Page 1 of 4 123 ... LastLast
Results 1 to 10 of 37

Thread: thooNgaL - mini thodar

  1. #1
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like

    thooNgaL - mini thodar

    இது ஒரு தொடர்கதை அல்ல..

    எழுதுவதற்கு அதிக நேரம் இல்லாத காரணத்தினால் இன்ஸ்டால்மெண்டில்
    வெளிவரும் சிறுகதைதான்...

    ரெண்டு மூணு parts மட்டுமே...

    பொறுத்துக்குங்க .

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    காவிரிப் பாசனத்திற்கே உரிய பசுமை கொஞ்சம் வெளிறிக் கிடக்க, அடர்ந்த தென்னத்தோப்பின்
    நடுவே பிரம்மாண்டமாய் உயர்ந்து தெரிந்தது திருவீழிமிழலை சிவன் கோவில் கோபுரம்.

    வளைந்து வளைந்து சென்ற தார் ரோட்டில் இருந்து சரிந்த சிறிய மண் சாலையில் அப்பு வேகமாக
    இறங்கினான். வேலிப் படலைத் திறந்து சாணமிட்டு மெழுகி கோலம் போடப்பட்டிருந்த வாசலைக்
    கடந்து பாதி திறந்திருந்த கதவைத் தட்டியபடி உள்ளே நுழைந்தான்.

    "பாகி பாட்டி.. பாகி பாட்டி.. "

    உள்ளேயிருந்து வந்த பாகீரதி ஏறக்குறைய ஆறு வியாழ வட்டத்தை நெருங்கும் வயதில் இருந்தாள்.
    தும்பைப் பூவாய் நரைத்திருந்த தலையும், அங்கங்கே லேசாகத் தைத்திருந்த ஒன்பது கஜப் புடைவையும்,
    நெற்றியில் ஒற்றைக் கோடாய் பளீரிட்ட விபூதியுமாக பாட்டி நிதானமாக சிரித்தபடி கேட்டாள்.

    "என்னடா அப்பு.. இவ்வளவு வேகமா வரே ? என்னப்பா விசேஷம் ? முதல்ல ஒரு லோட்டா ஜலம்
    குடிச்சுட்டு சொல்லு"

    "பாட்டி.. அதெல்லாம் இருக்கட்டும். நான் ரொம்ப முக்கியமான விஷயம் சொல்ல வந்திருக்கேன்.
    சிவன் கோவில்ல சித்திரைத் திருவிழா ஆரம்பிக்கப் போறது இல்லியா ? அதுக்கு தினமும் அன்னதானம்
    செய்ய ஒரு வெள்ளைக்காரர் பணம் கொடுத்திருக்காராம்"

    "அதுனால என்னப்பா ? வருஷா வருஷம் யாராவது பெரிய மனுஷா இந்த மாதிரி செய்யறது
    வழக்கம்தானே ?"

    "அதுக்கில்ல பாட்டி.. நம்ம கோவில் எவ்வளவு பழங்காலத்து கட்டிடம். எல்லாரும் சொல்லுவா இல்லியா ?
    அந்தக் காலத்துல கோவில் வேலை செய்யறவா எல்லாரும் புதுசா கோவில் கட்டறதா இருந்தா
    அந்த காண்டிராக்ட்ல எல்லா விதமான சிற்ப வேலையும் செய்வோம். ஆனா திருவலஞ்சுழி பலகணி,
    ஆவுடையார் கோவில் கொடுங்கை அப்புறம் நம்ம திருவீழிமிழலை வவ்வால் மண்டபம் மாதிரி மட்டும்
    செய்ய முடியாதுன்னு சொல்லி கையெழுத்துப் போடுவா அப்படின்னு சொல்லுவாளே"

    "அது என்னமோ நிஜம்தான். அந்த வௌவால் நெத்தி மண்டபம் மாதிரி அந்தக் காலத்துல மட்டுமில்ல
    இந்தக் காலத்துலேயும் கட்டறது கஷ்டம்தான். அதுல ஒரு தூண் கூட கிடையாது. மேல் பக்கத்துல
    மடிப்பும் கிடையாது. மழ மழன்னு இருக்கும். அதுனால வௌவால் தங்க முடியாது.
    ஆனா இப்போ எல்லாம் பட்டணத்துல இது மாதிரி எல்லாம் புதுசா வந்திருக்கும்னு சொல்றாளே "

    "அது என்னவோ பாட்டி.. இதுல விசேஷம் என்னன்னா.. அந்த வெள்ளைக்காரர் ஒரு கட்டிடம் கட்டற
    இன்ஜினீயராம். அவர் இந்த தூண் இல்லாத மண்டபத்தை பார்க்கறதுக்காகவே வராராம். அப்புறம்...
    அவரை அழைச்சுண்டு வரவர் நம்ம ஊர்க்காராம். அவரும் பெரிய கட்டடம் எல்லாம் கட்டிருக்காராம்.
    இங்கே ஒரு நாள்தான் தங்குவா.. ஆனா நம்ம ஊர் சாப்பாடு சாப்பிடுவாளாம். அதுனாலே
    மணி சாஸ்திரிகள் உங்ககிட்டே சொல்ல சொன்னார்."

    "அதுக்கென்னப்பா.. செஞ்சுட்டா போச்சு"

    அப்பு வேகமாக வெளியேறினான். இன்னும் ஊருக்கெல்லாம் இந்த சேதியைச் சொல்லணுமே !!

  4. #3
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,160
    Post Thanks / Like
    ¿øÄ Í¨ÅÂ¡É ¦À¡Ð «È¢× Å¢„Âí¸û!
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  5. #4
    Senior Member Diamond Hubber
    Join Date
    Jan 2006
    Posts
    6,074
    Post Thanks / Like
    next part yenge?
    Anbe Sivam

  6. #5
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    மணி சாஸ்திரிகள் தன் எதிரே இருந்த பெர்ட்டை மதிப்புடன் கவனித்தார். அவர் கொஞ்சிப் பேசும்
    தமிழ் கூட நன்றாகத்தான் இருந்தது. அவருக்கு அருகில் சினிமாப் பட கதாநாயகன் போல இருந்த
    அஸ்வின் தன் கையில் இருந்த பெரிய புத்தகத்தைப் புரட்டி அவரிடம் எதையோ காட்டி விளக்கிக்
    கொண்டு இருந்தான்.

    அன்றைக்குச் சித்திரைத் திருவிழாவின் முக்கியமான நாள். புராண வரலாற்றின்படி காத்யாயன
    மகரிஷியின் பெண்ணாகப் பிறந்த மலைமகளை, பரமேஸ்வரன் திருமணம் செய்து கொண்ட நாள்.
    வருடம் முழுவதும் வெறும் காட்சிப் பொருளாக இருக்கும் வவ்வால் மண்டபம் அன்று கல்யாண
    கூடமாக மாறும். இறைவனும் இறைவியும் திருமணம் செய்து கொள்ளும் காட்சியை எல்லோரும்
    தடங்கல் இன்றிக் காணும்படி மறைப்புகள் இல்லாத பெரிய மண்டபத்தில் நடைபெறும்.

    காலையில் கும்பகோணத்தில் இருந்து கிளம்பி வந்திருந்த அஸ்வினும், திரு. பெர்ட் என்று அழைக்கப்பட்ட
    வெளிநாட்டவரும் முன்பே ஏற்பாடு செய்திருந்த அறைக்கு வந்திருந்தனர். ஊருக்கே அன்று
    அன்னதானம் செய்ய முன்வந்த பெர்ட், தேவை இல்லாத வம்பு, வழக்குகளை உருவாக்காமல்
    தனியாகத் தனக்கு தென்னிந்திய சைவ சமையல் செய்து தரும்படி கேட்டுக் கொண்டதனால்
    சமையல் வேலை செய்யும் பாகீரதி பாட்டியிடம் சொல்லி ஏற்பாடு செய்திருந்தார்கள்.

    ஆனால் வந்தவுடன் ஒரு முறை மண்டபத்தைப் பார்த்து விட்டு திரும்பியவர்கள் மாற்றி மாற்றி
    எதையோ பேசிக்கொண்டே இருந்தார்கள்.

    "அஸ்வின்.. டாஞ்சூர் பக்கமிருக்குற டெம்பிள்ஸ் எல்லாமும் different structures போலத் தெரியுது.
    இந்த ஹால் பத்தி நீ சொன்னது நிஜம். its a technical marvel. Olden times-la இது போல கட்டிடம்
    கட்டுறதுல எவ்ளோ ப்ராப்ளம்ஸ் இருக்கும்.. OMG.. எனக்கு வெஸ்ட் மினிஸ்டர் அபே நினைவு வருது.
    அது சரி.. நீ இந்த ஏரியா அப்படின்னு சொன்னியே ! எங்கே உனக்கு தெரிஞ்சவங்க யாரும் இல்லையா ?"

    மணி சாஸ்திரிகள் உன்னிப்பாக கவனித்தார். முன்பே கோவில் அதிகாரி சொன்னது நினைவுக்கு வந்தது.

    "சாஸ்திரிகளே.. திருவிழாவுக்கு பெரிய நன்கொடை கொடுக்கறாரே.. அந்த துரையை அழைச்சுக்கிட்டு
    வரப்போறவர் டில்லியிலே பெரிய என்ஜினியரு. நம்ம ஊர்ப் பக்கத்துக்காரர்னு கேள்வி. சின்ன வயசுல
    பெரிய பெரிய படிப்பெல்லாம் படிச்சுட்டு பெரிய பதவில இருக்காராம்."

    "எந்த ஊருன்னு தெரியுமா ? யாராத்து மனுஷா ?"

    "அதெல்லாம் தெரியாதுப்பா.. இப்போ இருக்கற காலகட்டத்துல கோவிலுக்கோ, ஜனங்களுக்கோ உதவி
    செய்யணும்னு வரவா கம்மி. அதுல நதிமூலம், ரிஷி மூலம் எல்லாம் பாக்க முடியாது. யாரா இருந்தா
    என்ன ? நல்ல காரியம் செய்யறார். நன்னா இருக்கட்டும்"

    தலையைக் குலுக்கிக் கொண்டு மணி நிகழ்காலத்துக்கு வந்தார்.

    அஸ்வின் ஒரு அலட்சியப் புன்னகையுடன் "நோ.. மிஸ்டர் பெர்ட். You know me well ! எனக்கு
    என் திறமை மேல மட்டும்தான் நம்பிக்கை. நான் ஒரு Orphan அப்படின்னு உங்களுக்கே தெரியும்.
    என் roots எங்கே இருந்தா என்ன ? இப்போ என் பொஸிஷன் என்ன அப்படின்னு மட்டும்தான்
    நான் பார்க்கிறேன்" வசீகரமாகச் சிரித்தபடி அஸ்வின் புத்தகத்தை மூடினான்.

    "கல்யாண உத்சவம் நடக்கறது. இன்னும் ஒரு மணி நேரத்துல பூர்த்தி ஆயிடும். நீங்க வந்து கலந்துண்டா
    எல்லாருக்கும் உற்சாகமா இருக்கும். அப்பவே கிருஷ்ணன் சார் வந்து சொன்னாரே... வரேளா ?"
    மணி மெதுவாகக் கேட்க அஸ்வின் அவரை பார்த்த்தான்.

    "சாரி பட்ஜி ! நாங்க வந்தது மண்டபத்தைப் பார்த்து அது போல கட்டுமானத்தை இந்தக் காலத்தில்
    செய்ய முடியுமா அப்படின்னு யோசிக்கத்தான். தூண் எதுவும் இல்லாம இவ்வளவு பெரிய ஹாலை
    அதுவும் பிளானிடோரியம் மாதிரி மேல்பக்கம் வச்சு கட்டியிருக்கறது பத்தி எல்லாம் பார்த்து, பேசி
    டிஸ்கஸ் செய்யத்தான் வந்திருக்கோம். உங்களுக்கே தெரியும். வெளியே சாதாரணமா இருந்தாலும்
    நம்ம ஊர்ல foreigners-ஐ கோவிலுக்குள்ளே கூட விட யோசிப்பாங்க. நல்ல வேளையா இந்த
    மண்டபம் வெளிப்பிரகாரத்திலேயெ இருக்கு. இப்போ உற்சவ நேரத்துல கூட்டமா இருக்கும். So,
    நாங்க ரெஸ்ட் எடுத்துக்கிட்டு afternoon வரோம்"

    பெர்ட் நிமிர்ந்தார். "No அஸ்வின். அப்படிச் சொல்லாதே. ஒவ்வொரு ரிலிஜனுக்கும் சில கஸ்டம்ஸ்
    இருக்கு. இப்படி சில இடத்துல அதை follow செய்யறதுனாலதான் அதுக்கு இன்னும் life இருக்கு.
    ஹிந்து ரிலிஜன்படி கோவிலுக்குள்ளே போக முடியாதவங்களுக்காக கடவுள் வெளியே வந்து
    தன்னைக் காட்டுறதுக்குத்தான் இந்த festival celebration. There is nothing wrong in it. I can come
    and see the limit upto which I am permitted. isnt it ? "

    பெர்ட் மெல்லச் சிரித்தபடி "மிஸ்டர் மணி ! நாங்களும் வரோம். I just wanna see the hall again " என்றார்.

    "ஒரே நிமிஷம்...நீங்க திரும்பறதுக்குள்ள உங்க சாப்பாட்டை ரெடி செஞ்சுட சொல்றேன்" என்று
    வாசலுக்குப் பாய்ந்த மணி சாஸ்திரிகள் அங்கே வந்து கொண்டிருந்த அப்புவிடம் "டேய் அப்பு..
    பாட்டி கிட்டே போய் சாப்பாடு எல்லாம் ரெடியான்னு கேட்டுக்கோ.. துரை ரொம்ப நல்லவரா இருக்கார்.
    பாட்டி கைப்பக்குவம் புடிச்சிருந்தா துரை ஸ்பெஷலா கவனிப்பார். குறைஞ்ச பட்சம் பாட்டிக்கு
    ஒரு நல்ல புடைவயாவது வாங்கிக்க வழி பொறக்கட்டும்"

    அஸ்வின் எதுவும் பேசாமல் புத்தகத்தை எடுத்து வைத்தான்.

  7. #6
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,160
    Post Thanks / Like
    «ŠÅ¢ý ±ýÉ Á¡¾¢Ã¢ À¢Ã¸¢Õ¾¢?
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  8. #7
    Moderator Veteran Hubber Badri's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    Melbourne, Australia
    Posts
    2,276
    Post Thanks / Like
    †õõ! «ŠÅ¢É À¡ò¾¡ «ó¾ °÷ ÁÛ„É §À¡Ä ¦¾È¢ÂÄ. ²§¾¡ Á÷Áõ þÕìÌ!

    ÁÐ, §ÁÄ ÀÊìÌõ ¬÷Åò¨¾ ¯ñÎ ÀýÉ¢Ëí¸!

    When we stop labouring under the delusion of our cosmic self-importance, we are free of hindrance, fear, worry and attachment. We are liberated!!!

  9. #8
    Senior Member Platinum Hubber Shakthiprabha.'s Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Vagabond
    Posts
    17,596
    Post Thanks / Like
    apram?

  10. #9
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    தலை வாழை இலையில் இருந்த எல்லாமே காலியாகி சுத்தமாகத் துடைத்து விட்டது போல் இருந்தது.

    தலைவாழை இலையில் இருந்த எல்லாமே காலியாகி சுத்தமாகத் துடைத்து விட்டது போல இருந்தது.

    "Wow ! delicious ! நிறைய சௌத் இண்டியன் சாப்பாடு சாப்பிட்டிருக்கேன். But, this is something different.
    இவ்வளவு நல்லா எங்கேயுமே இல்ல.,.. what do you say Ashwin : பெர்ட் பூத்துவாலையில் கையைத்
    துடைத்தபடி கேட்டார்.

    "யெஸ்.. நல்லா இருந்துச்சு. BTW, நான் எல்லா விஷயத்தையும் குறிச்சு வச்சிருக்கேன். இன்னைக்கு night
    ¦ºý¨ÉìÌò ¾¢ÕõÀÏõ. ¿¡¨ÇìÌ Á¡÷É¢í flight-la டில்லி போயிடலாம். I dont want to disturb you
    today. இப்போ ரெஸ்ட் எடுத்துக்குங்க."

    அப்பு அவர்கள் சாப்பிட்ட மேஜையைத் துடைக்க ஆரம்பித்தான்.

    "மிஸ்டர் அப்பு. இந்த சாப்பாடு உங்க வீட்டுல செஞ்சதா ? " பெர்ட் கேட்ட கேள்விக்கு மணி சாஸ்திரிகள்
    பதில் கொடுத்தார்.

    "இல்ல சார். இங்கே பாகீரதி அப்படின்னு ஒரு வயசான பாட்டி இருக்காங்க. சின்ன வயசுல husband போயிட்டார்.
    அப்புறம் ஒரு accþdent-la புள்ளையும், மாட்டுப்பொண்ணும் போயிட்டாங்க"

    "மாட்டுபொண்ணு.?..You mean daughter-in-law ?"

    "ஆமாம்.. சொந்த பந்தம் எதுவுமில்லை. அதுக்கப்புறம் தனியா உழைச்சு வயத்துப்பாட்டுக்கு வழி தேடிண்டு இருக்கா "

    "ஓகே.. அவங்களுக்கு ஏதாவது ஹெல்ப் வேணுமானா நான் செய்யறேன்"

    மணி சாஸ்திரிகள் முகத்தில் விசனக்குறி தெரிந்தது. "நான் கூட கேட்டேன். ஆனா பாட்டிக்கு எதுவும் வேணாமாம்.
    இந்த சாப்பாட்டுக்கு கூட பணம் வாங்கிக்க மாட்டேன்னு கட்டாயமா சொல்லிட்டா. ஊருக்கெல்லாம் அன்னதானம்
    செய்யற மனுஷர் வயத்துக்கு ஒரு வேளை சாதம் போடற பாக்கியம் கிடைச்சதே போறும்னு சொல்லிட்டா"

    பெர்ட் நிமிர்ந்து பார்த்தார். "அஷ்வின்.. உங்க ஊரு மண்டபம் மட்டுமில்லே.. மனுஷங்களும் different-ஆ இருக்காங்க"

    அஸ்வின் தலையைக் குலுக்கிக் கொண்டான். மணியைப் பார்த்து "அதுக்குப் பேரு தாராள மனசுன்னு நீங்க
    நினைக்கறீங்க. முட்டாள்தனம் அப்படின்னு நான் நினைப்பேன். செய்யற காரியத்துக்கு பணம் வாங்கிக்கறதுல
    என்ன தப்பு இருக்கு ? அதுவும் ஒரு வேளை வசதியா இருக்கறவங்க வேணாம்னு சொல்லலாம். வழி இல்லாதவங்க
    இப்படி சொன்னா அதுக்கு பேரு வறட்டு கௌரவம் அப்படின்னுதான் தோணும்"

    மணி சாஸ்திரிகள் கொஞ்சம் கோபமும், கொஞ்சம் தடுமாற்றமும் சேர நிமிர்ந்தபோது வாசலில் சாம்பசிவ சாஸ்திரிகள்
    வருவது தெரிந்தது.

    "சார்... நீங்க கேட்டிருந்தபடி சாம்பு தாத்தா வந்திருக்கார். ஊர்ல வயசான விஷயம் தெரிஞ்சவர். கோவில் பத்தியோ
    மத்த விவரங்களோ கேட்டுக்கலாம்"

    "I should apologise. இவ்வளவு வயசானவர்னு தெரிஞ்சிருந்தா நானே போய் பார்த்திருப்பேன். Let him sit
    comfortably, «ôÒÈõ §¸ðÎ츧Èý, Á¢Š¼÷ «ôÒ, «ÅÕìÌ ÜÄ¡ ²¾¡ÅÐ ¦¸¡Îì¸ ¸¢¨¼ìÌÁ¡ ?"

    ¦À÷ðÊý §¸ûÅ¢ìÌ À¾¢Ä¡¸ «ôÒ "¾¡ò¾¡×ìÌ ¿£÷§Á¡÷¾¡ý À¢ÊìÌõ. «Å÷ ÅÃô§À¡È¡÷Û ¦º¡ýÉЧÁ À¡¸¢À¡ðÊ
    ܃¡Ä ¦¸¡ÎòРŢðÊÕ측" ±ýÈ¡ý.

    «ŠÅ¢ý ÌÈ¢ôÒô Òò¾¸ò¨¾ì ¸£§Æ ¨ÅòÐÅ¢ðÎ ¯û§Ç Åó¾ º¡õÀº¢Å º¡Š¾¢Ã¢¸¨Ç À¡÷ò¾ÀÊ ¿¢ýÈ¡ý.

  11. #10
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,160
    Post Thanks / Like
    Font mixing???!!!


    Paavam Ashwin, black sheep pOla nikkuRaan!
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

Page 1 of 4 123 ... LastLast

Similar Threads

  1. Ilayarajavin Ludes are mini Symphony !
    By smss_engineer in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 14
    Last Post: 27th October 2006, 11:31 AM
  2. Mini songs by IR
    By swathy in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 49
    Last Post: 1st May 2006, 08:04 PM
  3. "thodar" kathai
    By Oldposts in forum Stories / kathaigaL
    Replies: 77
    Last Post: 5th April 2006, 02:22 PM
  4. mini samosa recipe
    By bitu in forum Indian Food
    Replies: 0
    Last Post: 4th March 2005, 09:22 PM
  5. Thodar kirukalgal
    By kirukan in forum Poems / kavidhaigaL
    Replies: 7
    Last Post: 29th November 2004, 06:23 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •