Page 3 of 3 FirstFirst 123
Results 21 to 24 of 24

Thread: Jaiyam serial on Jaya TV

  1. #21
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    ஜெயா டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஜெயம் தொடர் 225-வது எபிசோடை எட்டிப் பிடிக்கிறது. நடிகை சுதா சந்திரன் தமிழில் நடிக்கும் முதல் சின்னத்திரை தொடர் என்ற பெருமையும் இந்த தொடருக்கு உண்டு. தொடரின் பத்மாவதி இவர் தான்.

    தொடரின் ஆரம்பத்தில் கழுத்து நிறைய நகையெல்லாம் அணிந்து அலங்காரத் தேராக காட்சி தந்த சுதா சந்திரன், இப்போது அடியோடு மாறி விட்டார். விலில்லியாக ஆரம்பித்த அவரது நடிப்பு அத்தியாயத்தில் இப்போது மாற்றம். நல்லவர் என்ற முத்திரை விழுந்ததும் நடவடிக்கைகளில் தலைகீழ் மாற்றம். நடை, உடை பாவனைகள் மாறிவிட்டன. கண்களில் எட்டிப் பார்த்த கர்வம் போன இடம் தெரியவில்லை. மாறாக பணிவு கண்களை நிறைத்திருக்கிறது. தோற்றத்தில் எளிமை எட்டிப் பார்க்கிறது. பணக்கார பத்மாவதி இப்போது முற்றிலும் நம் மனக்கண்ணில் இருந்து மறைந்து நடுத்தர குடும்பத்தின்பத்மாவதி நம் நெஞ்சில் நிறைந்து நிற்கிறாள்.

    எப்படி வாழ்ந்த பத்மாவதி இப்படி ஆகி விட்டாள்? வியப்பின்எல்லையில் உங்கள் விழிகள் விரிந்தது விரிந்ததாகவே இருக்கட்டும். மல்லுக் கட்டிய மாமியார் நளினி இப்போது பத்மாவதியின் அன்பான அம்மாவாக மாறிப் போனதும் ஆச்சரியத்தின் அடுத்த பக்கம் தானே என்கிறார், தொடரின் தயாரிப்பாளரும் இயக்குனருமான பிரபு நேபால்.

    "ஆரம்பத்தில் வில்லி கேரக்டர் என்றதும் அவர் எப்படி எடுத்துக் கொள்வாரோ என்று யோசித்தோம். ஆனால் `எனக்கு கேரக்டரும் அதன் வெளிப்பாடும் தான் முக்கியம்' என்று கூறி விட்டார். ஒரு நடிகையாக இப்படியான கேரக்டரிலும் நடிக்க முடியும் என்று நிரூபித்த சுதா சந்திரன் தான் எங்கள் தொடரின் முதல் ஜெயத்திற்கு (வெற்றி) காரணம்'' என்கிறார், தொடரின் திரைக்கதையாசிரியர் தேவிபாலா.

    இந்த தொடரில் இப்போது பத்மாவதியின்தங்கை கவுசல்யா கேரக்டர் பெரிய அளவில் ரசிகர்களின் தாக்கத்துக்குரியதாகியிருக்கிறது. கவுசல்யாவின் கழுத்தில் தொங்குவது சஞ்சய் கட்டிய தாலி. ஆனால் அவள் வயிற்றில் வளர்வதோ ஷாமின் குழந்தை. ஷாம் உயிருடன் இல்லை என்று அவளுக்கு ஊர்ஜிதமான நிலையில் சஞ்சய் அவளுக்கு வாழ்வு கொடுக்கிறான்.கவுசல்யாவின் இந்த இக்கட்டான சூழ்நிலையில் அவள் எப்படி தன் எதிர்காலத்தை குழப்பமின்றி தெளிவாக அமைத்துக் கொள்ளப் போகிறாள் என்ற கேள்வி ரசிகர்களின் மனதுக்குள்ளும் இப்போது கேள்வி அலைகளை எழுப்ப ஆரம்பித்து விட்டது. இந்நிலையில் இறந்து போனதாக கருதப்பட்ட ஷாம் மறுபடியும் வந்து நின்றால் கவுசல்யாவின் அடுத்த கட்ட நிலை என்ன? இது போன்றகேள்விகளுக்கு நெஞ்சின் படபடப்பை அதிகரிக்கும் விதத்தில் ஜெயம் ரசிகர்களின் ஆர்வ எல்லையை அதிகரித்துக்கொண்டுபோகிறது என்கிறார், தேவிபாலா.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #22

    Join Date
    Mar 2007
    Posts
    70
    Post Thanks / Like

    Hey guys

    Be

  4. #23
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    ஜெயா "டிவி'யில், வார நாட்களில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பா கும் "ஜெயம்' தொடரில் இனி வரும் வாரங்களில் ஏகப்பட்ட திருப்பங் கள் உள்ளன. இரு குடும்பங்களுக்கு இடையே இருக்கும் பிரச்னையை மையமாக வைத்து போய்க் கொண்டிருக்கும் இந்த தொடரில், மேஜர் கவுதம் கேரக்டரில் மாற்றம் வரும். ஜயா தொடர்களில், பலரால் பார்க்கப்படும் தொடர் இது என்பதால், விறுவிறுப்பு குறையாமல் இருக்க இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
    "அன்பே சிவம்.

  5. #24
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    ஜெயா டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஜெயம் தொடர் 400 எபிசோடுகளைத் தாண்டியிருக்கிறது. நடிகை சுதா சந்திரன் நடிக்கும் இந்த தொடரின் கதைச்சுருக்கம் வருமாறு:

    பத்மாவின் தியாக வாழ்க்கை அவளது மாமியார் ரங்கநாயகி அம்மையாரை ரொம்பவே பாதிக்கிறது. தன்னைப் பார்த்துக் கொள்வதற்காக அந்த ஒண்டிக் குடித்தனத்தில் மருமகள் தன்னோடு இருக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்ட மாமியார், தனது மருமகளாவது நன்றாக இருக்கட்டும் என்று எண்ணுகிறாள்.

    ரங்கநாயகியின் தம்பி சுதர்சனம் வசதியானவர். தம்பியின் வீட்டில் மருமகள் இருக்கட்டும் என்று விரும்புகிறாள் ரங்கநாயகி. சுதர்சனுக்கோ பத்மாவை அறவே பிடிக்காது. ஆனாலும் மாமியாரின் விடாப்பிடியான வற்புறுத்தலுக்கிணங்கி அங்கே தங்க சம்மதிக்கிறாள்.

    பத்மா குடும்பத்தில் எந்தக் கெடுதல் நடந்தாலும் அதற்குப் பின்னணியில் சக்ரவர்த்தி தான் இருப்பான். இப்போது அவன் பார்வை பத்மா மீது பாய்கிறது. பத்மாவின் கணவனை அவளிடம் இருந்து பிரித்து விட்டால் அவள் நிராதரவாகி விடுவாள்.அதற்காக அவன் தேர்ந்தெடுத்தது ஆண்டாளை.

    இந்த ஆண்டாள் பத்மாவின் கணவன் வத்சனை வளைத்துப் போடுகிறாள். மது உண்ட வண்டாக ஆண்டாளின் காதல் பிடியில் சிக்குண்ட வத்சன் பத்மாவை மறக்கிறான். அவள் நினைப்பையே அடியோடு வெறுக்கிறான்.பத்மா தனது கணவனின் புதிய காதல் பற்றி மாமியாரிடம் சொல்கிறாள். அதோடு தனது தரப்பிலும் ஆண்டாளோடு போராடுகிறாள். சுதர்சனின் மனைவி துளசி பத்மாவின் பள்ளிக் காலத் தோழி. அவள் உதவியுடன் ஆண்டாளோடு போராட்டம் நடத்துகிறாள். இதுவிஷயத்தில் பத்மாவின் இக்கட்டான நிலையறிந்த சுதர்சனம் தனது தரப்பில் பத்மாவுக்கு உதவுகிறார். இப்போதாவது பத்மாவால் கணவனை ஆண்டாளிடம் இருந்து மீட்க முடிந்ததா?

    பத்மா தவிர அவளது பெரிய சகோதரி வைஷ்ணவி, தங்கைகள் கவுசல்யா, சீதா ஆகியோரின்வாழ்க்கைப் பின்னணியிலும் உள்ள போராட்டங்களில் அவர்கள் வென்றார்களா என்பதை தொடரும் தொடரின் காட்சிகள் விவரிக்கிறது.

Page 3 of 3 FirstFirst 123

Similar Threads

  1. JAYA TV
    By subanrao in forum TV,TV Serials and Radio
    Replies: 162
    Last Post: 15th January 2012, 08:33 PM
  2. Sun Tv New Serial - MUTHARAM A NEW TAMIL TV SERIAL
    By anbupani in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 26th November 2011, 08:27 PM
  3. Jaiyam - Very interesting
    By ridz in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 6th August 2007, 10:39 PM
  4. IR and Jaya TV
    By raja_fan in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 4
    Last Post: 11th October 2006, 01:31 PM
  5. JAYA TV SERIAL - ROJA
    By anilb123 in forum TV,TV Serials and Radio
    Replies: 3
    Last Post: 19th May 2006, 08:51 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •