View Poll Results: your rating for the following serials

Voters
1. You may not vote on this poll
  • Thirumathi Selavam

    0 0%
  • Thendral

    1 100.00%
  • Chellame

    0 0%
  • Thangam

    0 0%
Page 99 of 159 FirstFirst ... 4989979899100101109149 ... LastLast
Results 981 to 990 of 1587

Thread: new serials/programs

  1. #981
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like

    `ரோகிணி பாக்ஸ்'


    ஞாயிறு காலை 11 மணிக்கு ராஜ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் `ரோகிணி பாக்ஸ்' நிகழ்ச்சியில் நடிகை ரோகிணி புதிய திரைப்படங்களை விமர்சிக்கிறார். தெய்வத்திருமகள், முரண், வாகை சூடவா, வேலூர் மாவட்டம் போன்ற படங்களை விமர்சித்து `நடுநிலை விமர்சகர்' ஆகிவிட்டார்.

    இந்நிகழ்ச்சி ஒரு திரைப்படத்தின் பாடல், திரைக்கதை, வசனம், தயாரிப்பு, நடிப்பு ஆகிய அனைத்தையும் அலசி ஆராய்வதுடன், அதன் நிறைகுறைகளையும் எடுத்துரைக் கிறது. விமர்சனம் செய்யும் படத்தின் நாயகன், நாயகி இயக்குனர், தயாரிப்பாளர் ஆகியோருடன் விமர்சன நேரத்திலேயேபேசுவதன் மூலம், அந்தப்படம் பற்றிய கூடுதல் செய்திகளும் ரசிகர்களின் காதுகளைச் சேர்ந்து விடு கிறது.

    நிகழ்ச்சியை காணும் நேயர்களுக்கு சிறப்புப் பரிசும் உண்டு.



    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #982
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    மருதாணி
    "அன்பே சிவம்.

  4. #983
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    சிம்ரன் நடிக்கும் சுந்தர காண்டம்


    திங்கள் முதல் வெள்ளி வரை தினந்தோறும் இரவு 7.30 மணிக்கு பாலிமர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர், `சுந்தர காண்டம்.' சின்னத்திரையில் அடியெடுத்து வைத்திருக்கும் சிம்ரன் பாலிமர் டிவி மூலம் தமிழ் ரசிகர்களை சந்திக்க வருகிறார்.

    வெளிநாட்டு மாப்பிள்ளை மோகத்தில் திருமணம் செய்து கொண்டு இந்தியப் பெண்கள் படும் துயரங்களையும் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளையும் மையமாக வைத்து பயணிக்கிறது இந்தத் தொடர்.

    சிம்ரனுடன் ரிஷி, சுஜிதா ஆகி யோரும் இணைந்து முக்கியக் கதாபாத் திரங்களில் நடிக்கிறார்கள்.


    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  5. #984
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    சாந்தி நிலையம்-150'
    `

    திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 8 மணிக்கு ஜெயா டிவியில் ஒளிபரப்பாகி வரும் சாந்தி நிலையம் தொடர், டைரக்டர் கே.பாலசந்தரின் கைவண்ணத்தில் உருவானது. இந்த தொடர் 150 எபிசோடுகளை தாண்டி பயணித்துக்கொண்டிருக்கிறது.

    பரபரப்பான கட்டத்தில் இருக்கும் இந்த தொடரின் கதைக்களம் வருமாறு:-

    அப்பா சுரேஷ்பாரதியின் கனவான சாந்தி நிலையம் ஆஸ்பத்திரியின் வளர்ச்சிதான் டாக்டர் ரதி பாரதியின் வாழ்க்கை லட்சியம். அவளுடைய சொந்த வாழ்க்கையில் குடும்ப உறவுகள், காதல், இதெல்லாம் இரண்டாம் பட்சம் தான். சாந்தி நிலையம் பெயருக்கும் புகழுக்கும் அபகீர்த்தி நேரும் போதெல்லாம் ரதிபாரதி போராடி, ஆபத்திலிருந்து சாந்தி நிலையத்தை மீட்கிறாள்.

    இந்த போராட்டத்தில் அவளுடன் துணை நின்ற அவளுடைய காதலன் டாக்டர் நரேனுக்கும் ரதிக்கும் ஏற்பட்ட சின்னச்சின்ன உரசல்கள் பெரிதாகி, இப்பொழுது அந்த உறவு முடிந்துவிடும் நிலைக்கு வந்திருக்கிறது.

    இதற்கு முக்கிய காரணம் பிரேம்குமார். அவன் ரதிபாரதியை தன் மனைவியாக்கியே தீருவது என்ற பிடிவாதத்துடன் 250 கோடி ரூபாயை சாந்தி நிலையத்தில் முதலீடு செய்து அதனை நிர்வகிக்கும் உறுப்பினர்களில் ஒருவராகிறான். இப்போது நரேனிடம் 20 கோடி ரூபாயை கொடுத்தும், அதிரடியாக மிரட்டியும், `ரதியை மறந்து விடு' என்று கட்டாயப்படுத்துகிறான். அதற்கேற்ப நரேனின் போக்கிலும் மாற்றம். பலர் முன்னிலையில் ரதியை அவன் அவமானப்படுத்துகிறான்.

    போதாக்குறைக்கு ஜீவன், மானசி என்ற இரு தீவிரவாதிகள் போலீஸ் கையில் சிக்காமலிருக்க சாந்தி நிலையம் ஆஸ்பத்திரியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்கிறார்கள். போலீஸ் சாமர்த்தியமாக ரதி மீது பழி போட்டு விடுகிறது.

    தன் மீது சுமத்தப்பட்ட கொலைப் பழியிலிருந்து ரதி தப்பித்தாளா?
    ரதி - நரேன் உறவு முறிந்ததா?
    பிரேம் தன் திட்டப்படி ரதியை திருமணம் செய்து கொண்டானா?
    வரும் எபிசோடுகளில் விடை காத்திருக்கிறது.

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  6. #985
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    மனம் கவர்ந்த `மகாராணி'



    விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மகாராணி தொடரில், கிளைமாக்ஸ் ஆரம்பமாகி விட்டது. பரபரப்பான திருப்பத்துடன் இந்த தொடர் அடுத்த மாதம் முடிவடைகிறது.

    மகாவிற்கும் ராணிக்கும் இடையேயான தர்மயுத்தம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ராணியின் கை இறங்கிவரும் இத்தருணத்தில், ராணி கொடுமையின் எல்லைக்கே சென்று மகாவின் தாய் சந்தியாவை தீர்த்துக்கட்டி விடுகிறாள். இந்த கொலைப் பின்னணியை போலீஸ் கண்டு பிடிக்குமா என்று ஒரு பக்கம் திகிலாக இருக்கிறது.

    பிரகாஷ், ராணிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி வைக்கிறான். சந்தியாவின் மரணத்தால் உண்மைகளை எதிர்கொள்ளும் மகா, பிரகாஷை நேசிக்கத் தொடங்குகிறாள். அவனை சந்திக்க விருப்பப்படு கிறாள். ஆனால் ராணி பிரகாஷை பலமாக தாக்கிவிடுவதால் பிரகாஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கட்டாயம் நேர்கிறது. ராணியின் அராஜகத்தை தாண்டி மகா-பிரகாஷ் ஜோடி ஒன்று சேர்வார்களா?

    மகாவாக சுஜிதா, ராணியாக அர்ச்சனா, சந்தியாவாக பிரவீணா, யமுனாவாக சுலக்ஷனா நடிக்கிறார்கள்.

    திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடர் இது.



    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  7. #986
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    சின்னத்திரையில் இருந்து...


    ஜி தமிழ்தொலைக்காட்சியில் `மூலிகை சமையல்' நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றவர் தமிழ்ச்செல்வி. இவரது நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் அதிகம்.

    "நம்மில் பலரும் சாப்பாட்டு விஷயத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. பரபரப்பாக வேலை, வேலை என்று ஓடிக்கொண்டிருப்பதால் சாப்பாட்டு நேரமும் சுருங்கி விட்டது. அவசரமாய் கிடைத்ததை விழுங்கி விட்டு வேலைக்குள் நம்மைப் புதைத்துக் கொள்கிறோம்.

    நாம் சாப்பிடுகிற உணவு ஆரோக்கியமாக இல்லாவிட்டால் என்னாகும்? ஆஸ்பத்திரி, மருந்து, மாத்திரை என்றல்லவா காலம் ஓடி விடும்.

    இதற்காகத்தான் நல்லதை தேர்ந்தெடுத்து சாப்பிடுங்கள் என்றார்கள் சித்தர்கள். அவர்கள் தந்த ஆரோக்கிய உணவுப்பட்டியலே மூலிகை சமையல். இந்த நிகழ்ச்சியை வழங்கத் தொடங்கிய பிறகு எனக்கே மூலிகை சமையல் மீது அக்கறை வந்து விட்டது. எங்கள் வீட்டிலும் அனுதினமும் மூலிகை சமையல் இடம் பிடித்துக்கொண்டு விட்டது. நான் வழங்கும் நிகழ்ச்சிக்கு நானே முன்மாதிரியாக இருந்தால்தானே
    நல்லது...''

    சிரித்துக்கொண்டே சொல்லும் தமிழ்ச்செல்விக்கு சொந்தஊர் திண்டுக்கல். ஒட்டுமொத்த உறவுக்குடும்பமும் போலீஸ், போலீஸ், போலீஸ். கணவர் சுப்பிரமணியன் கூட போக்குவரத்து காவல் துறையில் தான் பணியில் இருக்கிறார். தாய்மாமாக்கள் இருவரும் காவல்துறை ஆய்வாளர்கள். இவரது அப்பா மட்டும் கொஞ்சம் இடம் மாறி மிலிட்டரியில் பணியாற்றினார்.

    போலீஸ் குடும்பத்துப் பெண்மணி எப்படி கலைத்துறை பக்கம்?

    "திருமணத்திற்குப்பிறகு கணவரின் வேலையின் பொருட்டு சென்னை வந்தேன். அழகுக்கலை பற்றிய படிப்பில் தேர்ந்து ஒரு நிறுவனத்தில் அழகுக்கலை நிபுணராக பணியாற்றினேன். இயக்குனர் விஷ்ணுவர்த்தனின் உறவுக்கார பெண்மணி மது எங்கள் அழகுக்கலை நிலையத்துக்கு அடிக்கடி வருவார். அவர்தான் எனக்கு கலையார்வம் ஏற்படுத்தியவர். அதற்கான முயற்சி மேற்கொண்டபோது `சின்னச்சின்ன கனவுகள்' என்ற சீரியல் வாய்ப்பு வந்தது. அதன்பிறகே ஜி தமிழில் `அஞ்சறைப்பெட்டி' நிகழ்ச்சி வழங்க அழைத்தார்கள். அதில் மூலிகை சமையல் என்னை பிரபலப்படுத்த, அடுத்தகட்டமாக `கொஞ்சும் மைனாக்களே, வேட்டையாடு' என 2 படங்களில் நடிக்கவும் வாய்ப்பு வந்து விட்டது. இரண்டுமே குணசித்ர வேடங்கள். அம்மாதிரி கேரக்டர்களே சினிமாவில் என் சாய்சாக இருக்கும்.''

    உற்சாகமாகவே சொல்கிறார், தமிழ்ச்செல்வி.

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  8. #987
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    பழனி மலையில் `தங்கம்' குடும்பம்

    திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ``தங்கம்'' தொடர் 500 எபிசோடுகளை கடந்ததை தொடர்ந்து, தங்கம் குடும்பத்தை சேர்ந்த நட்சத்திரங்கள் விஜயகுமார், சீமா, மஞ்சுபார்கவி, ஜி.கே, அனுராதா, காவேரி, வர்ஷா ஆகியோர் ஒன்று கூடி கடந்த வாரம் பழனிக்கு சென்று சுப்பிரமணியசுவாமியை தரிசித்து வந்தனர்.

    இது பற்றி இணை தயாரிப்பாளர் வினயா கிருஷ்ணன் கூறும்போது, "நாங்கள் இந்த இரண்டு வருடங்களில் ஒரு கூட்டு குடும்பமாகவே ஆகிவிட்டோம். ஆகவேதான் எங்கள் குடும்பத்துடன் பழனிக்கு சென்று வந்தோம். சீரியல் குடும்பத்தில் என்ன பகை நடந்தாலும் நிஜமான நிகழ்வில் அந்த பகைக்கு இடமில்லை. எப்போதும் எங்கள் குழுவினரிடம் ஒற்றுமையே பிரதிபலிக்கும். அது தான் `தங்கம்' குடும்பத்தின் பலம் என்கிறார்.

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  9. #988
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    கிளைமாக்சை நெருங்கும் `மாதவி'


    திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மாதவி தொடர், பரபரப்பான கிளைமாக்சை நோக்கி பயணிக்கிறது.

    தன்னலம் கருதாமல் பிறர் நலம் ஒன்றையே தன் வாழ்க்கை குறிக்கோளாகக் கொண்டு இது நாள் வரை வாழ்ந்து வரும் மாதவி சந்தித்த தடைகள், எமாற்றங்கள் ஏராளம்.

    தன் முன் நின்ற பிரச்சினைகளை இன்முகத்துடன் அணுகி அவற்றை வெற்றிகரமாகத் தீர்த்து வைத்த மாதவிக்கு வாழ்க்கையில் எந்தவித சந்தோஷமும் கிடைக்கவில்லை. இந்த வருத்தம் மாதவியின் தாய் வாசுகிக்கு உண்டு.

    கலெக்டர் மனோகரனை திருமணம் செய்ய மணமேடை வரை வந்த மாதவி, தாலி கட்டப்போகும் நேரத்தில் மனோகரனையும் அருணாவையும் சேர்த்து வைத்து, விலகி நின்று வாழ்த்தினாள்.


    மாதவி தியாகம் செய்வாள் என்று எதிர்பார்க்காத வாழவந்தான் அனுப்பிய அடியாட்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட உத்தரவின்படி மாதவியை தாக்கமுயல... அவளை காப்பாற்றுகிறான், வக்கீல் குணசேகரன். இந்த தாக்குதல் முயற்சியில் படுகாயமுற்று ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான் குணசேகரன்.

    குணாவை அருகிலேயே இருந்து கவனிக்க வேண்டிய கட்டாயம் மாதவிக்கு. கூடவே குணாவின் குழந்தை வெண்பாவும் மாதவியை விட்டுப் பிரியாமல் ஒட்டிக்கொள்கிறது.

    விவாகரத்து செய்து பிரிந்த மனோவும் அருணாவும் மாதவி மூலம் மீண்டும் ஒன்று சேர்க்கப்பட்டாலும், ஈஸ்வரி செய்த சூழ்ச்சியால் மனோ அருணாவை வெறுக்கிறான். அவளை கொலைகாரி என நினைத்து அவளுடன் தாம்பத்தியத்திற்கு மறுக்கிறான்.

    இதனை அறியாத மாதவி தன் அக்கா கோகிலாவின் குழந்தைகளை பிச்சைக்கார கும்பலிடமிருந்து காப்பாற்றுகிறாள். கோகிலாவின் தீராத நோயை குணப்படுத்தி அவளது கணவன் கேசவனிடம் சேர்த்து வைக்கிறாள்.

    ஈஸ்வரி அரசாங்க நிலத்தை ஏமாந்து போய் வாங்கியதால் மாதவிக்கும் அவளுக்கும் பிரச்சினை ஏற்படுகிறது. மாதவி மேல் உள்ள கோபத்தால் அவள் தங்கை கவிதாவை வாழாவெட்டியாக துரத்துகிறாள். மனோகர் இவ் விஷயத்தில் தலையிட்டு உதவுகிறான்.

    ஈஸ்வரி திருந்த மறுக்கவே, அவளது கணவன் கரிகாலன் வெகுண்டெழுந்து ஈஸ்வரியை திருத்துகிறான்.கவிதா தன் கணவன் முரளியிடம்சேர்கிறாள்.இந்நிலையில் அருணா யாராலோ கடத்தப்படுகிறாள் விஷயம் தெரிந்த வாழவந்தான் மனோவை விசாரிக்க, அப்போது மனோ-அருணா இணைந்து வாழவில்லை என்ற உண்மை வெளிப்படுகிறது. அருணாவை மனோ கடத்தி கொலை செய்து விட்டான் என்ற பழி விழுகிறது.விஷயம் அறிந்த மாதவி மிகுந்த வேதனை கொண்டாலும், மனோ மேலுள்ள பழியை போக்க போராடுகிறாள்.

    அருணா தானாகவே ஓடிப்போனாளா...? வாழவந்தானை பழிவாங்க நினைக்கும் ஈஸ்வரி கடத்தினாளா...? அல்லது அருணாவிற்கு வேறு விரோதிகள் இருந்தனரா? பல்வேறு கேள்விகள் மாதவி முன்! இவற்றுக்கு மாதவியால் விடை காண முடிந்ததா...?

    இந்த பிரச்சினைக்கிடையில் குணா மீதும் வெண்பா மீதும் மாதவி காட்டி வரும் பாசம் மாதவி வாழ்வில் ஒரு புது வசந்தத்தை ஏற்படுத்துமா...? மாதவிக்கு நல்ல இடத்தில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று குடும்பத்தார் தீவிர முயற்சியில் இருக்க, மாதவி யாரும் எதிர்பாராத ஒரு முடிவு எடுக்கிறாள், அந்த முடிவு அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

    மாதவி எடுத்த முடிவு என்ன...? வரப்போகும் பரபரப்பான எபிசோடுகளில் காணலாம்.




    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  10. #989
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    நடிகர் செந்தில் நடிக்கும் ஜேம்ஸ்பாண்ட்-007



    வசந்த் டிவியில் ஞாயிறுதோறும் பிற்பகல் 21/2 மணிக்கு ஒளிபரப்பாகும் துப்பறியும் தொடர் ஜேம்ஸ்பாண்ட்-007. நடிகர் செந்தில் இந்த தொடரில் துப்பறியும் ஜேம்ஸ்பாண்டாக வந்து கலகலப்பூட்டுகிறார்.

    சினிமாவில் கவுண்டமணி-செந்தில் நகைச்சுவை கூட்டணியை இப்போது நினைத்தாலும் சிரிப்பு வரும். இந்த கூட்டணியில் கவுண்டமணி நடிக்க ஆர்வம் காட்டாததால் செந்தில் மட்டும் நடிப்பை தொடர்ந்து வருகிறார். சின்னத்திரையில் முதன்முதலாக அவர் ஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் கலக்கப்போகிறார். வசந்த் டிவியில் அவருக்காக அமைந்த களமே இந்த ஜேம்ஸ்பாண்ட் தொடர்.

    தொடரில் செந்தில் 15 வித கெட்டப்புகளில் தன்னை உருமாற்றிக்கொண்டு அதுவரை கண்டுபிடிக்க முடியாத சில கேஸ்களில் துப் பறிகிறார். இந்த கெட்டப்பில் நரிக்குறவர், கிளி ஜோசியக்காரர் போன்ற கேரக்டர்களும் அடங்கும். இயக்கம்: ஜெயமணி.




    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  11. #990
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    அப்போது மாணிக்கம்! இப்போது சிவநேசன்!



    கிட்டத்தட்ட 2 வருடங்கள் சின்னத்திரை பக்கம் பார்க்க முடியாமல் இருந்த சேத்தனை இனி விக்ரமாதித்தன் இயக்கத்தில் வரவிருக்கும் `உதிரிப்பூக்கள்' தொடரின் மூலம் குளிரக்குளிர காணலாம்.

    மெட்டி ஒலி தொடரில் வில்லங்க வில்லன் மாணிக்கம் கேரக்டரில் நடித்து நடிப்பில் சிகரம் தொட்டவர், இந்த தொடரில் அதற்கு நேர்மாறான சிவநேசன் என்ற கேரக்டரில் நடிக்கிறார். இதில் 3 பிள்ளைகளுக்கு அப்பா...அதுவும் பாசமுள்ள அப்பாவாக வருகிறார். `இப்படி ஒரு கேரக்டருக்காகத்தான் இரண்டு வருடங்கள் காத்திருந்தாரோ?' என்ற நம் கேள்வியை அவர் முன் வைக்க, சிரித்தார். சிரிப்பினூடே பதிலும் வந்தது.

    "அப்படித்தான் எனக்கும் தோணிச்சு. ஆனால் இந்த இரண்டு வருஷமும் நான் சும்மா இருக்கலை. சத்யஜோதி பிலிம்சில் ஒரு படம் இயக்கும் நோக்கத்தில் அதற்கான ஸ்கிரிப்ட் தயார் செய்து ஓ.கே. வாங்கி வைத்திருந்தேன். இப்போது தயாரிப்பு கொஞ்சம் தள்ளிப்போனதில் `வராது வந்த மாமணியாய்' வந்த இந்த கேரக்டரில் என்னை இணைத்துக் கொண்டு விட்டேன். இந்த தொடர் வந்த பிறகு எல்லாரும் என்னை சிவநேசன் என்றே அழைக்கப் போகிறார்கள்.''



    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

Similar Threads

  1. Vijay tv going to start 2 new programs
    By anbupani in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 7th October 2009, 01:58 AM
  2. Programs that you enjoy watching on TV
    By Anoushka in forum TV,TV Serials and Radio
    Replies: 107
    Last Post: 15th July 2008, 04:41 AM
  3. IR in TV Serials
    By RR in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 4
    Last Post: 16th July 2007, 01:12 PM
  4. which channel do you think has the most creative programs?
    By mirattalji in forum TV,TV Serials and Radio
    Replies: 20
    Last Post: 18th November 2006, 01:45 AM
  5. Pongal Programs
    By suryas_shaivs in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 19th January 2006, 06:03 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •