Page 2 of 4 FirstFirst 1234 LastLast
Results 11 to 20 of 37

Thread: thooNgaL - mini thodar

  1. #11
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    PP akka.. ( font mixing.. no idea )

    badri.. idhu marma kadhai illai.. :P

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #12
    Senior Member Veteran Hubber Anoushka's Avatar
    Join Date
    Nov 2004
    Location
    Dublin, Ireland
    Posts
    2,807
    Post Thanks / Like
    madhu some font's are not clear.... specially last two and a half lines (after let him sit comfortably)

    btw, romba interesting-ah irukku story
    The moment will arrive when you are comfortable with who you are, and what you are--when you don't feel the need to apologize for anything or to deny anything. To be comfortable in your own skin is the beginning of strength.

  4. #13
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    "ஜலந்தராசுரனை வதைச்ச சக்ராயுதம் தனக்கு வேணும் அப்படிங்கறதுக்காக மஹாவிஷ்ணு ஈஸ்வரனுக்கு தினமும்
    ஆயிரம் தாமரைப்பூவால பூஜை செஞ்சாராம். ஒரு நாள் அதுல ஒரு தாமரைப்பூ குறைஞ்சு போச்சு. பாதியில
    பூஜையை விட மனசில்லாத கமலக்கண்ணன், பங்கஜ நேத்ரன், புண்டரீகாட்சன் அப்படின்னு எல்லாம் பேர் கொண்ட
    பெருமாள் தன் கண்ணையே சமர்ப்பிச்சாராம். அதனால இங்கே சுவாமிக்கு நேத்ரார்ப்பணேஸ்வரர் அப்படின்னு
    பேரு. மிழலைக்குறும்பன் அப்படிங்கற வேடன் சமர்ப்பிச்ச விளாம்பழத்தை ஏத்துண்டு அவனுக்கு அனுக்ரஹம்
    செஞ்சிருக்கார். பஞ்சம் வந்த காலத்துல திருநாவுக்கரசருக்கும், திருஞானசம்பத்தருக்கும் தினமும் படிக்காசு
    கொடுத்து அருள் செஞ்சிருக்கார்.
    தேவாரத்துல இருக்கு பாருங்கோ.. வாசி தீரவே காசு நல்குவீர், மாசில் மிழலையீர் ஏசல் இல்லையே

    இன்னும் பாருங்கோ... கோவில் விமானத்திலேயே சீர்காழி தோணியப்பரும்
    இருக்கறதாலே "காழி பாதி வீழி பாதி" அப்படின்னு சொல்லுவா"

    சாம்பசிவ சாஸ்திரிகள் ஸ்தல வரலாறை விவரமாக சொல்ல பெர்ட் உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டு இருந்தார்.

    "ரொம்ப பெரிய கோவில். இல்லையா ?"

    சாம்பு பொக்கை வாயைத் திறந்து சிரித்தார். "பெருசுன்னு சொல்லப்படாது. பிரம்மாண்டம்னு சொல்லணும்.
    இங்கே ஊர் சின்னது. கோவில் பெருசு. இப்போ திருவாவடுதுறை ஆதீனத்துல இருக்கு., அவாதான் பாத்துக்கறா.
    ஒரு ஸ்லோகம் சொல்றேன். கேளுங்கோ.. இதைக் கல்யாணம் ஆகாத பொண்கள் தினமும் காலம்பர
    குளிச்சு ஸ்வாமியையும், அம்பாளையும் மனசுல நெனச்சுண்டு 45 நாள் சொன்னா கல்யாணம் நிச்சயமாகும்."

    அஸ்வின் ஒரு நமட்டுச் சிரிப்புடன் ஜன்னல் பக்கம் நகர, சாம்பசிவ சாஸ்திரிகளின் பார்வை அழுத்தமாக
    அவன் மேல் விழுந்தது. ஆனால் அவர் மீண்டும் பெர்ட், மணி ஆகியோரின் பக்கம் திரும்பினார்.

    "தேவேந்திராணி நமஸ்துப்யம் தேவேந்திரப் ப்ரிய பாமினி
    விவாஹ பாக்யம் ஆரோக்யம் புத்ரலாபம் ச தேஹிமே
    பதிம் தேஹி சுதம் தேஹி சௌபாக்யம் தேஹிமே சுபே
    சௌமாங்கல்யம் சுபம் ஞானம் தேஹிமே சிவசுந்தரி
    காத்யாயனி மஹாமாயே மஹாயோக நிதீச்வரி
    நந்தகோப சுதம் தேவம் பதிம்மே குருதே நம : "

    "இதுதான் ஸ்லோகம். பக்தி, நம்பிக்கை ரெண்டும் இருந்தால் எல்லாமே நடக்கும். நம்பிக்கை இல்லேன்னா
    கயிறு கூட பாம்பாத்தான் தெரியும்" சாம்பு சாஸ்திரிகள் சொன்னதும் அஸ்வின் திரும்பினான்.

    "அப்படி இல்லை பெரியவரே.. நம்பிக்கையோட கையில புடிச்சா பாம்பு கயிறா மாறிடாது. கடிக்கத்தான் செய்யும்.
    அது கயிறா பாம்பான்னு discuss செய்யறதை விட, அதைக் கையில புடிக்கறது தேவையா இல்லையான்னு
    யோசிக்கணும். அதுதான் புத்திசாலித்தனம்"

    பெர்ட் அவனை ஏறிட்டு "அஷ்வின்.. அவர் சொல்ல வருவதைச் சொல்லட்டும்." என்றதும் முகம் சிவக்க
    "சாரி... ஐ அம் ரியலி சாரி" என்றபடி அஸ்வின் ஜன்னல் அருகே சென்றான்.

    "காவேரிக்கரையிலே சோழராஜா காலத்துல கட்டின கோயில் எல்லாமே பெருசுதான். அதை மத்த ராஜாக்கள் இன்னும்
    பிரம்மாண்டமா ஆக்கினா. தேவாரத் தலத்துல அதிகமா பாடல் பெற்ற ஸ்தலத்துல இந்த திருவீழிமிழலையும்
    ஒண்ணு தெரியுமா ?" என்று சொன்ன சாம்பசிவம் "இந்த மாதிரி மண்டபம் எங்கேயுமே இருந்ததில்லை. வவ்வால்
    தொங்க முடியாதபடி மேல் விதானத்துல மடிப்போ, தூண்களோ இல்லாம கட்டினது"

    பெர்ட் நிமிர்ந்தார். "ஒரு டவுட் கேக்கலாமா ?"

    "சொல்லுங்க"

    "இந்த மண்டபத்தைக் கட்டினபோது நிச்சயம் ஏதாவது தாங்கற தூண் அல்லது scafolding இருந்திருக்கும். இல்லையா ?
    அல்லது அது கூட இல்லாம கட்டியிருப்பாங்களா ?"

    சாம்பு மறுபடி சிரித்தார். "நேக்கு தெரிஞ்சு எந்த சப்போர்ட்டும் இல்லாம கட்டின கட்டிடம் எதுவுமில்ல.. பழைய
    ஓலைச்சுவடில போட்டிருக்கறபடி தென்னை மரத்தை வச்சு இதை உசத்திக் கட்டினதா சொல்லுவா "

    "ஓ.. அப்போ தென்னை மரமெல்லாம் இந்த மண்டபம் கட்ட தூண் போல உதவி செஞ்சிருக்கு. ஆனா இப்போ
    அது போல தாங்க எதுவும் இல்லாம இருக்கறதாலதான் இந்த மண்டபத்துக்கு இவ்வளவு பேரு இல்லையா "

    நீர்மோரைக் குடித்து விட்டு சாம்பசிவ சாஸ்திரிகள் கிளம்ப, "நாமும் கிளம்பலாமா ? டயம் ஆயிடுச்சு. ஈவினிங்
    கும்பகோணம் போனாத்தான் சாப்பிட்டு விட்டு லேட் நைட் சென்னை போயிடலாம்" என்றான் அஸ்வின்.

    "யா.. lets move" என்றபடி பெர்ட் நகர்ந்தார். சாம்பு மீண்டும் அஸ்வினைப் பார்த்தபடி நின்றார்.

    "மணி சார்.. சாப்பாடு செஞ்சு கொடுத்த பாட்டிக்கு என் தாங்ஸ் சொல்லிடுங்க.. அப்படியே எப்படியாவது
    அவங்க கிட்ட இந்த பணத்தைக் கொடுத்துடுங்க" என்றபடி பெர்ட் இரண்டு ஆயிரம் ரூபாய் நோட்டுகளை
    நீட்டினார்.

    "அவங்க பணம் வாங்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க சார்"

    "அப்படி விட்டுடக் கூடாது. அவங்களைப் போல இருக்கறவங்களுக்கு நாம உதவி செஞ்சாதானே நல்லது.
    நீங்க explain செஞ்சு கொடுத்துடுங்க. வேற எதுவும் help வேணுமானாலும் என்னை contact செய்யுங்க"
    என்றபடி பெர்ட் வற்புறுத்த அஸ்வின் உள் அறையில் பெட்டிகளை மூடிக் கொண்டிருந்தான்.

    பதினைந்து நிமிடத்தில் அவர்கள் கிளம்பிய கார் ரோடு முனையில் மறைந்ததும், புடவைத் தலைப்பால் தோளை
    மூடியபடி பின் கதவு வழியாக பாகீரதி பாட்டி நுழைந்தாள்.

    "பாட்டி.. இவ்வளவு நேரம் கொல்லைப் பக்கதிலேயா இருந்தீங்க.. ? இப்போதான் அவங்க கிளம்பினாங்க..
    உங்க சமையலைப் பத்தி பிரமாதமா சொல்லி பணம் கூட கொடுத்திருக்காங்க.. நீங்க வாங்க மாட்டீங்கன்னு
    சொன்னேன். அப்படியும் கொடுத்துட்டு போனாரு அந்த துரை"

    வாசல் அருகில் நின்றிருந்த சாம்பு திரும்பி பாட்டியைப் பார்த்தார்.

    "மணி.. அந்த பணத்தைக் கொண்டு போய் கோவில் அன்னதான நிதியிலே சேர்த்துடு. அப்பு.. நீ பாத்திரத்தை
    எல்லாம் கொண்டு போய் பாகியாத்துல வச்சுடு" சாம்பசிவ சாஸ்திரிகள் சொன்னதும் அவர்கள் நகர்ந்தனர்.

    "என்ன பாகி... பேரனைப் பாக்க வந்தியா ?"

    "ஆமாம் அண்ணா.. வெளி தேசத்துல பொறந்திருந்தாலும் நாலு பேர் வயறு ரொம்பணும் அப்படின்னு நெனச்சு
    இன்னைக்கு அன்னதானம் செய்ய வந்திருந்தானே.. அந்த பிள்ளையை என் பேரன் ஸ்தானத்துல வச்சு
    ஆசீர்வாதம் செய்யத்தான் வந்தேன்" சாம்புவின் கேள்விக்கு பாகி பாட்டி புன்னகையுடன் பதிலளித்தாள்.

    "ம்.. உன் வைராக்கியத்தை விட்டுக் கொடுக்க மாட்டியே.. புள்ளையைப் பறிகொடுத்தபோது யாருமில்லாம
    நின்ன பேரனை பட்டணத்துல விட்டு, அவனைப் பாத்துக்கறதா சொன்ன டிரஸ்டுக்கு மாசாமாசம் அடுப்படியிலே
    வெந்து சம்பாதிச்ச பணத்தை அனுப்பிப் படிக்க வச்சே.. இன்னைக்கு அவன் கொள்ளை கொள்ளையா
    சம்பாதிக்கறான். பெரிய எஞ்ஜினியரா இருக்கான். ஆனா.. சொந்த பாட்டியைக் கண்டா ஆகலை..
    இந்த அழுக்குப் புடைவக்காரியாலதான் இன்னைக்கு அவன் சில்க் சட்டை போட்டுக்கறான். அது தெரியல..
    உலகத்தோட கண்ணுக்கு அவன் இன்னைக்கு இருக்கற நிலைமை பெரிசா தெரியறது. அதுக்காக ஒருத்தி
    காய்ஞ்சு கஷ்டப்பட்டது எவ்ளோ பேருக்குத் தெரியப் போறது ? என்ன மாதிரி பழைய மனுஷாளுக்கு
    கொஞ்சம் தெரியும். இதெல்லாம் எங்களோட மறைஞ்சுடும்"

    "எதுக்கு அண்ணா இவ்வளவு விசனப்படறேள் ? நானே அதைப் பத்திக் கவலைப்படறதில்ல.. எங்கேயோ
    எல்லாரும் ஷேமமா இருந்தா போறும். என் வயத்துக்கு அந்த ஈஸ்வரன் படியளப்பார். நான் வச்ச பேரைக்
    கூட அசுவின் அப்படின்னு மாத்திண்டுட்டான் பாத்தேளா ? அவனுக்கு அந்தக் காலத்துல நான் அவன்
    படிக்கற இடத்துக்கு போனாலே புடிக்காது. காலேஜூக்கு போனதும் என்னை அங்கே வரவே கூடாதுன்னு
    சொல்லிட்டான். அவனைப் பாத்து பதினஞ்சு வருஷம் ஆறது. இன்னைக்கும் இங்கே வந்திருந்தும் என்னைத்
    தெரியாத மாதிரியே இருந்துட்டு போயிட்டான். பரவாயில்ல.. எங்கேயோ குழந்தை நன்னா இருக்கட்டும்"

    பாகிப்பாட்டியின் கண்ணில் மின்னியது கண்ணீரா இல்லை வெயிலின் பிரதிபலிப்பா என்று தெரியவில்லை.

    சாம்பு கோவில் கோபுரத்தை வெறித்தார். தூண்கள் இல்லாத மண்டபத்தின் பெருமையைப் பேசும் உலகம்
    அதைக் கட்டும்போது வெட்டிக் கிடந்த தென்னை மரங்களைப் பற்றி நினைப்பதில்லை.

    மரங்களும் மனிதர்களும் சில சமயங்களில் ஒன்றுதான்.

  5. #14
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by Anoushka
    madhu some font's are not clear.... specially last two and a half lines (after let him sit comfortably)

    btw, romba interesting-ah irukku story
    enakku saraiya theriyudhE.

    sorry... .. let me post again ! :P

  6. #15
    Member Junior Hubber venkathoney's Avatar
    Join Date
    Jun 2006
    Posts
    42
    Post Thanks / Like
    Nice story..........

    It is a happening in day today life , for one or the other.

    I don't know whether to be pity for the Bhagirathi Patti or to curse her Grand son

    It is due to each and every one's fate.........

    Any thing can happen. Life is uncertain and unpredicitable....

    Nalla ullangal kondavargal eppozhuthum Nandragave vaazhvargal!!!!!!!!!!!
    "It takes a minute to have a crush on someone,
    an hour to like someone, and a day to love someone...
    but it takes a lifetime to forget someone."

  7. #16
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    venkat..

    danksu..

    (adhu sari.. avatarla irukkaradhu yaaru ? )

  8. #17
    Member Junior Hubber venkathoney's Avatar
    Join Date
    Jun 2006
    Posts
    42
    Post Thanks / Like
    shivan
    "It takes a minute to have a crush on someone,
    an hour to like someone, and a day to love someone...
    but it takes a lifetime to forget someone."

  9. #18
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by venkathoney
    shivan
    kEttadhum singer Jency padathai mAthittu sAmy avatar pOttu
    kaNNula maNNa thoova pAkkuRiya ?

  10. #19
    Member Junior Hubber venkathoney's Avatar
    Join Date
    Jun 2006
    Posts
    42
    Post Thanks / Like


    Its time to change my avatar......

    In between gapala neega kettinga.........
    "It takes a minute to have a crush on someone,
    an hour to like someone, and a day to love someone...
    but it takes a lifetime to forget someone."

  11. #20
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by venkathoney


    Its time to change my avatar......

    In between gapala neega kettinga.........
    adhukku yEn adikkaRE ?

Page 2 of 4 FirstFirst 1234 LastLast

Similar Threads

  1. Ilayarajavin Ludes are mini Symphony !
    By smss_engineer in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 14
    Last Post: 27th October 2006, 11:31 AM
  2. Mini songs by IR
    By swathy in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 49
    Last Post: 1st May 2006, 08:04 PM
  3. "thodar" kathai
    By Oldposts in forum Stories / kathaigaL
    Replies: 77
    Last Post: 5th April 2006, 02:22 PM
  4. mini samosa recipe
    By bitu in forum Indian Food
    Replies: 0
    Last Post: 4th March 2005, 09:22 PM
  5. Thodar kirukalgal
    By kirukan in forum Poems / kavidhaigaL
    Replies: 7
    Last Post: 29th November 2004, 06:23 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •