பிரமிட் சாய்மீராவின் முதல் தொடரான `ரேகா ஐ.பி.எஸ்.' கலைஞர் டிவியில் 300-வது எபிசோடை தாண்டியிருக்கிறது.
நேர்மையான பெண் ஐ.பி.எஸ். அதிகாரியான ரேகாவை எதிரியாக நினைத்து அவளுக்கு பல்வேறு பிரச்சினைகளை உருவாக்கி வந்த மாசி, இப்போது மந்திரியாகவும் ஆகிவிடுகிறான். அவன் மூலம் தன்னுடைய பதவிக்கும், தன்னுடைய குடும்பத்திற்கும் வரும் சோதனைகளை தனது சாதுர்யத்தால் முறியடிக்கிறாள் ரேகா.
அவளுடைய தங்கை வசந்தி, மாசியை கொலை செய்ய பல முறை முயற்சி செய்தும் முடியாமல் தோற்றுப் போய் நிற்கிறாள். மாசி தனக்கெதிராக செய்து வரும் இடைïறுகளை சமாளித்துக் கொண்டிருக்கும் ரேகா, மாசியை தனது தங்கையிடமிருந்தே காப்பாற்ற வேண்டிய கட்டாயத்திற்கும் உள்ளாகிறாள்.
இதற்கிடையே மாசியின் மைத்துனி சந்தியாவையும் அவளது புகுந்த வீட்டாரிடமிருந்து காப்பாற்றுகிறாள் ரேகா.
சந்தியா தனது கணவன் குடும்பத்தாரை பழி தீர்த்தாளா? ரேகாவின் உதவியால் புதிய வாழ்க்கையை அமைத்துக் கொண்டாளா? திடுக்கிடும் எதிர்பார்ப்புகளுடன் தொடர்கிறது, தொடர்.
திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில், அனுஹாசன், விஜய் ஆதிராஜ், பொள்ளாச்சி பாபு, வி.எஸ்.ராகவன், அப்ஸர் பாபு, பிரியதர்ஷினி, கிருத்திகா, பாபூஸ், ஸ்ரீலேகா நடிக்கிறார்கள்.
கதை: சித்ரா லட்சுமணன், திரைக்கதை: தவமணி வசீகரன், வசனம்: மனோகர், ஒளிப்பதிவு: தியாகராஜன், இயக்கம்: ரத்னம், கிரியேட்டிவ் ஹெட்: சுபா வெங்கட்.
Bookmarks