதில்லை என்றிருக்கிறார். மாமாவின் எண்ணமோ மருமகள் இனி குடும்பம், குழந்தை என்று கவனித்துக் கொண்டாலே போதும் என்பது தானாம்.

  9. #108
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    மறக்க முடியுமா?

    தமிழ்த் திரையுலகில் சாதனை படைத்து ரசிகர்களின் உள்ளங்களைக் கவர்ந்த வெள்ளித்திரையின் முன்னாள் நாயகர்-நாயகிகளின் வாழ்க்கை வரலாறு ‘மறக்க முடியுமா?' என்ற பெயரில் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

    இதுவரை சிவாஜிகணேசன், எம்.ஜி.ஆர்., ஜெமினிகணேசன், பத்மினி ஆகியோரைப் பற்றி ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் இடம்பெற்ற அரிய தகவல்கள், நேயர்களைப் பெரிதும் ஈர்த்தன.

    இவர்களையடுத்து நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கை வரலாறு ஒளிபரப்பாகிறது. எம்.ஆர்.ராதாவைப் பற்றி அவருடைய குடும்பத்தினர் நடிகைகள் ராதிகா, நிரோஷா, ராதாரவி, எம்.ஆர்.ஆர். வாசு விக்ரம் ஆகியோரும் எம்.ஆர்.ராதாவுடன் பணியாற்றிய கலைஞர்களும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.

    இந்த நிகழ்ச்சி, ஜன.4 முதல் ஞாயிறுதோறும் காலை 10.15 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.


    Dinamani 9.1.09

  10. #109
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    சந்தோஷத் திருப்பங்கள்



    கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 11 மணிக்கு ஒளி பரப்பாகி வரும் ``சந்தோஷம்'' தொடர், 50-வது எபிசோடை தொட்டிருக்கிறது.

    ஒரு குடும்பத்தில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை அழகுற படம் பிடித்து, பாமரனும் ரசிக்கும் வண்ணம் படமாக்கப்பட்டிருக்கிறது இந்த தொடர்.

    ``ஓய்வு பெற்ற வருமான வரித்துறை அதிகாரி ராமநாதன் மற்றும் அவருடைய மூன்று மகள்களை சுற்றி கதை பின்னப்பட்டுள்ளது. ராமநாதனின் முதல் மாப்பிள்ளை விவாகரத்து கேட்டு நிற்க, இரண்டாவது பெண் திருமணத்திற்கு தயாராகி நிற்க, மூன்றாவது பெண் காதலனோடு வெளியேற, வீடே கதி கலங்கி நிற்கிறது.

    எல்.எஸ்.கே, நிறுவனம் சார்பில் வி.சரவணன் கதை, வசனம் எழுதி இயக்கும் இத்தொடரில், ராஜ்மதன், மீனாகுமாரி, லதா, தேவிஸ்ரீ, விஜய்ஆனந்த், குயிலி, மானேஜர் சீனா, `திடீர்' கன்னையா ஆகியோர் நடித்து இருக்கிறார்கள்.
    "அன்பே சிவம்.

  11. #110
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    ரேகா ஐ.பி.எஸ்.



    கலைஞர் தொலைக் காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ரேகா ஐபிஎஸ் தொடர், 350-வது எபிசோடை நெருங்குகிறது.

    களரி கலையில் கற்றுத் தேர்ந்த நடிகை அனுஹாசன் காவல்துறை அதிகாரி வேடத்தில் வருகிறார்.

    தனது தங்கையை திருமணம் செய்தவரின் அண்ணனும், பிரபல அரசியல்வாதியுமான மாசி என்கிற ஊழல் மன்னன் மூலமாக, தனது பணியிடத்திலும், குடும்பத்திலும் ஏற்படும் பிரச்சினைகளை எவ்வாறு அனுஹாசன் எதிர்கொள்கிறார் என்பது தொடரின் இப்போதைய கதைப்பின்னணி.
    "அன்பே சிவம்.

Page 11 of 19 FirstFirst ... 910111213 ... LastLast

Similar Threads

  1. 'Makkal Kalaignar' JAISHANKAR
    By saradhaa_sn in forum Tamil Films - Classics
    Replies: 395
    Last Post: 4th June 2016, 09:44 AM
  2. Contact details for Kalaignar TV
    By MEDIA ASIA in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 23rd October 2007, 10:26 PM
  3. Kalaignar TV is coming on the way
    By Sanjeevi in forum Miscellaneous Topics
    Replies: 21
    Last Post: 6th August 2007, 07:17 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •