View Poll Results: your rating for the following serials

Voters
1. You may not vote on this poll
  • Thirumathi Selavam

    0 0%
  • Thendral

    1 100.00%
  • Chellame

    0 0%
  • Thangam

    0 0%
Page 9 of 159 FirstFirst ... 78910111959109 ... LastLast
Results 81 to 90 of 1587

Thread: new serials/programs

  1. #81
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    To know more about Tamil cinema; Imayam TV presents this wonderful game show having some rounds like question round, audio round, video round. The winning team will be given prizes. This show is anchored by Mahalakshmi.
    The show is scheduled for telecast on Mondays 7.30 Pm.
    "அன்பே சிவம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #82
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like

    திருப்பங்களுடன் `திருப்பாவை'



    சன் டி.வி.யில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மதியம் 12.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் `திருப்பாவை தொடர், வித்தியாசமான கதையமைப்பில் ரசிகர்களின் உள்ளம் கவர் தொடராகியிருக்கிறது.

    தொடர் பற்றி கதாசிரியரும் இயக்குநருமான ஜே.கே. கூறியதாவது:-

    `ஆன்மிகப் பின்னணியில் தொடங்கி குடும்ப உறவுகளை கொண்டாடும் கதை. சரியாக சொல்ல வேண்டுமானால் `வேதாந்தத்துக்கும் சித்தாந்தத்துக்கும் நடக்கும் போட்டியே இந்த கதையின் முடிச்சு. மனம் விட்டுப் பேசினாலே உறவுகளுக்குள் எந்த சிக்கலும் ஏற்படாது. ஆனால்- சந்தர்ப்ப சூழ்நிலைகள், உறவுகளுடன் நம்மை மனம் விட்டுப் பேச விடுவதில்லை. இதனால் ஏற்படும் பின்விளைவுகளை எடுத்து சொல்வதே இந்த திருப்பாவை தொடர்!

    தேசிகாச்சாரியாருக்கு தன் மைத்துனன் ராகவன், ரங்கநாயகியை திருமணம் செய்து கொண்டது பிடிக்கவில்லை. ஆசீர்வாதம் வாங்க வந்த ராகவன்-ரங்கநாயகி தம்பதிகளை தேசிகாச்சாரியார் திட்டி அனுப்பி விடுகிறார். தேசிகாச்சாரியாரின் பார்வையில் ரங்கநாயகி யார்? அவளை ராகவன் திருமணம் செய்து கொண்டதை தேசிகாச்சாரி மிகப்பெரிய குற்றமாக நினைப்பது ஏன்?

    மகள் கோதையை காணாமல் கோவிலுக்கு தேடிச் சென்ற ரங்கநாயகி, அங்கு வேணுகோபாலை பார்த்ததும் அதிர்ச்சியடைகிறாள். யார் அந்த வேணுகோபால்? ரங்கநாயகிக்கும், அவருக்கும் என்ன சம்பந்தம்?

    முதல் மனைவி மைதிலியை விட்டு பிரிந்து, இரண்டாவது மனைவியுடன் குடும்பம் நடத்தும் தொழிலதிபரான ரங்கநாதன் மன நிம்மதியுடன் வாழவில்லை. அவரின் இரண்டாவது மனைவி மாலதி, மகன் வாசுவிக்ரம், மைத்துனர் கோவிந்தன் மூவரும் தங்களின் சுயலாபத்திற்காக அவரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஏமாற்றுக் கும்பலிடம் ரங்கநாதன் எப்படி சிக்கினார்? இதிலிருந்து அவருக்கு என்றைக்கு விடுதலை? முதல் மனைவியுடன் அவர் சேர்வாரா?

    கர்ப்பிணியான தன் அம்மாவை தனியாக தவிக்க விட்டு பிரிந்து போன அப்பா என்கிற அயோக்கியனை எப்போது சந்தித்தாலும் அவரை தண்டிக்க வேண்டும் என்கிற கோபத்துடன் வாழும் மைதிலியின் மகன் கண்ணன், தன் அப்பாவான ரங்கநாதனை சந்திப்பானா? தண்டிப்பானா?

    ரங்கநாயகியின் மகள் என்று தன்னை அறிமுகம் செய்து கொள்ளாமல் தேசிகாச்சாரியாரின் வீட்டிற்கு சென்று, அவர்களின் அன்பை பெற்ற கோதை பற்றிய உண்மை, தேசிகாச்சாரியாருக்கு தெரிய வரும்போது என்ன நடக்கும்? அவரின் கோபத்தால் ஏற்படப் போகும் விளைவுகள் என்னென்ன?

    கதாநாயகன் கண்ணன், கதாநாயகியான கோதையின் அப்பா ராகவனின் அலுவலகத்தில் பணிபுரிகிறான். இதுபோல், கோதை, கண்ணனின் அப்பாவான ரங்கநாதனின் அலுவலகத்தில் பணிபுரிகின்றாள். ஆனால் கோதைக்கு கண்ணனின் அப்பாதான் ரங்கநாதன் என்பது தெரியாது. அது தெரிய வரும்போது கோதையின் நிலை என்ன? கண்ணனிடம் அதை சொன்னாளா? இதுபோல் இத்தொடர் முழுக்க ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் விதமான சுவாரசிய முடிச்சுகள் அதிகம். ஒவ்வொரு முடிச்சாக அவிழத் தொடங்கும்போது தொடர் ஜெட் வேகத்தில் பறக்கும்'' என்கிறார், ஜே.கே.

    தொடரில் ரங்கநாயகியாக பிரபல கர்நாடக இசைப்பாடகி அனுராதா கிருஷ்ணமூர்த்தி நடிக்கிறார். அவரது கணவர் ராகவனாக வருபவர் சிவன் சீனிவாசன்.

    மகள் கோதையாக சங்கீதாவும், மகன் அமுதனாக கிரிஷும் நடிக்கிறார்கள். தேசிகாச்சாரியாக டெல்லிகணேஷ் நடிக்கிறார்.
    "அன்பே சிவம்.

  4. #83
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    நீ பாதி நான் பாதி



    மெகா தொலைக்காட்சியில் புதிய போட்டி சுற்றுக்களுடன் களம் இறங்கியுள்ளது `நீ பாதி நான் பாதி' நிகழ்ச்சி.

    இந்த நிகழ்ச்சியில் மூன்று தம்பதியர் நான்கு சுற்றுக்களை கடக்க வேண்டும்.

    முதல் சுற்றில் ஒரேவகை உணவை சமைத்து, அதில் எது தனது மனைவியின் சமையல் என்பதனை கணவர் கண்டுபிடிக்க வேண்டும். அடுத்த சுற்றில் கணவரோ அல்லது மனைவியோ சைகைகள் மூலம் நடித்துக்காட்டி கொடுக்கப்படும் திரைப்பட பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

    அடுத்த சுற்றில் தம்பதியர்கள் இடையே உள்ள ஒற்றுமையை உணரும் வகையில் 5 வினாக்கள் கேட்கப்படும். இறுதிச் சுற்றில் கணவரைப் போல் மனைவியும், மனைவியைப் போல் கணவரும் நடிக்க வேண்டும்.

    இந்த நிகழ்ச்சியினை தனது கலகலப்பான நகைச்சுவை கலந்துரையாடலுடன் தொகுத்து வழங்க வருகிறார் நடிகர் பாண்டியராஜன்.
    "அன்பே சிவம்.

  5. #84
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    கலக்கல் காமெடி



    திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணிக்கு வசந்த் டி.வி.யில் ஒளிபரப்பாகிறது `கலக்கல் காமெடி' நிகழ்ச்சி. "நிகழ்ச்சியின் பெயரைப் போலவே இந்நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகும் காமெடிக் காட்சிகளும் கலக்கலாக இருக்கும். அதோடு புதிய திரைப்படங்களின் காமெடிக் காட்சிகள் இதில் இடம் பெறுகிறது.

    அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு காட்சிக்கும் முன்பு நிகழ்ச்சித் தொகுப்பாளர் கூறும் விஷயங்கள் சுவராசியமாகவும், பார்ப்பவர்கள் கருத்தை கவருவதாகவும் உள்ளது'' -என்கிறார், இயக்குனர் கார்த்திகேயன்.

    தயாரிப்பு: வசந்த் டி.வி.
    "அன்பே சிவம்.

  6. #85
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    "சதிலீலாவதி'
    கலைஞர் டிவியில் "சதிலீலாவதி' தொடர்

    கலைஞர் டிவியில் அக்டோபர் 28-ம் தேதி முதல் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடர் "சதிலீலாவதி'.

    திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகும் இத்தொடரை தயாரித்த நிறுவனம் ஏற்கெனவே ஒளிபரப்பாகி வந்த "அழகான நாட்கள்' தொடரை தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    மிகுந்த எதிர்ப்பார்ப்பை உருவாக்கி இருக்கும் இத்தொடரில் சாக்ஷி சிவா, யோகினி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

    கதை, திரைக்கதை, வசனம்: எஸ்.பிரபு சங்கர். ஒளிப்பதிவு: ஆர்.கே.விக்ரமன். இயக்கம்: கே.வி.சக்தி. தயாரிப்பு: எஸ்.ஜெயா, சண்முககுமார்.
    "அன்பே சிவம்.

  7. #86
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    சந்தோஷம்''
    ``
    கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் பகல் 11 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் புதிய தொடர் `சந்தோஷம்'

    எல்.சிவகுமார் தயாரிக்கும் இத்தொடரின் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் வி.சரவணன்.

    தேவா இசையமைக்க, டி.மகிபாலன் ஒளிப்பதிவை கவனிக்கிறார். டைட்டில் பாடலை கவிஞர் பிறைசூடன் எழுதியிருக்கிறார்.

    நிர்வாக தயாரிப்பு: என்.எஸ்.தேவராஜ்.

    கதை: பூர்ணிமா- கவுதம் இருவரும் பொருத்தமான தம்பதிகளாக, மகிழ்ச்சியுடன் இல்லற வாழ்வை நடத்தி வருகின்றனர்.

    கணவன் கவுதம் குறுக்கு வழியில் பெரிய பணக்காரனாக ஆசைப்படுகிறான். அதன் விளைவால் பூர்ணிமா கணவனைப் பிரிய நேர்கிறது.

    பூர்ணிமா ஒரு சூழ்ச்சி வலையில் சிக்கி, கொலைகாரியாக குற்றம் சாட்டப்பட்டு கைதாகிறாள்.

    கொலைப்பழியிலிருந்து பூர்ணிமா மீண்டாளா? மீண்டும் கணவனுடன் சேர்ந்து அவருடைய வாழ்க்கைப் பயணம் மகிழ்ச்சியாக மாறியதா?

    இந்தக் கேள்விகளுக்கு விடை அளிக்கிறது `சந்தோஷம்'.

    பூர்ணிமாவாக மீனாகுமாரியும் கவுதமாக விஜய் ஆனந்தும் நடிக்கும் இத்தொடரில் ரவிசங்கர், குயிலி, ராஜ்மதன், ஆர்த்திகாஸ்ரீ, ஸ்ரீஷைலஜா, ஸ்ரீதேவி, அருண், அழகு, திடீர் கன்னையா, `விழுதுகள்' சந்தானம், மேனேஜர் சீனா ஆகியோரும் நடிக்கிறார்கள்.
    "அன்பே சிவம்.

  8. #87
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    ஹாரிபாட்டர் கொண்டாட்டம்

    போகோ சேனலில் வருகிற 23-ம்தேதி ஞாயிற்றுக்கிழமையை ஹாரிபாட்டர் தினமாக கொண்டாடுகிறார்கள்.அன்று காலை 8 மணிக்கு `ஹாரிபாட்டர் அண்ட் தி சோர்சரஸ் ஸ்டோன்' திரைப்படம் ஒளிபரப்பாகிறது. 11.30 மணிக்கு `ஹாரிபாட்டர் அண்ட் தி சேம்பர் ஆப் சீக்ரட்ஸ்' ஒளிபரப்பாகிறது.

    பிற்பகல் 3 மணிக்கு `ஹாரிபாட்டர் அண்ட் தி பிரிசோனர் ஆப் அஸ்கபன்' படமும், மாலை 6 மணிக்கு `ஹாரிபாட்டர் அண்ட் தி கோப்லட் ஆப் பயர்' படமும், இரவு 9.30 மணிக்கு `ஹாரிபாட்டர் அண்ட் தி ஆர்டர்ஆப் தி போனிக்ஸ்' படமும் ஒளிபரப்பப் படுகிறது.

    ஹாரிபாட்டரை நேசிக்கும் குழந்தைகளுக்குக் கொண்டாட்டம் தான்.
    "அன்பே சிவம்.

  9. #88
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    சரிகம...

    வயது வித்தியாசங்களை மறந்து அனைவரும் ரசிக்கக் கூடிய சுவாரஸ்யமான இசை நிகழ்ச்சி, `சரிகம'.

    கர்நாடக இசைக்கும், திரை இசைக்கும் இசைப்பாலம் அமைக்கும் நிகழ்ச்சியான மோகன் வைத்தியாவின் `சரிகம நிகழ்ச்சி' இசைப்பிரியர்களிடேயே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    ஒருபுறம் கர்நாடக இசைப்பாடல்கள்; மறுபுறம் அதற்கு நிகரான திரை இசைப்பாடல்கள் என கர்நாடக சங்கீதமும், திரை இசைப்பாடல்களும் பின்னிப் பிணைந்து உறவு கொண்டாடும் இந்த இசை நிகழ்ச்சி, ஞாயிறு தோறும் காலை 10 மணிக்கு மெகா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

    "அன்பே சிவம்.

  10. #89
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    முகவரி
    சிறு வணிகர்களும், குறு வணிகர்களும் தங்கள் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு மக்கள் தொலைக்காட்சி அமைத்து தந்திருக்கும் களம் `முகவரி'. இது திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 12.30க்கு ஒளிபரப்பாகிறது.

    இன்று தரமான பொருள் என்றாலும் அதை விற்பதற்கு விளம்பரம் கட்டாயமாகி விட்டது.

    பெரிய நிறுவனங்கள் லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் தொகையை விளம்பரத்துக்காக மட்டும் செலவிடுகின்றன.

    ஆனால் சிறு வணிகர்களுக்கும், குறு வணிகர்களுக்கும் அத்தனை பெரிய தொகையை முடக்குவது இயலாத காரியம்.

    அதே நேரத்தில் சந்தையில் தங்கள் பொருளையும், சந்தைப்படுத்த வேண்டிய அவசியமும் உண்டு.

    இப்படிப்பட்ட சூழலில் - சிறு வணிகர்கள் விளம்பரம் செய்து பயனடைவதற்கான களம்தான் முகவரி.

    இந்த நிகழ்ச்சி 300 நாட்களைக் கடந்து தொடர்ந்து வருகிறது. நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் திவ்யா.
    "அன்பே சிவம்.

  11. #90
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    ஜீ தமிழ்த்தொலைக்காட்சியில், சனி, ஞாயிறுகளில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இசை நிகழ்ச்சி `சங்கீத மகாயுத்தம்'. இசை ரசிகர்களை கவர்ந்திழுக்கும் இந்த நிகழ்ச்சியில் இன்றும், நாளையும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், சித்ரா பாடுகிறார்கள்.

    இந்த வார நிகழ்ச்சியில் சிறப்பு நடுவராக பங்கேற்பது பாடகியும், படத் தயாரிப்பாளருமான ஷோபா சந்திரசேகர். போட்டியின் நடுவர்களான உஷா உதூப்பும், பாடகி சவும்யாவும் ஒவ்வொரு வாரமும் போட்டி பங்கேற்பாளர்கள் என்றில்லாமல் பொதுவான இசைப் பிரியர்களுக்கும், இசைக் கலைஞர்களுக்கும் தேவையான ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்கி வருகிறார்கள். இவர்களுடன் கூடவே நிகழ்ச்சியைத் தனது கொஞ்சும் தமிழில் பேசித் தொகுத்து வழங்குகிறார், உஜ்ஜயினி.

    தயாரிப்பு பிரமிட் சாய்மீரா. இயக்கம் அருணா தேவாநந்தன், ஒளிப்பதிவு ஆர்யன், டைட்டில் இசை பால்ஜேக்கப், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: சர்ச்சில் பாண்டியன், கிரியேட்டிவ்: ஹெட் சுபா வெங்கட்.
    "அன்பே சிவம்.

Page 9 of 159 FirstFirst ... 78910111959109 ... LastLast

Similar Threads

  1. Vijay tv going to start 2 new programs
    By anbupani in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 7th October 2009, 01:58 AM
  2. Programs that you enjoy watching on TV
    By Anoushka in forum TV,TV Serials and Radio
    Replies: 107
    Last Post: 15th July 2008, 04:41 AM
  3. IR in TV Serials
    By RR in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 4
    Last Post: 16th July 2007, 01:12 PM
  4. which channel do you think has the most creative programs?
    By mirattalji in forum TV,TV Serials and Radio
    Replies: 20
    Last Post: 18th November 2006, 01:45 AM
  5. Pongal Programs
    By suryas_shaivs in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 19th January 2006, 06:03 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •