View Poll Results: your rating for the following serials

Voters
1. You may not vote on this poll
  • Thirumathi Selavam

    0 0%
  • Thendral

    1 100.00%
  • Chellame

    0 0%
  • Thangam

    0 0%
Page 95 of 159 FirstFirst ... 45859394959697105145 ... LastLast
Results 941 to 950 of 1587

Thread: new serials/programs

  1. #941
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    அனு எடுத்த அதிரடி முடிவு!


    திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் பகல் 12 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனுபல்லவி தொடர் 350-வது எபிசோடை எட்டிப்பிடிக்கிறது.

    பிரபல தொழில்அதிபர் ராஜாராமின் இரண்டு மனைவியருக்குமே தன் கணவருக்கு இன்னொரு குடும்பம் இருப்பது தெரியாது. ஆனால் அவர்கள் இருவரும் தோழிகள்.

    ஒரு கட்டத்தில் இரண்டு குடும்பத்தினரின் வாரிசுகளுக்கு மட்டும் விஷயம் தெரியவர, அவர்கள் தங்களுக்குள் உறவு பாராட்டியதோடு நில்லாமல், தங்கள் குடும்பத்தையும் ஒன்று சேர்க்க முயற்சிக்கிறார்கள்.

    இதற்கிடையே ராஜாராமனின் தாயார் மகனிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனியாக வாழ்கிறார். ராஜாராமின் இரு வீட்டு வாரிசுகளும் தங்கள் பாட்டியை சந்தித்து குடும்பஒற்றுமையை வலியுறுத்துகிறார்கள். ஆனால் அவர்கள் கோரிக்கைÛயை செவிமடுக்க மறுத்த பாட்டி அவர்களைத திட்டி அனுப்பி விடுகிறார்.


    இந்த நிலையில் ராஜாராமனின் இரு மனைவியரில் மூத்தவளான அனுவுக்கு கீழே விழுந்து தலையில் அடிபடுகிறது. ஏற்கனவே ஒரு முறை ஏற்பட்ட விபத்திலும் தலையில் அடிபட்டிருந்ததால், இம்முறை சிகிச்சை சிக்கலாகிறது. ஆபரேஷன் நடந்தாலும் 50 சதவீதம்தான் பிழைக்க முடியும் என்ற நிலை. இதனால் டாக்டர்கள் குழு அனுவின் கணவரிடம் கையெழுத்து பெற்றபிறகே ஆபரேஷனை செய்ய முடிவெடுக்கிறார்கள். இதற்காக ராஜாராமன் அழைக்கப்பட்டு வரும்போது தான், தன் கணவரே தன்தோழி பல்லவிக்கும் கணவர் என்ற உண்மை அனுவுக்கு தெரியவருகிறது.

    இதேநேரத்தில் பல்லவிக்கும் இந்த அதிர்ச்சியான உண்மை தெரியவர, அப்போதே அவள் ஒரு விபரீத முடிவெடுக்கிறாள்.அந்த முடிவில் அவள் உயிர் தப்பினாளா?

    இதே காலகட்டத்தில் அனுவுக்கு ஆபரேஷன் நடக்கிறது. சிக்கலான அந்த ஆபரேஷனில் அவள் உயிர் பிழைத்தாளா? ஒருவேளை அவள் உயிர் பிழைத்தால் தன் கணவர் விஷயத்தில் அவள் எடுக்கும் அடுத்தகட்ட முடிவு என்ன? பரபரப்பை பற்ற வைக்கிறது, தொடர்.

    கதை, திரைக்கதை: ஜே.கே. வசனம்: ஆர்.எஸ்.பாலமுருகன். ஒளிப்பதிவு: ஏ.சபாபதி-பார்த்திபன். இயக்கம்: மணிபாரதி-ஆர்.தண்டபாணி. கிரியேட்டிவ் ஹெட்: ஜே.கே.ஆனந்த். தயாரிப்பு: ராதா கிருஷ்ணசாமி.

    தொடரின் நட்சத்திரங்கள்: அபிஷேக், யுவஸ்ரீ, தீபா நரேந்திரன், சாய்ராம், சங்கீதா, கிரீஷ், தனுஷ், நேசன், ஆதித்யா, ஷிவானி, ஹேமா ரெட்டி, தனலட்சுமி, `யார்'கண்ணன், ஆஸ்ரிதா, எம்.பானுமதி, நித்யா, விஜய் கிருஷ்ணராஜ், ரேவதி சங்கரன்.

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #942
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like



    திங்கள் முதல் வெள்ளிவரை தினமும் இரவு 7.30 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர், `பிரிவோம் சந்திப்போம்.' கதையின் நாயகி ரேவதி தங்கள் குடும்ப நலனிற்காக மனநிலை பாதிக்கப்பட்ட பிரபுவை திருமணம் செய்து கொள்ள தீர்மானிக்கிறாள்.

    இந்த திருமணம் நடந்தால் அபிராமியின் சொத்துக்கள் அனைத்தும் பிரபுவிற்கும் ரேவதிக்கும் சென்று விடும் என்று எண்ணி பிரகாஷும் அவனது மனைவி பவித்ராவும் திருமணத்தை நிறுத்த திட்டமிடுகிறார்கள். ரேவதி-பிரபு திருமணம் நடந்ததா?

    ரேவதியாக கல்யாணி, அபிராமியாக அனுராதா கிருஷ்ணமூர்த்தி, மற்றும் `சங்கர்குரு' ராஜா, `சங்கராபரணம்' ராஜலட்சுமி, மகாலட்சுமி நடித்துள்ளனர்

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  4. #943
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    உயர்ந்த `உறவுகள்'


    சன் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகும் ``உறவுகள்'' தொடர், 550 எபிசோட்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

    கூட்டுக் குடும்பத்தின் அவசியத்தை உணர்த்தும் இத்தொடர் மக்களின் மனதில் ஒரு நிலையான இடத்தைப் பிடித்துள்ளது.

    "முகுந்தனின் மனைவி ஸ்வேதாவின் முன்னாள் கணவன் சத்யா ஜெயிலில் இருந்து திரும்பி வந்து முகுந்தனிடம், `என் மனைவி எனக்கு வேணும்' என்று கேட்கிறான். அதே சமயம் கிருஷ்ணனின் மனைவி காயத்ரியின் தங்கை குடும்ப நிலம் ஒன்றை பதிவு பண்ண சப்ரிஜிஸ்தர் முகுந்தனை சந்திக்கிறாள். முகுந்தனும் உதவ முன்வருகிறான். ஆனால் அவர்கள் பதிவு பண்ண வந்தது புறம்போக்கு நிலம் என்பது தெரிய வர, முகுந்தன் கோபமாகி வார்த்தைகளை கொட்ட, அது கைகலப்பில் சென்று முடிகிறது.

    அதன் விளைவாய் காயத்ரியின் தங்கை சுதாவின் கணவன் விஷ்ணு கைது செய்யப்படுகிறான். அவனின் அம்மா மீனாட்சி கோபமாகிறாள். அதே சமயம் அங்கு வந்த ஸ்வேதாவின் முன்னாள் கணவன் சத்யா, மீனாட்சியை தன் வசப்படுத்தி, ``முகுந்தன் உங்களிடம் லஞ்சம் வாங்கியதாக சொன்னால் கோர்ட் முகுந்தனுக்கு தண்டனை வழங்குவதோடு உங்கள் மகன் விஷ்ணுவையும் விடுதலை செய்து விடும்'' என்கிறான்.


    மீனாட்சியும் அதை நம்பி சத்யாவின் சதித்திட்டத்திற்கு உடன்படுகிறாள். அதன்படி ஒரு லட்சம் பணத்தை தன் சம்பந்தி சுதாவின் அப்பா தணிகாசலத்திடம் கொடுக்கிறார். அவர் தன்மகளின் எதிர்காலம் கருதி முகுந்தன் வீட்டில் பணத்தை வைக்கிறார்.

    இதற்கிடையே கோர்ட்டில் மீனாட்சி, முகுந்தன் லஞ்சம் வாங்கினான் என்று சொல்ல, போலீஸ் முகுந்தன் வீட்டுக்கு பணத்தை தேட வருகிறது. ஆனால் தன் தவறை உணர்ந்த தணிகாசலம் மீண்டும் பணத்தை முகுந்தன் வீட்டிலிருந்து எடுக்க வருகிறார்.

    அதேநேரம் முகுந்தனின் முதல் மனைவி சித்ரா பணத்தை தணிகாசலம் மறந்துவிட்டு போனதாக எண்ணி அவரை சந்தித்து கொடுக்கிறாள். இதற்குள் போலீஸ் முகுந்தன் வீட்டுக்கு பணத்தை தேடி வருகிறது. இந்த சதி பின்னணியில் தணிகாசலம் இருப்பதை சித்ரா முகுந்தனிடம் சொல்ல, அவன் டென்ஷனாகி தணிகாசலத்தை அடித்து விடுகிறான். அவமானம் தாங்காமல் தணிகாசலம் இறந்து விடுகிறார்...''

    கதையை நிறுத்திய இயக்குனர் பாலாஜி யாதவ் நம்மைப் பார்க்க ``இனி முகுந்தன் குடும்பமும் பாலாஜி குடும்பமும் எப்படி ஒண்ணு சேரும்?'' என நாம் ஆர்வமாய் கேட்க, "அது சஸ்பென்ஸ்..'' என்று சிரித்தார். தொடரில் அர்ச்சனாவுக்காக தற்போது பாவனா நடித்து வருகிறார் என்ற தகவலையும் சொன்னார்.

    திரைக்கதை: எஸ்.குமரேசன். வசனம்: பாலசூரியன். ஒளிப்பதிவு: தண்டபாணி. பாடல்: வைரமுத்து, முகப்பு இசை:இமான். தயாரிப்பு: சான் மீடியா.

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  5. #944
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    மகாபாரதம்



    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நாளை முதல் ஒளிபரப்பாகும் புராணத்தொடர், மகாபாரதம். வியாச முனிவர் சொல்ல, விநாயகர் எழுதியதாக கூறப்படும் மகாபாரதம் - அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்னும் மனிதனுடைய நால்வகை நோக்கங்களையும் விளக்குகிறது.

    பரத வம்சத்தில் வந்த சாந்தனு மன்னருக்கும், கங்கா தேவிக்கும் பிறந்தவர் தேவ ரதன். (பின்னாளில் பீஷ்மர் என அழைக்கப்பட்டவர்) தனது தந்தையின் இரண்டாவது திருமணத்தால், அரியணையை ஏற்பதில்லை என சத்தியம் பூண்ட அவர், தனது தம்பிகள் மற்றும் அவர்களது வாரிசுகளுக்காகவே வாழ்ந்தார்.

    சாந்தனு மன்னரின் வாழ்க்கையிலிருந்து தொடங்கும் மகாபாரத தொடரில், திருதராஷ்டிரன், பாண்டு சகோதரர்களின் பிள்ளைகளான கவுரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையேயான உணர்ச்சி பூர்வ போராட்டம் பிரமிக்கத்தக்க வகையில் காட்சிப்படுத்தப்பட்டு இருப்பது, தொடரின் சிறப்பு.

    `தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும், தர்மம் மறுபடியும் வெல்லும்' என்ற கீதையின் வாக்கினை எடுத்துக்கூறும் இந்த இதிகாச தொடர் மிகுந்த பொருட்செலவில் உருவாகியுள்ளது.

    தொடரில் நட்சத்திரங்கள்: முகேஷ் கன்னா நிதீஷ் பரத்வாஜ், ரூபா கங்குலி, புனித் இஸ்ஸார், தாரா சிங். ஞாயிறுதோறும் காலை 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது மகாபாரதம்.




    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  6. #945
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    நானே வருவேன்

    வசந்த் டிவியில் விரைவில் ஒளிபரப்பாகவிருக்கும் திகில் தொடர், `நானே வருவேன்.'

    தற்கொலை செய்து கொண்ட பிரபல நடிகையின் ஆவி, இன்னொரு நடிகையின் உடம்பில் புகுந்து கொண்டு தனக்கு பாதிப்பு ஏற்படுத்தியவர்களை பழி வாங்குகிறது. தங்கள் சொல்லால், செயலால், கீழ்த்தரமான நடவடிக்கையால் தற்கொலை வரை கொண்டு சென்ற 6 பெரியமனிதர்களை நடிகையின் ஆவி திட்டம் போட்டு பழி வாங்குகிறது. இந்த பழி வாங்கல் காட்சிகள் அத்தனையும் திகில்மயமானவை. ஆவி புகுந்த நடிகையாக நித்யா நடிக்கிறார். தொடருக்கு கதை,வசனம், இயக்கம்: ஜெயமணி.


    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  7. #946
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    தேவயானி விரும்பிய அம்மா கேரக்டர்


    ராஜ் டிவியில் திங்கள் முதல் வெள்ளிவரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கொடிமுல்லை தொடர் 150 எபிசோடுகளை தாண்டியிருக்கிறது. நடிகை தேவயானி அம்மா-பெண்ணாக இரட்டைவேடத்தில் நடித்து வரும் இந்த தொடரில், தொடக்கம் முதலே உணர்வுபூர்வமான யதார்த்த காட்சிகள் ரசிகர்களை தொடருக்குள் ஈர்த்து விட்டது. குறிப்பாக கொடிமுல்லைக்கு பெண் ரசிகைகள் அதிகம்.

    தொடரில் விரக்தியை மட்டுமே இதுவரை அனுபவித்து வந்த அம்மா அன்னக்கொடி கேரக்டர் புதுமையாக பேசப்பட்டது. அந்த அம்மா கேரக்டரை உள்வாங்கி வெளிப்பட்டதில் தனித்துவ நடிப்பிலும் தேவயானி ஜொலித்தார். மகள் மலர்க்கொடியாக வந்த தேவயானி இன்றைய துடிப்பான பெண்களின் அடையாளம். தன்னம்பிக்கையின் நேரடி அவதாரம். முயன்றதை முடித்தே ஆக வேண்டும் என்பது இவது தாரக மந்திரம்.

    இந்த அம்மா-பெண் இதுவரை சந்தித்ததில்லை. ஆனால் யாரென்று தெரியாமலே தொலைபேசியில் பாசம் பொங்கியிருக்கிறார்கள். இருவரும் நேரில் சந்தித்தால் அவர்கள் யாரென்று புரிந்து நேசம் கொண்டாடுவார்கள். அதற்கான சூழல் கதையில் நெருங்கி வந்து கொண்டிருக்கிறது.


    150-வது எபிசோடு கொண்டாட்டத்தையொட்டி தேவயானியிடம் பேசினோம். அவர் தன் மகிழ்ச்சியை வார்த்தைகளில் இப்படி வெளிப்படுத்தினார்:

    "சினிமாவில் கூட எனக்கு இப்படியொரு கேரக்டர் வாய்த்ததில்லை. அந்த அளவுக்கு அன்னக்கொடி கேரக்டர் என்னை ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் கொண்டு சேர்த்திருக்கிறது. சினிமாவில் ஜுனியர் ஆர்ட்டிஸ்டுகள் கூட வயதான கேரக்டர் என்றால் நடிக்க தயங்கவே செய்வார்கள். ஆனால் எனக்கு இப்படியான வேடங்கள் தான் நடிப்புக்கு சவால்.

    `கோலங்கள்' தொடரில் தன்னம்பிக்கை நிறைந்த அபியாக வந்தபிறகு, ரசிகர்கள் குறிப்பாக பெண்கள் என்னிடம் பெரிதும் எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டார்கள். அதனால் அடுத்து இதைவிட பெட்டரான கதையே சரியாக இருக்கும் என்று காத்திருந்தேன்.அப்போது டைரக்டர் செந்தில்குமரன் எனக்கு சொன்ன கதையே `கொடிமுல்லை'. இதில் அம்மா கேரக்டருக்காகத்தான் என்னை ரொம்பவே வருத்திக் கொண்டேன்.''

    கேரக்டருக்குள் மூழ்கிப்போனவரிடம், "சினிமாவில் இப்படியொரு அம்மா கேரக்டர் வந்தபோது தவிர்த்து விட்டீர்களாமே?'' கேட்டோம்.

    "உண்மை தான். `வரலாறு' படத்தில் அஜித்தின் அம்மாவாக நடிக்க டைரக்டர் கே.எஸ்.ரவிகுமார் கேட்டுக் கொண்டார். ஆனால் அஜித்தை ஒரு கொச்சையான வார்த்தையால் திட்ட வேண்டிய காட்சியை டைரக்டர் விவரித்த போது நானும் அவரும் `காதல்கோட்டை' என்ற வெற்றிப் படத்தில் நடித்தவர்கள். அதனால் அவரை திட்டுகிற காட்சி இருந்தால் எனக்கு அந்த படமே வேண்டாம் என்று தவிர்த்து விட்டேன். இல்லையேல் சினிமாவிலும் அந்த சவாலான அம்மா கேரக்டரை செய்திருப்பேன்.''

    நல்ல நடிகையின் அடையாளம் தேவயானி.

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  8. #947
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    `அல்டாப்' அலமேலு

    இருப்பவர்களிடம் கொள்ளையடித்து இல்லாதவர்களுக்கு வாரி வழங்குகிறாள் கொள்ளைக்காரி `அல்டாப்' அலமேலு. ஒரு கட்டத்தில் அவள் தொடர்பான கொள்ளைச் செய்திகள் அரசாங்கத்தையே அலறவைக்க, அவளைப் பிடிப்பதற்காக துப்பறியும் போலீஸ் அதிகாரி `கன் பைட்' கணேஷ் புறப்படுகிறார். இருவருக்கும் இடையே நடக்கும் கண்ணாமூச்சி ஆட்டம்தான் `பரபர' திரைக்கதை.

    கொள்ளைக்காரி அலமேலு 12 வித கெட்டப்பில் போலீஸ் பார்வையில் படாமல் தன்னை மறைத்துக்கொண்டே கொள்ளையை தொடர்வது ரசிகர்களுக்கான ரசனை வேட்டை. கொள்ளைக்காரி வேடத்தில் ஆர்த்தியும், போலீஸ் அதிகாரி வேடத்தில் கணேஷூம் நடிக்கிறார்கள்.

    வசந்த் டிவியில் அடுத்த மாதம் முதல், வெள்ளிதோறும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடர் இது.



    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  9. #948
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    செல்லமே-500

    சன் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் "செல்லமே'' தொடர் 500-வது எபிசோடை எட்டியிருக்கிறது.

    தொடரில் செல்லம்மா கேரக்டரில் நடிகை ராதிகா நடிக்கிறார்.

    எதிர் எதிரே மோதிக்கொள்ளும் அண்ணன் - தங்கை மீண்டும் ஒன்று சேர்வார்களா? கடத்தப்பட்ட செல்லம்மாவின் குழந்தை திரும்பவும் கிடைக்குமா? ஏ.கே.வின் குடும்பத்தாரின் வெறுப்பை சம்பாதித்த செல்லம்மா, அதை எப்படி எதிர்கொள்ளப் போகிறாள்? ஒரே பெண்ணின் இறப்பால் மனநிலை பாதிக்கப்பட்ட முத்தழகியின் நிலை என்ன? கால் விளங்காத செல்லம்மாவின் கணவன், செல்லம்மாவை எப்படி கலங்கடிக்கப்போகிறான்? சினேகா, ஆவுடையப்பனின் குடும்பத்தை சிதறடித்து தன் தகப்பனின் சவாலை நிறைவேற்றினாளா? இத்தனை கேள்விகளுக்கும் வரும் எபிசோடுகளில் விடை கிடைக்கும்.

    இயக்கம்: சி.ஜே.பாஸ்கர். ஹெட் ஆப் கிரியேட்டிவ்: ராதிகா சரத்குமார்.


    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  10. #949
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like

    கோலிவுட்டில் ஒரு பயணம்

    1950 முதல் 1980 வரை தமிழ் திரையுலகில் மூவேந்தர்களாக வலம் வந்தவர்கள் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், நடிகர் திலகம் சிவாஜி, காதல் மன்னன் ஜெமினி. குடும்பப்பாங்கான பாத்திரங்களில் நடித்து பெண்களின் மனதை கொள்ளை கொண்ட ஜெமினி, காதல் மன்னன் என அன்பாக அழைக்கப்பட்டார்.

    எட்டு வயதிலேயே தன் தந்தையை இழந்த ஜெமினி கணேசன் ஒரு டாக்டராக வேண்டும் என ஆசை கொண்டார். 19 வயதில் பட்டப்படிப்பை முடித்த ஜெமினி, தன்னுடைய மருத்துவ படிப்புக்கு பண உதவி செய்வதாக தனது மாமனார் கூறியதை கேட்டு மகிழ்ந்து போனார். ஆனால், திருமணம் ஆன சில நாட்களிலேயே அவருடைய மாமனார் இறந்து போனார். அதன்பின் இந்திய விமானப் படையில் சேர ஆசைப்பட்டு, தேர்வும் செய்யப்பட்டார்.

    பிறகு எப்படி நடிகரானார் என்பது வரை ஜெமினி கணேசன் பற்றி இதுவரை அறியாத பல தகவல்களை சுவாரஸ்யமாக தர உள்ளது "கோலிவுட்டில் ஒரு பயணம்.''

    ஜீ தமிழில் ஞாயிறு பகல் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியினூடே ஜெமினி படங்களில் இடம் பெற்ற இனிய பாடல்களும், காட்சிகளும் ரசிகர்களை பரவசப்படுத்தும்.




    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  11. #950
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like

    "ஜெயிக்கப்போவது யாரு?''

    ஜெயா டிவியில் "ஜெயிக்கப் போவது யாரு?'' என்னும் புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி மூலம் பல்வேறு திறமையான சாதனையாளர்களை அடையாளம் காணலாம்.

    இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலவித திறமையான கலைஞர்கள், திகிலூட்டும் ஆச்சரியங்களை நிகழ்த்தி காட்டியிருக்கிறார்கள். உலகத்தின் எந்த மூலையில் இருப்பவரும் வித்தியாசமான திறமை இருந்தால் கலந்து கொள்ளலாம்.

    நிகழ்ச்சியை நடிகர் சுரேஷ் தொகுத்து வழங்குகிறார். நடுவர்களாக பலவித கலைகளின் ஆசான் ஹுசைனி, நடன இயக்குனர் ஸ்ரீதர், நடிகை சந்தியா ஆகிய மூவரும் இணைந்து வெற்றியாளர்களைத் தேர்வு செய்கின்றனர். இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்களின் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள்.



    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

Similar Threads

  1. Vijay tv going to start 2 new programs
    By anbupani in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 7th October 2009, 01:58 AM
  2. Programs that you enjoy watching on TV
    By Anoushka in forum TV,TV Serials and Radio
    Replies: 107
    Last Post: 15th July 2008, 04:41 AM
  3. IR in TV Serials
    By RR in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 4
    Last Post: 16th July 2007, 01:12 PM
  4. which channel do you think has the most creative programs?
    By mirattalji in forum TV,TV Serials and Radio
    Replies: 20
    Last Post: 18th November 2006, 01:45 AM
  5. Pongal Programs
    By suryas_shaivs in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 19th January 2006, 06:03 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •