ஜெயா டிவியில் வெள்ளி மற்றும் சனிக்கிழமை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி, `யுகியுடன் யுகியுங்கள்.'
நமக்கு நிலவின் எடையளவு தெரிந்திருக்கும். ஆனால் நமது இடையளவு தெரியாது. கையளவுதான் நம் இதயம் ஆனால் மனசின் ஆழம் தெரியாது. முகத்தின் அழகு தெரியும் ஆனால் முதுகில் இருக்கிற அழுக்கு தெரியாது.
நாம் சரியான கேள்விகள் கேட்பது அரிது. அப்படிக் கேட்டாலும், அதற்கு சரியான விடைகள் கிடைப்பது அதைவிட அரிது.
`ஏழு கடல்கள் தாண்டினேன், எத்தனையோ நதிகள் கடந்தேன். சிகரங்களில் ஏறி, பள்ளத்தாக்குகளில் இறங்கி, அற்புதமான நாடுகளையும் அன்பான மனிதர்களையும் கண்டிருக்கிறேன். ஆனால் வீடு திரும்பியபின் தான் என் வீட்டுச் செடியின் இலை நுனியில் மின்னும் பனித்துளிக்குள் நான் கண்டுவந்த மொத்த உலகமும் அடங்கியிருப்பதை கவனிக்கத் தவறியதை உணர்ந்தேன்' என்றார் ரவீந்திரநாத் தாகூர்.
அன்றாட நிகழ்வுகளில் தொடங்கி இசை, கலை, திரைப்படம், பண்பாடு, வரலாறு நாம் வாழும் இந்த உலகம், நமது உடல், நம் மனம் இப்படி அனைத்திலும் நாம் தெரிந்துகொள்ளத் தவறிய பல விஷயங்களை தெளிவுபடுத்துவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம்.
நடிகர் யுகிசேது, நீண்ட நாட்களுக்குப்பின் தானே வடிவமைத்து வழங்கும் நிகழ்ச்சி இது.
பிரபல எழுத்தாளர்களின் கதைகளை `சொல்லாத கதை' என்ற தலைப்பில் வாரம் ஒரு கதையாக தருகிறது வசந்த் டிவி. இந்த கதையில் பிரபல சினிமா நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
இதற்காக பிரபல எழுத்தாளர்கள் எழுதிய விழிப்புணர்வு கதைகளை தேர்ந்தெடுத்து படமாக்கி வருகிறார்கள்.
ஜெயிலில் இருக்கும் தண்டனைக் கைதி ஒருவனை மணந்து அவனை புது மனிதனாக்க விரும்புகிறாள், இளம்பெண் ஒருத்தி. அவள் முடிவுக்கு குடும்பத்தில் எதிர்ப்பு இருந்தாலும் தனது பிடிவாதத்தில் ஜெயிக்கிறாள். தண்டனைக்காலம் முடிந்து விடுதலையாகும் கைதிகளில் ஒருவனை தேர்ந்தெடுத்து மணந்து கொள்கிறாள். தம்பதிகளின் புது வாழ்வு கொண்டாட்டம் எல்லாமே சில நாட்கள் தான்.அதற்குப் பிறகு கணவனைத் தேடிவரும் போலீஸ்காரர்கள்அவளுக்கு எரிச்சல் தருகிறார்கள். ஒரு கட்டத்தில் தன் கணவனைத்தேடிவரும் போலீஸ்காரர்களிடம், `என் கணவர் இப்போது எந்த வம்பு தும்புக்கும்போகாத மனிதர். அவரை தொந்தரவு செய்து எங்கள் நிம்மதியை ஏன் குலைக்கிறீர்கள்?' என்று கேட்கிறாள்.
பதிலுக்கு போலீஸ்காரர்களோ `உன் புருஷன் உத்தமனாகவே இருக்கட்டும். ஆனால் எங்களுக்கு அவன் பழைய குற்றவாளி தான். அதனால் நகரில் எந்த பிரச்சினை என்றாலும் உன் புருஷனை விசாரணை வளையத்துக்கு உட்படுத்தவே செய்வோம்' என்கிறார்கள்.
ஒரு கட்டத்தில் போலீஸ் முற்றிலுமாய் அவர்கள் நிம்மதியைக் கெடுக்க, போலீஸ் தொந்தரவே இனி ஆகாது என்று முடிவு செய்யும் அந்தப்பெண், யாரும் எதிர்பார்த்திராத ஒரு முடிவை எடுக்கிறாள். அது எந்தமாதிரியான முடிவு என்பது ஆச்சரியத்தில் விழிகளை விரியவைக்கும்.
ஆயுதபூஜை முதல் சனிக்கிழமை தோறும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது, இந்த `சொல்லாத கதை.'
50 ஆண்டுகளில் 30 ஆயிரம் பாடல்கள் பாடி இசை ரசிகர்களின் மூச்சாக இருந்து கொண்டிருப்பவர் பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி.
கணீர் குரலில் கம்பீர இணைப்பு இவர் பாடல்கள். சிவந்தமண் படத்தில் ` பட்டத்து ராணி பார்க்கும் பார்வை வெற்றிக்குத்தான் என எண்ணவேண்டும்' என்று பாடினாலும் பாடினார். இந்தப் பாடலை இதே டிïனில் இந்தியில் பாட முயன்றார், பிரபல பாடகி லதா மங்கேஷ்கர். முடியவில்லை. `எல்.ஆர்.ஈஸ்வரி மாதிரி என்னால் முடியாது' என்று வெளிப்படையாக ஒப்புக்கொண்டு பாராட்டினார்.
எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய `முத்துக்குளிக்க வாரீகளா' என்ற பாடலை அதே டிïனில் இந்தியில் பாட முயன்றார், லதாவின் தங்கையும் பாடகியுமான ஆஷாபோன்ஸ்லே. `ஊஹூம்... நம்மாலே ஆகாதுப்பா..' என்று விட்டு விட்டார்.
இப்படி இந்தியில் பாட்டுக்கொடி கட்டிய பிரபல பாடகிகளுக்கே ஆச்சரியமாக இருந்த எல்.ஆர். ஈஸ்வரியின் இசை சேவையை பாராட்டும் விதத்தில்அவருக்கு சென்னையில் நாளை விழா எடுக்கிறார்கள். சென்னை காமராஜர் அரங்கில் நடைபெறும் இந்த விழாவில் எல்.ஆர்.ஈஸ்வரியும் பாடுகிறார். இன்றைய இளம்பாடகர்கள் அவருடன் இணைந்தும் பாடுகிறார்கள். `ஸ்ரீதேவி பைன்ஆர்ட்ஸ்' சிவசங்கர், `சாதகப்பறவைகள்' சங்கர் இணைந்து இந்த விழா நிகழ்ச்சியை நடத்துகிறார்கள்.
இந்த இசை நிகழ்ச்சி வசந்த் டிவியில் விரைவில் ஒளிபரப்பாகிறது.
பாலிமர் தொலைக் காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை நாள்தோறும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் பக்தித்தொடர், தேவியின்மகிமை.
காலையில் கலைவாணியாகவும், மதியம் மகாலட்சுமியாகவும், மாலையில் மலைமகளாகவும் பூஜிக்கப்படும் சோட்டானிக்கரை பகவதி அம்மனின் மகிமைகள், திருவிளையாடல்கள் மூலம் பக்தர்களுக்கு அருள்பாலித்து அரவணைத்த நிகழ்வுகள் தொடரின் சிறப்பு அம்சம்.
இதன் சிறப்பு தொகுப்பு சனிக்கிழமை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
பாலிமர் தொலைக் காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை நாள்தோறும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் பக்தித்தொடர், தேவியின்மகிமை.
காலையில் கலைவாணியாகவும், மதியம் மகாலட்சுமியாகவும், மாலையில் மலைமகளாகவும் பூஜிக்கப்படும் சோட்டானிக்கரை பகவதி அம்மனின் மகிமைகள், திருவிளையாடல்கள் மூலம் பக்தர்களுக்கு அருள்பாலித்து அரவணைத்த நிகழ்வுகள் தொடரின் சிறப்பு அம்சம்.
இதன் சிறப்பு தொகுப்பு சனிக்கிழமை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
நன்றி: தினதந்தி
Last edited by aanaa; 1st October 2011 at 07:29 PM.
வசந்த் டிவியில் விரைவில் ஒளிபரப்பாகவிருக்கும் புதிய தொடர், மாமா விஜயம்.
தனது `சுமார்' மகளை பெரிய இடத்தில் திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என்று நினைக்கும் அப்பா, அதற்காக செய்யும் தகிடுதத்தங்களே கதை.
இந்த திருமண போராட்டத்தில் வந்து போகும் மாப்பிள்ளைகள் அதிகம். பெண்ணை பார்த்ததும் தலை தெறிக்க ஓடும் மாப்பிள்ளைகளும் அதிகரித்தார்கள். இதனால் பயந்துபோன பெண்ணின் தந்தை துணைநகரம் அமைய இருக்கும் திருமழிசையில் 60 லட்சம் மதிப்புள்ள சொத்து பெண்ணின்பெயரில் இருக்கிறது என்று கதை கட்டுகிறார். இதை நம்பி வந்த ஒரு குடும்பம் பெண்ணை தங்கள் மகனுக்கு பேசி முடிக்கிறது. திருமணமும் நடக்கிறது. அப்புறம் தான் சொத்துவிஷயம் `சொத்தை' என்பது தெரியவர, போர்க்கொடி பிடிக்கிறது மாப்பிள்ளை குடும்பம். பெண்ணின் தந்தை அதை எப்படி மேற்கொள்கிறார் என்பது தொடரின் உச்சக்கட்டம்.
தொடரில் நட்சத்திரங்கள்: காத்தாடி ராமமூர்த்தி, வாசுவிக்ரம், கணேஷ்கர், பயில்வான் ரங்கநாதன், ஆர்த்தி, ஸ்ரீமஞ்சுளா.
கமல், ரஜினி, விஜய், அஜித் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்தவர் நடிகை ஸ்ரீவித்யா. மரணத்திற்கு முன்பு கடைசியாக இவர் நடித்த மெகா தொடர், `அக்கா - தங்கை'.
ஸ்ரீவித்யாவின் மறைவால் இந்த தொடரை ஒளிபரப்பலாமா வேண்டாமா என்று ரசிகர்களிடம் கேட்ட போது நாங்கள் ஸ்ரீவித்யாவின் கடைசி நடிப்பை காண ஆவலாய் இருக்கிறோம். உடனே ஒளிபரப்புங்கள் என்று பெருவாரியான ரசிகர்கள் வரவேற்பு கொடுத்தனர். அதைத்தொடர்ந்து ஸ்ரீவித்யா நடித்த `அக்கா - தங்கை' தொடர் மெகா தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது.
ஸ்ரீவித்யாவுடன், ஜீவா, பாவனா, வசந்த், விஜய்பாபு, பிரகதி, வரலெட்சுமி நடித்துள்ளனர். கண்மணி சுப்புவின் கதை வசனத்தில் தேவராஜ் இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள தொடர் இது. தயாரிப்பு: மெகா டிவி.
திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் பகல் 12 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் `உறவுகள்' தொடர் 600-வது பகுதியை எட்டியிருக்கிறது. உறவுகளுக்குள் இருக்கும் பாசத்தையும், பண்பையும் யதார்த்த தொனியில் காட்டுவது தொடருக்கான சிறப்பு.
அண்ணாமலை, அழகேசன் என்ற பாசக்கார அண் ணன் - தம்பி குடும்பத்தில் அவர்களின் அடுத்த தலைமுறைகளான முகுந்தன், கிருஷ்ணன் இருவருக்கும் ஏற்படும் சின்னச்சின்ன பிரச்சினைகளே கதைக்களம்.
தன் இரண்டாவது மனைவி ஸ்வேதாவை கிருஷ்ணன்தான் கடத்தியிருப்பான் என்ற எண்ணத்தில், கிருஷ்ணனை சிறையில் தள்ளுகிறான், முகுந்தன். ஆனால் ஸ்வேதா தன்னை கடத்தியவன் கிருஷ்ணன் இல்லை என்பதை போலீசில் சொல்லி கிருஷ்ணனை விடுவிக்கிறாள். அதற்குத் துணையாக முகுந்தனின் அப்பா அழகேசன் இருக்கிறார்.
இதனால் கோபம் கொண்ட முகுந்தன் தன் அப்பாவை திட்ட, அவர் வீட்டை விட்டு வெளியேறுகிறார். எங்கு போவது என்று தெரியாத சூழலில் அனாதையாக கோவிலில் அமர்ந்து இருக்கும் அழகேசனை, கிருஷ்ணன் தனது வீட்டுக்கு அழைத்து செல்கிறான். இதனால் முகுந்தனின் கோபம் இன்னும் அதிகமாகிறது. அழகேசனை தன் வீட்டுக்கு வரும்படி அழைக்க, அவர் மறுக்கிறார்.
அதே சமயம் முகுந்தனுக்கு ஒரு வக்கீல் நோட்டீஸ் வருகிறது. அது தனக்கு சேர வேண்டிய சொத்துக்களை பிரித்து தர வேண்டும் என கிருஷ்ணன் அனுப்பியது. இதனால் முகுந்தன் ஆக்ரோஷம் அடைகிறான். ஆனால் கிருஷ் ணனோ வக்கீல் நோட்டீசை தான் அனுப்ப வில்லை என்பதை நிரூபிக்க போராடுகிறான். இந்த போராட்டத்தில் முகுந்தன், கிருஷ்ணனை மாடியில் இருந்து தள்ளி விடுகிறான். இதனால் இரண்டு குடும்பத்திலும் பிரச்சினைகள் அதிகமாகிறது.
காயத்ரியின் தங்கை சுதாவை அவளின் மாமியார் மீனாட்சி வீட்டை விட்டு வெளியே அனுப்ப வேண்டும் என்ற நோக்கத்தில், பல தந்திரங்களை செய்து சுதாவை ஞாபகமறதி வியாதிக்கு உட்படுத்துகிறாள். அது ஒருநாள் சுதாவுக்கு தெரியவர, அவள் மாமியாரை அதே தந்திர உபாயங்கள் மூலம் மடக்குகிறாள்.
சுதாவின் மாமியார் திருந்தினாளா? மாடியில் இருந்து கீழே விழுந்த கிருஷ்ணனின் கதி என்ன? அழகேசன் முகுந்தனின் வீட்டுக்கு சென்றாரா? முகுந்தன், கிருஷ்ணனின் பகை எப்போது தீரும்? சுவாரசியமான கேள்விகளுடனும் எதிர்பார்ப்புடனும் தொடர்கிறது ``உறவுகள்''.
தொடரை சான் மீடியா நிறுவனம் தயாரிக்க, ஆர்.பாலாஜி யாதவ் இயக்குகிறார். திரைக்கதை எஸ்.குமரேசன், வசனம் பாலசூரியன். கதை சான் மீடியா, ஒளிப்பதிவு தண்டபாணி, பாடல்: வைரமுத்து, முகப்பு இசை: டி.இமான்.
விரைவில் சன் டிவியில் ஒளிபரப்பாகவிருக்கும் புதிய தொடர், `உதிரிப்பூக்கள்.' விக்ரமாதித்தன் இயக்கும் இந்தத் தொடரில் நடிகர் விக்ராந்தின் மனைவியும் நடிகையுமான மானஸா நாயகியாக நடிக்கிறார். இவர் தெலுங்கில் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நாயகியாக நடித்தவர். மலையாளப் படங்களிலும் நடித்திருக்கிறார். தமிழில் அவரது முதல் பிரவேசம் சின்னத்திரையில் இந்த தொடரில் இருந்தே தொடங்குகிறது. தயாரிப்பு: சுஜாதா விஜயகுமார்
நன்றி: தினதந்தி [/font]
Last edited by aanaa; 8th October 2011 at 06:55 AM.
Bookmarks